Latest topics
» அடுத்த சாமியார் தலைமறைவுby செந்தில் Today at 10:54 am
» என் தாய்!
by ஹனி Today at 10:54 am
» 9 அவுன்ஸ் நிறையுடன் பிறந்த உலகிலேயே சின்னஞ்சிறு குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
by ஹனி Today at 10:51 am
» உலக மக்களினால் மறக்கபட முடியாத சே குவரா
by heartraju Today at 10:03 am
» சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தங்கள் இதயத்தை பாதுகாத்துக் கொள்ள சிறந்த 25 வழிகள்
by shakthi Today at 9:50 am
» இது யாரென்று கொஞ்சம் பாருங்கள்
by shakthi Today at 9:44 am
» கவிதை அந்தாதி.
by valippokkan Today at 9:27 am
» தாயின் பாசம்
by valippokkan Today at 9:04 am
» வழிப்போக்கனின் சுவடுகள்..! யாரிவள்...?
by valippokkan Today at 8:57 am
» புகைவேண்டாம்!
by valippokkan Today at 8:40 am
» இந்தோனேஷியா - ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள்
by arulbala Today at 8:31 am
» மனித இனத்துக்கு நாம் தூரமடி!
by arulbala Today at 8:09 am
» காதல் கொள்க! கரம் பிடிப்பவரை!
by valippokkan Today at 7:59 am
» ஈகரைக்கு நான் புதியவன்!
by valippokkan Today at 7:57 am
» பழங்களுடன் ஒரு விளையாட்டு
by kalaimoon70 Today at 5:12 am
» காதை காதால் மூடிக்கொள்ளும் அதிசய சிறுவன்
by இளமாறன் Today at 5:02 am
» தெரிந்து கொள்வோம்
by இளமாறன் Today at 5:01 am
» ஆயிரம் படைப்புக்கள் படைத்த, சிறப்புக் கவிஞர் கலைவேந்தனுக்கு வாழ்த்துக்கள்!
by இளமாறன் Today at 4:51 am
» ஹலால் மற்றும் ஹராம் - விளக்கம்!
by இளமாறன் Today at 4:37 am
» நான் சென்று வருகிறேன் நண்பர்களே
by இளமாறன் Today at 4:34 am
» காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
by இளமாறன் Today at 4:32 am
» கிறுக்கல்கள்
by நிலாசகி Today at 4:24 am
» காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம்
by சிவா Today at 4:20 am
» நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ்
by நிலாசகி Today at 4:20 am
» உதவி தேவை
by இளமாறன் Today at 4:13 am
» அழகை ரசிப்போம்
by நிலாசகி Today at 4:09 am
» எப்படி இருந்த நாங்க இப்படி ஆகிட்டோம்
by நிலாசகி Today at 4:07 am
» 5555 அப்புகுட்டி
by Appukutty Today at 3:59 am
» பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!
by kalaimoon70 Today at 3:48 am
» ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.
by இளமாறன் Today at 3:41 am
தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!
அனைவருக்கும் எனது பணிவான வணக்கம்!
நமது பூமியை நாளுக்கு நாள் வெப்பப்படுத்திக்கொண்டிருகிறோம்
இது பற்றிய விளக்கங்களை புதிய தலைமுறை என்ற இதழில்(மாலன்) நான் படித்ததை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டென்மார்க் நாட்டின் தலைநகரமான கோபன்ஹேகனில்109நாடுகளின் தலைவர்களும்,அதிகாரிகளும் புவி வேப்பமடைதலைப்பற்றி விவாதித்தார்கள்.
புவி வெப்பமடைதல் என்றால் என்ன ?
பூமியின் சராசரி வெப்பம் அதிகரிப்பதுதான் புவி வெப்பமடைதல்.
பலவிதமான வாயுக்கள் நம் பூமியை சூழ்ந்துள்ளன.அதைத்தான் வளிமண்டலம்(Atmosphere) என்கிறோம்.
இந்த வளிமண்டலத்தில் 5குவின்டில்லியன் கிலோ வாயுக்கள் உள்ளன.(ஒரு குவின்டில்லியன் என்பது ஒன்றுக்குபின் 19 பூஜ்யங்களை கொண்டது)
இந்த வாயுக்கள் பூமியிலிருந்து 11கி.மீ. உயரத்திலேயே இருக்கின்றன.(அதற்கு மேலே போகப்போக வாயுக்களின் அளவு குறைந்துகொண்டே போகிறது)அந்த வாயுக்களில் 78%நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன்.0.038%கார்பன்டைஆக்சைடு எனும் கரியமில வாயுவின் அளவு அதிகரிபதால்தான் பிரச்சனை.
சூரியனிலிருந்து நமக்கு வெளிச்சம் மட்டுமல்ல வெப்பமும் வருகிறது.சூரியன் பூமியைவிட 109மடங்கு பெரியது.ஆனால் அங்குஆக்சிஜன்குறைவு.நாம் சூரியனிடமிருந்து ரொம்ப தள்ளித்தான் இருக்கின்றோம்(15கோடி கி.மீ.)ஆனால் அங்கிருந்து புறப்படும் ஒளிநம்மை 8 நிமிடம் 19நொடிகளில் பூமியை அடைகிறது. அந்த ஒளி நமக்கு சக்தியையும் கொண்டு வருகிறது.மின்சாரத்தை அளக்கும் வாட்ஸ் என்ற அளவைக்கொண்டு அளந்தால்,ஒரு சதுரமீட்டருக்கு 1368வாட்ஸ்!நமது வீட்டில் எரியும் குண்டு பல்பே60வாட்ஸ்.இதுவே 1300வாட்சாக இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துபாருங்கள்.நாம் கருகிவிடுவோம்.ஆனால் இந்த சூரிய சக்தி மொத்தமும் நம் மீது பாய்ந்து நம்மை கருகிவிடாமல் வளிமண்டலம் நம்மை பாதுகாக்கிறது.அந்த சக்தியை வடிகட்டி 1000 வாட்சிற்கும் குறைவாகத்தான் அனுப்புகிறது.
சுவற்றில் பந்தை எறிந்தால் அது திரும்பி நம்மிடமே வருவது போல பூமி தன் மீது விழும் சூரிய சக்தியை மீண்டும் விண்வெளிக்கே திருப்பி அனுப்ப முயல்கிறது.ஆனால் வளிமண்டலத்தில் உள்ள சில வாயுக்கள் வெளியே செல்லும் அந்த சக்தியை விண்வெளிக்கு செல்லவிடாமல் தடுக்கின்றன.அந்த வாயுக்களை 'பசுமைநிறவாயுக்கள்' என்கிறோம்.கார்பன்டைஆக்சைடு,மீத்தேன்,ஓசோன்,நைட்ரஸ் ஆக்சைடு வாயுக்களின் கலவையாகும்.இந்த வாயுக்களின் அளவு குறைந்தால் பூமி உயிர்கள் வாழ தகுதியற்ற பனிப்பாலைவனமாகிவிடும்.இந்த வாயுக்களின் அளவு அதிகமாகும்போது பிரச்சினையாகிறது.பிரச்சினை வாயுக்கள் அல்ல அவைகளின் அளவு!
அவற்றின் அளவு ஏன் அதிகரிக்கிறது ?
நம்முடைய,அதாவது மனிதர்களுடைய செயல்பாடுகள்தான் காரணம்.நம் தொழிற்சாலைகள் ஏராளமாகக் கரியை எரித்து கார்பன்டைஆக்சைடை வளிமண்டலத்தில் நிரப்புகின்றன.பூமிக்கடியில் உள்ள ஹைட்ரோகார்பன்களை கச்சா எண்ணையாக எடுத்து பெட்ரோல் டீசலாக வடித்து,கார்கள்,லாரிகளில் எரித்து கார்பன்டைஆக்சைடை வளிமண்டலதிற்கு அனுப்புகிறோம்.சுருக்கமாக சொன்னால் பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் கரியைஎடுத்துக் காற்றில் ஏற்றி வளிமண்டலத்திற்கு அனுப்புகிறோம்.இன்னொருபுறம் பெரிய தவறு கட்டிடங்களுக்காகவும்,காகிதங்களுக்காகவும் மரங்களை வெட்டுகிறோம்.மரங்கள் வளிமண்டலத்தில் உள்ள கார்பன்டைஆக்சைடை எடுக்கொண்டு சூரிய ஒளியின் உதவியால் உணவு தயாரிக்கின்றன.மரங்களில் கிட்டத்தட்ட 47% கார்பன்.காகிதத்தை எரித்தால் கரி கிடைப்பதில்லை.மரத்தை எரித்தால் கரி கிடைப்பது அதனால்தான்.அதாவது ஒருபுறம் பூமிக்கு கீழே உள்ள கார்பன் எடுத்து எரித்து வளிமண்டலதிற்க்கு அனுப்பிகொண்டிருகிறோம்.
புவியின் வெப்பம் அதிகரித்தால்என்ன ஆகும்?
இந்தியாவிற்கு என்ன ஆகும் என்பதை சொல்கிறேன்.இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் உருகும்.அதனால் கங்கை உள்பட பல நதிகளில் வெள்ளபெருக்கு ஏற்படும்.அந்த வெள்ள நீர்,கடலில் சேர்ந்து கடல் மட்டம் உயரும்.வங்காளகடலில் உள்ள சுந்தரவனக்காடுகள்,கேரளத்தில் உள்ள குட்டநாடு போன்ற பகுதிகள்,அந்தமான் அருகில் உள்ள சிறு தீவுகள் அழிந்து போகும்.பனிப்பாறைகள் உருகுவதால் அதன் அளவு சிறிதாகி பிறகு நதிகளில் நீர் வரத்து குன்றி,வரச்சி ஏற்படும்.மழை பெய்யாது.வேளாண்மை பாதிப்படையும்.
தமிழ்நாடு தப்பித்துக்கொள்ளுமா?நாம்தான் இமயத்தில் இருந்து வெகுதொலைவில் இருக்கிறோமே?என்று அனைவரும் கருதலாம்.
தமிழ்நாட்டுக்கு இரண்டு விதமான ஆபத்துக்கள் காத்திருக்கின்றன.
1.தண்ணீர் பஞ்சம் 2.உணவுபற்றாகுறை
இந்தியாவிலேயே நீளமான கடற்கரை கொண்ட மூன்றாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு. 910கி.மீ.கடல் மட்டத்திலிருந்து 10மீட்டர்உயரத்திற்கும் குறைவான பகுதிகளை தாழ்நிலை கடலோரப் பகுதிகள் (Low Elevation Coastal Zones)எனக்கூறுவார்கள்.தமிழ்நாட்டின் பெரும்பாலான கடலோரபகுதிகள்,சென்னை உள்பட,கடல் மட்டத்திலிருந்து 2மீட்டரிலிருந்து 10மீட்டருக்குள்ளான உயரத்தில் அமைந்திருக்கின்றன.கடல் மட்டம் உயரும்போது இவை அழிவையோ,சேதத்தையோ சந்திக்கநேரிடும்.இந்த பகுதிகளில் சுமார் ஒன்றரை கோடி மக்கள் வசிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் 40,319ஏரிகளும் கண்மாயிகளும் இருக்கின்றன.இவைதான் நமக்கு குடிநீருக்கும் வேளாண்மைக்கும் ஆதாரம்.இவற்றில் சில ஏரிகள் பிரம்மாண்டமானவை.வீராணம் ஏரி 11கி.மீ.நீளமும், 4கி.மீ.அகலமும் கொண்டது.பழவேற்காடு ஏரி 60கி.மீ. நீளமும்,18கி.மீ.அகலமும் கொண்டது.இது போன்ற ஏரிகளில் உள்ள தண்ணீர்,புவியின் வெப்பம் இரண்டு டிகிரி கூடும்போது விரைவாக ஆவியாகும்.இதோடு பருவநிலை மாற்றத்தால் பருவ மழை பெய்யாமல் போனால் நிலைமை மோசமாகிவிடும்.ஏனெனில் தமிழ்நாட்டில் 54% நிலங்கள் மழையை நம்பித்தான் விவசாயம்செய்கின்றன.
நமது பூமி வெப்பமடைவதை தடுக்க நிறுத்த முடியாதா?
முற்றிலும் முடியாது.ஆனால் சமாளிக்கிற நிலையை ஏற்படுத்த முடியும்.
இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் செய்வதை செய்யட்டும்.
நாம் என்ன செய்ய வேண்டும்?
1.மரக்கன்றுகளை நடலாம்(ஆலமரம்,வேம்பு...)
2.மரம் வெட்டுவதை தடுக்கலாம்
3.ஏசி உபயோகத்தை குறைத்துகொள்ளலாம்
4.எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தலாம்
5.நாம் குண்டு பல்புகளை பயன்படுத்துவதை விட்டுவிட்டு Compact Flurescent Lamp(CFL)ஐ பயன்படுத்தலாம்.
இவற்றை எல்லாம் நமக்காக என நினைக்காமல் நமது அடுத்த தலைமுறையினருக்காக செய்யலாமே! இது என்னுடைய வேண்டுகோள்!


நமது பூமியை நாளுக்கு நாள் வெப்பப்படுத்திக்கொண்டிருகிறோம்
இது பற்றிய விளக்கங்களை புதிய தலைமுறை என்ற இதழில்(மாலன்) நான் படித்ததை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டென்மார்க் நாட்டின் தலைநகரமான கோபன்ஹேகனில்109நாடுகளின் தலைவர்களும்,அதிகாரிகளும் புவி வேப்பமடைதலைப்பற்றி விவாதித்தார்கள்.
புவி வெப்பமடைதல் என்றால் என்ன ?
பூமியின் சராசரி வெப்பம் அதிகரிப்பதுதான் புவி வெப்பமடைதல்.
பலவிதமான வாயுக்கள் நம் பூமியை சூழ்ந்துள்ளன.அதைத்தான் வளிமண்டலம்(Atmosphere) என்கிறோம்.
இந்த வளிமண்டலத்தில் 5குவின்டில்லியன் கிலோ வாயுக்கள் உள்ளன.(ஒரு குவின்டில்லியன் என்பது ஒன்றுக்குபின் 19 பூஜ்யங்களை கொண்டது)
இந்த வாயுக்கள் பூமியிலிருந்து 11கி.மீ. உயரத்திலேயே இருக்கின்றன.(அதற்கு மேலே போகப்போக வாயுக்களின் அளவு குறைந்துகொண்டே போகிறது)அந்த வாயுக்களில் 78%நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன்.0.038%கார்பன்டைஆக்சைடு எனும் கரியமில வாயுவின் அளவு அதிகரிபதால்தான் பிரச்சனை.
சூரியனிலிருந்து நமக்கு வெளிச்சம் மட்டுமல்ல வெப்பமும் வருகிறது.சூரியன் பூமியைவிட 109மடங்கு பெரியது.ஆனால் அங்குஆக்சிஜன்குறைவு.நாம் சூரியனிடமிருந்து ரொம்ப தள்ளித்தான் இருக்கின்றோம்(15கோடி கி.மீ.)ஆனால் அங்கிருந்து புறப்படும் ஒளிநம்மை 8 நிமிடம் 19நொடிகளில் பூமியை அடைகிறது. அந்த ஒளி நமக்கு சக்தியையும் கொண்டு வருகிறது.மின்சாரத்தை அளக்கும் வாட்ஸ் என்ற அளவைக்கொண்டு அளந்தால்,ஒரு சதுரமீட்டருக்கு 1368வாட்ஸ்!நமது வீட்டில் எரியும் குண்டு பல்பே60வாட்ஸ்.இதுவே 1300வாட்சாக இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துபாருங்கள்.நாம் கருகிவிடுவோம்.ஆனால் இந்த சூரிய சக்தி மொத்தமும் நம் மீது பாய்ந்து நம்மை கருகிவிடாமல் வளிமண்டலம் நம்மை பாதுகாக்கிறது.அந்த சக்தியை வடிகட்டி 1000 வாட்சிற்கும் குறைவாகத்தான் அனுப்புகிறது.
சுவற்றில் பந்தை எறிந்தால் அது திரும்பி நம்மிடமே வருவது போல பூமி தன் மீது விழும் சூரிய சக்தியை மீண்டும் விண்வெளிக்கே திருப்பி அனுப்ப முயல்கிறது.ஆனால் வளிமண்டலத்தில் உள்ள சில வாயுக்கள் வெளியே செல்லும் அந்த சக்தியை விண்வெளிக்கு செல்லவிடாமல் தடுக்கின்றன.அந்த வாயுக்களை 'பசுமைநிறவாயுக்கள்' என்கிறோம்.கார்பன்டைஆக்சைடு,மீத்தேன்,ஓசோன்,நைட்ரஸ் ஆக்சைடு வாயுக்களின் கலவையாகும்.இந்த வாயுக்களின் அளவு குறைந்தால் பூமி உயிர்கள் வாழ தகுதியற்ற பனிப்பாலைவனமாகிவிடும்.இந்த வாயுக்களின் அளவு அதிகமாகும்போது பிரச்சினையாகிறது.பிரச்சினை வாயுக்கள் அல்ல அவைகளின் அளவு!
அவற்றின் அளவு ஏன் அதிகரிக்கிறது ?
நம்முடைய,அதாவது மனிதர்களுடைய செயல்பாடுகள்தான் காரணம்.நம் தொழிற்சாலைகள் ஏராளமாகக் கரியை எரித்து கார்பன்டைஆக்சைடை வளிமண்டலத்தில் நிரப்புகின்றன.பூமிக்கடியில் உள்ள ஹைட்ரோகார்பன்களை கச்சா எண்ணையாக எடுத்து பெட்ரோல் டீசலாக வடித்து,கார்கள்,லாரிகளில் எரித்து கார்பன்டைஆக்சைடை வளிமண்டலதிற்கு அனுப்புகிறோம்.சுருக்கமாக சொன்னால் பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் கரியைஎடுத்துக் காற்றில் ஏற்றி வளிமண்டலத்திற்கு அனுப்புகிறோம்.இன்னொருபுறம் பெரிய தவறு கட்டிடங்களுக்காகவும்,காகிதங்களுக்காகவும் மரங்களை வெட்டுகிறோம்.மரங்கள் வளிமண்டலத்தில் உள்ள கார்பன்டைஆக்சைடை எடுக்கொண்டு சூரிய ஒளியின் உதவியால் உணவு தயாரிக்கின்றன.மரங்களில் கிட்டத்தட்ட 47% கார்பன்.காகிதத்தை எரித்தால் கரி கிடைப்பதில்லை.மரத்தை எரித்தால் கரி கிடைப்பது அதனால்தான்.அதாவது ஒருபுறம் பூமிக்கு கீழே உள்ள கார்பன் எடுத்து எரித்து வளிமண்டலதிற்க்கு அனுப்பிகொண்டிருகிறோம்.
புவியின் வெப்பம் அதிகரித்தால்என்ன ஆகும்?
இந்தியாவிற்கு என்ன ஆகும் என்பதை சொல்கிறேன்.இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் உருகும்.அதனால் கங்கை உள்பட பல நதிகளில் வெள்ளபெருக்கு ஏற்படும்.அந்த வெள்ள நீர்,கடலில் சேர்ந்து கடல் மட்டம் உயரும்.வங்காளகடலில் உள்ள சுந்தரவனக்காடுகள்,கேரளத்தில் உள்ள குட்டநாடு போன்ற பகுதிகள்,அந்தமான் அருகில் உள்ள சிறு தீவுகள் அழிந்து போகும்.பனிப்பாறைகள் உருகுவதால் அதன் அளவு சிறிதாகி பிறகு நதிகளில் நீர் வரத்து குன்றி,வரச்சி ஏற்படும்.மழை பெய்யாது.வேளாண்மை பாதிப்படையும்.
தமிழ்நாடு தப்பித்துக்கொள்ளுமா?நாம்தான் இமயத்தில் இருந்து வெகுதொலைவில் இருக்கிறோமே?என்று அனைவரும் கருதலாம்.
தமிழ்நாட்டுக்கு இரண்டு விதமான ஆபத்துக்கள் காத்திருக்கின்றன.
1.தண்ணீர் பஞ்சம் 2.உணவுபற்றாகுறை
இந்தியாவிலேயே நீளமான கடற்கரை கொண்ட மூன்றாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு. 910கி.மீ.கடல் மட்டத்திலிருந்து 10மீட்டர்உயரத்திற்கும் குறைவான பகுதிகளை தாழ்நிலை கடலோரப் பகுதிகள் (Low Elevation Coastal Zones)எனக்கூறுவார்கள்.தமிழ்நாட்டின் பெரும்பாலான கடலோரபகுதிகள்,சென்னை உள்பட,கடல் மட்டத்திலிருந்து 2மீட்டரிலிருந்து 10மீட்டருக்குள்ளான உயரத்தில் அமைந்திருக்கின்றன.கடல் மட்டம் உயரும்போது இவை அழிவையோ,சேதத்தையோ சந்திக்கநேரிடும்.இந்த பகுதிகளில் சுமார் ஒன்றரை கோடி மக்கள் வசிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் 40,319ஏரிகளும் கண்மாயிகளும் இருக்கின்றன.இவைதான் நமக்கு குடிநீருக்கும் வேளாண்மைக்கும் ஆதாரம்.இவற்றில் சில ஏரிகள் பிரம்மாண்டமானவை.வீராணம் ஏரி 11கி.மீ.நீளமும், 4கி.மீ.அகலமும் கொண்டது.பழவேற்காடு ஏரி 60கி.மீ. நீளமும்,18கி.மீ.அகலமும் கொண்டது.இது போன்ற ஏரிகளில் உள்ள தண்ணீர்,புவியின் வெப்பம் இரண்டு டிகிரி கூடும்போது விரைவாக ஆவியாகும்.இதோடு பருவநிலை மாற்றத்தால் பருவ மழை பெய்யாமல் போனால் நிலைமை மோசமாகிவிடும்.ஏனெனில் தமிழ்நாட்டில் 54% நிலங்கள் மழையை நம்பித்தான் விவசாயம்செய்கின்றன.
நமது பூமி வெப்பமடைவதை தடுக்க நிறுத்த முடியாதா?
முற்றிலும் முடியாது.ஆனால் சமாளிக்கிற நிலையை ஏற்படுத்த முடியும்.
இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் செய்வதை செய்யட்டும்.
நாம் என்ன செய்ய வேண்டும்?
1.மரக்கன்றுகளை நடலாம்(ஆலமரம்,வேம்பு...)
2.மரம் வெட்டுவதை தடுக்கலாம்
3.ஏசி உபயோகத்தை குறைத்துகொள்ளலாம்
4.எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தலாம்
5.நாம் குண்டு பல்புகளை பயன்படுத்துவதை விட்டுவிட்டு Compact Flurescent Lamp(CFL)ஐ பயன்படுத்தலாம்.
இவற்றை எல்லாம் நமக்காக என நினைக்காமல் நமது அடுத்த தலைமுறையினருக்காக செய்யலாமே! இது என்னுடைய வேண்டுகோள்!
வ.விஜய் இயந்திரவியல்துறை விரிவுரையாளர்
தந்தை ரோவர் தொழில்நுட்பக் கல்லூரி ,பெரம்பலூர்-621212.
வாய்ப்புக்கு நன்றி!
வாழ்க வளமுடன்
தந்தை ரோவர் தொழில்நுட்பக் கல்லூரி ,பெரம்பலூர்-621212.
வாய்ப்புக்கு நன்றி!
வாழ்க வளமுடன்
Last edited by vijaybemech on Wed Feb 10, 2010 5:30 am; edited 1 time in total
vijaybemech- புதியவர்

- பதிவுகள்: 38
வசிப்பிடம்: perungalur
சேர்ந்தது: 07/02/2010
Re: தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!
நல்ல வேண்டு கோள்
1.மரக்கன்றுகளை நடலாம்(ஆலமரம்,வேம்பு...)
2.மரம் வெட்டுவதை தடுக்கலாம்
3.ஏசி உபயோகத்தை குறைத்துகொள்ளலாம்
4.எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தலாம்
5.நாம் குண்டு பல்புகளை பயன்படுத்துவதை விட்டுவிட்டு Compact Flurescent Lamp(CFL)ஐ பயன்படுத்தலாம்.
இவற்றை எல்லாம் நமக்காக என நினைக்காமல் நமது அடுத்த தலைமுறையினருக்காக செய்யலாமே! இது என்னுடைய வேண்டுகோள்!

1.மரக்கன்றுகளை நடலாம்(ஆலமரம்,வேம்பு...)
2.மரம் வெட்டுவதை தடுக்கலாம்
3.ஏசி உபயோகத்தை குறைத்துகொள்ளலாம்
4.எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தலாம்
5.நாம் குண்டு பல்புகளை பயன்படுத்துவதை விட்டுவிட்டு Compact Flurescent Lamp(CFL)ஐ பயன்படுத்தலாம்.
இவற்றை எல்லாம் நமக்காக என நினைக்காமல் நமது அடுத்த தலைமுறையினருக்காக செய்யலாமே! இது என்னுடைய வேண்டுகோள்!


Appukutty- சிறப்பு பதிவாளர்

- பதிவுகள்: 5623
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
Re: தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!
நல்ல தகவல் தோழரே...வாழ்த்துக்கள்

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 2509
வசிப்பிடம்: தமிழ் நாடு,இந்தியா...
சேர்ந்தது: 27/01/2010
vijaybemech- புதியவர்

- பதிவுகள்: 38
வசிப்பிடம்: perungalur
சேர்ந்தது: 07/02/2010
Re: தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!
ஒவ்வருத்தருக்கும் இருக்கும் வருத்தம் தான் நண்பா.
நல்ல தகவல்
வாழ்த்துக்கள் 
நல்ல தகவல்
வாழ்த்துக்கள் 
Re: தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!
இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் செய்வதை செய்யட்டும்.
நாம் என்ன செய்ய வேண்டும்?
1.மரக்கன்றுகளை நடலாம்(ஆலமரம்,வேம்பு...)
2.மரம் வெட்டுவதை தடுக்கலாம்
3.ஏசி உபயோகத்தை குறைத்துகொள்ளலாம்
4.எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தலாம்
5.நாம் குண்டு பல்புகளை பயன்படுத்துவதை விட்டுவிட்டு Compact Flurescent Lamp(CFL)ஐ பயன்படுத்தலாம்.
இவற்றை எல்லாம் நமக்காக என நினைக்காமல் நமது அடுத்த தலைமுறையினருக்காக செய்யலாமே! இது என்னுடைய வேண்டுகோள்!
இவை பின்பற்றுவதால் நம் தலைமுறைக்கு நல்லது என்று நினைபவர்கள் மிகவும் குறைவு.
இதை சட்டமாக கொண்டுவந்தால் தான் இங்கு நடைமுறை படுத்த முடியும்.
இங்கு இந்த குளிர் காலத்திலும் 24 மணி நேரமும் ஏசியில் இருப்பவர்களை என்ன செய்வது ???????????
CFL பல்புகளை பயன்படுத்த ஒரு சிக்கல் அதன் விலை சாதாரண பல்புகளை விட பல மடங்கு அதிகம்.............

_______________________________________________
பயத்தை விட்டுவிடு !! இல்லையென்றால் உன் லட்சியத்தை விட்டு விடு !!
ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்

நிர்பமா- சிறப்பு பதிவாளர்

- பதிவுகள்: 3430
வசிப்பிடம்: சந்திரனில் வாழ ஆசை
சேர்ந்தது: 22/07/2009
Re: தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!
நல்ல தகவல் நன்றி


_______________________________________________
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத்
தேடு!

தண்டாயுதபாணி- தளபதி

- பதிவுகள்: 1141
வசிப்பிடம்: தென்கொரியா
சேர்ந்தது: 24/10/2009
Re: தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!
நல்ல தகவல்.........

VIJAY- நிர்வாக குழுவினர்

- பதிவுகள்: 9121
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009
Re: தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!
இதை சொல்லவே இல்லை 


mohan-தாஸ்- சிறப்பு பதிவாளர்

- பதிவுகள்: 5796
வசிப்பிடம்: U.A.E
சேர்ந்தது: 07/02/2010
Re: தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!
நல்ல தகவல் நன்றி ..
_______________________________________________
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

வை.பாலாஜி- சிறப்பு பதிவாளர்

- பதிவுகள்: 2025
வசிப்பிடம்: வானமே எல்லை
சேர்ந்தது: 30/07/2009
Page 1 of 2 • 1, 2 
Permissions of this forum:
You cannot reply to topics in this forum













