ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Aathira Today at 7:50 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by அதி Today at 7:50 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Today at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 7:43 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by அதி Today at 7:41 pm

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by Aathira Today at 7:34 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by இரா.பகவதி Today at 7:30 pm

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by அதி Today at 7:29 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Today at 6:59 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by positivekarthick Today at 6:58 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Today at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Today at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 6:13 pm

» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Today at 5:41 pm

» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Today at 5:40 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by வின்சீலன் Today at 5:35 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by இரா.பகவதி Today at 5:31 pm

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by ரா.ரா3275 Today at 5:16 pm

» சோனியா ……. காந்தியா?
by ரா.ரா3275 Today at 5:10 pm

» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Today at 5:06 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by சாமி Today at 5:03 pm

» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by sshanthi Today at 4:56 pm

» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Today at 4:42 pm

» நல்ல மனம் வாழ்க - நாடு பொற்ற வாழ்க
by sshanthi Today at 4:39 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by சார்லஸ் mc Today at 4:38 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by kirikasan Today at 4:15 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 4:14 pm

» +2 தேர்வு: முதலிடத்தில் ஒரு மாணவரும் இல்லை - என்னாச்சுப்பா சென்னைக்கு?
by மாணிக்கம் நடேசன் Today at 3:56 pm

» Phone WLAN Connection உதவி
by ரமீஸ் Today at 3:50 pm

» அரிய புகைப்படக் காட்சிகள்
by ஜாஹீதாபானு Today at 3:48 pm

» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
by hega Today at 3:35 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by Aathira Today at 3:06 pm

» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 2:50 pm

» கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:14 pm

» ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
by சார்லஸ் mc Today at 2:05 pm

» வணக்கம்!
by ஜாஹீதாபானு Today at 2:05 pm

» Show Desktop icon- ஐ திரும்ப உருவாக்க ..,
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:03 pm

» சிலேடை பாடல்
by naka Today at 1:59 pm

» உயிருக்கு உத்தரவாதமில்லாத உடனடி உணவுகள்!
by முரளிராஜா Today at 1:41 pm

» நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு!
by முரளிராஜா Today at 12:48 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

Current date/time is Tue May 22, 2012 7:55 pm

கவிதை போட்டி -2

  • Topics
  • 10022010
    என் தாயேன்பவள் எதையும் தாங்கிக்கொள்வாள்
    அவளிடம் அன்புமட்டுமே வெளிப்படும்,

    பேரு வலியை தாங்கி இவ்வுலகத்தை
    எனக்கு தந்தவள் ,

    உதிரத்தை மாற்றி அன்புப்பால் புகட்டியவள்
    அரவணைப்பில் வளர்த்தவள்,

    வெயில் மழையில் அவள் நனைந்து
    முந்தானை குடைக்குள் காத்தவள்,

    எனுடம்பில் நோவு என்றால் அவள்
    உடம்பை வருத்தி நின்றவள்,

    அவளின் அன்புக்கடலை வற்றவைத்து
    இந்த அரபிக்கடலை வாழவைக்கிறேன்


    அன்புசெல்வன்

    by anbutannaan - Comments: 5 - Views: 982
  • 10022010
    நீயும் நானும்



    நீயும்
    என்னருகில் இல்லை..
    நானும்
    உன்னருகில் இல்லை...
    நீயும்
    என்னை பார்த்ததில்லை..
    நானும்
    உன்னை பார்த்ததில்லை...
    நீயும்
    என்னிடம் எதையும் பகிர்ந்ததில்லை..
    நானும்
    உன்னிடம் எதையும் பகிர்ந்ததில்லை...
    நீயும்
    என் சந்தோஷங்களை...

    by அன்பு - Comments: 14 - Views: 1578
  • 10022010
    காதல் சூடி...!


    அன்பிற்கு அர்த்தம் கற்றுத்தந்தவளே,
    ஆசையாய் உன்னை காண ஓடி வந்தேன்,
    இன்பங்கள் துன்பங்கள் ஆனபோதும் ,
    ஈருயிரும் கலக்க ஆசைப்பட்டேன்,
    உன்னை என் காதலி என்று,
    ஊருக்குசொல்ல ஆசைப்பட்டேன்
    என்னால் சொல்ல இயலவில்லை,
    ஏன் என்று காரணம் புரியவில்லை,
    ஐந்து லட்சம் முறை உன்னை எனக்குள் பார்த்தபின்பும் ,
    ஒருபோதும் என்னால் உறங்கமுடிவதில்லை,
    ஓர் நாளாவது உன்னோடு வாழ ஆசைப்பட்டேன்.
    ஒளவை ஆத்திசூடி போல் நான் "காதல்சூடி" எழுதினேன்,
    அஃது உன்மேல் கொண்ட தெய்வீக காதலால்.

    by Guest - Comments: 2 - Views: 765
  • 10022010
    ¦ÀÕ󾢨½


    «ü¨Èò ¾¢í¸Ç¢ø


    «ý¦À¡Î Ò½÷ó¾


    ¸¡¾ø ¾¢¨½Â¢ø


    ¸¡¾ø¾¨ÄŧÉ
    ¾¨ÄŢ¢ý



    ¸½Åý...

    by Aathira - Comments: 0 - Views: 958
  • 09022010
    என்னை பார்க்க மறுத்தால்
    காதலித்துவிடுவோமென

    வழிகளை மாற்றினால்
    நான் காத்திருப்பேன் என

    என்கடிதங்கள் கிழித்தால்
    யாரும் பார்திடுவாரென

    அவளை வழிமறித்தேன்
    விழிநீர் வடித்தால்
    ...

    by anbutannaan - Comments: 18 - Views: 1948
  • 09022010
    அறியாத வயதில் புரியாததை கேட்டாய்
    புரிந்தவுடன் புதிராய் கேள்வி எழுப்பினாய்

    இளமை வயதில் இனிக்க இனிக்க பேசினாய்
    சொன்னதை செய்யச் சொன்னால்
    கசப்பாய் உணர்ந்தாய்

    வாலிப வயதில்
    கல்விச்சாலை சிறைச்சாலை ஆனது
    இருந்தாலும் வெற்றிக்கோட்டை எட்டிவிடுகிறாய்

    வெள்ளித்திரையின் கனவில் மூழ்கினாய்
    அறியாவண்ணம் ஊரை வலம் வந்தாய்
    அறிந்தவுடன் அனைவரையம் மயக்கி விடுகிறாய்

    தொலைக்காட்சியில் இரவை விழிக்கிறாய்
    அதிகாலையில் இறைவனை துதிக்காமல்
    அதிகாலையின் இயற்கையை ரசிக்காமல்
    இன்பமாய் துயில் கொள்கிறாய்

    நண்பனாய் சொல்கிறேன்

    by Aha - Comments: 2 - Views: 767
  • 09022010
    பெண்ணே நீ கருப்பாய் இருந்தால் என்ன?

    உன்னை கனியாய் வர்ணிக்காவிட்டாலும்,

    கட்டிக்கரும்பாய் வர்ணிப்பேனே!

    ~சுரேஷ் ப்ரியன்~

    by Guest - Comments: 6 - Views: 717
  • 09022010
    நீ எழுதாத கடிதம்
    இன்று அதிகாலை எனது
    மெயிலுக்கு வந்தது..!!

    மொளனங்களின் வார்த்தைகள்
    என் இதயத்தை கண்ணாடியாய்
    உடைத்து போனது...!!!

    கண்டவுடன் மிக்க மகிழ்ச்சி..
    நீ உன்னோடு பேச என்ன இருக்கிறது
    என்று கேட்ட கேள்வி மிகவும் அருமை..

    என்ன உன் நளினம்
    அழகாய் ஒரு கத்தியின்றி
    மொள்னமாய் ஒரு கொலை

    by இளமாறன் - Comments: 6 - Views: 799
  • 09022010
    தியாகம்.....!




    என் இதழில் நீ இருக்கிறாய் என புகைப்பதை விட்டேன்!

    என் மனதில் நீ இருக்கிறாய் என மதுவையும் விட்டேன்!

    என் இதயத்தில் நீ இருக்கிறாய் என தீய சிந்தனைகளை விட்டேன்!

    இன்னும் உனக்காக நான் எதை விடவேண்டும் கேள்?

    உன் மீது கொண்ட காதலை தவிர.........!

    ~சுரேஷ் ப்ரியன்~

    by Guest - Comments: 2 - Views: 740
  • 09022010
    வர்ணனை....!



    என்னவளை மலராய் வர்ணிக்கவில்லை, அவள் வாடிவிடுவாள் என,

    என்னவளை நிலவாய் வர்ணிக்கவில்லை,அவள் தேய்ந்து விடுவாள் என,

    அவளை என் மூச்சுகாற்றாய் மட்டும் வர்ணித்தேன்,

    அவளோ என் இதயத்தை மட்டும் தொட்டுவிட்டு பறந்துவிட்டாள்.....!

    ~சுரேஷ் ப்ரியன்~

    by Guest - Comments: 5 - Views: 818
  • 09022010
    வானத்து நிலவாக நீயிருந்தாலும் என்
    உள்ளங்கை நீருக்குள் வந்துவிலுவாய்.

    அன்புசெல்வன்

    by anbutannaan - Comments: 10 - Views: 1438
  • 08022010
    இங்கே
    சுமைகளும்
    சோகங்களும்
    பதியப்படுகையில்
    நட்பு நீர்
    பூக்களாய்
    மலர்கின்றன
    காலம்
    வியந்து
    நிற்கின்றது
    ஆயிரம்
    காத தொலைவுகள்
    பிரிக்கமுடியாதது
    கண்டு
    யாரோ
    துடிக்கையில்
    எழுத்து
    வடிவில்
    கண்ணீர்
    துடைக்கபடுகிறது

    by maniajith007 - Comments: 24 - Views: 2675
  • 08022010
    என் கண்களிலேனடி வந்துவிளுந்தாய்
    என் இளமை பிம்பம் காணத்துடிக்குது

    வார்த்தையில் என்னடி மந்திரம் வைத்தாய்
    என்னை நானே மறந்து போனது

    அழகாய்யேனடி புன்னகைசெய்தாய்
    உள்ளக்குலிகள் காய்ந்து போனது

    பாதி முகம் காட்டிச்சாய்ந்தாய்
    போதை கொண்ட முகத்தை தந்தாய்

    நிலவு முகம் காட்டி நின்னு என்னை
    உந்தன் நிலலாக்கிக்கொண்டாய்

    பாதி வழியில் நீ...

    by anbutannaan - Comments: 3 - Views: 907
  • 08022010
    எது காதல்?



    அவளை நினைத்து அழுதேன்., கோழை என்றாள்,

    அவளை நினைத்து தாடி வளர்த்தேன், வேஷம் என்றாள்,

    அவளை நினைத்து கவிதை எழுதினேன், முட்டாள் என்றாள்,

    அவளை நினைத்து புகைத்தேன், பொறுப்புஇல்லாதவன் என்றாள்,

    அவளை நினைத்து குடித்தேன், ஊதாரி என்றாள்.,

    அவள் பின்னால் சுற்றினேன், பொறுக்கி என்றாள்,

    அவள் மட்டும்தான் வேண்டும் என்றேன்., நீ அதிர்ஷ்டம் இல்லாதவன் எனறாள்!

    ~சுரேஷ் ப்ரியன்~

    by Guest - Comments: 15 - Views: 1866
  • 08022010
    வறட்டு கவுரவம்.,

    வீண் பிடிவாதம்.,

    சமுதாயத்தின் உளறல்கள்,

    சொந்தங்களின் போலி புன்னகைகள்.,

    பணம் எனும் காகிதம்.,

    இவை அனைத்தும் கொன்றுவிட்டது., என் உண்மையான காதலை!

    காதலி பிரிந்தாலும்., காதலர்கள் இறந்தாலும்., ஒருபோதும் காதல் அழிவதில்லை..!
    ~சுரேஷ் ப்ரியன்~

    by Guest - Comments: 1 - Views: 738
  • 07022010
    கண்களை மூடி பல வண்ணக்கலவையில்
    ஓவியம் தீட்டிப்பார்கிறேன்
    பல எண்ணங்கள் கூடி ஒரு கவிதை
    தீட்டி வைக்கிறேன்
    பல பூக்களின் மென்மை தொட்டு
    பெண்மை உணர்கிறேன்
    கரும் மேகங்கள் கண்டுவந்து
    கூந்தலின் தன்மை அறிகிறேன்
    இதழ் விரிந்த மலர்கள் கண்டு
    புன்னகை அறிகிறேன்
    உனக்காக காத்திருக்கும் நேரங்களில் .......................................

    அன்புசெல்வன்

    by anbutannaan - Comments: 10 - Views: 1416
  • 06022010
    அன்னையின் அன்பு
    தந்தையின் அறிவு
    சகோதரியின் பாசம்
    என்னை அறியதவயத்தில் நான் விரும்பியது
    குயிலின் ஓசை
    மயிலின் நாட்டியம்
    தென்றலின் வருடல்
    மார்கழிப்பனி
    அந்திவானம்
    கார்மேகம்
    தனிமையை விரும்பியபோது நான் விரும்பியது
    உன்பெயர்,உன்பேச்சு
    உன்விருப்பம்,உன்கோபம்
    ஜிமெயிலில் பச்சைவிளக்கு
    செல் போனில் அலையோசை
    காலை, மாலை, குறுஞ்செய்தி
    நி பேசும் என் தொலைபேசி
    இதைமட்டும் விரும்பச்செய்தாய் நான் உன்னைவிரும்பியதால்

    by anbutannaan - Comments: 7 - Views: 831
  • 07022010
    இன்றைய அரசியல்...

    நீங்கள் போடும் ஓட்டுகளால்
    அரசியல்வாதின் வங்கி கணக்கு
    வளருகிறது.
    ஒட்டு போட்டபின் அழுக்கானது
    உங்கள் கை விரல் மட்டுமா?
    இல்லை இந்தியாவும் தான்...
    இந்தியா ஜனநாயகத்தின்
    ஆணிவேர் தான்.
    ஆனா அரசியல்வாதிகளின்,
    அராஜகத்தால் வெட்டி
    எறியபட்டது உண்மைதானே?
    இதில் தான் தினம்தினம்,
    குளிர் காய்கிறார்கள்.
    தேர்தல் வந்தால் மட்டுமே
    வேட்பாளர் உன்னை தேடி
    வருவார்.
    வெற்றிக்கு பின் அவரை
    நீ தேடி போகணும்.
    சிந்தனை செய்.
    ஒட்டு போடும் முன்,
    யோசனை செய் .
    மாற்றம் வரும்..
    இந்தியா நம் நாடுதான்.

    by kalaimoon70 - Comments: 2 - Views: 836
  • 07022010
    நட்பா காதலா ?

    என்னிடம் இருந்த
    ஒரு இதயத்தையும்
    பறித்துக் கொண்டது காதல்!
    எனக்காக
    ஒரு
    இதயத்தையே
    பரிசளித்தது நட்பு!

    கஷ்டங்களில்
    யோசித்தது காதல்!
    யோசிக்காமல்
    கைகொடுத்தது
    நட்பு!

    துயரங்களை நோக்கி
    இழுத்துச்சென்றது காதல்!
    உயரங்ளை
    நோக்கி
    அழைத்துச் சென்றது நட்பு!

    கட்டுப்பாடுகளை
    தளர்த்த
    முயற்சித்தது காதல்!
    கடமைகளை
    உணர்த்த முயற்சித்தது நட்பு!

    என்
    இலட்சியங்களை
    கனவாக்கியது காதல்!
    என்...

    by அன்பு - Comments: 14 - Views: 1590
  • 06022010
    தமிழ் மருத்துவம் தந்தது குணம்
    ஆங்கிலமருத்துவம் காண்கிறது பணம்
    பெண்மைக்குள் ஆண்மைபுகுந்து
    அலைபாயும் ஜீன்ஸ் பேண்டுகள்
    தாலிக்கயிறு தங்கக்கயிறாகி
    அலமாரியின் பாதுகாப்பில்
    ஆன்மீகம் வளர்த்த காவிகள் வரலாற்றில்
    களவியல் புரிந்த காவிகள் நீதிமன்றத்தில்
    மனிதம் பழுத்த தலைகள்
    புனிதம் கெடுத்த அரசியல்
    பெண்மையின் தோலுரிக்க
    புதுப்புது முயற்சிகள்
    கற்ப்பை இழக்கும் காட்சிக்கு
    அரங்கம் அதிர கைதட்டல்
    கற்ப்பை வெளிகொணர்ந்த பெண்மைக்கு
    தேசியச்சான்றிதல்

    அன்புசெல்வன்

    by anbutannaan - Comments: 14 - Views: 1528
  • 02022010
    நான் சுவாசிக்க கற்றுத்தந்தவள்
    நான் சுமையாக இருந்தாலும்
    சுகமாக நினைத்தவள்.
    பூகமத்தை பூமியே
    தாங்காத நிலை,
    பிரசவ பூகமத்தை,
    புன்னகையுடன் எதிர்கொண்டவள்
    தன் உயிர் தந்து
    என்னை ஈன்றவள்.
    இதயத்தில் அழமாக பதியம்
    போட்ட என் முகத்தை ,
    நேரில பார்த்த அந்த,
    நிமிடம் அனைத்தும் மறந்தவள்.
    என் வாழ்க்கைக்காக அனைத்தும்
    இழந்தவள்,துறந்தவள்,
    நான் முன்னேற வித்திடவள்.
    நான் எது சொன்னாலும்
    மறுமொழி சொல்லாதவள்.
    என்னை ,அழகு, அறிவு,ராஜா ,
    என்றல்லாம் பாராட்டி சீராட்டிய
    சீமாட்டி என் தாய் யவள்.
    பாசத்தின் பிறப்பிடம் ,
    வாழ்வின்...

    by kalaimoon70 - Comments: 10 - Views: 2603
  • 01022010
    நாளையும் காதலிப்பாயா ?






    விழிகளை கட்டிவிட்டு -என்னை
    கண்டுபிடி என்றேன் ...
    கண்ணிர் விடுகிறாய்
    புரியாமல் நான்விழிக்க
    "உங்களை காண்பது தானே -என்
    கால புண்ணியம் -இப்படி
    கட்டிவிட்டால் ..?" என்கிறாய்
    "நீஎன் காதலித்தானா..."
    என்பதற்குள் .."இல்லை
    நீங்கள் என் கடவுள் " என்கிறாய்
    உன்னை...

    by அன்பு - Comments: 17 - Views: 2242
  • 06022010
    அந்திவானம் சிவந்துவிட
    ஆழ்கடல் அங்கே தத்தளிக்க
    சாலையெங்கும் மலர்வாசனை
    தென்றலும் தூவிச்செல்ல
    ஒருநிமிடம் உனைக்கான
    பலமணிநேர போராட்டம்
    தூரத்தில் உன்வருகையாழ்
    நான் தொட்டுவிடும் தூரமே வானம்
    இந்த பெண்ணிலா உழவரும் இரவுகள்
    ஆகயகங்கையில் விண்மீன்களுக்கும் தாகம்
    தோழிகளோடு உந்தன் பளிங்கு சிரிப்பு
    பத்திரமாக என் உள்ளத்தின் பதிப்பு
    தனிமை தாங்கினாய் தாவனிக்குடை பிடித்தாய்
    தேய்பிறை புன்னகை கண்டு
    என் காதல் வளர்பிறையனது இன்று..............

    by anbutannaan - Comments: 6 - Views: 838
  • 05022010
    கருப்பாய் இருக்கிறது

    நான் கண்ட காவியம்

    காணாமல் போய் விட்டது

    நான் வரைந்த ஓவியம்

    சிவப்பாய் இருக்கிறது

    எம்மக்களின் குருதி

    சினிமாவில் மட்டும் இருக்கிறது

    ஈழத்தின் எழுச்சி

    பாசமாய் இருக்கிறது

    ஈகரை நண்பர்கள் மேலே

    வேஷமாய் இருக்கிறது

    நட்பு என்று பொய் சொல்பவர் மேலே

    கோவமாய் இருக்கிறது

    நான் கண்ட எதிரிகள் மேலே

    பாவமாய் இருக்கிறது

    எதிரிகளும் என்னை கண்டு ஓடும் போது

    சந்தோசமாய் இருக்கிறது

    வெற்றி பெற்றால்

    by Manik - Comments: 21 - Views: 2461
  • 04022010
    அன்புக்கு ஏங்கினேன் அடைக்கலம் தந்தாய்
    உறவுக்கு ஏங்கினேன் உரிமையோடு மச்சானேன்றாய்
    ஏனோ சொல்லிமகிழ்ந்தாய் உன் என்ன விருப்பங்களை
    அதையே நானும் சொல்லிமகிழ்ந்தேன் எனது விருப்பங்கலாய்
    நாட்களை கூட நாடிக்குள் கொண்டுவந்தாய்
    என் பாக்களுக்கேல்லாம் கருவரியாக நீயே அமைந்தாய்
    உன்னை நான் பார்த்ததில்லை உலகப்பூக்கள் ஓன்று கூடிய
    மேன்மைய்யேன்றேன்
    உயிரின் உச்சத்தில் உன்னை வைத்தேன்
    உன்னை கானாபோழுது மரணபிடியில் மனநிலை கண்ண்டேன்

    by anbutannaan - Comments: 19 - Views: 2247
  • 05022010
    புனிதமானது எனது காதல்..!


    உன் கூந்தல்பூவாக இருக்க ஆசைப்பட்டேன்., உன் கூந்தல் மணத்தை நுகர்ந்து கொண்டே இருப்பதற்காக!

    உன் காதோரம் கம்மலாய் இருக்க ஆசைப்பட்டேன்., உன் காதோரம் இரகசியங்கள் பேசுவதற்காக!

    உன் மூக்குத்தியாக இருக்க ஆசைப்பட்டேன், உன் மூச்சுகாற்றாவது என்மேல் படவேண்டும் என்பதற்காக!

    உன் உடலில் ஆடையாக மட்டும் இருக்க வேண்டாம் என ஆசைப்பட்டேன்., என் புனிதமான காதல் காமமாகிவிடக்கூடாது என்பதற்காக!

    -SureshDogTrainer., 26, Brayant Nagar 4th Street, Tuticorin - 628008, +919894380887

    by Guest - Comments: 15 - Views: 2085
  • 05022010
    வேப்பஞ்சாரிலும் தேன் எடுப்போம்!
    நீண்டதூரமும் நிழல் என்போம்!
    கடுமைகளை கானலைக்கொள்வோம்!
    சமூகத்தில் சாணக்கியனாய் இருப்போம்!
    திறமைகளை மின்சாரமாய் வைப்போம்!
    முயற்சியில் தேனியாய் மாறுவோம்!
    மூடத்தில் முடமாய் போவோம்!
    நட்பில் நாய்களை சேர்ப்போம் !
    உண்மைக்காக நாடகம் போடுவோம்!
    தவறான தவறுகளை செய்வோம்!
    தோல்விகளை கனவாய் நினைப்போம்!
    வெற்றியை மறக்காமல் மறப்போம்!
    உறவுக்காக குயிலாக கூவுவோம்!
    உரிமைக்காக மயிலாக அகவுவோம்!
    உடல் கிழத்தாலும்
    உள்ள இளமையில் உறுதியாய் இருப்போம்
    -நாம் இளைஞர்கள்

    by mkag.khan - Comments: 22 - Views: 2493
  • 05022010
    காதலினும் சிறந்தது நட்பு...!


    காதல் உன்னை சிரிக்கவைக்கும், நட்பு உன்னை சிந்திக்கவைக்கும்,

    உன்னை சிரிக்கவைக்கும் இதயத்தை நம்பாதே!

    உன்னை சிந்திக்கவைக்கும் இதயத்தை நம்பு!

    உன் வாழ்க்கை ஒளிமயமாய் இருக்கும்!

    --என்றும் நட்பே சிறந்தது!

    by Guest - Comments: 14 - Views: 1637
  • 04022010
    ஆசையில் ஓர் கடிதம்
    வரைவது இந்திய இதயம்
    இது இறைவனுக்கு தூது அல்ல
    என்போல் இதயங்களுக்கு தூது!
    காந்தியின் நள்ளிரவு பெண் நடைபாதை அமைப்போம்!
    லஞ்சமில்லா ஒரு நாளில் புரட்சி விழா எடுப்போம்!
    அரசியல்வாதியின் அதிகாரத்தை குடிமகனை எதிர்போம்!
    சமுதாய மூடத்தை மூளையைவிட்டு மூலையில் வைப்போம்!
    இந்தியா என்றால் உழைப்பில் இதயம் நடுங்க வைப்போம் !
    அதிகாரிகளை மக்கள் சேவர்களாக மாற்றுவோம்!
    எவர் உதவியும் இந்தியாவிற்கு வேண்டாமலக்குவோம் !
    இந்திய கரங்களை இலகிரும்புக் கரங்கலக்குவோம்!
    உயர்வுக்கு நம் தேசத்தை உதாரணமாக்குவோம்!
    சாதனைகள் அனைத்தும் நமக்கு சாதரணமாக்குவோம்!

    by mkag.khan - Comments: 29 - Views: 2919
  • 04022010
    கடற்கரையில்
    நீயும் நானும்
    நமக்கு
    இடையில்
    அமர்ந்து
    இருந்தது
    மௌனம்
    நீயோ
    அலைகளை
    பார்த்து ரசித்து
    கொண்டிருந்தாய்
    நானோ
    வார்த்தைகள்
    முண்டியடிப்பதன்
    வேதனையில்
    மௌனத்தை
    கரம்
    பிடிக்கையில்
    கடல் அலைகள்
    அழகை
    பற்றி சொன்னாய்
    உன்னை
    பார்ப்பதா
    உன் வார்த்தைகள்
    காற்றில் செல்லாமல்
    ஏந்தி கொள்வதா
    ஏதும்
    அறியாமல்
    நான்
    மட்டுமல்ல
    வார்த்தைகளும்
    மெல்ல
    குமுறுகிறது
    வெளியே
    கடலும்
    உள்ளே நானும்

    by maniajith007 - Comments: 8 - Views: 969
  • 04022010
    ...

    by ஷேக் அகமது - Comments: 8 - Views: 896
  • 04022010

    களவுக் காதல்

    கலைத்துப்போட்ட கார்மேகமாய்

    இடை வரையில் தவழ்ந்து கொஞ்சிய

    அவள் கூந்தலில் முகம் புதைத்தேன்...

    என் கரங்கள் அத்துமீறும் போது

    அந்த வெட்கக்கண்கள் வருடிய இடமெலாம்

    சிலிர்த்து உணர்ந்தேன்.

    காதலை எதிர்க்கும் துணிவு அவள் கைகளுக்கில்லை...

    முத்தம் தரத்துடித்த உதடுகள் வெட்கத்திலும் துடித்தன...

    கண்ணீர்த்துளிகள் சற்றே வெளிவர அனுமதிகேட்க

    உயர்ந்து...

    by கலைவேந்தன் - Comments: 6 - Views: 953
  • 04022010
    உன்
    ஞாபக
    வனங்களில்
    திரியும்
    பட்டாம்பூச்சியை
    பார் அதன்
    இறகு வண்ணங்கள்
    இறந்தகாலத்தின்
    கவிதைகளாய்
    நீயும்
    நானும்
    கைகள் முழுக்க
    இன்னும்
    இருக்கிறோம்
    அந்த
    சிறகுகளின்
    வண்ணங்களோடு
    நீ உன்னுடயவனுடன்
    நான்
    உன் நினைவுடன்

    by maniajith007 - Comments: 24 - Views: 2695
  • 04022010
    ஒருநாள் நினைத்தேன்
    என் இதய சமர்ப்பணம் உனக்கு என்று,

    பலநாள் தவித்தேன்
    அதை கொடுத்திட உனக்கு,

    யாரைநோக்கி நீ புன்னகை செய்தாலும்
    அதற்கு விளக்கம் தேடுகிறேன்,

    உன்னை அறியாமல் என்னை தாக்கும்
    உன் புன்னகை புதிய பூக்களாய் பரிதுக்கொள்கிறேன்,

    பெண்ணே! நீ உலா வரும் இரவுகள்
    ஆகாய கங்கையில் விண்மீன்களுக்கும் தாகம்,

    என் அருகே நீவர இலந்தேன்ற்றலும்
    இலஞ்சூடாய் வெளியேற்றம்,

    பெண்ணே என்னை ஏற்றுக்கொள்

    by anbutannaan - Comments: 30 - Views: 3347
  • 04022010
    காதலின் விதை காற்றோடு பயணம் அவள்
    கண்முட்டும் நேரம் முழைத்திடும் தருணம்.

    by anbutannaan - Comments: 2 - Views: 936
  • 02022010
    எண்ணத்திகைகும் மலர்களை ஒற்றை மாலையாக்கி
    உன் காலில் சமர்ப்பிப்பேன் !
    நட்சத்திர ஒளியெல்லாம் இரவில் சேரும்படி மாளிகைகட்டி
    உன்னை அமர்த்துவேன்!
    இடியையும் மின்னலையும் கோர்த்து ஓலிஒளியாக்கி
    உனக்கு பொழுதுபோக்குவேன்!
    நெருப்பிலே நூலெடுத்து வானவில் வண்ணம் சேர்த்து
    உனக்கு சேலை நெய்வேன்!
    கோடைவெயில் சீண்டாமல் கருமேகங்களை போர்வையாக்கி
    உனை காப்பேன்!
    குளிர் வந்து வாட்டாமல் சூரியனை அடிமையாக்கி
    உனக்கு குளிர்காய்விப்பேன் !
    நீலவானம் முழுமையும் பூக்களை பூக்கவைத்து
    உன் கூந்தலில் சூடுவேன்!
    வெண்மேகம் பிழிந்த சாறினை காற்றிலே வடித்து
    உன் கூந்தல்...

    by mkag.khan - Comments: 10 - Views: 1756
  • 21012010
    காதலர் தினம்
    பச்சை சட்டை அணிந்தான்,
    காதலிக்கு பரிசளிக்க
    பணம் எடுத்தான் - தந்தையின்
    கறைச்சட்டையில்

    சிறப்பு வகுப்பென்று
    அம்மாவிடம் சொல்லி
    காதலனை பார்க்க சென்றால்,
    வண்டிச் சக்கரத்தில்
    சிக்கிக் கிழிந்தது துப்பட்டா-நினைத்தால்
    துப்பட்டாவை கட்டிக்கொள் என
    அம்மா சொன்னதை



    -அறந்தை
    கான் அப்துல் கபார்கான்

    by mkag.khan - Comments: 6 - Views: 832
  • 21012010
    பத்திரிக்கைகளின்
    பக்கங்கள்
    பரபரப்பு அரசியல் செய்தி!
    பார்க்க மறுக்கும்
    இளைய கண்கள்
    -இந்தியா ஒளிர்கிறது

    கோவில் வாசல்
    கை ஏந்தி
    தட்டு முதலீட்டில்
    முதலாளிகள்!
    விழுந்ததை எண்ணத்தெரியாமல்
    -தமிழகம் தலைநிமிர்ந்தது


    -அறந்தை
    கான் அப்துல் கபார்கான்

    by mkag.khan - Comments: 2 - Views: 753
  • 02022010
    என்னில் தணியா தாகங்கள் அதுதானோ!
    என்னை சிறை செய்த நினைவுகள் அதுதானோ!
    என்னில் அழியாத பதிவுகள் அதுதானோ!
    மனம் மறக்காத காலங்கள் அதுதானோ!

    குழந்தை சிறுவராய் எங்கள் சிநேகங்கள்
    குமரப் பருவத்தில் அனைத்துமே தவறுதே?

    மனதில் சபலங்கள் இல்லா காலம் அது !
    எங்களை துயரத்தில் தல்லா நேரம் அது!

    உயிரிலும் மேலாய் பழகினோமே
    ஊமையை இன்று நிற்கிறோமே !

    உறவுகளாய் அன்று நாங்கள் இருந்தோம்
    விழிகள் மட்டும் இன்று பேசுகிறதே ?

    நிலவில் அன்று வாழ்ந்திருப்போம்
    காலன் நெருப்பில இன்று வீழ்த்துவிட்டோம் ?

    எங்கள் பயணங்கள் அன்று...

    by mkag.khan - Comments: 2 - Views: 972
  • 31012010
    உலக நரநாகரீக
    சந்தையில்
    மனிதம் கண்டது !
    தமிழ் !

    வேறு மொழிகள்!
    எழுத்துக்கள்
    காணா உலகில்
    தொல்காப்பியம் படைத்தது!
    தமிழ்!

    வேறு மொழி
    புலவனும்
    இலக்கணம் கண்டு
    வியந்தான் - அது
    தமிழ்!

    சீரிய
    செம்மொழி தமிழ் !
    கேட்கிறான் தமிழன்
    புரியாதாம் புராண தமிழ் !
    புது விளக்கங்களை-
    களியுகத்தில்.

    வாழ்கதமிழ் !
    வளர்க தமிழர் !

    -அறந்தை
    கான் அப்துல் கபார் கான்

    by mkag.khan - Comments: 6 - Views: 843
  • 01022010
    என் உயிர் காதலியடி நீ எனக்கு .
    உன் மயிர் மதிப்பு இல்லையடி நான் உனக்கு .உன் அரைப்பர்வையில்
    என் உடம்பு அறைபதியனானதடி

    வேல் முருகன்.
    hosur..
    9585909381.

    by veljayam - Comments: 2 - Views: 951
  • 01022010
    இது ஒன்றும் புதிதல்ல
    யாவும் எனக்கு எதிராகி
    காரணம் புதிராகி
    நான் மலைப்பது புதிதல்ல ..

    வெறுமனே உண்டு கழிக்கும்
    மாமிசங்கள் இதை உணராதிருக்கலாம்.
    அனுதினம் இறையருளின் ஜெட் கேட்டகிரி பாதுகாப்பில்
    வாழும் என் மனம் இதை உணர முடிகிறது.

    எனக்கு இவர்களோடு எவ்வித பந்தமும் இல்லை.

    இங்கு எதுவும் எனக்கு சொந்தமுமில்லை.

    நான் ஒரு கட்டியங்காரன் ..
    அழிவின் வருகையை கூறவந்தேன்
    என் அக‌ங்கார‌ம் திருப்தியுறுவ‌தற்காக
    புதிய இந்தியாவுக்காக ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா என்று
    க‌தை பண்ண‌ வைத்திருக்கும்
    இறைய‌ருளின் வியூக‌த்தை
    அறியாத‌...

    by swamy7867 - Comments: 0 - Views: 776
  • 01022010
    நாற்பதில் நாய் குணம்?
    ஆம்..படைப்பின் பால்
    படைப்பாளியின் பால்
    பொங்குகிறது நன்றி.
    என் தந்தை அதிகப்படி
    வரதட்சிணை கேட்டுஎன் தாயை
    கொளுத்தியிருந்தால்?
    உதவாக்கரை அரசாங்கங்களின்
    பேச்சைக் கேட்டுகு.க செய்திருந்தால்?
    அவனே மாவா,குட்காவுக்கு பழகி
    ஆண்மை இழந்திருப்பின்?
    மூன்றாவது வாரிசாக
    நான் பிறந்திருக்க முடியுமா என்ன?
    ஆம் ..நாற்பதில் நாய் குணம்?
    ஆம்..படைப்பின் பால்,படைப்பாளியின் பால்

    by swamy7867 - Comments: 0 - Views: 888
  • 01022010
    தமிழருக்கு
    தமிழ் மொழி
    மாற்றான் தாய் (போல்)
    நினைத்து
    அவமதிக்கிறான்
    வெறுக்கிறான்
    இழிக்கிறான்

    பிறமொழிகள்
    மாற்றான் தோட்டத்து
    மல்லிகை போல
    மணப்பதைக்கண்டு மயங்கி
    நாகரீக போதையில்
    தள்ளாடி
    தவிக்கிறான்.

    மாற்றான் தோட்டத்து
    மல்லிகையும்
    மணம் வீசும் தான்
    அதை
    ரசிக்கலாம்
    அனுபவிக்கலாம்? (சிலநேரங்களில்)

    ஆனால்
    தாயைப்
    புறந்தள்ளுவதும்
    நியாயமோ
    சொல்வீர்??


    by BPL - Comments: 3 - Views: 982
  • 01022010
    நீ பார்த்த பார்வையில்
    காதல் கவிதையாய் சொன்னாய்,
    நீ என்னை பார்க்கும் போதெல்லாம்,
    புன்னகை தூவி சென்யறாய்.
    நீ என்னை காதலிப்பது தெரிந்தாலும்,
    இதழ் திறக்க மறுத்தாய் .
    நீ என்னை உயிரோடு அல்லவா
    தினம் தினம் எரித்தாய்..
    நீ என்னை, எரித்தாலும் ,காதலை
    மறைத்தாலும்,நம் காதல் அழியாது.
    நீ நம் காதலை சொல்லாதவரை
    என் உயிர் பிரியாது .................

    by kalaimoon70 - Comments: 9 - Views: 783
  • 21012010
    தேடி தேடி
    ஓய்ந்த பின்னும்
    தேடுகிறேன்
    எங்கேனும்
    ஓர் மூலையில்
    என் மூதாதையர்கள்
    விட்டு சென்ற
    பெண்மையின்
    இலக்கணத்தை...!

    தேடலின்
    இறுதியில்
    கிடைத்தவள்
    நீ தான்
    நான் உன்னை பார்த்தபொழுது
    நீ கொண்ட வெட்கம்
    எனை துண்டாடியது
    என் பல வருட
    தேடல்கள்
    உன்னால்
    முடிவுற்றது
    - பச்சை பட்டாடை

    by மனுபரதன் - Comments: 12 - Views: 1624
  • 31012010
    காதல் ஒரு பார்வை

    இதயத்தில் பிறந்து,
    கண்களில் நுழைந்து,
    தொலை பேசியில் வளர்ந்து ,
    கற்பனைகளில் விரிந்து ,
    கடற்கரையில் படர்ந்து,
    இஷ்டமாய் வலம் வந்து,
    கஷ்டங்கள் பல கடந்து,
    காதலர்களாய் தொடந்து ,
    விழித்து கொண்டால் காதல் ,
    விழ்ச்சி கண்டால் சாதல்.


    ,

    by kalaimoon70 - Comments: 0 - Views: 881
  • 31012010
    சினிமா

    வேற்றுமைலும் ஓர் ஒற்றுமை,
    திரை அரங்கத்தில்தான்.
    வசனத்தின் வல்லமை கண்டு
    கொடிபிடித்த கூட்டம்,
    முளைத்தது இங்குதான்.
    மன்னனாக பார்த்தவரை
    மகுடம் சூட்டி மகிந்தது, இங்குதான் .
    பாடலுடன் காதலர்களை,
    கண்டதும் இங்குதான்.
    சூரியன் உதித்ததும்,
    இலைகள் முளைத்ததும்
    இங்குதான்.
    பட்டாளிக்கூட இசையை
    ரசிக்கசெயததும் இங்குதான்,
    நன்றி மறந்ததும், இந்த சினிமாதான்
    வல்லரசுவை விழ்த்தியதும்
    இந்த சினிமாதான்,
    சினிமா, சினிமாதான்,
    உயிராய் போனது உண்மைதான்....

    by kalaimoon70 - Comments: 1 - Views: 729
  • 31012010
    காதல்;

    கண்ணுக்கும் ,கண்ணுக்கும்
    பிறந்த கவிதை.
    வாலிப தேசத்தின்,
    தேசிய கீதம்.
    இரு இதயத்திலிருந்து வரும்,
    இயற்கையின் அதிசயம்,
    மின்னல் போல வந்து சேரும்,
    இலவச மின்சாராம்.
    கிடைத்து விட்டால்,
    ஒளிரும் காதல் விளக்குகள்.
    இல்லையென்றால் திறந்துவிடும்
    மரணத்தின் வாசல்கள்...
    இது தான் காதல்......

    by kalaimoon70 - Comments: 0 - Views: 784
  • 30012010
    அனைவரும் பேசிய முதல்மொழி
    ஆதிகாலத்தின் முழுமொழி
    இலக்கணம் இல்லா தனிமொழி
    ஈழம் சிங்களம் ஒற்றுமை சொன்னமொழி
    உலகம் முழுமைக்கும் ஒருமொழி
    ஊமைக்கு இதுதான் வாழ்மொழி
    ஒவ்வொரு தாய்க்கும் தேன் மொழி
    ஓடும் உலகின் இறைமொழி
    ஔவு பௌவு ஓசைகள் கொண்ட மொழி
    அஃது என்றும் இனிமையான மழலைமொழி

    -அறந்தை
    கான் அப்துல் கபார் கான்

    by mkag.khan - Comments: 0 - Views: 842
 

Users browsing this forum: None
Moderators

வழிநடத்துனர், நிர்வாக குழுவினர், மன்ற ஆலோசகர்

Permissions in this forum:

You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum