புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_c10நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_m10நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_c10நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_m10நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_c10 
31 Posts - 44%
jairam
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_c10நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_m10நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_c10நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_m10நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_c10நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_m10நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_c10 
1 Post - 1%
சிவா
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_c10நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_m10நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_c10 
1 Post - 1%
Manimegala
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_c10நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_m10நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_c10நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_m10நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_c10நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_m10நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_c10நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_m10நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_c10 
13 Posts - 4%
prajai
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_c10நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_m10நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_c10 
9 Posts - 3%
jairam
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_c10நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_m10நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_c10 
4 Posts - 1%
Jenila
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_c10நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_m10நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_c10 
4 Posts - 1%
Rutu
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_c10நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_m10நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_c10நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_m10நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_c10நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_m10நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_c10நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_m10நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 09, 2013 2:17 pm

கண்ணதாசன்...
காலத்தின் கைகளில் அதிர்ந்துகொண்டே இருக்கும் கவிதை வீணை, எவ்வளவோ பேர் பருகியும் தீராத சந்த மதுகோப்பை, தேய்பிறை காணாத தேன் தமிழ் நிலவு, கவியரசருக்குக் காலமெல்லாம் காதல் மேல் உறவு.
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் P179
மகரந்தச் சொற்களில் கவி பாடிய தென்றல், மரண தேவன் மார்பில் ஏறி விளையாடிய குழந்தை.
வார்த்தைகளில் மட்டுமில்லாமல் வாழ்க்கையிலும் காட்டாறாய் பொங்கிப் பிரவகித்தவர். ‘நான் நிரந்தரமானவன். அழிவதில்லை’ என செருக்காய் சிரித்த சிறுகூடல்பட்டிச் சிங்கம். வாழ்வே தடாலடியான தனி சினிமா... கவிஞரின் வாழ்விலிருந்து இங்கே கொஞ்சம்...

நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் P181a
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Bullet2கண்ணதாசனுக்கு 3 மனைவிகள். 15 பிள்ளைகள். அவர் வீடு முழுக்க எப்போதும் குழந்தைகளால் நிறைந்திருக்கும். குழந்தைகளின் பெயர்கள் சமயங்களில் அவருக்கு மறந்துவிடுமாம். ‘என்னடா இது... எவனுக்கு என்ன பேர் வெச்சோம்னே நினைப்பில்லாம மறந்து போகுது. பேசாம எல்லாத்துக்கும் 1, 2, 3-ன்னு நம்பரை எழுதி மாட்டிட வேண்டியதுதான்’ என்பாராம் சிரித்துக்கொண்டே.

நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Bullet2ஒருமுறை சிங்கப்பூருக்குச் சென்றிருந்தபோது ஷாப்பிங் போயிருக்கிறார். ‘குழந்தைகளுக்கு டிரெஸ் எடுங்களேன்’ என நண்பர்கள் சொல்ல, இவரும் ரொம்பவும் ஆர்வமாக விதவிதமான வண்ணங்களில் ஆடைகளை அள்ளியிருக்கிறார். அருகில் இருந்த நண்பர் பிரமிப்பாக, ‘உங்க எல்லாக் குழந்தைகளோட டிரெஸ் சைஸும் உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்க, ‘எவனுக்குத் தெரியும்? எங்க வீட்லதான் எல்லா சைஸ்லேயும் குழந் தைங்க இருக்காங்களே. யாருக்கு எது பொருந்துதோ அதைப் போட்டுக்க வேண்டியதுதான்!’ என்றாராம் அதிர அதிரச் சிரித்தபடி.

நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் P181
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் P180e

நேரம் கிடைத்தால், குடும்பத்துடன் மொத்தக் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சுற்றுலா செல்வாராம். அப்படி ஒரு நாள், எல்லோருடனும் பெங்களூருக்குச் சென்றிருக்கிறார். அங்கேயிருந்து திடீரென அப்படியே ஊட்டிக்குப் போயிருக்கிறார்கள். ஊட்டியில் குடும்பத்துடன் இவர் தங்கியிருந்த ஓட்டலில் ஓர் ஊழியர், யாரோ ஒருவரிடம், ‘ஸாரி சார். ரூம் எல்லாமே ஃபுல். ஏதோ ஸ்கூல் லேருந்து டூர் வந்திருக்காங்க’ என்று சொன்னதைக் கேட்டுக் கொந்தளித்திருக்கிறது கவியரசர் குடும்பம். கவிஞரோ சிரித்தபடியே, ‘விடு விடு, அவன் சரியாத் தான் சொல்றான். நான் ஒரு ஸ்கூலையேதானே பெத்திருக்கேன்’ என்றா ராம்.

நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Bullet2முதல் மனைவி பொன்னழகியுடன் முதலிரவு. அவர் கிராமத்துப் பெண்மணி. வீட்டில் பார்த்து வைத்த கல்யாணம். பால் சொம்புடன் வந்த மனைவியை உட்காரவைத்து, ‘நீ எப்படி நடந்துக்கணும் தெரியுமா...’ என்று தன் குடும்பத்தைப் பற்றி, நண்பர்கள், தொழில் என எல்லாம் பேசியிருக்கிறார். பொன்னழகி எல்லாவற்றுக்கும் தலையை ஆட்டி ஆட்டிக் கேட்க, ‘சரிதான்... அடக்கமான பொண்ணா அமைஞ்சுட்டா’ என்று உற்சாகமாகி விட்டார். காலையில் கண்ணதாசன் வெளியே வர, ‘பொண்ணு நல்லபடியா இருந்தாளா? அவளுக்குக் காது மட்டும் கொஞ்சம் சரியா கேட்காது. மத்தபடி ரொம்ப நல்ல பொண்ணு’ என்று சொல்ல, கவியரசருக்கு அதிர்ச்சி. ‘நேத்து நைட் நான் சொன்னதுக்கெல்லாம் தலையை ஆட்டி என்னை நம்ப வெச்சுட்டியேடி’ என மனைவியைக் கிண்டலடித்த கவியரசர், ‘கவிஞன் பாடுவது தமிழ்ப் பாட்டு, வந்த பொண் டாட்டியோ கைநாட்டு’ என்றாராம் அழகாக.

நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் P180d
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Bullet2முதல் கல்யாணம் நடந்து கொஞ்ச நாள்தான் ஆகியிருக்கும். கவிஞரின் அண்ணன் ஏ.எல்.சீனிவாசன் வீடு இருந்த தெருவிலேயே, ஒரு கட்டடத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் டிராமா ட்ரூப் இருந்தது.

அதில் நடிகையாக இருந்த பார்வதியுடன் காதல். இது என்.எஸ்.கே-வுக்குத் தெரிய வர, ‘அடேய் கவிஞா... எனக்கே தண்ணி காட்டிட்டியே!’ என்று அவரே திருமணம் செய்து வைத்தாராம்!

நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் P179c
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Bullet2கிட்டத்தட்ட ஐம்பதை நெருங்கும் நேரத்தில், மூன்றாவது கல்யாணம். வள்ளியம்மை, கவிஞருக்கு ரசிகையாக அறிமுகமானவர். கல்லூரி மாணவியான வள்ளியம்மை, கவிஞருக்கு அடிக்கடி கடிதங் கள் எழுதுவது வழக்கம். ஒருமுறை அந்தக் கல்லூரியின் வழியாகப் பயணம் போன கண்ணதாசன், திடீரெனக் கல்லூரிக்குள் நுழைந்துவிட்டார். நேராக முதல்வர் அறைக்குப் போனவர், ‘வள்ளியம் மையைக் கூப்பிடுங்க’ என வரச் சொல்லி பார்த்துப் பேசினார். அந்த இன்ப அதிர்ச்சி அடுத்தடுத்துத் தொடர, கடித வழியிலேயே நட்பு தொடர்ந்து, காதலாக வளர்ந்து, திருமணத்தில் முடிந்திருக்கிறது.

நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் P179b
வள்ளியம்மையைக் கல்யாணம் செய்துகொண்டு, அண்ணன் வீட்டு வாசலில் நின்றிருக்கிறார் கவிஞர். அண்ணன் பயங்கரக் கோபமாகி, ‘குழந்தைங்க இருக்கும் போது இந்த வயசுல என்னடா இது?’ என டென்ஷனாக, அமைதியாக நின்றிருக்கிறார் கவிஞர். ‘நீயெல்லாம் திருந் தவே மாட்டே. எப்பிடி யாவது போய்த் தொலை’ என அவர் சொன்னதும், ‘அண் ணன் மன்னிச்சுட்டாரு, வா வா வா!’ என வள்ளியம்மையை அழைத்துக் கொண்டு உள்ளே போயி ருக்கிறார் கவிஞர்.
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Bullet2எத்தனை துயரமான பொழுது களிலும் தன் சோகம் குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது என்பதில் கவனமாக இருந்தவர் கவியரசர். அவர் குழந்தைகள் முன்னால் கதறி அழுதது ஒரே ஒரு முறைதான்.

நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் P180c
சினிமா தயாரிப்பில் ஈடுபட்டு, பணமெல்லாம் இழந்து நின்ற நேரம். தீபாவளி வந்துவிட்டது. பணத்துக்காக பல இடங்களில் முயற்சி செய்தும் கிடைக்காமல் போகவே, குழந்தை களுக்கு எதுவும் செய்ய முடியாத சூழல். தீபாவளிக்கு முதல் நாள் ஊரே சந்தோஷத்தில் இருக்க, அறைக் குள் படுத்திருந்த கவிஞரிடம் பட்டா சும், புத்தாடைகளும் கேட்டு நின்றிருக் கின்றன குழந்தைகள். அப்படியே அவர்களை அணைத்தபடி உடைந்து போய் அழுதிருக்கிறார் கவிஞர். அன்றைக்கு ஒரு கம்பெனியில் பாட்டு எழுதக் கூப்பிட, ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே, ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் இதயத் திலே’ என்று எழுதினார். அந்தப் பாடலுக்காக வாங்கிய பணத்தில் அத்தனை பேருக்கும் புத்தாடைகள் வாங்கினாராம்.

நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் P179a
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Bullet2கல்லக்குடி போராட்டத்தில் கண்ணதாசனைச் சிறையில் அடைத்துவிட்டது போலீஸ். சிறையில் இருந்து வீட்டுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார் கவிஞர். அதில், ‘இங்கே ஜெயில்ல இருக்க முடியலை. எனக்கு வயிற்றுப் போக்காக இருக்கிறது. இங்கேயே இருந்தா, செத்துப் போயிருவேன். அதனால், உடனே எனக்கு ஜாமீனுக்கு ஏற்பாடு பண்ணுங்க’ என எழுதிவிட்டு, கடைசியில், ‘எனக்கு வீட்டில் 20 வெள்ளைப் பணியாரம் செய்து அண்ணனிடம் கொடுத்து விடவும். 20 இல்லை யென்றால் 10கூடப் போதும்’ என எழுதியிருக்கிறார்.

கவிஞருக்கு வெள்ளைப் பணியாரமும் காரச் சட்னியும் அவ்வளவு பிடிக்கும்.


நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Bullet2ஒருமுறை சிவாஜி யைப் பார்க்க அவரது இல்லத்துக்குச் சென்றிருக்கிறார் கவியரசர். ‘வாடா கவிஞா...’ என சிவாஜி வாஞ்சையுடன் வரவேற்க, கொஞ்சமும் யோசிக்காமல், சட்டென்று கோபமாகி, ‘என்னடா நடிகா?’ எனக் கேட்டிருக்கிறார். இந்தச் சம்பவத்துக் குப் பிறகு இருவரும் கொஞ்ச நாள் பேசிக்கொள்ளவில்லை.
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் P180b

நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Bullet2தன் மகன்களில் கலைவாணன் கண்ணதாசனை கவிஞருக்கு ரொம்பவும் பிடிக்கும். ‘என்னப் பத்தி ஒரு பாட்டு எழுதுங்களேன்’ என்று கலைவாணன் கேட்க, ‘அதான் ஏற்கெனவே எழுதிட்டேனடா... ‘ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந் தாயோ?’ பாட்டை உனக்காகத்தானே எழுதினேன்’ என்றார் சிரித்துக் கொண்டே. அதைப் பார்த்த மற்ற குழந்தைகள், ‘எங்களைப் பற்றி எழுத மாட்டீங்களா?’ என்று கோபத்துடன் கேட்க, ‘அதுவும் எழுதிட் டேனே.

‘ஒரேயரு ஊரிலே ஒரே யரு ராஜா... ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை. அந்த ஒன்பதிலே ஒன்றுகூட உருப்படி யில்லை’ன்னு வருதுல்ல... அந்தப் பாட்டு உங்களை மனசில் வெச்சு எழுதினதுதான்’ எனச் சிரிக்க வைத்திருக்கிறார்.


நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் P180a
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Bullet2கண்ணதாசன் காங்கிரஸில் இருந்தார். காங்கிரஸின் அப்போ தைய சின்னம் காளை மாடு. மயிலை மாங்கொல்லையில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ‘காளை மாடு சின்னத்தில் வாக்களியுங்கள். நாடு சுபிட்சமாய் இருக்கும்’ என்று ஆதரவு கேட்டுப் பேசினார் கண்ண தாசன். மறுநாள் அதே இடத்தில் தி.மு.க. கூட்டம். அதில் பேசிய கலைஞர், ‘நேற்று என் நண்பர் கண்ணதாசன் இங்கே காளை மாட்டுக்கு ஆதரவு கேட்டுப் பேசினார். அவர் பேச்சைக் கேட்டு காளை மாட்டுக்கு வாக்களித் தால் நாடு நன்றாக இருக்காது. அவருக்குத் தெரியாததல்ல... காளை மாடு கன்று போடாது. அதனால் நாட்டுக்குப் பயனில்லை’ என்றாராம்.

தனது ‘தென்றல்’ பத்திரிகையில் அது பற்றி எழுதிய கண்ணதாசன், ‘நண்பர் கலைஞர் சொல்வது சரிதான். காளை மாடு கன்று போடாது. ஆனால், காளை மாடு இல்லாவிட்டால் பசு என்றுமே கன்று போடாது. அதனால் மக்கள் அனைவரும் ‘காளை மாடு’ சின்னத்துக்கே வாக்களியுங்கள்’ என ரிப்பீட் கவுன்டர் கொடுக்க, அதை கலைஞர் உட்பட அத்தனை பேரும் ரசித்தார்கள்.

நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் P180
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Bullet2‘சிவாஜிக்கு அரசியல் தெரியாது’ என்று கண்ணதாசன் ஒரு மேடையில் பேசிவிட்டார். ‘ராமன் எத்தனை ராமனடி’ படப்பிடிப்பில் இருந்த சிவாஜிக்குத் தகவல் தெரியப் படுத்தப்பட்டது. படத்தின் இயக்கு நரை அழைத்த சிவாஜி, ‘இதுக்கு சரியான பதில் சொல்ற மாதிரி ஒரு ஸீன் வைக்கணுமே. அதை எப்படி வைக்கலாம்னு கண்ணதாசனிடமே போய்க் கேளுங்க’ என்று சொல்லி யிருக்கிறார். விஷயம் கண்ணதாசனிடம் செல்ல, சிரித்தாராம். ‘படத்தில் ‘வீர சிவாஜி’ நாடகத்தை ஒரு காட்சியா வெச்சுக்கலாம்’ எனச் சொல்லி, அந்த நாடகத்துக்கான வசனத்தையும் அவரே எழுதிக் கொடுத்தாராம். நாடகத்தில், ‘எனக்கா அரசியல் தெரியாது’ என்று வீர சிவாஜியாக, சிவாஜி பேசிக்கொண்டே வருவதுதான் ஓபனிங் ஸீனே!

 
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் White_spacer
நா.இரமேஷ்குமார்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 09, 2013 2:25 pm

காலத்தால் அழியாத கலைஞன்.
அவரின் பாடல்கள் செவிகளில் கேட்கும்போதெல்லாம் இனிக்கும்.
வாழ்க்கையில் இன்பத்தையும், துன்பத்தையும் ஒரு சேர அனுபவித்த அறிஞன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக