புதிய பதிவுகள்
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபீனி மாற்றப்பட்ட பயிர்களால் இந்தியாவுக்கு ஆபத்து! Poll_c10மரபீனி மாற்றப்பட்ட பயிர்களால் இந்தியாவுக்கு ஆபத்து! Poll_m10மரபீனி மாற்றப்பட்ட பயிர்களால் இந்தியாவுக்கு ஆபத்து! Poll_c10 
74 Posts - 59%
heezulia
மரபீனி மாற்றப்பட்ட பயிர்களால் இந்தியாவுக்கு ஆபத்து! Poll_c10மரபீனி மாற்றப்பட்ட பயிர்களால் இந்தியாவுக்கு ஆபத்து! Poll_m10மரபீனி மாற்றப்பட்ட பயிர்களால் இந்தியாவுக்கு ஆபத்து! Poll_c10 
41 Posts - 33%
mohamed nizamudeen
மரபீனி மாற்றப்பட்ட பயிர்களால் இந்தியாவுக்கு ஆபத்து! Poll_c10மரபீனி மாற்றப்பட்ட பயிர்களால் இந்தியாவுக்கு ஆபத்து! Poll_m10மரபீனி மாற்றப்பட்ட பயிர்களால் இந்தியாவுக்கு ஆபத்து! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மரபீனி மாற்றப்பட்ட பயிர்களால் இந்தியாவுக்கு ஆபத்து! Poll_c10மரபீனி மாற்றப்பட்ட பயிர்களால் இந்தியாவுக்கு ஆபத்து! Poll_m10மரபீனி மாற்றப்பட்ட பயிர்களால் இந்தியாவுக்கு ஆபத்து! Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபீனி மாற்றப்பட்ட பயிர்களால் இந்தியாவுக்கு ஆபத்து! Poll_c10மரபீனி மாற்றப்பட்ட பயிர்களால் இந்தியாவுக்கு ஆபத்து! Poll_m10மரபீனி மாற்றப்பட்ட பயிர்களால் இந்தியாவுக்கு ஆபத்து! Poll_c10 
116 Posts - 60%
heezulia
மரபீனி மாற்றப்பட்ட பயிர்களால் இந்தியாவுக்கு ஆபத்து! Poll_c10மரபீனி மாற்றப்பட்ட பயிர்களால் இந்தியாவுக்கு ஆபத்து! Poll_m10மரபீனி மாற்றப்பட்ட பயிர்களால் இந்தியாவுக்கு ஆபத்து! Poll_c10 
62 Posts - 32%
T.N.Balasubramanian
மரபீனி மாற்றப்பட்ட பயிர்களால் இந்தியாவுக்கு ஆபத்து! Poll_c10மரபீனி மாற்றப்பட்ட பயிர்களால் இந்தியாவுக்கு ஆபத்து! Poll_m10மரபீனி மாற்றப்பட்ட பயிர்களால் இந்தியாவுக்கு ஆபத்து! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மரபீனி மாற்றப்பட்ட பயிர்களால் இந்தியாவுக்கு ஆபத்து! Poll_c10மரபீனி மாற்றப்பட்ட பயிர்களால் இந்தியாவுக்கு ஆபத்து! Poll_m10மரபீனி மாற்றப்பட்ட பயிர்களால் இந்தியாவுக்கு ஆபத்து! Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபீனி மாற்றப்பட்ட பயிர்களால் இந்தியாவுக்கு ஆபத்து!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Aug 07, 2013 4:34 pm

ஜெயந்திக்கு ஜே!

"மரபீனி மாற்றப்பட்ட பயிர்களால் இந்தியாவுக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்பட்டுவிடாது, களஆய்வுகளை நிறுத்த வேண்டியதில்லை' என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத் பவார் வெளிப்படையாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

அவரது கருத்தை மறுதலித்து, இந்தப் பிரச்னை தொடர்பான முடிவுகளில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கருத்துக்கும் இடம் இருக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயந்தி நடராஜன் பிரதமரிடம் வலியுறுத்தியிருப்பது, மாறிவிட்ட அரசியல் சூழலில் ஆறுதல் அளிக்கிறது. அரசியலுக்கும், பதவி சுகத்துக்கும் அப்பாற்பட்டு, தேசப்பற்றும், நாட்டின் வருங்காலத்தின்மீது அக்கறையும் உள்ள அரசியல்வாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

உலகம் முழுவதும் மரபீனி மாற்றப்பட்ட பயிர்களுக்கு எதிர்ப்பு இருக்கிறது. இவை சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்று கூறப்படும் ஆய்வு முடிவுகளில் அறிவியல் ஆய்வாளர்களே மாறுபட்டு நிற்கிறார்கள்.

மேலும், வேளாண்மைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, "மரபீனி மாற்றப்பட்ட பயிர் சாகுபடியின் வளமும், தாக்கமும்' என்ற அறிக்கையை மத்திய அரசுக்கு அளித்தது. இந்த அறிக்கையின் முடிவு - இந்தியாவுக்கு மரபீனி மாற்றுப்பயிர்கள் தேவையில்லை; இந்த களஆய்வுகளை அனுமதிக்காமல், அனுமதிக்கப்பட்டவற்றையும் நிறுத்திவிடலாம் என்பதுதான்.

இந்த நிலைக்குழுவின் தலைவர் வாசுதேவ் ஆச்சார்யா கூறுகையில், "1950-களில் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி வெறும் 50 மில்லியன் டன். ஆனால், இப்போது இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 250 மில்லியன் டன். இந்த சாதனையை நிகழ்த்த முடிந்த நமக்கு, அதிக உற்பத்தியைத் தரும் என்று கூறப்படும் மரபீனி மாற்றப்பட்ட பயிர்கள் தேவையே இல்லை. இந்த மரபீனி மாற்று விதைகளால் மான்சாண்டோ போன்ற நிறுவனங்கள் லாபம் அடையுமே தவிர அதனால் விவசாயிகளுக்கு என்ன லாபம்?. சொல்லப்போனால், நமது விளைநிலங்கள் பாழாவதுதான் மிச்சம் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த நிலைக்குழு தனது அறிக்கையில், "இத்தகைய மரபீனி மாற்றப்பட்ட பயிர்கள் நல்லவைதானா, நச்சுத்தன்மை கொண்டவையா என்பதை அறிவியல்பூர்வமாக அறிந்துகொள்ள நவீன ஆய்வுக்கூடங்கள், ஆய்வுமுறைகள்கூட இந்தியாவில் இல்லாத நிலையில், இதை எப்படி அனுமதிப்பது? மேலும், இந்திய உயிரி-தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணைய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறாத நிலையில், இத்தகைய மரபீனி மாற்றப்பட்ட விதைகளை அனுமதிப்பது குறித்து முடிவு செய்யும் அதிகாரம் எந்தத் துறைக்கும் இல்லை' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வளவுக்குப் பிறகும் மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத் பவார், மரபீனி மாற்றப்பட்ட பயிர்களுக்கு ஆதரவான குரல் கொடுக்கக் காரணம் என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்வது ஒன்றும் கடினமல்ல. மத்திய அரசு தொடர்ந்து பிடிவாதமாகத் தக்கவைத்துக் கொள்வதற்கு காரணம் மான்சாண்டோவுக்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்காவின் நெருக்குதல்தான்.

மரபீனி மாற்றப்பட்ட பயிர்கள் இந்திய விவசாயிகளிடம் சென்று சேரும்போது என்ன நிலைமை ஏற்படும் என்பதற்கு நாம் ஏற்கெனவே பி.ட்டி. பருத்தி விவகாரத்தில் பார்த்தாகிவிட்டது. இந்தியாவில் விதர்பாவில் அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதற்கு காரணம் - கடன். கடனுக்கு காரணம் என்ன? காலங்காலமாக அங்கே பயிர்செய்துவந்த விவசாயிகளுக்கு திடீரென்று கடன் ஏற்படவும், தற்கொலை செய்துகொள்ளவும் காரணம் என்ன? மான்சாண்டோ விதைகள்தான்.

பி.ட்டி. பருத்தி விதைகளை இந்த நிறுவனத்திடம் வாங்கி விதைக்கப் பழகிவிட்ட பிறகு இந்த விவசாயிகளிடம் பாரம்பரிய பருத்தி விதைகள் இல்லாமல் போனது. ஒவ்வொரு சாகுபடியிலும் விதைகள் எடுத்து வைக்கும் வழக்கும் மறைந்தே போனது. மான்சாண்டோ ஆண்டுதோறும் விதைகளின் விலையை உயர்த்தியது. ஆனால் விளைச்சல் எதிர்பார்த்தபடி இல்லை. நட்டத்தின் காரணமாக கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. ஆகவேதான் இந்த தற்கொலைகள் நடந்தன.

450 கிராம் கொண்ட பி.ட்டி பருத்தி விதைகள் மான்சான்டோ நிறுவனத்தால் ரூ.750க்கு விற்பனை செய்யப்படும்போது, இதில் ரூ.250 அந்த நிறுவனத்துக்கு உரிமத் தொகையாக (ராயல்டி) சென்றது. பாரம்பரிய பருத்தி விதைகளே இல்லாமல் ஆகும் நிலையில், இவர்கள் விலையை உயர்த்திக்கொண்டே போவார்கள். மரபீனி மாற்றப்பட்ட பயிர்களில் கிடைக்கும் விதைகள் முளைப்புத்தன்மை இல்லாத மலட்டு விதைகளாக இருக்கும். ஆகவே விவசாயி இவர்களைத்தான் நம்பி வாழ வேண்டும். உணவுப் பாதுகாப்பு ஒருபக்கம் இருக்கட்டும். உணவு தானிய உற்பத்திக்கே பாதுகாப்பு இருக்காது.

மரபீனி மாற்றுப்பயிர்கள் மற்றும் களஆய்வுகள் இந்திய சுற்றுச்சூழலுக்கு மட்டும் கேடு விளைவிப்பவை அல்ல. இந்தியப் பொருளாதாரம், சுகாதாரம் அனைத்துக்கும் கேடுவிளைவிப்பவை.

தற்போது இந்தியாவுக்கு நிறைய பழங்கள், ஆப்பிள்கள், காய்கறிகள், பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டு, சங்கிலித்தொடர் நிறுவனங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இவை மரபீனி மாற்றப்பட்ட பயிர்களா என்பதை குறிப்பிடும் லேபிள் ஒட்டப்பட வேண்டும் என்ற நிபந்தனை இந்தியாவில் அமலில் இல்லை. மரபீனி மாற்றப்பட்ட தானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருள்களா என்பதும் அச்சிடப்படுவதே இல்லை.

இறக்குமதியாகும் அனைத்து காய்கறி, பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள்கள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தி அனுமதிப்பதிலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கருத்தை கேட்க வேண்டும் என்பதையும் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வலியுறுத்த வேண்டும்.

தாத்தா பெரியவர் பக்தவத்சலத்தின் வாரிசு என்பதை நிரூபித்திருக்கிறார் அவர். மூத்த அமைச்சரின் கருத்து என்று பயந்து ஒதுங்காமல், துணிந்து தேசநலனில் அக்கறையுடன் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கும் அமைச்சர் ஜெயந்தி நடராஜனை நாம் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.

நன்றி - தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக