புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_m10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_m10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_m10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_m10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_m10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10 
2 Posts - 2%
prajai
காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_m10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_m10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_m10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10 
1 Post - 1%
Rutu
காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_m10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10 
1 Post - 1%
Pradepa
காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_m10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_m10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_m10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_m10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_m10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10 
28 Posts - 3%
sugumaran
காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_m10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_m10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_m10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10 
18 Posts - 2%
prajai
காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_m10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10 
8 Posts - 1%
Rutu
காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_m10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_m10காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா?


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Oct 27, 2009 12:34 am

காஞ்சிவரம் படத்திற்காக தேசிய விருது வாங்கியிருக்கிறார்கள் பிரகாஷ்ராஜும் அப்படத்தின் இயக்குனர் பிரியதர்ஷனும். டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கையால் இந்த விருதை வாங்கிக் கொண்ட பிரகாஷ்ராஜுக்கு திரையுலகத்தை சேர்ந்த பல்வேறு பிரிவினர் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்தவாறு உள்ளனர். இந்த நேரத்தில் அணிவேள்மொழி எழுதிய இந்த கட்டுரையை வெளியிடுகிறோம். இதுகுறித்த வாசகர்களின் விமர்சனங்கள் திறந்த மனதுடன் வரவேற்கப்படுகிறது.
காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா? Q

பிரியதர்ஷன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் நடித்த 'காஞ்சிவரம்' திரைப்படம் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதையும், அதில் நடித்த பிரகாஷ்ராஜ் சிறந்த நடிகருக்கான விருதையும் தட்டி வந்தபோது, எல்லோரும் சந்தோஷப்பட்டோம். ஒரு தமிழ்ப் படத்துக்கு தேசிய விருது கிடைத்து உள்ளதே என்று.

இப்படி ஒரு நல்ல படத்தைப் பார்க்காமல் விட்டுவிட்டோமே என்ற மன வருத்தத்தில் பார்க்க முயன்றபோது நிறைய சினிமா ஆர்வலர்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் அந்த ஆர்வம் இருப்பதை உணர முடிந்தது.



இதற்கிடையே விருது பெற்ற பிரகாஷ்ராஜ், "உண்மையிலேயே தமிழில் 'பெரியார்', 'ஒன்பது ரூபாய் நோட்டு' போன்ற படங்களில் சத்தியராஜும், 'தாரே ஜமின்பர்' இந்திப்படத்தில் அமிர்கானும் என்னைவிட நன்றாகவே நடித்திருந்தனர். ஆனால், எனக்கு அதிர்ஷ்டம் இருந்தது" என்று பேட்டி கொடுத்தபோது, பிரகாஷ்ராஜின் பெருந்தன்மையைப் பாராட்டத் தோன்றிய அதே நேரம், 'சரி... படமாவது நன்றாக இருக்கும்' என்ற எண்ணம் வந்து பார்க்கும் ஆவலைத் தூண்டியது. ஒருவழியாகப் படத்தைப் பார்த்தபோது, நமக்கு பலத்த அதிர்ச்சி. அது என்னவென்று சொல்வதற்கு முன்பு இன்னொரு விஷயம்.

காஞ்சிபுரம் நெசவாளர் பிரச்னை தொடர்பான ஒரு படத்தை மலையாளத்தில் இருந்து வந்து பிரியதர்ஷன் எடுக்கிறார். ஆனால், தமிழ் சினிமாவில் அப்படியெல்லாம் சிந்திக்க ஒரு கலைஞனும் இல்லையே என்று விமர்சகர்கள் வருந்தித் தீர்த்தார்கள், சரி அந்த மவராசனாவது எடுக்கட்டும் என்று பிரியதர்ஷனைப் பாராட்டினார்கள்.



ஆனால், படம் முடிந்த பின்னும் அது வெகுஜன மக்களை நோக்கி இறங்கவில்லை. கேட்டபோது, ‘‘இது அவார்டுக்காக எடுக்கப்பட்ட படம்... அந்த ரூட்டில்தான் பயணிக்கும்’’ என்றார்கள். அது போலவே விருதுகளும் சொல்லி வைத்தாற்போல கிடைத்தன. ஆனால், படம்?

மலையாளத்தில் பல நல்ல இயக்குநர்கள் உள்ளனர். ஆனால், பிரியதர்ஷன் ஒரு வெற்றிகரமான மசாலாப்பட இயக்குநர். "அவார்டுக்குப் படம் எடுக்கிறேன்" என்று மலையாளச் சமூகச் சூழல் எதையாவது சொல்லி அது கோக்குமாக்காகப் போய்விட்டால், கேரளாவில் அவருக்குக் கேள்விகள் நிறைய எழும். எதற்கு வம்பு என்றுதான் அவர் எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு தமிழர்கள் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தைப் படமாக எடுத்திருக்கிறார்.



அதேபோல் பிரகாஷ்ராஜ் நல்ல நடிகர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், காஞ்சிவரத்துக்காக அவருக்கு விருது என்பது அவரே சொன்னது போல... ஒரு தர்மசங்கடமான விஷயம்தான். படத்தில் சொல்லப்படுகிற கதைக்குச் சம்பந்தமில்லாத சமூகச்சூழல், பொருத்தமில்லாத நடை உடை பாவனைகள், பொருந்தவே பொருந்தாத முகங்கள்... இயல்புத் தன்மையே இல்லாத திரைக்கதை, ஒத்துப்போகாத பேச்சு மொழி... என்று மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது படம். நெசவாளிகள் சமுதாயத்தையே கேவலப்படுத்துவதாக இருந்ததுதான் அந்தப் பெரிய அதிர்ச்சி.
கதை இதுதான்.



பிரகாஷ்ராஜ் பட்டு நெசவு செய்யும் நெசவாளி. மனைவி ஸ்ரேயா ரெட்டி. கல்யாணத்தின்போது தன் மனைவிக்கு ஒரு பட்டுச் சேலை நெய்து கொடுத்து தாலிகட்டி அழைத்து வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார். முடியவில்லை. குழந்தை பிறக்கிறது. பெண் குழந்தை. அதன் திருமணத்திற்குள் ஒரு பட்டுச்சேலையை நெய்து தன் மகளின் திருமணத்தின்போது மகளுக்கு அணிவித்து அழகு பார்க்க ஆசைப்படுகிறார்.



இதுவரை கதை நல்லாத்தான் இருக்கு. ஆனால், மகளுக்கு பட்டுச் சேலை நெய்ய பிரகாஷ்ராஜ் ‘ஓவர் டைம்’ வேலை பார்க்கவில்லை. கஷ்டப்பட்டு உழைக்கவில்லை. செலவுகளை மேலும் குறைத்து சிக்கனமாகவும் பிழைக்கவில்லை. பிறகு...?

பட்டுநூலைத் திருடுகிறார்! அதுவும் எப்படி?

தான் வேலை செய்யும் இடத்தில் தினமும் ஒரு பட்டுநூலை வாயில் திணித்து அதக்கி மறைத்து, மதிய உணவு கொண்டுபோகும் தூக்குப்போணியில் மறைத்து, வீட்டுக்குத் திருடி வந்து அவைகளை ஒன்றுசேர்த்து பட்டுச்சேலை நெய்கிறார். தன் மகளுக்காக!

இத்தனைக்கும் பிரகாஷ்ராஜ் பொது உடமைத் தத்துவத்தில் ஈடுபாடு உடைய - ஆலை முதலாளிகள் சுரண்டல் மனப்பான்மையை எதிர்க்கிற கம்யூனிசத் தொண்டராம். இப்படித், திருடித் திருடி அந்தச் சேலையைக் கொஞ்சம் கொஞ்சமாக நெய்ய, ஒரு நிலையில் மனைவி இறக்கிறார். சேலையை நெய்து முடிப்பதற்குள் ஒருமுறை வழக்கம்போல பட்டுநூலைத் திருடும்போது அகப்பட்டுக் கொள்கிறார். அடி விழுகிறது. மகளுக்குச் சோற்றில் விஷம் வைத்துக் கொன்றுவிடுகிறார். அப்போது நெய்தவரைக்கும் அந்தச் சேலையை மகளுக்குப் போர்த்த முடியவில்லை. நெய்து முடியாத அந்த அரைகுறை சேலையால் மகளின் உடலை முழுசாகப் போர்த்த முடியவில்லை. இதுதான் கதை.



படத்தைப் பார்க்கும்போது, பிரகாஷ்ராஜின் வாழ்க்கையைப் பரிதாபமாகச் சொல்வதுபோல ஒரு ‘பூச்சு’ இருந்தாலும், கதை விவகாரமானது. நெசவாளன் பட்டுநூலைத் திருடுவான். அவன் செய்தது தவறு. அதனால் மனைவியை இழக்கிறான். அப்போதும் திருடுகிறான். கடவுள் கண்ணைக் குத்திவிட்டார். எனவே மகளையே கொலை செய்கிறான். ஜெயிலுக்குப் போகிறான். பிறகென்ன திருட்டு நெசவாளன் தண்டிக்கப்பட வேண்டியது நியாயம்தானே?
எப்படி இருக்கு கதை?

பொதுவாக அந்தக்காலம் முதல் தமிழ் இலக்கியப் பதிவுகளை எடுத்துக்கொண்டால் சில தொழில் செய்பவர்கள் தொழில் ரீதியாகத் தவறு செய்வதாக அமைக்கப்பட்டு உள்ளது. (உதாரணம் சிலப்பதிகாரம்) ஆனால், நெசவு செய்யும் தமிழர்கள், பட்டு நூலைத் திருடியதாக எந்தக் கதையிலும் வரலாற்றிலும் பதிவுகள் இல்லை. மாறாக, பெரிய பெரிய ராஜாக்கள், குறுநில மன்னர்கள் கொடுத்த முத்துமணி ரத்தினங்களைக்கூடப் பத்திரமாகச் செய்து தருவார்கள். தங்கச் சரிகை, வைர நகை எதையும் அவர்களை நம்பி தொழில் ரீதியாகத் தரலாம் என்பதுதான் காலகாலமாக இருந்துவரும் பழக்கம். அதற்குக் காரணம் உண்டு.



இருபதாம் நூற்றாண்டின் முன் பகுதிவரை நெசவாளர்களுக்குத் தொடர்ந்து வேலை கிடைத்துக் கொண்டே இருந்தது. அவர்களுக்கு டிமாண்டும் அதிகம். அவர்கள் கோடீஸ்வரர்களாக இருந்ததும் இல்லை. பிச்சைக்காரர்களாக இருந்ததும் இல்லை. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் அவர்கள், கஞ்சித் தொட்டி முன்பு கையேந்தி நிற்கும் நிலைக்கு ஆளானார்கள். அப்போதும்கூட அவர்கள் ஆலைகளில் திருடியதாகச் செய்திகள் கூட வந்தது இல்லை.

அப்படி இருக்க... இல்லாத ஒரு கதையைச் ஜோடித்து, தமிழக நெசவாளர்களைக் கேவலப்படுத்தி ஒரு படம் எடுத்து அதற்கு விருதும் வாங்கி வர முடிகிறது என்றால் இந்தக் கொடுமையை எங்கே சொல்ல?

பொதுவாக ‘ஆஸ்கார்’ விருதில் அயல்நாட்டுப் படங்களுக்கான விருதைப் பெற வேண்டும் என்றால், அது ஆங்கிலேயரை உயர்த்தி, மற்ற நாடுகளைக் கேலி செய்வதாக இருக்க வேண்டும். அதைபோல, வெள்ளைக்காரனை ரவுண்டு கட்டி அடித்துப் படம் எடுத்தால், பிரெஞ்சுக்காரர்கள் முத்தம் கொடுத்து அந்தப் படமெடுத்தவரையும் பாராட்டுவார்கள்.



அதுபோல், மகாஜனங்களே! இந்திய தேசிய விருது வாங்க ஓர் எளிய வழி, தமிழ்ச் சமுதாயத்தைக் கேவலப்படுத்தி தமிழிலேயே ஒரு படம் எடுத்தால் அதற்கு தேசிய விருது கண்டிப்பாகக் கிடைக்கும்! தவிர, அப்படத்தை வேற்றுமொழிக்காரர்கள் இயக்கி, நடித்தும் இருந்தால் அந்த விருதை அவர்களே வாங்கிக் கொடுத்துவிடுவார்கள்.

வந்தாரை வாழவைக்கும் தமிழகமே... தொடரட்டும் உன் திருப்பணி!



அணிவேள்மொழி



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக