புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
42 Posts - 63%
heezulia
மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மீரா ஊசிகள் !  நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீரா ஊசிகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் மீரா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Sep 13, 2013 9:27 pm

மீரா ஊசிகள் !

நூல் ஆசிரியர் கவிஞர் மீரா !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

அன்னம் வெளியீடு ,மனை எண் 1 நிர்மலா நகர் ,தஞ்சாவூர் .613 007.
விலை ரூபாய் 30.

நூல் ஆசிரியர் கவிஞர் மீரா அவர்கள் சிவகங்கையின் பெருமைகளில் ஒன்றானவர் . மீரா என்ற பெயரைப் படித்து விட்டு இன்றைய இளைய தலைமுறையினர் பெண் என்று நினைக்கக் கூடும் .எழுத்தாளர் சுஜாதா போல இவரும் ஆண் தான் .மீ . ராஜேந்திரன் என்ற இயற்ப்பெயரை மீரா என்று சுருக்கி புனைப்பெயர் வைத்துக் கொண்டவர் .இவரது கனவுகள் =கற்பனைகள் =காகிதங்கள் அன்றைய காதலர்களின் கரங்களில் தவழ்ந்த புகழ் பெற்ற காதல் கவிதை நூல். அந்த நூல் காதலுக்குப் பெருமை சேர்த்தது .இந்த நூல் சமுதாயச் சாடல் மிக்க நூல் .நூல் ஆசிரியர் கவிஞர் மீரா காதலும் சமுதாயச் சாடலும் எழுதியதால்தான் என்றும் நினைக்கப்படுகிறார் .மதுரை புத்தகத் திருவிழாவில் அவரது நூல்கள் இன்றும் நிறைய விற்பனையானது .காதல் மட்டுமே எழுதி இருந்தால் இந்த அளவிற்கு புகழ் கிடைத்து இருக்காது .காதல் கவிதை மட்டுமே எழுதும் கவிஞர்கள் சமுதாயச் சாடல் கவிதைகளும் எழுத முன் வர வேண்டும் .
இந்த நூலின் முதற்பதிப்பு 1974 ஆண்டு வெளி வந்தது .தற்போது எட்டு பதிப்புகளைத் தாண்டி வந்து விட்டது .அவர் அன்று எழுதிய அரசியல் சாடல் கவிதைகள் இன்றும் பொருந்துவதாக உள்ளது. அரசியல்வாதிகள் என்றும் மாறுவதே இல்லை என்பதை உணர்த்துகின்றன .நூலின் அணிந்துரையில் புதுமையாக ரகுமான் ,பாலசுந்தரம் , நூல் ஆசிரியர் கவிஞர் மீரா இவர்கள் பேசும் நடையில் உள்ளன .

ஊசிகள் என்பது நூலின் தலைப்பு .தவறு செய்பவர்களை மனசாட்சி என்னும் ஊசி கொண்டு குத்துவதுபோல எழுதி உள்ளார் .

வேகம் !

எங்கள் ஊர் எம் .எல் .எ .
எழு மாதத்தில்
எட்டுத்தடவை
கட்சி மாறினார்
மின்னல் வேகம்
என்ன வேகம் ?
இன்னும் எழுபது
கட்சி இருந்தால்
இன்னும் வேகம்
காட்டி இருப்பார்
என்ன தேசம்
இந்தத் தேசம் !

நெஞ்சில் உரத்துடன் ,நேர்மை திறத்துடன் ,துணிவுடன் கவிதைகள் வடித்துள்ளார் .மேயரின் ஊழல் கண்டு கொதித்து எள்ளல் சுவையுடன் எழுதியுள்ள கவிதை .

மேயர் மகன் தோட்டி மகனுக்குக் கூறியது .

குப்பா ! குப்பா !
உன்னைப் பெற்ற தந்தைக்கு
உன்னைத்தானே
அடிக்கத் தெரியும்
என்னைப் பெற்ற தந்தைக்கு
இந்த ஊரையே
அடிக்கத் தெரியும்
இப்போதேனும் ஒப்புகொள்ளேன்
என்றன் தந்தை
தானே பெரியவர் ...
வணக்கத்திற்குரியவர் !

அமைச்சர்கள் மக்கள் பணத்தை பேராசையுடன் கொள்ளை அடிக்கும் செயல் கண்டு நொந்து நையாண்டி செய்யும் விதமாக எழுதியுள்ள கவிதை .

ஆராமுதன்
அமைச்சர் பதவியை
இழந்து வருந்தி
இருந்த ஓர் இரவில்
ஆசை மனைவியைச்
சும்மா சும்மா
சுரண்டலானர் !
அம்மா கேட்டார் ஆத்திரத்தில்
" ஏன்தான் உங்களுக்கு
இன்னும் அந்தப்
பொல்லாப்பழக்கம்
போகவிலையோ ?

மனிதர்களுக்கு வாழும் போதும் பதவி ஆசை . இறந்தபின்னும் பதவி ஆசை விடுவதில்லை என்பதை நயம் பட புதுக்கவிதை வடித்துள்ளார். கவிதை நையாண்டித் திலகம் என்ற பட்டமே கவிஞர் மீரா அவர்களுக்குத் தரலாம் .பதவி வெறிப் பிடித்து அலையும் அரசியல்வாதிகளைச் சாடும்விதமாக வடித்துள்ளார் .

ஆனை மாதிரி !
அப்புசாமியின் அப்பா
ஆனை மாதிரி !
இருந்தபோது
எம் .பி .பதவி
இறந்தபோது
சிவலோகப்பதவி
அப்புசாமியின் அப்பா ஆனை மாதிரி !

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் . யானை இறந்தாலும் ஆயிரம் பொன் .என்ற பொன்மொழியை இருந்தாலும் பதவி! இறந்தாலும் பதவி !என்று மாற்றி சிந்தித்து உள்ளார் .

ஆள்வோர் கவனத்தில் கொள்ள ஏந்திய வைர வரிகள் .திருவள்ளுவர் போல அறநெறி போதிக்கும் விதமாக கவிதைகள் வடித்துள்ளார் .

எதிரொலி !

பெரிய நாட்டின்
பிரதமர் பொறுப்புடன்
மந்திரிமார்கள்
மத்தியில் சொன்னார்
விருந்தைக் குறைப்பீர் !
வெளிநாட்டுக்குப்
பறந்துபோகும்
பழக்கம் குறைப்பீர் !
தொலைபேசியிலே
சல சலவென்றே
பேசித்தொலைப்பதைப்
பெரிதும் குறைப்பீர் !
எங்கோ இருந்தோர்
எதிரொலி கேட்டது
" பிரியம் மிகுந்த
பிரதமரே உமது
மந்திரிசபையின்
எண்ணிக்கையை நீர்
கொஞ்சம் குறைப்பீர் ! கொஞ்சம் ...

நூல் ஆசிரியர் கவிஞர் மீரா அவர்கள் அன்று எழுதியது இன்றும் பொருந்தும் விதமாக இருப்பது .அன்றும் இன்றும் அரசியல்வாதிகள் திருந்த வில்லை என்பதையே உணர்த்துகின்றது .

உயிருள்ள பத்திரிகை !
லாரி மோதி
மாடு சாவு
மாடு முட்டிக்
கிழவி மரணம் !
கணவன் மனைவியின்
கழுதை அறுத்தான் !
மருமகன் மாமன்
மண்டையை உடைத்தான் !
இவைதாம்
என் தமிழ் இனத்தை மேலே
உயர்த்த வந்த
ஒரே உயிருள்ள
பத்திரிகையிலே
பளிச்சிடும் செய்திகள் !

இன்றைக்கும் செய்தித்தாள்களில் இது போன்ற செய்திகள்தான் வந்த வண்ணம் உள்ளது .மக்களும் மாறாமல் இருக்கின்றனர் என்பதையே உணர்த்துகின்றது .

நூல் ஆசிரியர் கவிஞர் மீரா அவர்கள் உடலால் இந்த உலகை விட்டு மறைந்தபோதும் கவிதைகளால் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் .



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக