புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10 
3 Posts - 2%
jairam
குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10 
2 Posts - 1%
Poomagi
குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10 
1 Post - 1%
சிவா
குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10 
1 Post - 1%
Manimegala
குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10 
16 Posts - 4%
prajai
குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10 
7 Posts - 2%
Jenila
குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10 
4 Posts - 1%
jairam
குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10 
4 Posts - 1%
Rutu
குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடி குடியைக் கெடுக்கும்!


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jul 13, 2013 7:54 pm

1. கணவர் தூக்குப் போட்டு தற்கொலை

13 July 2013
மது குடித்து சீரழியாதே என்று மனைவி கண்டித்ததால், கணவர் தூக்குப் போட்டு நேற்று(வெள்ளிக்கிழமை) தற்கொலை செய்து கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தருகா காவல் நிலைய சரகம், கல்பாரைச் சேர்ந்தவர் முத்தாண்டி மகன் முருகேசன்(32). டிராக்டர் ஓட்டுனர். இவருக்கு மலை ராணி(27) என்ற மனைவி, 5 வயதில் மகள் உள்ளனர். முருகேசன் குடிப்பழக்கம் உள்ளவர் என்றும், அடிக்கடி குடிபோதையுடம், வீட்டிற்கு வந்து மனைவியுடன் சண்டை போட்டார் என்றும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று வழக்கம் போல் குடி போதையுடன் தகராறு செய்த கணவரை மனைவி மலைராணி கடுமையாகத் திட் டி, கண்டித்தாராம்.

இதனால் மனமுடைந்து வாழ்ககையில் வெறுப்புற்று முருகேசன் சாக முடிவு செய்தாராம். வீட்டில் யாரும் இல்லாத சமயம், தூக்கிட்டு முருகேசன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து ஏர்வாடி தருகா காவல் நிலையத்தில் முருகேசன் அண்ணன் நடராஜன்(42) புகார் செய்தார். காவல் ஆய்வாளர் முத்து ராஜ், சார்பு ஆய்வா ளர் மகேஸ்வரி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, முருகேசன் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

சியர்ஸ்                                           மப்பு ஏறிப்போச்சு     

2. குடிபோதையில் ஆம்புலன்சில் ரகளை: 2 பேரிடம் போலீஸ் விசாரணை
3. மனைவியை எரித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை!
4. தாயாரை தாக்கியதால் அண்ணனை கொலை செய்த தம்பி கைது
5. பொது குடிநீர் குழாயில் இளம்பெண் - மானபங்கம் செய்த போலீஸ் ஏட்டு
6. மதுவுக்கு அடிமையான தந்தையை கோடாரியால் வெட்டி கொன்ற மகன்!
7. மது குடிக்க பணம் கொடுக்காததால் தொழிலாளி தற்கொலை!
8. கரும்புத்தோட்டத்தில் போலி மதுபாட்டில்கள் தயாரிப்பு: 3 பேர் கைது
9. வியாசர்பாடி பகுதியில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற 12 பெண்கள் கைது
10. உலகின் தலைசிறந்த என்ன கொடுமை சார் இது  மதுநிறுவனத்தின் முக்கிய இயக்குனராக இந்தியர் தேர்வு
11. பெரம்பலூரில் அரசு மதுபானத்தை அதிக விலைக்கு விற்றவர் கைது!
12. மதுபான விடுதியாக மாறிய சென்னை 'ஜெ.ஜெ.நகர் பஸ் நிலையம்'
13. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 1,012 பேர் மீது வழக்கு!
14. திருச்செந்தூர் அருகே 280 மதுபாட்டில்கள் பறிமுதல்!
15. மானாமதுரை: குடிபோதையில் தகறாறு அரசுபள்ளி தலைமையாசிரியர் கைது
16. மாங்காடு பகுதியில் கோயில் பூசாரி கொலை
17. மகன் சடலத்துடன் 3 நாள்கள் தவித்த தந்தை ஆபத்தான நிலையில் மீட்பு
18. தக்கலை அருகே மனைவியை கொன்றவர் 9 ஆண்டுக்கு பின் கைது
19. இரணியல் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து முதியவர் தற்கொலை
20. விருத்தாசலம் பஸ் நிலையத்தில் மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்ற வாலிபர் கைது
21. டாஸ்மாக் மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றவர் கைது
22. திட்டக்குடி அருகே பாலத்தின் கட்டையில் அமர்ந்து மது குடித்தவர் தவறி விழுந்து சாவு
23. வில்லியனூர் அருகே மதுகுடிக்க பணம் தரமறுத்த தொழிலாளிக்கு சோடா பாட்டில் குத்து
24. போட்டியின் போது 6 லிட்டர் பீர் குடித்தவர் பலி
25. பெரம்பலூர் அருகே டாஸ்மாக் மது பாட்டில்கள் வீடுகளுக்கு நேரடி சப்ளை
26. திறந்தவெளி "பார்' ஆக மாறும் திருமூர்த்தி அணை: இயற்கை ஆர்வலர்கள் வேதனை
27. போலி மதுபான ஆலைக்கு சீல்: 5 பேர் கைது
28. சாராயம் விற்பனை செய்த முதியவர் கைது
29. "பார்' ஆக மாறிய அரசு பள்ளி: குடிப்பவர்களுக்கு கொண்டாட்டம்: படிப்பவர்களுக்கு(?)
30. பைக்கில் மது பாட்டில்கள் கடத்தியவர் கைது
31. டி.கல்லுப்பட்டி அருகே 4 வயது சிறுவன் கொன்று புதைப்பு
32. தந்தை, மகனை கத்தியால் தாக்கியவர் கைது
33. போலி மதுபானம் குடித்த 20 பேர் பலி!
34. போதையில் வாகனம் ஓட்டிய இன்ஸ்பெக்டர் கைது
35. காவலரின் மனைவி தீக்குளித்து தற்கொலை : குழந்தை பலி, ஏட்டு கவலைக்கிடம்!
36. விழுப்புரத்தில் பெண் வக்கீலிடம் ரகளை: போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு!
(அவலங்கள் தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jul 13, 2013 8:04 pm

2. குடிபோதையில் ஆம்புலன்சில் ரகளை: 2 பேரிடம் போலீஸ் விசாரணை

மதுரை 12 July 2013
ஆம்புலன்ஸ் வாகனத்தில் சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்ட போது குடிபோதையில் ரகளை செய்த 2 பேரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 மதுரை தைக்கால் தெருவைச்சேர்ந்த சேகர் (47), செல்லூரைச் சேர்ந்த சுந்தர் (43) ஆகியோர் நண்பர்கள். இருவரும் மோட்டார் சைக்கிளில் வியாழக்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் ஆரப்பாளையம் பகுதியில் சென்றனர்.

 இருவரும் குடிபோதையில் இருந்துள்ளனர். இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இதையடுத்து 108 ஆம்புலனஸ் வாகனம் வரவழைக்கப்பட்டது. அதில் இருவரையும் ஏற்றிக்கொண்டு வாகனம் புறப்பட்டது.

 ஆம்புலன்ஸ் வாகனம் மருத்துவமனை நோக்கிச் சென்று கொ்ண்டிருந்த போது, உள்ளே இருந்த பொருள்களை இருவரும் அடித்து சேதப்படுத்தியதாகவும் அதை தட்டிக்கேட்ட ஓட்டுநரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

 இது தொடர்பாக ஓட்டுநர் கண்ணன் அளித்த புகாரின் பேரில், கரிமேடு போலீஸார் 2 பேரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jul 13, 2013 8:08 pm

3. மனைவியை எரித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை!

நாகப்பட்டினம்  11 July 2013
நாகையில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.

நாகை அக்கரைப்பேட்டை, நடுத் தெருவைச் சேர்ந்த வெங்கடாசலம் மகள் விஜயகுமாரி(25). இவருக்கும், கடலூரைச் சேர்ந்த சரவணன் மகன் ராமு(36) என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. இருவரும் கடலூரில் தனிக்குடித்தனம் நடத்தினர்.

மீன்பிடித் தொழிலாளரான ராமு, திருமணத்துக்குப் பின்னர் சரிவர வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தாராம். இதையடுத்து, ராமுவுடன் அக்கரைப்பேட்டைக்குத் திரும்பிய விஜயகுமாரி, அக்கரைப்பேட்டையில் தனிக்குடித்தனம் இருந்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் 11-ம் தேதி மது அருந்த பணம் கேட்டு ராமு, விஜயகுமாரியிடம் தகராறு செய்துள்ளார். அவர், பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த ராமு, விஜயகுமாரி மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்தார்.

இதில், பலத்தக் காயமடைந்த விஜயகுமாரி நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சைப் பலனளிக்காமல் 2009-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி உயிரிழந்தார்.

இது குறித்து நாகை நகர காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ராமுவை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை நாகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த பின்னர், ராமுவுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ. 500 அபராதமும் விதித்து நீதிபதி எஸ். சோலைமலை வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jul 13, 2013 8:27 pm

500 அபராதம் ரொம்ப அதிகம் புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jul 13, 2013 10:50 pm

தினமும் குடியால் ஏற்படும் விபரீதங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. தினசரி இதுபற்றிய செய்தி செய்திதாள்களில் வந்துகொண்டு தான் இருக்கிறது. இதையே ஒரு தொடர் பதிவாக செயலாம் சாமி. இதை பார்க்கும் அந்த பழக்கம் உள்ளவர்கள் கொஞ்சாமாவது சிந்திப்பார்கள் அல்லவா புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 14, 2013 10:56 am

சூப்பருங்க நல்ல பதிவு

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jul 14, 2013 3:16 pm

தாயாரை தாக்கியதால் அண்ணனை கொலை செய்த தம்பி கைது
நாகர்கோவில் அருகே தாயாரை தாக்கிய அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பியை வெள்ளிக்கிழமை நள்ளிரவு போலீஸார் கைது செய்தனர்.

நாகர்கோவிலை அடுத்த தளவாய்புரம் ஜோஸ்வாகாலனியைச் சேர்ந்தவர் ஆசிர்வாதம். இவரது மனைவி ஞான பிரகாஷி (58).இவர்களது மகன் ஆன்றனி புகழ் (29). கட்டிட வேலை பார்த்து வரும் இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. தினமும் குடித்து வந்து தாயாரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு வீட்டுக்கு வந்த ஆன்றனி புகழ் குடி போதையில் தாயாரை தாக்கியதாக தெரிகிறது.

இதனைப் பார்த்துக் கொண்டிருந்த அவரது தம்பி ஆன்றனி சுரேஷ் (26) அம்மாவை அடிக்காதே என கூறியுள்ளார். இதனைப் பொருட்படுத்தாக அண்ணன் தாயாரை தொடர்ந்து தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆன்றனி சுரேஷ் வீட்டின் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து தலை, முதுகு பகுதிகளில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ரத்த வெள்ளத்தில் மயங்கி சாய்ந்தார். இதையடுத்து ஆன்றனி சுரேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாராம்.இதனால் பதறிப்போன தாயார் ஞான பிரகாஷி டி.எஸ்.பி முகாம் அலுவலகத்துக்கு விரைந்து சென்று தன் மகன்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்து சம்பவம் நடந்து விட்டதாக கூறியுள்ளார். 

இதையடுத்து டி.எஸ்.பி அலுவலகத்தில் இருந்த போலீஸார் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்து பார்த்த போது ஆன்றனி புகழ் இறந்து கிடந்தார்.

இதையடுத்து டி.எஸ்.பி உதயகுமார், நேசமணி நகர் ஆய்வாளர் ஜெயா பிரின்ஸி, உதவி ஆய்வாளர் இசக்கிராஜ் மற்றும் போலீஸார் நேரில் விசாரணை நடத்தினர். பின்னர் ஆன்றனி சுரேஷ் மீது கொலை வழக்கு பதிந்த போலீஸார் அவரை அங்குள்ள ஒரு வீட்டில் நள்ளிரவு கைது செய்தனர்.அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் தாயாரை தன் அண்ணன் தாக்கும் போது எவ்வளவோ தடுத்தும் அவர் கேட்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்து அண்ணனை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.கைது செய்யப்பட்ட ஆன்றனி சுரேஷ் நாகர்கோவில் அருகே ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 நன்றி -  தினமணி 


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jul 14, 2013 3:20 pm

நெல்லை, ஜூலை. 13 
நெல்லை மாவட்டம் சிவகிரியை சேர்ந்தவர் மருதப்பன். இவர் புளியரை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வந்தார். நேற்று ரோந்து வாகனத்தில் பணிபுரிந்த ஏட்டு மருதப்பன், மாலையில் பணி முடிந்து வீடு திரும்ப தென்காசி வந்தார்.
தென்காசியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் நன்றாக மது குடித்த அவர், வேன் ஸ்டாண்ட் அருகே வந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள பொது குடிநீர் குழாயில் ஒருஇளம்பெண் தண்ணீர் பிடிக்க வந்தார். அந்த குடிநீர் குழாய் வேன்களுக்கு பின்னால் சற்று மறைவாக இருந்தது.
அப்போது அங்கு அமர்ந்திருந்த மருதப்பன், தண்ணீர் பிடிக்க வந்த இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்துள்ளார். இளம்பெண் பதறி துடித்து ரோட்டுக்கு ஓடி வந்தார். இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள், ஏட்டு மருதப்பனை சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
மேலும் அவரை அங்குள்ள மின் கம்பத்திலும் கட்டி வைத்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தென்காசி போலீசார் ஏட்டு மருதப்பனை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி, விசாரணை நடத்தி ஏட்டு மருதப்பனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.


நன்றி - மாலைமலர் 
 


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jul 15, 2013 3:56 pm

6. மதுவுக்கு அடிமையான தந்தையை கோடாரியால் வெட்டி கொன்ற மகன்!

15 July 2013
வெள்ளகோவில் சொரியன் கிணத்துப்பாளையத்தை சேர்ந்தவர் காளிமுத்து(53).இவர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம்.இதனை கண்டு அவரது மகன் செந்தில்குமார் (33)கண்டித்துள்ளார். ஆனாலும் தனது வழக்கத்தை காளிமுத்து மாற்றவில்லை.

இந்நிலையில் நேற்று இரவு 8.30 மணிக்கு வழக்கம் போல் மது அருந்திவிட்டு வந்த காளிமுத்து மனைவிடம் தகராறு செய்தார்.இதனை கண்டு கோபம் அடைந்த செந்தில் தந்தையை கண்டித்தார். ஆனால் அதை தந்தை கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் அருகில் கிடந்த கோடாரியை எடுத்து தந்தை என்றும் பாராமல் அவரின் நெஞ்சில் சரமாரியாக வெட்டினார். சம்பவ இடத்திலேயே காளிமுத்து இறந்தார்.

இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி மோகன்ராஜ் கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் காளிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jul 15, 2013 3:59 pm

ராஜு சரவணன் wrote:இதையே ஒரு தொடர் பதிவாக செயலாம் சாமி. இதை பார்க்கும் அந்த பழக்கம் உள்ளவர்கள் கொஞ்சாமாவது சிந்திப்பார்கள் அல்லவா புன்னகை

இந்த காரணத்திற்காகத்தான் இந்த திரியை ஆரம்பித்தேன். நன்றி ராஜு!



Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக