புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீரால் அமையும் வாழ்வு! Poll_c10நீரால் அமையும் வாழ்வு! Poll_m10நீரால் அமையும் வாழ்வு! Poll_c10 
69 Posts - 52%
heezulia
நீரால் அமையும் வாழ்வு! Poll_c10நீரால் அமையும் வாழ்வு! Poll_m10நீரால் அமையும் வாழ்வு! Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
நீரால் அமையும் வாழ்வு! Poll_c10நீரால் அமையும் வாழ்வு! Poll_m10நீரால் அமையும் வாழ்வு! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நீரால் அமையும் வாழ்வு! Poll_c10நீரால் அமையும் வாழ்வு! Poll_m10நீரால் அமையும் வாழ்வு! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நீரால் அமையும் வாழ்வு! Poll_c10நீரால் அமையும் வாழ்வு! Poll_m10நீரால் அமையும் வாழ்வு! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நீரால் அமையும் வாழ்வு! Poll_c10நீரால் அமையும் வாழ்வு! Poll_m10நீரால் அமையும் வாழ்வு! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நீரால் அமையும் வாழ்வு! Poll_c10நீரால் அமையும் வாழ்வு! Poll_m10நீரால் அமையும் வாழ்வு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீரால் அமையும் வாழ்வு! Poll_c10நீரால் அமையும் வாழ்வு! Poll_m10நீரால் அமையும் வாழ்வு! Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீரால் அமையும் வாழ்வு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 14, 2013 3:41 pm



நம் ஊரில் தண்ணீர் லாரி வரும் சத்தம் கேட்டாலே போதும், இருக்கும் வேலைகளை விட்டுவிட்டு அவசர அவசரமாகக் குடத்தைத் தூக்கிக்கொண்டு ஓடுவது பெரும்பாலும் பெண்களாகத்தான் இருப்பார்கள். இன்றும் பல கிராமங்களில் தண்ணீர் எடுத்து வருவதற்கு ஒரு நாளில் பல மணிநேரங்கள் தாய்மார்கள் செலவிட வேண்டியிருக்கிறது.

குழாயடிச் சண்டை என்றதும் நம் நினைவிற்கு வருவதும் பெண்கள்தான். ஏனென்றால், தண்ணீர் பிடிக்கும் வேலை பெரும்பாலும் பெண்களைச் சார்ந்து இருக்கிறது. அது மட்டுமில்லாமல், சமைப்பது, துவைப்பது, சுத்தம் செய்வது என்று தண்ணீர் பயன்பட்டுள்ள எல்லாப் பணிகளும் குடும்பத்தில் இருக்கும் மகளிர் சார்ந்ததாகவே இருக்கின்றன. எனவே தண்ணீர் தொடர்பான பற்றாக்குறை, மாசுபாடு ஆகிவற்றின் வலியும் வேதனையும் பெரும்பாலும் பெண்களுக்கானதாகவே உள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள கிராமப்புறப் பெண்கள் தண்ணீர் சேகரிப்பதற்காக மட்டும் ஒவ்வொரு நாளும் கிட்டதட்ட ஆறு மணிநேரம் செலவிடுகிறார்கள். மழைக்காலங்களில் நிலைமை இன்னும் மோசம். சேறும் சகதியும் மேடும் பள்ளமும் உள்ள சிதைந்த பாதைகளின் வழியாகத் தண்ணீர் கொண்டுவருவது என்பது மேலும் பல மணிநேரங்களை எடுத்துக்கொள்கிறது. மிகவும் அத்தியாவசியமான தண்ணீரைச் சேகரிப்பதிலேயே பாதி நாள் கடந்துவிடுவதால் அங்குள்ள இளம் பெண்கள் பள்ளிப்படிப்பைப் பாதியிலே விட்டுவிட வேண்டிய நிலை. இதனால் மனித ஆற்றல் பயனற்றுப் போவதுடன் பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பும் இல்லாமல் போய்விடுகிறது எனக் கூறுகிறது சர்வதேச சுகாதார மற்றும் கல்வி அறக்கட்டளை அறிக்கை.

நகர்ப்புற வாழ்க்கையில், தண்ணீருக்கான பற்றாக்குறையையும் மாசுபாட்டையும் எதிர்கொள்பவர்கள் குடிசைவாழ் மக்களாக இருக்கிறார்கள். கூவத்தின் கரைகள் இதற்கான கூப்பாடுகளோடே விடிகின்றன. வசதி என்று நினைத்துக்கொண்டு இருக்கும் பல அம்சங்கள் பெண்களுக்கு ஏதுவாக இல்லை. வேலைக்குச் செல்லும் நடுத்தரக் குடும்பப் பெண்களுக்குத் தங்களுக்காக நேரம் கிடைப்பதே அரிதாக இருக்கையில், தன்னைச் சுற்றி இருக்கும் சூழலைப் பற்றி சிந்திக்கும் வாய்ப்புகள் குறைவே. ஆனால் சற்றுக் கவனித்துப் பார்த்தால், பெண்களுக்காக பிரத்யேகச் சிக்கல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதில் முக்கியமானது, பொதுக் கழிப்பிட வசதி. கழிப்பிடங்கள் இல்லாத நிலை, போதாத நிலை, ஆரோக்கியமாகப் பராமரிக்கப்படாத நிலை.

மார்கெட்டிங், சேல்ஸ் போன்ற வெளியில் அதிக நேரம் செலவிட வேண்டிய வேலைகள் செய்யும் பெண்கள் இயற்கை உபாதைகளுக்கு ஒதுங்கக்கூட இடமில்லாத நிலை இருக்கிறது. சிறுநீரகக் கோளாறுகள், வயிற்றுப் பிரச்சினைகள், மூல நோய் போன்றவை இந்த பிரச்சினையோடு தொடர்புடையவை. பெண்கள் இயற்கை உபாதைகளை அடக்கி வைப்பதால் ஏற்படும் ஆபத்துகள் ஏராளம்.

இம்மாதிரியான அடிப்படை வசதிகளுக்கே வழியில்லாத நிலையில், பெரிய பெரிய மால்கள் கட்டுவது, நூற்றுக்கணக்காக கார்கள் ஓடுவது மட்டுமே வளர்ச்சியாக ஆகிவிட முடியாது. இன்றைக்குத் தொழில்மயமாகிவரும், நகர்மயமாகிவரும் சூழலில் போக்குவரத்து வளர்ச்சி பிரம்மாண்டமாகி உள்ளது.

கணிசமான பெண்கள் படிப்பதற்கும் வேலை செய்வதற்கும் வெளியில் செல்ல வேண்டிய நிலையில் காற்று மாசுபாடு அவர்களின் ஆரோக்கியத்தைக் கேள்விக்குள்ளாகியுள்ளது. ஏற்கனவே, வீட்டிற்குள் உள்ள மாசுபாடுகளால் பாதிக்கப்படும் அவர்களுக்கு, இது ஒரு கூடுதலான பிரச்சினை. இப்படி தினம்தோறும் சந்திக்கும் பிரச்சினைகள் மட்டுமல்லாது, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 'வளர்ச்சி' திட்டங்களும் சூழலியல் சவால்களை விடுத்துவருகின்றன.

பெரிய அணைக்கட்டுகளுக்கான திட்டங்களில் பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான் எனப் பல்வேறு ஆய்வுகள் நிரூபிக்கின்றன. வெள்ளம் தாக்கும் சமயங்களில் ஏழை மக்கள் அதிலிருந்து தப்ப மேட்டுப் பகுதியை நோக்கி இடம்பெயர வேண்டிய சமயங்களில், ஆண்கள் தட்டுமுட்டுச் சாமான்களைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்துவதையும் பெண்கள் குழந்தைகள், முதியோர்களைக் காப்பாற்றுவதில் அக்கறை கொள்வதையும் ஓர் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

எனவே, சூழல் நலன்களுக்கான சவால்கள் பெரும்பாலும் தாய்மைக்கான சவால்களாகவே உள்ளன. இதனால்தான் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் பெண்களின் பங்கேற்பு தீவிரமாக இருக்கிறது. அங்குள்ள பெண்கள் எங்கள் குழந்தைகள் ஊனமாக பிறப்பதை எப்படி அனுமதிக்க முடியும் என்று எழுப்பும் கேள்வியில் சூழல் சீர்கேடுக்கு எதிரான தாய்மையின் கவலையும் அதைப் போக்குவதற்கான சவாலும் அடங்கியுள்ளன.

கல்பாக்கம் பகுதியில் உள்ள பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை, கர்ப்பப்பை கோளாறுகள், குழந்தை ஊனமாகப் பிறப்பது போன்ற பிரச்சினைகள் இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப், நகப்பூச்சு, ஷாம்பு, ஹேர் ஸ்ப்ரே, ஹேர் டை முதலான அழகு சாதனங்களாலும், வீட்டு உபயோகப் பொருட்களாலும் ஏராளமான செயற்கை வேதிப் பொருட்கள் பெண்களின் உடலில் கலந்துவிடுவதாக ஓர் அறிக்கை கூறுகிறது.

தாய்க்கும் தாயிலிருந்து பிறக்கும் குழந்தைக்கும் இந்த வேதிப் பொருட்கள் கடத்தப்படுவதை அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. நஞ்சுக்கொடியிலிருந்து எடுத்த ஆய்வு மாதிரிகள் 230க்கும் மேற்பட்ட செயற்கை வேதிப்பொருட்கள் கலந்திருப்பதைக் காட்டின.

எனவே, சுற்றுச்சூழலைச் சீர்கெடுப்பது என்பது மகளிருக்கு எதிரான யுத்தம் என்றே சொல்ல முடியும். உடல் நலனுக்குத் தீங்கிழைக்கும் நுகர்வுப் பொருட்களுக்குப் பெரும்பன்மையான பெண்கள் அடிமையாகிவரும் நிலையில், இது பெண்கள் தமக்கு எதிராகத் தொடுத்துக்கொள்ளும் யுத்தமாகவே இருக்கிறது.

தாய்நாடு, தாய்மண், இயற்கை அன்னை என்று நாம் பயன்படுத்தும் சொற்களில் பெண்மைக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள உறவை அடையாளம் காண முடியும். அத்தகைய இயற்கையை வளர்க்க நாம் சிறு சிறு முயற்சிகள் மேற்கொள்வது சாத்தியமே.

சுத்தமான குடிநீர், மாசில்லாத காற்று போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு தீர்வு மரம் வளர்ப்பதுதான் எனக் கூறுகிறார் 2004ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற வாங்காரி மாத்தாய். இவர் கென்யாவில் சுமார் 300 கோடி மரக்கன்றுகளை நட்டு வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், ராஜஸ்தானில் உள்ள ராஜ்சமுன்ட் மாவட்டத்தில் ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும் போதும் அதனைக் கொண்டாடும் விதமாக அங்கு 111 மரங்கள் நடப்படுக்கின்றன. இவை அனைத்தும் குறிப்பது ஒர் எளிய விஷயம். நம்மை இயற்கை பாதுகாப்பதைவிட, நாம் இயற்கையை பாதுகாக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதேதான்!

எம். ஆர். ஷோபனா



நீரால் அமையும் வாழ்வு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக