புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm

» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_m10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10 
48 Posts - 48%
ayyasamy ram
இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_m10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_m10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_m10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_m10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10 
3 Posts - 3%
prajai
இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_m10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_m10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10 
2 Posts - 2%
manikavi
இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_m10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10 
2 Posts - 2%
Kavithas
இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_m10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_m10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_m10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10 
214 Posts - 42%
heezulia
இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_m10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10 
189 Posts - 37%
Dr.S.Soundarapandian
இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_m10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_m10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10 
18 Posts - 4%
sugumaran
இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_m10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_m10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10 
6 Posts - 1%
manikavi
இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_m10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10 
4 Posts - 1%
prajai
இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_m10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_m10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_m10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் எழுதிய திருமுகம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Nov 24, 2013 11:17 am

'கடிதம்' என்பதற்கு முடங்கல், திருமுகம், மடங்கல், ஓலை எனப் பல பெயர்கள் உண்டு. எந்தக் கடிதத்திற்கும் மூன்று முக்கிய பகுதிகள் இருக்க வேண்டும். முதலில் கடிதம் எங்கிருந்து (ஊழ்ர்ம்) என்பதையும், அடுத்து, இக்கடிதம் இன்னாருக்கு (பர்) எழுதப்படுகிறது என்பதையும், அதன் பின்னர் செய்திகளையும் அறிவிக்க வேண்டும். "இக்கடித முறை மேனாட்டு அறிஞர்களின் போக்கைத் தழுவியது' எனச் சிலர் கூறுவர். ஆனால், பண்டைத் தமிழர்கள் இம்முறைப்படியே கடிதம் எழுதினர் என்பதை பதினோராம் திருமுறையில் உள்ள திருவாலவாயுடையாரின் திருமுகப் பாசுரத்திலிருந்து அறியலாம். இத்திருமுகப் பாசுரம் கடித இலக்கியத்தின் முன்னோடியாகத் திகழ்கிறது.

"இன்ன தன்மையன்' என யாராலும் உணரமுடியாத இறைவன், தன்னை இன்னிசையாற் போற்றிய பாணபத்திரனது வறுமைத் துயரை நீங்கிப் பெருஞ் செல்வம் வழங்குதற் பொருட்டும், தன்னை இடைவிடாது வழிபடும் சேரமான் பெருமாளுடைய வரையா ஈகையினையும், சிவபக்தியினையும் விளக்குதற்பொருட்டும், தண்ணார்த் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டில், தானும் ஒரு தமிழ்ப் புலவனாகத் திருமேனி தாங்கி, "மதிமலிபுரிசை' எனத் தொடங்கும் திருமுகப் பாசுரத்தைப் பாடியருளினான்.

மதிமலி புரிசை மாடக் கூடல்
பதிமிசை நிலவும் பால்நிற வரிச்சிற
அன்னம் பயில்பொழில் ஆல வாயின்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்
கொருமையின் உரிமையின் உதவி, ஒளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்கும் சேரலன் காண்க
பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்
தன்போல் என்பால் அன்பன்; தன்பாற்
காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே
(பா. 1)


"திங்கள் தங்கிய மதிலாற் சூழப்பெற்ற மாடங்களையும், கூடல் நகரத்திலே நிலைபெற்ற பால்போலும் வெண்ணிறச் சிறகுகளையுடைய அன்னங்கள் பயின்று வாழும் நீர்நிலையோடு கூடிய சோலை சூழ்ந்த திருவாலவாயென்னும் திருக்கோயிலிலே நிலைபெற வீற்றிருக்கும் இறைவனாகிய "யான்' வரைந்த மொழி.

இதனை, பருவக்காலத்து மேகத்தை ஒப்பப் பாவன்மையுடைய பெரும் புலவர்களுக்கு அன்புரிமையினால் தன்பாலுள்ள பெரும்பொருளை அவர்கள் போதுமென மறுக்கவும், உரிமையோடு நிறையக் கொடுத்துப் புகழொளி பரவ நிறந்தங்கிய திங்களையொத்து விளங்கும் வெண்கொற்றக்குடை நிழற்கீழ்ப் போர்ப்பரி செலுத்தும் ஆற்றல் மிக்க சேரலன் காண்பானாக!

பக்கத்தார் இயல்பறிந்து பழகும் இனிய பண்பினோடு யாழினை வாசிக்கவல்ல பாணபத்திரனென்பான் சேரமானாகிய தன்னைப் போல் என்பாற் பெருகிய அன்புடையான். வேந்தர் பெருமானாகிய தன்னைக் காணவேண்டுமென்னும் பேரார்வத்தால் அங்கு வருகின்றான். ஈவோனும் ஏற்போனுமாகிய நும்மிருவர் மாண்பினை நோக்கி அம்மாண்புக்குத்தக்க பெரும் பொருளைக் கொடுத்து அவனை என்பால் வரும்படி விடுத்தல் செய்யத்தகுதலாம்.'

மேற்கூறிய பொருளில் முதல் நான்கு அடிகளில் இன்னாரிடமிருந்து இது வருகிறது; அடுத்த நான்கு அடிகளில் இன்னாருக்கு எழுதப்படுகிறது; நிறைவு நான்கு அடிகளில் எழுதப்படும் செய்தி இன்னது என அழகாக எடுத்துரைக்கப் பெற்றுள்ளது.

இறைவன் எழுதிய இத்திருமுகப்பாசுரம் வாயிலாக, கடித இலக்கியத்திற்குரிய இலக்கணத்தையும், கடிதம் எழுதும் முறை தமிழர்களுக்குப் புதிதல்ல என்பதையும் நன்கு அறிய முடிகிறது.

பேரா. ஜா.திரிபுரசூடாமணி - தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக