புதிய பதிவுகள்
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 17:04

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 17:03

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 17:01

» மஜா வெட்டிங் வீடயோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 16:59

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 16:55

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:31

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 16:10

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 16:04

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 16:03

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 0:56

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 20:57

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:29

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue 26 Mar 2024 - 20:13

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue 26 Mar 2024 - 15:29

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon 25 Mar 2024 - 3:56

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 14:04

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:56

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:50

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:48

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:46

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:44

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:38

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:35

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:34

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun 24 Mar 2024 - 0:56

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat 23 Mar 2024 - 22:47

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat 23 Mar 2024 - 17:59

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat 23 Mar 2024 - 17:55

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:39

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:32

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:29

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:20

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 20:42

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:54

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:50

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:48

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:46

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:46

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:45

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:42

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:41

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:39

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:38

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:35

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:23

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 0:04

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புல் தின்ற மண் குதிரை! Poll_c10புல் தின்ற மண் குதிரை! Poll_m10புல் தின்ற மண் குதிரை! Poll_c10 
47 Posts - 69%
ayyasamy ram
புல் தின்ற மண் குதிரை! Poll_c10புல் தின்ற மண் குதிரை! Poll_m10புல் தின்ற மண் குதிரை! Poll_c10 
5 Posts - 7%
Dr.S.Soundarapandian
புல் தின்ற மண் குதிரை! Poll_c10புல் தின்ற மண் குதிரை! Poll_m10புல் தின்ற மண் குதிரை! Poll_c10 
5 Posts - 7%
mohamed nizamudeen
புல் தின்ற மண் குதிரை! Poll_c10புல் தின்ற மண் குதிரை! Poll_m10புல் தின்ற மண் குதிரை! Poll_c10 
3 Posts - 4%
Abiraj_26
புல் தின்ற மண் குதிரை! Poll_c10புல் தின்ற மண் குதிரை! Poll_m10புல் தின்ற மண் குதிரை! Poll_c10 
2 Posts - 3%
prajai
புல் தின்ற மண் குதிரை! Poll_c10புல் தின்ற மண் குதிரை! Poll_m10புல் தின்ற மண் குதிரை! Poll_c10 
2 Posts - 3%
natayanan@gmail.com
புல் தின்ற மண் குதிரை! Poll_c10புல் தின்ற மண் குதிரை! Poll_m10புல் தின்ற மண் குதிரை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
புல் தின்ற மண் குதிரை! Poll_c10புல் தின்ற மண் குதிரை! Poll_m10புல் தின்ற மண் குதிரை! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
புல் தின்ற மண் குதிரை! Poll_c10புல் தின்ற மண் குதிரை! Poll_m10புல் தின்ற மண் குதிரை! Poll_c10 
1 Post - 1%
Rutu
புல் தின்ற மண் குதிரை! Poll_c10புல் தின்ற மண் குதிரை! Poll_m10புல் தின்ற மண் குதிரை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புல் தின்ற மண் குதிரை! Poll_c10புல் தின்ற மண் குதிரை! Poll_m10புல் தின்ற மண் குதிரை! Poll_c10 
404 Posts - 39%
ayyasamy ram
புல் தின்ற மண் குதிரை! Poll_c10புல் தின்ற மண் குதிரை! Poll_m10புல் தின்ற மண் குதிரை! Poll_c10 
298 Posts - 29%
Dr.S.Soundarapandian
புல் தின்ற மண் குதிரை! Poll_c10புல் தின்ற மண் குதிரை! Poll_m10புல் தின்ற மண் குதிரை! Poll_c10 
223 Posts - 21%
sugumaran
புல் தின்ற மண் குதிரை! Poll_c10புல் தின்ற மண் குதிரை! Poll_m10புல் தின்ற மண் குதிரை! Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
புல் தின்ற மண் குதிரை! Poll_c10புல் தின்ற மண் குதிரை! Poll_m10புல் தின்ற மண் குதிரை! Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
புல் தின்ற மண் குதிரை! Poll_c10புல் தின்ற மண் குதிரை! Poll_m10புல் தின்ற மண் குதிரை! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
புல் தின்ற மண் குதிரை! Poll_c10புல் தின்ற மண் குதிரை! Poll_m10புல் தின்ற மண் குதிரை! Poll_c10 
18 Posts - 2%
prajai
புல் தின்ற மண் குதிரை! Poll_c10புல் தின்ற மண் குதிரை! Poll_m10புல் தின்ற மண் குதிரை! Poll_c10 
8 Posts - 1%
Rutu
புல் தின்ற மண் குதிரை! Poll_c10புல் தின்ற மண் குதிரை! Poll_m10புல் தின்ற மண் குதிரை! Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
புல் தின்ற மண் குதிரை! Poll_c10புல் தின்ற மண் குதிரை! Poll_m10புல் தின்ற மண் குதிரை! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புல் தின்ற மண் குதிரை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 6 Dec 2013 - 4:33

காவல் தெய்வமான அய்யனாரை குலதெய்வமாகவும் இஷ்டதெய்வமாகவும் வழிபடுவோர் தமிழ்நாட்டில் அனேகம்.

பொதுவாக ஊரை விட்டு தள்ளி வெட்ட வெளியிலோ வயல் வெளியிலோ நீர் நிலைக்கு அருகிலோ அவருக்கு ஆலயம் அமைந்திருக்கும்

அப்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் கடையநல்லூருக்கு அருகில் தென் பொதிகை மலையடிவாரத்தில் ஆற்றோரம் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைந்தது தான் பெரியசாமி அய்யனார் ஆலயம். சுமார் 1150 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியை ஆண்ட பாண்டிய மன்னனால் கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

அய்யனாரே இங்கு பிரபலம் என்றாலும் ஆதியில் இங்கு அருள்பாலித்தவர் அரனாரே.

அரன் ஆலயத்தில் அய்யனாருக்கு புகழ் ஓங்கியதற்கு காரணம் அகத்தியர். அதை அறிய பல நூற்றாண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும்.

சிவ-பார்வதி திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தென் திசை உயர்ந்து விடுவதும் உடனே பூமியை சமப்படுத்த நாட்டின் தென் பகுதியை அகத்தியரை சிவபெருமான் அனுப்பி வைத்ததும் நீ அழைக்கும்போதெல்லாம் உனக்கு தரிசனம் தருவேன் என்று சிவபெருமான் அகத்தியருக்கு வாக்கு அளித்ததும் புராண வரலாறு.

ஈசனின் உத்தரவுப்படி இப்பகுதிக்கு வந்த அகத்தியர், பல இடங்களுக்கு சென்று சிவ பூஜை செய்து வரும் வழியில் இத்தலத்திற்கு வந்து கருஞ்சிவலிங்கமே என்று இந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவனாரை அழைக்கிறார். அப்போது அங்கிருந்த முனிவர் ஒருவர் அகத்தியரின் அழைப்பை சிவன் காதில் விழாத படி செய்து விடுகிறார்.

மீண்டும், மீண்டும், அழைத்தும் சிவன் தன்னை கண்டு கொள்ளவில்லையே என்ற கோபத்தில் அகத்தியர், பிற்காலத்தில் அய்யனார் இங்கு வருவார். பெரியசாமி அய்யனார் என்றே அவர் அழைக்கப்படுவார். அப்போது அவர் பெயர் ஓங்கும்.. உன் பெயர் மங்கும் என்று கூறிச்சென்று விடுகிறார்.

சித்தர் வாக்கு சிவ வாக்காயிற்றே. அது சிவன் குறித்தே இருந்தாலும் கூறியவர் அகத்திய சித்தர் என்பதால் அப்படியே பலித்து விடுகிறது. சில வருடங்களுக்கு பிறகு கோயிலில் இருந்த கருஞ்சிவலிங்கம் அருகே பூரணை, புஷ்கலை சமேதராக அய்யனாரும், அவர்களுக்கு கீழே பீடம் வடிவில் ராஜராஜேஸ்வரியும் அருள்பாலிக்க துவங்க பெரியசாமி அய்யனார் ஆலயம் என்று அவர் பெயரிலேயே கோயில் பிரபலமாகியது. அன்றிலிருந்து இவர்கள் அனைவரும் ஒன்றாகவே கருவறையில் தரிசனம் தருகிறார்கள். கோயிலுக்கு முன்புறம் கரும்பா நதி ஓடுகிறது. வற்றறாத ஜீவநதியான இதில் சிவ, அகத்திய, பிருகு, சசிமகேந்திர, சுவாமிகள், பத்து தீர்த்தங்கள் அடங்கியள்ளதாக நம்பப்படுகிறது.

கரும்பாநதியில் நீராடி இத்தல தெய்வங்களை தரிசிப்போருக்கு கசந்த வாழ்வு கற்கண்டாய் இனிக்கும் என்றும் நோய் நொடிகள் அகலும் எனவும், கேட்டதெல்லாம் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். அந்த நதியின் கரையிலிருந்து பதினெட்டு படிகள் ஏறிச்சென்று கோயிலுக்குள் செல்லலாம். படி அருகில் ஆறடி கருப்பசாமி சன்னதி, சபரிமலையில் இருப்பது போன்றே இவர் சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளது. இவரது உத்தரவு பெற்று அனுக்ஞை விநாயகரின் ஆசி பெற்று மணிமண்டபம், அர்த்த மண்டபம் கடந்து கருவறை தெய்வங்களை தரிசிக்கலாம்.

பல சமூகத்து மக்களின் குலதெய்வங்கள் இங்கு இருப்பதால் சுற்றுவட்டார கிராமத்து மக்கள் இத்தெய்வங்களுக்கு குடும்பத்தில் சுப காரியங்களை நடத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

அய்யனாரின் படையை சேர்ந்த ஏராளமான குதிரை, யானை, சுதை உருவங்களை வாகன மண்டபத்தில் காணலாம். அங்கு நந்தி உருவங்களும் உள்ளன. தாங்கள் வளர்க்கும் பசுக்கள் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழவும், அதிக பாலைத் தரவும் பக்தர்கள் வேண்டுதல் செய்து இந்த நந்தி உருவங்களை வைத்திருக்கிறார்களாம்.

கருவறைக்கு பின்புறம் தல விருட்சம் வில்வம் உள்ளது. ஆலயத்திற்கு வெளியே வடக்கு நோக்கி அய்யனாரின் வாகனமான பிரமாண்டமான இரண்டு குதிரை உருவங்கள் காட்சி தருகின்றன. ஆண் குதிரையில் அய்யனாரும் பெண் குதிரையில் பூரணை புஷ்கலையும் அமர்ந்திருக்கிறார்கள்.

ஆங்கிலேயர் காலத்தில் இங்கு வந்த வெள்ளைக்காரர் ஒருவர் இந்த குதிரையை பார்த்து இது புல் திண்ணுமா? என்று கிண்டலாக பூசாரியிடம் கேட்டாராம்.

உடனே அவரும் பதிலுக்கு புல்லும் தின்னும், சாணமும் போடும் என்று கிண்டலடிக்க கோபம் கொண்ட வெள்ளைக்காரர் அதைபுல் தின்னச் சொல்லுங்கள்... பார்ப்போம் என்று கூறி அருகில் வளர்ந்திருந்த புல்லை பறித்து அதன் முன்னால் போட்டாராம்.

அப்போது தான் அந்த ஆச்சரியம் நடந்தது. கதையாலான அந்த குதிரை அங்கிருந்த புல்லை தின்றதோடு சாணமும் போட பயபக்தியோடு அய்யனாரையும் குதிரைரையும் வணங்கிவிட்டு சென்றாராம் ஆங்கிலேயர்.

அதே போல் இன்னொரு சம்பவம் ஒருநாள் கோயிலில் பூஜைகள் முடிந்து நடை அடைக்கும் போது நன்கு இருட்டிவிட்டதாம்.

அய்யனாரிடம், நீ தான் வீடு வரை என் துணைக்கு வர வேண்டும் என்று பூசாரி வேண்ட, அப்போது தெய்வவாக்காக கவலைப்படதே நான் உனக்கு பாதுகாப்பு அளிக்கிறேன் என்று அசரீரி ஒலித்ததாம்.

பயத்துடன் வேகவேகமாக நடக்க ஆரம்பித்தாராம் பூசாரி. வீட்டிற்கு செல்லும் வரை அவர் பின்னால் துணைக்கு அய்யனார் வந்ததை நிரூபிப்பது போல், குதிரையின் கனைப்பு ஒலி கேட்டுக்கொண்டே வந்ததாம்.
 அந்த காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சம்பவம் இது.

ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் நாளன்றும், கடைசி வெள்ளிக்கிழமைகளிலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாசிவராத்திரி, பங்குனிஉத்திரம், சித்திரை வருடப்பிறப்பு என்று விசேஷ தினங்களிலும் இத்தலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

எங்கே இருக்கு: திருநெல்வேலி மாவட்டம், தென்காசி தாலுகா, கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி என்ற ஊரிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில், தென்பொதிகை மலையடிவாரத்தில் பெரிசாமி அய்யனார் கோயில் உள்ளது. கடையநல்லூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 13 கி.மீ. சொக்கம்பட்டி வரை பேருந்து வசதி உள்ளது. அங்கிருந்து ஆட்டோ, கார் மூலம் ஆலயத்தை அடையலாம்.

தரிசன நேரம்: வனப்பகுதியில் அமைந்த கோயில் என்பதால் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.

-மு.வெங்கடேசன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81636
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 6 Dec 2013 - 5:02

புல் தின்ற மண் குதிரை! 3838410834 
-
தெய்வம் உள்ளது. எங்கும் எல்லாமுமாய் உள்ளது.
தெய்வங்களை வழிபடுதல், உணர்தல், பூஜித்தல்
என்பது அவரவர் அனுபவமாகும்.

ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக