புதிய பதிவுகள்
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11
by ayyasamy ram Today at 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Guna.D | ||||
jairam | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எஸ்கிமோக்கள்
Page 1 of 1 •
பனிப் பிரதேசத்தின் சொந்தக்காரர்கள்!
ஆர்க்டிக் பரப்பில் ஏராளமான கனிம வளங்கள் உண்டு. ஆர்க்டிக் பகுதியில் எஸ்கிமோக்கள் என்ற இன மக்கள் வடதுருவ வட்டத்திற்குள் வாழுகின்றனர். இவர்கள் வடதுருவ ஆர்க்டிக் வட்ட மண்ணின் மைந்தர்கள். அண்டார்டிகாவில் எஸ்கிமோக்கள் கிடையாது.
எஸ்கிமோ என்ற வார்த்தை அல்கோன்குயன் (Algonquian ) மொழியிலிருந்து உருவானது.இதன் பொருள் பச்சை மாமிசம் உண்பவர்கள் என்பதாகும். கிழக்கு சைபீரியா (ரஷ்யா & பெர்ரிங் கடல்_Bering sea ), அலாஸ்காவின் ஓரம்,கனடா மற்றும் கிரீன்லாந்தில் இவர்கள் வசிக்கின்றனர். ஈஸ்கிமொக்களில் இன்னூட்(Inuit) மற்றும் யூபிக் (Yupik) என இருவகையினர் இருக்கின்றனர். அலூட் என்ற மூன்றாவது இனமும் உண்டு.
இவர்கள் குட்டையாகவும், லேசான மஞ்சள் நிறத்துடனும், கருத்த நீண்ட முடியும், கருமை நிற கண்களும்,அகன்ற முகமும் உடையவர்கள். அலாஸ்காவில் இருப்பவர்கள் சைபீரியாவிலிருந்து சுமார் 5,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இடம் பெயர்ந்திருக்கின்றனர் என்று அறியப்படுகிறது.பாரம்பரியமாக இந்த மக்கள் உணவு,வெளிச்சம், சமையல் எண்ணெய், கருவிகள் மற்றும் ஆயுதங்கள் என அனைத்திற்கும் கடல் வாழ் பாலூட்டிகளையே நம்பி இருக்கின்றனர். அவர்களின் பொருளாதாரத்திற்கு மீனையும், கலைமான்களையுமே நம்பி உள்ளனர்.
எஸ்கிமோவின் உணவு.!
எஸ்கிமோக்களுக்கு வாழ்தல் என்பது என்றைக்கும் நிரந்தர பிரச்சினையானதே. சீல்தான் அவர்களின் வாழ்வாதாரமான முக்கிய உணவு. இருப்பினும் கோட் என்னும் மீன், திமிங்கலம் மற்றும் மற்ற கடல் உயிரிகளையும் உண்பார்கள். கோடையில் கலைமான்கள், ஆடுகள் போன்றவற்றையும் சாப்பிடுவார்கள். குளிர்கால உணவில் துருவக்கரடி, துருவநரி, துருவ முயல் போன்றவைகள் மேல் நாட்டம். இருப்பினும், அவர்களுக்கு இஷ்டமான உணவு சீல், கலைமான் கறி, வால்ரஸின் கல்லீரல் மற்றும். திமிங்கலத்தின் தோல் மட்டுமே.
எஸ்கிமோ மக்கள், பனிக்கரடியைப் பிடிப்பதற்கு தந்திரமான, ஆனால் கொடூரமான ஒருமுறையை வைத்திருக்கிறார்கள். சீல் என்னும் கடல் விலங்கைக் கொன்று, அதன் இரத்தத்தை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதற்குள் ஒரு கூர்மையான கத்தியைப் போட்டு வைத்து விடுவார்கள். அங்கு பனி சூழ்ந்திருப்பதால் அந்த இரத்தம் மிகச் சீக்கிரத்தில் உறைந்து பனியாகிவிடும். அந்த பனி இரத்தத்தின் நடுவில் கத்தியும் உறைந்துப் போயிருக்கும். அந்த பாத்திரம் வீட்டின் வெளியே வைத்துவிடப்படும்.
பனிக்கரடிகளுக்கு இரத்தம் என்றால் மிகவும் விருப்பம். அதனுடைய மணத்தை வைத்து அது அந்த இரத்தம் நிறைந்த பாத்திரத்தைத் தேடி வந்துவிடும். அங்கு அந்த பாத்திரத்திலுள்ள இரத்தத்தைப் பார்த்தவுடன், அந்த பனிக்கரடி இரத்தத்தை நக்கத்துவங்கி விடும். அந்த பனி அதன் நாவை மரக்கச் செய்யும். அந்த பனிக் கரடி அதை அறியாமல் தொடர்ந்து நக்கிக் கொண்டிருப்பதால்; உள்ளே உள்ள கத்தியின் கூர்மையால், அதன் நாக்கு அறுபட்டு அதனுடைய சொந்த இரத்தமே வெளிவரத் துவங்கிவிடும். ஆனால் அதை அந்த கரடி அறியாமல் தொடர்ந்து இரத்தத்தின் சுவையை சந்தோஷமாய் நக்கிக் கொண்டே இருக்கும். கடைசியில் அதனுடைய இரத்தம் எல்லாம் வெளியேறி, மயக்கம் வரும் நிலையில் அதை எஸ்கிமோக்கள் கொண்டுப் போய் கொன்று, அதனுடைய மாம்சத்தை புசித்து, அதனுடைய தோலை தங்களுக்கு கதகதப்பான ஆடைகளாக செய்து அதைப் பிரயோஜனப் படுத்திக் கொள்வர்.
உறைவிடம்.. !
உணவு தேடுதல் என்பது பெரிய சிக்கலாக உள்ளதால் எஸ்கிமோக்கள் ஒரு இடத்தில் நிலையாக வாழாமல், தொடர்ந்து நாடோடிகளாகவே இருக்கவேண்டிய நிலை. மூன்று வகையான வீடுகளில் வசிக்கின்றனர்.கோடையில் சீல் என்ற பாலூட்டியின் தோலால் ஆன கூடாரம். எலும்பை ஊடுருவும் குளிர் காலத்தில் பெரும்பாலோர்,பனியை வெட்டி எடுத்து, சுருள் வடிவத்தில் கவிழ்த்த கிண்ணம் போன்ற இக்ளூ என்ற பனி வீடு உருவாக்கி அதில் வசிக்கின்றனர்.இது தாற்காலிக மானதே. குளிர்காலத்தில் மரம், எலும்பு போன்றவற்றால் ஆன கூடார வீடும் உண்டு. வேட்டைக்காக செல்லும் இனூயிட்கள் இரவில் உறையும் பனியிலிருந்தும், பனிக்காற்றை எதிர்கொள்ளவும் பனியால் கோளவடிவில் கட்டும் வீடு இக்ளூ எனப்படுகிறது. கட்டியான பனிக்கட்டிகளை செங்கல் மாதிரி வால்ரஸ் தந்தத்தால் அறுத்து வட்டமாக பவுண்டேஷன் போட ஆரம்பிக்கிறார்கள். பனிக்கட்டி ப்ளாக்குகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி doom வடிவில் பனி வீட்டை கட்டுகிறார்கள்.
ஒருவர் தவழ்ந்து செல்லும் அளவே வாசல் விடப்படுகிறது. பனிவீட்டின் மேலே வெப்பக்காற்று வெளியேறுவதற்காக சிறு ஓட்டையும் விடப்படுகிறது. வெளிச்சம் உள்ளே நுழைய கூரையில் பளிங்காக உள்ள ஐஸ்கட்டியை எடுத்து பதிகிறார்கள். இந்த பணி சில மணித்துளிகளில் நிறைவடைகிறது. இரவில் பனி உறைய ஆரம்பிக்கும் போது க்ளூ பனி ப்ளாக்குகளில் உள்ள இடைவெளிகள் ஏதுவும் இல்லாமல் ஐஸ்ஸாக உறைகிறது. க்ளூவின் உள்ளே வால்ரஸ் கொழுப்பால் சிறிய விளக்கு ஒன்று எரிந்துக் கொண்டேயிருக்கும். இது க்ளூ உள்ளேயிருக்கும் ஐஸை லேசாக உருகவைத்து இடைவெளியில்லாமல் பாலிஸாகிறது. இரவின் கொடுரமான பனிக்காற்றிலிருந்து விடுதலைக் கிடைத்தாகி விட்டது.
அந்த ஐஸ் வீட்டினுள்ளேயே பனிக்கட்டிகளின் மேலேயே பனிமான், கரடி தோலை மேலே போட்டு வால்ரஸ் தோலை போர்த்தி படுக்க ஆரம்பிக்கின்றனர். இக்ளூ வைக்கட்ட அவர்களுக்கு 30நிமிடம்தான். 3 -4 மீ உயரம்தான் வீட்டின் உயரம். வீட்டில் மின்விளக்கெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத விஷயம்.பொதுவாக இவர்கள் குழுவாகவே வாழ்கின்றனர். இதில் பல நூறு மனிதர்கள் இருகின்றனர்.
எஸ்கிமோக்கள் கூட்டுக் குடும்ப வாழ்க்கையே நடத்துகின்றனர். குழந்தைகளைத் திட்டுவதோ அடிப்பதோ ஒருக்காலும் இல்லை. எஸ்கிமோக்களிடம் ஒரு விசித்திர பழக்கம் இருந்து வருகிறது. அதிகப்படியாகக் குழந்தை பிறந்தால் அதை அவர்கள் கொன்று விடுவார்களாம். அதிலும் பெண் குழந்தை பிறந்தால் உடனடியாக கொலை தான். பிறந்த குழந்தையை பனிக்கட்டியில் வைத்து விடுவார்களாம். குழந்தை பனியில் விறைத்து இறந்து விடுமாம். அதிகப்படியான குழந்தைகளை தங்கள் கடவுள் விரும்புவதில்லை என்பது இதற்கு அவர்கள் சொல்லும் காரணம். போக்குவரத்து சாதனமே இல்லாத உலகம் இது. ம்..ம்..ஒரு சைக்கிள்கூட கிடையாது. நாய்கள் இழுத்துச் செல்லும் ஸ்லெட்ஜ் வண்டிதான் இவர்களின் அதிக பட்சமாய் வேட்டை முடித்து உணவு கொண்டு வரும் சாதனம்.
உடை!
எஸ்கிமோக்கள கடல் வாழ் விலங்குகளின் உடையையே அணிகின்றனர். ஆனால் விரும்பி அணிவது கலைமான் தோலின் உடைதான். ஏனெனில் அது உடலைக் கொஞ்சம் கதகதப்பாக வைத்திருக்கும். எடை குறைவாகவும் இருக்கும். இது கிடைக்காவிட்டால்தான் சீல், துருவக் கரடி,துருவ நரி போன்றவற்றின் தோலையும் பயன்படுத்துவார்கள்.அவர்கள் உடை அணியும் முறை இடத்திற்கு இடம் வேறுபடுகிறது.குளிர் காலத்தில் எலும்பு மற்றும் மரத்தாலான கண்ணாடிகளை அணிகின்றனர். குளிர்காலத்தில் இரண்டு அடுக்கு உள்ள உடைகள் போடுகின்றனர் . அந்த உடை,உள்ளே தோலால் ஆனதும் , அதன் வெளியே முடியுடன் கூடியதாகவும் இருக்கும். இரண்டுக்கும் இடையே காற்றோட்டம் இருக்கும்.
இதனால் உடலின் வெப்பம் பாதுகாக்கப் படுகிறது.கோடையில் ஒரு அடுக்கு உள்ள உடை அணிகின்றனர். இன்று எஸ்கிமோக்களின் கலாச்சாரம் மாறிவிட்டது. வெளியிலிருந்து வாங்கும் உணவு, உடைகள் பயன் படுத்துகின்றனர். வெளியிடங்களுக்கு பணிக்கும் வருகின்றனர். முன்பெல்லாம் ஆண்கள் உணவு தேடுவார்கள்;வேட்டைக்குச் செல்வார்கள். வீட்டில் உணவு சமைப்பதும், உடைகள் தைப்பதும்,குழந்தைகளைப் பராமரிப்பதும்தான் பெண்கள் பணி. கடல் கடவுளான செட்நாதான் தங்களைக் காப்பாற்றுகிறது என்று நம்புகின்றனர். மேலும் அங்குள்ள சீதோஷ்ண நிலை, சூரியன் மற்றும் நீரை காப்பற்று வதும் தேவதையே என ஆழமான நம்பிக்கை உள்ளவர்கள் எஸ்கிமோக்கள் .
குளிரையே பிரதானமாக இருக்கும் வடதுருவத்தில் வாழும் ஒரே இனத்து மக்கள் இனூயிட்(Inuit) எனப்படும் எஸ்கிமோக்கள் மக்களே. எப்படி கருப்பர்களை நிகர் அல்லது நீக்ரோ என்று அழைத்தால் கோபம் வருமோ அதைப் போல வடத்துருவ மக்களை எஸ்கிமோக்கள் என்றழைத்தால் கோபம் வரும். அமெரிக்காவின் சில பழங்குடிகளால் எஸ்கிமோக்கள் என்று பெயரிடப்பட்டது. எஸ்கிமோக்கள் என்றால் 'மாமிசத்தை சமைக்காமல் சாப்பிடுபவர்கள்' என்று பெயர். துருவ மக்கள் தங்களை இனூயிட் என்று அழைப்பதையே விரும்புகிறார்கள். இனூயிட் என்றால் 'மக்கள்' என்று பொருள்படும்.
இனூயிட்கள் வட அமெரிக்கா ஆர்டிக் பகுதியிலிருந்து கிழக்கு கிரீன்லேண்டு வரையிலான ஏறக்குறைய 6000 கிலோமீட்டர் வரை உள்ள பனி பிரதேசங்களிலும், ஆர்டிக் கனடா, வடக்கு அலாஸ்காவையும் உள்ளடக்கிய பகுதிகளில் வசிக்கும் உலகின் சிறுபான்மை மக்கள். அவர்களின் தோற்றத்தை(origin) பின்னோக்கி பார்த்தோமானால் அலஸ்காவில் பெரும்பான்மையாக வாழ்ந்து caribau எனப்படும் பனிகலைமான்கள், பனிக்கரடி, திமிங்கலம், சீல், வால்ரஸ் போன்ற மிருகங்களை நம்பியும், உணவுக்காவும் வேட்டையாடி வாழ்ந்தவர்கள். பனிப்பிரதேசங்களில் உணவுக்காக நாடோடிகளாக திரிந்தவர்கள். அலாஸ்காவிலிருந்து வட கிரீன்லேண்டு, ஆர்டிக் கனடா போன்ற இடங்களில் பரவிய இனூயிட்கள் ஆச்சரியப்படக் கூடிய வகையில் ஒரே பண்பாடு, கலாச்சாரம், மொழி என்று வாழ்கிறார்கள்.
இனூயிட்ஸ்களின் வாழ்க்கையை ஐரோப்பியர்களின் முன், பின் என இரண்டாக பிரிக்கிறார்கள். ஐரோப்பியர்களின் முன் என்ற பிரிவினையில் இனூயிட்ஸ்கள் பனி பிரதேசத்தை தவிர மற்ற உலகை அறியாதவர்கள். வேட்டையாடி உணவுக்காக மட்டுமே வாழ்ந்தவர்கள். வால்ரஸின் தந்தம், திமிங்கலத்தின் எலும்பு போன்ற ஆயுதங்களைக் கொண்டு வேட்டையாடி பொதுவில் உண்டு வாழ்ந்தவர்கள்.செடி,கொடி,மரங்களை வடதுருவத்தில் பார்க்க முடியாதாகையால் கடலில் மிதந்து வரும் கட்டைகளை கொண்டு தற்காலிக இருப்பிடத்தை அமைத்துக் கொள்வார்கள். குளிர்காலத்தில் இடம் பெயரும் போது இக்ளூ (igloo) எனப்படும் பனிவீடுகளில் வசிப்பார்கள்.
18-ம் நூற்றாண்டு பக்கத்தில் ஐரோப்பியர்கள் அண்ட்லாண்டிக்கிலிருந்து பசிபிக் செல்ல வடமேற்கு கடல் வழிப்பாதையை கண்டுபிடிக்க ஆர்டிக் வழியாக பயணிக்க வேண்டியிருந்தது. பனிக்கண்டத்தை தடையாக கண்டவர்கள், அங்கு இனூயிட்ஸ்களை கண்டுக் கொண்டார்கள். ஐரோப்பியர்களும்,அமெரிக்கர்களும் இனூயிட்ஸ் வாழ்க்கையில் குறுக்கிட்ட பிறகு அவர்களுடைய வாழ்க்கை வெகு வேகமாக மாறத் தொடங்கியது. சீல் வால்ரஸ், பனிக்கரடி தோலுக்காக ஐரோப்பியர்கள் இரும்பு போன்ற பயனுள்ள பொருட்களை பண்டமாற்றினார்கள். துப்பாக்கி கொண்டு வேட்டையாட தொடங்கினார்கள். இனூயிட்ஸ்கள் திமிங்கல வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டனர். கிறிஸ்துவ மிஷன்கள் உள்ளே நுழைய அவர்கள் பின்பற்றிய கலாச்சாரமும் பண்பாடும் மிக வேகமாக மாறுதல் அடைந்தது. கனேடிய அரசாங்கத்தின் பெருமுயற்சியல் அவர்களின் நாடோடி வாழ்க்கையை விடவைத்து இனூயிட்ஸ்களுக்கு குடியரசை அமைத்துக் கொடுத்தது.
இனூயிட்கள் உயிர் ஆவிகளின் மேல் பயங்கர நம்பிக்கையிருந்தது. இறந்தவனின் பெயரை புதிதாக பிறக்கும் குழந்தைக்கு வைக்கும் வரை அந்த பெயரை உச்சரிக்கமாட்டார்கள். இனூயிட்கள் சீல் அல்லது வால்ரஸை வேட்டையாடினால் முதலில் அதன் வாயில் பனிக்கட்டிகளை போட்டுவிட்டு பிறகு தான் உண்ண ஆரம்பிப்பார்கள். ஏனென்றால் செத்த உயிர் தண்ணீர் கேட்டு அவதியுறும் என்பது அவர்கள் நம்பிக்கை. அது போல் பெண்கள் மானின் தோலை சாப்பிடக்கூடாது என்ற தடையும் இருந்தது. வீட்டில் ஒரு முதியவர் இருந்தால் இனூயிட்கள் பெருமதிப்பு கொடுப்பார்கள்.அவர்களுக்கும் சேர்த்து உணவு சேகரிப்பார்கள்.
சிறுநீரில் ஊறிய புல்லைத்தான் பல் துலக்கப் பயன்படுத்துகிறார்கள் எஸ்கிமோக்கள். எஸ்கிமோக்கள் தங்களது மூக்கால் முத்தமிட்டு கொள்கின்றனர். தங்கள் துணையை விருந்தினரோடு பகிர்ந்து கொள்கிற வழக்கம் எஸ்கிமோக்களிடையே உண்டு.
கிரீன்லாந்தின் எஸ்கிமோக்கள் ""இக்லூ'' எனப்படும் தமது கொப்பரை வடிவிலான பனி வீடுகள் வெப்பநிலை அதிகரிப்பால் நொறுங்கி விடுவதாகவும், இதனால் தாங்கள் புலம்பெயர நேர்ந்துள்ளதாகவும் வேதனையுடன் குறிப்பிடுகிறார்கள். ""21ஆம் நூற்றாண்டின் தட்ப வெப்பநிலை முறைகுலைவுப் பேரழிவுக்குப் பலியாகும் முதலாவது மனித சமூகம் நாங்கள்தான். எங்களது தொன்மை வாய்ந்த வாழ்க்கை முறையும் பண்பாட்டு அடையாளங்களும் அழிந்து போகும் அபாயத்தில் உள்ளது'' என்று விம்முகிறார்கள், எஸ்கிமோக்கள்.
நன்றி: tamilchrist.ch
panippulam.com
halwacity.blogspot.in
tamilstoryz.blogspot.in
tamilarangam.blogspot.in
bliss192.blogspot.in
ஆர்க்டிக் பரப்பில் ஏராளமான கனிம வளங்கள் உண்டு. ஆர்க்டிக் பகுதியில் எஸ்கிமோக்கள் என்ற இன மக்கள் வடதுருவ வட்டத்திற்குள் வாழுகின்றனர். இவர்கள் வடதுருவ ஆர்க்டிக் வட்ட மண்ணின் மைந்தர்கள். அண்டார்டிகாவில் எஸ்கிமோக்கள் கிடையாது.
எஸ்கிமோ என்ற வார்த்தை அல்கோன்குயன் (Algonquian ) மொழியிலிருந்து உருவானது.இதன் பொருள் பச்சை மாமிசம் உண்பவர்கள் என்பதாகும். கிழக்கு சைபீரியா (ரஷ்யா & பெர்ரிங் கடல்_Bering sea ), அலாஸ்காவின் ஓரம்,கனடா மற்றும் கிரீன்லாந்தில் இவர்கள் வசிக்கின்றனர். ஈஸ்கிமொக்களில் இன்னூட்(Inuit) மற்றும் யூபிக் (Yupik) என இருவகையினர் இருக்கின்றனர். அலூட் என்ற மூன்றாவது இனமும் உண்டு.
இவர்கள் குட்டையாகவும், லேசான மஞ்சள் நிறத்துடனும், கருத்த நீண்ட முடியும், கருமை நிற கண்களும்,அகன்ற முகமும் உடையவர்கள். அலாஸ்காவில் இருப்பவர்கள் சைபீரியாவிலிருந்து சுமார் 5,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இடம் பெயர்ந்திருக்கின்றனர் என்று அறியப்படுகிறது.பாரம்பரியமாக இந்த மக்கள் உணவு,வெளிச்சம், சமையல் எண்ணெய், கருவிகள் மற்றும் ஆயுதங்கள் என அனைத்திற்கும் கடல் வாழ் பாலூட்டிகளையே நம்பி இருக்கின்றனர். அவர்களின் பொருளாதாரத்திற்கு மீனையும், கலைமான்களையுமே நம்பி உள்ளனர்.
எஸ்கிமோவின் உணவு.!
எஸ்கிமோக்களுக்கு வாழ்தல் என்பது என்றைக்கும் நிரந்தர பிரச்சினையானதே. சீல்தான் அவர்களின் வாழ்வாதாரமான முக்கிய உணவு. இருப்பினும் கோட் என்னும் மீன், திமிங்கலம் மற்றும் மற்ற கடல் உயிரிகளையும் உண்பார்கள். கோடையில் கலைமான்கள், ஆடுகள் போன்றவற்றையும் சாப்பிடுவார்கள். குளிர்கால உணவில் துருவக்கரடி, துருவநரி, துருவ முயல் போன்றவைகள் மேல் நாட்டம். இருப்பினும், அவர்களுக்கு இஷ்டமான உணவு சீல், கலைமான் கறி, வால்ரஸின் கல்லீரல் மற்றும். திமிங்கலத்தின் தோல் மட்டுமே.
எஸ்கிமோ மக்கள், பனிக்கரடியைப் பிடிப்பதற்கு தந்திரமான, ஆனால் கொடூரமான ஒருமுறையை வைத்திருக்கிறார்கள். சீல் என்னும் கடல் விலங்கைக் கொன்று, அதன் இரத்தத்தை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதற்குள் ஒரு கூர்மையான கத்தியைப் போட்டு வைத்து விடுவார்கள். அங்கு பனி சூழ்ந்திருப்பதால் அந்த இரத்தம் மிகச் சீக்கிரத்தில் உறைந்து பனியாகிவிடும். அந்த பனி இரத்தத்தின் நடுவில் கத்தியும் உறைந்துப் போயிருக்கும். அந்த பாத்திரம் வீட்டின் வெளியே வைத்துவிடப்படும்.
பனிக்கரடிகளுக்கு இரத்தம் என்றால் மிகவும் விருப்பம். அதனுடைய மணத்தை வைத்து அது அந்த இரத்தம் நிறைந்த பாத்திரத்தைத் தேடி வந்துவிடும். அங்கு அந்த பாத்திரத்திலுள்ள இரத்தத்தைப் பார்த்தவுடன், அந்த பனிக்கரடி இரத்தத்தை நக்கத்துவங்கி விடும். அந்த பனி அதன் நாவை மரக்கச் செய்யும். அந்த பனிக் கரடி அதை அறியாமல் தொடர்ந்து நக்கிக் கொண்டிருப்பதால்; உள்ளே உள்ள கத்தியின் கூர்மையால், அதன் நாக்கு அறுபட்டு அதனுடைய சொந்த இரத்தமே வெளிவரத் துவங்கிவிடும். ஆனால் அதை அந்த கரடி அறியாமல் தொடர்ந்து இரத்தத்தின் சுவையை சந்தோஷமாய் நக்கிக் கொண்டே இருக்கும். கடைசியில் அதனுடைய இரத்தம் எல்லாம் வெளியேறி, மயக்கம் வரும் நிலையில் அதை எஸ்கிமோக்கள் கொண்டுப் போய் கொன்று, அதனுடைய மாம்சத்தை புசித்து, அதனுடைய தோலை தங்களுக்கு கதகதப்பான ஆடைகளாக செய்து அதைப் பிரயோஜனப் படுத்திக் கொள்வர்.
உறைவிடம்.. !
உணவு தேடுதல் என்பது பெரிய சிக்கலாக உள்ளதால் எஸ்கிமோக்கள் ஒரு இடத்தில் நிலையாக வாழாமல், தொடர்ந்து நாடோடிகளாகவே இருக்கவேண்டிய நிலை. மூன்று வகையான வீடுகளில் வசிக்கின்றனர்.கோடையில் சீல் என்ற பாலூட்டியின் தோலால் ஆன கூடாரம். எலும்பை ஊடுருவும் குளிர் காலத்தில் பெரும்பாலோர்,பனியை வெட்டி எடுத்து, சுருள் வடிவத்தில் கவிழ்த்த கிண்ணம் போன்ற இக்ளூ என்ற பனி வீடு உருவாக்கி அதில் வசிக்கின்றனர்.இது தாற்காலிக மானதே. குளிர்காலத்தில் மரம், எலும்பு போன்றவற்றால் ஆன கூடார வீடும் உண்டு. வேட்டைக்காக செல்லும் இனூயிட்கள் இரவில் உறையும் பனியிலிருந்தும், பனிக்காற்றை எதிர்கொள்ளவும் பனியால் கோளவடிவில் கட்டும் வீடு இக்ளூ எனப்படுகிறது. கட்டியான பனிக்கட்டிகளை செங்கல் மாதிரி வால்ரஸ் தந்தத்தால் அறுத்து வட்டமாக பவுண்டேஷன் போட ஆரம்பிக்கிறார்கள். பனிக்கட்டி ப்ளாக்குகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி doom வடிவில் பனி வீட்டை கட்டுகிறார்கள்.
ஒருவர் தவழ்ந்து செல்லும் அளவே வாசல் விடப்படுகிறது. பனிவீட்டின் மேலே வெப்பக்காற்று வெளியேறுவதற்காக சிறு ஓட்டையும் விடப்படுகிறது. வெளிச்சம் உள்ளே நுழைய கூரையில் பளிங்காக உள்ள ஐஸ்கட்டியை எடுத்து பதிகிறார்கள். இந்த பணி சில மணித்துளிகளில் நிறைவடைகிறது. இரவில் பனி உறைய ஆரம்பிக்கும் போது க்ளூ பனி ப்ளாக்குகளில் உள்ள இடைவெளிகள் ஏதுவும் இல்லாமல் ஐஸ்ஸாக உறைகிறது. க்ளூவின் உள்ளே வால்ரஸ் கொழுப்பால் சிறிய விளக்கு ஒன்று எரிந்துக் கொண்டேயிருக்கும். இது க்ளூ உள்ளேயிருக்கும் ஐஸை லேசாக உருகவைத்து இடைவெளியில்லாமல் பாலிஸாகிறது. இரவின் கொடுரமான பனிக்காற்றிலிருந்து விடுதலைக் கிடைத்தாகி விட்டது.
அந்த ஐஸ் வீட்டினுள்ளேயே பனிக்கட்டிகளின் மேலேயே பனிமான், கரடி தோலை மேலே போட்டு வால்ரஸ் தோலை போர்த்தி படுக்க ஆரம்பிக்கின்றனர். இக்ளூ வைக்கட்ட அவர்களுக்கு 30நிமிடம்தான். 3 -4 மீ உயரம்தான் வீட்டின் உயரம். வீட்டில் மின்விளக்கெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத விஷயம்.பொதுவாக இவர்கள் குழுவாகவே வாழ்கின்றனர். இதில் பல நூறு மனிதர்கள் இருகின்றனர்.
எஸ்கிமோக்கள் கூட்டுக் குடும்ப வாழ்க்கையே நடத்துகின்றனர். குழந்தைகளைத் திட்டுவதோ அடிப்பதோ ஒருக்காலும் இல்லை. எஸ்கிமோக்களிடம் ஒரு விசித்திர பழக்கம் இருந்து வருகிறது. அதிகப்படியாகக் குழந்தை பிறந்தால் அதை அவர்கள் கொன்று விடுவார்களாம். அதிலும் பெண் குழந்தை பிறந்தால் உடனடியாக கொலை தான். பிறந்த குழந்தையை பனிக்கட்டியில் வைத்து விடுவார்களாம். குழந்தை பனியில் விறைத்து இறந்து விடுமாம். அதிகப்படியான குழந்தைகளை தங்கள் கடவுள் விரும்புவதில்லை என்பது இதற்கு அவர்கள் சொல்லும் காரணம். போக்குவரத்து சாதனமே இல்லாத உலகம் இது. ம்..ம்..ஒரு சைக்கிள்கூட கிடையாது. நாய்கள் இழுத்துச் செல்லும் ஸ்லெட்ஜ் வண்டிதான் இவர்களின் அதிக பட்சமாய் வேட்டை முடித்து உணவு கொண்டு வரும் சாதனம்.
உடை!
எஸ்கிமோக்கள கடல் வாழ் விலங்குகளின் உடையையே அணிகின்றனர். ஆனால் விரும்பி அணிவது கலைமான் தோலின் உடைதான். ஏனெனில் அது உடலைக் கொஞ்சம் கதகதப்பாக வைத்திருக்கும். எடை குறைவாகவும் இருக்கும். இது கிடைக்காவிட்டால்தான் சீல், துருவக் கரடி,துருவ நரி போன்றவற்றின் தோலையும் பயன்படுத்துவார்கள்.அவர்கள் உடை அணியும் முறை இடத்திற்கு இடம் வேறுபடுகிறது.குளிர் காலத்தில் எலும்பு மற்றும் மரத்தாலான கண்ணாடிகளை அணிகின்றனர். குளிர்காலத்தில் இரண்டு அடுக்கு உள்ள உடைகள் போடுகின்றனர் . அந்த உடை,உள்ளே தோலால் ஆனதும் , அதன் வெளியே முடியுடன் கூடியதாகவும் இருக்கும். இரண்டுக்கும் இடையே காற்றோட்டம் இருக்கும்.
இதனால் உடலின் வெப்பம் பாதுகாக்கப் படுகிறது.கோடையில் ஒரு அடுக்கு உள்ள உடை அணிகின்றனர். இன்று எஸ்கிமோக்களின் கலாச்சாரம் மாறிவிட்டது. வெளியிலிருந்து வாங்கும் உணவு, உடைகள் பயன் படுத்துகின்றனர். வெளியிடங்களுக்கு பணிக்கும் வருகின்றனர். முன்பெல்லாம் ஆண்கள் உணவு தேடுவார்கள்;வேட்டைக்குச் செல்வார்கள். வீட்டில் உணவு சமைப்பதும், உடைகள் தைப்பதும்,குழந்தைகளைப் பராமரிப்பதும்தான் பெண்கள் பணி. கடல் கடவுளான செட்நாதான் தங்களைக் காப்பாற்றுகிறது என்று நம்புகின்றனர். மேலும் அங்குள்ள சீதோஷ்ண நிலை, சூரியன் மற்றும் நீரை காப்பற்று வதும் தேவதையே என ஆழமான நம்பிக்கை உள்ளவர்கள் எஸ்கிமோக்கள் .
குளிரையே பிரதானமாக இருக்கும் வடதுருவத்தில் வாழும் ஒரே இனத்து மக்கள் இனூயிட்(Inuit) எனப்படும் எஸ்கிமோக்கள் மக்களே. எப்படி கருப்பர்களை நிகர் அல்லது நீக்ரோ என்று அழைத்தால் கோபம் வருமோ அதைப் போல வடத்துருவ மக்களை எஸ்கிமோக்கள் என்றழைத்தால் கோபம் வரும். அமெரிக்காவின் சில பழங்குடிகளால் எஸ்கிமோக்கள் என்று பெயரிடப்பட்டது. எஸ்கிமோக்கள் என்றால் 'மாமிசத்தை சமைக்காமல் சாப்பிடுபவர்கள்' என்று பெயர். துருவ மக்கள் தங்களை இனூயிட் என்று அழைப்பதையே விரும்புகிறார்கள். இனூயிட் என்றால் 'மக்கள்' என்று பொருள்படும்.
இனூயிட்கள் வட அமெரிக்கா ஆர்டிக் பகுதியிலிருந்து கிழக்கு கிரீன்லேண்டு வரையிலான ஏறக்குறைய 6000 கிலோமீட்டர் வரை உள்ள பனி பிரதேசங்களிலும், ஆர்டிக் கனடா, வடக்கு அலாஸ்காவையும் உள்ளடக்கிய பகுதிகளில் வசிக்கும் உலகின் சிறுபான்மை மக்கள். அவர்களின் தோற்றத்தை(origin) பின்னோக்கி பார்த்தோமானால் அலஸ்காவில் பெரும்பான்மையாக வாழ்ந்து caribau எனப்படும் பனிகலைமான்கள், பனிக்கரடி, திமிங்கலம், சீல், வால்ரஸ் போன்ற மிருகங்களை நம்பியும், உணவுக்காவும் வேட்டையாடி வாழ்ந்தவர்கள். பனிப்பிரதேசங்களில் உணவுக்காக நாடோடிகளாக திரிந்தவர்கள். அலாஸ்காவிலிருந்து வட கிரீன்லேண்டு, ஆர்டிக் கனடா போன்ற இடங்களில் பரவிய இனூயிட்கள் ஆச்சரியப்படக் கூடிய வகையில் ஒரே பண்பாடு, கலாச்சாரம், மொழி என்று வாழ்கிறார்கள்.
இனூயிட்ஸ்களின் வாழ்க்கையை ஐரோப்பியர்களின் முன், பின் என இரண்டாக பிரிக்கிறார்கள். ஐரோப்பியர்களின் முன் என்ற பிரிவினையில் இனூயிட்ஸ்கள் பனி பிரதேசத்தை தவிர மற்ற உலகை அறியாதவர்கள். வேட்டையாடி உணவுக்காக மட்டுமே வாழ்ந்தவர்கள். வால்ரஸின் தந்தம், திமிங்கலத்தின் எலும்பு போன்ற ஆயுதங்களைக் கொண்டு வேட்டையாடி பொதுவில் உண்டு வாழ்ந்தவர்கள்.செடி,கொடி,மரங்களை வடதுருவத்தில் பார்க்க முடியாதாகையால் கடலில் மிதந்து வரும் கட்டைகளை கொண்டு தற்காலிக இருப்பிடத்தை அமைத்துக் கொள்வார்கள். குளிர்காலத்தில் இடம் பெயரும் போது இக்ளூ (igloo) எனப்படும் பனிவீடுகளில் வசிப்பார்கள்.
18-ம் நூற்றாண்டு பக்கத்தில் ஐரோப்பியர்கள் அண்ட்லாண்டிக்கிலிருந்து பசிபிக் செல்ல வடமேற்கு கடல் வழிப்பாதையை கண்டுபிடிக்க ஆர்டிக் வழியாக பயணிக்க வேண்டியிருந்தது. பனிக்கண்டத்தை தடையாக கண்டவர்கள், அங்கு இனூயிட்ஸ்களை கண்டுக் கொண்டார்கள். ஐரோப்பியர்களும்,அமெரிக்கர்களும் இனூயிட்ஸ் வாழ்க்கையில் குறுக்கிட்ட பிறகு அவர்களுடைய வாழ்க்கை வெகு வேகமாக மாறத் தொடங்கியது. சீல் வால்ரஸ், பனிக்கரடி தோலுக்காக ஐரோப்பியர்கள் இரும்பு போன்ற பயனுள்ள பொருட்களை பண்டமாற்றினார்கள். துப்பாக்கி கொண்டு வேட்டையாட தொடங்கினார்கள். இனூயிட்ஸ்கள் திமிங்கல வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டனர். கிறிஸ்துவ மிஷன்கள் உள்ளே நுழைய அவர்கள் பின்பற்றிய கலாச்சாரமும் பண்பாடும் மிக வேகமாக மாறுதல் அடைந்தது. கனேடிய அரசாங்கத்தின் பெருமுயற்சியல் அவர்களின் நாடோடி வாழ்க்கையை விடவைத்து இனூயிட்ஸ்களுக்கு குடியரசை அமைத்துக் கொடுத்தது.
இனூயிட்கள் உயிர் ஆவிகளின் மேல் பயங்கர நம்பிக்கையிருந்தது. இறந்தவனின் பெயரை புதிதாக பிறக்கும் குழந்தைக்கு வைக்கும் வரை அந்த பெயரை உச்சரிக்கமாட்டார்கள். இனூயிட்கள் சீல் அல்லது வால்ரஸை வேட்டையாடினால் முதலில் அதன் வாயில் பனிக்கட்டிகளை போட்டுவிட்டு பிறகு தான் உண்ண ஆரம்பிப்பார்கள். ஏனென்றால் செத்த உயிர் தண்ணீர் கேட்டு அவதியுறும் என்பது அவர்கள் நம்பிக்கை. அது போல் பெண்கள் மானின் தோலை சாப்பிடக்கூடாது என்ற தடையும் இருந்தது. வீட்டில் ஒரு முதியவர் இருந்தால் இனூயிட்கள் பெருமதிப்பு கொடுப்பார்கள்.அவர்களுக்கும் சேர்த்து உணவு சேகரிப்பார்கள்.
சிறுநீரில் ஊறிய புல்லைத்தான் பல் துலக்கப் பயன்படுத்துகிறார்கள் எஸ்கிமோக்கள். எஸ்கிமோக்கள் தங்களது மூக்கால் முத்தமிட்டு கொள்கின்றனர். தங்கள் துணையை விருந்தினரோடு பகிர்ந்து கொள்கிற வழக்கம் எஸ்கிமோக்களிடையே உண்டு.
கிரீன்லாந்தின் எஸ்கிமோக்கள் ""இக்லூ'' எனப்படும் தமது கொப்பரை வடிவிலான பனி வீடுகள் வெப்பநிலை அதிகரிப்பால் நொறுங்கி விடுவதாகவும், இதனால் தாங்கள் புலம்பெயர நேர்ந்துள்ளதாகவும் வேதனையுடன் குறிப்பிடுகிறார்கள். ""21ஆம் நூற்றாண்டின் தட்ப வெப்பநிலை முறைகுலைவுப் பேரழிவுக்குப் பலியாகும் முதலாவது மனித சமூகம் நாங்கள்தான். எங்களது தொன்மை வாய்ந்த வாழ்க்கை முறையும் பண்பாட்டு அடையாளங்களும் அழிந்து போகும் அபாயத்தில் உள்ளது'' என்று விம்முகிறார்கள், எஸ்கிமோக்கள்.
நன்றி: tamilchrist.ch
panippulam.com
halwacity.blogspot.in
tamilstoryz.blogspot.in
tamilarangam.blogspot.in
bliss192.blogspot.in
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் டார்வின்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
எஸ்கிமோக்கள் பகிர்வுக்கு நன்றி
இவர்களின் வாழ்க்கை முறை வெந்தத தின்னுட்டு விதி வந்தா சாவோம் என்பது போல உள்ளது!
சிறுநீரில் ஊறிய புல்லைத்தான் பல் துலக்கப் பயன்படுத்துகிறார்கள் எஸ்கிமோக்கள். எஸ்கிமோக்கள் தங்களது மூக்கால் முத்தமிட்டு கொள்கின்றனர்.[color=#669933]தங்கள் துணையை விருந்தினரோடு பகிர்ந்து கொள்கிற வழக்கம் எஸ்கிமோக்களிடையே உண்டு.[/color] wrote:
இவர்களின் வாழ்க்கை முறை வெந்தத தின்னுட்டு விதி வந்தா சாவோம் என்பது போல உள்ளது!
வேகாததையும் தின்பவர்கள்தான் எஸ்கிமோக்கள். ஆம், பசி அதிகமாக இருந்தால் பிடிபட்ட விலங்குகளின் மாமிசத்தை அப்படியே சாப்பிடவும் செய்வார்கள். அதற்குத் தகுந்தாற்போல் அவர்களின் ஜீரன மண்டலம் அமைந்துள்ளது.ஜாஹீதாபானு wrote:எஸ்கிமோக்கள் பகிர்வுக்கு நன்றிசிறுநீரில் ஊறிய புல்லைத்தான் பல் துலக்கப் பயன்படுத்துகிறார்கள் எஸ்கிமோக்கள். எஸ்கிமோக்கள் தங்களது மூக்கால் முத்தமிட்டு கொள்கின்றனர்.[color=#669933]தங்கள் துணையை விருந்தினரோடு பகிர்ந்து கொள்கிற வழக்கம் எஸ்கிமோக்களிடையே உண்டு.[/color] wrote:
இவர்களின் வாழ்க்கை முறை வெந்தத தின்னுட்டு விதி வந்தா சாவோம் என்பது போல உள்ளது!
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
அவர்கள் உயிர் வாழ ஆண்டவன் குடுத்த வரம் தான் அது.பார்த்திபன் wrote:வேகாததையும் தின்பவர்கள்தான் எஸ்கிமோக்கள். ஆம், பசி அதிகமாக இருந்தால் பிடிபட்ட விலங்குகளின் மாமிசத்தை அப்படியே சாப்பிடவும் செய்வார்கள். அதற்குத் தகுந்தாற்போல் அவர்களின் ஜீரன மண்டலம் அமைந்துள்ளது.ஜாஹீதாபானு wrote:எஸ்கிமோக்கள் பகிர்வுக்கு நன்றிசிறுநீரில் ஊறிய புல்லைத்தான் பல் துலக்கப் பயன்படுத்துகிறார்கள் எஸ்கிமோக்கள். எஸ்கிமோக்கள் தங்களது மூக்கால் முத்தமிட்டு கொள்கின்றனர்.[color=#669933]தங்கள் துணையை விருந்தினரோடு பகிர்ந்து கொள்கிற வழக்கம் எஸ்கிமோக்களிடையே உண்டு.[/color] wrote:
இவர்களின் வாழ்க்கை முறை வெந்தத தின்னுட்டு விதி வந்தா சாவோம் என்பது போல உள்ளது!
எஸ்கிமோக்கள் பற்றிய பகிர்வுக்கு நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|