புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:35 am

» கருத்துப்படம் 25/05/2024
by mohamed nizamudeen Today at 11:02 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_m10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10 
120 Posts - 54%
heezulia
ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_m10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10 
81 Posts - 36%
T.N.Balasubramanian
ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_m10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_m10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_m10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_m10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10 
2 Posts - 1%
PriyadharsiniP
ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_m10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10 
1 Post - 0%
Guna.D
ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_m10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10 
1 Post - 0%
Shivanya
ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_m10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10 
1 Post - 0%
eraeravi
ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_m10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_m10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_m10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_m10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10 
22 Posts - 4%
T.N.Balasubramanian
ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_m10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10 
16 Posts - 3%
prajai
ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_m10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_m10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10 
9 Posts - 1%
Jenila
ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_m10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_m10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_m10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_m10ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 17, 2013 1:08 am

ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பைக் கொண்டாட இயலுமா? KtlH7b24Sv6M0dQVsjeq+p26a

பதினான்கு வயது மகள் ஆருஷியும் அவளது ஆண் நண்பரும் வீட்டு வேலையாளுமான ஹேம்ராஜும் நெருக்கமாக இருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்து அவர்களைக் கொலை செய்ததோடு குற்றத்தை மறைத்ததற்காக, பல் மருத்துவர் ராஜேஷ் தல்வாருக்கும் அவரது மனைவி நூபுர் தல்வாருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தது.

 குற்ற நிரூபணத்துக்கான போதிய தடயங்கள் இல்லை என்பதற்காகக் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட இந்த வழக்கை, மறு விசாரணைக்கு ஆட்படுத்தி  இன்று அவர்கள் தண்டிக்கப்பட்டதில் உச்ச நீதிமன்றத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் தப்பிப்பது என்பதை யாரும் ஏற்க இயலாது என்ற வகையில் உச்ச நீதிமன்றம் பாராட்டுக்குரியது. எனினும், இதை வரவேற்று முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் ஆர்.கே.ராகவன் போன்றோர் கவனப்படுத்தும் இந்தத் தீர்ப்பின் கூறுகள் கவலை அளிக்கின்றன.

குற்றத்தை நிரூபிக்கத்தக்க முடிவான சான்றுகள் இல்லாதபோதும், நியாயமான ஐயங்களுக்கு அப்பால் குற்றம் உறுதியாக நிரூபிக்கப்படாதபோதும்கூட, வெறும் சந்தர்ப்பச் சூழல் சாட்சியங்களின் அடிப்படையிலேயே குற்றம் உறுதி செய்யப்பட்டு தண்டிக்கப்படலாம் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக இந்தத் தீர்ப்பை இந்த முன்னாள் காவல் துறை அதிகாரிகள் முன்வைக்கின்றனர்.

உலகெங்கிலும் குற்றவியல் நீதிமுறை கீழ்க்கண்ட கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது. அவை:

1. குற்றம் ஐயத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படும் வரை குற்றம் சுமத்தப்பட்டவர் அப்பாவியாகவே கருதப்படுவார்.

2. குற்றம் சுமத்தப்பட்டவர் சில கேள்விகளுக்கு மௌனமாக இருக்க உரிமை உண்டு.

3. குற்றத்தை நிரூபிக்கும் கடமை குற்றத்தைச் சுமத்துகிற காவல் துறையுடையதே தவிர, அது நீதிமன்றத்துடையது அல்ல; அதேபோல குற்றத்தைத் தான் செய்யவில்லை என நிரூபிக்கும் பொறுப்பும் குற்றம் சுமத்தபட்டவருக்குக் கிடையாது. ஐயத்துக்கு இடமின்றி அதை நிரூபிப்பது காவல் துறையின் பொறுப்பு.

இதில் இரண்டாவது அம்சத்தைக் கொஞ்சம் விளக்க வேண்டும். 'தன்னைத்தானே குற்றவாளியாக்கிக்கொள்ளும் நிலைக்கு எதிரான காப்புறுதி’ என இது அழைக்கப்படுகிறது. தன்னை நோக்கி விசாரணையின்போது வைக்கப்படும் கேள்வி ஒன்றுக்கு, தான் அளிக்கும் பதில் தன்னைக் குற்றச் செயலுடன் தொடர்புப்படுத்தும் என ஒருவர் கருதினால், அவர் அந்தக் கேள்விக்குப் பதில் அளிக்காமல் மௌனமாக இருக்க நமது அரசியல் சட்டமும், குற்ற நடைமுறைச் சட்டமும் இடமளிக்கின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 17, 2013 1:09 am

ஆனால், தேங்கிக் இடக்கும் ஏராளமான கிரிமினல் வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் கிரிமினல் வழக்குகளில் குற்றவாளிகள் தப்பிவிடாமல் அவர்கள் தண்டிக்கப்படும் விகிதத்தை அதிகப்படுத்துவது என்ற பெயர்களில் மேற்கண்ட மூன்று அடிப்படை நீதி வழங்கும் நெறிமுறைகளையும் ஒழித்துக்கட்டும் முயற்சிகள் இப்போது மேற்கொள்ளப்படுகின்றன.

குற்ற நீதி வழங்கு முறையில் சீர்திருத்தங்கள் செய்வதற்கு என அரசால் அமைக்கப்பட்ட மாலிமத் குழு மற்றும் மாதவ மேனன் குழு முதலியன இதை நோக்கிப் பரிந்துரைகளை அளித்துள்ளன. இன்றைய நீதிவழங்கு முறை 'நீதி வழங்கப்படுவதற்கு எதிராக உள்ளது’ எனக் குற்றம் சாட்டும் மாலிமத் குழு, அதற்கு மாற்றாகச் சொல்லும் வழிமுறை மிக ஆபத்தாக உள்ளது.

இன்றைய நீதிமுறையில் நீதிபதி என்பவர் ஒரு நடுநிலையாளர். இரு தரப்பு வாதங்களையும் கேட்டு, உறுதியான சாட்சியங்களின் அடிப்படையில் குற்றம் ஐயத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதா என நிறுத்து முடிவெடுக்க வேண்டியது அவர் பொறுப்பு. இந்த நிலையை ஒழித்து, நீதிபதி ஒரு நடுநிலையாளராக மட்டும் அமையாமல், அவரே குற்றத்தை நிறுவும் பாத்திரத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்கிறது இந்த அறிக்கை. அதாவது நீதிமன்றம் என்பது, 'விசாரணையின் ஊடாக நீதி வழங்கும் அமைப்பு’ என்ற நிலையில் இருந்து விலகி, 'குற்றத்தை நிறுவி தண்டனை வழங்கும் அமைப்பாக’ மாற வேண்டுமாம்.

அதாவது, முடிவான சாட்சியங்கள் இல்லாதபோதும், குற்றத்தைக் காவல் துறை முழுமையாக நிறுவாதபோதும், வெறும் சந்தர்ப்ப சாட்சியங்களைக் கொண்டே நீதிபதி குற்றத்தை உறுதிசெய்து தண்டனையை வழங்கலாம். ஏதேனும் ஒரு கேள்விக்குக் குற்றம் சுமத்தபட்டவர் பதிலளிக்க மறுத்தால், அவர் அந்தக் குற்றத்தை ஏற்றுக்கொண்டதாகப் பொருள்கொண்டு தண்டனை வழங்கலாம்.அரசுக்கும் காவல் துறைக்கும் வேண்டாத யார் மீதும் கடுங்குற்றங்களைச் சுமத்திப் போதிய ஆதாரங்கள் இன்றி அவர்களைப் பழிவாங்கவும், சிறையில் அடைக்கவும் இது வழிவகுக்கும். இதன் மூலம் அடித்தள மக்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர் முதலானோருக்காகப் போராடுகிற இயக்கத்தவர், அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் டாக்டர் பினாயக் சென் போன்றோர், எந்தக் குற்றமும் செய்யாமலேயே குற்றவாளிகள் ஆக்கப்படுவதற்கும் கடும் தண்டனைக்கு உள்ளாவதற்கும் இது வழிவகுக்கும்.

பயங்கரவாதம், தீவிரவாதம் ஆகியன தலைதூக்கியுள்ள ஒரு காலகட்டத்தில், 'ஆயிரம் குற்றவாளிகள் தப்பியபோதும், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது’ என்ற நீதி வழங்கு நெறியை ஏற்க இயலாது என்ற சொல்லாடல்கள் இன்று மிதக்கவிடப்படுகின்றன. மாறாக, 'ஆயிரம் நிரபராதிகள் தண்டிக்கப்பட்டபோதும், ஒரு குற்றவாளி தப்பிவிடக் கூடாது’ என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

இது மிகவும் ஆபத்தான ஒரு போக்கு. தேசப் பாதுகாப்பு, குற்றவாளிகள் தண்டிக்கப்படும் விகிதத்தை அதிகரித்தல் என்ற பெயர்களில் அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை  உரிமைகளைக் குடிமக்களுக்கு மறுத்துவிட இயலாது. இப்படியான சந்தர்ப்பங்களில் தேசப் பாதுகாப்பு முதலியவற்றுக்கும் அடிப்படை உரிமைகள் மற்றும் நெறிமுறைகளுக்கும் இடையில் மிகவும் நுணுக்கமான ஒரு சமச் சீர்மையைக் (balance) கையாள்வது நீதிமன்றத்தின் பொறுப்பாகிறது. எக்காரணம் கொண்டும் அரசு, காவல் துறை மற்றும் இதர நிறுவனங்கள், மக்களுக்கும் அடிப்படை நெறிமுறைகளுக்கும் பொறுப்பாக இருக்க வேண்டிய தன்மையைப் (accountability)  பலிகொடுத்துவிட இயலாது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 17, 2013 1:09 am

ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பை கௌரவக் கொலைகளுக்கு எதிரான தீர்ப்பு என்றும் சிலர் கொண்டாடுவதையும் ஏற்க இயலாது. டெல்லி பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்களில் ஒருவன் மட்டும் சிறுவனாக இருந்ததால், அவனுக்கு மட்டும் மூன்றாண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டபோது, அது குறைந்த தண்டனை என எழுந்த கண்டனங்களும் இத்தகையதே. சாதிப் பெருமையைக் காரணம் காட்டிக் காதலர்கள் கொலை செய்யப்படுவதும், அதேபோலப் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்களும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க இயலாது. ஆனால் கௌரவக் கொலை, அல்லது பாலியல் வன்முறை, தேசப் பாதுகாப்பு என எதன் பெயராலும் அடிப்படை நீதி வழங்கு நெறிமுறைகளை மீறுவது, அரசு மற்றும் காவல் துறையின் அத்துமீறல்களுக்கே வழிவகுக்கும். ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கும். அரசியல் சட்ட ஆளுகையில் எந்நாளும் இவற்றுக்கு இடம் இல்லை.

சந்தேகத்தின் பலன்களை மட்டுமின்றி; சந்தர்ப்ப சூழல்களின் பலன்களையும்கூட, குற்றம் சுமத்தபட்டவர்களுக்கு மட்டுமின்றி; குற்றம் நிறுவப்பட்டவர்களுக்கும்கூட வழங்க வேண்டும் என்பதே நீதி வழங்கு நெறிமுறையின் அடிப்படை. இந்த வகையிலேயே சட்ட நூல்களில் வரையறுக்கப்பட்டு இருக்காவிட்டாலும்கூட, 'அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை  வழங்கப்பட வேண்டும்’ என்பது போன்ற எழுதப்படாத சட்டங்கள் உருவாகியுள்ளன. நாளை ஆருஷி வழக்குத் தீர்ப்பும்கூட இப்படி ஒரு வழிகாட்டு நெறிமுறையாக மாறினால், அது உறுதியாக ஒரு ஜனநாயக ஆளுகையின் அடையாளமாக இருக்காது!

ஜூனியர் விகடன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக