புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:21 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாமரர் தேவாரம் - Page 20 Poll_c10பாமரர் தேவாரம் - Page 20 Poll_m10பாமரர் தேவாரம் - Page 20 Poll_c10 
45 Posts - 58%
heezulia
பாமரர் தேவாரம் - Page 20 Poll_c10பாமரர் தேவாரம் - Page 20 Poll_m10பாமரர் தேவாரம் - Page 20 Poll_c10 
24 Posts - 31%
mohamed nizamudeen
பாமரர் தேவாரம் - Page 20 Poll_c10பாமரர் தேவாரம் - Page 20 Poll_m10பாமரர் தேவாரம் - Page 20 Poll_c10 
2 Posts - 3%
prajai
பாமரர் தேவாரம் - Page 20 Poll_c10பாமரர் தேவாரம் - Page 20 Poll_m10பாமரர் தேவாரம் - Page 20 Poll_c10 
2 Posts - 3%
Barushree
பாமரர் தேவாரம் - Page 20 Poll_c10பாமரர் தேவாரம் - Page 20 Poll_m10பாமரர் தேவாரம் - Page 20 Poll_c10 
1 Post - 1%
cordiac
பாமரர் தேவாரம் - Page 20 Poll_c10பாமரர் தேவாரம் - Page 20 Poll_m10பாமரர் தேவாரம் - Page 20 Poll_c10 
1 Post - 1%
Geethmuru
பாமரர் தேவாரம் - Page 20 Poll_c10பாமரர் தேவாரம் - Page 20 Poll_m10பாமரர் தேவாரம் - Page 20 Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
பாமரர் தேவாரம் - Page 20 Poll_c10பாமரர் தேவாரம் - Page 20 Poll_m10பாமரர் தேவாரம் - Page 20 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாமரர் தேவாரம் - Page 20 Poll_c10பாமரர் தேவாரம் - Page 20 Poll_m10பாமரர் தேவாரம் - Page 20 Poll_c10 
172 Posts - 55%
heezulia
பாமரர் தேவாரம் - Page 20 Poll_c10பாமரர் தேவாரம் - Page 20 Poll_m10பாமரர் தேவாரம் - Page 20 Poll_c10 
107 Posts - 34%
T.N.Balasubramanian
பாமரர் தேவாரம் - Page 20 Poll_c10பாமரர் தேவாரம் - Page 20 Poll_m10பாமரர் தேவாரம் - Page 20 Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
பாமரர் தேவாரம் - Page 20 Poll_c10பாமரர் தேவாரம் - Page 20 Poll_m10பாமரர் தேவாரம் - Page 20 Poll_c10 
11 Posts - 4%
prajai
பாமரர் தேவாரம் - Page 20 Poll_c10பாமரர் தேவாரம் - Page 20 Poll_m10பாமரர் தேவாரம் - Page 20 Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
பாமரர் தேவாரம் - Page 20 Poll_c10பாமரர் தேவாரம் - Page 20 Poll_m10பாமரர் தேவாரம் - Page 20 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பாமரர் தேவாரம் - Page 20 Poll_c10பாமரர் தேவாரம் - Page 20 Poll_m10பாமரர் தேவாரம் - Page 20 Poll_c10 
1 Post - 0%
Geethmuru
பாமரர் தேவாரம் - Page 20 Poll_c10பாமரர் தேவாரம் - Page 20 Poll_m10பாமரர் தேவாரம் - Page 20 Poll_c10 
1 Post - 0%
Barushree
பாமரர் தேவாரம் - Page 20 Poll_c10பாமரர் தேவாரம் - Page 20 Poll_m10பாமரர் தேவாரம் - Page 20 Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
பாமரர் தேவாரம் - Page 20 Poll_c10பாமரர் தேவாரம் - Page 20 Poll_m10பாமரர் தேவாரம் - Page 20 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாமரர் தேவாரம்


   
   

Page 20 of 20 Previous  1 ... 11 ... 18, 19, 20

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jan 07, 2014 9:34 am

First topic message reminder :

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை
(கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்)

(கோவில்: Chottruth Thurai
பதிகம்: thiru aDangkal)

அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம்
முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே
அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர்
இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1

[அன்னதானச் செய்தி: Aadalvallan

மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை
மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக்
காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான்
ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... 2

[முழுதோன்=சிவன், ’முன்னோன் காண்க முழுதோன் காண்க’, திருவாசகம் 3.30]

கலையும் மழுவும் கழுவும் அழலும் கரம்தாங்கத்
தலையில் ஆறும் கலையும் தாங்கும் சடையானைத்
தொலையாச் செல்வ நாதர் சோற்றுத் துறைகாணில்
தொலையும் பசியும் பிணியும் பிறப்பும் தொடராதே. ... 3

[கழு=சூலம்; கலை=மான், பிறைச் சந்திரன்;
தொலையாச் செல்வநாதர்=கோவில் மூலவர் பெயர்]

ஏழூர் தலத்தில் மூன்றா வதென இதுவாக
வேழம் உரித்தான் சோற்றுத் துறையான் விடையோனும்
ஏழை யூரின் பஞ்சம் தீர்க்க எழுந்தேதான்
தாழாச் சோறார் கலமொன் றினையே அளித்தானே. ... 4

[ஏழூர் தலம் = சப்த ஸ்தான ஸ்தலங்கள் முறையே: திருவையாறு, திருப்பழனம்,
திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருமழபாடி]

புலிக்கால் முனிபெண் விடையார் மணமே புரிந்தாரே
நலிவோர் மணமும் நன்றே குதிர நடத்தாரோ?
கலையான் மறையான் சோற்றுத் துறையின் அருளாளன்
மலையாள் கூறன் மனமா ரவினை மறையாதோ? ... 5

[புலிக்கால் முனிபெண் = வியாக்ரபாதரின் மகள் சுயம்பிரகாசையை
நந்திதேவர் மணமுடித்த ஐதீகம் இந்தக் கோவிலில் ஓர் உற்சவமாகக்
கொண்டாடப் படுகிறது.]

அழலாய் எழுந்தே அயன்மால் காணா வடிவானான்
கழலின் விரலால் அரக்கன் அழுத்தி யருள்செய்தான்
உழலும் நெஞ்சம் அரனை சோற்றுத் துறைகாணில்
கழலும் வினையே காமன் அழித்தான் அருளாலே. ... 6

உடுக்கை யொலிக்கக் கூளிக ளாடச் சுடுகாட்டில்
நெடுவெண் ணுடலில் வெண்ணீ றணிந்தே அழலாடி
விடம்கொள் பாம்பும் கழுவோ டுமையும் இடமாடும்
நடனம் சோற்றுத் துறையில் கண்டால் நலிவேது? ... 7

கூற்றைக் காலால் உதைத்தே சிறுவன் உயிர்காத்தான்
காற்றின் கடுகும் கணையால் புரமூன் றழித்தானே
சோற்றுத் துறையூர்க் கோவில் மேவும் துடிகொண்டான்
ஊற்றாய் ஞானம் பெருகச் செய்வான் உயிர்காத்தே. ... 8

பார்த்தன் போற்றப் பாசு பதமும் அளித்தானைத்
தீர்த்தம் ஆடிக் கீர்த்தி பாடி மலராலே
ஆர்த்தே உள்ளம் உருகத் தொழுதே பதம்வீழ்ந்தால்
தூர்த்தே வினைகள் மாய்ப்பன் சோற்றுத் துறையானே. ... 9

ஓதும் வேதப் பொருளை உணரும் உளமின்றி
தீது மொழிகள் பேசித் திரிவார் சிறுசொல்லர்
ஆதி சோற்றுத் துறையான் மறையான் அருளாலே
ஏதும் பிறசொல் கேளார் நெறியிற் பிறழாரே. ... 10

ஆயுள் மேனி ஆன்ம நலமும் அறவாழ்வும்
தாயுள் ளம்போல் அன்பும் செயலும் சலியாதே
ஆயும் அறியும் மேன்மை உணரும் தகவெல்லாம்
பாயில் விழுமுன் பரமன் அருளப் பணிவோமே. ... 11

--ரமணி, 06-07/01/2014, கலி.23/09/5114

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Mar 15, 2016 7:57 pm

முக்கணனை மூலவனை முளைமதியம் சூடுவனை
சுக்கிரர்க்கு மந்திரத்தைச் சொன்னவனைக் கஞ்சனூரில்
எக்கணமும் எண்ணத்தில் ஏற்றுவோரின் இன்னல்கள்
நிக்கிரகம் செய்வோனை நீறணிந்து போற்றுவமே. ... 4

நீறணிந்து பாதத்தில் நெடுஞ்சாணாய் வீழ்ந்தேநாம்
காறணிந்த வாழ்நாளில் கஞ்சனூரில் வழிபட்டே
கூறுசெய்து சுரைக்காயக் கொளச்செய்த கொக்கிறகன்
ஆறணிந்து கானகத்தில் ஆடுவனாம் போற்றுவமே. ... 5

[காறு = கால அளவு]

ஆடுவனாம் அரதத்தர்க் கருளியனாம் கல்நந்தி
மாடதனைப் புல்தின்ன வைத்தவனாம் கஞ்சனூரில்
ஓடிமாயும் வாழ்விதனின் உட்பொருளைக் காட்டுவனாம்
நாடிநாமும் மருள்நீக்கி நன்மைதரப் போற்றுவமே. ... 6

நன்மைதர வேண்டிடவே நவகோளும் கணபதியும்
குன்றெறிந்தோன் சீதேவி குழகனருள் பெற்றடியார்
சன்னிதிகள் நின்றருளும் தலமிதுவாம் கஞ்சனூரில்
அன்னையுடன் ஆட்செயும் அத்தனைநாம் போற்றுவமே. ... 7

அத்தனைநாம் போற்றுகையில் அவன்லீலை பலவற்றுள்
பித்தனிவன் வாழ்மலையைப் பேர்த்தெடுக்க முயன்றவனைக்
கத்தவைத்து அருள்செய்த கஞ்சனூரின் ஈசனைநம்
அத்தனென்று கொண்டவனின் அடிமுடியைப் போற்றுவமே. ... 8

அடிமுடியைக் காணாதே அயனரியை அலையவைத்தே
நெடுவானைத் தொடுதூணாய் நீண்டவழல் உருக்கொண்டு
படியவைத்தே ஆட்கொண்ட பரமனவன் கஞ்சனூரில்
விடிபொழுதில் ஒலிக்கின்ற வேதத்தைப் போற்றுவமே. ... 9

வேதத்தைத் தள்ளுகின்ற வேற்றுநெறி கொள்ளுவோரின்
வாதத்தின் பொய்யுணர்ந்து மனந்தன்னில் கஞ்சனூரன்
பாதத்தை நாடுவோர்க்குப் பரமனவன் அருள்செய்யும்
போதத்தை உளங்கொண்டு பொய்யகலப் போற்றுவமே. ... 10

பொய்யகலப் போற்றிடவே பூரணனின் அருள்சூழ்ந்தே
உய்வித்த அப்பரவர் ஓர்பதிகம் கஞ்சனூரில்
மெய்யுருகப் பாடியது மேவிநிற்க நம்முளத்தில்
ஐயங்கள் அகற்றியருள் அழற்கண்ணன் போற்றுவமே. ... 11

--ரமணி, 08-09/02/2016, கலி.26/10/5116

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Apr 08, 2016 11:09 am

திருநெல்வேலி
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம்: 2.48.1: கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்)

கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=909
http://www.shivatemples.com/pnaadut/tirunelveli.php
http://maragadham.blogspot.in/2010/11/blog-post_25.html

தேவாரப் பதிகம்
சம்பந்தர்: 03.092: மருந்தவை மந்திர மறுமைநன் னெறியவை மற்றுமெல்லாம்
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=3&Song_idField=30920

காப்பு
பொல்லாப்பிள் ளையாரே போற்றினேன் ஓர்பதிகம்
நெல்லையப்பர் மீது நெகிழ்ந்தவர் - வல்லவி
காந்திமதி அம்மையின் காப்பையும் வேண்டியே
பாந்தமுடன் பாடவருள் வீர்!

பதிகம்
தான்தோன்றி யுருவாகத் தன்னகத்தே அம்மையுடன்
வான்தோன்றி கங்கைநதி வடிவாகப் பொருநைவரக்
கான்தோன்றி வேணுவனம் காட்சிதந்தே நிலைபெற்றுத்
தேன்தோன்றி மலர்சூழத் திருநெல்லை யமர்ந்தாரே. ... 1

[தன்னகத்தே அம்மையுடன் = சுயம்பு லிங்கத்தில் உறைந்த அன்னை உருவுடன்]

வேணுவன நெல்லையப்பர் வேய்முத்த நாதரவர்
நாணுவன நங்கையவள் நாயகியாம் காந்திமதி
தோணுவன தோய்வதனால் தோன்றுகின்ற வினைதீர்க்க
சேணுவனன் மூலிகையாய்த் திருநெல்லை யமர்ந்தாரே. ... 2

[நாணுவன நங்கை= நாணுகின்ற அழகிய நங்கை
சேணுவனன் = ஆகாச கருடன் என்று வழக்கிலுள்ள விடம் தீர்க்கும் மூலிகை]

ஊன்தோன்றி உளைகின்ற உயிர்க்கருளி யாட்கொளவிண்
மீன்தோன்றிப் பல்கிவரும் வேளையிலே நடமாடி
நான்தோன்றி யலைந்துமனம் நலிகின்ற போதினிலே
தேன்தோன்றி மலர்சூழத் திருநெல்லை யமர்ந்தாரே. ... 3

(தொடரும்)

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Apr 28, 2016 7:02 pm

தலவிருட்சம் மூங்கிலெனில் தலத்தீர்த்தம் பலவாமே
தலப்பெருமை தாண்டவனின் தாமிர சபையாமே
வலம்வந்து காணநுட்ப வடிவுகளில் சிற்பமெனச்
சிலையாக நின்றருளத் திருநெல்லை யமர்ந்தாரே. ... 4

அரனுக்கோர் கோவிலெனில் அன்னைக்கின் னொருகோவில்
இருவரையும் சமமாக ஏத்துவழி பாடுகளாம்
ஒருசக்தி பீடமெனில் உருத்திரனின் ஓர்சபையாம்
திருமணக்கோ லம்கொண்டே திருநெல்லை யமர்ந்தாரே. ... 5

இராமக்கோன் கண்டறிய ஈசனவர் அருள்செய்ய
இராமபாண் டியமன்னன் எடுத்ததொரு கோவிலிலே
இராமருக்குப் பாசுபதம் ஈந்தருளி நெல்லையப்பர்
சிராவியமாய்த் துதிகொண்டே திருநெல்லை யமர்ந்தாரே. ... 6

[சிராவியம் = இனிமையான]

வேதியர்நெல் மீதுமழை வீழாத வேலியருள்
பேதமெலாம் தீரவருள் பெம்மானின் கோவிலிலே
சீதரனும் நெஞ்சிருத்தும் சீர்கொண்ட மாதேவர்
தீதறுக்கத் தான்தோன்றித் திருநெல்லை அமர்ந்தாரே. ... 7


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue May 03, 2016 7:24 pm

கண்மூடித் தனமாகக் கயிலைமலை தூக்கியானை
மண்ணழுந்தச் செய்தவனை மன்னித்தே வாள்தந்த
கண்ணுதலார் காளியுடன் காட்டுமுயிர்க் கருணையினைத்
திண்ணமாகத் தருபவராய்த் திருநெல்லை யமர்ந்தாரே. ... 8

அருவுருவன் வானுயர்ந்த அழலுருவாய்த் தோன்றிடவே
திருமால்க ழல்தேடித் திசைமுகன்ற லைதேடித்
திரிந்தோய முன்தோன்றித் தியம்பகன்றன் நிலையுரைத்த
திருத்தனவர் நமக்கருளத் திருநெல்லை யமர்ந்தாரே. ... 9.

வேதவிழி தேராதே வேறுவழி நோக்குமத
வாதங்கள் மெய்ஞ்ஞான வழியல்ல வென்றந்தத்
தீதறுப்போர்க் கருள்செய்யும் செம்பொருளா யுருக்கொண்டே
சீதளநீர் முழுக்காடித் திருநெல்லை யமர்ந்தாரே. ... 10.

[வேதவிழி = வேதஞானம்]

வெடிதரு தலையேந்தி விடையமர் கலைசூடிப்
பொடியணி மேனியராய்ப் புடையொரு மங்கையுடன்
கடிமலர்ப் பதிகமொன்றால் காழியர் கோன்துதிக்கத்
திடிமமத் தளமொலிக்கத் திருநெல்லை யமர்ந்தாரே. ... 11

[வெடிதரு=வெடித்த (சம்பந்தர் பதிகம், பாடல் 6;)
காழியர்கோன் = சம்பந்தர்; திடிமம் = திண்டிமம் = ஒருவகைப் பறை]

--ரமணி, 01-08/04/2016

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed May 18, 2016 9:51 am

திருப்பழனம்
(எழுசீர் விருத்தம்: வாய்பாடு 6 மா + புளிமாங்காய்)
(சீர்கள் ஒன்று-ஐந்தில் மோனை; ஈற்றடிச் சீர்கள் ஒன்று-மூன்றில் எதுகை)


அமைப்பு
சுந்தரர் தேவாரம் 7.41.1:
முதுவாய் ஓரி கதற முதுகாட் டெரிகொண் டாடல் முயல்வோனே
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=7&Song_idField=70410

கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=959
http://www.shivatemples.com/nofct/nct50.php
http://www.findmytemple.com/index.php/ta/தஞ்சாவூர்/t285-ஆபத்சகாயேஸ்வரர்,-திருப்பழனம்
http://www.dailythanthi.com/Others/Devotional/2014/06/06113434/Great-Designation-arulum-Abathsahayeswarar.vpf

தேவாரப் பதிகம்
சம்பந்தர் 01.067: வேதமோதி வெண்ணூல்பூண்டு
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=1&Song_idField=10670

அப்பர்
04.012: சொன்மாலை பயில்கின்ற
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=4&Song_idField=40120
04.035: ஆடினா ரொருவர்
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=4&Song_idField=40360
04.087: மேவித்து நின்று
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=4&Song_idField=40870
04.087: மேவித்து நின்று
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=4&Song_idField=40870
05.035: அருவ னாயத்தி
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=5&Song_idField=50350
06.036: அலையார் கடல்நஞ்ச
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=6&Song_idField=60360

காப்பு
பழனத் திறைமகனே பார்வதி மைந்த
மழவிடையன் மாசிலி மன்றாடி மேவும்
பழனப்பேர் பற்றிப் பதிகமொன்று பாடக்
கழல்பற்றி வேண்டினேன் காப்பு.

பதிகம்
(எழுசீர் விருத்தம்: வாய்பாடு 6 மா + புளிமாங்காய்)
(சீர்கள் ஒன்று-ஐந்தில் மோனை; ஈற்றடிச் சீர்கள் ஒன்று-மூன்றில் எதுகை)

கழலால் காலன் உதைத்து பாலன் .. காத்துக் கயிலை உறைவாரே
பழங்கண் கொள்ளா பத்ச சகாயர் .. பக்கம் பெருநா யகியென்றே
முழவும் பறையும் முறையாய் மறையும் .. முழங்கக் காணும் பெருமானாய்ப்
பழமை வினைகள் கழல வருளப் .. பழனத் தளியில் அமர்ந்தாரே. ... 1

[பழங்கண் = துன்பம், மெலிவு; பழனத்தீசன் பேர் ஆபத்சகாயர்;
ஈச்வரி பேர் பெரியநாயகி; தளி = கோவில்]

தலத்தின் தருவாய் வாழை விளங்கத் .. தாழை மலர்கள் மணம்வீசும்
கலையும் மானும் கையில் எரியும் .. காதில் தோடும் அசைந்தாட
நிலையில் வாழ்வில் நேரும் வினைகள் .. நிமலன் அருளால் நலிவெய்திப்
பலனாய் உலகில் பலவும் விளையப் .. பழனத் தளியில் அமர்ந்தாரே. ... 2

பயணம் கொண்டே பலவாய் வரமும் .. பதுமை பெற்ற தலமாகப்
பயண புரியின் ஈசன் ஆனார் .. பரவை பயந்த அமுதத்தைப்
பயன்கொள் முனிவர் குடிலில் அவுணர் .. பறிக்க ஐயன் உருச்செய்தே
பயந்தாள் காளி வயத்தை அழிக்கப் .. பழனத் தளியில் அமர்ந்தாரே. ... 3

[பதுமை = இலக்குமி; பரவை = கடல், இங்கு பாற்கடல்; பயன்கொள் முனிவர் = கௌசிக முனி;
அவுணர் = அசுரர்; ஐயன் = ஐயனார்; பயந்தாள் = பெற்றவள்; வயம் = வலிமை]

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jul 12, 2016 9:19 am

சுசரி தனெனும் சிறுவன் கனவில் .. சுடுசொற் காலன் குறிசொல்ல
அசலன் அவனைக் காத்தே அருள .. ஆபத் சகாயன் பெயர்பெற்றார்
அசுரர் தம்மைக் காளி அழிக்க .. அமுத லிங்கம் முனிசெய்யப்
பசலை நீக்கப் பசுமை மருதப் .. பழனத் தளியில் அமர்ந்தாரே. ... 4

[அசலன் = அசையாக் கடவுள்; அமுதலிங்கம் முனிசெய்ய = கௌதமர் தன் பங்கு அமுதத்தால்
செய்த சிவலிங்கம்; பசலை = மனச்சஞ்சலம், வருத்தம்]

கோட்டச் சுற்றில் ஈசன் பிரம்மா .. கொள்-கை வீணை குருதேவர்
பாட்டி சைத்தே அரிதாய்க் குழல்கோ .. பாலன் உள்ளே வரும்சுற்றில்
கூட்டும் கையை நந்தி தேவர் .. கூப்பும் நிலையில் விழிகாணப்
பாட்டும் பண்ணும் காட்டும் வண்ணம் .. பழனத் தளியில் அமர்ந்தாரே. ... 5

வெளியே சுற்றில் கந்தப் பெருமான் .. வேழ முகத்தன் உடன்மேவ
உளியின் உருவாய்க் கோலச் சிலையாய் .. உள்ளேழ் மாதர் தவக்கோலம்
வெளியே சுற்றில் ஈசன் இடத்தில் .. வீற்ற ருள்செய் உமைமேவப்
பளிதம் காட்டும் ஒளியின் ஒளியாய்ப் .. பழனத் தளியில் அமர்ந்தாரே. ... 6

[பளிதம் = கற்பூரம்]

பழனம் பெருமை ஐந்தெ ழுத்தாய்ப் .. பரமன் தாமே புகழ்ந்தேத்தப்
பழனத் தலமாம் பயணேச் வரத்தில் .. பல்வே றுமுனி கதிசேர்ந்தார்
பழகும் அடியார் பரவும் அடிகள் .. பாவம் கொள்ளார்க் கருள்செய்தே
பழமை வினைகள் அழிக்கும் பரமாய்ப் .. பழனத் தளியில் அமர்ந்தாரே. ... 7

[அடிகள் = கடவுள்]
மலையைக் கெல்ல முயன்ற மூடன் .. வலக்கால் விரலால் நெரியுண்ண
மலையாள் பாகன் வருத்திப் பின்னர் .. வாளும் நாளும் அருள்செய்தார்
கலையைத் தலையில் நிலையாய் இலக்கிக் .. கங்கை தரித்த கறைக்கண்டன்
பலவாய் அடியார் குலவும் படிறன் .. பழனத் தளியில் அமர்ந்தாரே. ... 8

[வலக்கால் விரல் = இடப்புறம் உமையாள் இருப்பதால் வலக்கால் விரல்
என்று கற்பனை; இலக்குதல் = அடையாளம் இடுதல், இலங்கச் செய்தல்;
படிறன் = பொய்யன், கள்வன்]

எரியும் தூணாய் வானும் நிலமும் .. இணைத்தே ஈசன் உருக்கொள்ள
அரியும் அயனும் அடியும் முடியும் .. ஆரத் தேடி அறியாதார்
கரியின் தோலை உடுத்தே சூலம் .. கையில் தாங்கும் பெருமானே
பரியாய் ஆக்கி நரியைத் தந்தார் .. பழனத் தளியில் அமர்ந்தாரே. ... 9

வேதம் தள்ளும் வேற்று நெறிகள் .. மீது செல்லார் உளந்தன்னில்
நாதன் நம்பன் நக்கன் நடனன் .. நட்டன் நயனச் சுடரோனே
யாது மாகி நின்றே வினைகள் .. யாவும் தீர்த்தே வழிகாட்டிப்
பாது காப்பாய்ப் பாதம் காட்டிப் .. பழனத் தளியில் அமர்ந்தாரே. ... 10

கண்ணில் கண்ட உயிர்கள் யாவும் .. கருத்தன் நாடி வினையுரைக்கப்
பண்ணில் வேண்டி யப்பர் பதிகம் .. பாடப் பரமன் அருள்செய்தார்
கண்மேற் கண்ணன் சடைமேற் பிறையன் .. காழி யர்கோன் பணிந்தேத்திப்
பண்ணும் பதிகம் வண்ணம் காட்டப் .. .. பழனத் தளியில் அமர்ந்தாரே. ... 11

[கருத்தன் = கடவுள்; வினையுரைக்க = தூது சொல்ல; காழியர்கோன் = சம்பந்தர்]

--ரமணி, 20/04/2016

*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Aug 15, 2016 9:44 am

‪#‎ரமணி_பாமரர்_தேவாரம்‬
திருநறையூர்ச் சித்தீச்சரம்
(இன்று திருநறையூர்ச் சித்தநதேஸ்வரர் கோவில்)

(வஞ்சித்துறை: பதிகத்தில் 12 பாடல்கள்.
மா விளம்: முதல் ஆறு பாடல்கள்; விளம் மா: அடுத்த ஆறு பாடல்கள்)


சம்பந்தர் தேவாரம்:
திருவிருக்குக்குறள் 01.092.01: வாசி தீரவே காசு நல்குவீர்
திருவிருக்குக்குறள் 03.040.01: கல்லால் நீழல் அல்லாத் தேவை

கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=368
http://www.shivatemples.com/sofct/sct065.php

தேவாரப் பதிகம்
சம்பந்தர்:
01.029: ஊரு லாவு பலிகொண் டுலகேத்த
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=1&Song_idField=10290

01.071: பிறைகொள்சடையர் புலியினுரியர்
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=1&Song_idField=10710

02.087: நேரிய னாகுமல்ல னொருபாலு மேனி
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=2&Song_idField=20870

சுந்தரர்:
07.093: நீரும் மலரும் நிலவும் சடைமேல்
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=7&Song_idField=70930

காப்பு
நறையூர்வாழ் ஆண்டவி நாயக விங்கு
உறைசித்த நாதரை யோர்ந்தே - முறையாக
வஞ்சித் துறையுரு வாமனப் பாநிரலென்
நெஞ்சின் றெழவருள்வாய் நீ.

பதிகம்
(வஞ்சித்துறை: மா விளம் 1-6, விளம் மா 7-12)

குறையா வளந்தரும்
நறையூர் நாதனை
நறையார் மலர்களால்
நிறையத் தொழுவமே. ... 1

[நறையார் = தேன் நிறைந்த]

நறையூர் நாதனின்
குறையா வனப்புடை
இறைவி யின்கழல்
கறைதீர்த் தருளுமே. ... 2

பொறியாள் இலக்குமி
மறைசொல் மாமுனி
உறவில் மகளென
நறையூர் அருளினன். ... 3

[பொறியாள் = செல்வத்தை ஆளுகின்ற; மறைசொல் மாமுனி = மேதாவி மகரிஷி]

பொறியை நாரணர்க்
குறுவில் லாக்கவே
நறையூர் மேவினர்
இறைவன் இறைவியே. ... 4

[பொறி = இலக்குமி (பிங்கள நிகண்டு); உறுவில் = உற்ற மனைவி]

நரநா ராயணர்
உருவில் பறவையாய்ப்
பெருமான் போற்றிய
திருச்சித் தீச்சரம். ... 5

புறணி நோயறத்
துறவி வேண்டிடக்
குறைகள் களைந்தவன்
நறையூர் நாதனே. ... 6

[புறணி = தோல்; துறவி = கோரக்க சித்தர்]

தென்றிசைக் கடவுள்
தென்குட திசையில்
நின்றருள் நறையூர்
இன்னருங் காட்சி. ... 7

மலைபெயர் அரக்கன்
எலியென நெரித்தார்
நலிவறு நறையூர்க்
கலையணிச் சிவனே. ... 8

அயனரி அறியா
வியன்தொடு வெரியர்
நயந்துறை நறையூர்
மயலறு சிவனே. ... 9

மறைகொளா நெறிகள்
கறையெனக் கொள்வோர்
நிறைகொள நறையூர்
இறைவனின் அருளே. ... 10

காடுறை நாதனைப்
பாடசம் பந்தர்
நாடினர் நறையூர்
ஏடுசொல் வாக்கே. ... 11

சுந்தரர் பாடும்
அந்திரன் நறையூர்
சிந்தையிற் சிவமாய்
வந்தமர்ந் தாரே. ... 12

--ரமணி, 28-30/04/2016

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Sep 18, 2016 10:14 am

அன்பில் ஆலந்துறை (லால்குடி அருகில்)
(அறுசீர் விருத்தம்: விளம் விளம் விளம் விளம் மா தேமா)

கோவில்

தேவாரப் பதிகம்
சம்பந்தர்: 01.033 கணைநீடெரி மாலரவம் வரைவில்லா
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=1&Song_idField=10330

அப்பர்: 02.080 வானஞ் சேர்மதி சூடிய மைந்தனை
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=5&Song_idField=50800

காப்பு

செவிச்செல்வம் செல்வத்துள் சென்னி எனவே
செவிசாய்த்துச் சோதரர் செய்த - கவிகேட்டே
இன்புற்ற பிள்ளையார் இன்னருளால் அன்பில்மேல்
என்பதிகம் நிற்கும் எழுந்து.

[சோதரர் = கணபதியின் அன்னை பாலூட்டியதால்
சம்பந்தர் பிள்ளையார் சோதரர் ஆகின்றார் என்ற கருத்து]

பதிகம்
(அறுசீர் விருத்தம்: விளம் விளம் விளம் விளம் மா தேமா)

கணையெரி மாலெனக் கடுவிட வாசுகி நாணாய் வைத்தே
இணைத்தெயில் மூன்றினை யெரித்தவர் வானுறை மதிகொள் மைந்தர்
கணைவிழி உமையவள் காந்தையாய் இடப்புறம் மேவ நின்றே
அணைத்தருள் எந்தையாய் அன்பிலா லந்துறை மேவி னாரே. ... 1

[கணியெரி ... எரித்தவர்:
கணைநீ டெரிமா லரவம் வரைவில்லா
இணையா வெயின்மூன் றுமெரித் தவிறைவர்--சம்பந்தர் வரிகள்;
வானுறை மதிகொள் மைந்தர்:
வானஞ் சேர்மதி சூடிய மைந்தனை--அப்பர் சொற்கள்]

சடையடர்ச் சதுரனாம் சத்திய வாக்குடை யீசன் பேராம்
விடையமர் காரணர் விடமமர் கருமிடற் கபாலி யாராம்
இடமொரு சவுந்தரி இடையுரி வாரணம் ஈசன் நாமம்
அடியவர் வினைகொள அன்பிலா லந்துறை மேவி னாரே. ... 2

[சடையடர்ச் சதுரனாம்:
சடையார் சதுரன் முதிரா மதிசூடி--சம்பந்தர் சொற்கள்;
காரணர் விடமமர் கருமிடற் கபாலி யாராம்:
கார ணத்தர் கருத்தர் கபாலியார்
வார ணத்துரி போர்த்த மணாளனார்--அப்பர் வரிகள்]

ஊர்ந்திடும் பன்னகம் உறுஞ்சடை மதியணி மாதோர் பாகன்
தேர்ந்திடை அணிவதோ சிந்துர உரியவர் ஆனைந் தாடி
கார்விரி வெள்ளமாய்க் காவிரி கரைபுரண் டோடச் செய்தார்
ஆர்ந்தருள் செய்யவே அன்பிலா லந்துறை மேவி னாரே. ... 3

[ஊர்ந்திடும் பன்னகம் உறுஞ்சடை:
ஊரும் மரவம் சடைமே லுறவைத்து--சம்பந்தர் சொற்கள்;
இரண்டாம் அடி எதிரொலிப்பது:
ஆனஞ்ச மைந்துட னாடிய
என்பின் ஆனை யுரித்துக் களைந்தவன்--அப்பர் சொற்கள்]

*****

Sponsored content

PostSponsored content



Page 20 of 20 Previous  1 ... 11 ... 18, 19, 20

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக