புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
57 Posts - 38%
சண்முகம்.ப
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
3 Posts - 2%
jairam
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
2 Posts - 1%
சிவா
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
1 Post - 1%
Manimegala
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
1 Post - 1%
Poomagi
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
140 Posts - 36%
mohamed nizamudeen
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
17 Posts - 4%
prajai
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
7 Posts - 2%
jairam
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
4 Posts - 1%
Jenila
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
3 Posts - 1%
Rutu
குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_m10குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்    Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்


   
   
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Fri Jan 31, 2014 1:37 pm

குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள் 
 
அதிர்ஷ்டம் என்பது என்ன?
 
இறைவன் உருவாக்கிக் கொடுக்கும் சந்தர்ப்பம்; அவ்வளவுதான்.
 
கிடைக்கிற சந்தர்ப்பத்தைக் கெட்டியாக பிடித்துக் கொள்பவனையே அதிர்ஷ்டசாலி என்கிறோம்.
 
சந்தர்ப்பங்களைத் தேடி அலைகிறவர்கள் பலர்; அது கிடைக்கவில்லை என்று அவர்கள் வாடுவார்கள். அவர்கள் எல்லாம் மதுரைக்கு போவதாக எண்ணிக் கொண்டு சேலம் ரயிலில் ஏறி உட்கார்ந்தவர்கள்!
 
கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டவர்கள் பலர். அவர்களெல்லாம் ரயிலைத் தவற விட்ட பிரயாணிகள்!
 
சரியான ரயிலுக்கு சரியான நேரத்தில் போய்ச் சேர்ந்தவனே, தான் விரும்பிய ஊருக்குப் போய் சேருகிறான்.
 
சரியான சந்தர்ப்பத்தைக் கெட்டியாக பிடித்துக் கொண்டவனே, தெய்வத்தின் உதவியோடு முன்னேறுகிறான்.
 
'எந்த நேரத்தில் எதை செய்தால் சரியாயிருக்கும்' என்ற தெளிந்த அறிவு எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை.
 
உண்மைதான்.
 
ஆனால் கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளாதவர்கள் எந்தவிதத் தெளிவும் இல்லாதவர்கள்.
 
வாய்ப்பு கிடைத்ததாலே, முட்டாள் பணக்காரன் ஆனதுண்டு; வாய்ப்பு கிடைக்காததாலே திறமைசாலி தெருவில் அலைந்ததுண்டு.
 
'இந்த வாய்ப்பு' என்பது இறைவன் காட்டும் பச்சை விளக்கு.
 
கொத்தவால் சாவடியில் காய்கறி வாங்கி ஜாம் பஜாரில் கொண்டு போய் விற்றால், ஐம்பது ரூபாய் லாபம் கிடைக்கும் என்று உனக்கு தெளிவாக தோன்றினால், அதை உடனடியாக செய்து விட வேண்டும்.
 
அந்த முதல் லாபத்திலேயே உனக்கு இரண்டாவது யோசனை உதயமாகும்.
 
வியாபாரத்தில் லாபம் வந்தால் அந்த வியாபாரத்தை  தொடர்ந்து செய்யலாம்.
 
ஆனால் சூதாட்டத்தில் லாபம் வந்தால் தொடர்ந்து சூதாட கூடாது.
 
ஒருவனிடம் கத்தியைக் காட்டி நீ ஆயிரம் ரூபாய் வாங்கி விட்டால், அந்த தைரியம் போலீஸ்காரரிடமும் கத்தியைக் காட்டச் சொல்லிப் பிடித்துக்கொடுக்கும்.
 
சிலர் வியாபாரத்தை சூதாட்டம் போலவும், கொள்ளையடிப்பது போலவும் நடத்துவர். இதை தவிர்க்காவிடில் சர்வ நாசம்தான்.
 
தர்மத்துக்கு கட்டுப்பட்டு நடப்பதுடன் புத்திசாலி தனமும் வேண்டும்.
 
சொத்தின் மதிப்பு குறையும் போது அதை வாங்க வேண்டும்.இன்னும் குறையும் என்று எண்ணினால் அது ஏறிவிடவும் கூடும்.
 
மதிப்பு ஏறினால் அதை விற்று விட வேண்டும்; இன்னும் ஏறும் என்று கருதினால், அது இறங்கி விடவும் கூடும்.
 
பர்மாவிலும், சைகோனிலும், இலங்கையிலும் எங்கள் நகரத்தார்கள் சொத்துக்களை விற்காமல் கெட்டார்கள். மலேசியாவிலே விற்று கெட்டார்கள்.
 
கத்தரி  செடி காயைத்தான் தரும்; அதிலே குழம்பு வராது.
 
கைகாட்டி வழியைத்தான் காட்டும். அதுவும் கூட வராது.
 
தெய்வம் பாதி; திறமை பாதி.
 
தெய்வம் வாய்ப்பை காட்டுகிறது. திறமை அதை லாபகரமாக்குகிறது.
 
உன்னிடம் விதை இருக்கலாம்; உரம் இருக்கலாம். வெள்ளம் போல் தண்ணீர் தரும் கிணறும் இருக்கலாம். நிலத்தில் வளம் இல்லை என்றால் அனைத்தும் வீண்.
 
ஆனால் வளமான நிலம் உன்னிடம் இருந்து விட்டால் மற்ற அனைத்தையும் நீ உருவாக்கி விட முடியும்.
 
அந்த வளமான நிலமே வாய்ப்பு என்பது.
 
பாம்பு நஞ்சு  நிறைந்தது; வேங்கை பயங்கரமானது; யானையின் பலத்தின் முன்னால் மனிதன் எம்மாத்திரம்?
 
ஆனால், அவற்றை ஆட்டி வைக்க கூடிய திறமை சில மனிதர்களிடம் இருக்கிறது.
 
உங்களாலும், என்னாலும் முடியுமா? அந்த வாய்ப்பும் சிலருக்கே அமைகிறது.
 
அதனால்தான், வாய்ப்பு என்பது இறைவன் அளிப்பது என்றேன். அதை முறையாக பிடித்துக்கொண்டு முன்னேறுவதை அதிருஷ்டம் என்கிறேன்.
 
எழுதுவதற்கு பத்திரிக்கைகளோ படங்களோ இல்லை என்றால் நான் யார்?
 
நான் ஓர் அதிர்ஷ்டக்காரன்.
 
காரணம் இறைவன் எனக்கு அளித்த வாய்ப்பை மனித யத்தனதால் எவ்வளவு காப்பாற்றிக் கொள்ள முடியுமோ, அவ்வளவு காப்பாற்றிக் கொள்கிறேன்.
 
ஹிட்லருக்கு  கிடைத்த வாய்ப்பு, ஆணவத்தால் அழிந்தது.
 
சோவியத் மக்களுக்கு கிடைத்த வாய்ப்பு, திறமையினால் வளர்ந்தது.
 
வாய்ப்பை தவற விடுபவனே துருதிஷ்டசாலி.
 
அந்த வாய்ப்பு எல்லோர்க்கும் எப்போது வரும்?
 
அது முன் கூட்டியே தெரிந்து விட்டால் இறைவனை ஏன் நினைக்கப் போகிறீர்கள்?
 
கவியரசு கண்ணதாசன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 31, 2014 2:12 pm

அனைத்தும் சூப்பர் பகிர்வுக்கு நன்றீ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Fri Jan 31, 2014 9:42 pm

நல்ல உழைப்புடன், அதிர்ஷ்டம் கிடைக்கட்டும்!  ஆமோதித்தல் 



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக