புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Poll_c10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Poll_m10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Poll_c10 
69 Posts - 58%
heezulia
தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Poll_c10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Poll_m10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Poll_c10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Poll_m10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Poll_c10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Poll_m10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Poll_c10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Poll_m10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Poll_c10 
111 Posts - 59%
heezulia
தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Poll_c10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Poll_m10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Poll_c10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Poll_m10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Poll_c10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Poll_m10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமலர் ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Feb 25, 2014 10:29 pm

[justify]தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா 1779978_668231943219010_388825790_n


ஏபரல் முதல்தேதிக்கும் பிப்ரவரி 14 ஆம் தேதிக்கும் பெரிதாக வேற்றுமை ஒன்றும் இல்லை. இரண்டும் முட்டாள்கள் தினம்தான்.
காதலர் தினத்துக்கு எனக்கு ரிங் கொடுப்பீங்களா என்று காதலி கேட்டவுடன், ம் கண்டிப்பாகக் கொடுக்கறேன். லேண்ட் லைன்ல இருந்தா மொபைல்ல இருந்தா? என்று காதலன் கேட்கத் தொடங்கிய அன்றிலிருந்தே ஏமாற்றத் தொடங்கி விடும் காதலனும், கிரீன் கலர் சூரிதார் போட்டு காதலுக்குக் கிரீன் சிகனல் காட்டலாமா இல்லை இன்னும் கொஞ்சம் நாட்கள் காதலனை அலைய விடலாமா? என்று திட்டமெல்லாம் போட ஆரம்பித்து விடும் காதலியும் கொண்டாடும் நாள் காதல் திருநாள். காதல் மோகம் தீர்ந்து புளித்துப் போனவுடனேதான் புரிகிறது அது ஒரு மாயவலை என்று.

காதலர் தினம் பிப்ரவரி 14, குழந்தைகள் தினம் நவம்பர் 14. இதுவும் முட்டாள்கள் தினமா என்றால் இல்லை.. பத்து மாதங்கள் கழித்து காதலர்களின் குழந்தைகள் கொண்டாடும் நாள் இது. ஆனால் அந்தக் குழந்தைகள் இந்நாளை கொண்டாடுமா? அவை கொண்டாடும் முறையில் இன்றைய காதல் அமைகிறதா? என்பதுதான் இன்று நம் முன் இருக்கும் வினாக்கள்.

காய்ச்சல் வந்தவரின் அருகில் சென்றால் காய்ச்சல் தொற்றிக்கொள்வது போல காதல் அயல் நாட்டில் இருந்து நம்நாட்டுக்குத் தொற்றிக்கொண்டு விட்டது. இது ஒரு தொற்று நோய் போல பரவியுள்ளது

விழி இருந்தும் வழி இல்லாமல்
மன்னன் பழி தாங்கிப் போகிறேன்.
விழி இழந்து
பார்க்க வழி இழந்து,
நின் மன வலி தாங்காது
கதறும் ஒலி கேட்டும்,
உனை மீட்க வழி தெரியாமல்
மக்களுக்காக பலியாடாகப் போகிறேன் - நீ
ஒளியாய் வாழு!
பிறருக்கு வழியாய் இரு!!
சந்தோஷ ஒளி
உன் கண்களில் மின்னும்!!
-உன்னுடைய வலண்டைனிடமிருந்து!

இந்த காதல் கவிதையே இன்றைய கலாச்சார சீரழிவுக்குப் பாதை வகுத்துக் கொடுத்த கவிதை. இது உரோமானிய பாதிரியார் வாலண்டைன் எழுதிய காதல் கவிதை. காதலை எதிர்த்த ஒரு மன்னனுக்கு எதிராக காதலர்களை வாழவைத்த ஒரு பாதிரியாரின் நினைவு நாளைக் காதலர் தினமாக இன்று உலகமே கொண்டாடுகிறது.

கொடுரமாகவும் கோமாளித்தனமாகவும் ஆட்சி புரிந்த உரோமானியச் சக்கரவர்த்தி கிளாடியின் முட்டாள் தனமான கட்டளைகளால் அவனை விட்டு விலகிப் போயினர் அவனது இராணுவ வீரர்கள். புதிய இராணுவ வீரர்களை அவனால் சேர்க்க முடியவில்லை. யாரும் முன் வந்து இராணுவத்தில் சேர மறுத்து விட்டார்கள். அவனது மந்திரிகளும் வீரர்களைச் சேர்ப்பதற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகள் எதையும் அவனுக்குக் கொடுக்கவில்லை. இதனால் எரிச்சல் உற்றான் கிளாடி.

தன் நாயகியுடன் சல்லாபமாக இருந்த நள்ளிரவொன்றில் உரோமானியச் சக்கரவர்த்தி கிளாடியின் மனத்தில் உதித்தது ஒரு வித்தியாசமான சிந்தனை. திருமணமானவர்கள் தமது அன்பு மனைவியை விட்டு வர மனமில்லாமலும், திருமணமாகாதவர்கள் தமது காதலியை விட்டு வர மனமில்லாமலும் இருப்பதாலேயே இராணுவத்தில் சேரத் தயங்குகிறார்கள். இவர்களுக்கு எல்லாம் குடும்ப வாழ்க்கை என்ற ஒன்று இல்லாத பட்சத்தில் இவர்கள் மனம் வெறுத்து இராணுவத்தில் சேருவார்கள். போரிலும் மூர்க்கத் தனமாய் போரிடுவார்கள். வெற்றி எளிதில் கிட்டும் என்ற முட்டாள் தனமான எண்ணம் தோன்றியது.

உடனேயே நள்ளிரவு என்றும் பாராமல் "உரோமாபுரி நாட்டில் இனி யாருமே திருமணம் செய்யக்கூடாது. ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் ரத்துச் செய்யப் படவேண்டும். இந்தக் கட்டளையை மீறுபவர்கள் யாராயினும் கைது செய்யப் பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப் படுவார்கள். பொது இடத்தில் வைத்து கல்லால் அடித்து, தலை துண்டிக்கப் பட்டுக் கொல்லப் படுவார்கள்." என்ற அறிவிப்பை மக்களுக்குச் சொல்லும் படி பணித்தான். அரசனை மீற வழி தெரியாத அமைச்சர் அதை அறிவித்தார்.

இந்த அறிவிப்பைக் கேட்டு மக்கள் அதிர்ந்தார்கள். திருமணங்கள் கனவாகிப் போன சோகத்தில் உரோமாபுரி சோகக் கண்ணீரில் மிதந்தது. அரசனின் இந்த முடிவு அநியாயம் என்று சொல்லிக் கொதித்தெழுந்த கிறிஸ்தவ பாதிரியார் வாலண்டைன் அரச கட்டளையை மீறி இரகசியத் திருமணங்களைச் செய்து வைத்தார். இந்தச் செய்தி அரசனுக்கு எட்டி விட வாலண்டைன் கைது செய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப் பட்டார்.
சிறையில் இருந்த காலத்தில் சிறைக்காவல் தலைவனின் கண் தெரியாத மகளான அஸ்டோரியசுக்கும் பாதிரியார் வாலண்டைனுக்கும் இடையில் காதல் பூத்தது. அஸ்டோரியஸ் பாதிரியாரைச் சிறையிலிருந்து மீட்க முயன்றாள். இதையறிந்த அரசன் அஸ்டோரியசை வீட்டுச்சிறையில் வைத்தான். காதலால் கண்கள் கிடைத்து விட்டது போன்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த அஸ்டோரியஸ் கனவுகள் சிதைந்ததில் கலங்கினாள்.

ஆனால் வலண்டைனுக்கான மரணதண்டனையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. அஸ்டோரியசுக்கு ஒரு காகித அட்டையை வரைந்து விட்டு தண்டனையை ஏற்க அவன் தயாரானான். வலண்டைன் கல்லால் அடிக்கப் பட்டு தலை துண்டிக்கப் பட்ட அந்தநேரத்தில் அத்தனை கட்டுக் காவல்களையும் மீறி வலண்டைனிடமிருந்து வந்த அந்த அட்டையின் வரிகளைத் தோழி வாசிக்க அஸ்டோரியசின் கண்களிலிருந்து கண்ணீர்ப் பூக்கள் சொரிந்தன. அந்தக் அட்டையிலிருந்த கவிதைதான் மேலே உள்ளது.

தமிழர்கள் எந்தக் காலத்திலும் காதலை எதிர்த்ததில்லை. ஆண்டாண்டு காலமாய்க் காதலுக்கு மரியாதை தந்த இனம் தமிழினம். கடைக்கண் பார்வையால் வீசிப்பிடிக்கும் காதலுக்கு இலக்கணம் வகுத்த இனம் தமிழினம். காதலர்கள் ஒரே காதலில் நின்று அடுத்தக் கட்டமான கற்பு என்னும் திருமணத்தில் இணைய, போதிய வழிகளையும் சொல்லித் தந்த இனம் தமிழினம். காட்சி, ஐயம், குறிப்பறிதல், ஊடல், கூடல், என்று தொடங்கி, காதலனுடன் போவதற்குக் கூட ‘உடன் போக்கு’ என்று அழகான இலக்கணத்தைச் சொல்லவில்லையா தொல்காப்பியர். அந்த இனம் இன்று இந்த அந்நிய சடங்கினை ஏற்று நம் பெருமையைக் குலைத்து வருகிறது. இன்று பிரச்சனை வந்த பிறகு காதலை வாழ வைத்த வாலைண்டைனைத் தெரிந்த அளவு, வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவு, களவுக்கும் கற்புக்கும் இலக்கணம் தந்த தொல்காப்பியரைக் காதலர்களுக்குத் தெரிய வில்லை.

“பாலொடு தேன்கலந்தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்”

முத்தச் சுவையை இதைவிட அழகாக எவரால் சொல்ல முடியும். இனிய சொற்களைப் பேசுகின்ற என் காதலியாகிய இவளின் வாயில் இருந்து ஊறிய நீர் பாலும் தேனும் கலந்த சுவை என்று கூறவில்லையா திருவள்ளுவர்? இனிக்க இனிக்கக் காதலுக்கு அழகிய இலக்கணம் வகுத்துக் கொடுத்தவர்கள் தொல்காப்பியரும் திருவள்ளுவரும் என்பது இன்றைய காதலர்களில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கிறது.

இளையவர்களின் இன்ப நாளான காதலர் தினத்தை ஏன் இப்படி குறை கூறுகிறீர்கள் என்று பலர் கேட்பது புரிகிறது. இன்றைய காதலர்கள் என்ன அம்பிகாபதி-அமராவதி, லைலா மஜ்னு போல அமரத்துவமாக, ஆழமாக காதல் செய்கின்றனரா? காதல் என்பது ஒரு ஃபாஷன் ஆகிவிட்டது. கேட்டால் காதல் என்பது காய்ச்சல்போல... ஆண்டுக்கொருமுறை வரும் ஆனால் ஆறு மாதத்தில் போய்விடும் என்கின்றனர் இன்றைய தலைமுறையினர். இந்த காய்ச்சல் வரவில்லை என்றால் அவர்கள் சராசரி இளைஞர்களே இல்லை என்ற எண்ணமும் வந்து விட்டது. ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் முதல் அவனுக்கு ஒரு காதலி இல்லை என்றால் அது அவனுக்குப் பெருத்த அவமானம். அவனைச் சக மாணவர்கள் மதிப்பதில்லை.

இப்படிப்பட்ட சீறழிவுகளுக்கெல்லாம் யார் சாலை அமைத்துக் கொடுக்கிறார்கள்? வேறு யார்.. வியாபாரிகள். இதெல்லாம் வியாபார நுணுக்கம்.. ஆம் ரோஜாப்பூக்களில் தொடங்கி, பரிசுப் பொருள்கள் என்று நீண்டு இன்று நட்சத்திர விடுதிகள் வரை காதலர் தின ஸ்பெஷல் என்று எதையாவது அறிவித்து லாபத்தைக் கொழித்துக்கொண்டு இருக்கின்றன. வாழ்த்து அட்டைகள் வியாபாரம் அமோகமாக இருக்கிறது அன்று. ஹால்மார்க் நிறுவனம் மட்டுமே சுமார் 200 மில்லியன் வாழ்த்து அட்டைகளைத் தயாரிக்கின்றனவாம்.

இன்றைய பெரும்பான்மையான காதலர்கள் குழந்தைகள்தான். கால் பகுதியில் கிழிந்து போன பேண்டைப் போட்டுக்கொண்டு அதை டான் செய்ய இருபது ரூபாய் செலவு செய்ய முடியாத மாணவர்கள் (காதலர்கள்) வாழ்த்து அட்டைகளை 50 ரூபாய் 100 ரூபாய் கொடுத்து வாங்கி தன் காதலியான மாணவிக்கு கொடுக்கின்றனர்.

அன்றைய தினம் கொடிகட்டிப் பறக்கும் வியாபாரம் ரோஜாப்பூக்களின் வியாபாரம். இதைக் கொடுப்பதில் ஏழை பணக்காரர்கள் என்ற வேறுபாடு இருப்பதில்லை.

இவை தவிர பரிசுப்பொருள்கள் வியாபாரம். கண்ணாடியால் ஆன இதயம், இதயத்தைக் குத்திக்கிழித்துக்கொண்டு போகும் அம்பு, என்று எல்லாம் இதயத்தையே குறிவைக்கும். வாழ்த்து அட்டையில் இதயம், கேக்கில் இதயம் என்று தொடங்கி இன்று காதலர் தினத்தன்று ஹோட்டலில் இட்லியிலும் தோசையிலும்கூட இடம்பிடித்து விட்டது இதயம். காதல் தோல்வி ஏற்பட்டு உடையப்போவது இளைஞர்களின் இதயம் என்பதை குறிப்பாகச் சுட்டிக் காட்டும் உத்தியுடன் ஆக்கப்பட்ட பரிசுப்பொருள்களின் அணிவகுப்பாகவே இவற்றைப் பார்க்க முடிகிறது.
பிப்ரவரி மாதத்தில் விடுதிகள் (ரெஸ்டாரண்ட்கள்) நிரம்பி வழிகின்றன. அலுவலக வேலை, பிற வேலைகள் என்று அவசரமாக எந்த ஊர் சென்றாலும் தங்குவதற்கு அறைகள் கிடைப்பதில்லை.

அன்று காவலர்களுக்கும் மகிழ்ச்சிதான். சில்லரை வாங்கும் காவலர்களுக்கு நல்ல வருமானம். வாங்காதர்கள், அப்படியும் இருக்கிறார்களா என்று புருவம் விரிவதை உணர முடிகிறது. அப்படியும் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நான்கு காதல் இணையர்களை அத்து மீறி பொது இடத்தில் நடந்து கொண்டனர் என்று உள்ளே தூக்கிப் போட்டு சாதனை செய்ததாய் காட்டிக் கொள்ளும் மகிழ்ச்சி.

பூங்காக்கள், சினிமா அரங்கங்கள், கடற்கரை தோறும் முகத்தோடு முகம் வைத்து, ரஜினி பாணியிலும் கமல் பாணியிலும் முத்தம் கொடுப்பவர்கள், முகம் காட்டி, முகம்காட்டாமல் முதுகு மட்டும் காட்டி, வெட்கியும், வெட்கமற்றும் காதலர்களின் சூடான வண்ணப்படங்கள் நிரம்பிய நாளிதழ்கள். வியாபார தந்திரத்தில் அவைகள் மட்டும் என்ன குறைந்தா போய்விடும்.

காட்சி ஊடகமான தொலைக்காட்சிகள், காதலர்கள் தினம் தேவையா? தேவையில்லையா? என்று நிகழ்ச்சி தயாரித்து விடும்.
கேட்கிறார்களோ கேட்கவில்லையோ நாங்கள் ஊதும் சங்கை ஊதியே தீருவோம் என்று சில அமைப்புகளின் எதிர்ப்புக் குரல்கள்.
இத்தனையும் மீறி காதல் தேவைதானா என்றால் தேவைதான். ஏனென்றால் காதல் மட்டுமே இன்றைய சாதி மத வேறுபாட்டைக் களையும். மணக்கொடையை அகற்றும். சமத்துவத்தை உருவாக்கும். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் காதல் எப்போது தேவை என்பதில்தான் சிக்கல் இருக்கிறது.

வயிற்றுப் பிரச்சனை நிறைவேறி வளமான வாழ்வுக்கு அடித்தளமிட்ட பின்பு காதல் தேவைதான். அப்படி என்றால் எப்போது காதலிக்கலாம். பள்ளிப்பருவம், கல்லூரிப்பருவம் முடித்து ஒரு அலுவலில் அமர்ந்து காதலிக்குச் சொந்தப் பணத்தில் ஒரு பரிசுப்பொருள் வாங்கித்தரும் அளவில் வாழ்க்கைத்தரம் உயர்ந்தபின்பு காதலித்தால் அந்தக் காதல் வெற்றிபெறும் அதை விடுத்து “ஏய் மச்சி ஏப்படியாவது ஒரு 200 ரூபாய் ஏற்பாடு பண்ணித்தாடா. காதலர் தினத்துக்கு என் ஆளுக்கு ஏதாவது வாங்கித் தரனும்டா“என்று கேட்கின்ற நிலைமையில் காதல் தேவையா என்று சிந்திக்க வேண்டியது இன்றைய காதல் செய்யும் இளைய தலைமுறையின் முறையான, முக்கியமான, முதன்மையான கடமை. சிந்தியுங்கள் காதலர்களே!!


நன்றி தினமலர்
09.02.14


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Feb 25, 2014 10:47 pm

கட்டுரையை அப்படியே பதியுங்கள் அக்கா.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Feb 25, 2014 11:02 pm

M.M.SENTHIL wrote:கட்டுரையை அப்படியே பதியுங்கள் அக்கா.
அது பழைய கட்டுரைதான் செந்தில். அதனால்தான் பதிவு செய்யவில்லை.



தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Aதினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Aதினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Tதினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Hதினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Iதினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Rதினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Aதினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Empty
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Feb 25, 2014 11:03 pm

கட்டுரையை பகிரவும். சிறப்பாக இருக்கும். தாங்கள் நலம் தானே? நீண்டநாளுக்கு பின் ஈகரை வழி தொடர்கிறேன். சூழல் அப்படி.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Feb 25, 2014 11:07 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:கட்டுரையை பகிரவும். சிறப்பாக இருக்கும். தாங்கள் நலம் தானே? நீண்டநாளுக்கு பின் ஈகரை வழி தொடர்கிறேன். சூழல் அப்படி.
நலம் கா.ந. சார். நீங்களும் உங்கள் குடும்பமும் நலமா?
பதிவு செய்து விட்டேன்.



தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Aதினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Aதினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Tதினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Hதினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Iதினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Rதினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Aதினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா Empty
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Feb 25, 2014 11:30 pm

வெகு சிறப்பாக உள்ளது. தமிழர் காதலின் தொன்மைக்கு, மேன்மைக்கு தாங்கள் கூறிய தொல்காப்பியம் வள்ளுவம் சிறப்பான நூல்களாகும். நன்றி தங்களுக்கு.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 26, 2014 12:50 am

உரத்த சிந்தனை உறைப்பவர்க்கு உரைக்கும் என்று நம்புவோம்.

இந்த காதல் காதல்ன்னு சொல்றாகளே அப்படீன்னா என்னங்க?




SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Feb 26, 2014 10:06 am

.

பல தவறான காதல்களினால் தான் இன்று காதலையே அடியோடு வெறுக்கும் சூழ்நிலையும் வந்து விட்டது .. என்னைப் பொறுத்தவரையில் இந்த சமூகத்தில் ஒரு நல்ல காதலையும் நான் காணவில்லை ..மாறாக பல மேலை நாடுகளில் இன்றும் உண்மைகாததல் தினம் தினம் துளிர் விட்டுக் கொண்டுதான் இருக்கிறது



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Feb 26, 2014 10:08 am

.


.

சமீபத்தில் எனது நண்பன் ZRAVER இன் கல்லூரியில் நடந்த காதலர் தின நிகழ்ச்சி





......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 26, 2014 4:06 pm

வயிற்றுப் பிரச்சனை நிறைவேறி வளமான வாழ்வுக்கு அடித்தளமிட்ட பின்பு காதல் தேவைதான். அப்படி என்றால் எப்போது காதலிக்கலாம். பள்ளிப்பருவம், கல்லூரிப்பருவம் முடித்து ஒரு அலுவலில் அமர்ந்து காதலிக்குச் சொந்தப் பணத்தில் ஒரு பரிசுப்பொருள் வாங்கித்தரும் அளவில் வாழ்க்கைத்தரம் உயர்ந்தபின்பு காதலித்தால் அந்தக் காதல் வெற்றிபெறும் அதை விடுத்து “ஏய் மச்சி ஏப்படியாவது ஒரு 200 ரூபாய் ஏற்பாடு பண்ணித்தாடா. காதலர் தினத்துக்கு என் ஆளுக்கு ஏதாவது வாங்கித் தரனும்டா“என்று கேட்கின்ற நிலைமையில் காதல் தேவையா என்று சிந்திக்க வேண்டியது இன்றைய காதல் செய்யும் இளைய தலைமுறையின் முறையான, முக்கியமான, முதன்மையான கடமை. சிந்தியுங்கள் காதலர்களே!! wrote:

அருமையான சிந்தனை அக்கா. பகிர்வுக்கு நன்றி

காதலிப்பவர்கள் சிந்திக்க வேண்டும்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக