புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10 
53 Posts - 59%
ayyasamy ram
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10 
2 Posts - 2%
prajai
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10 
2 Posts - 2%
natayanan@gmail.com
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10 
1 Post - 1%
Rutu
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10 
231 Posts - 22%
sugumaran
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10 
18 Posts - 2%
prajai
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10 
8 Posts - 1%
Rutu
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்


   
   

Page 6 of 15 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 15  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 11:21 pm

First topic message reminder :

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Gr0jENBiR6aUXea2MTWR+parlimentelection2014

 பாராளுமன்றத்திற்கு 6 கட்டமாக தேர்தல் அட்டவணை 3-ந்தேதி வெளியாகலாம்?

தற்போதைய பாராளுமன்றதின் பதவிக் காலம் வரும் மே மாதம் 31-ந்தேதியுடன் முடி கிறது.

இதையடுத்து பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்து வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.

தேர்தல் அட்ட வணையை வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.  பாராளுமன்ற தேர்தல் 6 கட்டங்களாக நடத்தப்படும் என தெரிகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் தேர்தல் தேதி அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

இதற்கிடையே வரும் 3-ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியாகலாம் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 30, 2014 10:04 pm

இந்தியாவின் நடவடிக்கையால் அதிர்ச்சி-வாசன்

சென்னை: சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நடந்த காங்கிரஸ் பிரசார சிடி வெளியீட்டு விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன், 'இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியா அமெரிக்கா தீர்மானத்தை இந்தியா ஆதரித்து இருக்க வேண்டும்,' என்றார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 31, 2014 12:17 am

தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சி புரிந்த கடந்த 10 ஆண்டுகளாக எவ்வித மின்திட்டங்களும் வரவில்லை; ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

துயரத்தில் தள்ளும் மின்வெட்டு

‘‘நான் மின்சார பிரச்சினையை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். மின்சாரத்தைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். விரைவில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழும். சில இடங்களில் மின் உற்பத்தி பிரச்சினையால், ஓரிரு நாட்கள் தமிழகத்தில் சில மணி நேரம் மின்வெட்டு இருந்தது. அந்த மின்வெட்டும் விரைந்து சரிசெய்யப்பட்டுள்ளது’’ என முதல்–அமைச்சர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரத்தில் கூறி உள்ளார்.

தமிழகத்தில் கோடை வெயில் தனது உக்கிரத்தை காட்டத்தொடங்கி உள்ள வேளையில், மக்களை மேலும் துயரத்தில் மின்வெட்டு தள்ளிவரும் நிலையில், கவலைப்படாதீர்கள் என்று ஆறுதல் வார்த்தைகளை சொல்லி வருகிறார் முதல்–அமைச்சர் ஜெயலலிதா.

தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

நான் மார்ச் 28 மற்றும் 30–ந் தேதிகளில் கோவை தொகுதிக்கு தேர்தல் வேலையாக சென்றிருந்தேன். அங்கு சுமார் நான்கு மணி நேரம் மின்வெட்டு இருந்தது. இந்த மின்வெட்டு சிறு, குறு தொழில்களைக் கூடுதலாக பாதிக்கிறது. கோவை மாநகரத்தில் மட்டுமல்ல, சென்னையைத் தவிர மாநிலம் முழுவதும் இதே நிலைமைதான்.

திருப்பூர், இந்தியாவிற்கு அதிகமான அளவில் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பகுதியாகும். மின்வெட்டால் அங்கும் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்படி உற்பத்தி பாதிப்பதால், தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

மாணவர்களும் பாதிப்பு

மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற்று வருகிறது. மின்வெட்டு அவர்களையும் பாதிக்கிறது. பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம் என்று எப்படி எதிர்பார்க்கிறார் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா?

2001–ம் ஆண்டு முதல் 2011–ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு காலங்களில், குறிப்பிட்டு சொல்லும்படியாக எந்த வித மின்திட்டங்களும் நடைமுறைக்கு வரவில்லை. இந்த பத்தாண்டு காலத்தில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தலா ஐந்தாண்டுகள் ஆட்சியில் அமர்ந்திருந்தன.

ஒருவருக்கொருவர் சளைக்கவில்லை

தற்போது ஒருவரையொருவர் மாறி, மாறி குற்றம் சாட்டிக்கொண்டு இருவருமே தப்பித்துக்கொள்ளும் வழியைத் தேடுகிறார்கள். ஆனால் இல்லாத மின்சாரத்திற்கு மின்கட்டணத்தை ஏற்றுவதில் மட்டும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் இருந்தனர்.

தி.மு.க. தனது ஆட்சியின்போது ஆண்டுதோறும் மின்கட்டணத்தை உயர்த்தியது. 2009–10ம் ஆண்டில் 954 கோடி ரூபாய்க்கு மின்கட்டணம் உயர்ந்தது. மின்வெட்டு இல்லாத மாநிலம் ஆக்குவோம் என்று ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., 2011–ம் ஆண்டில் 42 சதவிகிதம் அளவுக்கு மின்கட்டணத்தை உயர்த்தியது. மின்வாரியத்தின் வருமானமும் 35 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்தது.

பொருளாதார கொள்கைகளும் காரணம்

தனியார் நிறுவனங்களிடம் ஒரு யூனிட் மின்சாரத்தை 12 ரூபாய் கொடுத்து வாங்குவது பற்றி ஆட்சியாளர்கள் வாய் திறக்கவில்லை. மின்வாரியத்திற்கு நட்டம் என்றால், இந்த பணம் எந்த கல்லாவிற்கு செல்கிறது?

2011–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு கிடைத்த தோல்விக்கு மின்வெட்டு ஒரு முக்கியமான காரணமாகும். தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றுவோம் என்று வாக்குறுதி அளித்த அ.தி.மு.க. அரசு தற்போது மக்களைப் பார்த்து கவலைப்பட வேண்டாம் என்று கூறி வருகிறது.

தமிழக திராவிட கட்சிகள், இந்த அவல நிலைக்கு காரணம் என்பதோடு, மத்திய ஆட்சியாளர்களின் பங்கையும் குறைத்து மதிப்பிட முடியாது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய இரண்டு கட்சிகளும் கடைப்பிடிக்கும் பொருளாதார கொள்கைகளும் மின்னுற்பத்தியை கடுமையாக பாதித்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 31, 2014 12:18 am

 பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ‘40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற தேர்தல் பணி ஆற்றுங்கள்’ தொண்டர்களுக்கு ஜெயலலிதா கடிதம்

40 தொகுதிகளிலும் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற தேர்தல் பணி ஆற்றுங்கள் என்று தொண்டர்களுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா, தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:–

பாராளுமன்ற தேர்தல்

வருகின்ற 24–4–2014 அன்று நடைபெற உள்ள பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு, உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கழக உடன்பிறப்புகளையும், வாக்காளப் பெருமக்களையும் சந்தித்து உரையாற்றி வரும் எனது இடையறாத பணிகளுக்கு இடையே, இந்த மடல் வழியாக ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரிடமும் என் உள்ளத்து உணர்வுகளை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நம் இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 1972–ம் ஆண்டு அ.தி.மு.க.வை தொடங்கிய நாளில் இருந்து இந்த இயக்கம் எத்தனையோ பாராளுமன்றத் தேர்தல்களை சந்தித்திருக்கிறது. நம் இயக்கத்தின் வரலாற்றில் முதல் முறையாக 40 பாராளுமன்றத் தொகுதிகளிலும் கழகமே போட்டியிடும் வாய்ப்பினை இந்தத்தேர்தலில் தான் நாம் பெற்றிருக்கிறோம். எனவே, நமக்கு இந்தத்தேர்தல் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல்.

மக்கள் பணி

இப்போது லட்சக்கணக்கான கழக உடன்பிறப்புகள் உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் பதவிகளில் மக்கள் பணியாற்றி வருகின்றனர். கழகத்தின் எளிய தொண்டர்கள் இப்படி மக்கள் தொண்டாற்றும் உயர் பதவிகளை வகிக்கின்றனர் என்ற பெருமையையும், மகிழ்ச்சியையும் கழகம் பெற்றுள்ளது போல், பாராளுமன்ற மக்களவையிலும் இது நாள் வரை இருந்திடாத அளவு கழகத்தின் சார்பில் 40 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர் என்ற தேனினும் இனிய செய்தி எட்டுத்திக்கும் எதிரொலிக்கும் வண்ணம் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் தங்கள் கடமையைச் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஆலமரம் போல் தழைத்து வளர்ந்திருக்கும் நம் கழகத்தின் ஆணிவேர், கிளைக்கழக அமைப்புகளும், தன்னலம் கருதாது உழைக்கின்ற என் உயிரினும் மேலான எனதருமைக்கழக உடன்பிறப்புகளும் தான் என்பதை நான் எண்ணி எண்ணி மகிழ்கிறேன்.

இந்திய ரூபாய் மதிப்பு சரிவு

தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலும், தமிழர்களின் பெருமைகளை சீர்குலைக்கும் வண்ணமும், கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்ற அரசு, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. இந்த காங்கிரஸ் கட்சியுடன் 9 ஆண்டு காலம் ஒட்டி உறவாடிய கட்சி தி.மு.க. 2004–ல் இருந்து மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கூட்டணி அரசு நம் நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலுமாக சீர்குலைத்துவிட்டது. இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துவிட்டது. அனைத்துத் துறைகளிலும் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது.

இவற்றின் காரணமாக, காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை, குஜராத்தில் இருந்து அசாம் வரை விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இந்திய நாட்டை காப்பாற்றவும், இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்கவும், நடைபெற உள்ள பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் ஒரு கருவியாக நமக்கு வாய்த்திருக்கிறது. இந்தச் செய்தியை தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் கொண்டு செல்லுமாறு கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தெருமுனை கூட்டங்கள்

தமிழக வாக்காளப் பெருமக்களை நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் சந்திக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளரிடமும் கழக அரசின் சாதனைகளை; முன்னோடித்திட்டங்களை; வளர்ச்சித்திட்டங்களை; தொலைநோக்குத் திட்டங்களை எடுத்துக்கூற வேண்டும்.

வஞ்சக நெஞ்சத்தோடு காங்கிரசும், தன் குடும்ப சுயநலத்திற்காக தி.மு.க.வும் தமிழர்களுக்கு எதிராக இழைத்திட்ட பல்வேறு அநீதிகளையும், கொடுமைகளையும் வாக்காளர்கள் ஒவ்வொருவரும் உணரும் வகையில் திண்ணைப் பிரச்சாரங்கள், தெருமுனைக்கூட்டங்கள் போன்றவற்றோடு நேரடி சந்திப்புகள் வழியாகவும் நீங்கள் விளக்கிச் சொல்ல வேண்டும். நவீன தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி, இளம் வாக்காளர்களை கவரவேண்டும். மொத்தத்தில், கழக உறுப்பினர் ஒவ்வொருவரும் ஒரு பிரச்சார பீரங்கியாக மாற வேண்டும்.

அரசியல் தொண்டு

வழக்கமான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவதை போல, இந்த நேரடித்தொடர்பு பிரச்சாரமும் மும்முரமாக நடைபெற்றிட வேண்டும். அந்த அளவிற்கு நடமாடும் சுவரொட்டிகளாக, முழக்கம் எழுதப்பட்ட பதாகைகளாக, விளக்கம் கூறும் கையேடுகளாக மாறி, கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் தேர்தல் முடிவடையும் வரை விழிப்புடன் களப்பணியாற்றிட வேண்டும் என்று, என் உயிரினும் மேலான எனதருமைக்கழக உடன்பிறப்புகளை மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

என்னைப் பொறுத்தமட்டில் பொதுவாழ்வும், அரசியல் தொண்டும் ஒரு பிரார்த்தனை. விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லாத தவம். பலகோடி மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அமைதியையும் ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் சுய அர்ப்பணிப்பு. எனதருமைக்கழக உடன்பிறப்புகள் அனைவரும் என் இதயத்தின் இந்த உணர்வுகளை புரிந்து கொண்டு தேர்தல் பணியாற்றிட வேண்டும் என்பது எனது ஆவல்.

எம்.ஜி.ஆர். கண்ட கனவு

உங்கள் அன்புச் சகோதரியான என்னுடைய இந்த அவாவினை மனத்தில் இறுத்தி நீங்கள் அனைவரும் பணியாற்றுவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ‘‘நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே, இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே“ என்பது, நம் இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட கனவு. எனவே, 40 பாராளுமன்ற மக்களவைத் தொகுதிகளிலும் கழகத்தின் வேட்பாளராக, உங்கள் அன்புச் சகோதரியாகிய நானே போட்டியிடுவதாக நீங்கள் ஒவ்வொருவரும் நினைத்து தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும்.

40 தொகுதியிலும் வெற்றி

கழக வேட்பாளர்கள் அனைவரது வெற்றியிலும் நம் ஒவ்வொருவருக்கும் பங்கும் உண்டு; நாம் ஆற்ற வேண்டிய கடமையும் உண்டு. கழகத்தின் ஆரம்ப கால உறுப்பினர்கள் முதல் அண்மையில் இணைந்த உடன்பிறப்புகள் வரை, அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி 40 பாராளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறும் வண்ணம், நீங்கள் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று அன்புக் கட்டளையிடுகிறேன்.

‘40 மக்களவைத் தொகுதிகளிலும் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்’ என்ற மகத்தான செய்தி வரும் வரை கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் அயராது பணியாற்றி, இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் புகழுக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தனது கடிதத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 31, 2014 12:29 am

பாடகி அனிதா குப்புசாமி அதிமுக வேட்பாளர் பிஆர். செந்தில்நாதனை ஆதரித்து பிரசாரம்

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 1507604_648681478538286_1699055013_n

சிவகங்கை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பிஆர். செந்தில்நாதனை ஆதரித்து பாடகி அனிதா குப்புசாமி சனிக்கிழமை வாக்குகள் சேகரித்துப் பிரசாரம் செய்தார்.

சிவகங்கை ஒன்றியத்தில் சக்கந்தி, முத்துப்பட்டி, பனையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங் களிலும், சிவகங்கை நகர் பகுதியிலும் அனிதா குப்புசாமி அதிமுகவுக்கு வாக்குகள் கேட்டுப் பிரசாரம் செய்தார். வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதன், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், நகரச் செயலர் எம். ஆனந்தன், சிவகங்கை நகர் மன்ற துணைத்தலைவர் சேகர், மகளிரணி நிர்வாகிகள் உள்பட பலர் உடன் சென்றிருந்தனர்.

பின்னர் சிவகங்கையில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திறந்துவைத்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 31, 2014 4:52 pm

 தரக்குறைவாக பேசிய பறக்கும்படை போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி வைகோ சாலைமறியல்

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 6 Vaikoroadrack1284-132481


விருதுநகர்  அருகே உள்ள பெரிய வெள்ளிக்குளத்தில் பறக்கும் படையை சேர்ந்த போலீசார் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விருதுநகர் தொகுதியில் போட்டி யிடும் வைகோ, அருப்புக் கோட்டைக்கு பிரசாரம் செய்ய வாகனத்தில் சென்றார். அவருடன் தொண்டர் களும் சென்றனர்.அங்கு நின்ற போலீசார்  வாகனத்தை சோதனை செய்ய வேண்டும் என்று கூறினர்.
மோதல்

இதையட்டி ம.தி.மு.க. தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.  அப்போது போலீசார் தரக் குறைவாக பேசியதாக ம.தி.மு.க.வினர் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த வைகோ பிரசார வேனில் இருந்து கீழே இறங்கி அருப்புக்கோட்டை ரோட்டில் மறியல் போராட் டம் நடத்தினார். அவருடன் ம.தி.மு.க. தொண்டர்களும் மறியலில் ஈடுபட்டனர்.

தரக்குறைவாக போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி  அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடு பட்டனர்.

தகவல் அறிந்ததும் சூலக்கரை இன்ஸ் பெக்டர் அன்புராஜன், ஆர்.டி.ஓ. உதயகுமார் ஆகியோர் விரைந்து சென்று வைகோ வுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 40 நிமிட நேரம் மறியல் போராட்டம் நடந்தது.

அதன் பின்பு வைகோ அங்கிருந்து பிரசாரம் செய்ய அருப்புக்கோட்டை சென்று விட்டார். ஆனால் ம.தி.மு.க. தொண்டர்கள் சாலையோரம் நின்று கொண்டு போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தினார்கள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 31, 2014 4:56 pm

சிவா wrote: தரக்குறைவாக பேசிய பறக்கும்படை போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி வைகோ சாலைமறியல்.
இப்படி ஏதாவது பண்ணினால் தான் நம்மை மக்கள் ஞாபகம் வைதிருப்பார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 01, 2014 12:49 am

சிதம்பரம் பாமக புதிய வேட்பாளரால் அதிமுக, வி.சி. அதிர்ச்சி

சிதம்பரம் தொகுதியில் பாமக வேட்பாளராக மணிரத்னம் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அதிமுக-வும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

காங்கிரஸ் கட்சியில் தனக்கு சீட் கிடைக்காததாலும் தனக்குள்ள அச்சுறுத்தல்களை சமாளிக்கும் விதமாகவும் தொழிலதிபர் மணிரத்தினம் சனிக்கிழமை பாமக-வில் சேர்ந்தார்.

பாமக-வும் அவரை சிதம்பரம் தொகுதியில் நிறுத்த முடிவு செய்துள்ளது. சிதம்பரம் தொகுதியில் அதிமுக-வினரும் விடுதலைச் சிறுத்தைகளும் மட்டுமே தேர்தல் வேலைகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

காங்கிரஸ் வேட்பாளர் வள்ளல் பெருமானும் பாமக-வினரும் சுணக்கமாகவே உள்ளனர். இந்நிலையில் மணிரத்தினத்தின் வரவு அதிமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

திருமாவளவனை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சிதம்பரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளராக நியமித்தது அதிமுக. அவரும் சிதம்பரத்தில் வீடு எடுத்துத் தங்கி தேர்தல் பணிகளை கவனித்து வருகிறார். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஏகப்பட்ட சிக்கல்கள் இருப்ப தால் காங்கிரஸ் வேட்பாளர் வள்ளல்பெருமானை அதிமுக- வும் விடுதலைச் சிறுத்தைகளும் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

வெள்ளிக்கிழமை வரை இங்கு இவ்விரு கட்சிகளுக்கும் இடையில் தான் போட்டி என்ற நிலையே இருந்தது. ஆனால், மணிரத்தினம் பாமக-வில் இணைந்ததும் நிலைமை மாறிவிட்டது.

அதிமுக-வின் பண பலத்தை யும் சிறுத்தைகளின் சமுதாய பலத்தையும் சமாளிக்க முடியாமல் சுருண்டு கிடந்த பாமக வட்டாராம் இப்போது சுறுசுறுப்பாய் களத்துக்கு வந்திருக்கிறது. மணிரத்தினம் வரவால் தலித் ஓட்டுகள் யாருக்கு என்பதில் மாற்றம் ஏற்படும் எனத் தெரிகிறது.

வன்னியர் வாக்கு வங்கியை குறிவைத்து காடுவெட்டி குருவும் மணிரத்தினத்துக்காக களத்தில் இறங்குவார். செங் கோட்டையனின் தேர்தல் வியூகங் களை சமாளிக்கவும் திருமாவள வனை வீழ்த்தவும் மணிரத்தினத்தை பாமக களத்தில் இறக்கியிருப்பதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 01, 2014 10:51 pm

டாஸ்மாக் அம்மாவிடம் இருந்து விடுபடுங்கள்: பிரேமலதா விஜயகாந்த்

டாஸ்மாக் அம்மாவிடமிருந்து விடுபடவேண்டும் என விஜயகாந்த் மனைவி பிரேமலதா தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

விழுப்புரம் அருகே கெடார் கிராமத்தில் விழுப்புரம் (தனி) தொகுதி வேட்பாளர் உமாசங்கரை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை இரவு விஜயகாந்த் மனைவி பிரேமலதா பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது:

நாளைய இந்தியாவைத் தீர்மானிக்கும் சக்தி இளை ஞர்களாகிய உங்களிடம் உள்ளது. பெரும் ஊழலில் உள்ள திமுக, அதிமுகவை அகற்றும் வலிமை உங்களிடம்தான் உள்ளது. உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத் தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பார்கள்.

ஏற்கனவே விவசாயம் செய்ய முடியாத நிலையில் இருக்கும் இம்மாவட்ட விவசாயிகளுக்கு தானே புயலினால் பாதிப்பு ஏற் பட்டது.

இக்கூட்டணி விவசாயிகளின் கூட்டணி. எல்லா மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பை உருவாக்கும் கூட்டணி. கடந்த 3 ஆண்டுகளாக எந்தத் திட்டத்தையும் ஜெயலலிதா நிறைவேற்றவில்லை. அவரது ஒரே சாதனை டாஸ்மாக் விற் பனையை உயர்த்தியதுதான். டாஸ் மாக்கில் குடித்துவிட்டு அம்மா உணவகத்தில் சாப்பிடுகிறார்கள். அதிலும் தரமான உணவு இல்லை என்றார்.

அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் குடிபோதையில் பேசிய தாகக் கூறப்படுகிறது. இதைக் கேட்ட பிரேமலதா,”திருவிழாவில் ஆத்தா இறங்கிவிட்டாள் என்பார் கள். அதுபோல இப்போது உங்களிடம் டாஸ்மாக் அம்மா இறங்கிவிட்டார்.

இந்த அம்மாவிடம்இருந்து விடுபடுங்கள். அப்போதுதான் உங்களை உங்கள் உற்றார், உறவினர், சகோதரர்கள் மதிப் பார்கள். மனவேதனையுடன் சொல்கிறேன். நீங்கள் முதலில் இதிலிருந்து விடுபடுங்கள்” என்று பிரேமலதா பேசினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 01, 2014 10:52 pm

ஆம் ஆத்மி சுவரொட்டிகளில் மோடி படம்: தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்

ஆம் ஆத்மி சுவரொட்டிகளில் மோடி படம் இடம்பெற்றுள்ளதற்கு எதிராக, டெல்லி தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் படத்தை ஆம் ஆத்மி கட்சியின் சுவரொட்டிகளில் பயன்படுத்திய காரணத்திற்காக அக்கட்சியின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சஞ்சய் கவுல் தெரிவித்தார்.

மேலும், ஆட்டோக்களில் மோடியின் படத்தை ஆம் ஆத்மி கட்சி ஒட்டியுள்ளதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் டெல்லி போலீஸில் பாஜக புகார் அளித்துள்ளது.

"அந்தப் படங்கள் அவதூறாகவும், ரசனையற்றதாகவும் உள்ளன. வாக்காளர்களுக்கு எந்த வகையிலும் விழிப்புணர்வூட்டும் வகையில் அவை இல்லை.

எங்கள் கட்சியையும், அதன் தலைவரையும் விமர்சிப்பதால் இது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயல்" என்று அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ரேடியோ விளம்பரங்கள் மூலம் தவறான தகவல்களை பரப்புவதாக அரவிந்த் கேஜ்ரிவால் மீது பாஜகவின் சட்டப் பிரிவு, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

இது குறித்து பாஜக சட்டப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அனில் சோனி கூறும்போது, "ஜன்லோக்பால் சட்டம் டெல்லி சட்டசபையில் தாக்கல் செய்யப்படாத போது அதை நிறைவேற்றியதாக தகவலைப் பரப்புகிறார்கள். மேலும் ஆம் ஆத்மி கட்சியினர் நம்பிக்கை தீர்மானத்தை எடுத்து வராமல் தாமாகவே ஆட்சியிலிருந்து ராஜினாமாவும் செய்தனர்.

லோக்பாலின் நிலையை டெல்லியின் துணை நிலை ஆளுநர் ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டார். ஆம் ஆத்மி முதல்வரும் ஒருமனதாக ராஜினாமா செய்ய முடிவெடுத்ததைப் பற்றி எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லை. யாரிடமிருந்தும் கேஜ்ரிவாலுக்கு நெருக்கடி ஏற்படவில்லை. அவராகவே முடிவெடுத்துதான் தேசிய அரசியலிலும் களமிறங்கியுள்ளார்" என்றார் அனில் சோனி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 01, 2014 11:02 pm

காங்கிரஸ் 365 நாள்களும் முட்டாள்கள் தினத்தைக் கொண்டாடுகிறது: மோடி


தேர்தல் நேரத்தில், ஓட்டுக்காக ஏழை மக்களிடையே சென்று ஏழ்மைப் பாட்டு பாடுவதாக காங்கிரஸ் கட்சியை பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கடுமையாக சாடினார்.

மேலும், காங்கிரஸ் 365 நாளும் முட்டாள்கள் தினத்தை கொண்டாடுகிறது என்பது மக்களுக்குத் தெரியும் என்று அவர் குறிப்பிட்டார்.

உத்திரப் பிரதேசம் மாநிலம் பரேலியில், குஜராத் முதல்வரும், பா.ஜ.க பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி இன்று பிரச்சாரம் மேற்கொண்டபோது பேசியது:

"பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதுபோல, காங்கிரஸ் தேர்தல் நேரத்தில் 'ஏழை', 'ஏழை', 'ஏழை' என்ற மந்திரத்தைப் பாடுகிறது. அனால், ஏழை மக்கள் உணர்ந்துவிட்டனர். காங்கிரஸ் 365 நாளும் முட்டாள்கள் தினத்தை கொண்டாடுகிறது என்று அவர்களுக்கு தெரியும்.

ராகுல் ஏழைகளின் மீது அக்கறை உள்ளது போல பாவனை செய்து வருவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். செல்வந்தராக பிறந்த ராகுலுக்கு ஏழை என்றால் தெரியுமா அல்லது வறுமை என்றால் புரியுமா?

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது நாட்டில் ராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் புறக்கணிக்கப்பட்டனர். விவசாயிகள் தற்கொலைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம். ஏழை மக்களுக்கு சென்றடைய வேண்டிய தானியங்களை கிடங்குகளில் அடைத்து வைத்து பாழாக்கச் செய்தது காங்கிரஸ் அரசு. உச்ச நீதிமன்றம் அந்த தானியங்களை ஏழைகளுக்கு விநியோகிக்கும்படி கேட்டப்போது காங்கிரஸ் அரசு அதனை செய்யவில்லை.

காங்கிரஸ் கட்சி 2009 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறியது. ஆனால், அவர்கள் அதனை செய்யவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது விவசாயிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது" என்றார் மோடி.

பிரச்சாரத்தின் இறுதியில் மக்களிடம் மன்னிப்புக் கோரிய மோடி, "நான் டெல்லி விமான நிலையத்திலிருந்து 9.30 மணிக்கு கிளம்ப முற்பட்டபோது எனது ஹெலிகாப்டர் பறக்க அதிகாரிகள் தடை விதித்தனர். அவர்கள் உங்களை நான் வந்து சந்திக்க கூடாது என்று சதி செய்கின்றனர். கடும் வெயிலில் உங்களை வாட வைத்ததற்கு மன்னிப்பு கோருகிறேன்" என்று கூறினார்.

Sponsored content

PostSponsored content



Page 6 of 15 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக