புதிய பதிவுகள்
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:55

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 10:52

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 10:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:42

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 9:33

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 9:31

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 8:46

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 8:44

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 21:50

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 20:57

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 20:51

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 11:28

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 11:23

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 11:20

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 11:17

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:01

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat 8 Jun 2024 - 23:55

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat 8 Jun 2024 - 19:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:32

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:18

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 8 Jun 2024 - 15:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat 8 Jun 2024 - 15:11

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 14:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat 8 Jun 2024 - 14:36

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 14:23

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:26

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:22

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:13

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:08

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:06

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:05

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:04

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Sat 8 Jun 2024 - 0:06

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri 7 Jun 2024 - 18:43

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 18:29

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 17:16

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:43

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:38

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 22:59

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:19

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:16

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:14

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாஸ்டர் செக் - அப் ஆடம்பரமா... அவசியமா? Poll_c10மாஸ்டர் செக் - அப் ஆடம்பரமா... அவசியமா? Poll_m10மாஸ்டர் செக் - அப் ஆடம்பரமா... அவசியமா? Poll_c10 
12 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாஸ்டர் செக் - அப் ஆடம்பரமா... அவசியமா? Poll_c10மாஸ்டர் செக் - அப் ஆடம்பரமா... அவசியமா? Poll_m10மாஸ்டர் செக் - அப் ஆடம்பரமா... அவசியமா? Poll_c10 
135 Posts - 56%
heezulia
மாஸ்டர் செக் - அப் ஆடம்பரமா... அவசியமா? Poll_c10மாஸ்டர் செக் - அப் ஆடம்பரமா... அவசியமா? Poll_m10மாஸ்டர் செக் - அப் ஆடம்பரமா... அவசியமா? Poll_c10 
83 Posts - 34%
T.N.Balasubramanian
மாஸ்டர் செக் - அப் ஆடம்பரமா... அவசியமா? Poll_c10மாஸ்டர் செக் - அப் ஆடம்பரமா... அவசியமா? Poll_m10மாஸ்டர் செக் - அப் ஆடம்பரமா... அவசியமா? Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
மாஸ்டர் செக் - அப் ஆடம்பரமா... அவசியமா? Poll_c10மாஸ்டர் செக் - அப் ஆடம்பரமா... அவசியமா? Poll_m10மாஸ்டர் செக் - அப் ஆடம்பரமா... அவசியமா? Poll_c10 
9 Posts - 4%
prajai
மாஸ்டர் செக் - அப் ஆடம்பரமா... அவசியமா? Poll_c10மாஸ்டர் செக் - அப் ஆடம்பரமா... அவசியமா? Poll_m10மாஸ்டர் செக் - அப் ஆடம்பரமா... அவசியமா? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மாஸ்டர் செக் - அப் ஆடம்பரமா... அவசியமா? Poll_c10மாஸ்டர் செக் - அப் ஆடம்பரமா... அவசியமா? Poll_m10மாஸ்டர் செக் - அப் ஆடம்பரமா... அவசியமா? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மாஸ்டர் செக் - அப் ஆடம்பரமா... அவசியமா? Poll_c10மாஸ்டர் செக் - அப் ஆடம்பரமா... அவசியமா? Poll_m10மாஸ்டர் செக் - அப் ஆடம்பரமா... அவசியமா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாஸ்டர் செக் - அப் ஆடம்பரமா... அவசியமா?


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat 5 Apr 2014 - 18:13

''எங்கள் மருத்துவமனைக்கு முழு உடல் பரிசோதனை (மாஸ்டர் ஹெல்த் செக்-அப்) செய்துகொள்வதற்காக வந்திருந்தார் அவர். கூடவே கேஷ§வலாக அவருடைய நண்பர் ஒருவரும் வந்து இருந்தார். 'நான் சும்மா... இவனுக்குக் கம்பெனிக்காக’ என்றார். இருவருக்கும் உடல் பரிசோதனை முடிந்தது. சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள். பரிசோதனையின் முக்கியத்துவம் தெரிந்து தன் உடம்பில் ஏதேனும் கோளாறு இருக்குமோ என்ற பதைபதைப்பில் வந்தார் இல்லையா, அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், கூட சும்மா கம்பெனிக்கு வந்த நண்பருக்கு சர்க்கரை நோயில் தொடங்கி, சிறுநீரகக் கற்கள் வரை அவ்வளவு பாதிப்புகள். இதை நகைச்சுவைக்காக நான் சொல்லவில்லை. நமக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது என்பதுதான் ஒவ்வொருவருடைய நம்பிக்கையும். ஆனாலும், இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையும் சுற்றுச்சூழல் கேடுகளும் எவரையும் நோயாளியாக்கிவிடும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்'' - எச்சரிக்கும் அக்கறையோடு தொடங்குகிறார் டாக்டர் மதுபாஷினி.

''நிறைய நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால், குணப்படுத்திவிட முடியும். ஆனால், நோய் முற்றி சிகிச்சை நிலையை எல்லாம் தாண்டிய கட்டத்தில்தான் இங்கு பெரும்பாலானோர் என்ன நோய் என்றே தெரிந்துகொள்கின்றனர். 20 வயதில் ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்வது நல்லது. அதன் பிறகு தேவை எனில், டாக்டர் பரிந்துரைக்கும் கால இடைவெளியில் பரிசோதனை செய்யலாம். ஆனால், 40 வயது கடந்தவர்கள் வருடத்துக்கு ஒரு முறை கட்டாயம் முழு உடல் பரிசோதனை செய்துகொள்வதுதான் புத்திசாலித்தனம்.

உயர் ரத்த அழுத்தம் என்றால் தலைச் சுற்றல், தலைவலி வரும், டென்ஷன் அதிகரிக்கும் என்று சிலர் நினைப்பார்கள். அதேபோல் சர்க்கரை நோய் என்றால், புண் ஆறாது, பசி இருக்காது, தாகம் இருக்கும் என்றும் பரவலாக ஒரு கருத்து உண்டு. எல்லாம் உண்மைதான். ஆனால், இவை எல்லாம் நோய் முற்றிய நிலையில் தோன்றும் அறிகுறிகள். நோய் தலையெடுக்கும்போதே கண்டறிய முழு உடல் பரிசோதனைதான் சரியான வழி.

உடல் பருமன், குடும்பத்தின் சர்க்கரை நோய் வரலாறு, புகை பிடிப்பது, மது அருந்துவது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்ற ரிஸ்க் ஃபேக்டரை வைத்தே ஒருவருக்கு மாரடைப்பு, சர்க்கரை நோய் வருமா என்பதைக் கண்டறியலாம். அதேபோல், பரிசோதனையில் ஒருவருக்கு சர்க்கரை அளவு நார்மலும் இல்லை, அவருக்கு சர்க்கரை நோயும் இல்லை என்றால், உணவுப் பழக்கவழக்கம், வாழ்க்கை முறை மாற்றத்தின் மூலமே சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும். கொழுப்பு அளவைக் கட்டுப்படுத்த மருந்து மாத்திரைகள் கொடுத்து மாரடைப்பைத் தடுக்க முடியும். எனவே, 40 வயதைக் கடந்தவர்கள் வருடத்துக்கு ஒருமுறை கட்டாயம் முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்'' என்கிறார் டாக்டர் மதுபாஷினி.

ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் கனகசபை, ''முழு உடல் பரிசோதனை மூலம், இதயம், சிறுநீரகம், கல்லீரல், ரத்தம் ஆகியவற்றில் உண்டாக இருக்கும் நோய்களைப் பற்றி எளிதாக அறிந்துகொள்ளலாம். நோய்க்கான அறிகுறிகள் மற்றும் நோயின் தன்மையையும் அறிந்துகொள்ள முடியும். இதனால் உரிய சிகிச்சைகளை உடனடியாக மேற்கொள்ள முடியும். இங்கே எல்லாவித நோய்களுக்கான சிகிச்சைகளும் உள்ளதால், முழு உடல் பரிசோதனை முடிவுகள் வந்த உடனேயே தேவைப்படும் சிகிச்சையையும் தொடர முடியும்'' என்கிறார் நம்பிக்கையாக.

சரி, முழு உடல் பரிசோதனை என்றால், என்னென்ன பரிசோதனைகள் எல்லாம் செய்வார்கள்?

சென்னை ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையின் முழு உடல் பரிசோதனைக் குழுத் தலைவர் டாக்டர் சிவசிதம்பரம் விளக்குகிறார்.

'பொதுவாக, முழு உடல் பரிசோதனையில் மார்புப் பகுதி எக்ஸ்ரே, ஈசிஜி, சாப்பிடுவதற்கு முன்பு ரத்தத்தில் சர்க்கரை அளவு, மொத்த கொழுப்பு அளவு, ரத்தத்தில் ஹீமோகுளோபின், ரத்த அணுக்கள் உள்ளிட்டவற்றின் அளவு, ரத்த அழுத்த பரிசோதனை, கல்லீரல், மண்ணீரல், கணையம், சிறுநீரகத்தின் செயல்பாடு ஆகியவற்றைக் கண்டறிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எனத் தொடர் பரிசோதனைகள் நடக்கும். ரத்தசோகை உள்ளதா? அப்படி இருந்தால் எதனால் ரத்தசோகை ஏற்பட்டது என்பதை ரத்தப் பரிசோதனை மூலமே தெரிந்துகொள்ளலாம். அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மூலம் கல்லீரலில் பாதிப்பு உள்ளதா, பித்தப் பை மற்றும் சிறுநீரகத்தில் கல் உள்ளதா, அல்லது வேறு ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். பெண்களுக்குக் கருப்பை மற்றும் கருமுட்டைப் பையில் பிரச்னை உள்ளதா என்று பார்ப்போம். பிரச்னை இருப்பது தெரியவந்தால், அவர்களுக்குத் தீவிரச் சிகிச்சைக்குப் பரிந்துரைப்போம்'' என்கிறார் சிவசிதம்பரம்.

முழு உடல் பரிசோதனை வகைகள்
மாஸ்டர் செக் - அப் ஆடம்பரமா... அவசியமா? P10a
பொதுவாகச் செய்யப்படும் முழு உடல் பரிசோதனையுடன் ஒவ்வோர் உறுப்புக்கு எனப் பிரத்யேகமாகச் சில கூடுதல் பரிசோதனைகளையும் செய்துகொள்ளலாம். இந்தப் பரிசோதனைகளைத் தனியாகவோ முழு உடல் பரிசோதனையுடன் இணைந்தோ செய்துகொள்ளலாம். இவை அவரவர் விருப்பத்துக்கு உட்பட்டது. இதன்படி முன்னணி மருத்துவமனைகள் இதயம், நுரையீரல், பக்கவாதம், மூட்டு வலி, கல்லீரல் செயல்பாடு, சிறுநீரகச் செயல்பாடு எனப் பிரத்யேகப் பரிசோதனைகளையும் வழங்குகின்றன. இதற்கான கட்டணம் மருத்துவமனைக்கு மருத்துவமனை மாறுபடும். பொதுவாக அரசு மருத்துவமனையில் ரூ.250-க்கு முழு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் அடிப்படை மருத்துவ பரிசோதனை ரூ.800-ல் தொடங்கி சில ஆயிரங்கள் வரை வாங்குகிறார்கள்.

முழு உடல் பரிசோதனை செய்பவர்கள் கவனத்துக்கு:

குடல் மாதிரியான உள்ளே வெற்றிடம்கொண்ட உறுப்புகள் எப்படி இருக்கின்றன என்பதை ஸ்கேன் செய்து கண்டறிய முடியாது. அதற்கு என்டோஸ்கோபி போன்ற கருவியை உள்ளே செலுத்தித்தான் பார்க்க முடியும். ஏதேனும் ஒரு நோய் அறிகுறி இருந்தால், சம்பந்தப்பட்ட துறை மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று அதன் பிறகு நோய் கண்டறிதலுக்கு உட்படுவது நல்லது. அதைவிடுத்து, முழு உடல் பரிசோதனை செய்துகொண்டேன். ஆனால், எனக்கு ஒன்றும் இல்லை என்று கூறுவது சரி இல்லை.
மாஸ்டர் செக் - அப் ஆடம்பரமா... அவசியமா? P10
முழு உடல் பரிசோதனை செய்ய வருபவர்கள் குறைந்தது ஒரு நாளாவது அதற்கென நேரத்தைச் செலவழிக்க வேண்டும்.

காலையில் சாப்பிடாமல் வர வேண்டும். வேண்டுமானால், தண்ணீர் குடித்துக்கொள்ளலாம். சாப்பிடாமல் வர வேண்டும் என்பதற்காக முந்தைய நாள் மதியத்தில் இருந்து சாப்பிடாமல் இருப்பது எல்லாம் கூடாது. குறைந்தது 8 முதல் 10 மணி நேரத்துக்கு முன் சாப்பிட்டிருக்க வேண்டும். அப்போதுத£ன் ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு உள்ளது என்பதைச் சரியாகக் கணக்கிட முடியும். டாக்டர்கள் கேட்கும் கேள்விக்கு மறைக்காமல் பதில் சொல்ல வேண்டும். கையில் இரண்டு லிட்டர் தண்ணீர் எடுத்து வருவது நல்லது.

திடீர் முடிவாக முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் செல்வது சரியாக இருக்காது. சம்பந்தப்பட்ட மருத்துவமனையைத் தொடர்புகொண்டு முன்பதிவு செய்வது, எப்படி வர வேண்டும் என்று தெரிந்துகொண்டு முழுத் தயார் நிலையில் செல்வதே சிறந்தது.
மாஸ்டர் செக் - அப் ஆடம்பரமா... அவசியமா? P9


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக