புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_m10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_m10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_m10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_m10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_m10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10 
1 Post - 1%
Kavithas
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_m10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10 
1 Post - 1%
bala_t
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_m10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10 
1 Post - 1%
prajai
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_m10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_m10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10 
284 Posts - 42%
heezulia
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_m10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_m10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_m10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10 
26 Posts - 4%
sugumaran
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_m10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_m10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10 
6 Posts - 1%
prajai
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_m10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_m10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_m10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10 
4 Posts - 1%
manikavi
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_m10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 10, 2014 6:31 pm

காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? 564xNxnewPic_8578_jpg_1835965g.jpg.pagespeed.ic.-7W7khp7WY

பிரம்மபுத்திரா படகு வீடுகள், சாலையோரப் பரிதாப வாழ்க்கை, முண்டியடிக்கும் ரிக்‌ஷாக்களைப் பார்த்துக் கொண்டே அதிலிருந்து கொஞ்சம் பிரிந்து, நீலாஞ்சல் மலையைச் சுற்றிச் சுற்றி ஏறினால், மாயங் கிராமத்தை அடைந்துவிடலாம். இந்தியாவின் தாந்திரிக வழிபாட்டின் மையமான காமாக்யா கோயில் இங்கேதான் இருக்கிறது.

வெல்லும் சொல் கொல்லும்

சுற்றி அமைந்திருக்கும் மலைக் குன்றுகள் மேல் அமைக்கப்பட்டிருக்கும் காமாக்யா கோயிலில் நுழைவது - அதுவும் பொழுது சாய்ந்து செல்வது - திகிலூட்டும் ஓர் அனுபவம். மந்திர தந்திரங்களின் பூமி இது. சிவனை மணந்த இளம் மனைவியான சக்தியே இங்கு காமாக்யாவாக நின்று அருள்பாலிப்பதாக ஐதீகம். ஒரு குகையில், தரை மட்டத்துக்கும் கீழ் எப்போதும் நீர் சுரக்கும் சுனையிலிருக்கிறாள் உக்கிர தேவதை காமாக்யா.

எல்லாக் கோரிக்கைகளையும் வேண்டுதல்களையும் காமாக்யா நிறைவேற்றுவதாக நம்பிக்கை. பலியை ஏற்கும் தாய் என்பதால், ரத்தக் கவுச்சி கோயில் வளாகத்தைச் சூழ்ந்திருக்கிறது. தரையிலும் ஆங்காங்கே ரத்தம். கோயில் படிக்கட்டுகளில் நீண்ட தாடியுடனும் மிரட்டும் விழிகளுடனும் கஞ்சா புகைக்கும் சாமியார்களில் மந்திரவாதிகளும் அடக்கம்.

வழிபாடுகள் உக்கிரமாக நடக்கின்றன. “எல்லாவற்றையும் குறியீடாகப் பார்க்கும் தாந்திரிக மரபின் சடங்குகளும் யோக வழிமுறைகளும் நுட்பமானவை. பொதுவில் எளிதாகப் புரிந்துகொள்ள முடியாதவை. தாய்வழிச் சமூகமான காரோ பழங்குடிகள் ஆரம்பக் காலத்தில் பன்றிகளைப் பலியிட் டார்கள்.

அந்த மரபு இப்போதும் தொடர்கிறது. இப்போதெல்லாம் பெரும்பாலும் ஆட்டுக் கடாக்களையே பலி கொடுக்கிறார்கள். திருவிழா காலத்தில் எல்லா வகையான ஆண் பிராணிகளும் பலியிடப்படும்” என்றார் உடன் வந்த நண்பர்.

பகீரதப் பிரயத்தனங்களுக்குப் பிறகு, ஒரு மந்திர வித்தகரைச் சந்தித்தோம். “சொற்களின் வலிமையும் கூர்மையும்தான் மந்திரங்கள். ஒரு மந்திரம் போதும், உங்கள் வாயைக் கட்டிப்போட்டுவிட; இன்னொரு மந்திரம் மூலம் உங்களை மறையச் செய்துவிடலாம். ஆனால், தர்மம் இல்லாமல் மந்திரங்களைப் பிரயோகிக்கக் கூடாது. பிரயோகித்தவன் பாவத்தை அனுபவிக்க வேண்டும். காமாக் யாவில் அருளும் மந்திரங்களின் வலிமையும் கட்டுக்கதை அல்ல. இதற்கெல்லாம் ஆதாரங்கள் உண்டு” என்றவர் கண் முன்னே ஒரு பூச்செடியின் முள் ஒன்றை ஒரு மந்திரத்தின் மூலம் பூவாக மாற்றினார். பின்னர், ஒரு இடை வெளிக்குப் பின் நீண்ட பிரார்த்தனையில் ஈடுபட்டவர், அந்தப் பூவை முள்ளாக மாற்றினார். “மந்திரங்கள் விளையாட்டு அல்ல; கடவுளால் படைக்கப்பட்ட இந்த உலகத்தின் இயல்பை நாம் மாற்றுவதை அன்னை ஒருபோதும் அனுமதிக்க மாட்டாள்” என்கிறார்.

அரண்டுபோய்விட்டார்களா ஆங்கிலேயர்கள்?

புராதனமான காமாக்யா கோயில் அசாமின் முதல் பேரரசான காமரூபா காலத்தைச் சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது. இந்தக் கோயிலைப் பற்றிய முதல் குறிப்புகள் மிலேச்ச வம்ச வனமாலா வர்மதேவர் ஆட்சிக் காலத்திய தேஜ்பூர் கல்வெட்டுகளில் (ஏழாம் நூற்றாண்டு)காணக் கிடைக்கின்றன. ஏகப்பட்ட படையெடுப்புகள், தாக்குதல்களுக்குப் பின் 500 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்ட கோயிலையே இப்போது பார்க்கிறோம் என்கிறார்கள். கோச் வம்சம், அஹோம் வம்சம், கச்சார் வம்சத்தோடு கோயிலைத் தொடர்புபடுத்தி வெவ்வேறான கதைகள் சொல்லப்பட்டாலும், கோயில் கதையைச் சொல்பவர்கள் யாவரும் ஆங்கிலேயர்கள் காமாக்யாவுக்கு அஞ்சி இங்கு கை வைக்க நடுங்கினார்கள் என்ற விஷயத்தைச் சொல்கிறார்கள்.

தாந்திரிக அறிஞர் மந்தீர் சாய்கியா, “மணிப்பூர் இளவரசர் மைபாங், கச்சார் சாம்ராஜ்யத்தை நிறுவினார். அவருடைய பெயர்களில் ஒன்றே ஊரின் பெயரான மாயாங். புத்தத் துறவிகள் இங்கு தாந்திரிகம் கற்றனர். அவர்கள் அசாமின் பல்வேறு பகுதிகளுக்கும் அதன் பின் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் தாந்திரிகத்தைக் கொண்டுசென்றனர்” என்று குறிப்பிடுகிறார்.

வாய்மொழி வழக்கில் இருந்த மந்திரங்களைக் கச்சார் மன்னர்கள்தான் எழுத்தில் பதிய ஊக்குவித்தார்கள். ஏராளமானவை தொலைந்து விட்டாலும் இப்போதும் அங்கும் இங்குமாக சுமார் நானூறு சுவடிகள் இருக்கின்றன. ஆனால், மந்திரங்களைத் தேவையில்லாமல் பிரயோகிக்கக் கூடாது; தேவியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்கிறார்கள்.

அரசியல்வாதிகளின் கூட்டம்

எல்லா வேண்டுதல்களையும் நிறைவேற்றும் என்று நம்பப்படும் ஒரு கோயிலை எப்படி விட்டுவைப்பார்கள் நம்முடைய அரசியல் வாதிகள்? வடகிழக்குப் பகுதி மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குவி கிறார்கள். “எப்போதும் கோடைக்காலத்தில் நடக்கும் அம்புபாச்சி மேளாவின்போதும் இலை யுதிர் காலத்தில் நவராத்திரி துர்கா பூஜை யின்போதும்தான் இங்கு கூட்டம் அலை மோதும். அப்போது நாடு முழுவதிலுமிருந்து தாந்திரிகர்கள் இங்கே வழிபட வருவார்கள். இப்போதெல்லாம் தேர்தல் காலகட்டத்திலும் கூட்டம் அதிகமாகிவிடுகிறது” என்கிறார் கோயில் வளாகத்தில் கடை வைத்திருக்கும் பூரி.

அரசியல்வாதிகளுக்கு காமாக்யாவின் மந்திர விற்பன்னர்கள் இடம் அளிக்கிறார்களா? இல்லை என்று வலுவாக மறுக்கிறார்கள். “காமாக்யா பீடத்தின் சக்தியைக் கேள்விப்பட்டு, மந்திரங்களைப் பயன்படுத்திப் பதவிக்கு வந்துவிடலாம் என்கிற நப்பாசையில்தான் அரசியல்வாதிகள் இங்கு வருகிறார்கள். ஆனால், இங்கு மந்திர விற்பன்னர்கள் அவர் களுக்கெல்லாம் துணைபோவது கிடையாது. தவிர, எல்லோருக்குமே ஒரு விஷயம் தெரியும் - மந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்தினால், காமாக்யாவின் சாபத்துக்கு ஆளாக நேரிடும் என்று. ஆகையால், வரு வார்கள், பிராத்தனை செய்வார்கள், பலி கொடுப்பார்கள், அவ்வளவுதான்” என்கிறார்கள்.

கோயிலை விட்டு வெளியேறியபோது சரசரவென வந்து புகுகின்றன கொடி கட்டிய நான்கு கார்கள். உள்ளிருந்து கச்சிதமான உடைகளில் இறங்குகின்றனர் அரசியல்வாதிகள். ஒரு காரிலிருந்து எதையோ எடுக்க/இழுக்க படாத பாடுபடுவது தெரிந்தது. நெருங்கிப் பார்த்த போது, மறுத்துக்கொண்டு வெளியே வந்தது ஒரு முரட்டுக் கடா. அதை இழுத்துக்கொண்டு கோயிலை நோக்கி முழங்கிக்கொண்டே நுழைகிறார்கள்: “ஜெய் காமாக்யா!”

தி இந்து

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81952
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 10, 2014 9:54 pm

-
தல வரலாறு குறித்து ஏதும் செய்தி இல்லை..!
-
இக்கோயிலின் முகவரி:
-
Kamakhya Mandir Rd,
Kamakhya, Guwahati,
Assam 781010
0361 273 4654
-
காணொளி:
-

-


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 10, 2014 10:17 pm

ayyasamy ram wrote:[link="/t109328-topic#1057579"]-
தல வரலாறு குறித்து ஏதும் செய்தி இல்லை..!

தல வரலாறு 2009 -லேயே எழுதியாகிவிட்டது திரு [tag]ayyasamy ram[/tag]

காமாக்யா அம்மன்
http://www.eegarai.net/t3498-topic

valluvanraja
valluvanraja
பண்பாளர்

பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Postvalluvanraja Fri Apr 11, 2014 2:30 am

உள்ளுரில் உள்ள கோவிலுக்கே போறதில்லை இதில் எங்கிருந்து வெளியூர் கோவிலுக்கு போயி{அம்மா தான் உண்மையான தெய்வம்)



உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Z4f515bfcc79f3
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Fri Apr 11, 2014 7:59 am

தாந்திரீக வழிபாடு மிகவும் ரகசியமானது. அதே சமயம் விதியையே மாற்றி அமைக்கக்கூடியது. அதை செய்பவர்களுக்கு இயற்கைக்கு மாறான செயல்களை செய்யும் ஆற்றல்களும் உண்டு. ஆனால் தாந்திரீக முறைகளினால் நன்மையை செய்தால் மட்டுமே இறைவனின் அருள் கிட்டும். மாறாக தவறான செயல்களை செய்தாலோ அல்லது தீமையை செய்தாலோ இறைவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

ஒரு சமயம் நேரு திபெத் சென்றிருந்தார். அங்கிருக்கும் லாமாக்கள் மேகங்களை வரவழைத்து நேருவின் மீது சாரல் மழை பெய்ய செய்தனர். இவ்வளவு சக்தி கொண்ட லாமாக்களுக்கு திபெத் பகுதியை சீனாவிடமிருந்து தனி நாடாக பிரிக்க தெரியாதா? கண்டிப்பாக தெரியும். ஆனால் அச்செயலை எப்போது செய்ய வேண்டும் என்பதை அவர்கள் நன்றாக அறிவார்கள். அதுவரை அவர்கள் அமைதியாகத் தான் இருக்க வேண்டும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 11, 2014 3:43 pm

கோ. செந்தில்குமார் wrote:[link="/t109328-topic#1057699"]
தாந்திரீக வழிபாடு மிகவும் ரகசியமானது. அதே சமயம் விதியையே மாற்றி அமைக்கக்கூடியது. அதை செய்பவர்களுக்கு இயற்கைக்கு மாறான செயல்களை செய்யும் ஆற்றல்களும் உண்டு. ஆனால் தாந்திரீக முறைகளினால் நன்மையை செய்தால் மட்டுமே இறைவனின் அருள் கிட்டும். மாறாக தவறான செயல்களை செய்தாலோ அல்லது தீமையை செய்தாலோ இறைவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

ஒரு சமயம் நேரு திபெத் சென்றிருந்தார். அங்கிருக்கும் லாமாக்கள் மேகங்களை வரவழைத்து நேருவின் மீது சாரல் மழை பெய்ய செய்தனர். இவ்வளவு சக்தி கொண்ட லாமாக்களுக்கு திபெத் பகுதியை சீனாவிடமிருந்து தனி நாடாக பிரிக்க தெரியாதா? கண்டிப்பாக தெரியும். ஆனால் அச்செயலை எப்போது செய்ய வேண்டும் என்பதை அவர்கள் நன்றாக அறிவார்கள். அதுவரை அவர்கள் அமைதியாகத் தான் இருக்க வேண்டும்.

வழிமொழிகிறேன்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக