புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை Poll_c10பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை Poll_m10பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை Poll_c10 
306 Posts - 42%
heezulia
பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை Poll_c10பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை Poll_m10பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை Poll_c10பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை Poll_m10பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை Poll_c10பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை Poll_m10பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை Poll_c10பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை Poll_m10பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை Poll_c10பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை Poll_m10பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை Poll_c10பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை Poll_m10பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை Poll_c10 
6 Posts - 1%
prajai
பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை Poll_c10பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை Poll_m10பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை Poll_c10பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை Poll_m10பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை Poll_c10 
4 Posts - 1%
manikavi
பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை Poll_c10பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை Poll_m10பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 9:05 pm

பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை CAb4oLMoRhKJ1KXbjJWt+image012
மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை
(ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897)


மனோன்மணீயம் நாடகத்தை எழுதியவர் பேராசிரியர். பெ. சுந்தரம்பிள்ளை. இவர் இன்றைய கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழை என்னும் ஊரில் 1855ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர் பெருமாள் பிள்ளை, தாயார் மாடத்தி அம்மாள். சைவ நெறி போற்றும் குடும்பத்தில் பிறந்த சுந்தரம்பிள்ளை இளமையிலேயே தேவார திருவாசகங்களில் தேர்ச்சி பெற்றவராய் விளங்கினார். இவரது ஞானாசிரியர் கோடக நல்லூர் சுந்தரசுவாமிகள் ஆவார்.

வாழ்க்கையும் பணிகளும்

1877ஆம் ஆண்டு ஆசிரியப் பணியைத் தொடங்கிய பேராசிரியர் சுந்தரம்பிள்ளை முதலில் திருநெல்வேலியில் ஆங்கிலத் தமிழ்க் கல்விச் சாலையில் பணிபுரிந்தார்; பின்னர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறையில் (Philosophy) ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அதன் பின்னர்த் திருவனந்தபுரம் அரசர் அரண்மனை வருவாய்த் துறையின் (Revenue Dept) தனி அலுவலராகப் பொறுப்பேற்றார். 1885ஆம் ஆண்டு மீண்டும் தத்துவத்துறையிலேயே பேராசிரியராகப் பணியில் அமர்த்தப் பெற்றார். இறுதி வரையில் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை தத்துவத் துறையின் தலைமைப் பேராசிரியராகவே இருந்தார்.

தமது நாற்பத்திரண்டாவது வயதில் 26.04.1897 இல் இவர் அமரர் ஆனார்.

படைப்புகள்

இவரது முதல் படைப்பு நூற்றொகை விளக்கம் என்னும் நூலாகும். இந்நூல் 1888ஆம் ஆண்டு வெளிவந்தது. இவரது இரண்டாம் படைப்பு மனோன்மணீயமாகும். இக்கவிதை நாடகநூல் 1891ஆம் ஆண்டு வெளிவந்தது. அடுத்து விதாங்கூரின் பண்டை மன்னர்கள் என்னும் ஆராய்ச்சி நூலை 1894ஆம் ஆண்டு வெளியிட்டார். திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி எனும் நூலை 1895ஆம் ஆண்டு வெளியிட்டார். நூல்கள் மட்டுமன்றி ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் இதழ்களில் எழுதிவந்தார். அவற்றுள் குறிப்பிடத்தக்கது பத்துப்பாட்டுத் திறனாய்வாகும். இது சென்னைக் கிறித்தவக் கல்லூரி இதழில் வெளிவந்தது.

பேராசிரியர் சுந்தரம்பிள்ளை தத்துவத் துறைப் பேராசிரியராக இருந்ததால் பொதுவாக இவரது அனைத்துப் படைப்புகளிலும் தத்துவத்தின் சாயல் கூடுதலாக இருப்பதைக் காணலாம். தமிழ் ஆய்விலும், படைப்பிலக்கியத்திலும் கூடுதலான பணியைச் செய்த பேராசிரியர், இளமையிலேயே மறைந்தது தமிழ் ஆய்வுலகுக்கும் தமிழ் கூறு நல்லுலகுக்கும் பேரிழப்பாகும். குறிப்பாக, தமிழ் நாடக உலகம் ஒரு மிகச் சிறந்த நாடகப் பேராசிரியரை இழந்து விட்டது என்றே கூறலாம்.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்

மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 9:05 pm


தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்


மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.

நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !
உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !

அலை கடலே ஆடையான இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு பாரத நாடே முகமாம் தென்திசை அதன் நெற்றியாம் அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம் அந்தத் திலகத்தின் வாசனைப் போல்

அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும் தெய்வமகள் ஆகிய தமிழே என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு வியந்து,செய்யும் செயலையும் மறந்து வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்.

இப்பாடல் சுந்தரனார் இயற்றிய பாடலின் திருத்தமே யாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 9:06 pm

முழுமையான தமிழ் தாய் வாழ்த்து (UnEdited Version of Tamil Thai vazhthu)

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"

- மனோன்மணியம் சுந்தரனார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 9:06 pm

பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை 10151358_662130820526685_1458136603662273234_n

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக