புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_m10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10 
68 Posts - 45%
heezulia
ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_m10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_m10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10 
5 Posts - 3%
prajai
ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_m10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10 
4 Posts - 3%
Jenila
ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_m10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10 
2 Posts - 1%
jairam
ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_m10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10 
2 Posts - 1%
kargan86
ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_m10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_m10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_m10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_m10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_m10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_m10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_m10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10 
9 Posts - 4%
prajai
ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_m10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10 
6 Posts - 3%
Jenila
ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_m10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_m10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_m10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_m10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10 
2 Posts - 1%
jairam
ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_m10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_m10ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை


   
   
Ramprasath
Ramprasath
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 25/03/2012

PostRamprasath Tue Apr 29, 2014 7:50 am

ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை

முதலில் ஓரின ஈர்ப்பு என்பது என்ன என்று பார்ப்போம். இதற்கு மரபியலை துழாவினால் துல்லியமாக ஜீன்கள் அகப்படலாம்.
இரட்டையராகப் பிறந்தவர்களை கணக்கில் கொண்டு இதை நிரூபிக்கவே செய்யலாம்.

இரட்டையர்களில், ஐடென்டிகல் ட்வின்ஸ் (Identical twins), ஃப்ராடெர்னல் ட்வின்ஸ் (fraternal twins) என்பார்கள். ஐடென்டிகல் ட்வின்ஸ் என்பவர்கள் நூறு சதம் ஒரே மரபியல் கொண்ட இரட்டையர்கள். ஃப்ராடெர்னல் ட்வின்ஸ் என்பவர்கள் ஐம்பது சதம். இதில் ஐடென்டிகல் ட்வின்ஸில் ஒருவர் ஓரினச்சேர்க்கையாளராக இருப்பின், இன்னொருவரும் ஓரினச்சேர்க்கையாளராக இருக்க, ஃப்ராடெர்னல் டிவின்ஸாக இருப்பவர்களுக்கு இருக்கும் சாத்தியக்கூறுகளை விடவும் அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன என ஜெர்னல் ஒஃப் ஜெனிடிக்ஸில் (Journal of Genetics) ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை சொல்கிறது.
homosexual 370அதே ஜெர்னல் ஆஃப் ஜெனிடிக்ஸில் இன்னொரு கட்டுரை, ஆண் குழந்தையை சுமக்கும் பெண்ணின் வயிற்றில் ஆண் குழந்தைக்கான தாயின் ஒவ்வாமை சில வேதியியல் மாற்றங்கள் நிகழ்த்துவதால், அதன் விளைவாக பிறக்கும் ஆண் குழந்தை ஓரின ஈர்ப்பு கொண்டதாக இருக்க வாய்ப்புக்கள் இருக்கிறதென சொல்கிறது.
இங்கே இன்னும் சில விஷயங்களையும் பேசியாக வேண்டி இருக்கிறது.
பெரும்பான்மையானவர்கள், ஓரினச்சேர்கையாளர்களையும், பாலின மாற்றுக்காரர்களையும் ஒன்றே போல் பார்க்கிறார்கள். அது தவறு. இரு தரப்புகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. பால் மாற்றுக்காரர்கள் தங்களை, தவறான பாலினத்தில் பிறந்திருப்பதாக எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால் ஓரினச்சேர்க்கையாளர்கள் சில குறிப்பிட்ட உளவியல் காரணங்களுக்காய் தன்னுடைய பாலினத்தை விரும்புபவர்களாக இருப்பார்கள். இதுதான் மிக முக்கியமான வித்தியாசம்.

ஓரினச்சேர்க்கைக்கான காரணிகள் உளவியல் ரீதியிலானதா, அல்லது வேதியியல் பூர்வமானதா, அல்லது வேறு ஏதாவதா என்றும் குழப்பங்கள் நிலவுகின்றன. அமேரிக்க மனோதத்துவச்சங்கம், 1973 களிலேயே தன்னுடைய அதிகாரப்பூர்வமான மனோதத்துவ கோளாறுகளின் பட்டியலில் (Diagnostic and Statistical Manual of Mental Disorders (DSM)) இருந்து ஓரினச்சேர்க்கையை நீக்கிவிட்டது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இது சொல்வது என்னவெனில், ஓரினச்சேர்க்கை என்பதை கோளாறு அல்லது மன‌நோய் எனக் கொள்ளுதல் கூடாது என்பதைத்தான்.

இன்னுமொன்றையும் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஓரினச்சேர்க்கை (Homosexual), நேர்ச்சேர்க்கை (straight) என்கிற இரண்டையும் கருத்தில் கொண்டோமேயானால், எந்த ஒரு மனிதரிடமும் இவ்விரண்டும் இயற்கையிலேயே இருக்க வாய்ப்பிருக்கிறது எனவும், எப்படி நெட்டையாக இருக்கும் மனிதனிடம் குட்டைத்தன்மைக்கான மரபணு வீரியமாக இல்லாமல் இருக்கிறதோ, அது போல நேர்ச்சேர்க்கை மனிதர்களிடம் ஓரினச்சேர்க்கைக்கான மூலக்கூறும் வீரியமாக இல்லாமல் பலவீனமாக இருக்கலாம் என்பதுதான்.

இது விளக்கமாக என்ன சொல்கிறதெனில், ஓரினச்சேர்க்கைக்கான மூலக்கூறுகள் இல்லாமல் இருப்பதைக் கூட நாம் பலவீனம் என்றே கொள்ளவேண்டும் என்பது தான். ஏனெனில், டார்வினின் உயிர்மலர்ச்சிக்கோட்பாட்டின்படி, நெட்டையாக உள்ள மனிதன் முழுவதும் நெட்டை இல்லை எனவும், குட்டைத்தன்மை பலவீனமாக இருக்கிற அல்லது எதிர்காலத்தில் குட்டைத்தன்மையை தனது சந்ததிகளுக்கு பரப்பத் தகுதியுள்ள ஒரு நெட்டை என்றே கொள்ள வேண்டும் என்பதுதான்.

ஆதலால், ஓரினச்சேர்க்கையாளர்களை எவரும் உதாசீனம் செய்யவோ, மரியாதைக்குறைவாகவோ நடத்த வேண்டியதில்லை. அது ஒரு குறை அல்ல. அது ஒரு இயல்பு.

அப்படி யாரேனும், அதை குறை எனக் கொள்வார்களானால், அவர்கள் உலகில் உள்ள அத்தனை பேரையும், ஏன் தங்களையும் சேர்த்தே குறை என்று சொல்லிக்கொள்ளலாம் என்பது தான் நாம் கவனிக்க வேண்டிய செய்தி.
இப்போது சொல்ல இருப்பது, இருப்பதிலேயே மிக மிக முக்கியமானது என்றே நான் கருதுகிறேன்.

பழக்கவழக்கங்களின் மூலம் ஓரினச்சேர்க்கையாளர்களை, நேர்ச்சேர்க்கையாளர்களாக மாற்றலாமா, என்றால், முடியாது என்பது தான் பதிலாக இருக்க முடியும். எப்படி நேர்ச்சேர்க்கை என்பது இயல்போ, அது போலவே ஓரினச்சேர்க்கை என்பதும் இயல்பே. நேர்ச்சேர்க்கைக்காரர்களையும், எதையாவது செய்து ஓரினச்சேர்க்கையாளர்களாக மாற்ற இயலாது. ஆகவே ஓரினச்சேர்க்கையாளர்களை நாம் சமூகத்தை விட்டு ஒதுக்கிவைக்க வேண்டிய தேவைகள் இல்லை என்பது புலனாகிறது. மேலும், அதைக் குற்றமென்று கருதி தண்டனை அளிப்பதோ, மிக மிக அறிவீனமானதும் கூட‌. ஆகவே ஓரினச்சேர்க்கையாளர்கள் சூழ வளர நேர்ந்தால் நேர்ச்சேர்க்கை பிள்ளைகள் கூட ஓரினச்சேர்க்கையாளர்களாக மாறிவிடுவார்கள் என்கிற பயமெல்லாம் அதீத கற்பனை மட்டுமே. அதில் எள்ளவும் உண்மை இல்லை.

சரி ஐயா, ஓரினச்சேர்க்கைக்கு காரணிகள் தான் என்ன என்றால் அங்கும் நான் ஒரு கேள்வி எழுப்ப விரும்புகிறேன். நேர்ச்சேர்க்கைக்கு என்னைய்யா காரணி? என்று நான் உங்களைக் கேட்டால் எப்படி பேந்த பேந்த விழிப்பீர்களோ அதே தான் ஓரினச்சேர்க்கைக்கும். நேர்ச்சேர்க்கை எவ்வாறு ஒரு வித இயல்போ அதே போல் ஓரினச்சேர்க்கையும் ஒரு இயல்பே.

அறிவியல் வளராத காலத்தில், பூமி தட்டையென நம்பிக்கொண்டிருந்த காலத்தில், காரணிகள் தெரிந்து கட்டமைக்கவேண்டிய நிர்பந்தம் புரியாத காலத்தில், நம் சமூகத்தை நம் முன்னோர்கள் கட்டமைத்தபோது, எவ்வாறு சுயமைதுனமும், சொப்பன ஸ்கலிதமும் தவறு என்றும், ஒரு குற்ற உணர்ச்சியுடனும் பார்க்கப்பட்டதோ அதே போல், எண்ணிக்கையில் மிக மிகக் குறைவாக‌வே இருந்த ஓரினச்சேர்க்கையும் ஒவ்வாத ஒன்றாக பார்க்கப்பட்டுவிட்டது என்றே நான் கொள்கிறேன்.

உங்களையும் அவ்விதமே எடுத்துக்கொள்ளச் சொல்லி பரிந்துரைக்கிறேன்.

இப்போது கட்டுரையின் தலைப்பிற்கு வருவோம்?

ஓரினச்சேர்க்கையை அனுமதிப்பதா? வேண்டாமா? இந்தக் கேள்வியே இப்போது தவறாகிவிட்டது பார்த்தீர்களா? ஓரினச்சேர்க்கையை அனுமதிக்க நாம் யார்? நேர்ச்சேர்க்கை நம்மைக் கேட்டா அனுமதிக்கப்பட்டது? நேர்ச்சேர்க்கையை அனுமதிப்பதா ? வேண்டாமா? என்று என்றாவது கேள்வி எழுப்பியிருக்கிறோமா? எனினும்,

என்னைக் கேட்டால் நான் முதலில் பின்வரும் வாதங்களை முன்வைக்கவே விரும்புகிறேன்.

1. இக்காலத்தில் ஓரினச்சேர்க்கை ஆண்களை, சமூகத்திற்கு அடையாளப்படுத்த பயந்து, ஊருக்கு சொல்லாமல் மறைத்து, பொய் சொல்லி ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்து, பாவம் ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்குவதற்கும், அதேபோல், ஓரினச்சேர்க்கை பெண்களை சமூகத்திற்கு அடையாளப்படுத்த பயந்து, ஊருக்கு சொல்லாமல் மறைத்து, பொய் சொல்லி ஒரு ஆணுக்கு திருமணம் செய்து வைத்து, பாவம் ஒரு ஆணின் வாழ்க்கையை நாசமாக்குவதற்கும், ஓரினச்சேர்க்கைக்கு வெளிப்படையாக ஓர் அடையாளம் தந்து அங்கீகரித்து விடலாம்.
இதன் மூலம், நம் நண்பனோ/தோழியோ, உறவினனோ/உறவினளோ, ஓரினச்சேர்க்கையாளராக இருந்து கண் முன்னே அவமானப்பட நேராமல், இன்னொரு ஆண் அல்லது பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்காமல் நாம் எல்லோரும் இணைந்தே நமக்கான பூமையை, அதில் நமக்கான வாழ்க்கையை வாழலாம் என்கிற கோணம் எனக்கு பிடித்திருக்கிறது. ஓரினச்சேர்க்கையாளர்களை அங்கீகரித்துவிடுவது இந்தக் கோணத்திலும் ஒரு சமூகத்திற்கு நன்மையே.

2. ஓரினச்சேர்க்கையோ, நேர்ச்சேர்க்கையோ இயல்பு என்று முன்பே சொன்னேன். அதற்கும் மரபியலுக்கும் கூட உள்ள தொடர்பையும் பார்த்தாகிவிட்டது. என் இரண்டாவது வாதம் என்னவெனில், ஓரினச்சேர்க்கையை அனுமதிப்பதன் மூலம், ஓரினச்சேர்க்கை இயல்புள்ள ஆண் - ஆண், பெண் - பெண் மரபணு, மரபணு தொடர்ச்சி விடுபட்டு அந்த தலைமுறையோடு நின்றுவிடும். அப்படிச்செய்யாமல், ஓரினச்சேர்க்கையை அனுமதிக்காததின் மூலம், ஓரினச்சேர்க்கை பெண் ஒரு நேர்ச்சேர்க்கை ஆணோடும், ஓரினச்சேர்க்கை ஆணை ஒரு நேர்ச்சேர்க்கை பெண்ணோடும் சேர்க்கின், அந்த ஓரினச்சேர்க்கை இயல்பு மரபணு தொடர்ச்சி காண நாமே வழி வகுத்துவிடும் அபாயம் இருக்கிறது. இந்தக் கோணத்திலும் ஓரினச்சேர்க்கையாளர்களை அங்கீகரித்துவிடுவது ஒரு சமூகத்திற்கு நன்மையே பயக்கிறது.

3. அவ்வாறு, ஓரினச்சேர்க்கையை அனுமதிக்காமல் போனால், ஓரினச்சேர்க்கையாளர்கள் அவமானத்திற்கு பயந்து மறைந்து மறைந்து தங்களுக்குள் ஒரு வகைப்படுதல் இல்லாமலும், ஒழுங்கின்றியும் பாலின சேர்க்கை புரிந்து புதிது புதிதாக‌ பால் வினை நோய்களுக்கு அது வழி வகுக்கலாம். அதலால் ஓரினச்சேர்க்கையாளர்களை அங்கீகரித்துவிடுவது இந்தக் கோணத்திலும் ஒரு சமூகத்திற்கு நன்மையே.

4. மேற்சொன்னவாறு, ஓரினச்சேர்க்கை மறுக்கப்பட்ட ஓரின ஆணும் பெண்ணும், சமூகத்திற்கென, ஒரு பெண்ணையும் ஆணையும் மணம் புரிந்து ஒன்றுக்கு மேற்பட்டவருடன் கலவி புரிவதால், வரும் பால்வினை நோய்களை தங்கள் துணைக்கும், குழந்தைகளுக்கும் கடத்தும் அபாயம் இருக்கிறது. ஓரினச்சேர்க்கையை அங்கீகரித்துவிட்டால் இந்த அபாயம் தவிர்க்கப்படும். இதுவும் சமூகத்திற்கு நன்மையே.

5. ஓரினச்சேர்க்கை தம்பதிகளுக்கு இயற்கையில் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இல்லை. ஆயினும், அப்படியான (ஆண்-ஆண், பெண்-பெண்) தம்பதிகளுக்கு குழந்தை வளர்க்க அரசின் தொட்டில் குழந்தைகள் பயன்படலாம். இதற்கு அரசு ஏற்பாடு செய்யலாம். இப்படிச் செய்வதின் மூலம் அனாதை குழந்தைகளுக்கு ஒரு குடும்பம் கிடைக்கலாம். இதுவும் ஒரு சமூகத்திற்கு ஒரு கோணத்தில் நன்மையே.
இப்போது வாசகர்களாகிய நீங்களே சொல்லுங்கள் . ஓரினச்சேர்க்கையை அனுமதிக்கலாமா? வேண்டாமா?

Reference:
http://www.impactprogram.org/youth/biological-characteristics-associated-with-homosexuality-2/
http://psychology.ucdavis.edu/faculty_sites/rainbow/html/facts_mental_health.html
http://www.scientificamerican.com/article/homosexuality-cure-masters-johnson/
http://www.trincoll.edu/StudentLife/Help/safezone/Pages/Myth.aspx

(நன்றி: காவ்யா கலை, இலக்கியம், பண்பாட்டுக்கான காலாண்டிதழ் மலர் - 3, இதழ் - 2 ஏப்ரல் - ஜூன் 2014)

- ராம்ப்ரசாத், சென்னை (ramprasath.ram@googlemail.com, http://ramprasathkavithaigal.blogspot.in/)

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Apr 30, 2014 10:20 am

விசயங்களை முழுமையான அலசி ஆராய்ந்த கட்டுரை. பாராட்டுகள்.

அறிவியலும், உளவியலும் என்ன தான் சொன்னாலும், கூட்டத்தோடு கோவிந்தா போடவே பலரும் விரும்புகின்றனர். பெரும்பாலான மனிதர்கள் செய்யும் செயலே சரியென இந்திய சமுதாயம் ஏற்கிறது. இதில் மதம் சார்ந்த அரசியல் சாயமும் விளையாடுகிறது. இது போன்ற குறைவான எண்ணிக்கையுள்ள செயல்களை ஏற்க நமக்கு இன்னும் தெளிவு வரவில்லை.

இதை புரிந்து கொள்ள பரந்த கண்ணோட்டமும், ஆழ்ந்த புரிதலும் தேவை. இது போன்ற செயல்களை ஏற்பது காலப்போக்கில் மாறலாம்.




சதாசிவம்
ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Apr 30, 2014 4:37 pm

மனிதன் வர வர இயற்கையான வாழ்க்கை முறையிலிருந்து மாறி செயற்கையான வாழ்க்கை முறைக்கு வந்து கொண்டிருக்கிறான் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

நோய்கள். கலைகள், பண்பாடுகள், பழக்கவழக்கங்கள், எப்படி அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறதோ அவாறே இந்த ஓரினச்சேர்க்கையும் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும் என்பது உண்மைதான்.

ஆகவே இந்த இயற்க்கைக்கு முரணான பழக்கத்துக்கு ஊக்கமளிக்காமல் இருப்பதன் மூலம் இந்த பழக்கம் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படாமல் தடுக்கலாம் என்பது எனது கருத்து.

எந்த ஆணும், எந்த பெண்ணும் தன்னுடைய குழந்தையைத்தான் கொஞ்ச வேண்டும் என்று ஆசைப்படுவான்.

இயற்கையாக இயற்கையோடு ஆரோக்கியமாக வாழுவோம்.

இது ஒரு நல்ல ஆய்வுக்கட்டுரை, மிகவும் பயனுள்ளது,
நன்றி நண்பன் ராம்பிரசாந்த்

Ramprasath
Ramprasath
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 25/03/2012

PostRamprasath Wed Apr 30, 2014 8:06 pm

@அகிலன்:

அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படாமல் இருக்க வேண்டுமானால், அத்தகையவர்களை அங்கீகரித்துவிடுவதே சரியானதாக இருக்கும். நீங்களும் அதைத்தான் சுட்டுகிறீர்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில், இயற்கையே அதற்கான தடுப்புச்சுவரையும் எழுப்பியிருக்கிறது. ஓர் உயிர் உருவாகத் தேவையான 46 க்ரோமோசோம்களில் சரி பாதி ஆணிடமிருந்தும், பெண்ணிடமிருந்தும் கிடைக்க வேண்டும். ஓரின ஈடுபாட்டில் அதற்கு வாய்ப்பில்லை.

அங்கீகரிக்காமல் விடுவது தான் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படக்கூடியதாக்கிவிடும்.

உங்களது கருத்துக்களுக்கு எனது நன்றிகள் நண்பர்களே..


SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Apr 30, 2014 8:19 pm

.



ஓரின சேர்கையாளர்கள் நல்லவர்கள் தான் ..இவர்களால் சமுதாய சீர்கேடுகள் இவர்களோடு ஒளிந்து விடும் ..நாட்டில் ஜனத் தொகையும் குறையும் ..

ஆனால் இந்த பெண் பெண் சேர்க்கை தான் கொஞ்சம் பிரச்னை ... நீங்க பெண்களுடனேயே போய் விட்டால் நாங்கள் எங்கு போவது ..நாட்டில் மணமகளுக்கு பஞ்சம் வந்து விடும் அல்லவா






......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Ramprasath
Ramprasath
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 25/03/2012

PostRamprasath Wed Apr 30, 2014 9:55 pm

@SanjeevJino:
ஜாலி

jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Wed Apr 30, 2014 10:25 pm

மனித இனம் வெற்கப்படவும் வேதனைப் படவுமான ஒருவிடயம் இது ஐயறிவு படைத்த விலங்குகள் கூட இந்தச் செயலுக்கு உடன்படாது. இயற்கைக்கு மாற்றமான இச்செயலைப் பற்றிப் பேசுவதற்கே மனித மனங்கள் கூச வேண்டும்.

 அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் 

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu May 01, 2014 1:52 am

SajeevJino wrote:[link="/t109839-topic#1060756"].



ஓரின சேர்கையாளர்கள் நல்லவர்கள் தான் ..இவர்களால் சமுதாய சீர்கேடுகள் இவர்களோடு ஒளிந்து விடும் ..நாட்டில் ஜனத் தொகையும் குறையும் ..

ஆனால் இந்த பெண் பெண் சேர்க்கை தான் கொஞ்சம் பிரச்னை ... நீங்க பெண்களுடனேயே போய் விட்டால் நாங்கள் எங்கு போவது ..நாட்டில் மணமகளுக்கு பஞ்சம் வந்து விடும் அல்லவா


ஆண்கள் கவலைப்பட வேண்டிய விசயம்தான்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu May 01, 2014 2:02 am

jawhar wrote:[link="/t109839-topic#1060760"]மனித இனம் வெற்கப்படவும் வேதனைப் படவுமான ஒருவிடயம் இது ஐயறிவு படைத்த விலங்குகள் கூட இந்தச் செயலுக்கு உடன்படாது. இயற்கைக்கு மாற்றமான இச்செயலைப் பற்றிப் பேசுவதற்கே மனித மனங்கள் கூச வேண்டும்.

 அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் 

சிலவற்றை நாம் விலங்குகளிடம் இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது
உதாரணமாக - விலங்குகள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதில்லை, ஒற்றுமையாக வாழும்,

Ramprasath
Ramprasath
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 25/03/2012

PostRamprasath Thu May 01, 2014 6:33 am

"சிலவற்றை நாம் விலங்குகளிடம் இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது
உதாரணமாக - விலங்குகள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதில்லை, ஒற்றுமையாக வாழும்"

super... அகிலன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக