புதிய பதிவுகள்
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
by Guna.D Today at 3:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Baarushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
Page 1 of 14 •
Page 1 of 14 • 1, 2, 3 ... 7 ... 14
பாராளுமன்ற கட்சி கூட்டம்
புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற பாரதீய ஜனதா கூட்டம் (புதிய எம்.பி.க்கள் கூட்டம்), டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 282 எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.
கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும், பாராளுமன்ற கட்சி தலைவராக நரேந்திர மோடியின் பெயரை அத்வானி முன்மொழிவார் என கட்சி தலைவரும், தேர்தல் அதிகாரியுமான ராஜ்நாத் சிங் அறிவித்தார். அங்கே கூடியிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியுடன் அதை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
மோடி, பிரதமராக தேர்வு
அதைத் தொடர்ந்து பாராளுமன்ற கட்சி தலைவர் (பிரதமர்) பதவிக்கு நரேந்திர மோடி பெயரை அத்வானி முன்மொழிந்து பேசினார். அவரைத் தொடர்ந்து கட்சியின் முன்னணி தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத், கோபிநாத் முண்டே, அருண் ஜெட்லி, கரிய முண்டா உள்ளிட்டவர்கள் வழிமொழிந்து பேசினர்.
பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு கட்சி தலைவர்கள் அனைவரும் மாலை அணிவித்தும், ஆரத்தழுவியும் வாழ்த்துகளை தெரிவித்தனர். மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். கூட்ட அரங்கில் உற்சாகம் நிரம்பி வழிந்தது. மோடியைத் தழுவி வாழ்த்தியபோது, அத்வானி உணர்ச்சிப்பெருக்குடன் காணப்பட்டார்.
ராஜ்நாத் சிங், அத்வானி பேச்சு
அதைத் தொடர்ந்து பேசிய கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், ‘‘இது வரலாற்று சிறப்பு மிகுந்த தருணம். என்றென்றும் நினைவில் நிற்கக்கூடிய தருணம்’’ என கூறி, இந்த தேர்தல் வெற்றிக்கு கட்சியை வழி நடத்திய மோடிக்கு புகழாரம் சூட்டினார். மோடியின் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் தான் பங்கேற்றபோது, ‘‘நம்மால் முடியும்’’ என அவர் கூறியதை நினைவுபடுத்தியதுடன், ‘‘நாம் செய்து முடிப்போம் என இப்போது கூறுவோம்’’ என உற்சாகத்துடன் கூறினார்.
தொடர்ந்து அத்வானி பேசினார். அப்போது அவர், ‘‘நான் உணர்ச்சிப்பெருக்குடன் இருக்கிறேன். இந்த தருணம் வரலாற்று சிறப்பு மிக்கது. உணர்ச்சிப்பெருக்கானது. நடந்து முடிந்த தேர்தலில் இத்தகைய ஒரு அபார ஆதரவை மக்கள் அளித்திருப்பதின் மூலம், நமது தோள்களில் பெரியதொரு பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது’’ என கூறினார்.
நன்றி தெரிவித்தார் மோடி
எளிய பின்னணியில் இருந்து வந்த தன்னை நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுத்ததற்கு மக்களுக்கும், கட்சிக்கும் நன்றி தெரிவித்து மோடி உருக்கமுடனும், உணர்ச்சிப்பிரவாகத்துடனும் பேசினார்.
இந்த கூட்டத்தில், மோடியை பிரதமராக தேர்வு செய்ததற்கான தீர்மானமும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
கூட்டணி கட்சிகள் கூட்டம்
தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அகாலிதள தலைவர் பிரகாஷ் சிங் பாதல், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான பி.ஏ.சங்மா, நாகலாந்து முதல்–மந்திரி நேய்பியு ரியோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களை கூட்டத்தில், பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்தார். இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கூட்டணி கட்சிகளுக்கு பாராட்டு
அவருக்கு பாராட்டு தெரிவித்து கூட்டணி கட்சி தலைவர்கள் பேசினார்கள்.
இந்த கூட்டத்தில் நன்றி தெரிவித்து பேசிய மோடி, ‘‘நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து புதிய அரசை நடத்த வேண்டும். மக்கள் தனிப்பெரும்பான்மையை எங்களுக்கு அளித்திருந்தாலும்கூட, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒவ்வொரு கட்சியும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை இல்லாவிட்டால் இத்தனை எண்ணிக்கையை பாரதீய ஜனதா பெற்றிருக்க முடியாது. கூட்டணி கட்சிகள் அவரவர் பகுதிகளில் ஆற்றிய பணி, மிகச்சிறப்பானது’’ என கூறினார்.
ஜனாதிபதியுடன் தலைவர்கள் சந்திப்பு
இந்த கூட்டத்தை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றனர். இந்த குழுவில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி, நிதின் கட்காரி, அனந்த் குமார், தவர்சந்த் கெல்லாட், அகாலிதள தலைவர்கள் பிரகாஷ் சிங் பாதல், சுக்பீர் சிங் பாதல், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், நாகலாந்து முதல்–மந்திரியும், நாகாலாந்து மக்கள் முன்னணி தலைவருமான நேய்பியு ரியோ இடம்பெற்றிருந்தனர்.
அவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, பாராளுமன்ற பாரதீய ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டிருப்பதை தெரிவித்தனர். கட்சி தலைவர்களின் ஆதரவு கடிதங்களை வழங்கினர். நரேந்திர மோடியை அரசு அமைப்பதற்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
பிரணாப் முகர்ஜியுடன் மோடி சந்திப்பு
இதையடுத்து பிற்பகல் 3.15 மணிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி சந்தித்தார். மலர்க்கொத்து வழங்கினார். அப்போது பிரணாப் முகர்ஜி, ‘‘நல்வரவு’’ என்று தொடர்ந்து 3 முறை கூறி வரவேற்று பூங்கொத்து அளித்தார்.
அதைத் தொடர்ந்து அவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது, பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா பெற்ற அமோக வெற்றிக்காக மோடியை பிரணாப் முகர்ஜி வாழ்த்தினார்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
26–ந் தேதி பதவி ஏற்பு
பாரதீய ஜனதா பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, ஜனாதிபதியை இன்று (நேற்று) பகல் 3.15 மணிக்கு சந்தித்தார். பாரதீய ஜனதாவின் பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாலும், மக்களவையில் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை இருப்பதாலும், நரேந்திர மோடியை இந்திய நாட்டின் பிரதமராக ஜனாதிபதி நியமனம் செய்துள்ளார். அவரது மந்திரிசபையில் இடம்பெறப்போகிற மந்திரிகளின் பட்டியலை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். ஜனாதிபதி அவர்களுக்கு 26–ந் தேதி மாலை 6 மணிக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பதவி ஏற்பு விழா எங்கே?
பதவி ஏற்பு விழா, 26–ந் தேதி மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையின் பிரமாண்ட முற்றத்தில் திறந்த வெளியில் அமைக்கப்படுகிற மேடையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடிக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெறும் மந்திரிகளுக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து ஜனாதிபதியுடன் புதிய பிரதமரும், அவரது மந்திரிசபை சகாக்களும் குழு புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள்.
ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் நடந்த விழாவில்தான் முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் பதவி ஏற்றார். அவருடைய வழியைப் பின்பற்றி நரேந்திர மோடியும் பதவி ஏற்பு விழாவை ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் வைத்துக்கொள்ள விரும்பினார்.
வழக்கமாக பதவி ஏற்பு விழா நடக்கிற ஜனாதிபதி மாளிகையின் தர்பார் மண்டபத்தில் 500 பேர் மட்டுமே அமர முடியும். ஆனால் மோடியின் மந்திரிசபை பதவி ஏற்பு விழாவிற்கு சுமார் 3 ஆயிரம் பேர் அழைக்கப்பட உள்ளனர். இதற்கெல்லாம் வசதியாகத்தான் ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் பதவி ஏற்பு விழா நடக்கிறது.
Tags : #நரேந்திரமோடி #மோடி #இந்தியா #பிரதமர் #பாஜக
பிரதமராக பதவியேற்பதற்கு முன்பாகவே பாராட்டுகளை அள்ளும் மோடி
புதுடில்லி: நாட்டின் 14வது பிரதமராக நரேந்திர மோடி வரும் 26ம் தேதி பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், பதவியேற்பதற்கு முன்பாகவே தனது செயல்பாடுகளின் காரணமாக, எதிர்க்கட்சித்தலைவர்கள் உள்ளிட்ட பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார் நரேந்திர மோடிசமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 336 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. நரேந்திர மோடி தலைமையில் அமையவுள்ள இந்த அரசு வரும் 26ம் தேதி பதவியேற்கவுள்ளது. இந்நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவிற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பதவியேற்பு விழாவிற்கு வருமாறு, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட சார்க் நாடுகளுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
மோடியின் இந்த அழைப்பு பல்வேறு தரப்பினரிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பலவீனமான வெளியுறவுக் கொள்கைகளை மாற்றி, அண்டை நாடுகளுடன் வலுவான உறவுகளை மோடி ஏற்படுத்துவார் என அரசியல் நோக்கர்கள் பாராட்டுகின்றனர்.
பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளதை, ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, எதிர்க்கட்சித் தலைவர் மெகபூபா முப்தி ஆகியோர் வரவேற்றுள்ளனர். இது தங்களுக்கு மிகுந்த இன்ப அதிர்ச்சியை அளிப்பதாகவும், இதை பயன்படுத்தி காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண மோடி முயல வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதே போல், நேற்று பார்லிமென்ட் மைய மண்டபத்தில் மோடி ஆற்றிய உரைக்கு எதிர்க்கட்சியினரும் கூட பாராட்டு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி எம்.பி., சசி தரூர் தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் மோடி ஆற்றிய உரை தன்னை மிகவும் உணர்ச்சிவயப்படுத்தி விட்டதாக தெரிவித்துள்ளார். மோடியின் திட்டங்களை அவர் செயல்படுத்தி, அதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் அதன் பயன் சென்றடைய நாமும் பாடுபடவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், பார்லிமென்ட் மைய மண்டபத்தில் மோடி ஆற்றிய உரையில், ஏழைகளின் வாழ்க்கை உயர அரசு சிந்திக்கும். உழைக்கும் என்று தெரிவித்திருந்தார். இளைஞர்களுக்காகவும், மகளிருக்காகவும் பாடுபடப்போவதாக தெரிவித்திருந்தார். அவரது பிரதமர் பதவிக்காலத்தில் அனைத்து தரப்பு மக்களுடைய ஆசைகளும் நிறைவேற வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
புதுடில்லி: நாட்டின் 14வது பிரதமராக நரேந்திர மோடி வரும் 26ம் தேதி பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், பதவியேற்பதற்கு முன்பாகவே தனது செயல்பாடுகளின் காரணமாக, எதிர்க்கட்சித்தலைவர்கள் உள்ளிட்ட பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார் நரேந்திர மோடிசமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 336 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. நரேந்திர மோடி தலைமையில் அமையவுள்ள இந்த அரசு வரும் 26ம் தேதி பதவியேற்கவுள்ளது. இந்நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவிற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பதவியேற்பு விழாவிற்கு வருமாறு, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட சார்க் நாடுகளுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
மோடியின் இந்த அழைப்பு பல்வேறு தரப்பினரிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பலவீனமான வெளியுறவுக் கொள்கைகளை மாற்றி, அண்டை நாடுகளுடன் வலுவான உறவுகளை மோடி ஏற்படுத்துவார் என அரசியல் நோக்கர்கள் பாராட்டுகின்றனர்.
பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளதை, ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, எதிர்க்கட்சித் தலைவர் மெகபூபா முப்தி ஆகியோர் வரவேற்றுள்ளனர். இது தங்களுக்கு மிகுந்த இன்ப அதிர்ச்சியை அளிப்பதாகவும், இதை பயன்படுத்தி காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண மோடி முயல வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதே போல், நேற்று பார்லிமென்ட் மைய மண்டபத்தில் மோடி ஆற்றிய உரைக்கு எதிர்க்கட்சியினரும் கூட பாராட்டு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி எம்.பி., சசி தரூர் தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் மோடி ஆற்றிய உரை தன்னை மிகவும் உணர்ச்சிவயப்படுத்தி விட்டதாக தெரிவித்துள்ளார். மோடியின் திட்டங்களை அவர் செயல்படுத்தி, அதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் அதன் பயன் சென்றடைய நாமும் பாடுபடவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், பார்லிமென்ட் மைய மண்டபத்தில் மோடி ஆற்றிய உரையில், ஏழைகளின் வாழ்க்கை உயர அரசு சிந்திக்கும். உழைக்கும் என்று தெரிவித்திருந்தார். இளைஞர்களுக்காகவும், மகளிருக்காகவும் பாடுபடப்போவதாக தெரிவித்திருந்தார். அவரது பிரதமர் பதவிக்காலத்தில் அனைத்து தரப்பு மக்களுடைய ஆசைகளும் நிறைவேற வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
குஜராத்தை முன்மாதிரியாக கொண்டு தேர்தலை சந்தித்ததால் வெற்றி - நரேந்திர மோடி உரை
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து மோடி பிரதமராக பதவி ஏற்க உள்ள நிலையில், குஜராத் சட்டசபையில் அவருக்கு இன்று காலைவழியனுப்பு விழா நடக்கிறது. இதற்காக குஜராத் மாநில சட்டசபையின் சிறப்பு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்து கொண்டார். நரேந்திர மோடி பங்கேற்கும் கடைசி சட்டமன்றக் கூட்டம் இது. கூட்டத்தில் நரேந்திர மோடிக்கு சபாநாயகர் வாஜூபாய் வாலா மற்றும் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பாராட்டு தெரிவித்தனர்.
அனைவரது பாராட்டையும் பெற்றுக் கொண்ட நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், குஜராத்தை முன்மாதிரியாக கொண்டு தேர்தலை சந்தித்ததால் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். குஜராத் மாநில வளர்ச்சிக்கு அனைத்து தலைவர்களும் அவர்களது பங்களிப்பை செலுத்தினர். குஜராத் மேலும் வளர்ச்சி அடையும். தற்போது உள்ள நிலையை விட குஜராத் மேலும் வளரும். குஜராத் தலைவர்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. கடந்த அரசு பல திட்டங்களை முடிக்காமல் பாதியில் விட்டுச் சென்றுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
பிற்பகல் 3: 30 மணிக்கு மோடி, பாரதிய ஜனதா பிரதிநிதிகளுடன் சேர்ந்து கவர்னர் கமலா பேனிவாலை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார். பிறகு சபாநாயகர் வஜூபாய் வாலாவை சந்தித்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தையும் அவர் சமர்பிக்க உள்ளார். பின்னர் அடுத்த முதல்-மந்திரியை தேர்வு செய்ய பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். புதிய முதல் மந்திரியாக பொறுப்பேற்க ஆனந்தி பென் படேல் தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் குஜராத் முதல் மந்திரி நாளை பதவியேற்கவுள்ளார். ஆனந்தி பென் படேல் குஜராத் அமைச்சரவையில் வருவாய்துறையை கவனித்து வருகிறார். நரேந்திர மோடி பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டபோது ஆனந்தி பென் முக்கிய பணிகளை கவனித்து வந்தார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து மோடி பிரதமராக பதவி ஏற்க உள்ள நிலையில், குஜராத் சட்டசபையில் அவருக்கு இன்று காலைவழியனுப்பு விழா நடக்கிறது. இதற்காக குஜராத் மாநில சட்டசபையின் சிறப்பு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்து கொண்டார். நரேந்திர மோடி பங்கேற்கும் கடைசி சட்டமன்றக் கூட்டம் இது. கூட்டத்தில் நரேந்திர மோடிக்கு சபாநாயகர் வாஜூபாய் வாலா மற்றும் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பாராட்டு தெரிவித்தனர்.
அனைவரது பாராட்டையும் பெற்றுக் கொண்ட நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், குஜராத்தை முன்மாதிரியாக கொண்டு தேர்தலை சந்தித்ததால் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். குஜராத் மாநில வளர்ச்சிக்கு அனைத்து தலைவர்களும் அவர்களது பங்களிப்பை செலுத்தினர். குஜராத் மேலும் வளர்ச்சி அடையும். தற்போது உள்ள நிலையை விட குஜராத் மேலும் வளரும். குஜராத் தலைவர்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. கடந்த அரசு பல திட்டங்களை முடிக்காமல் பாதியில் விட்டுச் சென்றுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
பிற்பகல் 3: 30 மணிக்கு மோடி, பாரதிய ஜனதா பிரதிநிதிகளுடன் சேர்ந்து கவர்னர் கமலா பேனிவாலை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார். பிறகு சபாநாயகர் வஜூபாய் வாலாவை சந்தித்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தையும் அவர் சமர்பிக்க உள்ளார். பின்னர் அடுத்த முதல்-மந்திரியை தேர்வு செய்ய பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். புதிய முதல் மந்திரியாக பொறுப்பேற்க ஆனந்தி பென் படேல் தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் குஜராத் முதல் மந்திரி நாளை பதவியேற்கவுள்ளார். ஆனந்தி பென் படேல் குஜராத் அமைச்சரவையில் வருவாய்துறையை கவனித்து வருகிறார். நரேந்திர மோடி பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டபோது ஆனந்தி பென் முக்கிய பணிகளை கவனித்து வந்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஒரு கோப்பையும் நிலுவையில் வைக்காத நரேந்திர மோடி
9 கட்டங்களாக நடந்த பாராளுமன்ற தேர்தலில், பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி, நாடு முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்தார். அவர் 25 மாநிலங்களில் 3 லட்சம் கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்து, 437 பிரசார கூட்டங்களில் பங்கேற்றுப் பேசினார்.
தேர்தல் வெற்றிக்கு பின்னர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்ட நிலையில், நேற்று அவர் குஜராத் முதல்-மந்திரி பதவியை விட்டு விலகினார். அதன்பின்னர் புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்க நடந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மோடி பேசினார்.
அப்போது அவர், நான் முதல்&மந்திரி பதவியை விட்டு விலகிவிட்டேன். இப்போது நான் முன்னாள் முதல்&மந்திரி ஆகிவிட்டேன். ஆனால் ஒரு கோப்பைக்கூட (பைல்) பார்க்காமல் விட்டு வைக்கவில்லை. தேர்தலின்போது பிரசாரத்தில் தீவிரமாக இருந்தபோதும்கூட, இரவில் எனக்கு எப்போதெல்லாம் சமயம் வாய்த்ததோ, அப்போதெல்லாம் அதிகாரிகளை அழைத்து பைல்களை பார்த்து என் வேலைகளை நிறைவு செய்து விட்டேன் என கூறினார்.
9 கட்டங்களாக நடந்த பாராளுமன்ற தேர்தலில், பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி, நாடு முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்தார். அவர் 25 மாநிலங்களில் 3 லட்சம் கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்து, 437 பிரசார கூட்டங்களில் பங்கேற்றுப் பேசினார்.
தேர்தல் வெற்றிக்கு பின்னர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்ட நிலையில், நேற்று அவர் குஜராத் முதல்-மந்திரி பதவியை விட்டு விலகினார். அதன்பின்னர் புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்க நடந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மோடி பேசினார்.
அப்போது அவர், நான் முதல்&மந்திரி பதவியை விட்டு விலகிவிட்டேன். இப்போது நான் முன்னாள் முதல்&மந்திரி ஆகிவிட்டேன். ஆனால் ஒரு கோப்பைக்கூட (பைல்) பார்க்காமல் விட்டு வைக்கவில்லை. தேர்தலின்போது பிரசாரத்தில் தீவிரமாக இருந்தபோதும்கூட, இரவில் எனக்கு எப்போதெல்லாம் சமயம் வாய்த்ததோ, அப்போதெல்லாம் அதிகாரிகளை அழைத்து பைல்களை பார்த்து என் வேலைகளை நிறைவு செய்து விட்டேன் என கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
குஜராத் கோப்பை பார்த்தீங்க...இனிமே எந்த கேப்லையும் தமிழனுக்கு ஆப்பு வைக்காத மாதிரி கோப்பை பாருங்க...
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
வாழ்த்துக்கள். மோடி ஜி. நல்ல ஒரு நபரை தேர்ந்தெடுத்து விட்டதாய் நாங்கள் நினைக்கிறோம். எங்கள் இந்தியாவின் தலை எழுத்தை கொஞ்சம் மாற்றுங்கள்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:[link="/t110407-topic#1065085"] ஒரு கோப்பையும் நிலுவையில் வைக்காத நரேந்திர மோடி
9 கட்டங்களாக நடந்த பாராளுமன்ற தேர்தலில், பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி, நாடு முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்தார். அவர் 25 மாநிலங்களில் 3 லட்சம் கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்து, 437 பிரசார கூட்டங்களில் பங்கேற்றுப் பேசினார்.
தேர்தல் வெற்றிக்கு பின்னர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்ட நிலையில், நேற்று அவர் குஜராத் முதல்-மந்திரி பதவியை விட்டு விலகினார். அதன்பின்னர் புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்க நடந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மோடி பேசினார்.
அப்போது அவர், நான் முதல்&மந்திரி பதவியை விட்டு விலகிவிட்டேன். இப்போது நான் முன்னாள் முதல்&மந்திரி ஆகிவிட்டேன். ஆனால் ஒரு கோப்பைக்கூட (பைல்) பார்க்காமல் விட்டு வைக்கவில்லை. தேர்தலின்போது பிரசாரத்தில் தீவிரமாக இருந்தபோதும்கூட, இரவில் எனக்கு எப்போதெல்லாம் சமயம் வாய்த்ததோ, அப்போதெல்லாம் அதிகாரிகளை அழைத்து பைல்களை பார்த்து என் வேலைகளை நிறைவு செய்து விட்டேன் என கூறினார்.
Great Man ,
மோடிக்கு அப்துல் கலாம் சொன்ன 3 அறிவுரைகள்!
புதுடெல்லி: மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வாழ்த்து கூறியபோது அவர் கூறிய 3 அறிவுரைகளை நிறைவேற்றுவேன் என மோடி உறுதி அளித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நேற்று முன்தினம் நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்து எடுக்கப்பட்டதும், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர், ''உங்கள் தலைமையில் இந்தியா அமைதி, வளம், வளர்ச்சியை பெற்று சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்" என்றார்.
பா.ஜ.க. அரசு எந்தெந்த திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் அப்போது நரேந்திர மோடியிடம் அப்துல்கலாம் பட்டியலிட்டார். சுமார் 10 நிமிடங்கள் மோடியிடம் பேசிய அப்துல்கலாம், 3 முக்கிய அறிவுரைகளையும் கூறினார்.
இந்தியாவில் மொத்தம் சுமார் 20 கோடி குடும்பங்கள் இருக்கின்றன. இதில் 15 கோடி குடும்பங்கள் இன்னமும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளன. அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுங்கள். அது மட்டுமின்றி ஒவ்வொரு குடும்பத்திலும் சம்பாதிக்கும் ஆற்றலை உருவாக்குங்கள் என்று அப்துல்கலாம் கேட்டுக் கொண்டார்.
அடுத்து, நதி நீர் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று மோடியிடம் அப்துல் கலாம் அறிவுறுத்தினார். இதற்காக தேசிய நீர்வழிப்பாதை திட்டத்தை அமல்படுத்த கேட்டுக் கொண்டார். நதிகளை இணைத்து உருவாக்கப்படும் இந்த திட்டத்தால் நாடெங்கும் உள்ள 6 லட்சம் கிராமங்களும் நகரங்களும் தடையின்றி தண்ணீர் பெறுவது உறுதிப்படுத்தப்படும் என்றார்.
இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினால் கடும் வறட்சி காலத்தில் கூட எந்த ஊரிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது. அது போல நிறைய மழை பெய்யும் போது, மழை தண்ணீரை மற்ற பகுதிகளுக்கு திருப்பி விட்டு வெள்ளத்தால் ஏற்படும் அழிவுகள், சேதங்களை தவிர்க்க முடியும் என்றும் மோடியிடம் அப்துல்கலாம் விளக்கிக் கூறினார்.
மூன்றாவதாக வேலை வாய்ப்பை அதிகரிக்க செய்வதிலும் கவனம் செலுத்தும்படி கேட்டுக் கொண்டார். இந்தியாவில் சுமார் 6½ கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பதாக கூறிய அப்துல்கலாம், அவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்தால் இந்தியாவில் ஒருங்கிணைந்த பொருளாதார வளர்ச்சியும் செழிப்பும் உண்டாகும் என்றார்.
உறுதி அளித்த மோடி
அப்துல்கலாம் சொன்ன இந்த 3 அறிவுரைகளையும் நரேந்திர மோடி பொறுமையாகக் கேட்டுக் கொண்டார். அதன்பின், ''உங்கள் அறிவுரைகளை ஏற்று நல்லாட்சி செய்து, நாட்டின் ஒருங்கிணைந்த பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவேன்" என்று அப்துல்கலாமிடம் மோடி உறுதியளித்தார்.
இதற்கு, மோடிக்கு தனது முக நூல் (பேஸ்புக்) பக்கத்தில் அப்துல்கலாம் நன்றி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வாழ்த்து கூறியபோது அவர் கூறிய 3 அறிவுரைகளை நிறைவேற்றுவேன் என மோடி உறுதி அளித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நேற்று முன்தினம் நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்து எடுக்கப்பட்டதும், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர், ''உங்கள் தலைமையில் இந்தியா அமைதி, வளம், வளர்ச்சியை பெற்று சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்" என்றார்.
பா.ஜ.க. அரசு எந்தெந்த திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் அப்போது நரேந்திர மோடியிடம் அப்துல்கலாம் பட்டியலிட்டார். சுமார் 10 நிமிடங்கள் மோடியிடம் பேசிய அப்துல்கலாம், 3 முக்கிய அறிவுரைகளையும் கூறினார்.
இந்தியாவில் மொத்தம் சுமார் 20 கோடி குடும்பங்கள் இருக்கின்றன. இதில் 15 கோடி குடும்பங்கள் இன்னமும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளன. அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுங்கள். அது மட்டுமின்றி ஒவ்வொரு குடும்பத்திலும் சம்பாதிக்கும் ஆற்றலை உருவாக்குங்கள் என்று அப்துல்கலாம் கேட்டுக் கொண்டார்.
அடுத்து, நதி நீர் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று மோடியிடம் அப்துல் கலாம் அறிவுறுத்தினார். இதற்காக தேசிய நீர்வழிப்பாதை திட்டத்தை அமல்படுத்த கேட்டுக் கொண்டார். நதிகளை இணைத்து உருவாக்கப்படும் இந்த திட்டத்தால் நாடெங்கும் உள்ள 6 லட்சம் கிராமங்களும் நகரங்களும் தடையின்றி தண்ணீர் பெறுவது உறுதிப்படுத்தப்படும் என்றார்.
இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினால் கடும் வறட்சி காலத்தில் கூட எந்த ஊரிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது. அது போல நிறைய மழை பெய்யும் போது, மழை தண்ணீரை மற்ற பகுதிகளுக்கு திருப்பி விட்டு வெள்ளத்தால் ஏற்படும் அழிவுகள், சேதங்களை தவிர்க்க முடியும் என்றும் மோடியிடம் அப்துல்கலாம் விளக்கிக் கூறினார்.
மூன்றாவதாக வேலை வாய்ப்பை அதிகரிக்க செய்வதிலும் கவனம் செலுத்தும்படி கேட்டுக் கொண்டார். இந்தியாவில் சுமார் 6½ கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பதாக கூறிய அப்துல்கலாம், அவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்தால் இந்தியாவில் ஒருங்கிணைந்த பொருளாதார வளர்ச்சியும் செழிப்பும் உண்டாகும் என்றார்.
உறுதி அளித்த மோடி
அப்துல்கலாம் சொன்ன இந்த 3 அறிவுரைகளையும் நரேந்திர மோடி பொறுமையாகக் கேட்டுக் கொண்டார். அதன்பின், ''உங்கள் அறிவுரைகளை ஏற்று நல்லாட்சி செய்து, நாட்டின் ஒருங்கிணைந்த பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவேன்" என்று அப்துல்கலாமிடம் மோடி உறுதியளித்தார்.
இதற்கு, மோடிக்கு தனது முக நூல் (பேஸ்புக்) பக்கத்தில் அப்துல்கலாம் நன்றி தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மோடி பதவியேற்பு விழாவில் நவாஸ் பங்கேற்க வாய்ப்பு
இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு மிகுதியாகியுள்ளது.
அதேவேளையில், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாகிஸ்தான் அரசு இன்று இரவு அல்லது நாளை வெளியிடும் எனத் தெரிகிறது.
இந்தியாவின் 14-வது பிரதமராக நரேந்திர மோடி இம்மாதம் 26-ம் தேதி (திங்கள் கிழமை) பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க வருமாறு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஆப்கன் அதிபர் கர்சாய், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, இலங்கை அதிபர் ராஜபக்சே மற்றும் தெற்கு ஆசிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தியாவுக்கு இந்த நாடுகளுக்கும் இடையே சமீபகாலமாக நடந்து வந்த வெளியுறவு கொள்கை வேறுபாடு உள்ளிட்ட சில பிரச்சினைகளால், இந்தத் தலைவர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதில் பல்வேறு விதமான அணுகுமுறைகளும் முரணான காரணங்களும் இருந்து வருகின்றன.
இந்நிலையில் இன்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், வரும் 26-ம் தேதி மோடியின் பதிவியேற்பு விழாவில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்ததாகவும், அதேவேளையில் அதுகுறித்த ஆலோசனை நீடித்து வருவதாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள வாய்ப்பு அதிகம் என பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல் நடத்துவதும், அதனை எதிர்த்து இந்திய ராணுவம் பதிலடி தருவதுமாய், எல்லையில் அவ்வப்போது பதற்றம் நிலவுகிறது.
இதுகுறித்து பாகிஸ்தான் செய்தித் தொடர்பாளர் பரூக் அளித்த பேட்டி ஒன்றில், "புதிதாக பதவியேற்க உள்ள இந்திய அரசின் இந்த நல்லிக்கணத்துக்கு பாகிஸ்தான் கைமாறு செய்யும்" என கூறியுள்ளார்.
நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாய், வங்கதேச பிரதமர் ஷேக் ஹஸினா சார்பில் அந்நாட்டு சபாநாயகர் ஷிரின் ஷர்மின் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு மிகுதியாகியுள்ளது.
அதேவேளையில், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாகிஸ்தான் அரசு இன்று இரவு அல்லது நாளை வெளியிடும் எனத் தெரிகிறது.
இந்தியாவின் 14-வது பிரதமராக நரேந்திர மோடி இம்மாதம் 26-ம் தேதி (திங்கள் கிழமை) பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க வருமாறு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஆப்கன் அதிபர் கர்சாய், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, இலங்கை அதிபர் ராஜபக்சே மற்றும் தெற்கு ஆசிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தியாவுக்கு இந்த நாடுகளுக்கும் இடையே சமீபகாலமாக நடந்து வந்த வெளியுறவு கொள்கை வேறுபாடு உள்ளிட்ட சில பிரச்சினைகளால், இந்தத் தலைவர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதில் பல்வேறு விதமான அணுகுமுறைகளும் முரணான காரணங்களும் இருந்து வருகின்றன.
இந்நிலையில் இன்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், வரும் 26-ம் தேதி மோடியின் பதிவியேற்பு விழாவில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்ததாகவும், அதேவேளையில் அதுகுறித்த ஆலோசனை நீடித்து வருவதாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள வாய்ப்பு அதிகம் என பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல் நடத்துவதும், அதனை எதிர்த்து இந்திய ராணுவம் பதிலடி தருவதுமாய், எல்லையில் அவ்வப்போது பதற்றம் நிலவுகிறது.
இதுகுறித்து பாகிஸ்தான் செய்தித் தொடர்பாளர் பரூக் அளித்த பேட்டி ஒன்றில், "புதிதாக பதவியேற்க உள்ள இந்திய அரசின் இந்த நல்லிக்கணத்துக்கு பாகிஸ்தான் கைமாறு செய்யும்" என கூறியுள்ளார்.
நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாய், வங்கதேச பிரதமர் ஷேக் ஹஸினா சார்பில் அந்நாட்டு சபாநாயகர் ஷிரின் ஷர்மின் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நவாஸுக்கு அழைப்பு: பாஜகவுக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி
மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ், பயங்கரவாத விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வருமாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட சார்க் அமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பை ஏற்பது குறித்து ஆலோசித்து வருவதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகமும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமருக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு தொடர்பாக பாஜகவை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "தேர்தல் பிரச்சாரத்தின்போது மட்டும் பாஜக, பாகிஸ்தான் குறித்து அனைத்து வகையிலும் வெறுப்புப் போக்கினை வெளிப்படுத்தியது. ஆனால், அவர்கள் தற்போது பாகிஸ்தான் பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
பயங்கரவாத எதிர்ப்பு குறித்து பெரிய அளவில் பிரச்சாரம் செய்த பாஜக, தற்போது தன் நிலையை மாற்றிக் கொண்டதா என தெரிய வேண்டும்.
நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று, பாஜக ஆட்சி அமைக்கிறது. அதனால் அவர்கள் தங்கள் பதவியேற்பு விழாவிற்கு யாரை வேண்டுமானாலும் அழைக்கலாம்.
ஆனால், இதே கட்சிதான், மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது பாகிஸ்தானுடன் அவர் மேற்கொண்ட நுல்லுறவு கொள்கைகள் அனைத்தையும் விமர்சித்தது. பயங்கரவாதத்துடன் மன்மோகன் சிங் வெறும் பேச்சுவார்த்தையை நடத்தி கொண்டிருக்கிறார் என்று விமர்சித்தது" என்று திவாரி கடுமையாக பேசினார்.
மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ், பயங்கரவாத விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வருமாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட சார்க் அமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பை ஏற்பது குறித்து ஆலோசித்து வருவதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகமும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமருக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு தொடர்பாக பாஜகவை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "தேர்தல் பிரச்சாரத்தின்போது மட்டும் பாஜக, பாகிஸ்தான் குறித்து அனைத்து வகையிலும் வெறுப்புப் போக்கினை வெளிப்படுத்தியது. ஆனால், அவர்கள் தற்போது பாகிஸ்தான் பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
பயங்கரவாத எதிர்ப்பு குறித்து பெரிய அளவில் பிரச்சாரம் செய்த பாஜக, தற்போது தன் நிலையை மாற்றிக் கொண்டதா என தெரிய வேண்டும்.
நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று, பாஜக ஆட்சி அமைக்கிறது. அதனால் அவர்கள் தங்கள் பதவியேற்பு விழாவிற்கு யாரை வேண்டுமானாலும் அழைக்கலாம்.
ஆனால், இதே கட்சிதான், மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது பாகிஸ்தானுடன் அவர் மேற்கொண்ட நுல்லுறவு கொள்கைகள் அனைத்தையும் விமர்சித்தது. பயங்கரவாதத்துடன் மன்மோகன் சிங் வெறும் பேச்சுவார்த்தையை நடத்தி கொண்டிருக்கிறார் என்று விமர்சித்தது" என்று திவாரி கடுமையாக பேசினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 14 • 1, 2, 3 ... 7 ... 14
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 14
|
|