புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ‘செல்’ மொழி Poll_c10 ‘செல்’ மொழி Poll_m10 ‘செல்’ மொழி Poll_c10 
83 Posts - 55%
heezulia
 ‘செல்’ மொழி Poll_c10 ‘செல்’ மொழி Poll_m10 ‘செல்’ மொழி Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
 ‘செல்’ மொழி Poll_c10 ‘செல்’ மொழி Poll_m10 ‘செல்’ மொழி Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
 ‘செல்’ மொழி Poll_c10 ‘செல்’ மொழி Poll_m10 ‘செல்’ மொழி Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
 ‘செல்’ மொழி Poll_c10 ‘செல்’ மொழி Poll_m10 ‘செல்’ மொழி Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
 ‘செல்’ மொழி Poll_c10 ‘செல்’ மொழி Poll_m10 ‘செல்’ மொழி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 ‘செல்’ மொழி Poll_c10 ‘செல்’ மொழி Poll_m10 ‘செல்’ மொழி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ‘செல்’ மொழி Poll_c10 ‘செல்’ மொழி Poll_m10 ‘செல்’ மொழி Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
 ‘செல்’ மொழி Poll_c10 ‘செல்’ மொழி Poll_m10 ‘செல்’ மொழி Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
 ‘செல்’ மொழி Poll_c10 ‘செல்’ மொழி Poll_m10 ‘செல்’ மொழி Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘செல்’ மொழி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 08, 2014 10:00 am


அந்த விடிகாலை நேரத்திலும் ரயில் நிலையம் தூங்காது விழித்திருந்தது.”தயவு செய்து வண்டி நிற்கும்போது கழிவறைகளைப் பயன்படுத்தாதீர்கள்’ என்ற அறிவிப்பை அலட்சியம் செய்ததன் துர்நாற்றம் எங்கும் வீசிக் கொண்டிருக்க… என்னோடு சேர்ந்து பதினோரு பேர் நின்று கொண்டு இருந்தோம். இன்னும் பன்னிரண்டாவது நபர் வரவில்லை. “”செல்ல எடுக்க மாட்டேன்றான். அநேகமாக வந்துட்டு இருப்பான்னு நெனக்கறேன்.”

“”இன்னும் இருபது நிமிடத்தில் சேலம் வழியாக கோவை வரை செல்லும் எக்ஸ்பிரஸ் பிளாட்பாரம் மூன்றில் இருந்து….” அறிவிப்பு காற்றில் பரவிற்று.

“”இன்னொரு முறை போடுப்பா, தூங்கிக்கிட்டு இருக்கப் போறான்.”

மாதத்துக்கு இரண்டு நாட்கள் அலுவலக செலவிலேயே விடுமுறைப் பயணம் எனக்கு உண்டு. என்னைப் போலவே நண்பர்கள் கூடி ஒருமுறை தனியாகவும், இன்னொருமுறை குடும்பத்தோடும் பயணம் போவது வழக்கம். இம்முறை தனியர்கள் பயணம். சேலம் வரை சென்று பிறகு அங்கிருந்து கார் மூலம் கொல்லிமலை செல்வதாகப் பயணத் திட்டம்.

ரயில் ஒன்று பெருத்த சப்தத்துடன் அப்போதுதான் வந்து விட்டிருந்தது. அதிலிருந்து இறங்கிய மக்கள் கூட்டம் ஒரே திசையில் வேகமாக நகர்ந்தபடி இருந்தது. ஆறுமணிக்கு நாங்கள் பயணிக்க வேண்டிய ரயில் தயாராக இருந்தது. அது புறப்பட பத்து நிமிடங்கள் இருந்த போது…பன்னிரண்டாவது நண்பன் வந்து சேர்ந்தான்.

எல்லாருடைய முகங்களிலும் மகிழ்ச்சி ஆடிற்று.

“”என்னடா கடைசி நேரத்துல டென்ஷன் ஏத்திட்டியே” அவனுடைய லக்கேஜ் மட்டும் அதிகமாக இருந்தது. “”பாத்து வைங்கப்பா, உடைஞ்சிடப் போவுது”

சரியாக ஆறுமணிக்கு ரயில் கிளம்பிற்று. நகரத்தின் வெப்பம் அப்போதே துவங்கிவிட்டிருந்தது. பகல் நேர ரயிலாதலால் காலை புத்துணர்வுடன் மக்கள் பயணிக்க, கீழே நின்றோரின் கையசைப்பில் பிளாட்பாரம் பின்னேறிக் கொண்டிருந்தது.

கொஞ்சநேரத்தில் ரயில் வேகம் பிடித்தது. “”விடுறா மாப்ள…அவனுக்கு பைல்ஸ் ப்ராப்ளம்…அதான் வர்ல…”

“”அவனுக்கு ஃபைல்ஸ்லயும் ப்ராப்ளம்…இன்னிக்குக் கூட ஆபிஸ்ல கவுந்தடிச்சுக்கிட்டு கணக்கு பாத்துக்கிட்டிருப்பான்டா”

நானும் நண்பர்களுமாகப் பேசிச் சிரித்தபடி.. எனக்கு நாக்கில் எச்சில் ஊறிற்று. கடைசியாய் வந்த நண்பன் கொண்டுவந்த லக்கேஜை விட்டுக் கண்ணும் மனமும் நகர மறுத்தது.

செல் சிணுங்கி சிந்தனையைக் கலைக்க…

“”அப்பா…சொல்லுங்கப்பா” என்றேன்.

“”ஞாயிற்றுக்கிழமையின்னா வீடு தங்கணும். இல்ல பொண்டாட்டி பிள்ளைங்களோட எங்கியாவது போகணும்…அத விட்டுட்டு எங்கடா போயிட்டு இருக்க. காலைல எழுந்து வந்து பாத்தா ஆளக் காணாம்”

அவர் கடைசி வார்த்தையைச் சொல்லி முடிப்பதற்குள் செல் கோபுரமிழந்து மெüனமாயிற்று. இம்சை அரசன்!

காலை எழுந்ததும் நான் இல்லாதது கண்டு…உடன்…

மீண்டும் செல் ஒலித்தது.

“”ஏன்டா…அவ்ளோ ஆயிடுச்சா உனக்கு…எதுக்குடா செல்ல கட் பண்ற? மரியாதைங்கறதே இல்ல…எங்க போய்க்கிட்டிருக்கீங்க”

“”கொல்லிமலை போலான்னு”

“”யார் யாரெல்லாம்…அதே க்ரூப்பா…அப்ப உன் சினேகிதன் இருப்பானே…அந்த ஆடிட்டர்..அவன்கிட்ட கொடு”

ஆடிட்டர் நண்பன்.

“”வணக்கம் மாமா…எப்படியிருக்கீங்க?” என்று சிரித்துக் கொண்டே துவங்க, இரண்டு வினாடிக்குமேல் அவன் முகத்தில் சிரிப்பேதும் இல்லை.

“”சரிங்க மாமா…ஆமாங்க அங்கிள்” என்பதையே ஐந்துநிமிடம் மாற்றி மாற்றிச் சொல்லிவிட்டு,

“”யப்பா…காது பத்திக்கிட்டு எரியுது” என்று சொல்லியபடி செல்லை என்னிடம் நீட்ட…

“”சரி..நான் விழிக்கறதுக்குள்ள தப்பிச்சுப் போயிட்ட..அருவிப் பக்கமெல்லாம் போகாதே”

என்று துண்டித்தார்.

“”இவனுக்கு ஒரு ஸ்கூல் யூனிஃபார்ம் போட்டுவிட்டு, பெஞ்ச் மேல நிக்க வெக்கலாம். முப்பத்தேழு வயசாகுது. இன்னும் இவனப் போட்டு வாங்கறார்.”

நண்பர்களின் கேலியும், சிரிப்பும் “தடக்…தடக்’ ஓசையில் மறைய எனக்கு அடிநாக்கில் எச்சில் ஊறிற்று.

“”எப்படா ஆரம்பிக்கலாம்” என்றேன்.

ரயிலில் இருந்து இறங்கி வாகனத்தைப் பிடித்தாகிவிட்டது…..

டிரைவர் சின்னப் பையனாய் இருந்தாலும் எந்த ஒரு வளைவுக்கும் சிறிது அஞ்சாமல் டெம்போ டிராவலர் மேலே ஏறிக் கொண்டிருந்தது.

மாசும், மருவும் இல்லாத பச்சை எங்கும் கண் சிமிட்டிக் கொண்டிருக்க, வேனின் எந்திர ஓசை காதை அறுத்தது.

“”பாதில நிறுத்தி கொஞ்சம் ரேடியேட்டருக்குத் தண்ணி ஊத்திக்கணும்”

கொஞ்சம் கண் அயர்ந்த மாதிரியிலிருந்து கலைந்தேன். மீண்டும் அடிநாக்கு ஊறிற்று.

இம்முறை செல் சிணுங்க அழைப்பில் செல்வி.

“”எங்கங்க இருக்கீங்க”

“”மலை ஏறிக்கிட்டுருக்கோம். இன்னும் இருபது கிலோமீட்டர் ஏறணும்.”

“”காலைல சாப்பிட்டீங்களா?”

“”இல்ல செல்வி…ம்.. ரயில்ல சாப்பிட்டோம்.”

“”உளறாதீங்க. மத்தியானம் எங்க சாப்பிட்டீங்க?”

“”இப்ப மணி பன்னிரண்டே கால்தான். மேலே என் நண்பனோட பண்ணை வீடு இருக்கு. அங்கதான் மதிய சாப்பாடு”

“”பாத்து அளவா சாப்பிடுங்க..ரெண்டு நாள் கழிச்சு ஆபிஸ் போகணும்.”

எதை அளவாய்ச் சாப்பிடச் சொன்னால் என்று புரிந்தது. கொஞ்சநேரம் இடைவெளிவிட்டு, “”அருவிப் பக்கமெல்லாம் போகாதீங்க…ப்ளீஸ்”

நான் பேச்சை மாற்ற எண்ணி,

“”பாப்பா என்ன செய்யறா”

“”தாத்தாவோட வெளில போயிருக்கா…வந்ததும் பேசச் சொல்றேன்”

….


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 08, 2014 10:01 am


அருவிக்கு ஆகாய கங்கை என்று பெயர் வைத்திருந்தார்கள். இரண்டு கிலோ மீட்டருக்கு மலையில் இறங்கி நடக்க வேண்டுமாய் இருந்தாலும்…அந்த அருவியும், அதன் உயரமும் வடிவமும்…வீழ்ந்தும் எழும் அதன் கம்பீரமும்…களைப்பை உணர்த்தவில்லை. மேலே பூத்தூவலாய் வந்து தெறித்த அருவியின் நீர்த்துளிகளின் சிலிர்ப்பில் மீண்டும் அடிநாக்கில் ஊறிற்று.

“”இந்தச் சுமைய மெட்ராஸ்ல இருந்து தூக்கிட்டு வரணுமா? இங்க எங்கியாவது வாங்கிக்கக் கூடாதா?”

“”இது ஒரிஜினல்டா. இங்க எதையாவது கொடுத்து ஏமாத்திடுவாங்க”

“”அந்த டிரைவர் ஒண்ணும் சரியில்லே மச்சான். வர்ற வழில கூடவே கூடாதுன்னுட்டான்.”

“”ஏன்டா…ரூமுக்கே போயிறலாமே”

“”எவன்டாவன்…அதுக்கு மெட்ராஸ்லயே ஏதாவது ஒரு ஹோட்டல் ரூம் போதுமே”

செல் ஒலிக்க எரிச்சலுடன்..

“”என்ன” என்றேன்.

இம்முறை பேசியது மூன்றாவது படிக்கும் மகள். என் எரிச்சலான குரலில் பயந்திருக்க வேண்டும்.

“”என்னடா செல்லம்”

“”எங்கப்பா இருக்கீங்க?”

“”அப்பா கொஞ்சம் வெளில இருக்கேன்.”

“”எப்பப்பா வருவீங்க?”

“”நாளைக்குச் சாயங்காலம் வந்துருவேன்”

“”நீங்க குடிக்கறதுக்குத்தான் வெளில போயிருக்கீங்களாம். தாத்தா திட்டிக்கிட்டு இருக்காங்க. வேணாம்பா…குடிக்காதப்பா… அது தப்புன்னு என் தமிழ்ப் பாடத்துல கூட வருதுப்பா”

மனசுக்குள் என்னவோ செய்தது.

பாட்டிலின் கழுத்தைத் திருகி கண்ணாடி கிளாஸில் ஊற்றியாயிற்று. எல்லாரும் ஆவலாய் எடுத்துக் கொண்டு சியர்ஸ் சொல்ல கைகளை உயர்த்த நான் கண்ணாடி கிளாஸை கையில் எடுக்காமல் சிந்தனையில் இருந்தேன்.

“”என்னடா மாப்ள…என்ன ப்ராப்ளம்?”

“”இல்லடா…எனக்கு வேண்டான்டா…உடம்புக்குச் சரியில்லேடா”

இன்னொருமுறை இதுக்காகக் கிளம்பி வரக் கூடாதுன்னு மனதுக்குள் உறுதியாக ஓடிற்று.

- ஆர்.கே.சண்முகம்



 ‘செல்’ மொழி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 08, 2014 11:39 am

அருமையான கதை. பகிர்வுக்கு நன்றி சிவா



 ‘செல்’ மொழி A ‘செல்’ மொழி A ‘செல்’ மொழி T ‘செல்’ மொழி H ‘செல்’ மொழி I ‘செல்’ மொழி R ‘செல்’ மொழி A ‘செல்’ மொழி Empty
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jun 08, 2014 2:27 pm

நல்ல கதை ..பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக