புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10 
3 Posts - 3%
prajai
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10 
1 Post - 1%
Rutu
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10 
1 Post - 1%
Pradepa
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10 
231 Posts - 22%
sugumaran
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10 
18 Posts - 2%
prajai
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10 
5 Posts - 0%
Rutu
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாரதர் கதைகள் - எழுத்துச் சித்தர் பாலகுமாரன்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:04 am

நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் F3tDCalRRLCZg0Uw3j11+p14bநாரதர் கதைகள் வெறும் நகைச்சுவைக்காக எழுதப்பட்டவை அல்ல. எதனால், நாடகத்தில் நாரதர் கோமாளியானார் என்பது எனக்குப் புரியவில்லை. நாரதரது சரித்திரத்தைப் படிக்கும்போது அவர் மிகக் கூர்மையானவராக, மிகச் சிறந்த குணவானாக, மிக அமைதியானவராக, மிகுந்த ஒழுக்கச்சீலராக, தத்துவ விசாரம் உள்ளவராக, ஸ்ரீமந் நாராயணனையே சரணடைந்தவராக, சரணாகதிக்கு உதாரணமாகத் திகழ்ந்திருப்பதை உணர முடிகிறது. எதனாலோ மேடைகளில் அவர் கோணங்கியாகிவிட்டார்.

ஒரு விஷயத்தை ஒருவரிடமிருந்து பிடுங்கி இன்னொருவர் முன் வைத்து, இது சரியா என்று பார்க்கச் சொல்லி, 'இல்லை’ என்று அவரைச் சொல்ல வைத்து, இரண்டு பேருக்கும் இடையே கலகத்தை மூட்டுவதால் அவர் கோமாளியாகிவிட்டாரோ என்று தோன்றுகிறது. ஆனால், அது கலகமல்ல. 'இதுதான் சரி’ என்று ஒரு குழுவினரும், 'இல்லை, இதுவே சரி’ என்று இன்னொரு குழுவினரும் வாழ்ந்து வரும்போது, 'எது உண்மையில் சரி?’ என்று கேள்வி எழுப்புவது எப்படிக் கலகமாகும்? அது உண்மையை நோக்கிய பயணம். சத்தியத்தை நோக்கிய சாதனை. எனவே, 'நாராயண... நாராயண...’ என்று சொல்லிக்கொண்டே அவர் மேடையில் நுழைந்தால், அத்தனை பேருக்கும் சிரிப்பாகிவிடுகிறது. அப்படிச் சிரிக்கிறார்கள் என்று தெரிந்ததாலேயே அந்த நடிகர், அந்த 'நாராயண... நாராயண’ என்பதை மிகச் சரியான ஒரு நேரத்தில், மிகக் கேலியான ஒரு குரலில் வெளிப்படுத்துகிறார் என்றும் தோன்றுகிறது. உண்மையில் அந்த 'நாராயண... நாராயண’ என்ற சப்தம் வியப்பின்பால் வருவது என்பதாகவே நான் உணர்கிறேன்.

'அடடே! இதுவா உண்மை! அப்ப, இதுவா உண்மை’ என்று பல திசைகளிலும் தன் பார்வையைச் செலுத்தி, உண்மை எதுவெனக் கண்டுபிடிப்பதே அவருடைய தன்மையாக இருக்கிறது. தான் மட்டும் அறிந்த உண்மையை தனக்குள்ளே பொதித்துக் கொள்ளாது, தன் சரிதமாக அவர் வெளியிடுகிறார். தன் வாழ்க்கை யின் நோக்கமாகவும் அதைக் கொண்டுவிடுகிறார். எனவே, ஓர் உன்னத புருஷனுடைய வாழ்க்கையாகத்தான் நாரதருடைய கதைகளை நான் கவனிக்கிறேன்.

நாடகக் கொட்டகைக்குள் மக்கள் ஆணி அடித்ததுபோல் திகைப்பாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் அவர்களைத் தளரவிடுவது நல்லது என்று ஆலோசித்து, நாடகக்காரர்கள் யாரை அனுப்புவது என்று யோசித்து, நாரதரை அனுப்புவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அந்த உச்சிக் கொண்டையும், காவி உடையும், பூணூலும், மார்பிலே தொங்குகிற வீணையுமாக அவர் உள்ளே நுழைய, கைதட்டல் ஆரவாரம் பொங்குகிறது. 'அப்பாடா, இனி அடுத்த பத்து நிமிடமும் நல்ல நகைச்சுவையாகப் போகும்’ என்று மக்கள் நினைக்கிறார்கள். அதை விரும்பவும் செய்கிறார்கள். நாடகக் காரர்களுக்கும் தங்களுடைய சாதனை பற்றிச் சந்தோஷம். பல நாடகங்களில் நாரதர் தம்பூரா வைத்துக்கொண்டு வருவதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், நாரதரிடம் இருப்பது தம்பூரா அல்ல; அது மஹதி என்கிற வீணை. கந்தர்வ லோகத்து சமாசாரம்.

நாரதர் யார்? சப்த ரூபம். எது சப்தம்? உலகத்தில் ஏற்படுகிற எல்லா அசைவுகளும் சப்தத்தை உண்டு பண்ணுகின்றன. அந்த சப்தங்களில் உன்னதமானது எது? இசை. அந்த இசையில் உன்னதமானது எது? வீணை இசையே என்று சொல்லப்பட்டிருக்கிறது. சப்தத்தினுடைய இன்னொரு வடிவம் என்ன என்று யோசித்தால், பேச்சு. பேச்சின் உன்னதம் கவிதை. கவிதையின் இன்னொரு வடிவம் விவாதம். நாரதர் எல்லா இடங்களிலும் விவாதம் பேசி, மக்களுடைய திசையைத் திருப்பி, நல்லது நோக்கிப் பயணிக்கச் செய்கிறார்.

இங்கே எவர் கர்வம் கொண்டு அலைகிறாரோ, எங்கே ஆணவம் தலைவிரித்து ஆடுகிறதோ, இந்தப் பிரபஞ்சத்தில் எங்கே வீராவேசம் பேசப்படுகிறதோ, அங்கெல்லாம் நாரதர் போய் சமனம் செய்கின்ற பணியிலே தாமாக ஈடுபடுகிறார். இதற்கு, நாரதர் பாட்டுப் பாடவில்லை; கவிதை சொல்லவில்லை. மாறாக, பேச்சுகளில் இறங்குகிறார். 'என்ன இது?’ என்ற கேள்விதான் நாரதருடைய அடிப்படையான விஷயம். உண்மையை அறியும்பொருட்டு 'என்ன இது?’ என்று எவர் கேள்வி கேட்டாலும், அவர் நாரதருடைய தன்மையைக் கொள்கிறார். அப்படிக் கேட்கும்போது உள்ளுக்குள்ளே கலவரம் ஏற்படத்தான் செய்கிறது. அந்தக் கலவரம்தான் நல்ல விஷயத்தை வெளிக்கொண்டு வருகிறது. எது குழம்புகிறதோ, அதுவே தெளியும். எது கடையப்படுகிறதோ, அதிலிருந்தே அமிர்தம். எனவே, நாரதர் ஏற்படுத்துகிற கலவரம், அதாவது கடையல், நன்மையைக் கொண்டு வந்து சேர்க்கிறது; அமுதத்தைக் கொண்டு வந்து கொடுக்கிறது.

பிரம்மா- படைப்புத் தொழில். ஓர் உயிரின் ஆரம்பம்; ஓர் உருவத்தின் தொடக்கம். சிவன் அழிக்கும் தொழில். ஒரு முடிவின் ஆரம்பம்; ஒரு வாழ்க்கையின் முடிவு! எது வளர்ச்சி? விஷ்ணுவே வளர்ச்சி. வளர்வது என்பது விஷ்ணுவாகவும், படைப்பது என்பது பிரம்மாவாகவும், முடிவது என்பது சிவமாகவும் மூன்று வித சக்திகளுக்கு உருவங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதுதான் சநாதன தர்மத்தின் அடிப்படை விதி.

ஆக, விவகாரங்கள் எல்லாம் வளர் வது பற்றித்தான் இருக்கின்றன. எது வாழ்க்கை என்பதைப் பற்றித்தான் இருக்கின்றன. அதைப் பற்றித் தவறாகக் கூறப்படும்போது, அது பற்றி மோசமாக பிரசாரம் செய்யப்படுகிறபோது, அது பற்றிய ஞானமில்லாமல் பேசப் படுகிறபோது, அவற்றை உடைத்து உண்மையை நிலைநாட்டுவதற்கு நல்லவர்கள் இடைவிடாது முயன்று கொண்டிருக்கிறார்கள். அந்த முயற்சியின் ஒரு வடிவம்தான் நாரதர்.

நாரதர் என்பவர் படைப்புத் தொழிலோடும் சம்பந்தப்படவில்லை; ஒரு வாழ்க்கையின் முடிவோடும் சம்பந்தப்படவில்லை. அவர் வளர்ச்சி மீதே அக்கறை காட்டுகிறார். எது வளர்கிறதோ, அந்த வளர்ச்சியை நோக்கிச் சரணடைந்து, எது வளர்கிறது, எப்படி வளர்கிறது என்று ஆராய்ச்சி செய்கிறார். எனவே, விஷ்ணுவின் பக்தராக, ஸ்ரீமந் நாராயணரைச் சரணாகதி அடைந்தவராக நாரதர் உருக்காட்டப்படுகிறார்.

படைப்புத் தொழிலைப் பற்றி விமர்சனம் இல்லை; முடிவு பற்றிய விமர்சனம் இல்லை. எது வளர்கிறதோ அதைப் பற்றி மட்டுமே விமர்சனம். அந்த விமர்சன சக்திதான், அந்த விமர்சன ரூபம்தான், எழுப்பப்படுகிற கேள்வி என்கிற மகோன்னதமான ஒரு மாறுதல்தான் நாரதர். இந்த விமர்சனம் இல்லாவிட்டால் வளர்ச்சி இல்லை. அல்லது, வளர்ச்சி கோணலாகப் போகும். ஆட்டு மந்தைகள் போல முன்னால் போவதன் பின்னாலேயே போகாமல், 'இது என்ன?’ என்று கேள்வி கேட்கும் நம் விமர்சன சக்தியே, நம்முடைய கேள்வி கேட்கும் திறனே நம்முள் தெளிவை உண்டாக்கும். அப்படித் தெளிந்து நடக்கிற பயணமே வாழ்க்கை. அப்படிப்பட்ட வாழ்க்கையே நாரதர் வகுத்த வழி! இந்தக் கேள்வி கேட்டலே நாரத சக்தி. இந்த விஷயம்தான் விதம் விதமான கதைகளாக்கப்பட்டிருக்கிறது.

நல்லவன், கெட்டவன் என்று பிரித்து, நல்லவனுடைய விளக்கத்தையும் கேட்டு, கெட்டவனுடைய விளக்கத்தையும் கேட்டு, எது சரியான வழி என்று தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறது. எனவே, இங்கு கெக்கலித்துச் சிரிப்பதற்கு எதுவும் இல்லை. மாறாக, கூர்த்த புத்தியும், விமர்சன புத்தியும் உள்ளவர்களுக்கே நாரதர் கதை புரியும்.

வழக்கம் போலல்லாது, பாலகுமாரன் மிக வித்தியாசமான ஒரு நகைச்சுவைக் கதையைச் சொல்ல ஆரம்பித்துவிட்டான் என்று நீங்கள் நினைத்துக்கொள்வீராயின் அது மிகப் பெரிய தவறு. முன்னைவிட இந்த நாரதர் கதைகள் மிகக் கூர்மையாகவும் கனமாகவும் இருக்கும்.

இந்தப் பிரபஞ்சம் பூமியை மட்டும் கொண்டதல்ல; வெவ்வேறு வடிவான உருவங்கள் வாழ்கிற பல்வேறு உலகங்கள் இருக்கின்றன என்பது சநாதன தர்மத்தின் கருத்து. மிகச் சமீபமாக, பூமியில் ஒரு பெரிய நட்சத்திரக் கல் வந்து விழுந்தபோது, அதை இடைமறித்து ஒரு விண்கலம் தாக்கிச் சிதறடித்து, பூமிக்கு அப்பால் அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. அதாவது, பல்வேறு உலகக் கதைகள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

அப்படிப்பட்ட உலகங்களில் ஒன்று கந்தர்வ உலகம். எந்த மாதிரியான ஆன்மாக்கள் கந்தர்வ உலகத்தில் ஜீவிக்கின்றன? இசையை பக்தியின் வெளிப்பாடாக, குழல், யாழ் போன்றவற்றை நன்கு பயின்று மீட்டி, அதன் மூலம் இந்தப் பிரபஞ்ச சக்தியை, இறைவனை வணங்குகிற ஆன்மாக்கள் அங்கு வாழ்கின்றன என்று சொல்லப்படுகிறது. அதாவது, புனிதப்பட்ட ஆன்மாக்கள் பசி, தூக்கமில்லாது, வேறு உடல் உபாதைகள் இல்லாது, சங்கீதமே வாழ்வாகக் கொண்டு கந்தர்வ உலகத்தில் வாழ்கின்றன. ஆனால் மன மயக்கங்கள், மதி சறுக்கல்கள் அங்கேயும் உண்டு.

உபன் என்ற கந்தர்வனுக்கு ஒரு மகன் பிறந்தான். அந்த மகனுக்கு உபவருக்கன் என்று பெயரிட்டார்கள். உபன் இசையையே லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவன். இறைவனை இசையால் வழிபடுவதையே எந்நேரமும் செய்துகொண்டிருந்தவன். தன் மகனை நன்கு பயிற்றுவித்தான். தன்னிலிருந்து பிரிந்த, கிளர்ந்த அந்தச் சக்தியை மிகவும் பாராட்டி வளர்த்தான். அவனுக்கு, தான் வாசிக்கிற மஹதி என்ற யாழை வாசிக்கக் கற்றுக் கொடுத்தான். உபவருக்கன் தந்தையை மிஞ்சிய சீடனாக அந்த வீணையைத் திறம்பட வாசிக்கக் கற்றுக்கொண்டான். எல்லா உலகத்தாரும் உபவருக்கனை அழைத்து, அவனை மஹதி வாசிக்கச் சொல்லிக் கேட்பது வழக்கம். நல்ல விழாக்கள் எதுவும் மஹதி வீணை இல்லாது, அதை வாசிக்கின்ற உபவருக்கன் இல்லாது நடைபெறுவதில்லை.

தேவர் உலகில் ஒருமுறை, பிரம்மசிரேஷ்டர் என்கிற முனிவர் மிகப் பெரிய யாகங்கள் செய்தபோது, அங்கே வீணை வாசிக்க உபவருக்கன் அழைக்கப்பட்டான். உபவருக்கனும் மனம் ஒருமித்து சாம கானம் வாசித்து, அங்குள்ளோரைத் தன் வயப்படுத்தினான்.

அந்த இடத்தில் இசை ஞானமுள்ள அந்தணக் கன்னிகை ஒருத்தியும் இருந்தாள். உபவருக்கனின் வீணை இசையில் சொக்கிப் போனாள். அதன் சுரத்தோடு அவள் மனமும் கலந்தது. தான் அவனுக்கு உரியவளாக வேண்டும் என்றும், அவனை போஷிக்க வேண்டும் என்றும், அவனை இன்னும் சிறப்பானவனாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடும் அவன் மீது காதல் கொண்டாள். அவன் கவனத்தை ஈர்க்கும்படியாக நெகிழ்ந்தும், அசைந்தும், கண்களால் அழைத்தும், பார்க்கும்போது உதடு பிரித்துச் சிரித்தும், வெட்கப்பட்டும், ஆர்வப்பட்டும் பல்வேறு பாவனைகள் காண்பிக்க, உபவருக்கன் மனம் சிதறினான். பாடலில் இருந்த கவனம் நகர்ந்து போயிற்று. சாம கானம் வாசிப்பதில் பிழை ஏற்பட்டது. மிகப் பெரிய சிரேஷ்டர்கள் அமர்ந்திருந்த அந்தச் சபையில், சாம கானத்தை கரதலப் பாடமாகக் கற்ற பெரியவர்கள் கூடியிருந்த அந்த இடத்தில், பிசிறு பிசிறாக சாம கானம் வாசிக்கப்பட்டதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சியுற்றார்கள்.

ஏன் தவறு செய்கிறான், எதனால் பிழை செய்கிறான் என்று கவலைப்பட்டார்கள். அவன் கவனம் ஒரு கன்னிகையிடத்தில் சிதறியிருப்பதைக் கண்டு வருத்தப்பட்டார்கள். கவனம் சிதறாமல் இருந்தால் மிக அற்புதமான ஒரு சாம கானம் வெளிப்பட்டிராதா, என்ன வாசிக்கிறோம் என்றுகூடத் தெரியாது இப்படிக் கவனம் சிதறலாமா, இது நல்லதா, இது பலருக்குத் துன்பம் நேர்விக்குமே என்று கலங்கினார்கள்.

யாகம் செய்த பிரம்மசிரேஷ்டர் கோபம் அடைந்தார். சபை சலசலப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். வாசிப்பு தவறாக இருப்பதால் சபை தனது மௌனத்தை இழந்துவிட்டது என்பதைப் புரிந்து ஆவேசப் பட்டார். ''கந்தர்வனே, போதும் நிறுத்து!'' என்று கட்டளையிட்டார். வீணை இசை நின்றது.

''என்ன செய்கிறோம் என்று தெரியாமல், ஓர் உன்னதமான காரியம் செய்கிறபோது மனம் பிழன்று மிகச் சாதாரணமான ஒரு விஷயத்தில் ஈடுபடுகிறாய் என்றால், நீ இந்த மஹதி வீணையை வாசிக்கத் தகுதி இல்லாதவன். இந்த சாம கானம் இசைக்க யோக்கியதை இல்லாதவன். எனவே, யோக்கியதை இல்லாமல் ஒரு பெரிய சபையில் இந்த வித்தையை அவமானப்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டதால், நீ கந்தர்வனாக இனி இருக்க வேண்டாம். அது உனக்குத் தகாது. எனவே, நீ பூமியில் பிற!'' என்று சாபமிட்டார்.

உபவருக்கன் தன் தவற்றை உணர்ந்தான். கந்தர்வன் என்ற இடத்திலிருந்து நகர்ந்து, ஒரு மானுடனாக பூமியில் வந்து பிறந்தான். அவனது வெகு இளம் வயதிலேயே அவனின் தந்தை இறந்தார். தாய் பல்வேறு வீடுகளில் வேலை செய்து மகனை வளர்த்து வந்தாள்.

சாம கானம் என்ற உன்னதத்தை, அதைத் தெரிந்த சபைக்கு நடுவே தவறாக வாசித்து தன்னுடைய தகுதியை இழந்தது மட்டுமல்ல; கந்தர்வனாக இருந்தபோது கிடைத்த ஓர் அற்புதமான தந்தையின் சிநேகமும் பூலோகத்தில் இருக்கும்போது கிடைக்கவில்லை. தந்தையின் அணைப்பும் அந்தச் சாபத்தில் அடித்துக்கொண்டு போயிற்று.

உபவருக்கன் தன் விதவைத் தாயுடன் ஓர் அந்தணர் வீட்டில் வசித்து வந்தான். அவள், அந்த அந்தணர் வீட்டில் வேலை செய்து, தன்னோடே தன்னுடைய பிள்ளையை வைத்துக் கொண்டாள். ஒரு மழைக்காலத்தில் அந்த அந்தணர் வீட்டுக்கு நாராயணனுடைய அடியார்கள் வந்தார்கள். பரத கண்டத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு கோயில்களைத் தரிசிக்கவும், நாராயணனின் புகழ் பாடவும் அவர்கள் ஒரு கூட்டமாக நகர்ந்துகொண்டிருந்தார்கள். அந்த மழைக்காலம் முழுவதும் அவர்கள் அந்த அந்தணர் வீட்டில் தங்கி, நாராயணனைப் பற்றி விதம்விதமான பாடல்களைப் பாடினார்கள். இசை என்ற ஓர் அற்புதமான வித்தை, அவனுக்குக் கந்தர்வ உலகத்தில் கிடைத்திருந்ததால், அந்த இசையால் அவன் பல பேரை மகிழ்வித்திருந்ததால், மானுடனாகப் பிறந்த உபவருக்கனுக்கும் அந்த இசை ஞானம் இருந்தது. அந்த அடியவர்கள் பாடும்போது, அவனும் தன்னுடைய இனிய குரலில் சேர்ந்து பாடினான். அவர்களோடு அமர்ந்து அந்தப் பாடல்களை எழுதிக்கொண்டு, மனனம் செய்தான். அவர்கள் பாட மறந்ததை எடுத்துக் கொடுத்தான்.

ஒரு சிறுவனின் புத்திசாலித்தனத்தையும், இசை மீதுள்ள நாட்டத்தையும், இசையின்பால் அவன் கொண்டிருந்த ஞானத்தையும் அறிந்து அந்த அடியவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். அவனுக்கு நாராயண மந்திரம் உபதேசித்தார்கள்.

''இது மிக உயர்ந்தது. இசையைக் காட்டிலும் உயர்ந்தது. எல்லாவற்றைக் காட்டிலும் உயர்ந்தது. பேச்சைக் காட்டிலும் இந்த நாராயண மந்திரம் உயர்ந்தது. நமக்குப் பேச்சுத் திறன் இருக்கிறதே, அது கவிதை எழுத மட்டுமல்ல, பாட மட்டுமல்ல, ஆட மட்டுமல்ல, நாடகம் போட மட்டுமல்ல, இந்த மாதிரியான மந்திரங்களைச்சொல்ல வேண்டுமென்பதற்காகத்தான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். எனவே, இடையறாது, இடையறாது நாராயணன் பெயரைச் சொல். நாராயணன் உனக்கு நேரே வருவார். நீ வேண்டுகின்ற வரங்களைத் தருவார்'' என்று சொன்னார்கள். அந்தச் சிறுவன் மனமகிழ்ந்தான். அவர்களை வணங்கி, வழியனுப்பி வைத்தான்.

அவன் தாயார் இறந்தபோது என்ன செய்வது என்று தெரியாது தவித்தான். இசையா, கவிதையா, எது முக்கியம்? இரண்டும் இல்லை, நாராயண மந்திரமே முக்கியம் என்று தெளிந்தான். வனத்திற்குப் போனான். இடையறாது நாராயண மந்திரம் சொன்னான். தனக்குள்ளே அந்த மந்திரத்தை வைத்துப் பெரிய தீயாக்கி, சதா காலமும் அதனுள்ளேயே மூழ்கிக் கிடந்தான். அவனுடைய கடும் தவத்தைக் கண்டு ஸ்ரீமன் நாராயணர் மனம் மகிழ்ந்தார். அவனுக்குக் காட்சியளித்தார். ''தொடர்ந்து மந்திரம் சொல்லிக் கொண்டிரு. இந்த உலகம் முடியப் போகிறது. பெரிய ஊழிக்காலம் வரப்போகிறது. சிருஷ்டிகள் அழியப் போகின்றன. மறுபடியும் சிருஷ்டி துவங்கும். அப்போது பிரம்மாவே உனக்குத் தந்தையாக இருந்து, உனக்குச் சகலமும் சொல்லிக் கொடுப்பார்'' என்று சொல்லி விடைபெற்றார்.

ஊழிக்காலம் வந்தது. உயிரினங்கள் அழிந்தன. சகலமும் நீர்மயமாயிற்று. நீர்மயத்திலிருந்து பிரம்மா உலகை சிருஷ்டிக்கத் துவங்கினார்.

வரிசி முதலிய முனிவர்களோடு, மஹதி என்ற வீணையோடு உபவருக்கன் மறுபடி பூமியில் பிறந்தான். அவனுக்கு 'நாரதர்’ என்று பெயரிட்டார் பிரம்மா. நாரதர் தன்னுடைய மகன் என்று பெருமையோடு உலகுக்கு அறிவித்தார். இந்த உலகம் மட்டுமல்லாது, எல்லா உலகங்களுக்கும் செல்கிற தகுதியோடு, நாரதர் மஹதி என்ற வீணையோடு பிறந்தார்.

சந்தோஷம் கொடுக்கிற இசை மட்டுமல்ல, துன்பத்தை நீக்கி ஆழ்ந்த மௌனத்தில் ஆழ்த்துகிற இசை மட்டுமல்ல, சத்தியத்தை நோக்கிக் கேள்வி கேட்டுத் தெளிகிற ஞானத்தோடும் நாரதர் பிறந்தார். அவருடைய வாக்கு பிரபஞ்சத்தின் எல்லாத் திசைகளிலும் ஒலித்தது. சாதாரண பிறப்பல்ல அது. மாமுனி என்கிற பிறப்பு. சகலமும் அறிந்து தெளிந்த பிறப்பு. கடும் தவத்தால் அது அவருக்குக் கிடைத்தது.

நாராயண மூல மந்திரம், மறுபிறப்பில் மிகச் சிறப்பான ஓர் அம்சத்தைக் கொண்டு வந்து கொடுத்தது. அந்தச் சிறப்பான அம்சத்திற்குப் பெயர் நாரதர். அவர் எடுத்துரைத்த உண்மைக்குப் பெயர் நாரத புராணம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:26 am



அந்த வெந்நீர் நீல தடாகத்துக்குப் பெயர் மானஸா ஏரி. அந்த ஏரிக்கரையின் ஓரம், நாரதர் மெள்ள வீணையைச் சுருதி மீட்டிக்கொண்டு நடந்தார். எதனாலேயோ மனம் இங்கு இழுக்கப்பட்டு, 'இங்கு ஏதோ நடக்கிறது; கவனி!’ என்று தூண்டப்பட்டு, அவர் இந்தப் பக்கம் நடைபயின்றார்.

மானஸா ஏரி, இமயமலை அடிவாரத்தில் மிகுந்த அமைதியுடன் தேவதைகளெல்லாம் குளிக்கின்ற நீர் நிலையாக இருந்தது. இமயமலையின் பனிக்காற்று மெள்ள வருடிக்கொண்டு போயிற்று. சூரியன் வட திசை நகர்ந்து உஷ்ணம் பரவும் காலமாக இருந்தாலும், மானஸா ஏரிக்கரையில் வெயில் தெரியவில்லை. ஏரியின் ஓரத்திலிருந்து நீர்க்குமிழிகள் மெள்ள வெளியே வந்தன. சற்றுத் தள்ளி இன்னொரு நீர்க்குமிழி கிளம்பியது. இன்னும் சற்று தள்ளி இன்னொரு நீர்க்குமிழி. இடது, வலது, இந்தப் பக்கம், அந்தப் பக்கம், நேர் எதிரே எனப் பல நீர்க்குமிழிகள் தோன்றின.

நாரதர் வியந்தார். 'இது என்ன... மீன்களின் ஆட்டமா அல்லது வேறு ஏதாவது விலங்குகளின் சேஷ்டையா?’ என, அதை ஊன்றிக் கவனித்தார். உள்ளுக்குள்ளே யாரோ சம்மணமிட்டு அமர்ந்திருப்பதும், சேமித்து வைத்த காற்றை அவர் நிதானமாக மெள்ள மெள்ள விடுவதும் தெரிந்தது. 'யாரேனும் நீரில் மூழ்கி தபஸ் செய்கிறார்களா, என்ன?’ தொடையளவு நீரில் நாரதர் இறங்கினார். குனிந்து பார்த்தார். உள்ளே ஒரு பாலகன் உட்கார்ந்திருந்தான். மெள்ள அவன் தாடையைப் பற்றி மேலே தூக்கினார். வெளியே இழுத்தார். அந்த பாலகன் மூச்சை முழுவதும் உள்ளே இழுத்து, காற்றால் நுரையீரலை நிரப்பிக்கொண்டான்.

''என்னப்பா இது, யார் நீ? என்ன செய்து கொண்டிருக்கிறாய்?'' - மிகுந்த வாஞ்சையோடு நாரதர் கேட்டார். 'பத்து வயதுக்கும் குறைவான இந்த பாலகன், இத்தனைக் குளிரில், இவ்வளவு பெரிய ஏரியில் தனிமையாக மூழ்கிக் கிடக்கிறான். என்ன காரியம் இவனுக்கு இங்கே?!’ என்று வியந்தார். அவன் எழுந்திருக்க, அங்கங்கே அங்கங்கே ஆட்கள் எழுந்திருந்தார்கள். எழுந்தவர்கள் அத்தனை பேரும் இளைஞர்கள். கிட்டத்தட்ட நாரதர் தூக்கி நிறுத்திய பாலகனின் அதே வயதை ஒத்தவர்கள். எல்லோரும் ஒரே மாதிரியாக இருந்தார்கள். நாரதர் திடுக்கிட்டுக் கரையேறினார்.

''யார் நீங்கள்? என்ன செய்து கொண்டிருக் கிறீர்கள் இங்கே? இந்தக் கடும் குளிரில் எதற்காக இந்த வேதனை?'' என்று பிரியத்தோடு கேட்டார். அவர்கள் கரையேறினார்கள். நாரதரைப் பார்த்துக் கை கூப்பினார்கள். காலில் விழுந்து வணங்கினார்கள்.

''நாங்கள் தவம் செய்கிறோம்!''

''என்ன தவம்?''

''நீரில் மூழ்கி மூச்சை வசப்படுத்தி, பின்பு மெள்ள மெள்ள மூச்சை விட்டுச் சுத்தமாக மூச்சை நிறுத்துகின்ற தவம்!''

''யாரை நோக்கி?''

''எங்கள் தாத்தாவான படைப்புலக பிரம்மாவை நோக்கி!''

''என்ன... பிரம்மாவின் பேரர்களா நீங்கள்? அப்படியெனில் உங்கள் தந்தை..?''

''தட்ஷன்'' - அவர்கள் எல்லோரும் ஒரே குரலில் பதில் சொன்னார்கள்.

''தட்ஷனின் குழந்தைகளா? அதுதான் முகத்தில் இத்தனைப் பொலிவு! இத்தனை அழகு! இவ்வளவு சிறு வயதில் இவ்வளவு பெரிய தவத்தைச் செய்ய முடியுமெனில், ஓர் உயர்ந்த தகப்பனுக்குப் பிறந்தவராகத்தான் இருக்க முடியும். நல்லது, எதற்காக இந்தத் தவம்?''

''எங்கள் தந்தை கட்டளையிட்டார்!''

''என்ன சொல்லிக் கட்டளையிட்டார்?''

''நாங்கள் நீரில் மூழ்கி பிரம்மாவை நோக்கித் தவம் செய்ய வேண்டும்!''

''எதற்காக?''

''படைப்புத் தொழிலை நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக, தவம் செய்து அதை வரமாகப் பெற வேண்டும்.''

''படைப்புத் தொழிலா? ஆயிரம் பேரா? ஒரு பிரம்மா செய்யும் படைப்பையே உலகம் சுமக்கமுடியாமல் தவிக்கிறது. நீங்கள் எல்லோரும் பிரம்மாவைப் போல் படைப்புத் தொழிலைக் கற்றுக்கொண்டு செய்ய ஆரம்பித்தால், இந்த உலகம் என்ன ஆகும்! சுழலுவது நின்று போகுமய்யா! பாரம் தாங்காமல் திணறிப் போகும். இவ்வளவு பெரிய வேலையை எதற்கு செய்யச் சொன்னார் உங்கள் தகப்பன்?''

''படைப்புத் தொழில் மிகச் சிறந்தது அல்லவா?''

''ஆமாம்.''

''மிக அரிதான ஒன்றல்லவா?''

''ஆமாம்.''

''ஆதலால் மிக அரிதான, சிறப்பான ஒன்றைக் கற்றுக்கொள்ளச் சொன்னார்.''

''பொன் அற்புதமான பொருள்தான். கிடைத்தற்கரிய பொருள்தான். அதற்காக, பொன்னில் விலங்கு செய்து காலில் மாட்டிக் கொள்வார்களா யாரேனும்?''

அந்த இளைஞர்கள் திகைத்தார்கள்.

''இல்லை. மாட்டார்கள்!''

''நீங்கள் செய்வது அப்படித்தான் இருக்கிறது. படைப்புத் தொழில் செய்தால் என்ன ஏற்படும்? என்ன கிடைக்கும்?''

''ஒரு சிறந்த பதவிக்கு வந்துவிட்டோம் என்ற மரியாதை கிடைக்குமல்லவா?''

''அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது? ஆயிரம் பேர் படைப்புத் தொழிலில் ஈடுபட்டால், இந்தப் பூமியின் கதி என்ன ஆவது? உங்களுக்குள் போட்டி வராதா? நான் சிறந்தவன், நீ சிறந்தவன், இது அழகு, அது அழகு, இது அவலம் என்று உங்களுக்குள் சண்டை வராதா? எல்லோரும் இப்போது ஒற்றுமையாக இருக்கிறீர்கள். வரம் கிடைத்தால், பிளவு வராதா? ஏன் இந்த வேதனை?''

''சரி, நாங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?''



நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:26 am



''சிவனை நோக்கி 'எங்களுக்கு இந்த மன அவஸ்தையிலிருந்து விடுதலை வேண்டும். ஜீவன் முக்தி வேண்டும். உங்கள் பாதத்தையே சரணடைய வேண்டும். உங்களோடு கயிலையில் உங்கள் கணங்களாக நாங்கள் குடியேற வேண்டும்’ என்று வேண்டிக் கொள்ளலாமே? மறுபடி பிறக்காத ஒரு தன்மையை அடைய லாமே? வேறு எந்த வேலையும் இல்லாமல் உள்ளுக்குள்ளே சிவனை நினைத்து சிவமாய் மாறுவது என்ற உன்னதத்தை அடையலாமே? அதை விட்டுப் படைப்புத் தொழில் செய்கிறேன் என்று ஆரம்பித்து, உலகையும் நாசம் செய்து, உங்களுக்குள் பிரிவு ஏற்பட்டு... தேவைதானா? பெரிய அவஸ்தையாயிற்றே!''

அவர்கள் சிந்தித்தார்கள். ''ஆமாம்'' என்றார் கள். நாரதரைக் கும்பிட்டார்கள். மறுபடியும் நீர்நிலை நோக்கிப் போனார்கள். உள்ளுக்குள்ளே மூழ்கினார்கள். சிவ சொரூபம் அடைய வேண்டும், சிவ கணங்களில் ஒன்றாக அங்கு இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். அவர்கள் சிந்தனை மாறிற்று. தட்ஷன் வேதனைப்பட்டான்.

மனச்சோர்வு அடைந்தாலும், தட்ஷன் மறுபடியும் இமயவான் மகள் வேதவல்லியுடன் கூடி இன்னும் ஆயிரம் குழந்தைகள் பெற்றான். அவர்கள் முன்னவர்களைக் காட்டிலும் வலிவு மிக்கவர்களாகவும், தந்தைக்குப் பணிந்தவர்களாகவும் இருந்தார்கள். அவர்களை, சிவனை நோக்கித் தவம் செய்து படைப்புத் தொழிலைக் கற்று வருமாறு பணித்தான்.

'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்று அவர்கள் அந்தக் கட்டளையை நிறைவேற்ற, மானஸா பொய்கைக்கு வந்தார்கள். அப்போதும் நாரதர் அங்கே வந்தார். நீரில் மூழ்கி தவம் செய்பவர்களைப் பார்த்துக் கைதட்டி, மேலே எழுப்பினார்.

''என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? இதைத் தானே உங்கள் தமையன்கள் செய்தார்கள்? நீங்களும் அதே விஷயத்தில் ஈடுபடுகிறீர்களே, என்ன காரணம்?''

''எங்கள் தந்தையின் கட்டளை!''

''படைப்புத் தொழில் கற்றுக் கொள்ளவா?''

''ஆமாம்.''

''பிரம்மராக மாறவா?''

''ஆமாம்.''

''ஒரு பிரம்மனையே இந்த உலகம் சமாளிக்க முடியாமல் திணறுகிறது. நீங்களும் படைப்புத் தொழிலை ஆரம்பித்தால் உலகம் என்ன ஆகும்? எதற்கு உங்களுக்குள் போட்டி? ஏன் சண்டை? இதற்காகவா தவம் செய்வார்கள்? மிகப் பெரிய நிலம் முழுவதையும் உழுது, கடைசியில் ஓரத்தில்

ஓய்ந்து கிடக்கும் பூசணிக்காயையா பரிசாகப் பெற்றுப் போவார்கள்? என்ன வேலை செய் கிறீர்களோ, அதற்கேற்ற பலனைக் கேளுங்கள். நீங்கள் செய்வது கடும் தவம்.அற்புதமான தவம். இதற்குண்டான பரிசு வெறும் பூசணிக்காய் அல்ல. இம்மாதிரியான படைப்புத் தொழில் அல்ல. நீங்கள் சிவ சொரூபம் அடையவேண்டும், சிவலோகத்தில் இருக்க வேன்டும், ஜீவன் முக்தி பெறவேண்டும் என்று வேண்டுங்கள்'' என்று சொல்லி, விடுதலை பெற்றவர்களாக இருப்பதன் அவசியத்தை, அற்புதத்தை விளக்கினார்.

''எந்தவித ஈடுபாடும் இல்லாமல், எந்தவிதமான பிணைப்பும் இல்லாமல், எந்தவிதமான குறிக்கோளும் இல்லாமல் மிக மிக அமைதியாய் ஓர் இடத்தில் அமர முடியுமானால், அதைவிட சௌக்கியம் உலகில் உண்டோ?'' என்று கேள்வி எழுப்பினார்.

'இல்லை’ என்று மறுத்தார்கள்.

''காரியமாற்றாமல் கண்மூடி அமைதியாய் அமர்ந்திருப்பதுதானே உன்னதமான இடம்?''

''ஆமாம்.''

''அப்படிப்பட்ட இடத்தில் இருப்பதற்காக சிவனைக் கேளுங்கள். அதுவே உத்தமம்!'' என்று சொல்ல, நாரதர் சொல்லை அவர்கள் புரிந்துகொண்டார்கள். அவரை வணங் கினார்கள். மறுபடியும் நீரில் மூழ்கினார்கள். சிவனை நோக்கி ஜீவன் முக்தி அடையும்வண்ணம் பிரார்த்தனை செய்தார்கள்.

தன்னுடைய குழந்தைகள் இரண்டாயிரம் பேரும் திசைமாறிப் போனதையும், அதற்குக் காரணம் நாரதரே என்பதையும் தட்ஷன் அறிந்துகொண்டான். கோபமுற்றான்.

''குழந்தைகள் பெறுவதும், அவர்களை வளர்ப்பதும், அவர்களை ஓர் உன்னத இடத்துக்குக் கொண்டு வருவதுமான தகப்பனின் கடமையை நீர் அறிவீரா? அறியமாட்டீர்! வெறுமே சுற்றித் திரிந்துகொண்டிருக்கிறீர். வீடு இல்லாமல், மனைவி இல்லாமல், குழந்தைகள் இல்லாமல் சுற்றித் திரியுங்கள். எல்லா இடத்திலும் முழி முழி என்று முழித்துக்கொண்டிருங்கள். உங்களுக்கு ஓர் இருப்பிடம் இல்லை.உங்களுக்கு ஒரு ஸ்திரம் இல்லை. எனவே, நீங்கள் எல்லா நாளும் அலையும்படியான தன்மையை மேற் கொள்ளுங்கள். அதுவே உங்கள் வாழ்க்கையாக இருக்கட்டும்'' என்று சபித்தான்.



நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:26 am



நாரதர் தலைகுனிந்து அந்தச் சாபத்தை ஏற்றுக்கொண்டார். படைப்புத் தொழிலால் பூமி அவஸ்தைப்படுவதைவிட, தான் ஒருவர் இந்த அவஸ்தையை மேற்கொள்வது நல்லது என்று நினைத்தார். அதுவும் தவிர, தட்ஷன் சொன்னது சாபமல்ல; அது ஒரு வாழ்த்து! எந்தப் பிடிப்பும் இல்லாமல், எந்த இடமும் இல்லாமல், எல்லா இடத்திலும் சஞ்சரிக்கின்ற தன்மை தனக்குக் கிடைத்தது ஒரு வரம் என்று நினைத்தார் நாரதர். சந்தோஷப்பட்டார்.

'நாராயண... நாராயண’ என்று மனத்துக்குள் தன் பகவானை வணங்கி நமஸ்கரித்தார்.

படைப்புத் தொழிலின் அபத்தத்தை நாரதர் இன்னொரு சம்பவத்தின் மூலமும் அழகாக விளக்குகிறார்.

படைப்பாற்றலே மிகச் சிறந்தது, படைப்பவரே மிகப் பெரியவர், அவரே சகல மரியாதைக்கும் உரியவர் என்று இந்த உலகம் நினைத்துக்கொண்டிருக்கிறது. உண்மையில் அப்படியில்லை. அது வெறும் 'அலையல்’; வெறும் ஆரவாரம்; தன்னை மட்டுமே கொண்டாடிக்கொள்கிற சுயநலம் என்பது பலருக்குத் தெரியாது.

பொன்னாலான ஒரு பட்டணம் பறந்து வந்தது. மிகப் பெரிய நீளமும், அகலமும் கொண்டிருந்த அது, பூமியில் ஓர் இடத்தில் தடேரென்று இறங்கியது. பயிர்- பச்சைகள், புல்- பூண்டுகள், சிறு பிராணிகள், பெரிய பிராணிகள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் எல்லாமும் அழிந்தன. குளம் கலங்கிற்று; காடு நசுங்கிற்று; மணல் பரவிற்று; வாழ்தல் என்பது அந்த இடத்தில் அழிந்துபோயிற்று.

வெள்ளியால் ஆன பட்டணம் பறந்து வந்தது. வேறு இடத்தில் உரசித் தாக்கி, கீழே இறங்கியது. உரசிய இடமெல்லாம் வெறும் மணல்வெளியாகின. எல்லாமும் அழிந்தன. அங்கும் வாழ்வு ஸ்தம்பித்துப் போயிற்று.

இரும்பால் ஆன பட்டணம் ஒன்று தோன்றியது. அது வேறு இடத்தில் இறங்கியது. மிகவும் கனமாக இருந்தது. அந்த இடத்திலுள்ள சிறு புழுக்களைக்கூட தன்னுடைய சூட்டால், கனத்தால் அழித்து ஒழித்தது. அந்த இடமும் பாழ் வெறுமை ஆயிற்று.

பூமி என்கிற நீல வர்ணம் கொண்ட பசுமைமிக்க அந்தக் குளம், வெறும் வறண்ட நிலமாகப் போயிற்று. பூமியிலிருந்து எந்த வணக்கமும் தேவர்களை நோக்கி வரவில்லை. இதனால் தேவர்கள் துயருற்றார்கள். பூமியை நினைத்துக் கவலைப்பட்டார்கள். என்ன செய்வது என்று வருத்தப்பட்டார்கள். நாரதர் மெள்ள அவர்களோடு பேச்சுக் கொடுத்தார்.

பொன் பட்டணத்துக்கு வித்தியுன்மாலியும், வெள்ளிப் பட்டணத்துக்கு தாரகாக்ஷனும், இரும்புப் பட்டணத்துக்கு கமலாக்ஷனும் தலைமை ஏற்றிருந்தார்கள். அவர்களைச் சந்திக்க நாரதர் போனார். அவர்கள் நாரதரைக் கண்டு பெரிதாகச் சிரித்து வரவேற்றார்கள்.

''எப்படி எங்கள் பலம்?'' என்றார்கள்.

''யார் நீங்கள்?'' நாரதர் வினவினார்.

''நாங்கள் தாரகாசுரனின் புதல்வர்கள். எங்கள் தந்தையார் எங்களை தவம் செய்யச் சொன்னார். நாங்கள் மிகக் கடுமையாக தவம் இருந்தோம். பல நூறு, ஆயிரம் வருடங்கள் தவம் இருந்தோம். எங்கள் தவத்தை மெச்சி, பிரம்மா தோன்றினார். சாகா வரம் கேட்டோம். 'சாகா வரம் கொடுக்க எனக்கு வல்லமை இல்லை. அது சிவனுடைய விஷயம். சிவன் அழிப்பவர். எனவே, அது குறித்து என்னிடம் கேட்காதீர்கள்’ என்றார். 'நாங்கள் வலிமையுடையவராக இருக்க வேண்டும்; இம்மாதிரியான பட்டணங்கள் வேண்டும்; தவிர, நாங்கள் மூவரும் ஒன்றாக இருக்கும் காலத்தில்தான் எங்களுக்கு மரணம் சம்பவிக்க வேண்டும்’ என்று வரம் கேட்டோம். அவற்றைக் கொடுத்தார். அன்றிலிருந்து ஒப்பில்லாத பலத்துடன் நாங்கள் பூமியைச் சுற்றி வருகிறோம். ஒவ்வோர் இடமாக அழித்து வருகிறோம்'' என்று சொல்லிப் பெரிதாகச் சிரித்தார்கள். வெற்றிச் சிரிப்பு அங்கு எதிரொலித்தது.

தவம் என்பது குறிக்கோள் உடையது. எந்த இடத்தில் குறிக்கோள் இருக்கிறதோ, அங்கு குறி பிசகுவதும் உண்டு. இங்கே குறி பிசகியது. படைப்பு என்கிற விஷயம் மிகப் பெரிய கர்வம் கொடுக்கக்கூடியது; மெள்ள மெள்ள அரக்கத்தனத்துக்கு அழைத்துப் போவது.

ஏதோ ஒன்றைத் தனக்குப் படைக்கத் தெரியும் என்கிற எண்ணம் வந்துவிட்டால் போதும், உலகத்தின் உச்சாணியில் இருக்கிற மமதை வந்துவிடுகிறது. கர்வம் இல்லாத படைப்பாளி என்று எவரும் இல்லை. எல்லாப் படைப்பாளிகளுக்கும் சொல்லத்தரமில்லாத கர்வம் பொங்கி வழிந்துகொண்டுதான் இருக்கும். இது படைப்பால் ஏற்பட்ட சாபம். அடக்கமாகப் படைக்க எவருக்கும் தெரியாது. அடக்கம் உள்ளவர் படைக்கவும் மாட்டார்.

நாரதர் இந்திராதி தேவர்களைத் தூண்டி விட்டு, ''இப்படியே போனால் இந்த பூகோளம் நாசமாகப் போகும். பிறகு, உங்களை வணங்கு பவர் யாரும் இல்லாமல் போவர். எனவே, இதற்கான தீர்வை திருமாலிடம் கேளுங்கள்'' என்று சொல்ல, இந்திராதி தேவர்கள் திருமாலிடம் போனார்கள். கைகூப்பிக் கேட்டார்கள். திருமால் யோசித்தார்.



நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:27 am



''இவர்களை நம்மால் அழிக்க முடியாது. இவர்கள் சிவ ஸ்துதி செய்பவர்கள். இடைய றாது சிவன் நினைப்பில் வாழ்பவர்கள். அந்த நினைப்பும் துதியும் இருக்கிறவரை இவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. எனவே, இவர்களை இவர்கள் எண்ணத்தில் இருந்து தள்ளி வைத்துவிட வேண்டும். சிவ ஸ்துதியைவிட, சிவத்தில் மூழ்கியிருப்பதைவிட, வேறு விஷயங்களில் இவர்களை நாம் இழுத்து வர வேண்டும். இவர்கள் புத்தியைத் திசை திருப்பவேண்டும்'' என்று சொல்லி, தன் உடம்பிலிருந்து ஒரு புருஷனை உருவாக்கினார். அவன் மாயையில் வல்லவனாக இருந்தான். சிவனைவிட மிகச் சிறந்த விஷயம் இந்த பூவுலகில் உண்டு என்று சொல்வதற்காக அவன் புறப்பட்டு வித்தியுன்மாலியிடமும் தாரகாக்ஷனிடமும் கமலாக்ஷனிடமும் போனான்.

நாரதர் அவர்களின் சபையில் தோன்றினார். ''அடேடே! மாயையில் வல்லானா... மிகப் பெரிய ஆள் ஆயிற்றே! இவர்தானே எனக்கு எல்லாமும் சொல்லிக் கொடுத்தது. இவரை வணங்கினால் எல்லோருக்கும் நற்பேறு கிடைக்கும். இவருடைய கொள்கையைப் பின்பற்றினால், மிகச் சிறந்த உயர்நிலைக்கு வரலாம். எனவே, செவிமடுத்து இவரைக் கேளுங்கள். நானும் இவரை செவிமடுத்துத்தான் இந்த உயர்நிலைக்கு வந்தேன்'' என்றார்.

''நீங்களே இவரை வணங்குகிறீர்கள் என்றால், நாங்கள் எம்மாத்திரம்! நாங்களும் இவரை வணங்குகிறோம். அய்யா, உங்கள் கொள்கை என்ன?'' என்று கைகூப்பிக் கேட்டார்கள்.

மாயையில் வல்லான், சிவனுக்கு அப்பால் உள்ள விஷயத்தை, சிவனுக்கு எதிரான விஷயத்தை, மயக்கம் தரக்கூடிய விஷயத்தை, பூமியின் சுகபோகங்களை, அந்த சுகபோகங் களின் வரிசையை அவர்களுக்குத் தெரியப் படுத்தினார். அந்தச் சுகத்தால் என்ன விதமான உயர்வை அடையலாம், என்ன விதமான அமைதியை அடையலாம் என்று பெரிதாக விளக்கினார். அவர்கள் மயங்கினார்கள்.

சிவ ஸ்துதியை மறந்தார்கள். சிவ பூஜையை வெறுத்தார்கள். சிவனை மறந்தார்கள். அவர்கள் மறந்துபோக, சிவன் கோபமுற்றார். அவர்கள் ஒன்றாக இருந்த ஒரு தருணத்தில் அவர்களை அழித்து ஒழித்தார்.

நாரதரின் இந்தக் கலகத்தால், பூமி பெருங்கேட் டிலிருந்து தப்பித்தது. இந்திராதி தேவர்கள் நாரதரை வணங்கினார்கள். பூமி மறுபடியும் செழித்தது. தேவர்களுக்கு உண்டான பூஜையை, அவிர்பாகத்தை பூமியில் உள்ள மக்கள் மிகச் சிரத்தையோடு வழங்கினார்கள். பிரபஞ்சம் மறுபடியும் சுகமாக இயங்கத் துவங்கியது.

இரண்டாயிரம் புதல்வர்களைத் திசைமாற்றி நாரதர் அழைத்துச் சென்றதைப் பற்றி துக்கப் பட்ட தட்சன், பிள்ளைகளுக்கு பதிலாகப் பெண்களைப் பிறப்பிக்கலாம் என்று தீர்மானம் செய்தான். பல நூறு பெண்களைப் பெற்று, ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் திருமணம் செய்து வைத்தான். அவர்களின் ஆசீர்வாதத்தால் மிகச் சிறப்பாக வாழ்ந்தான். பார்வதிதேவியே தனக்கு மகளாக வரவேண்டும் என்று வேண்டி, அவ்விதமே பெற்றான்.

ஆறு வயதில் தகப்பனை விட்டு, வேறு இடத்துக்கு போய், அங்கு சிவனைக் குறித்துக் கடும் தவம் செய்தாள் தாட்சாயினி. சரியான தருணத்தில் சிவபெருமான் அவள் முன் தோன்றி, திருமணம் செய்துகொண்டார்.

தன்னுடைய அனுமதியின்றி, தன் பெண்ணே விரும்பி, உடம்பு முழுவதும் சாம்பல் பூசிய ஒரு சுடுகாட்டுப் பேயனைத் திருமணம் செய்தது கண்டு தட்சன் வருத்தப்பட்டான். பெண் புத்தி பின் புத்தி என்று நினைத்துக்கொண்டான்.

சிவனுடைய உயரிய விஷயங்களை அறிந்திருந்தபோதும், அவரே முடிவின் முடிவு என்று தெரிந்திருந்தபோதும், ஊழ்வினை வழியால், தன் அகங்காரத்தால் அதை மறந்து, 'இவன் போய் எனக்கு மருமகனாக வந்தானே’ என்ற இழிவுரையைப் பலரிடமும் பரப்ப ஆரம்பித்தான். 'இவன் என் மகளை ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டான். இவனை அவமானப்படுத்த வேண்டும்’ என்று கங்கணம் கட்டிக்கொண்டான்.

எப்படி அவமானப்படுத்துவது? போருக்கு அழைப்பதா? வேண்டாம். வேறு விதமாகச் செய்வோம். மிகப் பெரிய வேள்வி ஒன்றை ஆரம்பிப்போம். அதற்குத் தேவர்கள் அனைவரையும் அழைப்போம். இவனை மட்டும் புறக்கணிப்போம்.

அவமானத்தில் மிகச் சிறந்தது புறக்கணிப்பு. அடித்து அவமானப்படுத்துவதைவிட, வெட்டி வீழ்த்துவதைவிட, புறக்கணிப்பதுதான் சிறந்த தண்டனை என்று கொக்கரித் தான். அவ்விதமே, மிகப் பெரிய வேள்வியைத் துவக்கினான். எல்லோரையும் வேள்விக்கு அழைத்தான்.

'என்னது... என் தந்தை மிகப் பெரிய வேள்வி நடத்துகிறாரா! எல்லோருக்கும் அழைப்பு அனுப்பியிருக்கிறாரா! எனக்கு சொல்லவில்லையே? எனக்கு ஏன் அழைப்பு இல்லை? நான் போக வேண்டாமா? அழைப்பு அனுப்பினாலும் அனுப்பாவிட்டாலும் அவர் என் தந்தைதானே? அது என் வீடுதானே? அந்த வீட்டில் ஒரு விசேஷம் என்றால், மிகப் பெரிய வேள்வி நடக்கிறது என்றால், நான் இல்லாது நடக்குமா? என் வருகையை அங்கு புறக்கணிப்பார் உண்டா? நான் நிச்சயம் போயாக வேண்டும். என் தந்தையைப் பார்த்து ஒரு கேள்வி கேட்க வேண்டும். ஊர் முழுவதும் கூட்டியிருக்கிறாய். பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை கோயில்களிலுள்ள நவநாயகர்களையும், மிகச் சிறந்த சிரேஷ்டர் களையும் தெய்வங்களையும் அழைத்திருக் கிறாய். ஆனால், என் புருஷனுக்கு அழைப்பு இல்லையே, ஏன்? அவரிடம் என்ன குறை கண்டாய்? எதற்காக என் புருஷனை அவமதிக்கிறாய்? நீ செய்வது தவறல்லவா! நான் உன் மகள். எனக்கு நீ தந்தையெனில், அவருக்கு நீ மாமன்தானே? அப்படியானால் அவரை மரியாதையுடன் நீ வணங்கி அழைக்கவேண்டியது முறையல்லவா! எப்படி மறந்தாய்? ஏன் மறுத்தாய்?



நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:27 am



அவரை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த வேள்வியைத் துவக்கினாயா? அவரை அவமானப்படுத்திவிட முடியுமா உன்னால்? மிகப் பெரியவராயிற்றே அவர். அவருடைய பிரமாண்டம் தெரியாதா உனக்கு? அவரை வணங்கி நின்றவன்தானே நீ? அவரை வணங்குகின்ற பிரம்மாதி தேவர்களையெல்லாம் உனக்குத் தெரியும்தானே! அவர்களை வணங்கி வரம் பெற்றவன்தானே நீ! யாரிடம் நீ வரம் பெற்றாயோ அவர்களே கை கூப்பி, தலை வணங்கி, அஞ்சி, நடுங்கித் தொழுகின்ற என் புருஷனை நீ எப்படி உதாசீனம் செய்யலாம்? எவராலும் உதாசீனம் செய்யமுடியாத இடத்தில் இருக்கிற என் புருஷனை வேள்விக்கு அழைக்காமல் இருப்பது என்ன நியாயம்?

நான் உன் பிரியமுள்ள மகள் என்றால், எனக்கு நீ தந்தையென்றால், அவருக்கும் நீ உறவு. அந்த உறவின்படி அவருக்கு நீ அழைப்பு அனுப்பு. அவருக்கு இந்த யாகத்தில் உண்டான அவிர் பாகத்தைக் கொடு. மறுத்தால் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது...’ - பார்வதிதேவி உள்ளுக்குள் சீறினாள்.

புருஷனிடம் போய் கை கூப்பி நின்றாள். ''நான் என் தந்தை நடத்துகிற வேள்விக்குப் போக விரும்புகிறேன். தயவுசெய்து அனுமதிக்க வேண்டும். அந்த வேள்வியின் சிறப்பு காரணமாகவோ, என் தந்தைமீது எனக்கு இருக்கிற மரியாதை காரணமாகவோ, அன்பு காரணமாகவோ நான் அங்கு போக விரும்பவில்லை. உங்களுக்கு அவர் அழைப்பு அனுப்பவில்லை. வேண்டும் என்றே புறக்கணித்திருக்கிறார். மற்ற எல்லோரையும் அழைத்துவிட்டு, உங்களை அந்த வேள்வியில் கலந்துகொள்ளத் தகுதியில்லாதவர் என்று காட்டுவதற்காக இப்படிப்பட்ட அகங்காரமான எண்ணம் கொண்டிருக்கிறார். அவரது ஆணவத்தை முற்றிலுமாக நீக்கி, அவருக்குப் புத்தி புகட்டி, உங்களை முறைப்படி அழைக்குமாறு செய்யவே நான் அங்கு போகப் போகிறேன்'' என்று சொன்னாள்.

சிவன் மெள்ளச் சிரித்தார். பிறகு அமைதியானார். ''தேவையா இது? எல்லாம் அறிந்த நீயுமா இவ்வளவு பெரிய தவறு செய்கிறாய்? அழைப்பு இல்லாத இடத்துக்குப் போய் 'எனக்கு அழைப்பு கொடு’ என்று வேண்டுவது எந்த விதத்தில் மரியாதை? இது எப்படிப்பட்ட நாகரிகம்? இது என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று உனக்குத் தெரியாதா? என்ன தேவி, என்னாயிற்று உனக்கு? அழைப்புக்காகவா, அழைக்காத இடத்துக்குப் போவார்கள்? அது அவமானம் அல்லவா? அழைக்காதவருக்கு அகங்காரம் அதிகமாகிவிடாதா? 'நான் அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் நீ வருவாய். உன்னைச் சார்ந்தவர்களும் வருவார்கள்’ என்று கொக்கரிக்க மாட்டாரா? தெரியாமல் செய்தவர் என்றால், புரிய வைப்பதற்குப் போகலாம்
தேவி! திட்டமிட்டு அவமானப்படுத்துகிறார் உன் தகப்பன். அவரிடம் போய், என்ன தெளிய வைக்கப் போகிறாய்? அருமை மனைவியே, உனக்கு மரியாதை இல்லாத இடத்தில் நான் போக மாட்டேன். அதே விதமாக நீயும் நடந்துகொள்ள வேண்டும். பெற்ற தந்தையே ஆனாலும், நமது உறவு அதனினும் மேம்பட்டது. நாம் கணவன்- மனைவி. ஒன்றுக்குள் ஒன்றாகி இருப்பவர்கள். பிரியாதவர்கள். பிரிய முடியாதவர்கள். இந்த உறவின் உன்னதத்தை அவருக்கு எடுத்துரைக்கப் போகிறாயா? அவருக்குப் புரியுமா?

பிரபஞ்சத்தில் அனைவருக்கும் இது திட்டமிட்ட பழி என்று தெரியுமே! எல்லோரும் இதுபற்றிக் கவலையோடுதானே இருக்கிறார்கள். ஆயினும், வேள்வியின் அழைப்பை மறுக்க முடியாமல்தானே போகிறார்கள்? அவர்களைப் போகக்கூடாது என்று சொல்ல எனக்கு உரிமையில்லை.

அப்படிச் சொல்லவும் மாட்டேன். ஆனால், நீ போகிறேன் என்று சொல்கிறபோது, 'யோசனை செய்துவிட்டுப் போ’ என்று சொல்லத் தோன்றுகிறது. தட்சன் அவமானப்படுத்துவது சிவன் என்ற தனி மனிதனையோ, அவருடைய மனைவியான தாட்சாயினியையோ அல்ல! கணவன்- மனைவி என்ற உறவுக்குள், தகப்பனுக்கு இன்னும் ஆளுமை இருக்கிறதென்ற ஓர் அநியாயமான தர்க்கத்தை அவர் முன்வைக்கிறார். மிக மோசமான ஒரு சட்ட திட்டத்தை நிரூபிக்க நினைக்கிறார். கணவன்- மனைவிக்கு நடுவே பிள்ளைகள் இல்லை; பெண் மக்கள் இல்லை; ஏன், கடவுள்கூட இல்லை. திருமணமான அடுத்த கணமே முழுவதுமாய் ஒரு பெண்மணி கணவனுக்கு உடைமை ஆகிறாள். கணவன்- மனைவி என்ற அந்த உறவுக்கு இடையே உன் தகப்பனுடைய அகங்காரம் புகுந்து புறப்பட நினைக்கிறது. மிகப்பெரிய அகங்காரம். கேட்பதற்கும் பார்ப் பதற்கும் அருவருப்பாக இருக் கிறது. தட்சன் என்கிற அந்த மனிதனை நான் கோபமாக அல்ல, அருவருப்பாகத்தான் பார்க்கிறேன். அருவருப்பானவரைப் புறக்கணிப் பதுதான் சரியே தவிர, அவருக்குப் பின்னால் போவது மரியாதை அல்ல. அது அவருடைய அகங்காரத்தை அதிகப்படுத்தும். அருவருப்பை மேலும் கிளறும். எனவே, மறுபடியும் தீர்க்கமாக யோசனை செய், தாட்சாயினி!'' என்று மிருதுவான குரலில் சிவபெருமான் பேசினார்.

''ஒரே ஒரு வித்தை தெரிந்து, அதில் உச்சகட்டம் அடைந்து, அதன் உச்சகட்டத்தாலேயே உலகில் எல்லா விஷயங்கள் பற்றியும் தன்னால் பேச முடியும் என்றும், தன்னால் நிர்பந்திக்க முடியும் என்றும், தனக்கு அப்படிப் பேசுகிற அருகதை வந்துவிட்டது என்றும் ஒருவன் நினைப்பானாயின், அவனை அருவருப்பாகப் பார்க்காமல் வேறு எப்படிப் பார்ப்பது? தவம் செய்து வரங்கள் பெற்றான் என்பதற்காக, தேவர்களைப் பதற அடித்தான் என்பதற்காக, நான் தட்சனைப் பற்றிக் கொண்டாட என்ன இருக்கிறது? எதன் பொருட்டும் நீ அங்கு செல்லலாகாது என்பதுதான் என் கருத்து. 'அங்கே போய் அவனுக்கு அறிவுரை சொல்கிறேன்; அதற்கு எனக்கு உரிமை இருக்கிறது’ என்று நீ நினைத்தால், தாராளமாகப் போய் வா. உன் அறிவுரை அங்கு எடுபடுமானால், கவலையின்றி நீ செல். ஆனால், என்னை அழைக்காதே! அழைப்பு இல்லை. எனவே, வருவதற்கில்லை. மரியாதை இல்லை. எனவே, அவரை மதிப்பதற்கு இல்லை. என்னுள் சரி பாதி நீ. எனக்கு உன் மீது இருக்கிற அத்தனை உரிமை போல, உனக்கு என் மீது இருக்கிறது. தந்தையை நோக்கிப் போகிறேன் என்று சொல்ல உனக்கு உரிமை உண்டு. என்னிடம் நீ அனுமதி கேட்க வேண்டிய அவசியம்கூட இல்லை. ஆனால், கேட்கிற பாங்கு மிகச் சிறந்தது. அதனாலேயே, நீ கேட்ட தன்மையினாலேயே உன்னை அனுமதிக்கிறேன். போய் வா!'' என்று விடை கொடுத்தார்.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:27 am


தாட்சாயினியின் மனப்பாங்கு நாரதருக்குப் புரிந்தது. 'என் புருஷனுக்கு மதிப்பு தரவில்லையே’ என்று பதறுகிற அந்த மேன்மை தெரிந்தது. 'பெற்ற தகப்பனே என் புருஷனை இழிவுபடுத்துகிறாரே, அது என்னை இழிவுபடுத்துவது போலல்லவா? உலகத்திலுள்ள கணவன்- மனைவியை இழிவுபடுத் துதல் போலல்லவா?’ என்கிற ஆற்றாமை தெரிந்தது.

ஒரு பிடிவாதம் இன்னொரு பிடிவாதத்தை வளர்க்கும். அந்த எதிர்ப் பிடிவாதம், இருந்த பிடிவாதத்தைவிட இன்னும் உக்கிரமாகும். அந்த உக்கிரத்திலிருந்து இன்னொரு உக்கிரம் எழும். அப்படியானால் தட்சனின் அழிவு நிச்சயம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி என தெள்ளத் தெளிவாக நாரதருக்குத் தெரிந்தது.

''நீ என் மகளே இல்லையே! உனக்கு நான் திருமணம் செய்து கொடுத்தேனா? அக்னிக்கு எதிரே நின்று உன் புருஷனுக்கு உன்னை தத்தம் கொடுத்தேனா? தாரை வார்த்தேனா? இல்லையே! நீயாக என்னை விட்டு அகன்றாய். தவம் செய்யப் போகிறேன் என்றாய். தவம் செய்யப் போய், சுடுகாட்டுச் சாம்பல் பூசியவனை என் எதிரே கொண்டு வந்து, 'இவனே எனக்குப் புருஷன்’ என்றாய். பிறகு எனக்கென்ன மதிப்பு? என்னை நீ மதிக்காததன் விளைவுதான், நான் இன்று உன் புருஷனை மதிக்காதது. தவறு உன் மீதுதான். ஆரம்பம் நீதான். நீ யாரையேனும் ஓர் ஆண்டியைத் திருமணம் செய்துகொண்டு வருவாய். நான் அவனையெல்லாம் கொண் டாடிக் கொண்டிருக்க வேண்டுமா? எனக்கு இணையாக நான் தேடிய, நான் விரும்பிய, உனக்குக் கணவனாக வரவேண்டும் என்று நான் நினைத்த உயர் குணமுடைய ஒரு புருஷனை, உன் கணவனிடத்தில் நான் காணவில்லை. அவன் எனக்கு இணையானவன் இல்லை என்பது மட்டுமல்ல; உனக்கும் தகுதியில்லாதவன். என் மகள் தகுதியில்லாதவனைத் தன் கணவனாக வரித்துவிட்டாளே என்ற வேதனை, நொய்மை இருக்கிறதே தவிர, உன் மீது எந்தப் பரிதாபமும் எனக்கு இல்லை.

எப்போது என்னை விட்டு அகன்றாயோ, எப்போது என் பேச்சைக் கேட்காமல் போனாயோ, எப்போது என்னைவிட புருஷன் முக்கியம் என்று அகன்றாயோ, அப்போதே நான் தந்தையுமல்ல; நீ மகளுமல்ல. ஆனாலும், நீ நான் பெற்ற மகள். ரத்தத்தின் ரத்தம். இருந்து, விருந்து சாப்பிட்டுவிட்டுப் போ! உன் புருஷனை ஒருக்காலும் அனுமதிக்க முடியாது; அழைக்க முடியாது!'' என்று உரத்த குரலில் கொக்கரித்தான் தட்சன்.

தாட்சாயினி மனம் நொந்தாள். கோபத்தின் உச்சியில் ஆக்ரோஷமானாள். ஆக்ரோஷத்தின் உச்சியில் ஆவேசமானாள்.

'எப்போது என் புருஷனுக்கு இந்த வேள்வியில் இடமில்லையோ, இந்த வேள்வி அழிந்து போகட்டும். இந்த வேள்வி நாசமாகட்டும். இந்த இடத்தில் எந்தப் புனிதம் இருக்கிறதென்று நீ கருதி ஊர்பட்ட நதிநீரையெல்லாம் இங்கு தெளித்திருக்கிறாயோ, எல்லாப் பெரிய மனிதர் களையும் வரவழைத்திருக்கிறாயோ, மிகப் பெரிய மந்திர, ஜபங்களைச் சொல்லி இங்கு சுத்தம் செய்திருக்கிறாயோ, இந்த இடத்தை நான் அழித்துவிட்டுத்தான் போவேன். இதே இடத்தில் நான் தீப் பாய்ந்து என்னை மாய்த்துக் கொண்டால், இந்தப் புனிதம் கெட்டுவிடும் அல்லவா? இந்த வேள்வி நாசமாகிவிடுமல்லவா? இதற்கு அர்த்தம் இல்லாமல் போகுமல்லவா? அதைச் செய்கிறேன். இந்த வேள்வி அழியட்டும். நாசமாகட்டும்!'' என்று சொல்லி, தன்னுடைய உடம்பிலிருந்து தீயைக் கிளறி மிகப் பெரிதாக்கி, அந்த தீயின் பிடிக்குள் தன்னை அடக்கிக் கொண்டாள். சாம்பலானாள்.

துக்கத்தினால் ஏற்படுகின்ற மரணம் மிகப் பெரியது. அது ஒரு இடத்தை, ஒரு வேள்வியை, ஒரு வீட்டை நாசப்படுத்தும். மனம் நொந்து ஒருவர் இறந்த இடம் மறுபடியும் மலராது. மனம் நொந்து இறந்தவருடைய நினைப்பே, அவருடைய வேகமே அங்கு சுற்றிக் கொண்டு இருக்கும். தட்சனுடைய யாகம் மூளியாயிற்று.

ஆனாலும், தட்சன் விடவில்லை. அந்த இடத்தைப் புனிதப்படுத்த, மறுபடியும் வேகமாக வேலைகள் செய்யத் துவங்கினான். நாரதர் திகைத்தார். மிகப் பெரிய சம்வாதம் இருக்கும், தட்சனுக்குப் புரியும்படி சொல்வதற்கு தாட்சாயி னிக்குத் தெரியும் என்று அவர் நினைத்திருந்தார். ஆனால், அவள் இப்படித் தன்னை மாய்த்துக்கொண்டது அவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஊழிக்காலம்போல மிக மோசமான காலம் பின்தொடரும் என்பது அவருக்கு தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.

அங்கிருந்து விரைவாகப் போய், சிவனாரின் சந்நிதியை அடைந்தார். மெள்ளத் தலை நிமிர்ந்தார். கண்களில் நீர் பனித்தன. கன்னம் வழிந்தது. ''உம்முடைய மனைவியும், உலகத்திற்கேதாயாருமான தாட்சாயினி மனம் நொந்து அந்த வேள்விக்கூடத்திலேயே தன்னை மாய்த்துக் கொண்டார். எது மிகச் சிறந்த உறவோ, அந்த உறவு களங்கப்படுத்தப்பட்டுவிட்டது. அந்தக் களங்கத்தைப் போக்குவதற்கு, தான் இருப்பது கூடாது என்று நினைத்து தன்னையே பஸ்பமாக்கிக் கொண்டார்'' என்று சொல்ல, சகலமும் அறிந்த சிவனார் எழுந்து நின்றார்.

நாரதர் சொன்னதைப் புதிதாகக் கேட்பது போலத் தலையசைத்துக் கேட்டார். தன் சடையிலிருந்து ஒரு சடையை உருவி, கோபத்தோடு ஓங்கித் தரையில் அடித்தார். மிகப் பிரமாண்டமான ஓர் உருவம் தோன்றியது. அந்த உருவத்துக்கு வீரபத்திரர் என்று பெயர். நாரதர், சிவனாரின் அந்த அம்சத்தைக் கை கூப்பி வணங்கினார்.



நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:28 am



''போ, போய் தட்சனின் வேள்வியை அழித்து விட்டு வா! அந்த இடத்தில், தண்டிப்பதற்குக்கூடக் கால் வைப்பதற்கு நான் கூசுகிறேன். அவனைப் பார்ப்பதற்கு நான் அருவருப்படைகிறேன். எனக்குப் பதிலாக நீ போ. தட்சனை அழி. அந்த இடத்தை நாசம் செய். அங்கு வந்திருக்கிற அத்தனை பேரையும் தண்டித்துவிடு'' என்று சொன்னார்.

வீரபத்திரர் மிக வேகமாக அங்கு போய், அந்த யாகக் கூடத்தைச் சின்னாபின்னப்படுத்தினார். தட்சனைத் துரத்தித் துரத்தி அடித்துக் கொன்றார். அங்கு வந்தவர்களின் சிரங்களைக் கொய்தார். அங்கஹீனமாக்கினார். சிதறடித்தார். வேள்விக்கூடம் நாசமாகியது.

இனி என்ன நடக்கும்? நாரதர் கவலையோடு சிவபெருமானைப் பார்த்தார். ''எல்லோரையும் கொன்றுவிட்டாரே வீரபத்திரர்'' என்று கவலையோடு கேட்டார். சிவனார் கருணை புரிந்தார். ''விருந்துக்கு வந்தவர்கள் மறுபடி உயிர் பெற்று எழட்டும்'' என்று சொன்னார். வந்தவர்கள் அங்கஹீனம் நீங்கி, உயிர் மறுபடியும் தரித்து முன்போல் பழைய வடிவம் எடுத்தார்கள். தட்சன் மட்டும் காணாமல் போனான். அவன் கர்வமும் உயிரும் அதே இடத்தில் அழிந்தன.

சிவனார் கண் மூடி, தன் மனைவியை நினைத்து மிகுந்த துக்கத்தோடு தவம் செய்யப் போனார். அவரை வலம் வந்த நாரதர், அவர் தவம் பலிக்குமாறு வைகுந்தவாசனை வேண்டிக் கொண்டு, அந்த இடம் விட்டு அகன்றார்.

கணவன்- மனைவி உறவு மிக அற்புதமான விஷயம். அது மிகப்பெரிய சக்தி. அந்தச் சக்தியால் உருவாக்கவும் முடியும்; அழிக்கவும் முடியும். சிவன்- தாட்சாயினி விவாதத்தைப் பல நூறு விதமாக விளக்க முடியும். சிவன்- தாட்சாயினி, பூமியிலுள்ள கணவனுக்கும் மனைவிக்குமான மிகப் பெரிய பாடம். ஓர் அகங்காரத்துக்கு எதிராக அன்பு நடத்திய பாடம்.

கணவனை இழிவுபடுத்தியதற்காக நொந்து இறந்த மனைவி, தன் மனைவியின் மரணத்திற்காகச் சீறி எழுந்து துவம்சம் செய்த சிவன். இது ஆவேசமான, அசைக்க முடியாத காதல் நிரூபணம். கணவன்- மனைவிக்கு இடையே கடவுளும் வர முடியாது என்கிற நிச்சயம். இருந்தாலும், இறந்தாலும் பிரிவில்லாத விஷயம்.

நாரதர் மனம் குவித்து இந்தச் சம்பவத்தையே வெகுகாலம் நினைத்துக்கொண்டிருந்தார். இங்கே நாரதரின் கண்ணீர், சிவபெருமானைத் தூண்டி, மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியது.

பிரபஞ்சத்தில் எல்லா உலகங்களுக்கும் போகிற சக்தியை நாரதர் கொண்டிருந்தாலும், அவருக்குப் பூவுலகின் மீது தனித்த அபிமானம் உண்டு. பூமியில் உள்ள மக்கள் நாராயணனைக் கொண்டாடுகிறார்கள் என்பதும், தர்ம வழியில் நிற்கப் போராடுகிறார்கள் என்பதும் அவருக்கு உவப்பாக இருந்தது. அதே நேரம், பூமியில் வலிமை பெற்றவர்கள், அரக்க குணம் உடையவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று அவர் மனம் தனியே விசாரித்துக் கொண்டிருக்கும். அவர்களை தேடிக் கொண்டிருக்கும்.

ராவணன் தன் புஷ்பக விமானத்தில் ஏறி, உலகத்தைச் சுற்றி வந்துகொண்டிருக்கிறான் என்பது அவருக்குத் தெரிந்தது. அவன் விமானம் இமயமலையைத் தாண்ட முடியாமல் நின்றது. எவ்வளவு உயரமாக விமானத்தைச் செலுத்தினாலும், ஒரு மலை - அதற்கு மேல் ஒரு மலை, அதற்கு மேலும் ஒரு மலை என எதிரே முட்டுவதைப் போல மலை வழிமறித்து நின்றுகொண்டிருந்தது. 'போக வரச் சௌகரியமாக இந்த இடம் இல்லையே! மலை மீது மலை இருப்பதால் சுழல் காற்று வீசி, புஷ்பக விமானத்தை தடுமாறச் செய்கிறதே! எனவே, இந்த மலையை இரண்டாகப் பிளந்து அப்புறப்படுத்தினால் நடுவே வழி வருமல்லவா!’ என்ற எண்ணத்தில் புஷ்பக விமானத்திலிருந்து கீழே இறங்கினான் ராவணன். மலைக்கு அடியே கை வைத்தான். தூக்கினான். பிரிக்க முயற்சி செய்தான்.



நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:28 am



கயிலை மலையில் சிவனார் அமைதியாக உட்கார்ந்திருந்தார். அந்த மலை ராவணனுடைய அசைவால் குலுங்கத் துவங்கியது. பார்வதி ஓடி வந்து சிவனைத் தழுவிக்கொண்டாள். சிவனார் கண் திறந்தார்.

'யாரது, ராவணனா? போக வர வழி வேண்டுமா? போனால்தானே வருவதற்கு? இரு இங்கேயே!’ என்று தன் கட்டை விரலால் மலையை அழுத்தினார். அடியில் கை கொடுத்தவனுடைய தோள் நசுங்கியது. உடம்பு துவண்டது. மலையின் பாரம் அவன் மீது சாய்ந்தது. ராவணன் தவித்தான். மீண்டு வர எல்லாவிதமான உபாயங்களையும் செய்து பார்த்துத் தளர்ந்து போனான். சிவனுக்கு முன்னால் தான் எம்மாத்திரம் என்று புரிந்துகொண்டான். தனது பத்து தலைகளில் ஒன்றைக் கொய்தான். உடம்பிலுள்ள நரம்பை உருவி நாணாக்கி, தன் உடம்பையே யாழாக்கி, மீட்டினான். சிவனாரைக் குளிர்விப்பதற்காக சாம கானம் பாடத்துவங்கினான்.

'அடடா! இவன் கெட்டிக்காரனாக இருக்கிறானே. நல்ல உபாயத்தைக் கண்டுபிடித்துவிட்டானே! சிவன் தண்டிக்கிறார் என்று தெரிந்து, என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யத் துவங்கிவிட்டானே! ஆக, ராவணன், சிவபெருமானின் கருணையைப் பெறுவது உறுதி. ஏனெனில், சிவனுக்கு சாமகானம் பிடிக்கும். சாமகானம் பூவுலகின் அற்புதமான விஷயம். ஒரு மனிதனுடைய சரீரத்தில் விசுக்தி என்ற இடம் தொண்டையில் இருக்கிறது. அந்தத் தொண்டையில் ஏற்படும் அதிர்வுகள் உடம்பு முழுவதும் வெகு வேகமாகப் பரவுகின்றன. குறிப்பாக அந்த அதிர்வுகள் மூளைக்குப் பரவி, கண்களுக்குப் பரவி, காதுகளுக்குப் பரவி, மூளைக்கு நடுவே இருக்கிற நந்தியையும் தொடுகிறது. அந்த நந்தி என்கிற ஆரஞ்சுச் சுளையின் சிறிய முத்துப்போல் இருக்கிற இடத்தில் திரவம் அடர்ந்திருக்கிறது. அந்தத் திரவத்திலே, அந்த நந்தியினாலே நேரே நிற்கவும், தலை நிமிர்த்திப் பேசவும் மக்களால் முடிகிறது. நந்தி என்கிற அந்த இடத்தைக் குறிவைத்து, அங்கிருந்து விசுக்தியில் மனம் மாற்றி, அந்த இரண்டையும் இணைத்து ராவணன் சாமகானம் பாடத் துவங்கிவிட்டான்.

சாமகானம் மேற்கேயிருந்து கிழக்கே போகும் கடலைப் போல சுருள் சுருளாகப் பரவுவது. மிக ஆழமானது. பூமியின் சப்தம் சாமகானத்தில் இருக்கிறது. சாம கானத்தின் சப்தம் பிரபஞ்சம் முழுவதும் பரவியிருக்கிறது. எனவே, உள்ளம் உருக்குகின்ற சாமகானத்தைப் பாடும்போது சிவன் மனம் குளிர்வார் என்பது திண்ணம். நாரதர் அங்கேயே தன் மனம் லயிக்க விட்டார். சிவன் மனம் இரங்கினார்.

''என்ன அற்புதமாகப் பாடுகிறாய்! எவ்வளவு திறமையானவன் நீ. உன்னைப் பற்றி எந்தக் கவலையும் படாமல் சாமகானம் பாடுவதிலேயே, என்னை மகிழ்விப்பதிலேயே எத்தனைத் தீர்மானமாக இருக்கிறாய். இதற்கு நடுவே ஏன் அரக்கத்தனமான வேலைகளைச் செய்கிறாய்? உனக்கு என்ன வேண்டும், கேள்!'' என்று கேட்க, தேவர்கள் எல்லோரும் அவன் என்ன கேட்கப் போகிறான் என்று வியந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நாரதர் சிரித்தார். தவறாகத்தான் கேட்கப்போகிறான் என்று தெளிவானார்.

''மிகப் பெரிய வலிவு வேண்டும். தேவர்களாலோ அசுரர்களாலோ கந்தர்வர்களாலோ எனக்கு மரணம் நேரக்கூடாது. விலங்குகளாலோ, பறவைகளாலோ, மீன் முதலிய உயிர்களாலோ எனக்கு மரணம் நேரக் கூடாது...'' என்று அடுக்கினான். சிவனார் சம்மதித்தார்.

மனிதனை அவன் மறந்துவிட்டான். மனிதன் என்றைக்கு நம்மோடு போரிடுவான்; அவனால் அது முடியாத காரியம் என்று நினைத்து விட்டான். ஆனால், அந்த வரத்தினுடைய பலஹீனம் அங்கே தொக்கி இருந்தது.

சிவன் அவனை விடுவித்தார். அவன் வணங்கி விடைபெற்றான். மிகச் சிறந்த வலிவு பெற்று தேவர்களையும், நவநாயகர்களையும் தொந்தரவு செய்தான். கோள்களுக்குள் குதித்து அவற்றை வேதனைப் படுத்தினான். பூமியிலுள்ள எல்லா உயிரினங்களையும் அவன் ஒரு பார்வையில் அடக்கினான். அசுரர் கூட்டம் அவனைச் சுற்றி வளர்ந்தது. அதுவே பூமியை ஆட்சி செய்கிற விதமாக உயர்ந்தது.

ராவணன் முன்பு தோன்றினார் நாரதர். ''அடேயப்பா! எப்பேர்ப்பட்ட திறமைசாலி நீ. சிவனுடைய கருணையை எவ்வளவு எளிதில் பெற்று விட்டாய். என்ன செய்தால் சிவன் வரங்கள் தருவார் என்று தெரிந்து, வெகு நுணுக்கமாக வேலை செய்து உன்னுடைய வலி, வேதனைகளைப் பாராது மிகப் பெரிய தவசி போல சாமகானம் பாடி, வரம் பெற்றிருக்கிறாய். ராவணா, நீ இத்தனை வரங்கள் பெற்றது தேவர்களோடு சண்டையிடவா? தேவர்கள் உனக்கு இணையாவார்களா? உனக்கு இணையான வர்களிடம் அல்லவா நீ சண்டையிட வேண்டும்?'' என்று கேட்டார்.

''யார் எனக்கு இணை?'' என்று ராவணன் அதட்டலாகக் கேட்டான்.

''எமதர்மன். அவன்தானே பூவுலகத் திலுள்ள அத்தனை உயிர்களையும் அடித்து, துவைத்து தன் பக்கம் இழுத்து வருகிறான். மிகுந்த வலிமையோடு இருக்கிறான்'' என்று சொன்னார்.

''அப்படியா! அப்படியானால் எமனை நோக்கி நான் போகிறேன்'' என்று ராவணன் உடனே கிளம்பினான். நாரதர் கண நேரத்தில் எமனிடம் வந்தார்.



நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:28 am



''உன்னுடைய எந்தப் பாசமும், எந்தத் தண்டமும் அவனைத் தண்டிக்க உதவாது. அவனை அடக்க முடியாது. எனவே, நீ அடங்கிப் போ! அது நல்லது. பிற்பாடு இது உதவும்'' என்றார். ஆனாலும், எமன் தன்னுடைய கௌரவத்தை விட்டுக் கொடுக்காது ராவணனுடன் போர் செய்தான். ராவணனும் அவன் படைகளும் எம கிங்கரர்களைத் தாக்கியும், எமனை அடித்தும் துன்புறுத்தினார்கள். எமன் தோற்றோடிப் போனான்.

நரகத்தில் விழுந்த பல கெட்ட உயிர்களை, ஊரை நாசம் செய்த உயிர்களை ராவணன் விடுவித்தான். ''போய் சௌக்கியமாக வாழுங்கள்'' என்று பூலோகத்துக்கு அனுப்பினான். துன்பம் செய்தவர்கள் மறுபடியும் பிறந்து, மேலும் துன்பம் செய்தார்கள். பூமி அல்லலுற்றது. ஆனால், ராவணன் தன்னை யாராலும் அடக்கவே முடியாத ஆள் என்று நினைத்துவிடக்கூடாது அல்லவா? எனவே, நாரதர் மறுபடியும் அவனிடம் போனார்.

''எமனைப் பற்றிச் சிலாகித்துச் சொன்னீர்கள். இரண்டு நாழிகைகூடத் தாக்குப் பிடிக்க முடியாமல் ஓடிவிட்டானே? வேறு யாரையாவது சொல்லுங்கள்'' என்று கொக்கரிப்பாய்க் கேட்டான் ராவணன். நாரதர் யோசித்தார்.

''இங்கே ஒரு கந்தர்வ பட்டினம் இருக்கிறது. நாராயணன்மீது பிரேமை கொண்டவர்களும், அவரை பூஜித்தவர்களும், அவருக்குச் சேவை செய்தவர்களும், அவர் கோயிலுக்குப் பணி புரிந்தவர்களும் ஓர் இடத்திலே ஒன்று கூடி, தொடர்ந்து நாராயணனை பூஜித்து வருகிறார்கள். அவர்கள் வலிவு மிக்கவர்கள். அவர்களை யாரும் எதுவும் எளிதில் செய்ய முடிவதில்லை. அது அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். உன்னால் அவர்களை ஏதும் செய்யமுடியுமா என்று பார்!'' என்று தூண்டிவிட்டார். உடனே ராவணன் கிளம்பினான்.

அந்தக் கந்தர்வ பட்டினம் நோக்கி புஷ்பக விமானம் போயிற்று. ஒளி மிகுந்த அந்தப் பட்டினத்தைத் தாண்டமுடியாமல் தானாகவே கீழ் இறங்கிற்று. ராவணன் இறங்கிப் பார்த்தான். அழகிய வலிவுமிக்க பெண்கள் அங்கு விளையாடிக்கொண்டிருந்தார்கள். திடகாத்திரமான ஆண்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தார்கள். பெண்களை நோட்டமிடு வதற்காக ராவணன் அவர்களை நோக்கிப் போனான். அந்தப் பெண்கள் அவனைப் பார்த்துத் திகைத்தார்கள். 'இவன் நமது ஊர் ஆள் இல்லையே? வேறு எங்கிருந்தோ வந்திருக்கிறான். யார் இவன்?’ விசாரித்தார்கள். கிள்ளினார்கள். லேசாக அடித்தார்கள். இழுத்துத் தரையில் சாய்த்தார்கள். பிறகு, தூக்கி நிறுத்தினார்கள். 'விளையாட வா!’ என்று சொன்னார்கள். 'என்னைப் பிடி, பார்க்கலாம்!’ என்று ஆட்டம் காட்டினார்கள். தூக்கிக் கொண்டு போய் துவைத்தார்கள். ராவணன் அவர்களோடு கட்டிப் புரண்டு விளையாடினான். அயர்ச்சியுற்றான். ''போ, உன்னுடன் எவ்வளவு நேரம் விளையாடுவது! எங்களுக்கு வேறு வேலைகள் இருக்கின்றன!'' என்று அவனைத் தூக்கித் தொப்பென்று குளக்கரையில் போட்டுவிட்டுப் போனார்கள். ராவணன் எழுந்து நின்றான்.

'இந்தப் பெண்களிடமே நம்மால் வாலாட்ட முடியவில்லையே! வைகுந்தவாசனின் ஆதரவு பெற்ற இந்த இளைஞர்கள் என்ன செய்வார்கள்? இந்த ஆடவர்கள் எவ்வளவு பலம் பொருந்தியவர்களாக இருப்பார்கள்! இங்கு விளையாட வந்தது தவறு. இங்கு சண்டை போட்டது பிசகு. நாராயணன் அடியார்கள் எல்லாவற்றைக் காட்டிலும் வலிவு பெற்றவர்கள். நாராயணன் அடியார்களின் இத்தனை வலிவு அடிக்கமுடியாத ஒரு விஷயம். தூக்கித் தூக்கி அடிக்கிற வலிவு என்றால், அந்த நாராயணன் எவ்வளவு வலிவு! சண்டையிட்டால் அப்படிப்பட்ட ஆளோடு சண்டையிட வேண்டும். போட்டி என்றால் அப்படிப்பட்டவரோடு இருக்க வேண்டும். எனக்கு வேறு எவரும் தேவையில்லை. 'நாராயணன் வேண்டும். நாராயணன் வேண்டும். நாராயணன் வேண்டும்.’ இடையறாது இடையறாது நாராயணனின் ஜபத்தை செய்யத் துவங்கினான் ராவணன்.

நாராயணனே தன் வீரத்துக்கு இணையானவன் எனத் தீர்மானித்தான். எப்போது வரும் யுத்தம், எங்கிருக்கிறான் நாராயணன் என்று கவலைப்படத் துவங்கினான்.

நாரதர் பெரிதாக வாய்விட்டுச் சிரித்தார். 'எல்லாவற் றுக்கும் முடிவு உண்டு, ராவணா. உனக்கும் முடிவு வரும். உனக்காகவே நாராயணர் பூமியில் பிறப்பார். இத்தனை வேகமாக அவர் பெயரைச் சொல்கிறாய் அல்லவா? அவராலேயே உனக்கு முக்தி கிடைக்கும். உனக்கு மரணம் நிச்சயம். எவ்வளவு பெரிய வரங்கள் வாங்கியும், எத்தனை அகம்பாவமாக வாழ்ந்தும், எவ்வளவு திறமைசாலியாக இருந்தும் என்ன பயன்? நீ அவமானப்படுத்தப்பட்டு, பிறகு மரணமடையப் போகிறாய்!'' என்று சொல்லிச் சிரித்தார். அது அவன் செவிகளில் விழவில்லை.

இந்தப் பிரபஞ்சத்தின் அசைவுகள் எல்லாம் உணர்ந்த நாரதர் பூமியில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று தெளிவுற்றவராய், நாராயணர் பெயரை உச்சரித்தபடி சஞ்சரிக்கத் துவங்கினார்.

ராவணன் என்ற அசுரனுக்கு, நாரதர் ஒரு முடிவுரை எழுதினார். எவராலும் கொல்லப் படாமல் இருக்க வேண்டும் என்று வரம் வாங்கி வந்த அந்த லங்கேஸ்வர னுக்கு நாராயணரால் முடிவு ஏற்பட வேண்டுமென்று நாரதர் திட்டமிட்டார். ராவணனின் முடிவு நாரதரால் எழுதப்பட்டது. ராவண வதம் ஏற்படுவதற்காகவே ஸ்ரீமந் நாராயணர், ஸ்ரீராமராகப் பிறந்தார். விஸ்வாமித்திரரோடு பல இடங்கள் பயணப்பட்டு தாடகை வதம் செய்தார். கைகேயியின் வரத்தால் தந்தையைப் பிரிந்து வனவாசம் மேற்கொண்டார். ராவணன் வதத்துக்காகவே அந்த வனவாசத்தில் தன் மனைவியையும் தன் தம்பியையும் சேர்த்துக்கொண்டார். ராவணனுடைய வதம் இன்ன நேரத்தில் இன்னாரால் நிகழப்பட வேண்டும் என்று தீர்மானித்தவர் நாரத மகரிஷி.



நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக