புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
4 Posts - 4%
prajai
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
1 Post - 1%
Rutu
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
1 Post - 1%
bala_t
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
1 Post - 1%
Pradepa
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
28 Posts - 3%
sugumaran
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
18 Posts - 2%
prajai
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
5 Posts - 0%
Rutu
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாரதர் கதைகள் - எழுத்துச் சித்தர் பாலகுமாரன்


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:04 am

First topic message reminder :

நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 F3tDCalRRLCZg0Uw3j11+p14bநாரதர் கதைகள் வெறும் நகைச்சுவைக்காக எழுதப்பட்டவை அல்ல. எதனால், நாடகத்தில் நாரதர் கோமாளியானார் என்பது எனக்குப் புரியவில்லை. நாரதரது சரித்திரத்தைப் படிக்கும்போது அவர் மிகக் கூர்மையானவராக, மிகச் சிறந்த குணவானாக, மிக அமைதியானவராக, மிகுந்த ஒழுக்கச்சீலராக, தத்துவ விசாரம் உள்ளவராக, ஸ்ரீமந் நாராயணனையே சரணடைந்தவராக, சரணாகதிக்கு உதாரணமாகத் திகழ்ந்திருப்பதை உணர முடிகிறது. எதனாலோ மேடைகளில் அவர் கோணங்கியாகிவிட்டார்.

ஒரு விஷயத்தை ஒருவரிடமிருந்து பிடுங்கி இன்னொருவர் முன் வைத்து, இது சரியா என்று பார்க்கச் சொல்லி, 'இல்லை’ என்று அவரைச் சொல்ல வைத்து, இரண்டு பேருக்கும் இடையே கலகத்தை மூட்டுவதால் அவர் கோமாளியாகிவிட்டாரோ என்று தோன்றுகிறது. ஆனால், அது கலகமல்ல. 'இதுதான் சரி’ என்று ஒரு குழுவினரும், 'இல்லை, இதுவே சரி’ என்று இன்னொரு குழுவினரும் வாழ்ந்து வரும்போது, 'எது உண்மையில் சரி?’ என்று கேள்வி எழுப்புவது எப்படிக் கலகமாகும்? அது உண்மையை நோக்கிய பயணம். சத்தியத்தை நோக்கிய சாதனை. எனவே, 'நாராயண... நாராயண...’ என்று சொல்லிக்கொண்டே அவர் மேடையில் நுழைந்தால், அத்தனை பேருக்கும் சிரிப்பாகிவிடுகிறது. அப்படிச் சிரிக்கிறார்கள் என்று தெரிந்ததாலேயே அந்த நடிகர், அந்த 'நாராயண... நாராயண’ என்பதை மிகச் சரியான ஒரு நேரத்தில், மிகக் கேலியான ஒரு குரலில் வெளிப்படுத்துகிறார் என்றும் தோன்றுகிறது. உண்மையில் அந்த 'நாராயண... நாராயண’ என்ற சப்தம் வியப்பின்பால் வருவது என்பதாகவே நான் உணர்கிறேன்.

'அடடே! இதுவா உண்மை! அப்ப, இதுவா உண்மை’ என்று பல திசைகளிலும் தன் பார்வையைச் செலுத்தி, உண்மை எதுவெனக் கண்டுபிடிப்பதே அவருடைய தன்மையாக இருக்கிறது. தான் மட்டும் அறிந்த உண்மையை தனக்குள்ளே பொதித்துக் கொள்ளாது, தன் சரிதமாக அவர் வெளியிடுகிறார். தன் வாழ்க்கை யின் நோக்கமாகவும் அதைக் கொண்டுவிடுகிறார். எனவே, ஓர் உன்னத புருஷனுடைய வாழ்க்கையாகத்தான் நாரதருடைய கதைகளை நான் கவனிக்கிறேன்.

நாடகக் கொட்டகைக்குள் மக்கள் ஆணி அடித்ததுபோல் திகைப்பாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் அவர்களைத் தளரவிடுவது நல்லது என்று ஆலோசித்து, நாடகக்காரர்கள் யாரை அனுப்புவது என்று யோசித்து, நாரதரை அனுப்புவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அந்த உச்சிக் கொண்டையும், காவி உடையும், பூணூலும், மார்பிலே தொங்குகிற வீணையுமாக அவர் உள்ளே நுழைய, கைதட்டல் ஆரவாரம் பொங்குகிறது. 'அப்பாடா, இனி அடுத்த பத்து நிமிடமும் நல்ல நகைச்சுவையாகப் போகும்’ என்று மக்கள் நினைக்கிறார்கள். அதை விரும்பவும் செய்கிறார்கள். நாடகக் காரர்களுக்கும் தங்களுடைய சாதனை பற்றிச் சந்தோஷம். பல நாடகங்களில் நாரதர் தம்பூரா வைத்துக்கொண்டு வருவதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், நாரதரிடம் இருப்பது தம்பூரா அல்ல; அது மஹதி என்கிற வீணை. கந்தர்வ லோகத்து சமாசாரம்.

நாரதர் யார்? சப்த ரூபம். எது சப்தம்? உலகத்தில் ஏற்படுகிற எல்லா அசைவுகளும் சப்தத்தை உண்டு பண்ணுகின்றன. அந்த சப்தங்களில் உன்னதமானது எது? இசை. அந்த இசையில் உன்னதமானது எது? வீணை இசையே என்று சொல்லப்பட்டிருக்கிறது. சப்தத்தினுடைய இன்னொரு வடிவம் என்ன என்று யோசித்தால், பேச்சு. பேச்சின் உன்னதம் கவிதை. கவிதையின் இன்னொரு வடிவம் விவாதம். நாரதர் எல்லா இடங்களிலும் விவாதம் பேசி, மக்களுடைய திசையைத் திருப்பி, நல்லது நோக்கிப் பயணிக்கச் செய்கிறார்.

இங்கே எவர் கர்வம் கொண்டு அலைகிறாரோ, எங்கே ஆணவம் தலைவிரித்து ஆடுகிறதோ, இந்தப் பிரபஞ்சத்தில் எங்கே வீராவேசம் பேசப்படுகிறதோ, அங்கெல்லாம் நாரதர் போய் சமனம் செய்கின்ற பணியிலே தாமாக ஈடுபடுகிறார். இதற்கு, நாரதர் பாட்டுப் பாடவில்லை; கவிதை சொல்லவில்லை. மாறாக, பேச்சுகளில் இறங்குகிறார். 'என்ன இது?’ என்ற கேள்விதான் நாரதருடைய அடிப்படையான விஷயம். உண்மையை அறியும்பொருட்டு 'என்ன இது?’ என்று எவர் கேள்வி கேட்டாலும், அவர் நாரதருடைய தன்மையைக் கொள்கிறார். அப்படிக் கேட்கும்போது உள்ளுக்குள்ளே கலவரம் ஏற்படத்தான் செய்கிறது. அந்தக் கலவரம்தான் நல்ல விஷயத்தை வெளிக்கொண்டு வருகிறது. எது குழம்புகிறதோ, அதுவே தெளியும். எது கடையப்படுகிறதோ, அதிலிருந்தே அமிர்தம். எனவே, நாரதர் ஏற்படுத்துகிற கலவரம், அதாவது கடையல், நன்மையைக் கொண்டு வந்து சேர்க்கிறது; அமுதத்தைக் கொண்டு வந்து கொடுக்கிறது.

பிரம்மா- படைப்புத் தொழில். ஓர் உயிரின் ஆரம்பம்; ஓர் உருவத்தின் தொடக்கம். சிவன் அழிக்கும் தொழில். ஒரு முடிவின் ஆரம்பம்; ஒரு வாழ்க்கையின் முடிவு! எது வளர்ச்சி? விஷ்ணுவே வளர்ச்சி. வளர்வது என்பது விஷ்ணுவாகவும், படைப்பது என்பது பிரம்மாவாகவும், முடிவது என்பது சிவமாகவும் மூன்று வித சக்திகளுக்கு உருவங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதுதான் சநாதன தர்மத்தின் அடிப்படை விதி.

ஆக, விவகாரங்கள் எல்லாம் வளர் வது பற்றித்தான் இருக்கின்றன. எது வாழ்க்கை என்பதைப் பற்றித்தான் இருக்கின்றன. அதைப் பற்றித் தவறாகக் கூறப்படும்போது, அது பற்றி மோசமாக பிரசாரம் செய்யப்படுகிறபோது, அது பற்றிய ஞானமில்லாமல் பேசப் படுகிறபோது, அவற்றை உடைத்து உண்மையை நிலைநாட்டுவதற்கு நல்லவர்கள் இடைவிடாது முயன்று கொண்டிருக்கிறார்கள். அந்த முயற்சியின் ஒரு வடிவம்தான் நாரதர்.

நாரதர் என்பவர் படைப்புத் தொழிலோடும் சம்பந்தப்படவில்லை; ஒரு வாழ்க்கையின் முடிவோடும் சம்பந்தப்படவில்லை. அவர் வளர்ச்சி மீதே அக்கறை காட்டுகிறார். எது வளர்கிறதோ, அந்த வளர்ச்சியை நோக்கிச் சரணடைந்து, எது வளர்கிறது, எப்படி வளர்கிறது என்று ஆராய்ச்சி செய்கிறார். எனவே, விஷ்ணுவின் பக்தராக, ஸ்ரீமந் நாராயணரைச் சரணாகதி அடைந்தவராக நாரதர் உருக்காட்டப்படுகிறார்.

படைப்புத் தொழிலைப் பற்றி விமர்சனம் இல்லை; முடிவு பற்றிய விமர்சனம் இல்லை. எது வளர்கிறதோ அதைப் பற்றி மட்டுமே விமர்சனம். அந்த விமர்சன சக்திதான், அந்த விமர்சன ரூபம்தான், எழுப்பப்படுகிற கேள்வி என்கிற மகோன்னதமான ஒரு மாறுதல்தான் நாரதர். இந்த விமர்சனம் இல்லாவிட்டால் வளர்ச்சி இல்லை. அல்லது, வளர்ச்சி கோணலாகப் போகும். ஆட்டு மந்தைகள் போல முன்னால் போவதன் பின்னாலேயே போகாமல், 'இது என்ன?’ என்று கேள்வி கேட்கும் நம் விமர்சன சக்தியே, நம்முடைய கேள்வி கேட்கும் திறனே நம்முள் தெளிவை உண்டாக்கும். அப்படித் தெளிந்து நடக்கிற பயணமே வாழ்க்கை. அப்படிப்பட்ட வாழ்க்கையே நாரதர் வகுத்த வழி! இந்தக் கேள்வி கேட்டலே நாரத சக்தி. இந்த விஷயம்தான் விதம் விதமான கதைகளாக்கப்பட்டிருக்கிறது.

நல்லவன், கெட்டவன் என்று பிரித்து, நல்லவனுடைய விளக்கத்தையும் கேட்டு, கெட்டவனுடைய விளக்கத்தையும் கேட்டு, எது சரியான வழி என்று தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறது. எனவே, இங்கு கெக்கலித்துச் சிரிப்பதற்கு எதுவும் இல்லை. மாறாக, கூர்த்த புத்தியும், விமர்சன புத்தியும் உள்ளவர்களுக்கே நாரதர் கதை புரியும்.

வழக்கம் போலல்லாது, பாலகுமாரன் மிக வித்தியாசமான ஒரு நகைச்சுவைக் கதையைச் சொல்ல ஆரம்பித்துவிட்டான் என்று நீங்கள் நினைத்துக்கொள்வீராயின் அது மிகப் பெரிய தவறு. முன்னைவிட இந்த நாரதர் கதைகள் மிகக் கூர்மையாகவும் கனமாகவும் இருக்கும்.

இந்தப் பிரபஞ்சம் பூமியை மட்டும் கொண்டதல்ல; வெவ்வேறு வடிவான உருவங்கள் வாழ்கிற பல்வேறு உலகங்கள் இருக்கின்றன என்பது சநாதன தர்மத்தின் கருத்து. மிகச் சமீபமாக, பூமியில் ஒரு பெரிய நட்சத்திரக் கல் வந்து விழுந்தபோது, அதை இடைமறித்து ஒரு விண்கலம் தாக்கிச் சிதறடித்து, பூமிக்கு அப்பால் அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. அதாவது, பல்வேறு உலகக் கதைகள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

அப்படிப்பட்ட உலகங்களில் ஒன்று கந்தர்வ உலகம். எந்த மாதிரியான ஆன்மாக்கள் கந்தர்வ உலகத்தில் ஜீவிக்கின்றன? இசையை பக்தியின் வெளிப்பாடாக, குழல், யாழ் போன்றவற்றை நன்கு பயின்று மீட்டி, அதன் மூலம் இந்தப் பிரபஞ்ச சக்தியை, இறைவனை வணங்குகிற ஆன்மாக்கள் அங்கு வாழ்கின்றன என்று சொல்லப்படுகிறது. அதாவது, புனிதப்பட்ட ஆன்மாக்கள் பசி, தூக்கமில்லாது, வேறு உடல் உபாதைகள் இல்லாது, சங்கீதமே வாழ்வாகக் கொண்டு கந்தர்வ உலகத்தில் வாழ்கின்றன. ஆனால் மன மயக்கங்கள், மதி சறுக்கல்கள் அங்கேயும் உண்டு.

உபன் என்ற கந்தர்வனுக்கு ஒரு மகன் பிறந்தான். அந்த மகனுக்கு உபவருக்கன் என்று பெயரிட்டார்கள். உபன் இசையையே லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவன். இறைவனை இசையால் வழிபடுவதையே எந்நேரமும் செய்துகொண்டிருந்தவன். தன் மகனை நன்கு பயிற்றுவித்தான். தன்னிலிருந்து பிரிந்த, கிளர்ந்த அந்தச் சக்தியை மிகவும் பாராட்டி வளர்த்தான். அவனுக்கு, தான் வாசிக்கிற மஹதி என்ற யாழை வாசிக்கக் கற்றுக் கொடுத்தான். உபவருக்கன் தந்தையை மிஞ்சிய சீடனாக அந்த வீணையைத் திறம்பட வாசிக்கக் கற்றுக்கொண்டான். எல்லா உலகத்தாரும் உபவருக்கனை அழைத்து, அவனை மஹதி வாசிக்கச் சொல்லிக் கேட்பது வழக்கம். நல்ல விழாக்கள் எதுவும் மஹதி வீணை இல்லாது, அதை வாசிக்கின்ற உபவருக்கன் இல்லாது நடைபெறுவதில்லை.

தேவர் உலகில் ஒருமுறை, பிரம்மசிரேஷ்டர் என்கிற முனிவர் மிகப் பெரிய யாகங்கள் செய்தபோது, அங்கே வீணை வாசிக்க உபவருக்கன் அழைக்கப்பட்டான். உபவருக்கனும் மனம் ஒருமித்து சாம கானம் வாசித்து, அங்குள்ளோரைத் தன் வயப்படுத்தினான்.

அந்த இடத்தில் இசை ஞானமுள்ள அந்தணக் கன்னிகை ஒருத்தியும் இருந்தாள். உபவருக்கனின் வீணை இசையில் சொக்கிப் போனாள். அதன் சுரத்தோடு அவள் மனமும் கலந்தது. தான் அவனுக்கு உரியவளாக வேண்டும் என்றும், அவனை போஷிக்க வேண்டும் என்றும், அவனை இன்னும் சிறப்பானவனாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடும் அவன் மீது காதல் கொண்டாள். அவன் கவனத்தை ஈர்க்கும்படியாக நெகிழ்ந்தும், அசைந்தும், கண்களால் அழைத்தும், பார்க்கும்போது உதடு பிரித்துச் சிரித்தும், வெட்கப்பட்டும், ஆர்வப்பட்டும் பல்வேறு பாவனைகள் காண்பிக்க, உபவருக்கன் மனம் சிதறினான். பாடலில் இருந்த கவனம் நகர்ந்து போயிற்று. சாம கானம் வாசிப்பதில் பிழை ஏற்பட்டது. மிகப் பெரிய சிரேஷ்டர்கள் அமர்ந்திருந்த அந்தச் சபையில், சாம கானத்தை கரதலப் பாடமாகக் கற்ற பெரியவர்கள் கூடியிருந்த அந்த இடத்தில், பிசிறு பிசிறாக சாம கானம் வாசிக்கப்பட்டதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சியுற்றார்கள்.

ஏன் தவறு செய்கிறான், எதனால் பிழை செய்கிறான் என்று கவலைப்பட்டார்கள். அவன் கவனம் ஒரு கன்னிகையிடத்தில் சிதறியிருப்பதைக் கண்டு வருத்தப்பட்டார்கள். கவனம் சிதறாமல் இருந்தால் மிக அற்புதமான ஒரு சாம கானம் வெளிப்பட்டிராதா, என்ன வாசிக்கிறோம் என்றுகூடத் தெரியாது இப்படிக் கவனம் சிதறலாமா, இது நல்லதா, இது பலருக்குத் துன்பம் நேர்விக்குமே என்று கலங்கினார்கள்.

யாகம் செய்த பிரம்மசிரேஷ்டர் கோபம் அடைந்தார். சபை சலசலப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். வாசிப்பு தவறாக இருப்பதால் சபை தனது மௌனத்தை இழந்துவிட்டது என்பதைப் புரிந்து ஆவேசப் பட்டார். ''கந்தர்வனே, போதும் நிறுத்து!'' என்று கட்டளையிட்டார். வீணை இசை நின்றது.

''என்ன செய்கிறோம் என்று தெரியாமல், ஓர் உன்னதமான காரியம் செய்கிறபோது மனம் பிழன்று மிகச் சாதாரணமான ஒரு விஷயத்தில் ஈடுபடுகிறாய் என்றால், நீ இந்த மஹதி வீணையை வாசிக்கத் தகுதி இல்லாதவன். இந்த சாம கானம் இசைக்க யோக்கியதை இல்லாதவன். எனவே, யோக்கியதை இல்லாமல் ஒரு பெரிய சபையில் இந்த வித்தையை அவமானப்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டதால், நீ கந்தர்வனாக இனி இருக்க வேண்டாம். அது உனக்குத் தகாது. எனவே, நீ பூமியில் பிற!'' என்று சாபமிட்டார்.

உபவருக்கன் தன் தவற்றை உணர்ந்தான். கந்தர்வன் என்ற இடத்திலிருந்து நகர்ந்து, ஒரு மானுடனாக பூமியில் வந்து பிறந்தான். அவனது வெகு இளம் வயதிலேயே அவனின் தந்தை இறந்தார். தாய் பல்வேறு வீடுகளில் வேலை செய்து மகனை வளர்த்து வந்தாள்.

சாம கானம் என்ற உன்னதத்தை, அதைத் தெரிந்த சபைக்கு நடுவே தவறாக வாசித்து தன்னுடைய தகுதியை இழந்தது மட்டுமல்ல; கந்தர்வனாக இருந்தபோது கிடைத்த ஓர் அற்புதமான தந்தையின் சிநேகமும் பூலோகத்தில் இருக்கும்போது கிடைக்கவில்லை. தந்தையின் அணைப்பும் அந்தச் சாபத்தில் அடித்துக்கொண்டு போயிற்று.

உபவருக்கன் தன் விதவைத் தாயுடன் ஓர் அந்தணர் வீட்டில் வசித்து வந்தான். அவள், அந்த அந்தணர் வீட்டில் வேலை செய்து, தன்னோடே தன்னுடைய பிள்ளையை வைத்துக் கொண்டாள். ஒரு மழைக்காலத்தில் அந்த அந்தணர் வீட்டுக்கு நாராயணனுடைய அடியார்கள் வந்தார்கள். பரத கண்டத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு கோயில்களைத் தரிசிக்கவும், நாராயணனின் புகழ் பாடவும் அவர்கள் ஒரு கூட்டமாக நகர்ந்துகொண்டிருந்தார்கள். அந்த மழைக்காலம் முழுவதும் அவர்கள் அந்த அந்தணர் வீட்டில் தங்கி, நாராயணனைப் பற்றி விதம்விதமான பாடல்களைப் பாடினார்கள். இசை என்ற ஓர் அற்புதமான வித்தை, அவனுக்குக் கந்தர்வ உலகத்தில் கிடைத்திருந்ததால், அந்த இசையால் அவன் பல பேரை மகிழ்வித்திருந்ததால், மானுடனாகப் பிறந்த உபவருக்கனுக்கும் அந்த இசை ஞானம் இருந்தது. அந்த அடியவர்கள் பாடும்போது, அவனும் தன்னுடைய இனிய குரலில் சேர்ந்து பாடினான். அவர்களோடு அமர்ந்து அந்தப் பாடல்களை எழுதிக்கொண்டு, மனனம் செய்தான். அவர்கள் பாட மறந்ததை எடுத்துக் கொடுத்தான்.

ஒரு சிறுவனின் புத்திசாலித்தனத்தையும், இசை மீதுள்ள நாட்டத்தையும், இசையின்பால் அவன் கொண்டிருந்த ஞானத்தையும் அறிந்து அந்த அடியவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். அவனுக்கு நாராயண மந்திரம் உபதேசித்தார்கள்.

''இது மிக உயர்ந்தது. இசையைக் காட்டிலும் உயர்ந்தது. எல்லாவற்றைக் காட்டிலும் உயர்ந்தது. பேச்சைக் காட்டிலும் இந்த நாராயண மந்திரம் உயர்ந்தது. நமக்குப் பேச்சுத் திறன் இருக்கிறதே, அது கவிதை எழுத மட்டுமல்ல, பாட மட்டுமல்ல, ஆட மட்டுமல்ல, நாடகம் போட மட்டுமல்ல, இந்த மாதிரியான மந்திரங்களைச்சொல்ல வேண்டுமென்பதற்காகத்தான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். எனவே, இடையறாது, இடையறாது நாராயணன் பெயரைச் சொல். நாராயணன் உனக்கு நேரே வருவார். நீ வேண்டுகின்ற வரங்களைத் தருவார்'' என்று சொன்னார்கள். அந்தச் சிறுவன் மனமகிழ்ந்தான். அவர்களை வணங்கி, வழியனுப்பி வைத்தான்.

அவன் தாயார் இறந்தபோது என்ன செய்வது என்று தெரியாது தவித்தான். இசையா, கவிதையா, எது முக்கியம்? இரண்டும் இல்லை, நாராயண மந்திரமே முக்கியம் என்று தெளிந்தான். வனத்திற்குப் போனான். இடையறாது நாராயண மந்திரம் சொன்னான். தனக்குள்ளே அந்த மந்திரத்தை வைத்துப் பெரிய தீயாக்கி, சதா காலமும் அதனுள்ளேயே மூழ்கிக் கிடந்தான். அவனுடைய கடும் தவத்தைக் கண்டு ஸ்ரீமன் நாராயணர் மனம் மகிழ்ந்தார். அவனுக்குக் காட்சியளித்தார். ''தொடர்ந்து மந்திரம் சொல்லிக் கொண்டிரு. இந்த உலகம் முடியப் போகிறது. பெரிய ஊழிக்காலம் வரப்போகிறது. சிருஷ்டிகள் அழியப் போகின்றன. மறுபடியும் சிருஷ்டி துவங்கும். அப்போது பிரம்மாவே உனக்குத் தந்தையாக இருந்து, உனக்குச் சகலமும் சொல்லிக் கொடுப்பார்'' என்று சொல்லி விடைபெற்றார்.

ஊழிக்காலம் வந்தது. உயிரினங்கள் அழிந்தன. சகலமும் நீர்மயமாயிற்று. நீர்மயத்திலிருந்து பிரம்மா உலகை சிருஷ்டிக்கத் துவங்கினார்.

வரிசி முதலிய முனிவர்களோடு, மஹதி என்ற வீணையோடு உபவருக்கன் மறுபடி பூமியில் பிறந்தான். அவனுக்கு 'நாரதர்’ என்று பெயரிட்டார் பிரம்மா. நாரதர் தன்னுடைய மகன் என்று பெருமையோடு உலகுக்கு அறிவித்தார். இந்த உலகம் மட்டுமல்லாது, எல்லா உலகங்களுக்கும் செல்கிற தகுதியோடு, நாரதர் மஹதி என்ற வீணையோடு பிறந்தார்.

சந்தோஷம் கொடுக்கிற இசை மட்டுமல்ல, துன்பத்தை நீக்கி ஆழ்ந்த மௌனத்தில் ஆழ்த்துகிற இசை மட்டுமல்ல, சத்தியத்தை நோக்கிக் கேள்வி கேட்டுத் தெளிகிற ஞானத்தோடும் நாரதர் பிறந்தார். அவருடைய வாக்கு பிரபஞ்சத்தின் எல்லாத் திசைகளிலும் ஒலித்தது. சாதாரண பிறப்பல்ல அது. மாமுனி என்கிற பிறப்பு. சகலமும் அறிந்து தெளிந்த பிறப்பு. கடும் தவத்தால் அது அவருக்குக் கிடைத்தது.

நாராயண மூல மந்திரம், மறுபிறப்பில் மிகச் சிறப்பான ஓர் அம்சத்தைக் கொண்டு வந்து கொடுத்தது. அந்தச் சிறப்பான அம்சத்திற்குப் பெயர் நாரதர். அவர் எடுத்துரைத்த உண்மைக்குப் பெயர் நாரத புராணம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:33 am


''உன் தந்தையைப் போல, ஒரு அயோக்கியனை நான் பார்த்ததில்லை. என் சொத்துக்கள் எல்லாம் போயிற்று அய்யா'' என்று பெரிதாய் குறைப்படுவோர் முன்பு கைகூப்பி நின்றான். தந்தையை மன்னித்து விடும்படி வேண்டினான். யாரிடம் தந்தையைப் பற்றி குறை கேட்டாலும் நின்று கவனித்து செவிமடுத்து, 'அய்யோ! என் தந்தை இவ்வளவு கெட்ட பெயர் வாங்கியிருக்கிறாரே’ என்று வேதனையோடு இருப்பது அவன் வழக்கமாகப் போயிற்று,

நதிகளில் நீராடுவதும், கோயிலுக்குப் போவதும், புண்ணிய காரியங்கள் செய்வதும் தன் தந்தைக்கு உதவி செய்யுமா என்ற எண்ணத்தோடே செய்தான்.

நாரதர் அவனை ஆசீர்வதித்தார்.

''உன் தந்தை நரகத்தில் மிகவும் வேதனைப் படுகிறார். சொல்லொண்ணா துயரம். எனக்கே மனம் கலங்கிப் போயிற்று. அந்த அழுகைக் குரலைக் கேட்டுத்தான் நான் அந்தப்பக்கம் போனேன். அது உன் தந்தையின் குரல் என்று தெரிந்தது. அவரை விசாரிக்காமலேயே அவருடைய வாழ்வு நிலைமையை, இப்போது இருக்கிற அவஸ்தையை நான் புரிந்து கொண்டேன்'' என்றார்.

''ஊராரின் பழிச் சொல்லே எனக்கு மிகுந்த வேதனையைக் கொடுத்தது. இப்போது நீங்கள் வேறு வந்து என் தந்தை வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று சொல்லும்போது மனம் பதைக்கிறது. இதற்கு மாற்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். யார் மூலம் அவருக்கு விடியும் என்ற உபாயத்தை நீங்கள் சொல்ல வேண்டும். அவர் யாராக இருப்பினும் அவர் பாதம் பணிந்து வேண்டி அவருக்கு அடிமையாக வேலை செய்து என் தந்தையை நரகத்திலிருந்து மீட்பேன். தயவுசெய்து எனக்கு உதவுங்கள்'' என்று மண்டியிட்டு கெஞ்சிக் கேட்டுக்கொண்டான்.

நாரதர் மனம் கனிந்தார்.

''இது பெரிய விஷயமில்லை. நல்ல பிள்ளையாக நீ பிறந்திருக்கிறாய், நல்ல தாயால் வளர்க்கப்பட்டிருக்கிறாய். இந்த நல்ல குணமே உன் தந்தையைக் காப்பாற்றும். ஆனால், செய்த பாவங்கள் அதிகம் என்பதால், உடனடியாக நிவாரணம் பெற, திருக்குற்றால மலைக்குப் போய் அங்கே குற்றாலநாதரை சேவித்து உத்தராயன காலத்திலிருந்து ஆறு மாத காலம் வரை அந்தக் குற்றால அருவியில் தினந்தோறும் குளித்து, பூஜை செய்து, சிவனாரை வணங்கி உன் தந்தையின் பாவங்கள் போக வேண்டும் என்று வேண்டிக்கொள். ஆறாவது மாத முடிவில் கையில் நீர் எடுத்து, 'இந்த ஆறு மாதமும் நான் செய்த சிவபூஜை ஆடிய நீராட்டம் எல்லாம் என் தந்தைக்குப் போக வேண்டும்’ என்று மனமார நீர் வார்த்து தர்ப்பணம் செய்து விடு. அந்தப் புண்ணியம் உன் தந்தைக்குப் போனால் அந்த க்ஷணமே உன் தந்தை நரகத்திலிருந்து விடுபடுவார். இதைச் செய்; உனக்கு மேலும் புண்ணியம் கிடைக்கும்'' என்று சொல்ல, அவன் அவ்விதமே செய்து தன் தந்தையை துக்கத்திலிருந்து விடுவித்தான்.

இருக்கும்போது மட்டுமே நல்ல பிள்ளைகள் உதவுவதில்லை; இறந்த பிறகும் ஒருவருடைய ஆன்மா குணமடைய, அது நேர்வழியில் போக, அதற்கு நல்ல பிறப்பு கிடைக்க, நல்ல பிள்ளைகள் பெறவேண்டும். நல்ல பிள்ளைகள்தான் அந்த மாபெரும் உதவியையும் செய்ய முடியும். நல்ல பிள்ளை பெற்றவனுக்கு சூட்சுமமாக வழி சொல்லிக் கொடுத்து, தன் தந்தையை மீட்கிற உபாயத்தை சொல்லி, அந்த நல்ல பிள்ளைக்கு மேலும் பெருமை சேர்த்த நாரதருடைய மகிமை மிகப் பெரியது. பிறருக்கு உதவி செய்வதே வாழ்க்கை என்ற அந்தத் தன்மை மிக அரியது.

பூமியிலுள்ள எல்லோருக்கும் விதம் விதமாக புத்திமதி கூறி, பாடம் எடுத்து, பக்குவப்படுத்தி, அவர்களை நல்வழிப்படுத்தும் நாரதரின் மேன்மை, வைகுந்தவாசனான நாராயணருக்கும் எட்டியது.

தன்னுடைய பக்தன் எல்லா உலகிலும் சஞ்சரித்து நல்ல பெயர் வாங்குகிறான் என்பது சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியதாய் இருந்தது. நாரதரை மனத்தால் நினைக்க, அவர் இன்னமும் சில விஷயங்களில் தெளிவாகவில்லை என்று தெரிந்தது.

நாரதர், பூமியில் ஒரு கிராமத் தின் வழியே நடந்து போய்க் கொண்டிருக்க, அந்த இடத்தில் நாராயணர் தோன்றினார். நாரா யணனைக் கண்டதும், நாரதர் மகிழ்ச்சியில் ஆனந்தப் பரவசம் அடைந்தார். சுற்றிச் சுற்றி வந்தார். பலமுறை விழுந்து வணங்கினார். மனமுருகப் பாடினார். கை கூப்பினார்.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:34 am


''நினைக்கிறபோது நேரில் வரும் தெய்வம் என்று உன்னைச் சொல்வார்கள். உன்னை நினைக்காத நேரம் இல்லை. ஆனால், உன்னை நான் இப்போது அழைக்கவில்லையே.,? அழைக்காதபோது வந்திருக்கிறாயே! அது என் பொருட்டா, உன் பொருட்டா?'' என்று பணிவாக வேண்டினார்.

''நன்றாகப் பாடம் நடத்துகிறாய்!''

''எல்லாம் உங்கள் அருள்.''

''விதம் விதமாக நீதிகளை நிலைநாட்டுவதில் உனக்கு ஆர்வம் அதிகம் இருக்கிறது. அதைச் சுத்தமாகச் செய்கிறாய்.''

''உங்கள் பாராட்டுக்கு நன்றி. உங்கள் ஆசி இல்லாது நான் இயங்க முடியுமா?''

''ஆனால், சொல்லிக் கொடுப்பவருக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும்.''

''அதுதானே பார்த்தேன். வெறுமே கையில் கத்தியை வைத்திருக்கிறீர்களே... இன்னும் என் இடுப்பில் சொருகவில்லையே என்று. சொருகிவிட்டீர்கள். நல்லது. நான் பாடம் நடத்துவது உண்மைதான்; சொல்லிக்கொடுத்ததும் வாஸ்தவம்தான். எனக்கு என்ன தெரியவில்லை என்பதுதான் தெரியவில்லை.''

''அப்படியானால், உனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்று நினைக்கிறாயா?''

''அப்படிச் சொல்லவில்லை. எனக்கு என்ன தெரியாது என்பது தெரியாது என்று

சொல்கிறேன். எனக்கு எல்லாம் தெரியும் என்பதற்கும், எது தெரியாது என்று நிற்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?''

''மிகுந்த அடக்கம் உள்ளவன் நீ!''

''உங்கள் கருணை. தொடர்ந்து ஏதாவது கேள்வி கேட்கவேண்டும் என்றால் தாராளமாகக் கேட்கலாம்'' என்றவர் தொடர்ந்து,

''வந்து வசமாகச் சிக்கிக்கொண்டேன். என்னை வறுத்து எடுப்பதற்கென்றே வந்து விட்டீர்கள். எங்கோ பிழை செய்திருக்கிறேன். அல்லது, எல்லோருக்கும் உதவி செய்கிறேன் என்று கர்வப்பட்டிருக்கிறேன். அந்தக் கர்வத்தை சுத்தமாகத் துடைத்து எடுக்க வேண்டும். நான் தயார்!'' எனப் புலம்ப... நாராயணன் சிரித்தார்.

நாரதர் தொடர்ந்தார்... ''எனக்குள் சில ஐயங்கள் இருக்கின்றன என்பது உண்மைதான். கேள்விகள் இருக்கின்றன; பதில்கள் தெரியாது என்ற நிலை எனக்கு இருக்கிறது. உண்மைதான். என்னிடம் உள்ள முதல் கேள்வி இது... கேட்கலாமா?''

''கேள் நாரதா, உனக்கு பதில் சொல்லாமல் யாருக்குச் சொல்லப் போகிறேன்?''

''மாயை என்றால் என்ன? எது மாயை? என் எதிரே நீங்கள் இருக்கிறீர்கள். நினைத்தவுடன் வருகிறீர்கள். உங்கள் எதிரே நான் நிற்கிறேன். எனக்கும் உங்களுக்கும் ஒரு சம்வாதம் நடந்து கொண்டிருக்கிறது. நீங்களும் தெளிவாக இருக்கிறீர்கள்: நானும் தெளிவாக இருக்கிறேன்.

இதோ, நாம் பார்க்கிற ஊரும் தெளிவாக இருக்கிறது. பூமி தெளிவாக இருக்கிறது. வானம் தெளிவாக இருக்கிறது. தேவர்கள் எல்லோரும் அவரவர் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். மனிதர்கள் எல்லோரும் சௌக்கியமாக, நல்லபடி வாழ்கிறார்கள். நல்லபடி வாழாதவர்கள் தண்டனை பெற்றுத் திருந்துகிறார்கள். எல்லாம் ஒரு நியதியாய், அழகாய்த்தானே நடந்துகொண்டிருக்கிறது!

இங்கே மாயை என்பது என்ன? எனக்குப் புரியவில்லையே! இங்கு நடப்பதைத் தாண்டி, வேறு ஒரு மயக்கம், அல்லது ஒரு மாயை ஒருவருக்கு எப்படி ஏற்படும்?''




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:34 am


''நல்ல கேள்வி. இந்தக் கேள்வியின் ஜீவ ரசத்தை யார் புரிந்துகொள்வார்களோ, அவர்கள் மிகுந்த புத்திமான்களாகவும் கல்விமான்களாகவும் இருப்பார்கள். அப்படிப்பட்ட அற்புதமான கேள்வியை என்னிடம் கேட்டிருக்கிறாய். வா, கொஞ்சம் நடப்போம், பதில் சொல்கிறேன்'' என்று நாராயணர் சொல்ல, இருவரும் நடந்தார்கள்.

எதிரே பல பெண்கள் குடத்து நீரை வைத்துக்கொண்டு வந்தார்கள். பெண்கள் கூட்டமாக வந்ததால் நாரதரும் நாராயணரும் சற்று ஒதுக்கமாக நின்றுகொண்டார்கள். இரண்டு ஆண்கள் நிற்பதைப் பார்த்து, அந்தப் பெண்கள் தலைகுனிந்தபடியும் ஓரக் கண்ணால் பார்த்தபடியும் நடந்தார்கள். அவர்களில் கடைசியாக ஒரு பெண், கை வீசி ஒயிலாக நடந்தாள். அவள் நாரதரைப் பார்த்து, 'அட, அழகாக இருக்கிறாரே’ எனச் சற்று நிதானித்து, நடந்தாள்.

அவளது அபரிமிதமான அழகும், அங்க லாவண்யங்களும், பெரிய கண்களும், உதடுகளும், முத்து வரிசைப் பற்களும், தண்ணீரைச் சுமந்து போகிற லாகவமும் நாரதரைக் கிறங்கடித்தன.

''அடேயப்பா, இந்தக் கிராமத் தில் இப்படி ஒரு பெண்ணா! தேவலோகத்துப் பெண்களுக்கு ஈடாக இருக்கிறாளே!'' என்று நாரதர் நினைத்தார். அவளைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டார். திரும்பி நாராயணரைப் பார்த்தார்.

''அடேய், உனக்கில்லாத பெண்ணா? போய்க் கேள்!'' என்று சொல்ல, நாரதர் நாராயணரை மறந்தார். உடனே அவளைப் பின்தொடர்ந்து, அவள் வீட்டுக்கே போய், தான் யார் என்று சொன்னார். அந்த வீட்டார் அவருக்குத் தங்கள் பெண்ணை மகிழ்ச்சியோடு திருமணம் செய்து கொடுக்க முன்வந்தார்கள். அந்தப் பெண்ணும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள்.

அன்று மாலையே அவர்களின் திருமணம் நடந்தது. அவர்களுக்கென்று ஒரு வீடு ஒதுக்கப்பட்டது. அவர் இனிமையாகப் பாடுவதைக் கேட்டு, பலர் அவருக்குப் பரிசளித்தார்கள். நாரதர் நாராயணரைப் பாடி, வீணை மீட்டி நிறையச் சன்மானங்கள் பெற்றார். நிறையப் பொருள்கள் வாங்கி, வீட்டை நிரப்பினார். மனைவிக்கு நல்ல உடைகளும் நகைகளும் வாங்கிக் கொடுத்தார். நன்கு சாப்பிட்டார். இரவும் பகலும் மனைவியோடு கூடிக் களித்தார். குழந்தைகள் பெற்றார்.

அவர்களுக்கு மொத்தம் பதினாறு குழந்தைகள் பிறந்தன. ஒவ்வொன்றும் மணி மணியாய் இருந்தன. அற்புதமாகப் பாடின; பேசின. அவர்கள் குடும்பமாக ஓரிடத்தில் அமர்ந்து நாராயணனை நோக்கிப் பாடுகிறபோது, ஊர் அசந்தது. ''என்ன அற்புதமான குடும்பமடா இது!'' என வியந்தது. தம்பூர் ஸ்ருதியை மனைவி மீட்ட, குரலெடுத்து நாரதர் பாட, மற்ற குழந்தைகளும் கோரஸ் சேர்ந்துகொள்ள, 'கந்தர்வ கானம்... கந்தர்வ கானம்’ என்று ஊரே சிலாகித்தது.

நாரதரின் நாராயண கானம், உலகமெங்கும் பரவியது. பல தேசத்து அரசர்கள் அவரை விரும்பினார்கள். அவரைத் தங்கள் அவையில் வந்து பாடச் சொன்னார்கள். நாரதர் ராஜ்ஜியம் ராஜ்ஜியமாகப் பயணப்பட்டுக்கொண்டே இருந்தார். மனைவியோடும் குழந்தைகளோடும் வந்த அவரை அரசர்கள் வரவேற்றார்கள். கும்ப மரியாதை செய்தார்கள். ரத்தின ஆடை போர்த்தினார்கள். கிரீடம் வைத்தார்கள். பாதங்களுக்குச் சலங்கை போட்டார்கள். கையில் தங்கக் காப்பு கட்டினார்கள். மனைவிக்கு ஆரம் கொடுத்தார்கள். எல்லாக் குழந்தைகளுக்கும் தங்கச் சங்கிலி அணிவித்தார்கள். மிகப் பெரிய பெருமையெல்லாம் நாரதரை வந்து சேர்ந்தது.

ஒருநாள்... இடி இடித்தது. மழை பெய்தது. நாரதர் தன் மாளிகையின் வாசலைத் தாழ் போட்டுக்கொண்டு, எங்கும் வெளியில் போக வேண்டாம் என்று தீர்மானித்தார். மழை அதிகமாயிற்று. தெரு முழுவதையும் மழைநீர் வளைத்துக் கொண்டது. ஊர் முழுவதையும் வளைத்துக் கொண்டது. கடல் பொங்கி உள்ளே நுழைந்துவிட்டது என்று கூக்குரலிட்டார்கள். ஆறு பிரவாகம் கொண்டது. திசை திரும்பியது. மழை அதிகரித்தது. ஆற்று வெள்ளம் நாலாப் பக்கமும் பாய்ந்தது. குடிசைகளை அடித்துக்கொண்டு போயிற்று. வீடுகளை, மாட, மாளிகைகளை வேகமாக முட்டிற்று.

நாரதர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். பெரிய படகு தயார் செய்தார். அதில் குழந்தைகளை ஏற்றிக் கொண்டார். மிக பத்திரமாக கரை ஏற்றுகிறேன் என்று தைரியம் கொடுத்து, குழந்தைகளை அமைதியாக இருக்கச் சொல்லி, மனைவியைத் துடுப்பு போடச் சொல்லி, கோல் கொண்டு மெள்ள ஊன்றி ஊரைக் கடந்தார். மழை இன்னும் வலுத்தது. வெள்ளம் படகைத் தள்ளிக்கொண்டு போய் சமுத்திரத்தில் தள்ளியது. சமுத்திரத்தின் பெரிய அலைகள் தூக்கித் தூக்கிப் போட்டன. பல குழந்தைகள் வெளியே விழுந்தன. நாரதர் கதறினார். ''அய்யோ... என் குழந்தை!'' என்று அலறினார்.

''மிக அழகாகப் பாடுவாளே, அதோ போய்க் கொண்டிருக்கிறாளே! காப்பாற்ற யாரும் இல்லையா?'' என்று கண்ணீர் விட்டார்.அத்தனைக் குழந்தைகளும் தத்தளித்து நீரில் விழுந்து, ஒவ்வொன்றாய் மடிந்தன. ஒரு கட்டத்தில் படகின் பலகை எகிறி மனைவியின் தலையில் அடிக்க, அவள் அதே இடத்தில் பிணமானாள். உருண்டு நீரில் விழுந்தாள். நாரதர் மட்டும் படகில் தவித்துக் கிடந்தார்.

''எல்லாம் போயிற்று! எல்லாம் போயிற்று!'' என்று அழுதார். சட்டென திடுக்கிட்டாற்போல் விழித்துக்கொண்டார்.

''என்ன போயிற்று? அவர்கள் போய் நாழியாயிற்று. என்னவோ போயிற்று போயிற்று என்றீர்களே... எது போயிற்று? தண்ணீர்தானே? வேண்டுமா, மறுபடி வரச் சொல்லவா?'' என்று நாராயணர் கேட்க, நாரதர் தடாலென அவர் காலில் விழுந்தார்.

''வேண்டாம். மறுபடியும் வரச்சொல்ல வேண்டாம். தண்ணீர் எடுத்தவர்கள் நடந்து போன இடத்தின் காலடித் தடம் காய்வதற்குள் நான் ஒரு வாழ்க்கை வாழ்ந்துவிட்டேன்.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:34 am


காலம் என்பது நம் மூளைக்குள் இருக்கிறது.

காலம் என்பது விதம் விதமான உயிர்களுக்கு விதம் விதமாக இருக்கிறது. ஒரு புழு, தான் நூறு ஆண்டுகள் வாழ்ந்ததாக நினைத்துக் கொள்ளலாம். ஒரு யானை, தான் ஆயிரம் வருடங்கள் வாழ்வதாக நினைத்துக்கொள்ளலாம். ஒரு மனிதன் தனது ஆயுள் இத்தனை என்று எண்ணிக் கொள்ளலாம். உண்மையில் காலம் என்ன என்பது நமக்குத் தெரியவில்லை.

சில நொடிகளில் நான் பெரிய வயது வரை வாழ்ந்துவிட்டேன். விதம் விதமான அனுபவங் களைப் பெற்றுவிட்டேன். ஒரு பெண்ணை மோகித்த அந்த க்ஷணம், அந்தப் பெண்ணோடு என் வாழ்க்கை நடந்து விட்டது. எதை வேகமாக மோகிக்கிறோமோ அதுவே நம்முடைய வாழ்க்கையாகிறது. அதை அடை வதே நம்முடைய தவிப்பாகிறது. அந்தத் தவிப்பே காலத்தால் கோக்கப்பட்டு நம்முடைய வாழ்க்கையாகிறது.

எதிலும் மோகப்படாமல் இருப்பதல்லவா வாழ்க்கை? எந்தக் காலத்திலும் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதல்லவா வாழ்க்கை? தேவர்களுக்குக் கிடைத்த இந்த லட்சணம் எனக்குக் கிடைத்தது. இருப்பினும், நடுவே விட்டுவிட்டேன். சில கணங்கள் என்னை மறந்துவிட்டேன்.

இதுதான் மாயை. மிகச் சிறந்த புத்திமானை யும், கல்விமானையும், தேவனையும், எல்லாம் தெரிந்தவனையும் கவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்க்கிற மிகப் பெரிய விஷயம் இந்த மாயை. இந்த மாயையில் சிக்காதவன், நாராயணா, நீ மட்டும்தான்! உன் காலடியைப் பற்றிக்கொண்டால்தான் மாயையில் சிக்காமல் இருக்கமுடியும். எந்த ஆசையும் எனக்குள் ஏற்படாது, எந்தக் கவலையும் என்னைத் தீண்டாது, எந்த மாயையிலும் நான் சிக்காது இருக்க நாராயணா, நாராயணா..! என்னைக் காப்பாற்றுவாய்'' என்று கதறி, கண்ணீர் விடுத்து, நாராயணரின் பாதங்களைப் பிடித்துக் கொண்டார்.

நாராயணர் நாரதரை நிமிர்த்தினார்.

''நீ சிரஞ்ஜீவி! நீ சொல்கிற அத்தனை வார்த்தைகளும் சிரஞ்ஜீவித்தனம் உடையவை! சொல். எது மாயை என்று யாருக்கு தேவையோ அவர்களுக்குச் சொல். யார் புரிந்துகொள்ள முடியுமோ, புரிந்து கொள்ளட்டும்.

காலம் என்பது என்ன என்று எவர் கேள்வி கேட்டாலும், அவர்களுக்கு இந்தக் கதையைச் சொல். வாழ்க்கை என்பது என்ன என்று எவர் கேட்டாலும், அது நொடி நேரத்தில் முடிவது என்று அவர்களுக்குச் சொல். நமக்குள் இருக்கிற காலம், நாம் போட்டுக் கொள்கின்ற காலம், நம்மை நாமே சிறைப்படுத்திக் கொள்கின்ற காலம் வேறு; உண்மைக் காலம் வேறு என்பதை உலகத்தோர் புரிந்துகொள்ளட்டும்.

நாரதா, சொல்..! சகலருக்கும் சொல், உன்னுடைய பாடம் பூர்த்தியாயிற்று. நீ மகா ஞானி, நீ மகா ஞானி!'' என்று நாராயணர் நாரதரைத் தழுவிக்கொண்டார்.

நாரதரின் இந்த அனுபவம் மிகவும் சூட்சுமமான விஷயம்.

வரம் வேண்டித்தான் உலகில் பல மக்கள் தவம் செய்கிறார்கள். எல்லோருக் கும் ஏதேனும் தேவையாக இருக்கிறது. அந்தத் தேவையை தெய்வத்திடம் இருந்து பெறுவதற்காகக் கடுமையாக நோன்பு இருக்கிறார்கள். இன்னது கொடு என்று கேட்டுப் பெறுகிறார்கள். அப்படித் தவம் செய்பவர்களைக் கண்டு, நோன்பு நோற்கிறவர்களைக் கண்டு, அவற்றைச் செய்ய இயலாத மற்றவர்கள் வியப்போடு பார்க்கிறார்கள்; செய்தவர்களைப் போற்றுகிறார்கள்.

''நீ சம்பாதித்த புண்ணியத்தில் கொஞ்சம் கொடு'' என்று கையேந்துகிறார்கள்.

''உனக்குக் கால் பிடித்துவிட்டால் அந்தப் புண்ணியம் எனக்கு வராதா?'' என்று, தவம் செய்தவனுக்குக் கால் பிடித்து விடுகிறார்கள்; விசிறுகிறார்கள்; நீர் கொடுக்கிறார்கள்; அவருக் காகப் படுக்கை சுமக்கிறார்கள்; உணவு சமைத்து வருகிறார்கள்; அவரைப் போற்றிப் பாதுகாக்கிறார்கள். ''என்னால் தவம் செய்ய இயலாது. என்னால் நோன்பு நோற்க இயலாது. ஆனால், நீங்கள் செய்து ஜெயித்திருக்கிறீர்கள். உங்களுக்கு உதவி செய்வதன் மூலம் ஏதோ கடுகளவு, எறும்பளவு சில துணுக்குகள் எனக்கும் கிடைக்கட் டும்'' என்கிறார்கள்.

ஆனால், எந்த வரமும் வேண்டாது, யாராவது தவம் செய்வார்களா? நாரதருக்கு இப்படி ஒரு நினைப்பு சட்டென்று உள்ளுக்குள் தோன்றியது. இருக்கலாம்; செய்வார்கள் என்ற நினைப்பும்

இருந்தது. யார் செய்கிறார்கள்? அவர் மனத் தால் சகல பக்கமும் பார்க்க, ஓரிடத்தில் ஒளி தோன்றியது.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:35 am


ஒரு மலையின் ஓரத்தில், நதிக்கரையில், பர்ணசாலை அமைத்து, முனிவர் ஒருவர் தவம் செய்து வருவதைத் தெரிந்துகொண்டார். அவர் ஜைகிஷவ்ய முனிவர். அவருடைய தேஜஸ் மிகப் பிரகாசமாக இருந்தது. அருகே போவதற்குத் தீய சக்திகள் பயந்தன. நல்ல சக்திகளும் பணிவுடன் நெருங்கின. அவருடைய தவம் வெகுநாள் அமைதியாக, எந்த ஆரவாரமும் இன்றி வளர்ந்துகொண்டிருந்தது. தேவர்கள் கவலைப்பட்டார்கள். இவ்வளவு உக்கிரமாக, இத்தனை நெடுநாள் அசையாது தவம் செய்ய முடியும் என்றால், அவரால் தேவலோகப் பதவியையும் கேட்டுப் பெற முடியும். 'நான் இந்திரப் பதவிக்கு வரவேண்டும்’ என்று அவர் கேட்டால், நிச்சயம் கிடைக்கும். படைப்புத் தொழிலை பிரம்மா நிறுத்திக் கொள்ளட்டும் என்று ஆணையிட்டால், பிரம்மா நிறுத்திக்கொள்ள வேண்டியதுதான். அவ்வளவு தவ வலிமை பெற்றவராக அவர் விளங்குகிறார். எல்லாம் வல்ல சிவபெருமான் மனம் இரங்கி, அவருக்குச் சகல வரங்களையும் கொடுத்துவிட்டால், அதன்பின் இங்கே உள்ள தேவர்கள் எல்லோரும் எந்தவித அர்த்தமும்

இல்லாத வாழ்க்கையைத்தான் வாழ வேண்டி யிருக்கும். ஒரு மானுடன் வெகு எளிதில் தேவர் களை ஜெயித்துவிட முடியும் என்பதற்கு உதாரணமாக இந்த முனிவர் இருப்பார். என்ன செய்வது என்று கவலைப்பட்டார்கள். அந்தக் கவலையும் நாரதருக்குத் தெரிந்தது.

எதைக் குறித்து இந்த முனிவர் இவ்வளவு கடுமையான தவம் இருக்கிறார் என்று புரியவில்லை. மனம் ஒருமுகப்பட்டு விட்டது. ஒருமுகப்பட்டு ஒரு புள்ளியில் அமர்ந்த மனம், சிவனை முற்றிலுமாக எடுத்துக் கொண்டு விட்டது. சிவனை அசைக்க முடியாதபடி உள்ளே இறுக்கமாக பதிய வைத்து, அந்த சிவனோடே தான் இருக்கும்படியான ஒரு நிலைமை வந்துவிட்டது.

உள்ளே சிவன் வந்த பிறகு, அவரிடம் ஏதேனும் கேட்கலாம் அல்லவா? தவத்தை முடித்துக்கொள்ளலாம் அல்லவா? எதுவும் கேட்காமல், தொடர்ந்து சிவபூஜை செய்து கொண்டிருக்கிறார் இவர். ஏன்?

நாரதர் அங்கு போய் இறங்கினார். ஆஸ்ரமத்தை வலம் வந்தார். இனிய கீதங்கள் பாடினார். உள்ளுக்குள் நுழைந்தார். விழுந்து வணங்கினார். ''உட்காரட்டுமா?'' என்று அனுமதி கேட்டார். முனிவர் ஜாடை காட்ட, எதிரே உள்ள திண்ணையில் அமர்ந்தார். ஒருவரை ஒருவர் தீர்க்கமாகப் பார்த்துக் கொண்டார்கள். சிவ முனியின் ஒளி நாரதரை நடுங்க வைத்தது. அவருடைய பார்வையின் கனிமை அவரில் நாராயணரைக் காட்டியது. எத்தனை பாடினாலும், இந்த அழகான ஒரு தெய்வீக நிலை தனக்கு வருமா என்பது சந்தே கமே என்று எண்ணி, நாரதர் மனம் நொந்தார்.

''எவ்வளவு கடுமையாக தவம் செய்கிறீர்கள்! மனத்துக்குள் உறுதியாக சிவனைப் பிடித்த பிறகும் வேறு எதுவும் கேட்காமல், அமைதி யாக சிவனோடேயே இருக்கிறீர்கள். உள்ளுக் குள்ளேயே போற்றிப் பாதுகாத்து வருகிறீர்கள். ஏன் அவரை உங்கள் எதிரே தோன்றச் செய்யாமல், உள்ளுக்குள்ளேயே இரு என்று கட்டளையிட்டிருக்கிறீர்கள்?'' என்று நாரதர் கேட்க, முனிவர் சிரித்தார்.

''உங்களுக்கும் பயம் வந்துவிட்டதா? தேவர்களும் பிரம்மாவும் என்னைப் பற்றிக் கவலை கொள்கிறார்கள் என்று தெரிய வந்ததும் எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. எனக்கு எதற்கு இந்திர பதவி? எனக்கு எதற்கு படைப்புத் தொழில்? எனக்கு எதற்கு வேறு பதவியும் உலகமும்? நான் இருக்கிற இடத்தில், சிவனோடு இருக்கிறேன். இதைவிட உயர்ந்த நிலை உண்டா? நான் எது குறித்தும் தவம் செய்யவில்லை. இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்கவில்லை. என் இயல்பு தவம் செய்தல். என் இயல்பு சிவனோடு இருத்தல். இதை நான் சாதாரணமாகத்தான் செய்கிறேன். வேறு நோக்கம் எதுவும் இல்லை, நாரதரே!'' என்று முனிவர் சொல்ல, நாரதர் நிம்மதியானார். மறுபடியும் பாடல்கள் பாடி அவரை மகிழ்வித்துவிட்டு, ஆஸ்ரமத்தை வலம் வந்து, நீண்ட நெடுஞ்சாண்கிடையாக வணங்கி, சிவன் உறையும் இமயமலைச் சாரலுக்குப் போனார்.

கயிலாசநாதரை வணங்கினார். ''எவ்வளவு அற்புதமான மனிதர்! உங்களை வணங்குவது இயல்பு என்கிறார். உங்களிடம் எதுவும் கேட்காது அமைதியாக உங்களையே மனத்துக்குள் ஸ்வீகரித்துக்கொண்டிருப்பது இயல்பு என்கிறார். இப்படிப்பட்டவருக்கு நீங்கள் ஏதேனும் செய்ய வேண்டாமா?'' என்று சிவபெருமானைக் கேட்க,

''கேட்டால் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். என்ன கேட்பார் என்று அறிய ஆவலாக இருக்கிறோம். ஆனால், அவர் எதுவும் கேட்கவில்லையே? நாமாகப் போய் அவரைத் தொந்தரவு செய்யலாகாது என்பதில் திடமாக இருக்கிறோம்'' என்றார் சிவனார்.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:35 am


''ஆனாலும், அவரது இந்தக் கடும் தவத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும், எம்பெருமானே! வேறு ஏதேனும் விபரீதமாக நடந்துவிடக்கூடாது என்று தேவர்கள் கவலைப்படுகிறார்கள். எனவே, அந்த முனிவருக்குத் தரிசனம் தந்து, அவரை உங்களுக்குள் அழைத்துக் கொள்ளுங்கள்'' என்று நாரதர் வேண்ட, அதன்படியே சிவபெருமான் அந்த முனிவர் முன் திருக் காட்சி தந்து, அவரை ஆசிர்வதித்து, தன்னோடு வருமாறு கைநீட்ட, சிவனாரின் கையைப் பற்றிக் கயிலைக்கு வந்தார் முனிவர். தேவர்கள் நிம்மதியானார்கள்.

''நாராயணா... நான் அறிந்துகொள்ள வேண்டியது இன்னும் எவ்வளவு இருக்கிறது!

இது வேண்டும், அது வேண்டும் என்று கோரிக்கையோடு தவம் செய்யும் மனிதருக்கிடையே, 'எதுவும் வேண்டாம், இது என் இயல்பு’ என்று சொல்கிற ஒரு மனிதரிடம் என்னைப் பாட வைத்தீரே! இப்படியும் ஒரு தவம் இருக்கும் என்பதை இப்போது புரிந்து கொண்டேன். நாராயணா... நான் அறிந்துகொள்ள வேண்டியது எவ்வளவு இருக்கிறது!'' என்று கை கூப்பி, கண்ணீர் துளிர்க்க நாராயணரை வணங்கினார் நாரதர்.

எல்லாம் அறிந்த நாரதரே இன்னும் அறிய வேண்டியது இருக்கிறது என்று எண்ணும்போது, நாரதருடைய அவையடக்கமும் மேன்மையான குணமும் நமக்குத் தெளிவாகப் புரிகிறது.

அறிந்துகொள்ளுதல் என்பதற்கு முடிவே இல்லை. மனிதர்களைவிடப் பன்மடங்கு மேம்பட்ட தேவர்களுக்கும் இது பொருந்தும். தேவர்களே தேடலில் இருப்பாரெனில், மனிதனின் கடமையும் அதுவே ஆகிறது.

காந்திப்பட்டினம் என்ற ஊரில், சம்புகண்டன் என்ற அரசர் சிறப்பாக ஆண்டு வந்தார். அவருக்குக் குணசுந்தரி என்று ஒரு மகள் இருந்தாள். பெயருக்கேற்ப மிக உன்னதமான குணங்களை உடையவள்; நல்ல அழகி.

பருவ வயது வந்ததும் அவளுக்குத் திருமணம் என அறிவித்தார் அரசர். எல்லா அரசர்களும் சுயம்வரத்தில் வந்து கலந்துகொள்ளும்படி வேண்டினார். அரசர்கள் வர மறுத்தார்கள். காரணம் கேட்டதற்கு...

''நீங்கள் அயோத்தியில் இருக்கிற ஸ்ரீராமருக்கும் அனுப்புவீர்கள். ஸ்ரீராமரும் வந்து சேருவார். ராமருடன் அவருடைய குழந்தைகளும் வருவார்கள். முன்னே ஒரு முறை, அவரின் குழந்தைகளால் ஒரு சச்சரவு ஏற்பட்டுவிட்டது. அதேபோல, மறுபடியும் நடக்கும். எனவே, ஸ்ரீராமர் வராது போனால், நாங்கள் வருகிறோம். ஸ்ரீராமரை நீங்கள் அழைத்தால் நாங்கள் வரமாட்டோம்!'' என்று தீர்மானமாகச் சொன்னார்கள்.

சம்புகண்டன் யோசித்தார். பின்பு, 'சரி’ என்றார். ஸ்ரீராமரைத் தவிர, மற்ற எல்லா அரசர்களுக்கும் அழைப்பு விடுத்தார். அரசர்கள் வந்து கலந்துகொண்டார்கள். மிகப் பெரிய சேனைகள் காந்திப்பட்டினத்தைச் சூழ்ந்துகொண்டன. வான் வழியாகப் போய்க் கொண்டிருந்த நாரதர், சேனைகள் இருப்பதைப் பார்த்து பூமியில் இறங்கினார். நடந்து வந்தார். அரண்மனைக்குள் நுழைந்து 'என்ன நடக்கிறது இங்கே?’ என்று கேட்டார். 'திருமணம்’ என்று சொன்னார்கள். 'யாருக்கு?’ என்று விசாரித்தார். 'அரசருடைய மகளுக்கு’ என்று சொன்னார்கள்.

அரசருடைய மகளைப் பார்க்க அந்தப்புரம் வந்தார். நாரதரைத் தடுக்க, அங்கு ஆட்களே இல்லை. யாருக்கும் நாரதர் வருகை தெரியவில்லை. நாரதர், குணசுந்தரியின் அருகில் போய் நின்று ஆசிர்வதித்தார். குணசுந்தரி அவரது வருகையைத் தெரிந்துகொண்டு, திடுக்கிட்டாள். சட்டென அவரது கால்களில் விழுந்து வணங்கினாள்.

''மிக்க சந்தோஷம்! யாரிடம், எப்படிச் சொல்வது என்று தவித்துக் கொண்டிருந்தேன். உங்களைப் பார்த்ததில் சந்தோஷம். நான் மனக்கிலேசத்தில் இருக்கிறேன். இங்கு வந்துள்ள அரசர்களைப் பார்க்கப் பார்க்க, அந்தக் கிலேசம் அதிகமாகிறது. தயவுசெய்து எனக்கு உதவி செய்ய வேண்டும்'' என்று மறுபடியும் மண்டியிட்டாள்.

''சொல்லம்மா! நீ நல்ல பெண்; குணவதி. உனக்கு என்ன குறை, சொல்?'' என்று வாஞ்சையோடு கேட்டார் நாரதர்.

நல்லவருக்கு உதவி செய்ய நாரதருக்கு எப்போதும் பிடிக்கும்.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:35 am


''இந்த அரசர்களையெல்லாம் பார்க்கும் போது எனக்கு பயமாக இருக்கிறது. அவர்கள் வீரத்தைக் கேட்கும்போது குலை நடுங்குகிறது. உத்தமமான புருஷன் என்பவர் ஸ்ரீராமபிரான்தானே! அப்படியரு உத்தமமான புருஷன் இருக்கிற ஒரு வீட்டில்தான் நான் குடியேறவேண்டும். ஒரு நல்ல குடும்பத்தில்தான் நான் வாழ்க்கைப்பட வேண்டும் ஸ்ரீராமருக்கு மருமகளாகப் போக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது மிக நல்ல குடும்பம்.

சீதை என்கிற உயர்ந்த பெண்மணியும், மற்ற நல்ல அரசிகளும் இருக்கிற குடும்பம் அது. பரதனும் சத்ருக்னனும் லட்சுமணனும் அங்கு இருக்க... அவர்கள் வீர தீரச் செயல்களைக் கேட்டுக்கொண்டு, அவர்களைப் பார்த்து வியந்தபடி, அவர்களுக்குப் பணிவிடை செய்ய விரும்புகிறேன். அந்தக் குடும்பத்தில் நானும் ஒருத்தியாய்ப் போய் சேரக்கூடாதா? அவர்களின் மருமகளாக ஆகக் கூடாதா?'' என்று கெஞ்சினாள்.

நாரதர் சந்தோஷப்பட்டார்.

''நல்ல பெண்ணம்மா நீ! நல்ல பெண்ணாக இருப்பதால்தான் உனக்கு இப்படியரு நல்ல எண்ணம் தோன்றியிருக்கிறது. ஆனால், என்ன செய்வது? உனக்கு அதிர்ஷ்டம் இல்லையே! உன் தகப்பன் வேறு விதமான நடவடிக்கைகள்தானே எடுத்திருக்கிறான்! சரி, இருக்கட்டும். நான் போய் ஸ்ரீராமருடைய குடும்பத்தில் உன்னைப் பற்றி எடுத்துச் சொல்லி, அவர்களை இங்கு அழைத்து வருகிறேன். அதுவரை நீ சற்றுப் பொறுமையாக இரு!'' என்றார்.

சட்டென்று அங்கிருந்து மறைந்து, வான் வழியே சென்றார். அப்போது, தமஸா நதிக் கரையில் சத்ருக்னனுடைய மகன் யூப கேது நீராடிக்கொண்டிருந்தான். அவன் சிறிய படையோடு அங்கே வேட்டையாடுவதற்காக வந்திருந்தான். அங்கே போய் இறங்கினார் நாரதர்.

யூப கேது அவரை வணங்கி வரவேற்றான். ''உங்களைச் சந்தித்தது மிகப் பெரிய பாக்கியம்! உங்களைப் பற்றி நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன். இப்போதுதான் முதன் முதலாகச் சந்திக்கிறேன். ஸ்ரீமந் நாராயணரையே நீங்கள் நெஞ்சில் தரித்திருப்பதை நான் அறிவேன். அம்மாதிரி யான கொடுப்பினை எனக்கும் வர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்'' என்று கை கூப்பினான்.

''அதெல்லாம் காலாகாலத்தில் கிடைக்குமய்யா! அதற்கு முன், நீ திருமணம் செய்து கொள்ள வேண்டாமா? குடித்தனம் செய்ய வேண்டாமா? பூமிக்கு வந்துவிட்டாய்; அந்த வாழ்க்கையை முழுவதும் வாழ வேண்டாமா?'' என்று நாரதர் கேட்க,

''நீங்கள் என்ன சொல்கிறீர்களோ, அது மாதிரியே செய்கிறேன்'' என்று அவன் மறுபடியும் நாரதரை வணங்கினான்.

'ஸ்ரீராமரை கேலி செய்கிறார்களய்யா!'' என்றார் நாரதர். யூப கேது சட்டென்று நிமிர்ந்தான்.

''யார்? யார் கேலி செய்வது?''

''சம்புகண்டன்.''

''அவர் எங்கிருக்கிறார்?''

''காந்திப்பட்டினத்தில்.''

''என்னவென்று கேலி செய்கிறார்?''

''ஸ்ரீராமரை வரவழைத்தால், உங்கள் குடும்பத்தினர் அனைவரும்

வந்துவிடுவீர்களாம். உங்கள் குடும்பம் வந்துவிட்டால், பெரிய கலவரம்தான் வரும்;

அதனால் நாங்கள் வரமாட் டோம் என்று மற்ற அரசர்கள் சொல்லியிருக்கிறார்களாம். அதனால், ஸ்ரீராமரை விட்டு விட்டு, மற்ற அரசர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பியிருக் கிறார் சம்புகண்டன்.''

''எதற்கு எல்லோரை யும் வரவழைக்கிறார் அவர்?''

''குணசுந்தரி என்று அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள். மிக அழகி. குணவதி. உத்தமி. அவளுக்குத் திருமணம் ஏற்பாடு செய்து, சகலருக்கும் ஓலை அனுப்பி, சுயம்வரத்துக்கு விழா எடுத்திருக்கிறார். அரசர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். நாளை சுயம்வரம். நீ ஏதேனும் செய்யமுடியுமா? விரைந்து செயல்பட்டால், அந்த அற்புதமான பெண் குணசுந்தரி உனக்கு மனைவி ஆவாள்.

ஸ்ரீராமருக்கு, நல்ல இடத்திலிருந்து தனக்கு மருமகள் வரவேண்டும் என்பது விருப்பம். எனவே, ஸ்ரீராமரின் உள்ளம் களிக்கும்படியாக, அந்த குணசுந்தரியை நீ திருமணம் செய்து கொள்!'' என்று நாரதர் சொல்ல, அவனும் ''சரி'' என்று தன் படையோடு விரைவாகப் புறப்பட்டான்.

அங்கே, விழா உச்சகட்டத்தை அடைந்து கொண்டிருந்தது. இசை ஒலியும், கூச்சலும், மிருகங்களின் நடமாட்டமும், மக்களின் ஆரவாரமும், விதம்விதமான கூத்தாடிகளின் சாகசங்களும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. விருந்துகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அரசர்கள் சந்தோஷத்தில் மூழ்கியிருந்தார்கள்.

மறுநாள், விடியற்காலையில் குணசுந்தரி நீராடிவிட்டு, நன்கு உடுத்திக்கொண்டு, அந்தப் புரத்தில் காத்துக்கொண்டிருந்தாள்.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:36 am


'நாரதர் ஏதோ நடக்கும் என்று சொன்னாரே; இதுவரை ஒன்றுமே நடக்க வில்லையே! அத்தனை அரசர்களும் சபைக்கு வந்து கொண்டிருக்கிறார்களே! நாரதர் சொன்னது எப்போது நடக்கும், என்ன நடக்கும்’ என்று தவித்துக்கொண்டிருந்தாள்.

அப்போது, யூப கேது தன் படையோடு அந்தப்புரத்துக்குள் நுழைந்தான். எதிர்ப்பட்டுத் தடுத்த வீரர்களை வெட்டி வீழ்த்தினான். உள்ளுக்குள் நுழைந்து, குணசுந்தரியைக் கைப்பிடித்து இழுத்தான். ''வா, என்னோடு தேரில் ஏறிக்கொள்!'' என்றான். அவள் பயந்து மயங்கிச் சரிந்தாள். அவளை அப்படியே அள்ளிக்கொண்டு போய், தேரில் கிடத்தினான். குதிரையைச் செலுத்தினான். வெகு விரைவாக அரண்மனையை விட்டு வெளியேறிப் பறந்தான்.

குணசுந்தரியை யாரோ கடத்திக்கொண்டு போகிறார்கள் என்ற செய்தி, சம்புகண்டனுக்கு எட்டியது. மற்ற அரசர்களுக்கும் தெரிந்தது. உடனே அவர்கள் தங்கள் படையோடு யூப கேதுவைப் பின்தொடர்ந்தார்கள். சம்புகண்டன் ஆரவாரமாக முன்னேறிக் கொண்டிருந்தார்.

மயக்கம் தெளிந்த குணவதியை ஒரு மண்டபத்தில் அமர வைத்துவிட்டு, யூபகேது குதிரையில் ஏறி, அவருக்கு எதிரே வந்து நின்றான். சம்புகண்டனின் படைகளைச் சிதற அடித்தான். மற்ற அரசர்கள் எதிர்க்க, அவர்களையும் தனது சிறு படையின் மூலமே அடித்து விரட்டினான். வேகமாகச் சண்டை செய்தான். அவனுடைய பலத்துக்கும் போர்த் திறமைக்கும் ஈடுகொடுக்கும்படியாக எதிரே யாரும் இல்லை. அவனது வாள் வீச்சும், ஈட்டி எறிதலும், குதிரையின்மீது நின்றபடியே அம்பு தொடுத்தலும் எதிரிகளை பிரமிக்க வைத்தன. அவன் வீரம் போற்றத்தக்க வகையில் இருந்தது. அரசர்கள் பின்வாங்கினார்கள். ''எதற்கு இந்தச் சுயம்வரம்? இங்கு சண்டையிடவா வந்தோம்?'' என்று சொல்லி, மெள்ள மெள்ளக் கழன்றுகொண்டார்கள்.

சம்புகண்டன் தனியாக விடப்பட்டார். யூப கேது அவரை வெட்டிவிட வாள் உயர்த்தியபோது, தொலைவிலிருந்து 'வேண்டாம்’ என்று உரத்துக் கத்தி, குணசுந்தரி அவனைத் தடுத்தாள். ஓடிவந்தாள். 'விட்டுவிடுங்கள்’ என்று கெஞ்சினாள். சம்புகண்டன் தலைகுனிந்தார்.

யூபகேது சம்புகண்டனை விட்டுவிட்டு, வாளை உறையில் இட்டான். குணசுந்தரியை அணைத்துக்கொண்டான்.

''குணசுந்தரியை எனக்குத் திருமணம் செய்து வையுங்கள். நான் அயோத்தியின் அரசன் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் குடும்பத்தைச் சேர்ந்தவன். என் தகப்பனார் சத்ருக்னன். என்னுடைய பெரியப்பாவை, என் தந்தையை, இன்னும் மற்றவர்களை சுயம்வரத்துக்கு அழைக்காதது உங்கள் குற்றம். அதற்காக நீங்கள் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்'' என்று கர்ஜித்தான்.

சம்புகண்டன் செய்வதறியாது, அவனது உத்தரவை ஏற்றுக் கொண்டார். ஸ்ரீராமரிடம் பணிந்து மன்னிப்புக் கேட்டார்.

ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி எளிதாக அவனை மன்னித்தார். யூபகேதுவின் வீரத்தைப் பாராட்டினார். சம்புகண்டனின் அழைப்பை ஏற்று, அவன் ஊரான காந்திப்பட்டினம் வந்தார். யூபகேதுவுக்கும் குணசுந்தரிக்கும் சிறப்பாகத் திருமணம் நடைபெற்றது.

குணசுந்தரி தன்னுடைய இல்லத்தை விட்டு வெளியே போகும் முன்பு, நாரதரை மனத்தால் நினைத்தாள். பார்க்க வேண்டும் என்று விரும்பினாள். கை கூப்பினாள். நாரதர் அவளுக்கு மட்டும் சூட்சுமமாகக் காட்சியளித்தார்.

''மிக்க நன்றி, மிக்க நன்றி'' என்று சொல்லிப் பாதம் பணிந்தாள். அவள் பூமியை வணங்குவதாக எல்லோரும் நினைத்துக்கொள்ள, அவள் நாரதரை நோக்கிச் சிரித்தாள். நாரதர் ஆசிர்வதித்தார். அவர்கள் எல்லோரும் கிளம்பி, அயோத்திக்குப் போனார்கள்.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:36 am


நல்லவர்களை நல்லவர்களுக்கு மணம் முடிக்க, ஒரு திறமை வேண்டும். யாரால் இந்தக் காரியத்தைச் செலுத்த முடியுமோ, அவரை அந்தக் காரியத்தில் செலுத்த வேண்டும். யாருக்கு உத்தமமான நட்பும் உறவும் தேவைப்படுகிறதோ, அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மனிதர்களின் மனம் அறிந்து, அவர்களின் யோக்கியதை அறிந்து உதவி செய்வது நாரதரின் இயல்பு. நாரதரைப் போற்றி வணங்கினால், அவர் நமக்கும் உதவி செய்வார்.

பரத கண்டத்தின் தென் பகுதியில், திராவிட பூமியில், மிகச் சிறந்த நகரமாக விளங்கிற்று திருவண்ணாமலை. எல்லாக் காலமும் அது மக்களின் வருகையால், விழாக்களின் சிறப்பால் மிக உன்னதமான இடமாக விளங்கிற்று.

கோயிலில் மட்டுமல்லாது, அந்தக் கோயிலை ஒட்டி இருக்கின்ற மலையையும் மக்கள் தெய்வமென வணங்கினார்கள். சிவனின் ரூபம் எனக் கும்பிட்டார்கள். அதைச் சுற்றி வருவதே மிகப் பெரிய பூஜை என கிரிவலம் வந்தார்கள்.

அந்த மலையால் ஈர்க்கப்பட்டு யோகிகளும், தபஸ்விகளும், சாதுக்களும், சித்த புருஷர்களும் எல்லாக் காலத்திலும் இடையறாது வந்து சரணடைந்தார்கள். தான- தர்மங்களுக்குப் பெயர் பெற்ற ஊராக அது விளங்கிற்று. 'திருவண்ணாமலையில் பிறந்தாலே முக்தி’ என்று சொற்றொடர் ஏற்பட்டது. அந்த ஊரில் குடியிருக்க நல்லவர்கள் அதிகம் விரும்பினார்கள்.

அந்த ஊரின் அரசனுக்குப் பெயர் வல்லாள மகாராஜன். மிகச் சிறந்த அரசனாக, படைபலம் மிக்கவனாக, ஒழுக்கம் உள்ளவனாக, கூர்மையான அறிவு மிக்கவனாக, கருணை மிக்கவனாக, அழகனாக, திடகாத்திரனாக, பண்புள்ளவனாக, பணிவுள்ளவனாக விளங்கினான். அவனுக்கு மக்கட்பேறு இல்லை. தனக்குப் பிறகு தன் தேசத்தை ஆட்சி செய்ய வாரிசு இல்லையே என்று அவன் கவலைப்பட்டான். அதற்காக அவன் வெள்ளை நிறமுள்ள அன்னக்கொடியை ஏற்றி, யார் எது கேட்டாலும் கொடுப்பது என்ற கொள்கையோடு இடையறாது தான- தர்மங்கள் செய்து வந்தான். குறிப்பாக சாதுக்களை, சிவபக்தர்களை அதிகம் கொண்டாடினான்.

வடக்கேயிருந்து தெற்கு நோக்கிப் பயணப்பட்டு ராமேஸ்வரம் போவதற்கு முன்பு, திருவண்ணாமலையில் தங்கி, சிவ பூஜை செய்கின்ற பெரியோர்களை மிகக் கவனமாக பார்த்துக்கொண்டான். யாருடைய அருட்பார்வையிலாவது தனது வேதனை விலகி, தனக்கு நல்லதொரு ஆண் மகவு பிறக்காதா என்று ஏங்கினான்.

அவனுடைய ஆட்சியின் திறத்தால், ஜனங்கள் குதூகலமாக இருந்தார்கள். ஜனங்கள் குதூகலமாக இருந்ததால், சிவ பூஜைகள் அற்புதமாக நடந்தன. பூஜைகள் சரிவர நடந்ததால், அந்த இடம் பிரகாசமாக இருந்தது. அந்த இடம் பிரகாசமாக இருந்ததால், தேவர்கள் அடிக்கடி தரையிறங்கும் இடமாக இருந்தது. தேவர்கள் வருகையால், அந்த ஊரின் புனிதத்தன்மை மேலும் மேலும் பிரகாசித்தது. அந்த பிரகாசத்தால் நாரத முனி ஈர்க்கப்பட்டார்.

'ஆஹா! இவ்வளவு பிரகாசமாக இரவு- பகலெல்லாம் ஒளிர்கின்ற இடமாக, இதமான சூழ்நிலையோடு, நல்ல வாசனையோடு, நல்ல அதிர்வோடு பரத கண்டத்தில் ஒரு நகரம் இருக்கிறதே..! வேறு எந்த நகரமும் இவ்வளவு சிறப்பாக இல்லையே!’ என்ற வியப்போடு நாரத மகரிஷி அங்கு வந்து இறங்கினார். அந்தப் பிரகாசத்துக்கு யார் காரணம் என்பதையும், இந்த அத்தனைச் சிறப்புக்கும் உரியவன் திருவண்ணாமலையை ஆளும் வல்லாள மகாராஜன் என்பதையும் புரிந்துகொண்டார். ஒரு சாதாரண சாதுவைப் போல உருவெடுத்து, அவனிடம் வந்து பேச்சுக் கொடுத்தார்.

''இந்தக் காலத்தில் எந்த அரசன் அன்னக் கொடி ஏற்றி, விதம் விதமான தான- தர்மங்கள் செய்கிறான்! ஓர் அற்புதமான க்ஷேத்திரத்தை நீ இன்னும் பிரகாசமாக்கிக்கொண்டு இருக்கிறாய். உன்னுடைய ஆட்சியால் இந்த இடம் தேவர்கள் வந்து தங்குகின்ற இடமாக இருக்கிறது. இதனால், உன்னுடைய ஆட்சியில் எந்தத் துன்பமும் இல்லை; அகால மரணம் இல்லை; நோய் இல்லை; வறுமை இல்லை; கோபம் இல்லை; பொறாமை இல்லை. எல்லா மக்களும் எல்லாருக்கும் ஏதாவது கொடுக்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறார்கள். நீ வாரி வழங்குவதைப் பார்த்து, மக்களும் தங்களிடம் இருக்கின்ற தொகையை மனமகிழ்ச்சியோடு தானம் செய்து, சிறப்பாக வாழ்கிறார்கள். அப்படி தானம் வழங்கியதால் இங்குள்ள சாதுக்களும், தவசீலர்களும் இந்த நகரத்தை ஆசிர்வதிக்கிறார்கள். இந்த நகரத்தில் எந்தக் குறையும் இல்லை. மகாலட்சுமி வாசம் செய்கிறாள். காமதேனுவின் புல்வெளியாக இந்த நகரம் இருக்கிறது!'' என்று பல்வேறு விதமாகப் போற்றிப் புகழ்ந்தார் நாரதர்.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:36 am


ஒளிரும் கண்களும், கூரிய மூக்கும், நெடுநெடு உயரமும், மெல்லிய உடம்பும் கொண்ட அந்த சாதுவின் தோற்றம் கண்டு ஈர்க்கப்பட்ட வல்லாள மகாராஜன் கை கூப்பி வணங்கினான்; வலம் வந்து நமஸ்கரித்தான்.

''உங்கள் வாக்கு என் காதில் தேனாகப் பாய்கிறது. ஆனால், இவையெல்லாவற்றுக்கும் நான் காரணம் இல்லை. இது சிவஸ்தலம். இங்கு ஆட்சி செய்வது சிவனே அன்றி, வேறு எவரும் அல்ல! சிவன்தான் இங்கு சகலமும் நடத்துகிறார். நான் அவருக்குப் பணியாளாக இருந்து இந்த அரச பதவியை ஏற்றிருக்கிறேன். எனவே, நீங்கள் புகழ்வது என்றால், என்னைப் புகழாதீர்கள். சிவபெருமானை ஸ்தோத்திரம் செய்யுங்கள்'' என்று சொன்னான்.

அவனை நாரதர் கூர்ந்து கவனித்தார். 'இதற்குக் காரணம் நான் இல்லை. கடவுள்’ என்ற வாக்கியம் மனப்பூர்வமாகச் சொல்லப் பட்டால், அந்த த்வனி வேறு விதமாக வெளிப்படும். ஆனால், இவன் குரலில் கர்வம் ததும்பியிருக்கிறது. தன்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை பெரிதாக இருக்கிறது. அப்படிச் சொல்வது நாகரிகமாக இருக்காது என்பதால், அவையடக்கமாகப் பேசுகிறான். பணிவுள்ளவன் போன்று நடிக்கிறான். இவன் நல்லவன்தான். ஆனாலும், இவன் தன்னாலேயே எல்லாம் மிகத் திறம்பட நடத்தப்படுகிறது என்று உள்ளூர ஒரு கர்வத்தோடு இருக்கிறான். இவனுக்கு மெல்லியதாய் ஒரு பாடம் சொல்லிக் கொடுப்பது, இவனை இன்னும் உச்சத்தில் கொண்டு வந்து வைக்கும். இவனை உலகம் அறியச் செய்யும். பூமி உள்ளவரை

இவன் பெயர் நிலைக்கச் செய்யும் சூரிய- சந்திரர் உள்ள வரையிலும் இவனைப் பற்றிச் சரித்திரம் பேசும்.இவனது கர்வத்தை அழிப்பதோடு, இவனது சிறப்பைக் கொண்டாடுகிற ஒரு விஷயத்தையும் செய்யவேண்டும் என்று நாரதர் தீர்மானித்தார். அரசனை ஆசீர்வதித்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்தார்.

நேராகக் கயிலையை அடைந்து, சிவனாரை வணங்கினார். நாராயணனைப் பற்றிப் புகழ்ந்து பாடினார். சிவன் அகம் மலர, அந்தப் பாடலைச் செவிமடுத்தார்.

''வாருங்கள். என்ன வேண்டும்?'' என்று விசாரித்தார்.

''அன்னக்கொடி ஏற்றி உங்கள் பெயரைச் சொல்லி, திருவண்ணாமலையில் வல்லாள மகாராஜா இடையறாது தான- தர்மங்கள் செய்து வருகிறான். பெரிய யாகங்கள் செய்வதைவிட, விக்கிரகங்கள் வைத்துப் பூஜை செய்வதைவிட, பெரிதாய்க் கோயில் கட்டுவதைவிட... வந்தவர் அனைவருக்கும் உணவு கொடுத்து உபசரித்து, உடை கொடுத்து, தங்க இடம் கொடுத்து, களைப்பாறுவதற்கு வசதி செய்து கொடுத்து, வழிப்போக்கரை தெய்வமாகக் கொண்டாடுகிற அவனது இந்தச் செயல் மிகச் சிறப் பாக இருக்கிறது. எல்லா யாகத்தையும்விட மிக உயர்வாக இருக்கிறது. சிவ பூஜையிலேயே மிகச் சிறந்த விஷயமாக இருக்கிறது. இந்த பூஜையால் அந்தப் பிரதேசம் முழுவதும் பிரகாசமாக இருக்கிறது. அந்த அரசனுக்கு ஒரே ஒரு குறை. குழந்தை இல்லை. வாரிசு இல்லை. தன்னுடைய தேசத்தைத் தொடர்ந்து சீரும் சிறப்புமாக ஆட்சி செய்ய ஒரு வாரிசு வேண்டுமென்று விரும்புகிறான். நீங்கள் அவனை ஆசீர்வதிக்கவேண்டும்'' என்று நாரதர் சொன்னதும், சிவ பெருமான் கண்களை மூடிக்கொண்டார். பிரகாசமான புன்னகை அவர் முகத்தில் மின்னியது.

எதற்கு வாரிசு? தனக்குக் குழந்தை வேண்டுமென்று ஒருவன் ஏன் நினைக்கிறான்? தன்னுடைய நல்ல செயலை, தனக்கு வயதான பிறகு அல்லது தன் இறப்புக்குப் பிறகு

தன் மகன் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றுதானே? வல்லாள மகாராஜாவுக்குக் குழந்தை இல்லாது போனால் என்ன? அவன் செய்த தான- தர்மத்தை அவன் மக்கள் பழக்கப்படுத்திக்கொண்டு விட்டார்கள். அரசன் செய்வது போல வாரி வழங்க வேண்டும் என்று திருவண்ணாமலை மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதி தர்மத்துக்கு என்று முடிவு செய்துவிட்டார்கள். எனவே, இவனுக்குப் பிள்ளை இல்லை என்ற குறை, இவன் ஆதரித்து வளர்த்த இவனது குடிமக்களாலேயே தீரும். பிறகு, மகன் எதற்கு? தன் உறவினர்களைப் பார்த்துக் கொள்ளவா? அதையும் இவன் ஊரே செய்யும். தான் இறந்த பிறகு, தனக்கு நீர் வார்க்கவேண்டும், தனக்கு ஆத்ம சுகம் அளிக்கின்ற தர்ப்பணம் தரவேண்டும் என்ற காரணமாக இருக்குமோ? அதற்குத்தான் ஓர் ஆண் மகன் வாரிசு தேடுகிறானோ என்று யோசிக்க, அவர் புன்னகை மேலும் கூடிற்று.

வல்லாள மகாராஜனுக்கு அருள் செய்வதென்று தீர்மானித்துவிட்டார். ஆனால், நாரதர் அவனிடத்தில் ஏதோ குறை கண்டுபிடித்திருக்கிறார் போலிருக்கிறதே என்பதையும் புரிந்துகொண்டார். 'சரி... அது, குறையல்ல; ஒரு சிறிய கறை. அதையும் துடைத்து எறிந்துவிடுவோம்’ என நினைத்தவராய், ''நாம் திருவண்ணாமலைக்குக் கிளம்பு கிறோம்'' என்று நாரதரிடம் சொன்னார். நாரதர் மிகுந்த மகிழ்ச்சியோடு கைகூப்பினார்.

தனது பூதகணங்களோடு திருவண்ணாமலையில் வந்திறங்கினார் சிவன்.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக