|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!by புரட்சி Today at 20:24
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 20:24
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 20:21
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 20:19
» திருமண அறிவிப்பு
by அதி Today at 20:15
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Today at 20:06
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Today at 19:56
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by அதி Today at 19:56
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by கேசவன் Today at 19:55
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Today at 19:49
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 19:43
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by Aathira Today at 19:34
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by அதி Today at 19:29
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Today at 18:59
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by positivekarthick Today at 18:58
» வாழ்க தமிழ்
by SajeevJino Today at 18:48
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Today at 18:47
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 18:13
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Today at 17:41
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Today at 17:40
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by வின்சீலன் Today at 17:35
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by ரா.ரா3275 Today at 17:16
» சோனியா ……. காந்தியா?
by ரா.ரா3275 Today at 17:10
» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Today at 17:06
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by சாமி Today at 17:03
» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by sshanthi Today at 16:56
» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Today at 16:42
» நல்ல மனம் வாழ்க - நாடு பொற்ற வாழ்க
by sshanthi Today at 16:39
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by kirikasan Today at 16:15
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 16:14
» +2 தேர்வு: முதலிடத்தில் ஒரு மாணவரும் இல்லை - என்னாச்சுப்பா சென்னைக்கு?
by மாணிக்கம் நடேசன் Today at 15:56
» Phone WLAN Connection உதவி
by ரமீஸ் Today at 15:50
» அரிய புகைப்படக் காட்சிகள்
by ஜாஹீதாபானு Today at 15:48
» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
by hega Today at 15:35
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by Aathira Today at 15:06
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 14:50
» கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)
by ஆர். கமலக்கண்ணன் Today at 14:14
» ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
by சார்லஸ் mc Today at 14:05
» வணக்கம்!
by ஜாஹீதாபானு Today at 14:05
» Show Desktop icon- ஐ திரும்ப உருவாக்க ..,
by ஆர். கமலக்கண்ணன் Today at 14:03
உள்நுழைய இங்கு அழுத்தவும்
தமிழர் திருமணம்
Page 3 of 3 • Share •
Page 3 of 3 •
1, 2, 3
தமிழர் திருமணம்
First topic message reminder :
1. பொற்காலம்
உலக வரலாற்றைப் படிப்பவர்கள் ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு பொற்காலம் இருந்திருப்பதை அறிந்து கொள்ளலாம்.
புதிய உலக நாகரீகத்தின் தொட்டில் என வர்ணிக்கப்படும் கிரேக்கர்களுக்கு கி.மு. 7ம் நூற்றாண்டு தொடக்கம் கி.மு. 4ம் நூற்றாண்டு வரையிலான காலம் பொற்காலமாக இருந்திருக்கிறது.
உலகம் மந்திரம், தந்திரம் மாயம் நிறைந்த சடப்பொருள் என்ற மாயையில் இருந்து விடுபட்டு உலகத் தோற்றம், வளர்ச்சி பற்றி அறிவியல் அடிப்படையில் ஆராய முற்பட்ட பெருமை கிரேக்கர்களையே சாரும். அறிவியல் சார்ந்த எல்லாத்துறைகளிலும் கிரேக்கர்களது கை வண்ணத்தையும் கலை வண்ணத்தையும் காணலாம்.
மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவன் என்ற எண்ணத்தை மாற்றி கடவுளைத் தனது உருவத்தில் படைக்க ஆரம்பித்தவர்களும் கிரேக்கர்களே. உலகம் உட்பட எல்லாவற்றையும் எண்ணங்களாகவும் (concepts) உருவங்களாகவும் (figures) கிரேக்கர்கள் பார்த்தார்கள்.
இந்தக் கால கட்டத்திலேயே புகழ்பெற்ற தத்துவ ஞானிகளான தேல்ஸ் (Thales) ( கி.மு. 640-546), அறிவு ஆசான் சாக்கரட்டிஸ் (Socrates)( கி.மு. 469-399), பிளாட்டோ ( Plato)(கி.மு. 427-347)இ அரிஸ்ரோட்டல் (Aristotle)(கி.மு. 384-322), போன்றவர்கள் தோன்றினார்கள்.
"வரலாற்றின் தந்தை" ("Father of History") என அழைக்கப்படும் ஹெரடோரஸ் (Herodotus), சொற்பொழிவாளர் டெமொதீனஸ் (Demosthenes) (கி.மு. 384-322), "ஒவ்வொரு நோய்க்கும் இயற்கையான காரணம் உண்டு" ("every illness has a natural cause") என்று கூறிய மருத்துவத்தின் தந்தை ( "Father of Medicine") என்று போற்றப்பட்ட கிப்போகிறேட்ஸ் (Hippocrates) (கி.மு. 460-377) மகதீனஸ் (Magathenes)
இதே காலத்தைத் சேர்ந்தவர்கள்தான். கணித விற்பன்னர்களான பைத்தோகரஸ் (Pythagoras) , இகுலிட் (Euclid)இ ஆர்கிமிடிஸ் (Archimedes) போன்றவர்கள் வாழ்ந்த காலமும் இதுதான்.
எகிப்து, பாரசீகம், வட மேற்கு இந்தியா இவற்றின் மீது படையெடுத்து வெற்றி கண்ட மகா அலெக்சாந்தர் (Alexander the Great) காலமும் இதுதான். மகா அலெக்சாந்தரின் ஆசிரியர் அரிஸ்ரோட்டல் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்தக் கால கட்டத்தில் எழுதப்பட்ட பௌதீகம், வேதியல், தத்துவம், கணிதம், மருத்துவம், இலக்கியம், சமயம், இசை, நாடகம், சிற்பம், ஓவியம் சம்மந்தமான நூல்களை மொழிபெயர்த்துப் படித்ததினாலேயே ஐரோப்பா அறியாமை என்ற இருண்ட காலத்தில் இருந்து (Dark Age) னு அறிவுடமை நிறைந்த நாகரிக உலகத்துக்கு (கி.பி. 4வது - 11வது நூற்றாண்டு) காலடி எடுத்து வைக்க முடிந்தது.
ஐரோப்பிய மொழிகளின் அரிச்சுவடி கிரேக்க மொழியிலிருந்து சிறிய மாறுதலுடன் உருவாக்கப் பட்டதாகும். ஆங்கிலத்தில் உள்ள பல கலைச்சொற்கள் ( democracy, aristocracy, psychology) கிரேக்கத்தில் இருந்து நேரடியாக ஒலிமாற்றம் செய்யப்பட்டவையாகும்.
மேற்கூறியவற்றிலிருந்து உலக நாகரிக வளர்ச்சிக்கு கிரேக்கர்களது பங்களிப்பை ஓரளவு தெரிந்து கொள்ளலாம்.
ஆங்கிலேயரை எடுத்துக் கொண்டால் அவர்களது பொற்காலம் விக்டோரியா அரசியாரின் (1819-1901) 65 ஆண்டு கால நீண்ட ஆட்சிக் காலம் (1837-1901)என்று சொல்லலாம். பிரித்தானியாவின் கடல் கடந்த சாம்ராஜ்யம் இவரது காலத்திலேயே வலுப்பெற்றது. இந்தியாவின் சக்கரவர்த்தினியாக 26 ஆண்டுகள் (1976-1901)அரசு கட்டிலில் இருந்திருக்கிறார். பிரித்தானியாவின் தொழிற்புரட்சி இவரது காலத்திலேயே ஏற்பட்டது. அறிவியல், போர், பொருளாதாரம், கலை, இலக்கியத் துறை போன்ற எல்லாத் துறைகளிலும் பிரித்தானியா கொடி கட்டிப்பறந்தது. உலக ஏகாதிபத்தியத்தின் மொத்த உருவமாக இருந்த பிரித்தானியா சூரியன் அஸ்தமிக்காத நாடு என்று வர்ணிக்கப் பட்டது.
தமிழினத்தைப் பொறுத்தளவில் சங்க காலமே தமிழர்களது பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. தமிழர்களது நீண்ட கால வரலாற்றை உய்த்து உணர்ந்து ஆராய்பவர்கள் இந்த உண்மையை எளிதில் ஒப்புக் கொள்வார்கள்.
சங்ககாலத்தில் ஆட்சி புரிந்த அரசர்களே தமிழ் மன்னர்களாக விளங்கினார்கள். அவர்கள் மட்டுமல்ல அவர்களது பெயர்களும் தூய தமிழில் இருந்தன.
சங்கப் புலவர்களால் படைக்கப் பட்ட எட்டுத்தொகை, பத்துப் பாட்டு நூல்களும், சங்கம் மருவிய காலத்தில் எழுந்த பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள் தமிழர்களது நாகரிகச் சிறப்புக்கும், கலை, பண்பாட்டிற்கும், இயற்கையோடு இசைந்த வாழ்வுக்கும் கட்டியங் கூறுகின்றன.
சங்க காலத்தில் பிற்காலத்தில் பிறமொழிப் பண்பாட்டுப் படையெடுப்பால் எழுந்த சாதி, சமய, வேறுபாடுகள் இருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் அமைப்பு ரீதியான சமயம் இருக்கவில்லை. பேய், பிசாசு, மந்திர தந்திரம், சகுனம், மேல் உலகங்கள், கீழ் உலகங்கள், நரகம், சொர்க்கம் போன்ற மூடநம்பிக்கைகள் இருக்கவில்லை. பொது மக்கள் மத்தியில் இந்த நம்பிக்கைகள் இருந்திருக்கலாம். ஆனால் படித்தவர்கள் மத்தியில் இருக்கவில்லை.
மேலே குறிப்பிட்ட சங்க இலக்கியங்களை சமூகத்தின் பல படிகளிலும் இருந்த புலவர்கள் படைத்திருக்கிறார்கள். புவி ஆண்ட மன்னர்கள் தொடக்கம் கூலவாணிகர்கள் ஈறாக கவி பாடியுள்ளார்கள். ஆடவரும் பெண்டிரும், அந்தணரும், வணிகரும், குறவனும் குறத்தியும் என்று பல்வேறு பட்ட புலவர்கள் பாடல்கள் பாடியுள்ளார்கள். சங்கப் புலவர்களின் மொத்த எண்ணிக்கை 500க்கும் அதிகமாகும். வேறு எந்த நாட்டிலும் காணாதவாறு பெண்பால் புலவர்கள் மட்டும் 50க்கும் அதிகமாக இருந்திருக்கிறார்கள். இது சங்க காலத்தில் ஆண்களைப் போலவே பெண்களும் ஒத்த கல்விகற்று ஒத்த உரிமையோடு வாழ்ந்திருந்த உயர்ந்த வாழ்க்கைமுறையைக் காட்டுகிறது.
1. பொற்காலம்
உலக வரலாற்றைப் படிப்பவர்கள் ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு பொற்காலம் இருந்திருப்பதை அறிந்து கொள்ளலாம்.
புதிய உலக நாகரீகத்தின் தொட்டில் என வர்ணிக்கப்படும் கிரேக்கர்களுக்கு கி.மு. 7ம் நூற்றாண்டு தொடக்கம் கி.மு. 4ம் நூற்றாண்டு வரையிலான காலம் பொற்காலமாக இருந்திருக்கிறது.
உலகம் மந்திரம், தந்திரம் மாயம் நிறைந்த சடப்பொருள் என்ற மாயையில் இருந்து விடுபட்டு உலகத் தோற்றம், வளர்ச்சி பற்றி அறிவியல் அடிப்படையில் ஆராய முற்பட்ட பெருமை கிரேக்கர்களையே சாரும். அறிவியல் சார்ந்த எல்லாத்துறைகளிலும் கிரேக்கர்களது கை வண்ணத்தையும் கலை வண்ணத்தையும் காணலாம்.
மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவன் என்ற எண்ணத்தை மாற்றி கடவுளைத் தனது உருவத்தில் படைக்க ஆரம்பித்தவர்களும் கிரேக்கர்களே. உலகம் உட்பட எல்லாவற்றையும் எண்ணங்களாகவும் (concepts) உருவங்களாகவும் (figures) கிரேக்கர்கள் பார்த்தார்கள்.
இந்தக் கால கட்டத்திலேயே புகழ்பெற்ற தத்துவ ஞானிகளான தேல்ஸ் (Thales) ( கி.மு. 640-546), அறிவு ஆசான் சாக்கரட்டிஸ் (Socrates)( கி.மு. 469-399), பிளாட்டோ ( Plato)(கி.மு. 427-347)இ அரிஸ்ரோட்டல் (Aristotle)(கி.மு. 384-322), போன்றவர்கள் தோன்றினார்கள்.
"வரலாற்றின் தந்தை" ("Father of History") என அழைக்கப்படும் ஹெரடோரஸ் (Herodotus), சொற்பொழிவாளர் டெமொதீனஸ் (Demosthenes) (கி.மு. 384-322), "ஒவ்வொரு நோய்க்கும் இயற்கையான காரணம் உண்டு" ("every illness has a natural cause") என்று கூறிய மருத்துவத்தின் தந்தை ( "Father of Medicine") என்று போற்றப்பட்ட கிப்போகிறேட்ஸ் (Hippocrates) (கி.மு. 460-377) மகதீனஸ் (Magathenes)
இதே காலத்தைத் சேர்ந்தவர்கள்தான். கணித விற்பன்னர்களான பைத்தோகரஸ் (Pythagoras) , இகுலிட் (Euclid)இ ஆர்கிமிடிஸ் (Archimedes) போன்றவர்கள் வாழ்ந்த காலமும் இதுதான்.
எகிப்து, பாரசீகம், வட மேற்கு இந்தியா இவற்றின் மீது படையெடுத்து வெற்றி கண்ட மகா அலெக்சாந்தர் (Alexander the Great) காலமும் இதுதான். மகா அலெக்சாந்தரின் ஆசிரியர் அரிஸ்ரோட்டல் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்தக் கால கட்டத்தில் எழுதப்பட்ட பௌதீகம், வேதியல், தத்துவம், கணிதம், மருத்துவம், இலக்கியம், சமயம், இசை, நாடகம், சிற்பம், ஓவியம் சம்மந்தமான நூல்களை மொழிபெயர்த்துப் படித்ததினாலேயே ஐரோப்பா அறியாமை என்ற இருண்ட காலத்தில் இருந்து (Dark Age) னு அறிவுடமை நிறைந்த நாகரிக உலகத்துக்கு (கி.பி. 4வது - 11வது நூற்றாண்டு) காலடி எடுத்து வைக்க முடிந்தது.
ஐரோப்பிய மொழிகளின் அரிச்சுவடி கிரேக்க மொழியிலிருந்து சிறிய மாறுதலுடன் உருவாக்கப் பட்டதாகும். ஆங்கிலத்தில் உள்ள பல கலைச்சொற்கள் ( democracy, aristocracy, psychology) கிரேக்கத்தில் இருந்து நேரடியாக ஒலிமாற்றம் செய்யப்பட்டவையாகும்.
மேற்கூறியவற்றிலிருந்து உலக நாகரிக வளர்ச்சிக்கு கிரேக்கர்களது பங்களிப்பை ஓரளவு தெரிந்து கொள்ளலாம்.
ஆங்கிலேயரை எடுத்துக் கொண்டால் அவர்களது பொற்காலம் விக்டோரியா அரசியாரின் (1819-1901) 65 ஆண்டு கால நீண்ட ஆட்சிக் காலம் (1837-1901)என்று சொல்லலாம். பிரித்தானியாவின் கடல் கடந்த சாம்ராஜ்யம் இவரது காலத்திலேயே வலுப்பெற்றது. இந்தியாவின் சக்கரவர்த்தினியாக 26 ஆண்டுகள் (1976-1901)அரசு கட்டிலில் இருந்திருக்கிறார். பிரித்தானியாவின் தொழிற்புரட்சி இவரது காலத்திலேயே ஏற்பட்டது. அறிவியல், போர், பொருளாதாரம், கலை, இலக்கியத் துறை போன்ற எல்லாத் துறைகளிலும் பிரித்தானியா கொடி கட்டிப்பறந்தது. உலக ஏகாதிபத்தியத்தின் மொத்த உருவமாக இருந்த பிரித்தானியா சூரியன் அஸ்தமிக்காத நாடு என்று வர்ணிக்கப் பட்டது.
தமிழினத்தைப் பொறுத்தளவில் சங்க காலமே தமிழர்களது பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. தமிழர்களது நீண்ட கால வரலாற்றை உய்த்து உணர்ந்து ஆராய்பவர்கள் இந்த உண்மையை எளிதில் ஒப்புக் கொள்வார்கள்.
சங்ககாலத்தில் ஆட்சி புரிந்த அரசர்களே தமிழ் மன்னர்களாக விளங்கினார்கள். அவர்கள் மட்டுமல்ல அவர்களது பெயர்களும் தூய தமிழில் இருந்தன.
சங்கப் புலவர்களால் படைக்கப் பட்ட எட்டுத்தொகை, பத்துப் பாட்டு நூல்களும், சங்கம் மருவிய காலத்தில் எழுந்த பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள் தமிழர்களது நாகரிகச் சிறப்புக்கும், கலை, பண்பாட்டிற்கும், இயற்கையோடு இசைந்த வாழ்வுக்கும் கட்டியங் கூறுகின்றன.
சங்க காலத்தில் பிற்காலத்தில் பிறமொழிப் பண்பாட்டுப் படையெடுப்பால் எழுந்த சாதி, சமய, வேறுபாடுகள் இருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் அமைப்பு ரீதியான சமயம் இருக்கவில்லை. பேய், பிசாசு, மந்திர தந்திரம், சகுனம், மேல் உலகங்கள், கீழ் உலகங்கள், நரகம், சொர்க்கம் போன்ற மூடநம்பிக்கைகள் இருக்கவில்லை. பொது மக்கள் மத்தியில் இந்த நம்பிக்கைகள் இருந்திருக்கலாம். ஆனால் படித்தவர்கள் மத்தியில் இருக்கவில்லை.
மேலே குறிப்பிட்ட சங்க இலக்கியங்களை சமூகத்தின் பல படிகளிலும் இருந்த புலவர்கள் படைத்திருக்கிறார்கள். புவி ஆண்ட மன்னர்கள் தொடக்கம் கூலவாணிகர்கள் ஈறாக கவி பாடியுள்ளார்கள். ஆடவரும் பெண்டிரும், அந்தணரும், வணிகரும், குறவனும் குறத்தியும் என்று பல்வேறு பட்ட புலவர்கள் பாடல்கள் பாடியுள்ளார்கள். சங்கப் புலவர்களின் மொத்த எண்ணிக்கை 500க்கும் அதிகமாகும். வேறு எந்த நாட்டிலும் காணாதவாறு பெண்பால் புலவர்கள் மட்டும் 50க்கும் அதிகமாக இருந்திருக்கிறார்கள். இது சங்க காலத்தில் ஆண்களைப் போலவே பெண்களும் ஒத்த கல்விகற்று ஒத்த உரிமையோடு வாழ்ந்திருந்த உயர்ந்த வாழ்க்கைமுறையைக் காட்டுகிறது.
Re: தமிழர் திருமணம்
தமிழமுதம்
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவதெங்கும் காணோம்
தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்
(மகாகவி பாரதியார்)
என்னுயிர் கண்ணம்மா
சுட்டும் விழிச்சுடர்தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ?
வட்டக் கரியவிழி-கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் -புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் - தெரியும்
நட்சத் திரங்களடீ !
(மகாகவி பாரதியார்)
தமிழோடு இசை
"சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடு இசை பாடல் மறந்தறியேன் "
(அப்பர் தேவாரம்)
கண்ணம்மா
பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா !
பேசும் பொற் சித்திரமே !
அள்ளி அணைத்திடவே - என் முன்னே
ஆடி வருந் தேனே !
(மகாகவி பாரதியார்)
வெண்ணிலவு நீ எனக்கு !
மேவு கடல் நானுனக்கு !
பண்ணு சுதி நீ எனக்கு !
பாட்டினிமை நானுனக்கு !
(மகாகவி பாரதியார்)
காணி நிலம் வேண்டும் -பராசக்தி
காணி நிலம் வேண்டும் -அங்குத்
தூணில் அழகியதாய் - நனமாடங்கள்
துய்ய நிறத்தினதாய்-அந்தக்
காணிநிலத்திடையே - ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும்- அங்குக்
கேணியருகினிலே -தென்னைமரம்
கீற்று இளநீரும்
பாட்டுக் கலந்திடவே -அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டுதர வேணும் !
(மகாகவி பாரதியார்)
எங்கள் வாழ்வு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே!
(புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்)
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவதெங்கும் காணோம்
தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்
(மகாகவி பாரதியார்)
என்னுயிர் கண்ணம்மா
சுட்டும் விழிச்சுடர்தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ?
வட்டக் கரியவிழி-கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் -புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் - தெரியும்
நட்சத் திரங்களடீ !
(மகாகவி பாரதியார்)
தமிழோடு இசை
"சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடு இசை பாடல் மறந்தறியேன் "
(அப்பர் தேவாரம்)
கண்ணம்மா
பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா !
பேசும் பொற் சித்திரமே !
அள்ளி அணைத்திடவே - என் முன்னே
ஆடி வருந் தேனே !
(மகாகவி பாரதியார்)
வெண்ணிலவு நீ எனக்கு !
மேவு கடல் நானுனக்கு !
பண்ணு சுதி நீ எனக்கு !
பாட்டினிமை நானுனக்கு !
(மகாகவி பாரதியார்)
காணி நிலம் வேண்டும் -பராசக்தி
காணி நிலம் வேண்டும் -அங்குத்
தூணில் அழகியதாய் - நனமாடங்கள்
துய்ய நிறத்தினதாய்-அந்தக்
காணிநிலத்திடையே - ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும்- அங்குக்
கேணியருகினிலே -தென்னைமரம்
கீற்று இளநீரும்
பாட்டுக் கலந்திடவே -அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டுதர வேணும் !
(மகாகவி பாரதியார்)
எங்கள் வாழ்வு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே!
(புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்)
Re: தமிழர் திருமணம்
மனோன்மணியத் தமிழ்த் தெய்வ வணக்கம்
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டம் இதில்
தக்கசிறு பிறை நுதலுந் தரித்த நறுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநற் திருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துக் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி யிருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்குங் கவின்மலையாளமுந் துளுவும்
உன்னுதரத் உதித்தெழுந்தே யொன்றுபல ஆய்விடினும்
ஆரியம்போல் உலக வழக்கு அழிந்தொழிந்து சிதையாவுன்;
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டம் இதில்
தக்கசிறு பிறை நுதலுந் தரித்த நறுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநற் திருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துக் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி யிருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்குங் கவின்மலையாளமுந் துளுவும்
உன்னுதரத் உதித்தெழுந்தே யொன்றுபல ஆய்விடினும்
ஆரியம்போல் உலக வழக்கு அழிந்தொழிந்து சிதையாவுன்;
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!
Re: தமிழர் திருமணம்
ஆயக கய முறை
ஆரியர்களுடைய கற்பியல், தொல்காப்பியர் காலத்தில் எப்படி
இருந்ததென்பதைச் சிறிது சிந்தித்துப் பார்க்கப் போனால், ஒரு பெண்ணை
அய்ந்து பேர் கூடி வருஷத்திற்கொருவராய்ப் புணர்ந்து ஆளுக்கொருவராய்ப்
புணர்ந்து ஆளுக்கொரு பிள்ளையாகப் பெறுவதும், அதற்கு இளம்
பஞ்சபாண்டவர்களென்று பெயரிட்டு அழைப்பதும் அதிலும் திருப்தி
இல்லாவிட்டால், மற்றொரு கணவன் பேரிலும் இச்சை கொள்வதுதான்
ஆரியர்களின் கற்பியல் முறையாக இருந்து வந்தது. மச்சகந்தி என்னும் மீன்
வலைச்சியை அவளின் கன்னிப் பருவத்திலேயே பராசரரென்ற மகரிஷி ஆற்றில்
ஓடம் விட்டுக்கொண்டு போன சமயத்தில் அந்த நடு ஆற்றிலேயே ஓடத்தில்
வைத்துக்கொண்டு அவளுடன் பலவந்தப் புணர்ச்சி செய்து உடனே வியாச
பகவானைப் பெற்றுவிட்டதுதான் ஆரியர்களின் கற்பியல் முறையாக இருந்து
வந்தது. குந்திதேவியைச் சூரியன், வாயுதேவன், இந்திரன், எமன்
முதலியவர்களெல்லாம் அம்மாதைக் கன்னிப் பருவத்தில் புணர்ந்து கண்ணன்,
தருமன், வீமன், அர்ச்சுனன் முதலிய கீர்த்தி வாய்ந்த புத்திரர்களையும்,
பாண்டுவின் மற்றொரு மனைவியாகிய மாத்திரியை அ°வினி தேவர்கள்
புணர்ந்து நகுலன், சகாதேவன் முதலிய புத்திரர்களைப் பெற்றுக்கொள்வதுதான்
ஆரியர்களின் கற்பியல் முறையாக இருந்து வந்தது. அம்பா, அம்பாலிகை என்ற
இரண்டு விதவைப் பெண்களைச் சதுர்வேத சம்பன்னராகிய வியாச பகவானே
புணர்ந்து திருதராட்டினன், பாண்டு முதலிய பிள்ளைகளைப் பெற்றும்,
வெள்ளாட்டியைப் புணர்ந்து விதுரனைப் பெற்றும் கௌரவ குலத்தைக்
கௌரவப்படுத்தியதுதான் ஆரியர்களின் கற்பியல் முறையாக இருந்து வந்தது.
பிரத்தியேகமாய்ப் பள்ளியறை ஒன்றிருக்க அதை விடுத்து காமவெறி கொண்ட
தருமன் ஆயுத சாலைக்குள் புகுந்து கொண்டு பட்டப்பகலில் துரோபதியுடன்
கூடிப் புணர்ச்சி செய்துகொண்டிருக்கவும் அதையறியாத அர்ச்சுனன் இவர்கள்
செய்கையைப் பார்த்துவிட்டுப் பாப கர்மத்தைத் தொலைக்கத் தீர்த்த யாத்திரை
போய் அல்லிராணியைத் திருட்டுத் தாலி கட்டிவிட்டு ஓடிவிடுவதும்
ஆரியர்களின் கற்பியல் முறையாக இருந்து வந்தது. துரோணாச்சாரியார்
மனைவி வாசுகியம்மாவை நிர்வாணமாக வந்து அமுது படைக்கச் சொல்லி
அவள் பெண் குறியின்மீது பார்வையைச் செலுத்தித் தனது இந்திரியத்தை
அந்தச் சோற்றில் ஒழுகவிட்டு, அந்தச் சோற்றைக் குதிரைக்குக் கொடுத்து
அசுவத்தாமனைப் பெற்றுக் கொள்வதுதான் ஆரியர்களின் கற்பியல் முறையாக
இருந்து வந்தது. அநுசூயை என்னும் பெண்மணியிடத்தில், மும்மூர்த்திகளும்
போய் நிர்வாண பிச்சைக் கேட்கவும், அதற்கு அந்தம்மாள் மும்மூர்த்திகளையும்
குழந்தைகளாகச் சிருஷ்டித்து, மூலையில் தள்ளி வைத்ததுதான் ஆரியர்களின்
கற்பியல் முறையாகும். நாரதனைப் பெண் ரூபமாக்கி, கிருஷ்ணபரமாத்துமா
அவருடன் புணர்ந்து அறுபது பிள்ளைகளைப் பெற்று,
அப்பிள்ளைகளுக்கெல்லாம் முறையே பிரபவ, விபவ, சுக்கில, பிரமாதூத முதலிய
அறுபது வருடங்களின் பெயரையும் இட்டழைப்பதுதான் ஆரியர்களின்
கற்பியல் முறையாகும்.
நன்றி
நக்கீரன், கனடா!
[You must be registered and logged in to see this link.]
ஆரியர்களுடைய கற்பியல், தொல்காப்பியர் காலத்தில் எப்படி
இருந்ததென்பதைச் சிறிது சிந்தித்துப் பார்க்கப் போனால், ஒரு பெண்ணை
அய்ந்து பேர் கூடி வருஷத்திற்கொருவராய்ப் புணர்ந்து ஆளுக்கொருவராய்ப்
புணர்ந்து ஆளுக்கொரு பிள்ளையாகப் பெறுவதும், அதற்கு இளம்
பஞ்சபாண்டவர்களென்று பெயரிட்டு அழைப்பதும் அதிலும் திருப்தி
இல்லாவிட்டால், மற்றொரு கணவன் பேரிலும் இச்சை கொள்வதுதான்
ஆரியர்களின் கற்பியல் முறையாக இருந்து வந்தது. மச்சகந்தி என்னும் மீன்
வலைச்சியை அவளின் கன்னிப் பருவத்திலேயே பராசரரென்ற மகரிஷி ஆற்றில்
ஓடம் விட்டுக்கொண்டு போன சமயத்தில் அந்த நடு ஆற்றிலேயே ஓடத்தில்
வைத்துக்கொண்டு அவளுடன் பலவந்தப் புணர்ச்சி செய்து உடனே வியாச
பகவானைப் பெற்றுவிட்டதுதான் ஆரியர்களின் கற்பியல் முறையாக இருந்து
வந்தது. குந்திதேவியைச் சூரியன், வாயுதேவன், இந்திரன், எமன்
முதலியவர்களெல்லாம் அம்மாதைக் கன்னிப் பருவத்தில் புணர்ந்து கண்ணன்,
தருமன், வீமன், அர்ச்சுனன் முதலிய கீர்த்தி வாய்ந்த புத்திரர்களையும்,
பாண்டுவின் மற்றொரு மனைவியாகிய மாத்திரியை அ°வினி தேவர்கள்
புணர்ந்து நகுலன், சகாதேவன் முதலிய புத்திரர்களைப் பெற்றுக்கொள்வதுதான்
ஆரியர்களின் கற்பியல் முறையாக இருந்து வந்தது. அம்பா, அம்பாலிகை என்ற
இரண்டு விதவைப் பெண்களைச் சதுர்வேத சம்பன்னராகிய வியாச பகவானே
புணர்ந்து திருதராட்டினன், பாண்டு முதலிய பிள்ளைகளைப் பெற்றும்,
வெள்ளாட்டியைப் புணர்ந்து விதுரனைப் பெற்றும் கௌரவ குலத்தைக்
கௌரவப்படுத்தியதுதான் ஆரியர்களின் கற்பியல் முறையாக இருந்து வந்தது.
பிரத்தியேகமாய்ப் பள்ளியறை ஒன்றிருக்க அதை விடுத்து காமவெறி கொண்ட
தருமன் ஆயுத சாலைக்குள் புகுந்து கொண்டு பட்டப்பகலில் துரோபதியுடன்
கூடிப் புணர்ச்சி செய்துகொண்டிருக்கவும் அதையறியாத அர்ச்சுனன் இவர்கள்
செய்கையைப் பார்த்துவிட்டுப் பாப கர்மத்தைத் தொலைக்கத் தீர்த்த யாத்திரை
போய் அல்லிராணியைத் திருட்டுத் தாலி கட்டிவிட்டு ஓடிவிடுவதும்
ஆரியர்களின் கற்பியல் முறையாக இருந்து வந்தது. துரோணாச்சாரியார்
மனைவி வாசுகியம்மாவை நிர்வாணமாக வந்து அமுது படைக்கச் சொல்லி
அவள் பெண் குறியின்மீது பார்வையைச் செலுத்தித் தனது இந்திரியத்தை
அந்தச் சோற்றில் ஒழுகவிட்டு, அந்தச் சோற்றைக் குதிரைக்குக் கொடுத்து
அசுவத்தாமனைப் பெற்றுக் கொள்வதுதான் ஆரியர்களின் கற்பியல் முறையாக
இருந்து வந்தது. அநுசூயை என்னும் பெண்மணியிடத்தில், மும்மூர்த்திகளும்
போய் நிர்வாண பிச்சைக் கேட்கவும், அதற்கு அந்தம்மாள் மும்மூர்த்திகளையும்
குழந்தைகளாகச் சிருஷ்டித்து, மூலையில் தள்ளி வைத்ததுதான் ஆரியர்களின்
கற்பியல் முறையாகும். நாரதனைப் பெண் ரூபமாக்கி, கிருஷ்ணபரமாத்துமா
அவருடன் புணர்ந்து அறுபது பிள்ளைகளைப் பெற்று,
அப்பிள்ளைகளுக்கெல்லாம் முறையே பிரபவ, விபவ, சுக்கில, பிரமாதூத முதலிய
அறுபது வருடங்களின் பெயரையும் இட்டழைப்பதுதான் ஆரியர்களின்
கற்பியல் முறையாகும்.
நன்றி
நக்கீரன், கனடா!
[You must be registered and logged in to see this link.]
Re: தமிழர் திருமணம்
அருமைக [You must be registered and logged in to see this image.]

கேசவன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2755
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385
Re: தமிழர் திருமணம்
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10903
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1600
Page 3 of 3 •
1, 2, 3
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








