புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_c10இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_m10இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_c10 
48 Posts - 45%
heezulia
இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_c10இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_m10இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_c10இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_m10இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_c10இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_m10இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_c10இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_m10இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_c10 
3 Posts - 3%
jairam
இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_c10இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_m10இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_c10இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_m10இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_c10 
1 Post - 1%
சிவா
இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_c10இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_m10இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_c10இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_m10இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_c10இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_m10இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_c10இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_m10இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_c10 
14 Posts - 4%
prajai
இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_c10இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_m10இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_c10இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_m10இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_c10 
6 Posts - 2%
Jenila
இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_c10இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_m10இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_c10 
4 Posts - 1%
jairam
இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_c10இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_m10இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_c10இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_m10இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_c10 
3 Posts - 1%
Rutu
இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_c10இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_m10இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_c10இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_m10இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 25, 2014 4:54 pm

இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Variyar_main_img
திருமுருக கிருபானந்த வாரியார்
(ஆகஸ்ட் 25, 1906 - நவம்பர் 7, 1993)



நகைச்சுவையையும், உருக்கும் பக்திச் சுவையையும் தமிழ் உலகிற்கு வாரி வாரித் தந்தவர் வாரியார்.

“அன்பாய் அரும்பி, தமிழாய் மலர்ந்து, இசையாய் மணம் வீசி, அறமாய்க் காய்த்து, அருளாய்க் கனிந்தவர் - பாமரன் உள்ளத்தில் பரமனைப் பதித்தவர், ஆன்மிகப் பெருவீட்டின் பூட்டைத் தமிழ்ச் சாவியால் எளியவர்களுக்கும் திறந்து காட்டியவர்; - பக்திச் சுவை ஊட்டியவர் -நகைச்சுவையால் உள்ளத்தைத் தொட்டவர். - அதில் உயர்கருத்தை நட்டவர். -தமிழே முருகன், முருகனே தமிழ் என்று கேட்பவரை உருக வைத்தவர் -திருமுருக கிருபானந்த வாரியார்” என்பது குமரி அனந்தன், வாரியார் சுவாமிகளைக் குறித்துக் தீட்டியிருக்கும் அழகிய சொல்லோவியம்.காங்கேயநல்லூரில் 1906 ஆகஸ்ட் 25- ல் பிறந்தவர் வாரியார். அவர்

'சம்பந்தரைப் போல் தவழ்ந்தபடி, சுந்தரரைப் போல் நின்றபடி, மணிவாசகரைப் போல் இருந்தபடி, அப்பரைப் போல் தள்ளாடியபடி எண்பத்தேழரை ஆண்டுகள் இம் மண்ணுலகில் நல்ல வண்ணம் வாழ்ந்து காட்டியவர்; நாட்டு மக்கள் நலமுடன் வாழ வழிகாட்டியவர். அவரது பேச்சு, எழுத்து, வாழ்வு என்னும் மூன்றையும் இறுதி மூச்சு வரை ஆட்கொண்டிருந்த சுவைகள் இரண்டு. ஒன்று, பக்திச் சுவை; மற்றொன்று, நகைச்சுவை.என்ன வரும்; வராது ஒருமுறை மைசூர் மகாராஜா, “நீங்கள் முருகனுக்கு அதாரிடி என்று கேள்விப்-பட்டேன். முருகனை வணங்கினால் என்ன வரும்?” என்று வாரியாரிடம் கேட்டார். வாரியார், “என்ன வரும் என்பதைப் பிறகு சொல்வேன். என்ன என்ன வராது என்பதை முதலில் சொல்வேன்” என்றார். இப்படிச் சொன்ன உடன், மகாராஜா சிரித்துவிட்டாராம். “முருகனை வணங்கினால் வறுமை வராது, கால பாசம் வராது. இந்த இரண்டிற்குப் பதிலாகச் செல்வம் வரும், ஞானம் வரும். நோயும் துன்பமும் முருகனடியாரை நெருங்க மாட்டா” என்று வாரியார் கூறினார்.

மணிவிழா :

1966-ல் வாரியாருக்கு பெரிய அளவில் மணிவிழா நடத்த வேண்டும் என்று அவரது அன்பர்கள் திட்டமிட்டனர். ஆனால் அவர் விரும்பவில்லை. தனக்கே உரிய நகைச்சுவைப் பாணியில் சொன்ன காரணம்: “சிலர் மணிவிழா என்று 'மணி' திரட்டும் விழாவாகச் செய்து கொள்வார்கள். நான் அதை எள்ளளவும் விரும்ப-வில்லை.”சிலர் சிரிக்கவே மாட்டார்கள். சிரித்தால் தம்முடைய பெருமை குறைந்துவிடும் என்று எண்ணி வாழைப் பூவைப் போல் 'உம்' என்று முகத்தை வைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களைக் கண்டு பரிதாபப்பட வேண்டும் என்பது வாரியார் கருத்து.குடவாசல் சிவாலயத்தில் குடமுழுக்கு நடந்தது. அவ்விழாவில் வாரியார் கலந்து கொண்டு 'மீனாட்சியம்மை திருமணம்' என்னும் தலைப்பில் விரிவுரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.இடையிடையே சில நகைச்சுவை இடம்பெற்ற பொழுது பலரும் விழுந்து விழுந்து சிரித்தனர். ஒருவர் மட்டும் சிரிக்கவில்லை. இடையில் வாரியார் சுவாமிகளின் உரையில் ஓர் ஆச்சரியமான நகைச்சுவை வந்தது. எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள். இடையில் சிரிக்காமல் இருந்த அந்த அன்பர் சிரிப்பை அடக்க முடியாமல் குபீரென்று சிரித்து விட்டார். வந்தது ஆபத்து. என்ன ஆபத்து என்று கேட்கின்றீர்களா? அவர் வாயில் புகையிலையை மென்று எச்சிலை அடக்கிக் கொண்டிருந்தார். அந்தப் தாம்பூல எச்சில் அருகில் இருந்தவரின் வெள்ளைச் சட்டை, சிவப்புக் கலர் தோய்த்தது போன்ற ஒரு காட்சியை உண்டாக்கியது. சிரிக்காதவர் சிரித்ததனால் இந்தத் தீமை ஏற்பட்டது என இந்நிகழ்வையும் தமது பேச்சுத் திறத்தால் சிரிப்புக்கு உள்ளாக்கினார் வாரியார். 'சிரிப்பால் விளைந்த தீமை' என அவர் இதைச் சுவையாகக் குறிப்பிட்டார்.

புத்திசாலி கணவன் :

புத்திசாலிக் கணவனுக்கும் முட்டாள் கணவனுக்கும் உள்ள வேறுபாடு என்ன தெரியுமா? இதோ, வாரியார் கூறுகிறார், 'வாயை மூடு!' என்று முட்டாள், தன் மனைவியைத் திட்டுகிறான். 'நீ அமைதியாக இருக்கும்போது எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா?' என்கிறான் புத்திசாலி. அறிவார்ந்த நகைச்சுவை என்பது இதுதான்!வாரியார் சுவாமிகளைப் பற்றி ரத்தினச் சுருக்கமாக ஒரே வரியில் மதிப்பிட வேண்டும் என்றால், இப்படிச் சொல்லலாம்: அவர் சொல்லின் செல்வர், சமயோசிதப் பேச்சில் வல்லவர். ஒருமுறை அவருடைய சொற்பொழிவு நடந்த பொழுது சில பேர் இடையில் எழுந்து வெளியே சென்றனர். அப்பொழுது வாரியார் , 'சொல்லின் செல்வன்' என்று அனுமனைக் குறிப்பிடுகிறார்கள். இங்கேயும் சில 'சொல்லின் செல்வர்கள்' இருக்கிறார்கள். நான் நல்ல விஷயங்களைச் சொல்லின், அதைக் கேட்காமல் செல்வதைத் தான் சொல்கிறேன்” என்று பேச்சின் இடையே அவர்களை மென்மையாக அங்கதச் சுவையுடன் சாடினார். அதற்குப் பிறகு யாரும் அந்த இடத்தை விட்டு அகலவில்லை.

வள்ளி வந்தது எப்படி :

முருகப் பெருமானின் துணைவி வள்ளி நாயகிக்கு அந்தப் பெயர் வந்ததற்கு வாரியார் புதுமையான ஒரு விளக்கத்தினைத் தருவார்:
“முருகப் பெருமானின் மனைவியை 'வள்ளி' என்று ஏன் அழைக்கிறோம்? முருகன் நாம் கேட்டதை எல்லாம் தரும் 'வள்ளல்'. வள்ளல் என்பது ஆண்பால், அதன் பெண்பால் வள்ளி. ஆக, வள்ளலின் மனைவி 'வள்ளி' ஆனார்!வாரியார் நகைச்சுவைத் திறனைப் பறைசாற்றும் ஓர் எடுத்துக்காட்டு“கள்ளைக் குடித்தால் தான் போதை தரும் என்பது இல்லை. 'கள்' என்று சொன்னாலே போதும். பலர் மயங்கி விடுகிறார்கள். ஒருவரை 'நீ' என்று சொல்லுவதற்குப் பதில் 'நீங்கள்' என்று சொல்லிப் பாருங்கள். அவர் எளிதில் மயங்கி விடுவார். எல்லாம் அந்தக் 'கள்' செய்யும் வேலைதான்.”இதே போல், 'இல்லாள்' என்ற சொல்லுக்கு வாரியார் தரும் விளக்கமும் சுவையானது. 'இல்லாள்' இல்லத்தை ஆள்பவள். பெண்பாலாகத் தான் குறிப்பிடுகின்றோம். அதையே ஆண்பாலாகச் சொல்ல முடியுமா? அப்படிச் சொன்னால் 'இல்லான்' - 'பாப்பர்' என்று ஆகிவிடும். ஆகவே தான் பிச்சைக்காரன்கூட 'அய்யா, பிச்சை' என்று சொல்ல மாட்டான்; 'அம்மா, பிச்சை' என்று தான் சொல்லுவான். அந்தப் பிச்சைக்காரனுக்குக் கூடத் தெரியும், அய்யா பேரில் வீட்டு மனை இருக்காது என்று! எல்லாமே அம்மா பேரில் தான் இருக்கும். ஆகவே இல்லாள் உயர்ந்தவள் ஆகிறாள்!”

கரூருக்கு வருவாரா?

கரூரில் வாரியார் ஆற்றிய தொடர் சொற்பொழிவு முடிவடையும் நாள். பாராட்டிப் பேசியவர் ஒருவர், 'மீண்டும் வாரியார் பேச்சை எப்பொழுது கேட்போமோ…?' என்ற ஏக்கத்தோடு, 'மீண்டும் கரூருக்கு எப்போது வருவீர்கள் சுவாமி?' என்று ஆர்வத்துடன் கேட்டார். அதற்கு வாரியார், “கரூருக்கா? கரூருக்கு (கருவூருக்கு) மீண்டும் வரக்கூடாது என்பதற்காகத் தானே இத்தனை ஆண்டுகள் இறைவனை வேண்டிப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். என்னை மீண்டும் கரூருக்கு வாருங்கள் என்று சொல்கிறீர்களே…?” என்றாரே பார்க்கலாம். அரங்கம் கர ஒலியால் அதிர்ந்தது!வாரியார் மனைவி அமிர்தலட்சுமி காலமானார். மற்றவர்கள் கலங்கினர். அவர் இயல்பாக இருந்தார். “அவளுக்கு உரிய ஸ்டேஷன் வந்தது. இறங்கி விட்டாள். அடுத்த ஸ்டேஷனில் இறங்க நாமும் ஆயத்தமாக இருப்போம்'' என்றார். யாரால் இப்படிக் கூற முடியும்? வாழ்வில் இடுக்கண் வந்து தாக்கும் வேளையிலும் எவரால் இவ்வாறு நகைச்சுவை உணர்வுடன் பேச முடியும்?

-முனைவர் இரா.மோகன்,



இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon Aug 25, 2014 5:55 pm

கிருபானந்த வாரியாருடைய சொர்ப்பொழிவுகள் என்னை மிகவும் கவர்ந்தவை.
அவரை என்னுடைய குரு என்று சொல்லுவேன்.



நேர்மையே பலம்
இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் 5no
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82118
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 25, 2014 6:52 pm

இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் 103459460


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 25, 2014 7:02 pm

எக்காலத்திலும் அழியாதது எழுத்தும் சொற்பொழிவும். இவருடைய பிறந்தநாளை கொண்டாடுவோம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 25, 2014 7:10 pm

நல்ல பகிர்வு சிவா புன்னகை ரொம்ப நன்னா கதை சொல்வார் , பெரிய மகான், அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்ததே நமக்கு புண்ணியம் என்று நினைப்பேன். எங்கள் சமாஜத்திற்கு வந்திருக்கார், நாங்கள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு கதை கேட்டிருக்கோம் புன்னகை எங்க எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும் புன்னகை

அவர் பெயரில் எங்க அன்னதான சமாஜத்தில் ஒரு ஹால் கூட இருக்கு " வாரியார் ஹால்' என்று புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon Aug 25, 2014 7:37 pm

கிருபானந்த வாரியார் அவர்கள் நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறார், அவருடைய புத்தகங்களை வாசிக்க எனக்குக் கிடைக்கவில்லை, மின்னூல் வடிவிலோ அல்லது ஒலிவடிவிலோ, யாரிடமாவது இருந்தால் தந்துதவ முடியுமா?



நேர்மையே பலம்
இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் 5no
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 25, 2014 9:18 pm

அகிலன் wrote:கிருபானந்த வாரியார் அவர்கள் நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறார், அவருடைய புத்தகங்களை வாசிக்க எனக்குக் கிடைக்கவில்லை, மின்னூல் வடிவிலோ அல்லது ஒலிவடிவிலோ, யாரிடமாவது இருந்தால் தந்துதவ முடியுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1082267

கார்த்திக் கிட்ட கேட்டுப்பார்க்கலாம் அகிலன்புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 25, 2014 9:45 pm

அவர் குரல் வளம் . சொல் ஆளுமை , அவரின் உருவம்
கேட்டுக்கொண்டே இருக்கலாம் , பார்த்துக் கொண்டே இருக்கலாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Aug 25, 2014 10:22 pm

நகைச்சுவை கலந்து அவர் சொல்லும் கதைகள் அருமை. நானும் கேட்டிருக்கிறேன் ஒலிநாடாவில்.



இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Aug 25, 2014 10:56 pm




இளைஞர்களுக்கு வாரியார் சொன்ன அறிவுரை!

வா ழ்வு இனிமையாக அமைதல் வேண்டும். ஆனால், உலகிலே பொதுவாக பலரு டைய வாழ்வு துன்பம் நிறைந்ததாகவே இருப்பதைப் பார்க்கிறோம்.

‘வாழ்வில்லாச் சங்கடத்தில் சாதலே நன்று’ என்று ஒளவையார் அருளிச் செய்துள்ளார். வாழ்வை இனி மையாகச் செய்து கொள்வது அறிவுடைமை.

ஒரு மாளிகைக்குக் கடைக்கால் (அஸ்திவாரம்) மிக முக்கியமானது. கடைக்கால் ஆடினால் மாளிகை இடிந்து விடும். அதுபோல் மனித வாழ்வுக்குக் கடைக் காலாகத் திகழ்வது இளமைப் பருவம். இளமையில் பழகும் பழக்கம் இறுதிவரை நிற்கும். ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ என்பது பழமொழி.

இளமையில் சில பிள்ளைகள் வேண்டாத செலவுகள் செய்யப் பழகி விடுகிறார்கள். தந்தையாருடைய உழைப்பினால் வரும் ஊதியத்தைக் கொண்டு, வாழ்வுக்கு அவசியம் இல்லாத பண்டங்களை வாங்கித் தங்கள் விருப்பம் போல் ஆடம்பரமாக வாழ்ந்து பழகி விடுகிறார்கள். அந்தப் பழக்கம் அவர் களைக் கடைசி வரை நன்றாகப் பிடித்துக் கொண்டு துன்பத்தைத் தருகிறது. பசி எடுத்தால் உண்ணுதல் வேண்டும். மானம் காக்க உடுக்க வேண்டும். இளைஞர் கள் ஆடம்பர உடையைத் தவிர்க்க வேண்டும். ஒருவன் திருமணம் செய்து கொள்கிறான். தொடக்கத்தில் அவனு டைய வருவாய், மாதம் 100 ரூபாய் என்ற அளவில் அமைந்துள்ளது. மனைவியும், தானுமாக வாழ்கிற அவன், சிறிது சேமித்து வைக்க வேண்டும். ஓயாது புகை பிடித்தும், வந்த திரைப்படங்களுக்கெல்லாம் சென்று பல முறை பார்த்தும், அழகுப் பொருள்களை வாங்கி அடுக்கியும் அதிகம் செலவழிக்கப் பழகி விடுகிறான். மாதம் 100 ரூபாய் வருவாய் உள்ளவன் 125 ரூபாய் வரை செலவழித்துக் கடன்படுகிறான்.

நாட்கள் செல்லச் செல்லக் குழந்தைகள் பிறக்கும். நான்கைந்து மக்கள் பிறந்து விடுமானால், குழந்தை களுக்கு மருத்துவச் செலவு, ஆடை- அணிகள் வாங்கும் செலவு, விருந்தினர் செலவு, நன்மை- தீமைகளுக்குப் போய் உறவினரை விசாரிக்கும் செலவு... இப்படிப் பல செலவுகள் தட்ட முடியாமல் வரும். வாழ்வு ஒரு நதி போன்றது. நதி தொடக்கத்தில் சிறியதாக இருக்கும். செல்லச் செல்ல விரிந்து கொண்டே போகும். பல கிளை நதிகள் அதில் வந்து சேரும். அது போல் வாழ்வு ஆரம்பத்தில் மனைவி, பின் மக்கள், மனைவியின் உடன் பிறந்தார், சகலை, நண்பர், மாமன், மாமி இப்படிப் பல கிளைகள் கிளைக்கும்.

இவ்வாறு குடும்பம் விரிவுபடுகிறபோது செலவுக்குப் போதிய பணம் இன்றிப் பலர் பரிதவிக்கிறார்கள்.

பீலி பெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.

என்கிறார் திருவள்ளுவர். வரவு அதிகம் வரவில்லை என்றாலும் குற்றமில்லை. செலவினம் அதிகமாகாமல் இருந்தால் துன்பமில்லை. மயிற்பீலி கனமில்லாதது. அவற்றை அளவுக்குமேல் வண்டியில் இட்டால், வண்டியின் அச்சு முறிந்து விடும். ஆதலால், இளைஞர்கள் எந்த ஒரு காரியத்துக்கும் பணத்தைச் செலவிடும்போது ‘இது அவசியம்தானா?’ என்று சிந்திக்க வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்கள் வெந்த பண்டங்களைக் கூடுமான வரை வெளியே வாங்கி உண்ணாமல் இருப்பது நல்லது. தாங்களே வீட்டில் சமைத்து அருந்துதல் வேண்டும். கடையில் ஒருவன் உண்ணச் செலவழிக்கும் பொருளை, வீட்டில் பண்டம் வாங்கிச் சமைத்தால் நால்வர் உண்ணலாம். சுசியாகவும் (சுகாதாரம்), ருசியாகவும் இருக்கும்.

அது போல் தலைக்கு வெறும் தேங்காய் எண்ணெய் தடவிக் கொண்டால் போதும். வாசனை கலந்த தைலம் தேவை இல்லாதது. இப்படி ஒவ்வொரு பொருளும் தேவையா என்று சிந்தித்து வாங்க வேண்டும். அழகிய பொருள் என்று கண்டவற்றையெல்லாம் வாங்கி வந்து வீட்டிலே குவிக்கக் கூடாது. கடன்பட்டு எந்தப் பொருளையும் வாங்கக் கூடாது. அமைதியாகவும் எளிமையாகவும் வாழ்ந்து பழக வேண்டும். அப்படி வாழக் கற்றுக் கொண்ட இளைஞர்கள் வாழ்வு இன்பம் பயப்பதாக இருக்கும். வாழ்வு தழைக்கும்.

இதை இளைஞர்கள் ஒவ்வொருவரும் சிந்தித்து வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்வார்களாக!

_ திருமுருக கிருபானந்த வாரியார் சொன்னது...
தகவல்: மு. ஜெகந்நாதன், சென்னை-73


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக