புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம் Poll_c10வைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம் Poll_m10வைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம் Poll_c10 
64 Posts - 50%
heezulia
வைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம் Poll_c10வைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம் Poll_m10வைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
வைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம் Poll_c10வைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம் Poll_m10வைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம் Poll_c10வைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம் Poll_m10வைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம் Poll_c10வைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம் Poll_m10வைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம் Poll_c10வைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம் Poll_m10வைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம் Poll_c10வைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம் Poll_m10வைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம் Poll_c10வைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம் Poll_m10வைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம்


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 05, 2014 12:30 am

வைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம்

முதல் நாள் கூடங்குளம்... அடுத்த நாள் சென்னை... மறுநாள் டெல்லி... அது, நாடாளுமன்றமோ, நான்கு பேர் சந்திப்போ... வைகோ வைகோதான். மனிதருக்கு இப்போது வயது 68. ஆனால், நீங்கள் முதல் முதலில் பார்த்தபோது வைகோ எப்படி இருந்தார் என்று யோசித்துப் பாருங்கள். அப்படியேதான் இருக்கிறார் இப்போதும். அதிகாலை நடைப்பயிற்சி முடித்துவிட்டு, ஆசுவாசமாக செய்தித்தாள்களைப் புரட்டியபடி இருந்த வைகோவை அவருடைய இல்லத்தில் சந்தித்தோம்.
வைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம் P12a
''மனித உடல் இயற்கை கொடுத்த அற்புதமான ஒரு கருவி; கற்பனை செய்ய முடியாத படைப்பு. அந்த இயற்கை சில நியதிகளையும் நமக்கு வகுத்துத் தந்திருக்கிறது. 'இயற்கையோடு இயைந்து வாழ வேண்டும்’ என்பதுதான் அது. உடல் ஆரோக்கியத்தைப் பாழாக்கும் புகையும் மதுவும் எனக்குப் பகை. 'புகையையும் மதுவையும் தொட்டுவிடாதீர்கள்; அது உங்கள் நுரையீரலையும் கல்லீரலையும் எரித்துவிடும். உங்களுக்கு மட்டும் அல்ல, உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் அதுதான் எமன்!’ என்பதுதான் என் தொண்டர்களுக்கு நான் கூறும் அன்பு அறிவுரை. சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்'' - கம்பீரமாகச் சிரிக்கிறது கலிங்கப்பட்டிப் புலி.

''என் அம்மா மாரியம்மாவுக்கு இப்போது 90 வயது. அதிகாலை 4 மணிக்கு எழுந்து இரவு 11 மணி வரை ஏதாவது வேலை செய்துகொண்டே இருப்பார். என் அம்மாவிடம் நான் கற்றுக்கொண்ட முதல் விஷயம் அதிகாலையில் இருந்து உழைப்பது. அடுத்த விஷயம் உணவுப் பழக்கம். காலையிலும் இரவிலும் ஒரு பெரிய டம்ளரில் கண்டிப்பாக பால் குடித்தே ஆக வேண்டும். காலை உணவை சரியாக உண்டேனா என்பதைக் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணிப்பார். மதியம் உணவில் பருப்பும் நெய்யும் கண்டிப்பாக இருக்கும். கூடவே ரசமும் தயிரும் போட்டுக்கொள்ள வேண்டும். இரவிலும் சோறுதான். திருமணத்துக்குப் பிறகும் அதே உணவு முறைதான். ஆனால், காலத்தின் கட்டாயம், 40 வயதுக்கு மேல் உடலின் மெட்டபாலிசம் மாறுவதால், இட்லி, எண்ணெய் இல்லாத கோதுமை உப்புமா, கோதுமை தோசை காலை உணவிலும், இரவில் சப்பாத்தியும் என் உணவுப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. மதியம் வழக்கமான சாப்பாடுதான்.
வைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம் P13a
அசைவம் என்றால் ஒரு காலத்தில் எனக்குக் கொள்ளைப் பிரியம். ஆனால், முள்ளிவாய்க்கால் படுகொலைத் துயரம் நேர்ந்த சமயம் நான் அசைவம் சாப்பிடுவதையே நிறுத்திவிட்டேன்.

பரம்பரை பரம்பரையாக நம் முன்னோர்கள் கட்டிக்காத்த வீடும் நிலமும் நமக்கு வருகிறதோ இல்லையோ... பரம்பரை நோய்கள் மட்டும் விடாக்கண்டனாய் நம்மைப் பிடித்துக்கொள்கின்றன. ஆனால், சரியான சிகிச்சைமுறைகளும் உணவுக் கட்டுப்பாடும் இருந்தால் ஓரளவுக்குப் பரம்பரை நோய்களின் பிடியில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். என் அப்பாவுக்கு சர்க்கரை நோய் இருந்ததால், அது எனக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே, நான் ருசித்துச் சாப்பிடும் இனிப்புப் பணியாரத்தையும் அதிரசத்தையும் அறவே மறந்துவிட்டேன்.

சர்க்கரை நோய் வராமல் தற்காத்துக்கொள்ள நடைப்பயிற்சி உதவும் என்பதால் அதிகாலை நாலரை மணிக்கெல்லாம் எழுந்து ஒரு மணி நேரம் வேகமாக நடப்பேன். நடைப்பயிற்சி இல்லாத நாட்களில் டிரெட் மில். நடைப்பயிற்சி முடிந்த பின்பு காற்றை வடிகட்டி நுரையீரலுக்குள் செலுத்தும் மூச்சுப் பயிற்சியை செய்து முடிப்பேன். என்னதான் உணவும் உடற்பயிற்சிகளும் இருந்தாலும் சுயப் பராமரிப்பு என்பது முக்கியமான ஒன்று. ஆரோக்கியமான உடலுக்குள்தான் அற்புதமான உள்ளம் இருக்க முடியும். காலைக் கடனை முடித்ததும் சோப் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்யுங்கள். எந்தப் பொருளை சாப்பிட்டாலும் தண்ணீர்கொண்டு வாய் கொப்பளியுங்கள். ஏனெனில், அதிகமானக் கிருமிகள் உடனடியாகத் தாக்குவது இந்த இடங்களைத்தான்.''
வைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம் P13
''அரசியல் வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு உணவையும் தூக்கத்தையும் சரியானபடி கடைப்பிடிப்பது பெரிய சவால் இல்லையா?''

''ஆம்! ஆனால், நேரத்துக்குச் சாப்பிடுவதை ஓர் ஒழுங்காகவே நான் கடைப்பிடிக்கிறேன். அம்மா கற்றுத்தந்த பழக்கம். அதேபோல, தூக்கத்தை எந்தத் தேவதையாலும் பரிசளிக்க முடியாது. ஒரு நாளைக்கு ஆறு மணி நேரமாவது உடலுக்கு ஓய்வு கொடுத்தே ஆக வேண்டும். இல்லை எனில், அதுவே சர்க்கரை நோய்க்கும் உயர் ரத்த அழுத்தப் பிரச்னைக்கும் காரணமாகிவிடும். ஆனால், தேர்தல், பொதுக்கூட்டங்கள் என்று வந்துவிட்டால், தூக்கத்துக்கான நேரத்தை நம்மால் தீர்மானிக்க முடியாது. அந்த மாதிரிச் சமயங்களில் நான் காந்தியவாதி. என்ன பார்க்கிறீர்கள். கிடைக்கும் ஓரிரு நிமிடங்களில்கூட கோழித் தூக்கம் போடுவாராம் காந்தியார். வெளியூர் செல்லும் சமயங்களில் வண்டியிலேயே தூங்கிவிடுவேன். பழைய பாடல்களைக் கேட்டுக்கொண்டே தூங்குவது எனக்குப் பிடித்த ஒன்று.''

''அதிகப்படியான மேடைகளைக் கண்ட பேச்சாளர் என்ற முறையில் சொல்லுங்கள். இத்தனை வயதிலும் குரலின் கம்பீரம் குறையாமல் பாதுகாக்கிறீர்களே... எப்படி?''

''1993-ல் தொண்டையில் ஒரு கட்டி வளர்ந்து அது புற்று நோயாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் காரணமாக அறுவை சிகிச்சைகூட செய்திருக்கிறேன். சிறிய கட்டிதான் அது புற்றுநோய் இல்லை என்று நிரூபணமாகிவிட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகும் என் குரலில் எந்த மாற்றமும் இல்லை. நான் நினைக்கிறேன். குரல், இயற்கை எனக்குத் தந்த சிறப்பான பரிசு. மேடைகளில் பேசத் தொடங்குவதற்கு முன் சூடாக க்ரீன் டீ குடிப்பது வழக்கம். தூக்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக இரவு நேரங்களில் பேசத் தொடங்குவதற்கு முன்பு உணவு சாப்பிடும் பழக்கம் கிடையாது. குளிர்பானங்கள் சாப்பிடுவது எனக்கு குற்றாலத்தில் குளிப்பதுபோல. ஆனால், என் குரலுக்காகக் குளிர்பானங்கள் சாப்பிடுவதையே விட்டுவிட்டேன். குடிப்பதும் குளிப்பதும் கதகதப்பான நீரில்தான். குளிர்பானங்களுக்குப் பதிலாக வேகவைத்த காய்கறிகள் சாப்பிடுவதைப் பழக்கமாக்கிக் கொண்டேன்.''

''ஆனால், அடிக்கடி சிறை செல்லும்போது உங்களால் இந்த ஒழுங்குகளை எல்லாம் பின்பற்ற முடியாது அல்லவா?''

''சிறைக்குள் ஓர் ஒழுங்குமுறையை நம்மால் கடைப்பிடிக்க முடியும். அதிகாலை ஐந்து மணிக்கு எழ வேண்டும். ஒன்றரை மணி நேரம் நடைப் பயிற்சி இருக்கும். மாலை நேரத்தில் ஒரு மணி நேரம் வாலிபால் மற்றும் மூச்சுப் பயிற்சி. உணவைப் பொருத்தவரை காய்ந்துபோன ரொட்டியும் சப்பாத்தியும்தான் கிடைக்கும். 'உனக்கும் கீழே உள்ளவர் கோடி. நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ எனும் கண்ணதாசனுடைய வரிகளை நினைத்து சமாதானம் ஆகிவிடுவேன். மன வலிமையை எந்தத் துன்பத்தாலும் துளைக்க முடியாது.''

''சரி... இந்த மனவலிமையை எங்கிருந்து பெறுகிறீர்கள்?''

''புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள்... ஆசைப்பட்ட நூல்களை நெஞ்சுக்குள் குடியேற்றிக்கொள்வதுதான் எனக்கான மனப்பயிற்சி. புத்தக வாசிப்பு என்பது ஒரு வகையில் ஒரு தவம்.

ஒரு விஷயத்தை வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். இதுவரை 13 முறை நான் ரத்த தானம் செய்து இருக்கிறேன். 'ரத்ததானம் செய்தால் உடல் எடை குறையும். உடல் நலம் பாதிக்கும்’ என்கிற தவறான எண்ணங்கள் மக்கள் மத்தியில் நிலவுகின்றன. உண்மையில் ரத்த தானம் செய்வதால் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. தவிர, நம்மால் ஓர் உயிர் காக்கப்பட்டது என்பதை நினைக்கும்போது கிடைக்கும் திருப்தி இருக்கிறதே... ஆரோக்கியம் என்பது அதில் இருந்துதானே பிறக்கிறது. வாழ்க்கை என்பது எல்லாம்தானே!''

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக