புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு சிகிச்சை Poll_c10கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு சிகிச்சை Poll_m10கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு சிகிச்சை Poll_c10 
7 Posts - 54%
heezulia
கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு சிகிச்சை Poll_c10கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு சிகிச்சை Poll_m10கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு சிகிச்சை Poll_c10 
6 Posts - 46%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு சிகிச்சை Poll_c10கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு சிகிச்சை Poll_m10கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு சிகிச்சை Poll_c10 
49 Posts - 61%
heezulia
கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு சிகிச்சை Poll_c10கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு சிகிச்சை Poll_m10கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு சிகிச்சை Poll_c10 
27 Posts - 34%
mohamed nizamudeen
கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு சிகிச்சை Poll_c10கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு சிகிச்சை Poll_m10கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு சிகிச்சை Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு சிகிச்சை Poll_c10கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு சிகிச்சை Poll_m10கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு சிகிச்சை Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு சிகிச்சை


   
   
drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Fri Nov 07, 2014 5:20 pm


இரைப்பைப் புற்று நோய்க்கு அறுவைசிகிச்சை இல்லாமல், நவீன மருத்துவ சிகிச்சையை அளிக்க முடியுமா? கோவை மருத்துவர் ஒருவர் இதை நடத்திக்காட்டி வருகிறார்.

மது அருந்துதல், புகைப்பிடித்தல், உணவுப் பழக்கவழக்க மாற்றம், உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட காரணங்களால் இன்றைய காலத்தில் இளைஞர்கள்கூடப் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் பெரும்பாலான இளைஞர்கள் வேலைப்பளு, மன அழுத்தம் போன்ற காரணங்களால் தலைவலி, சர்க்கரை நோய் போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.

அதேசமயம் அறுவை சிகிச்சைகளுக்கு அபரிமிதமான கட்டணம் வசூலிப்பதன் காரணமாக நடுத்தர, ஏழை நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சை என்பது எட்டாக் கனியாக இருந்துவருகிறது. இதனால், பெரும்பாலான ஏழை-எளிய நோயாளிகள் அரசு மருத்துவமனைகளையே நாடுகிறார்கள்.

நவீன சிகிச்சை

இந்திய மருத்துவத்தில் மூளைக் கட்டி, இதயக் கோளாறு, சிறுநீரகப் பிரச்சினை, எலும்பு முறிவு ஆகிய நோய்களுக்கு ஆபரேஷன் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதே நேரம் இரைப்பைப் புற்று நோய்க்குக் கத்தியின்றி, ரத்தமின்றி நவீன மருத்துவ சிகிச்சை அளிக்க முடியும் என்பதைக் கோவை மருத்துவமனை நடத்திக்காட்டி வருகிறது.

கோவை எண்டாஸ்கோபி மற்றும் லேப்ரோஸ்கோபி எக்சலன்ஸ் மையத்தின் தலைவர் டாக்டர் பி.எஸ்.ராஜன், இத்துறையில் 20 ஆண்டு அனுபவம் பெற்றவர். நாட்டில் பல்வேறு மருத்துவர்களுக்கு இவர் லேப்ராஸ்கோபி பயிற்சி அளித்துள்ளார். எண்டாஸ்கோபி சிகிச்சை மூலம் தழும்பு இன்றி குடல்வால் நீக்கம் செய்த முதல் மருத்துவர். இதே முறையில் தழும்பு இன்றி பித்தப்பையை அகற்றிய ஆசியாவின் முதல் மருத்துவர். உணவுக் குழாய் அடைப்புக்கு அறுவைசிகிச்சை இன்றி எண்டாஸ்கோபி மூலம் சிகிச்சை அளிக்கும் தென்னிந்தியாவின் முதல் நிபுணர்.

பரிசோதனை

"சில ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான், கொரியா நாடுகளுக்குச் சென்றிருந்தேன். அங்கு எண்டாஸ்கோபி ஸ்கிரீனிங் பரிசோதனை மூலம் 5 நோயாளிகளுக்கு இரைப்பையில் சிறு புண் இருப்பதைக் கண்டுபிடித்து அகற்றுவதைப் பார்த்தேன். ‘இது எப்படிச் சாத்தியம்?’ எனக் கேட்டபோது, 45 வயது நிரம்பிய அனைவருக்கும் அரசு சார்பில் கட்டாய எண்டாஸ்கோபி ஸ்கிரீனிங் பரிசோதனை அங்கே மேற்கொள்ளப்படுவது தெரிய வந்தது. ‘இதுபோன்ற பரிசோதனைகளை மேற்கொள்வது நோயை முன்கூட்டியே கண்டறிய உதவும்.

பொதுவாக நெஞ்சு எரிச்சல், உணவு விழுங்குவதில் சிரமம் போன்றவை ஏற்பட்ட பிறகே பலரும் பரிசோதனைக்குச் செல்கின்றனர். அப்போது எண்டாஸ்கோபி பரிசோதனை மேற்கொண்டால் இரைப்பையில் புண், அதாவது புற்றுநோய் இருப்பது தெரிய வரலாம். அது மோசமான மூன்றாவது நிலையில்கூட இருக்கலாம்.

மாஸ்டர் செக்-அப் செய்யும்போது இந்தப் பிரச்சினை தெரியவராது. இரைப்பை உள்ளிட்ட உடல் உறுப்புகளுக்கு வெளியே இருப்பது மட்டுமே அதில் தெரியவரும். இரைப்பைப் புற்று நோய் இருந்தால் எண்டாஸ்கோபி முறையில்தான் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்" என்கிறார் டாக்டர் ராஜன்.

பல்செட்டை முழுங்கியவருக்கும், கோழி எலும்பை விழுங்கி அவதிப்பட்டவருக்கும் என்டாஸ்கோபி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. உணவுக் குழாயில் முற்றிய புற்று நோய்க்கும் எண்டாஸ்கோபி மூலம் சிகிச்சை அளிக்கலாம். பித்தநாளக் கல் எண்டாஸ்கோபி மூலம் அகற்றப்படுகிறது. பாதிக்கப்பட்ட பித்தப்பை லாப்ராஸ்கோபி மூலம் அகற்றப்படுகிறது.

இலவச முகாம்கள்

எண்டாஸ்கோபி பரிசோதனை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாதத்துக்கு 2 முகாம்கள் என, இதுவரை 14 இலவச முகாம்களை நடத்தி 500 பேருக்கு இவர் பரிசோதனை செய்துள்ளார்.

இதில் ஒருவருக்கு உணவுக் குழாயில் புற்று நோய் இருப்பதையும் 2 பேருக்கு இரைப்பைப் புற்று நோயும், மற்றொருவருக்குச் சிறுகுடல் புற்று நோய் இருப்பதையும் கண்டறிந்து சிகிச்சை அளித்துள்ளார். மேலும் 15 பேருக்குப் புற்று நோய் முதல் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது.

“புகை பிடித்தல், மது அருந்துதல், குறித்த நேரத்தில் உணவு உட்கொள்ளாமை போன்ற காரணங்களால் 45 வயதைக் கடந்தவர்களுக்கு இரைப்பைப் புற்று நோய் வர வாய்ப்பு உண்டு. அதனால் 45 வயதுக்கு மேற்பட்டோர், இந்த பரிசோதனையை மேற்கொள்வது நல்லது” என்கிறார் டாக்டர் ராஜன். எண்டாஸ்கோபி ஸ்கிரீனிங் பரிசோதனை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 2 நடமாடும் வேன்கள் மூலம் இலவசப் பரிசோதனை முகாம்களை நடத்தவும் இவர் திட்டமிட்டுள்ளார்.

நன்றி

தி ஹிந்து

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 08, 2014 3:48 pm

கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு சிகிச்சை 103459460 கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு சிகிச்சை 1571444738



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 08, 2014 4:43 pm

நன்றி, நல்ல தகவல்...



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு சிகிச்சை W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக