புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிராஃபிக் ராமசாமி Poll_c10டிராஃபிக் ராமசாமி Poll_m10டிராஃபிக் ராமசாமி Poll_c10 
5 Posts - 71%
Manimegala
டிராஃபிக் ராமசாமி Poll_c10டிராஃபிக் ராமசாமி Poll_m10டிராஃபிக் ராமசாமி Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
டிராஃபிக் ராமசாமி Poll_c10டிராஃபிக் ராமசாமி Poll_m10டிராஃபிக் ராமசாமி Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டிராஃபிக் ராமசாமி Poll_c10டிராஃபிக் ராமசாமி Poll_m10டிராஃபிக் ராமசாமி Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
டிராஃபிக் ராமசாமி Poll_c10டிராஃபிக் ராமசாமி Poll_m10டிராஃபிக் ராமசாமி Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
டிராஃபிக் ராமசாமி Poll_c10டிராஃபிக் ராமசாமி Poll_m10டிராஃபிக் ராமசாமி Poll_c10 
11 Posts - 4%
prajai
டிராஃபிக் ராமசாமி Poll_c10டிராஃபிக் ராமசாமி Poll_m10டிராஃபிக் ராமசாமி Poll_c10 
9 Posts - 4%
Jenila
டிராஃபிக் ராமசாமி Poll_c10டிராஃபிக் ராமசாமி Poll_m10டிராஃபிக் ராமசாமி Poll_c10 
4 Posts - 2%
Rutu
டிராஃபிக் ராமசாமி Poll_c10டிராஃபிக் ராமசாமி Poll_m10டிராஃபிக் ராமசாமி Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
டிராஃபிக் ராமசாமி Poll_c10டிராஃபிக் ராமசாமி Poll_m10டிராஃபிக் ராமசாமி Poll_c10 
2 Posts - 1%
jairam
டிராஃபிக் ராமசாமி Poll_c10டிராஃபிக் ராமசாமி Poll_m10டிராஃபிக் ராமசாமி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
டிராஃபிக் ராமசாமி Poll_c10டிராஃபிக் ராமசாமி Poll_m10டிராஃபிக் ராமசாமி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
டிராஃபிக் ராமசாமி Poll_c10டிராஃபிக் ராமசாமி Poll_m10டிராஃபிக் ராமசாமி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிராஃபிக் ராமசாமி


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 20, 2015 12:33 am

டிராஃபிக் ராமசாமி Traffic%20ramasamy%20%20thth1949 ஆம் ஆண்டு. எனக்கு அப்போது வயது 14. நான் 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். அம்மா என்னை அரிசி எடுத்து வருவதற்காக சென்னையில் இருந்து காஞ்சிபுரம் அனுப்பி இருந்தார். நான் காஞ்சிபுரத் தில் இருந்து 10 கிலோ அரிசியை எடுத்துக் கொண்டு பஸ்ஸில் வந்தேன். அதற்கான அனுமதியையும் பெற்று இருந்தேன்.

அப்போதையக் காலத்தில் குறிப்பிட்ட எடைக்கு மேல் அரிசி மற்றும் நெல்லை அனுமதி இல்லாமல் வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப் பட்டிருந்தது. (அப்போது சென்னையில் இருந்து காஞ்சி புரத்துக்கு பஸ் கட்டணம் 1 ரூபாய் 25 காசுகள்)

சென்னையை நோக்கி வந்துகொண்டு இருந்தது பஸ். ஆற்காடு செக்போஸ்ட்டில் வந்தபோது பஸ்ஸை நிறுத்தி அவரவர் கைகளில் இருந்தப் பொருட்களை அதிகாரிகள் பரிசோதனை செய்துகொண்டு இருந்தனர். என்னைப் பரிசோதித்த ஓர் அதிகாரி என் மடியில் இருந்த அரிசிப் பையைப் பார்த்துவிட்டு, ‘பத்து கிலோ அரிசியைக் கொண்டு செல்ல அனுமதி வாங்கி இருக்கிறாயா?’ என்றார். நான் அனுமதி வாங்கிய விவரத்தைச் சொன்னேன்.

ஆனாலும், அந்த தாசில்தார் நான் கொண்டுவந்த அரிசிப் பையைப் பிடுங்கிக் கொண்டார். நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் அரிசிப் பையைக் கொடுக்கவில்லை. ‘எங்கள் வயலில் விளைந்த அரிசி இது. பத்து கிலோ எடுத்துச் செல்ல உரிய அனுமதி வாங்கி இருக்கிறேன். அப்படியும் நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்?’ எனக் குரலை உயர்த்தி நியாயம் கேட்டேன். அதில், அந்த தாசில்தாருக்கு கடுமையான கோபம் வந்துவிட்டது. ‘என்னிடமே நியாயம் பேசுகிறாயா? உன்னால் முடிந்ததைச் செய்துகொள். அரிசியைத் தர முடியாது. மீறிப் பேசினால் போலீஸுக்குத் தகவல் சொல்ல வேண்டி இருக்கும்!’ என மிரட்டி அனுப்பிவிட்டார்.

எங்கள் குடும்பத்தில் அப்போது 11 பிள்ளைகள். நான் கொண்டுபோகும் அரிசியில்தான் சாப்பாடு செய்ய வேண்டிய நிலை. சில நேரங்களில் அப்பா ஓவர் டியூட்டி பார்த்தாலும் பார்ப்பார். வெறும் கையோடு போனால் அம்மா என்ன செய்வாள்? பலவித வேதனைகளும் மனதைக் குழப்ப, அரிசிப் பையை இழந்துவிட்டு வீட்டுக்கு வந்தேன்.

தாசில்தார் அரிசிப் பையைப் பிடுங்கிக்கொண்ட விஷயத்தைச் சொன்னேன். சொல்லும்போதே எனக்கு அழுகை பொங்கியது. அப்போது வீட்டுக்கு வந்த என் தந்தை, ‘சரி, விடு. அதிகாரிகள் ஏதோ தவறான அரிசின்னு நினைச்சுப் பிடிச்சிருப்பாங்க. அதை விட்டுத்தள்ளு. நான் கடைக்குப்போய் அரிசி வாங்கி வருகிறேன்’ என எனக்கு ஆறுதல் சொல்லிக் கிளம்பிவிட்டார்.

ஆனால், என்னால் என்னை சமாதானம் செய்துகொள்ள முடியவில்லை. ‘ஏதோ ஓரளவுக்கு சமாளித்துக் கொள்ளும் குடும்பம் என்பதால் சிக்கல் இல்லாமல் போய்விட்டது. இதேபோல் ஒரு அன்றாடங்காய்ச்சியின் குடும்பத்துக்கு நேர்ந்து இருந்தால் என்னாகி இருக்கும்?’ என்கிற எண்ணம் அன்று முழுக்க என்னைத் தூங்கவிடவில்லை. தவறாக நடந்துகொள்வது எத்தகையக் கண்டனத்துக்கு உரியதோ... அதேபோல்தான் தவறைத் தட்டிக் கேட்காமல் அலட்சியம் காட்டுவதும். அந்த ஆவேசம் எனக்குள் அடங்காதத் தீயாகத் தகிக்கத் தொடங்கியது.

‘ஒரு தனி நபர் ஓர் ஊரிலிருந்து அடுத்த ஊருக்கு எத்தனை கிலோ அரிசியை எடுத்துச் செல்லலாம்? அதற்கு யாரிடம் அனுமதி பெற வேண்டும்?’ என்கிற விவரங்களை எல்லாம் மறுபடியும் படித்துப் பார்த்து தெரிந்துகொண்டேன். சட்டப்படி நான் 10 கிலோ அரிசியைக் கொண்டு வந்ததில் எந்தத் தவறும் இல்லை என்கிற நிறைவு எனக்கு நிம்மதியைக் கொடுத்தது. நியாயமாக நடந்தும் அரிசியைப் பறித்துக்கொண்ட அந்த தாசில்தாரை நிச்சயம் சும்மா விடக்கூடாது என்கிற ஆவேசமும் எனக்குள் அடங்கிவிடவில்லை.

‘எப்போதடா விடியும்?’ எனப் புரண்டு புரண்டுப் படுத்தேன். காலையில் எழுந்த உடன் தபால் ஆபீஸுக்குப் போனேன். மூன்று பைசாவுக்கு ஒரு போஸ்ட் கார்ட் வாங்கினேன். எனக்கு நடந்த அநீதியை அப்படியே எழுதி அப்போதையக் காஞ்சிபுரம் கலெக்டருக்கு அனுப்பினேன். ‘நிச்சயம் எனக்கான நியாயம் கிடைக்கும்’ என்கிற நம்பிக்கையோடு பள்ளிக்கூடம் சென்று விட்டேன்.

நான்கு நாட்கள் கழித்து, ஆற்காடு சிக்னலில் என் அரிசியைப் பிடுங்கி வைத்துக்கொண்ட அதே தாசில்தார் எங்கள் வீட்டுக்கு முன், கையில் அரிசிப் பையோடு நின்றுகொண்டு இருந்தார். நான் அவரை பார்க்காதது போல் வீட்டுக்குள் சென்றுவிட்டேன். ‘தம்பி... தம்பி...’ என்றபடியே பதறிய அவர், மாவட்ட ஆட்சியர் தன்னை சஸ்பெண்ட் செய்துவிட்டதாகக் கூறினார்.

‘‘உங்களோட அரிசிப்பை ஒரு அரிசிகூடக் குறையாமல் இதோ இருக்கு. நடந்தது தவறுதான். என்னைவிட எத்தனையோ வயசு சின்னப் பையனான உங்ககிட்ட மனசு வருந்தி மன்னிப்புக் கேட்டுக்கிறேன்’’ என்றார் கண்ணீரோடு.

அரிசிப் பையை என்னிடம் கொடுத்து, ‘‘நடந்த சம்பவத்தை மறந்து என்னை மன்னிச்சிட்டதா நீங்க ஒரு கடிதம் கொடுத்தாத்தான் மறுபடியும் நான் தாசில்தார் உத்தியோகம் பார்க்க முடியும். தயவு பண்ணி என்னை மன்னிச்சிட்டதா ஒரு கடிதம் எழுதிக் கொடுங்க தம்பி’’ என அவர் இரு கைகளையும் உயர்த்திக் கும்பிட்டபடி சொல்ல... எனக்கே ஒரு மாதிரியாகிவிட்டது.

இது என் நியாயத்துக்கான வெற்றி என சத்தம் போட்டுக் கத்த வேண்டும்போல் இருந்தது.

வயதில் சிறுவனாக இருந்தாலும், எனக்கு நடந்த அநீதியை யாருடைய துணையும் இல்லாமல் என்னால் தட்டிக் கேட்க முடியும். அதற்கான நியாயத்தைப் பெற முடியும் என்கிற துணிச்சல் எனக்குள் முதல் முறையாகப் பூத்தது. யாரையும் அழவைத்து ரசிக்கும் குரூரம் எனக்கு ஒருபோதும் இருந்தது இல்லை. அதனால், ‘நடந்த தவறை தாசில்தார் ஒப்புக்கொண்டார். என் அரிசிப் பையையும் முறைப்படி திருப்பிக் கொடுத்தார். இனி இதுபோல் அவர் யாரிடமும் நடந்துகொள்ள மாட்டார் என நம்புகிறேன். திருந்திய மனநிலையில் இருக்கும் இவரை சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருந்து விடுவித்து உரிய பணியில் அமர வைக்கலாம்!’ எனக் கடிதம் எழுதிக் கொடுத்து அனுப்பினேன்.



டிராஃபிக் ராமசாமி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 20, 2015 12:33 am

டிராஃபிக் ராமசாமி Traffic%20ramasamy
அறிந்தோ அறியாமலோ தவறு நிகழ்ந்துவிடுகிறது. அதன் பாதிப்பு அறிந்து ஒருவர் மன்னிப்புக் கேட்கும்போது, தவறைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பாக அவரை மன்னிப்பதில் தவறே இல்லை.

மன்னிப்புதான் மனிதகுலத்தின் மைய விளக்கு. அது தரும் சுடரில்தான் இந்தப் பூமிப் பந்து சுற்றுகிறது. தவறு செய்தவர்களைத் திருந்தச் செய்வது மட்டுமே நம் கடமை.

14 வயதில் ஒரு தாசில்தாரையே சஸ்பெண்ட் ஆக வைத்திருக்கிறேன் என்றால், நியாயத்தின் அடிப்படை யில் என்னால் எதையும் தைரியமாகச் செய்ய முடியும் என்கிற நம்பிக்கை அப்போதுதான் பிறந்தது. மனதுக் குள் புது வெள்ளம் பாய்ந்ததுபோல் ஓர் உற்சாகம். ஒரு சிறு எறும்பு யானையின் காதுக்குள் புகுந்து யானையைக் குப்புற சாய்த்தது போன்ற நிறைவு.

மூன்று பைசா போஸ்ட் கார்டில் எழுதப்பட்ட விஷயத்தை அக்கறையோடு படித்து, உரியபடி விசாரித்து, தவறு செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுத்த அந்தக் கலெக்டர்தான் ‘அநியாயமாக நடக்கும் எதையும் தட்டிக் கேட்கலாம்’ என்கிற துணிச்சலை எனக்குள் வார்த்தவர்.

இன்றைக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மீது வழக்குப்போட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்புகிறேன் என்றால்... அதற்கான தைரியம் அந்த 14 வயதில் உருவானது.



டிராஃபிக் ராமசாமி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 20, 2015 12:40 am

போலீஸ் போட்ட பொய் வழக்கு

டிராஃபிக் ராமசாமி Traffic%20ram%20500%201

பாரிஸின் முகப்பில் குறளகம் உள்ளது. இந்த நகரத்திலேயே வாழ்பவர்கள், நகரத்துக்குப் புதிதாக வருபவர்கள், பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள், கல்லூரி செல்லும் மாணவர்கள், உயர் நீதிமன்றம் செல்லும் வழக்கறிஞர்கள், பஸ் ஏறச் செல்லும் பெண்கள்... இப்படி ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் குறளகத்தின் வாசலைத்தான் கடந்து செல்ல வேண்டும்.

இப்படி நகரத்தின் தலைவாசலான ஓர் இடத்தில் விபசாரம் கன ஜோராக நடந்து கொண்டு இருந்தது அப்போது. குறளகத்தின் உள்ளே நான்கு ஐந்து பெண்கள் இருப்பார்கள். வெளியே இரண்டு ஆண்கள் நின்றுகொண்டு இருப்பார்கள்.

அந்த ஆண்கள்தான் விலைமகன்களை விலைபேசி அழைத்து வருவார்கள். பகல் பொழுதுகளிலேயே பாலியல் தொழில் எந்தப் பயமும் இன்றி இந்த நகரத்துக்கு இணையான பரபரப்புடன் நடந்துகொண்டிருக்கும்.

குறளகத்தில் விபசாரம் நடக்கிறது என்பது இதைக் கடந்துசெல்லும் வக்கீல்கள், நீதிபதிகள், பொதுமக்கள், போலீஸ் என எல்லோருக்கும் தெரியும். யாருமே வாய் திறக்கவில்லை. போலீஸின் துணையோடுதான் இந்த அசிங்கம் அரங்கேறிக் கொண்டிருந்தது. நாம் ஏதாவது சொன்னால் பொய் கேஸில் போலீஸ் உள்ளே போட்டுவிடுவார்கள் என்று எல்லோருக்கும் பயம்.

ஒரு சமூகத்தில் அசிங்கமென அங்கீகரிக்கப்பட்டச் செயல், அந்த மக்களுடைய தலைநகரின் மையத்திலே நடப்பது அந்தச் சமூகத்தையே அசிங்கப்படுத்துவதாகவே எனக்குத் தோன்றியது. ஓர் அசிங்கத்தைச் செய் பவனும் அதைப் பார்த்துக்கொண்டு செல்பவனும் ஒரே மாதிரியான ஆட்கள்தான். அவர்களுக்குள் எந்த வித்தியாசமும் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த அசிங்கத்தை வேரோடு சாய்க்க நினைத்தேன்.

குறளகத்தில் நடக்கும் கூத்துகளைப் பத்திரிகைகளின் பார்வைக்குக் கொண்டு சென்றேன். என்னுடைய போராட்டத்தால் ‘குறளகத்தில் காமத்துப்பால்’ என்ற தலைப்பில் ஒரு புலனாய்வுப் பத்திரிகையில் செய்தி வந்தது. இதன் பின்னணியில் நான்தான் இருக்கிறேன் என்று போலீஸுக்குத் தெரியும். சாம்பலுக்குள் பதுங்கி இருந்த நெருப்புபோல ஒட்டுமொத்த போலீஸும் என்னைப் பார்த்துக்கொண்டு இருந்தது.

பூக்கடை இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் என்னைக் கொலை வெறியோடு தேட ஆரம்பித்தார். ‘420’ கேஸில் என்னைக் கைது செய்தார்கள். அரசாங்கத்தில் வேலை வாங்கித் தருவதாக 2,000 ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு ஒருவரை ஏமாற்றிவிட்டதாகப் பொய்வழக்குப் போட்டார்கள். பசியோடு இருந்த சிங்கத்தின் வாயில் சிக்கிய ஆட்டுக்குட்டிபோல் மாட்டிக் கொண்டேன்.

அப்போது புறநகர் பேருந்து நிலையம் பாரீஸில்தான் இருந்தது. பஸ் ஸ்டாண்டைச் சுற்றி என்னை அடித்து இழுத்துக்கொண்டு போனார் வடக்கு கடற்கரை காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம். என் கைகள் இரண்டையும் கட்டி, விலங்குமாட்டி ஜட்டியுடன் விட்டு அடித்தார். பஸ் ஸ்டாண்டில் நின்ற எல்லோரும் என்னையே வேடிக்கை பார்த்தார்கள். ‘‘இன்னும் உன்னை என்ன செய்கிறேன் பார்றா...’’ என்றார் தர்மலிங்கம். ‘உன்னால இதான்டா செய்ய முடியும். வெளியே வந்து உன்னை நான் என்ன செய்றேன் பார்...’ என்றேன் கோபத்தோடு.



டிராஃபிக் ராமசாமி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 20, 2015 12:40 am

டிராஃபிக் ராமசாமி Traffic%20ram%20250%20right%202ஆத்திரம் அடங்காமல் லத்தியால் ஓங்கிப் பின்புறத்தில் அடித்தார். ‘இந்த அடியோடு இவன் இறந்துவிட மாட்டானா?’ என்கிற அளவுக்கான ஆவேசம். போட்டிருந்த என் பனியனை இழுத்துக் கிழித்தார்... பனியன் கிழிந்து தொங்கியது. எல்லோருடையப் பார்வையிலும் நான் திருடனாகத் தெரிந்தேன்...

ஆனால், என் பார்வையில் எல்லோரும் தவறுகளை தட்டிக் கேட் கத் துணிவில்லாதவர்களாக,கேடுகளைப் பார்த்து கேள்விக் கேட் காதவர்களாக, அவலங்களைப் பார்த்து ஆவேசம் கொள்ளாதவர் களாக, தனக்கு வீரம் இல்லையே என நினைத்து வெட்கப்படா தவர்களாகத் தெரிந்தார்கள். அதனால், தலை நிமிர்ந்தபடியே, ‘ஏய்! மீனாட்சி சுந்தரம் உன்னை ஒரு நாள் தலைகுனிந்தபடி நடக்கச் செய்தே தீருவேன்’ என்று உரக்கச் சொன்னபடி நடந்தேன்.

துகில் உரிப்புக்கு நிகரானத் துன்பச் செயல் ஏதும் நம் சமூகத்தில் இருக்கிறதா? துகில் உரிப்பில் துவங்கியதுதானே பாரதப் போர். பாஞ்சாலிக்கு அன்று கண்ணன் இருந்து காப்பாற்றினான். ஆனால், எனக்கு யாரும் இல்லை. ஆடை இழந்து அவமானம் அடைந்து நினைக்கையில் பாஞ்சாலி போல் மனம் பதறுகிறது. ஆடையை அவிழ்த்த கணத்தில் பாஞ்சாலி எப்படிக் கதறியிருப்பாள்; பதறியிருப்பாள்; துடித்து இருப்பாள்; கூனிக் குறுகிக் கொந்தளித்திருப்பாள்... பாஞ்சாலியின் பதட்டத்தை ஓர் ஆண் மகனாக நான் அறிந்தழுத தருணம் அது.

ஆடை அவிழ்ப்புதானே அநாகரிகத்தின் ஆரம்பம். உள்ளாடையோடு ஊர் சுற்றி அசிங்கப்பட்டதை, நாம் ஆண்தானே என்று எண்ணி, புறந்தள்ள முடியவில்லை. புறமுதுகுக் காயம்போல் அந்த நிகழ்வு என்னுள் புகைந்துகொண்டு இருந்தது. என் மனைவி, என் மகள், என் உறவினர் கள் என? என்னைச் சுற்றியிருந்த அனைவருக்கும் இந்தச் சம்பவம் அசிங்கமாகவும், அவமானமாகவும் இருந்தது. என் மனைவி கோபத்தில் திட்டினாள்.

என் மகள், ‘இதெல்லாம் நமக்குத் தேவையாப்பா... ஏம்ப்பா... நீங்களும் கஷ்டப்பட்டு எங்களையும் கஷ்டப் படுத்துறீங்க... விட்டுருங்கப்பா’ என மனம் உருகி மன்றாடினாள். என் உறவினர்கள் துஷ்டனைக் காண்பது போல் தூர ஒதுங்கினார்கள். ஆனால், என் மனசாட்சிக்கு முன் நான் குற்றம் அற்றவனாகத் தலைநிமிர்ந்து நிற்கிறேன்.



டிராஃபிக் ராமசாமி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 20, 2015 12:41 am

டிராஃபிக் ராமசாமி Traffic%20ram%20250%20righttttttttttttttttttஎன் மனசாட்சி என்னை எதுவும் கேள்வி கேட்கவில்லை. தூர நின்று எச்சிலைக் காறி என்மீது துப்பவில்லை. என்னைப் பார்த்து கைகொட்டி சிரிக்கவில்லை. என்னைக் கயவன் என்று கைகாட்டவில்லை. பிறகு, எதற்காக நான் பின்வாங்க வேண்டும்? இனி கயவர்களின் பிடரியைப் பிடித்து உலுக்க வேண்டியதுதானே என் வேலை என்பதில் உறுதியாக இருந்தேன்.

இப்படி, எத்தனை எத்தனைப் பேரை அடித்துத் துவைத்து இருப்பார்கள். ஆடை களைந்து அசிங்கப்படுத்தி இருப்பார்கள். தங்களின் சுய லாபத்துக்காக எத்தனைப் பேரை சூறையாடி இருப்பார்கள். குற்றம் செய்த வனைக் கூண்டில்தானே ஏற்றச் சொல்கிறது சட்டம். உதை கொடுத்து ஊர்வலம் வர எந்தச் சட்டமும் சொல்லவில்லையே... ஆயிரம் குற்றவாளிகளை மன்னிக்கச் சொல்லும் சட்டம், ஒரு நிரபராதியைக்கூட தண்டிக்கக் கூடாது என்கிறது. ஆனால், நமது போலீஸ் 1,000 குற்றவாளிகளை உருவாக்குபவர்களாகவும், ஒரு நிரபராதியைக் கொடூரமாகத் தண்டிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி, காவல் நிலையத்தில் அவர்கள் செய்யும் காட்டு மிராண்டித்தனத் தையும், அறைகளுக்குள் அவர்கள் நிகழ்த்தும் அராஜகங் களையும் வெளிச்சம் போட்டுக் காட்டவும், சட்டத்தால் சாட்டை அடி கொடுக்கவும் முடிவு செய்து மீனாட்சி சுந்தரம் உட்பட 24 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்தேன்.

ஆயிரம் பிச்சைக்காரர்களையாவது திருடன்களாக மாற்றி இருக்கிறது போலீஸ். ஆனால், ஒரு திருடனைக் கூட யோக்கியவானாக மாற்றியதில்லை. ஏதாவது அப்பாவித் திருடன் சிக்கினால் அவனை அடித்து உதைத்து அவன்மேல் கேஸ்மேல் கேஸ் போடுகிறது. அடி உதைக்குப் பயந்து அவனும் ஒப்புக்கொண்டால், இருக்கிற கேஸை எல்லாம் அவன்மீது திணிக்கிறது.

இப்படி கோர்ட், ஜெயில் என்று அலைந்து தெரிந்துகொண்டு, சூழ்நிலைக்குத் திருடிய சின்ன திருடன், கொஞ் சம் கொஞ்சமாக வளர்ந்து பெரிய ரவுடியாக வந்து நிற்பான். அந்த ரவுடிகளிடம் கைகட்டி, வாய்பொத்தி போலீஸ் சேவகம் செய்யும். ரவுடிகளை உருவாக்குவதே போலீஸ்தான். போலீஸின் அடிதடிக்குப் பயப்ப டாமல் எதிர்த்து நின்றதால்தான் 8 கேஸோடு விட்டுவிட்டார்கள். இல்லையென்றால் என் மீது 50 கேஸா வது போட்டு ஆயுள்தண்டனைக் கைதியாக்கி இருப்பார்கள்.



டிராஃபிக் ராமசாமி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 20, 2015 12:42 am

டிராஃபிக் ராமசாமி Traffic%20ram%20500%202
உடல் எலும்புகளில் ஒன்றிரண்டை ஒடித்து நிரந்தர ஊனமாக்கிப் பிச்சை எடுக்க வைத்திருப்பார்கள். நிஜத் திருடனாக மாற்றி, வயிற்று வலி பொறுக்க முடியாமல் தூக்கில் தொங்கியவர்களின் லிஸ்டில் என்னையும் சேர்த்திருப்பார்கள். போலீஸிடம் எலும்பை உடைக்கும் லத்தி இருந்தது. அவர்களின் மண்டையில் குட்டும் நீதி தேவதையின் சுத்தி என்னிடம் இருந்தது. என்னைத் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு துன்புறுத்தும் தைரியம் அவர்களிடத்தில் இருந்தது. நீதியின் முன்னால் அவர்களை மண்டியிடச் செய்யும் மன உறுதி என்னிடத்தில் இருந்தது. என்னைத் தெருவில் உள்ளாடையோடு அடித்து இழுத்து அசிங்கப்படுத்தும் ஆணவம் அவர்களிடத்தில் இருந்தது. அவர்களை ஆடையோடு இருக்கும்போது அதற்கு நிகரான அசிங்கத்தை ஏற்படுத்தும் ஆண்மை என்னிடத்தில் இருந்தது.

போலீஸைக் கண்டு பயந்து ஓடாமல், ஒதுங்கி மறையாமல், எதிர்த்து நேருக்கு நேர் நின்று உரக்கக் கத்தியதால்தான் என்னை அடித்து துன்புறுத்திய அதே போலீஸை எனக்குப் பாதுகாப்புக்காக பிஸ்டலுடன் என் பின்னால் வரவைக்க முடிந்தது. ‘காலம் திரும்புகிறது’ என்பார்களே... அதுபோல் ‘காவல் திரும்பிய கதை’ இது.

உடலை விற்றுச் சம்பாதிப்பவளிடம் பங்கு கேட்பவர்கள் எவ்வளவு பெரிய பயங்கரவாதிகளாக இருப்பார்கள். கூறு கட்டிய காய்கறிகளைக் ‘கூறு அஞ்சு ரூபாய்’ எனக் கூவிக் கூவி விற்பவளிடம் 50 ரூபாயைப் பறித்துக்கொண்டு போகிறவன் எவ்வளவு பெரிய அயோக்கியனாக இருப்பான். அயோக்கியர்களையும் பயங்கர வாதிகளையும் வளரவிடுவதும் பாவம்தானே! 1987 லிருந்து 1992 வரை சட்டப் போராட்டம் நடத்தினேன்.

மாவட்ட கலெக்டரும், ஹோம் செகரட்டரியும் நேரடியாக என்னை விசாரணை செய்தார்கள். வக்கீல் சந்திரசேகரன் எனக்காக வாதாடினார். இவர் தற்போது 7 வது சிவில் கோர்ட்டில் ஜட்ஜாக இருக்கிறார். இந்த இடைப்பட்ட காலங்களில் எனக்கு எதிராக சாட்சி சொன்ன எம்.கே.பி.சுல்தான் இறந்துவிட்டார். எனக்கு ஆதரவாக என் நண்பர் ஷேக் முகமது சாட்சி சொன்னார். இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் பதவி உயர்வு பெற்று ஏ.சி யாக நன்னிலத்துக்குப் போய்விட்டார்.

நான் எப்போதும் நீதிமன்றங்களுக்கு இணையாகத் தெய்வங்களையும் வணங்குபவன். ‘அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்’ என்று நம் முன்னோர்கள் சும்மா சொல்லவில்லை. அனுபவித்து உணர்ந்துதான் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், நம் நாட்டில் தெய்வங்கள்போல நீதிமன்றமும் கொஞ்சம் லேட்டாகத்தான் கண் திறக்கும். 1992-ல் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்குக்கானத் தீர்ப்பை அறிவித்தார்கள்.

வழக்கைத் தொடுத்தவர் என்ற முறையில் விசாரணை அதிகாரியாக தர்மலிங்கம் நீதிமன்றத்துக்கு காலை யிலேயே வந்திருந்தார். மாலை 4 மணிக்கு நீதிபதி தீர்ப்பை வாசித்தார். போலீஸின் அராஜகத்தை நீதிபதி கடுமையாகக் கண்டித்ததோடு, எனக்கு எதிரான பொய் வழக்கையும் தள்ளுபடி செய்தார். தீர்ப்பைக் கேட்டு விட்டு கோர்ட் படிகளில் இறங்கிய தர்மலிங்கம், அந்த இடத்திலேயே விழுந்து இறந்துவிட்டார். கோர்ட்டே கூடிவிட்டது. எனக்கு பேரதிர்ச்சி.

இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர் வீட்டில் மேலும் இரண்டு பேர் வெவ்வேறு காரணங்களால் தற்கொலை செய்துகொண்டு இறந்து போய்விட்டனர். அவருக்குப் பின் அந்தக் குடும்பமே நலிந்து போனது. அவரின் இறப்பை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தனிமனித இறப்பையும் இழப்பையும் தடுப்பதற்காகத்தானே எனது போராட்டமும் பயணமும்!



டிராஃபிக் ராமசாமி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 20, 2015 12:44 am

பேரரசர் கலைஞர்... பேரரசி ஜெயலலிதா

டிராஃபிக் ராமசாமி Karuna%20200(1)டிராஃபிக் ராமசாமி Jaya01

கலைஞரின் கடந்த ஆட்சியில் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை அவர் மாற்றினார். அதாவது, சித்திரை ஒன்றாக இருந்த தமிழ்ப் புத்தாண்டை தை ஒன்றாக மாற்றினார். அடையாளங்கள் அற்ற தமிழ் இனத்தை, தன் தலைவன் அடையாளப் படுத்திவிட்டதாக தி.மு.க. தொண்டர்கள் பெரும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். பட்டி தொட்டிகளில் இருந்த கவிஞர்கள் எல்லாம் சென்னைக்கு வந்து, தங்களுக்கு புத்தாண்டைக் கண்டுபிடித்துக் கொடுத்த கலைஞரைப் புகழ்ந்து பேசுவதில் போட்டா போட்டியில் ஈடுபட்டனர்.

அப்படியென்றால், இத்தனைக் காலம் நம் அப்பனும் தாத்தனும் கொண்டாடிக்கொண்டு இருந்த புத்தாண்டு, போலியான தினமா? அந்தத் தினம் பொருள் அற்ற தினமா? இதற்கு முன்பும் கலைஞர் பல முறை தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்திருக்கிறார். அப்போதெல்லாம், புத்தாண்டை மாற்ற வேண்டும் என்று ஏன் அவர் புத்திக்கு உதிக்கவில்லை? இப்போது ஏன் மாற்ற வேண்டும்? தற்சமயம் அதற்கான அவசியம் என்ன? இப்படியான ஆயிரம் கேள்விகள் தமிழ் மக்களிடம் உள்ளன.

‘சித்திரை வந்தால் நித்திரை போகும்!’ என்பார்கள் எங்கள் கிராமத்தில். பகல் பொழுதில் வெயில், விறகு அடுப்புபோல எல்லோரையும் வாட்டும். இரவு பொழுதில் நிலவு. ஊரே பாலில் நனைத்து எடுத்ததுபோல பளபளப்பாக இருக்கும். அந்த நிலா பொழுதில் சிறுவர்கள் ஒளிந்து விளையாடுவார்கள். பகல் பொழுதில் பெருசுகள் எல்லாம் மரத்தடிகளில் உட்கார்ந்து பஞ்சாயத்து பண்ணிக்கொண்டும், பஞ்சாங்கத்தைப் பார்த்துக்கொண்டும், பால்யத்தைப் பற்றி பேசிக்கொண்டும் இருப்பார்கள். அந்த வருடத்துக்கான பருவநிலை கணித்து, வெள்ளாமை விளைச்சல் எல்லாம் எப்படியிருக்கும் என்று விவசாயப் பெருமக்களிடம் பேசிக்கொண்டு இருப்பார்கள் பண்டிதர்கள். பெண்கள் தாயமும், பல்லாங்குழியும், பாண்டியும் விளையாடி பொழுதுகளை இனிமையாகக் கழிப்பார்கள்.

இந்த நாளுக்காக காத்திருந்தவர்கள்போல சித்திரை முதல் நாளில் விவசாயப் பெருமக்கள் தங்களின் மாடுகளைக் குளிப்பாட்டி, ஏர் கலப்பை, மண்வெட்டி போன்ற விவசாயச் சாதனங்களைச் சுத்தம் செய்வார்கள். ஊரே ஓரிடத்தில் கூடும். விவசாயிகள் தங்களின் மாடுகளைக் கலப்பையில் பூட்டி, நிலத்தை உழுது, விதைகளைத் தூவி வெள்ளோட்டம் பார்ப்பார்கள். தங்களின் உபகரணங்கள் நன்றாக இருக்கிறதா? தங்களின் விதைப் பண்டங்கள் வீரியமுடன் இருக்கிறதா? என ஒத்திகை பார்ப்பார்கள். மண்ணையும், மாடுகளையும், விதைகளையும், கலப்பையையும் கடவுளாக வணங்கும் இந்தத் திருவிழாவை, ‘நல்லேர் கட்டுதல்’ என ஊரே கொண்டாடும்.

விவசாயிகள் தங்கள் பிள்ளைகளுக்கு ஏர் பிடிக்கக் கற்றுக் கொடுத்து, இன்பம் காணும் வைபவங்கள் நடைபெறும். இப்படி இந்த நாளை, கொண்டாட்டமாக மட்டும் இல்லாமல், தங்களின் குலத்தொழிலைத் தங்களின் சந்ததிகளுக்கு கைமாற்றும் விழாவாகக் கொண்டாடுவார்கள்.

பார்க்கும் வேலையில் லாபம்-நட்டம் பார்க்கக்கூடாது என்ற நல்லறிவையும், மகனையும் மண்ணையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கச் செய்யும் பக்குவத்தையும், பிறர் வாட பாவச்செயல் செய்யக்கூடாது என்ற வாழ்வியல் சூத்திரத்தையும், காளியம்மனும் மாரியம்மனும் நம் மண்ணின் மாற்று உருவங்கள் என்ற மகத்துவத்தையும் சொன்னது சித்திரைப் பெருநாள்தான். இப்படி என்னைப் போன்ற தமிழ் மக்களின் வாழ்வில் ஒன்றாக இருந்த தமிழ்ப் புத்தாண்டை திடீரென மாற்றினால் எப்படி இருக்கும்..? இந்தத் திடீர் மாற்றத்தை என்னால் ஜீரணித்துகொள்ள முடியவில்லை.



டிராஃபிக் ராமசாமி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 20, 2015 12:48 am

டிராஃபிக் ராமசாமி Trafic%20ramasamy02


தமிழ்ப் புத்தாண்டு மாற்றத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டேன். ‘இந்த வழக்கு வெறும் பிரபலத்துக்குப் போடப்பட்டதாகத் தெரிகிறது. இனம் சார்ந்த விழா நாட்களை மாற்றும் உரிமை அரசுக்கு இருக்கிறது. மேலும், இதுபோன்ற வழக்குகளைத் தொடராமல் இருப்பதற்காக மனுதாரருக்கு 10,000/- ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது’ என்று தீர்ப்பு கூறினார்கள்.

நான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தேன். தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வேலை பார்த்தபோதே அவருக்கு என்னை நன்றாகத் தெரியும். என்னுடைய வாதங்களையும், எதிர்த்தரப்பு அரசாங்கத்தின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, எனக்கு விதிக்கப்பட்ட 10,000 ரூபாய் அபராதத்தை ரத்து செய்ததோடு, இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம், கலாசாரப் பின்னணியில் மீண்டும் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார். காலம் ஓடியது. ஆட்சி மாறியது. ஜெயலலிதா மீண்டும் சித்திரை முதல் தேதியைப் புத்தாண்டாக மாற்றினார்.

தமிழ்ப் புத்தாண்டை மட்டும் அல்ல; கலைஞர் கொண்டுவந்த அனைத்துத் திட்டங்களையும் ஜெயலலிதா மாற்றினார். சமச்சீர் கல்வி சரியில்லை என்று மாணவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தினார். கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை மாற்றினார். புதியதாகக் கட்டப்பட்ட சட்டமன்றத்தை மாற்றினார். நூலகத்தை மாற்ற முயல்கிறார். நாம் நடத்துகிற ஆட்சியில் 5 ஆண்டுகளுக்கு மேல் நம்மை வைக்கமாட்டார்கள் என்பதும், ஆட்சி மாறினால் தன் பெயர் தாங்கிய அனைத்து காட்சிகளையும் ஜெயலலிதா மாற்றுவார் என்பதும் கலைஞருக்கு நன்றாகத் தெரியும். அப்படி மாற்றும்போதுதானே மக்கள் அவதிப்படுவார்கள். அவர்களுக்குத் தொல்லைகள் வரும். அப்போதுதானே மக்களின் பார்வை நம் மீது திரும்பும். நாம் செய்தது சரி என்று நம்புவார்கள். நம்மைப் பற்றி நல்ல எண்ணங்களும் அபிப்பிராயங்களும் மக்கள் மனதில் தோன்றும் என்கிற ‘அரசியல் லாப’ ஆசைதான் இதுமாதிரி கேடுகளை விளைவிக்கிறது.

அதேபோல கண்ணகி சிலையை தான் அகற்றினால், கலைஞர் மீண்டும் அதே இடத்தில் சிலை வைப்பார் என்று ஜெயலலிதாவுக்கும் தெரியும். ஆனாலும், இந்தப் பொருள் அற்ற மாற்றத்தைச் செய்துகொண்டே இருப்பார்கள் இருவரும். அதிகம் படித்த மக்களும், அறிவார்ந்த மக்களும் அதிகம் வாழும் தமிழ்நாட்டில், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரங்கேற்றும் இந்த அசிங்கங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

எங்கெங்கு காணினும் என் முகத்தையும், என் சாதனைகளையும் பாருங்கள் என, கலைஞரும் ஜெயலலிதாவும் செய்யும் சுயப் பிரசாரங்கள்தான் இந்த நாட்டையே குட்டிச்சுவராக்குகின்றன. இந்திய ஜனநாயக நாட்டில், தான் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்பதை மறந்து, தான் பேரரசர் என்ற நினைப்பு கலைஞருக்கு. அதேபோல் தான் ஒரு பேரரசி என்ற நினைப்பு ஜெயலலிதாவுக்கு.

பொதுவாகவே, கலைத் துறையைச் சார்ந்தவர்களுக்குப் பிறர் பாராட்டுக்கு ஏங்கும் குணம் இருக்கும். சின்னச் சின்ன பாராட்டுகளுக்காக ஏங்கித் தவிப்பார்கள். கைதட்டும் ஓசையைக் கேட்கக் காத்து நிற்பார்கள். போஸ்டர் மூலம், கைதட்டுகள் மூலம், வாழ்க கோஷங்கள் மூலம் ஒவ்வொரு நாளும் மக்களிடம் போய்ச் சேர விரும்புவார்கள். யாராவது புகழ்ந்தால் போதும், பெரிய பூமாலைத் தங்களின் தோள்களை அலங்கரித்துவிட்டதைப்போல ஆனந்தக் கூத்தாடுவார்கள். எந்தக் காட்சிக்கு பார்வையாளன் சிரிப்பான், எந்தக் காட்சிக்கு ரசிகன் அழுது ஆர்ப்பரிப்பான் என்று கலைஞர்களுக்கு நன்றாகத் தெரியும் அல்லவா!

கலைஞர்கள், ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்பார்கள். கேலியும் கிண்டலும் செய்து அவர்களின் முகத்திரையைக் கிழிப்பார்கள். சாப்ளின் தன் கேலி, கிண்டல்களால் சர்வ வல்லமை பொருந்திய ஹிட்லரையே உலகின் தலைசிறந்தக் கோமாளியாகக் காட்டினார். எம்.ஆர்.ராதாவும் என்.எஸ்.கே-யும் தங்களின் நடிப்பு மூலம் சமூகத்தையும் ஆட்சியாளர்களையும் தலையில்குட்டினார்கள். அண்ணாவும் கலைஞரும் தங்களின் வசனங்கள் மூலம் இந்தச் சமூகத்தைச் சாடியவர்கள்தான். இவர்கள் ஆட்சியாளர்களாக மாறியதுகூட மக்கள் நலன்சார்ந்த எழுத்தாலும் பேச்சாலும்தான். ‘ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி’ என்கிற வாக்குறுதியில் விழத்தொடங்கிய மக்கள், இன்றைக்கு இலவச தொலைக்காட்சிக்கும் இலவச குக்கருக்கும் ஏங்கிக் கிடக்கிறார்கள். ஆடு, மாடுகளுக்காக கால்நடைகளைவிடக் கேவலமாக அலைந்து திரிகிறார்கள். மக்களின் இந்த அவலத்தையே தங்களின் சாதனைகளாக்கி நகரத்தில் விளம்பர போர்டுகளாக்கும் இன்றைய அரசியல் தலைவர்களை என்னவென்று சொல்வது?

இவர்களை கேள்விக் கேட்பதற்கு ஆளில்லை. இங்கு நடக்கும் கேடுகளைப் பார்த்துக் கிளர்ந்து எழ யாருக்கும் துணிவில்லை. எல்லோருக்கும் குடும்பம் இருக்கிறது என்கிற குருட்டு பயம். அதனால்தான் எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்ப்பவர்களாகவும், விலகிப் போகிறவர்களாகவும் நாம் மாறிவிட்டோம்.

டிராஃபிக் ராமசாமி எழுதிய விகடன் பிரசுரத்தின் ‘ஒன் மேன் ஆர்மி’ நூலில் இருந்து...




டிராஃபிக் ராமசாமி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Mar 20, 2015 9:21 pm

இந்தியன் படம் பார்ப்பது போல இருக்கு.

மிக மிக தைரியமான மனிதர் இவர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 20, 2015 11:05 pm

டிராஃபிக் ராமசாமி 103459460

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக