புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c10 
3 Posts - 3%
prajai
2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Rutu
2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c10 
1 Post - 1%
Pradepa
2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c10 
231 Posts - 22%
sugumaran
2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c10 
18 Posts - 2%
prajai
2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c10 
5 Posts - 0%
Rutu
2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2015 புத்தாண்டு பலன்கள் !


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 17, 2014 12:13 pm

First topic message reminder :

மேஷம் ராசி பஞ்சாங்க ஜோதிடம்
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

வாக்கு சாதுர்யமும், வசீகர பேச்சுத்திறனும் கொண்ட மேஷ ராசி நேயர்களே! உங்களுக்கு இந்த 2015-ஆம் ஆண்டில் சனி அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிப்பதால் அஷ்டமச் சனி நடைபெறுகிறது. ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவானும் சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு இல்லை என்றாலும் 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவினை உண்டாக்கும். நெருங்கியவர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள்.
வாழ்க்கையில் எவ்வளவோ சாதனைகளைச் செய்துவிட்ட உங்களுக்கு அஷ்டமச் சனிக் காலம் என்பது ஒரு பெரிய பொருட்டேயில்லை. தேவைக்கேற்றபடி பணவரவுகளை ஏற்படுத்திக்கொள்ளும் அளவிற்கு உங்களுக்குத் திறமையுண்டு. குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்துவிடுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளதால் பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும்.

புத்திர வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றமுடியும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவதால் கூட்டுத் தொழிலும் மேன்மையடையும். கடன்களையும் படிப்படியாகக் குறைப்பீர்கள். எதிலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடையலாம்.

உடல் ஆரோக்கியம்

உங்களுக்கு அஷ்டமச் சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கிய ரீதியாக அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் ஏற்பட்டு உடல் நிலை சோர்வடையும். நெருங்கியவர்கள் ஏற்படுத்தக்கூடிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும். மற்றவருக்கு நல்லது செய்ய நினைத்தாலும் அது உங்களுக்கே வீண் பிரச்சசினைகளை ஏற்படுத்தி விடும். முன்கோபத்தைக் குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது போன்ற யாவும் மன நிம்மதியை உண்டாக்கும். ஆண்டின் பிற்பாதியில் குரு 5-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிப்பீர்கள்.

குடும்பம், பொருளாதார நிலை

ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவும் தேவையற்ற கருத்து வேறுபாடுகளும் பொருளாதார நெருக்கடிகளும் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளிலும் தடைகள் ஏற்படக்கூடும். உற்றார்- உறவினர்களும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்றாலும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் யாவும் இனிதே நடைபெறும். பணவரவுகள் சரளமான நிலையில் இருக்கும் புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கடன்களும் குறையும்.

உத்தியோகம்

உத்தியோகத்திலிருப்பவர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எடுக்கும் பணிகளை முழுமையாக முடிக்க முடியாத சூழ்நிலை, பிறர் செய்யும் தவறுகளுக்கும் வீண் பழிகளைச் சுமக்கக்கூடிய நிலை போன்றவை ஏற்படும். ஆண்டின் தொடக்கத்தில் அலைச்சல்களும் பணியில் நிம்மதிக் குறைவும் ஏற்பட்டாலும், வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் ஓரளவுக்கு கௌரவ மான நிலையினை அடைவீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வும் கிட்டும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை அமைய சற்று தாமதமாகும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் நிறைய போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள், வம்பு வழக்குகள் போன்ற யாவும் உண்டாகும். கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடும், தொழிலாளர்களால் வீண் பிரச்சினைகளும் ஏற்படும். என்றாலும் 05-07-2015 ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் மறையும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களை சற்று சிந்தித்துச் செயலாக்குவது நல்லது. பயணங்களால் சற்று அலைச்சல் ஏற்படும்.

பெண்களுக்கு

அஷ்டமச் சனி நடைபெறுவதும், குரு 4-ல் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். இதனால் குடும்பத்தில் பிரச்சினை, நெருங்கிய வர்களிடையே கருத்து வேறுபாடு, பணவரவில் நெருக்கடி போன்றவை ஏற்படும். உடல் ஆரோக்கியத்திலும் வாயுத் தொல்லை, அஜீரணக் கோளாறு போன்றவை உண்டாகும். வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு 5-ஆம் வீட்டில் பலமாக சஞ்சரிப்பதால் பணவரவுகள் சரளமாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடையின்றிக் கைகூடும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும்.

கொடுக்கல்- வாங்கல்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் குரு சாதகமின்றி சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதிலேயே வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பின்பு எதிலும் லாபமான நிலை உண்டாகும். கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் போன்ற துறைகளிலும் நல்ல லாபம் கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றிவிடுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியலில் உடனிருப்பவர்களிடம் சற்று கவனமுடன் நடந்து கொள் வது நல்லது. பேச்சிலும், செயலிலும் நிதானம் தேவை. பத்திரிகை நண்பர் களை அனுசரித்து நடந்துகொண்டால் வீண் வதந்திகளிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும். ஆண்டின் பிற்பாதி ஒரளவுக்கு சாதகமளிப்பதாக அமையும். மக்களின் ஆதரவும் உங்களுக்கு சிறப்பாகக் கிட்டும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகளுக்கு வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகளும் அதிகரிக்கும். முடிந்த வரை முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பின்பு வாழ்வில் ஓரளவுக்கு முன்னேற்றமும் நல்ல விளைச்சலும் உண்டாகும். சந்தையிலும் விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்க முடியும். பூமி, மனை போன்றவற்றையும் வாங்குவீர்கள். கால்நடைகளாலும் நல்ல லாபம் உண்டு.

கலைஞர்களுக்கு

கலைஞர்கள் ஆண்டின் தொடக்கத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. நிறைய மறைமுக எதிர்ப்புகள், கிசுகிசுக்கள் போன்றவற்றால் மனநிம்மதி குறையும். பணவரவுகளிலும் தேக்க நிலை ஏற்படும் என்றாலும் வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குருப்பெயர்ச்சிக்குப்பின் நினைத்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு வந்து சேரும். சுக வாழ்க்கைக்கு பஞ்சம் இருக்காது.

மாணவ- மாணவியருக்கு

மாணவ- மாணவியருக்கு இந்த ஆண்டின் தொடக்கமானது சற்று சோதனை நிறைந்தாகவே இருக்கும். கல்வியில் ஈடுபாடு குறையும் என்றாலும் வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குருப்பெயர்ச்சிக்குப் பின் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு மேலும் உற்சாகத்தினை உண்டாக்கும் மதிப்பெண்கள் அதிகரிக்கும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 17, 2014 12:49 pm

மீனம் ராசி பஞ்சாங்க ஜோதிடம்
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

நீதி, நேர்மை தவறாமல் நடக்கும் பண்பும் ஏழை எளியவர்களுக்கு உதவிசெய்யும் ஆற்றலும்கொண்ட மீன ராசி நேயர்களே! இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது ஓரளவுக்கு முன்னேற்றத்தினை ஏற்படுத்தும் அமைப்பாகும். இதுமட்டுமின்றி இந்த ஆண்டின் முற்பாதியில் உங்கள் ராசியாதிபதியான குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் உச்சம்பெற்று சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை, திருமண சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு உண்டாகும். எடுக்கும் முயற்சிகளனைத்திலும் வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். புத்திரவழியிலும் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். அசையாச் சொத்து வகையில் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலப் பலன்களையும் பெறுவீர்கள். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். ஆன்மிக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் எதிர்பார்த்த லாபத்தினை அடைந்துவிட முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெறுவீர்கள். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டுக்கு மாறுதலாகவிருப்பதால் உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பதும், ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதும் நல்லது. தெய்வ தரிசனங்களுக்காகப் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும்.

உடல் ஆரோக்கியம்

சனி 9-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்துவிடக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். குரு பஞ்சம ஸ்தானத்திலிருப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. இதனால் மருத்துவச் செலவுகளும் உங்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதன்மூலம் அலைச்சல்களை குறைத்துக்கொள்ள முடியும்.

குடும்பம், பொருளாதார நிலை

குடும்பத்தில் பொருளாதார நிலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகச் சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணவாழ்க்கை எளிதில் அமையும். அசையாச் சொத்து வகையில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதன் மூலம் லாபம் கிட்டும். புத்திரவழியில் மகிழ்ச்சியும் கணவன்- மனைவியிடையே ஒற்றுமையும் அமையும். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு 6-ஆம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வதும் மற்றவர்களிடம் கவனமுடனிருப்பது நல்லது.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு ஆண்டின் தொடக்கமானது. அற்புதமான பதவி உயர்வுகளையும், பாராட்டுதல்களையும் அள்ளித் தருவதாக அமையும். திறமைக்கேற்ற கௌரவமான நிலையினை அடைவீர்கள். பொருளாதார நிலையும் ஊதிய உயர்வுகளால் மேம்படும். புதிய வேலைவாய்ப்பும் எதிர்பார்த்தபடியே கிட்டும். நல்ல நிர்வாகத்திறனும் பலரை அதிகாரம் செய்யக்கூடிய ஆற்றலும் உண்டாகும். ஜூலை 5-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு ருண, ரோக ஸ்தானத்திற்கு மாறுதலாக இருப்பதால் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம்செலுத்துவது உங்களின் கௌரவத்துக்கு நல்லது.

தொழில், வியாபாரம்

உங்கள் ராசிக்கு அதிபதியான குரு இந்த ஆண்டின் முற்பாதி வரை பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம்செய்வது நல்ல அமைப்பாகும். இதனால் தொழில், வியாபாரரீதியாக ஏற்றமிகு பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிட்டும். எந்தவித மறைமுக எதிர்ப்புகளையும் வெல்லக்கூடிய ஆற்றலும் உண்டாகும். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி குரு 6-ஆம் வீட்டுக்கு மாறுதலாகவிருப்பதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரியங்களை ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுத்துவது நல்லது.

பெண்களுக்கு

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மணமாகாத கன்னியருக்கு சிறப்பான மணவாழ்க்கை அமையும். சிலருக்கு அழகான புத்திர பாக்கியம் அமையும். குடும்பத்திலும் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் வருகையால் நற்பலன்கள் அமையும். பூர்வீகச் சொத்துகளால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமானதாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். குரு மாற்றத்திற்குப் பிறகு எதிலும் சிந்தித்துச் செயல்படுவது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

கொடுக்கல்- வாங்கல்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனகாரகன் குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவை சரளமாக இருக்கும். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளிலும் தாராளமாக லாபம் கிட்டும். பெரிய முதலீடுகளையும் தடையின்றி ஈடுபடுத்த முடியும். என்றாலும் வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவிருக்கும் குரு மாற்றத்திற்குப் பிறகு கொடுக்கல்- வாங்கலில் வீண் விரயங்களைச் சந்திப்பீர்கள் என்பதால் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்த்துவிடுவது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு

குரு பகவான் இந்த ஆண்டின் முற்பாதியில் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றமுடியும். மக்கள் செல்வாக்கு காரகனாகிய சனி பகவானும் 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது ஓரளவுக்கு மேன்மையை உண்டாக்கும். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைத் தடையின்றி காப்பாற்றிவிடுவீர்கள். கட்சிப் பணிக்காக எதிர்பாராத வீண் செலவுகளைச் சந்திக்கநேரிடும் என்பதால் பணவிஷயத்தில் கவனம் தேவை.

விவசாயிகளுக்கு

விவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைக்கும் எதிர்பார்த்த வங்கிக் கடன்களும் கிடைக்கப்பெற்று தேவைகள் பூர்த்தியாகும். பூமி, மனை, வாங்கும் யோகம் உண்டென்றாலும் சில தடைகளுக்குப்பின் வாங்குவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்களையும் நிறைவேற்ற முடியும். ஆடு, மாடு போன்ற கால்நடைகளாலும் சிறப்பான லாபம் கிட்டும். கடன்களை அடைக்கக்கூடிய அளவுக்கு ஆற்றலும் உண்டாகும்.

கலைஞர்களுக்கு

இந்த ஆண்டின் தொடக்கமானது கலைஞர்களுக்கு அபரிமிதமான செல்வாக்கினை உண்டாக்கும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். ரசிகர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். உங்களின் திறமைகளுக்கேற்ற கதாபாத்திரங்களும் கிடைக்கப்பெறும். குரு மாற்றத்திற்குப் பிறகு பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவக்கூடுமென்பதால் ஆடம்பரமாக செலவுகள் செய்வதைக் குறைத்துக்கொள்வது நல்லது.

மாணவ- மாணவியருக்கு

கல்வியில் நல்ல ஈடுபாட்டுடன் செயல்பட்டு சிறப்பான மதிப்பெண்களைப் பெறமுடியும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். நல்ல நண்பர்களின் நட்பு உங்களுக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கும். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். கல்விக்காக சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பும் கிட்டும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 17, 2014 12:50 pm

மீனம் ராசி - மாதப் பலன்கள்

ஜனவரி

மாதக் கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதாலும், 11-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதாலும் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல அனுகூலங்கள் உண்டாகும். லாபங்கள் பெருகும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். எடுக்கும் காரியங்களில் எளிதாக வெற்றிகளைப் பெறுவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய சம்பவங்கள் நடைபெறும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கைகூடும். ஆஞ்சனேயரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 13-01-2015 மாலை 05.37 மணி முதல் 16-01-2015 அதிகாலை 02.42 மணி வரை.

பிப்ரவரி

பாக்கிய ஸ்தானத்தில் சனியும், 11-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் எல்லா வகையிலும் லாபங்கள் பெருகும். நீங்கள் எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் தேவைகள் பூர்த்தியாகும். உற்றார்- உறவினர்களும் ஓரளவுக்கு சாதகமாகச் செயல் படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். உத்தியோகஸ்தர்களும் பணியில் நிம்மதியாகச் செயல்படமுடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 09-02-2015 இரவு 12.47 மணி முதல் 12-02-2015 காலை 11.08 மணி வரை.

மார்ச்

ஜென்ம ராசிக்கு 5-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் 12-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதாலும் எதிர்பாராத வீண் விரயங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பும் கண்களில் கோளாறும் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகளும் தோன்றும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டிவரும். பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாவதால் குடும்பத் தேவைகளை பூர்த்திசெய்ய கடன் வாங்க வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபத்தினைப் பெற முடியும். முருகப்பெருமானை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 09-03-2015 காலை 06.50 மணி முதல் 11-03-2015 மாலை 05.41 மணி வரை.

ஏப்ரல்

ஜென்ம ராசியில் சூரியனும் 2-ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடல் சோர்வு, எதிலும் முழுமையாக ஈடுபடமுடியாத நிலை உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். முடிந்த வரை பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும். தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிப்பதால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவும். நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் தாமதப்படும். துர்க்கையம்மனை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 05-04-2015 மதியம் 12.50 மணி முதல் 07-04-2015 இரவு 11.19 மணி வரை

மே

பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு சஞ்சாரம் செய்வதும் 2-ஆம் தேதி முதல் 3-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்யவிருப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளனைத்திலும் வெற்றிமேல் வெற்றிகிட்டும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். கொடுக்கல்- வாங்கலிலும் லாபம்கிட்டும். உத்தியோகஸ்தர் களும் எதிர்பார்த்த பதவி உயர்வுகளைப் பெறமுடியும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 02-05-2015 மாலை 07.38 மணி முதல் 05-05-2015 அதிகாலை 05.33 மணிவரை; மற்றும் 30-05-2015 அதிகாலை 03.24 மணி முதல் 01-06-2015 மதியம் 01.06 மணி வரை.

ஜூன்

முயற்சி ஸ்தானத்தில் சூரியன், செவ்வாயும் 5-ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறைவேற்றமுடியும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அசையும்- அசையாச் சொத்துகள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சிறுசிறு போட்டிகள் நிலவினாலும் லாபம் குறையாது. கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 26-06-2015 காலை 11.41 மணி முதல் 28-06-2015 இரவு 09.46 மணி வரை.

ஜூலை

சுக ஸ்தானமான 4-ல் சூரியன், செவ்வாயும் 7-ல் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன், கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு உண்டாகும். உற்றார்- உறவினர்களும் பகைமை உணர்வுடன் செயல்படுவார்கள். எடுக்கும் முயற்சிகளிலும் தடை, தாமதங்கள் ஏற்படும். குடும்பத்தில் ஏற்படக்கூடிய எதிர்பாராத வீண் விரயங்களால் கடன் வாங்க வேண்டிவரும். அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். உடல்நிலை சோர்வடையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர் களும் லாபத்தை எதிர்பார்க்கமுடியாது. ஆஞ்சனேயரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 23-07-2015 மாலை 07.43 மணி முதல் 26.07.2015 காலை 06.40 மணி வரை.

ஆகஸ்ட்

ருண, ரோக ஸ்தானமான 6-ல் குரு சஞ்சரிப்பது பொருளாதாரரீதியாக நெருக்கடிகளை ஏற்படுத்துமென்றாலும் மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். பணவரவுகளுக்கும் பஞ்சம் ஏற்படாது. குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும். உற்றார்- உறவினர்களிடமிருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். சமுதாயத்தில் கௌரவமான நிலை உண்டாகும். கடன்கள் குறையும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 20-08-2015 அதிகாலை 02.54 மணி முதல் 22-08-2015 மதியம் 02.42 மணி வரை

செப்டம்பர்

இம்மாத முற்பாதி வரை சூரியன் 6-ல் சஞ்சரிப்பதாலும், மாத பிற்பாதியில் செவ்வாய் 6-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதாலும் ஏற்ற இறக்கமான பலன்களைப் பெறுவீர்கள். எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப்பின் வெற்றிகிட்டும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத்திலும் ஓரளவுக்கு நிம்மதி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும். அசையும்- அசையாச் சொத்துகளால் ஓரளவுக்கு லாபம்கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தொழில், வியாபாரத்தில் சிறுசிறு போட்டிகள் உண்டாகி லாபங்கள் சற்று குறையும். சிவபெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 16-09-2015 காலை 09.11 மணி முதல் 18-09-2015 இரவு 09.22 மணி வரை.

அக்டோபர்

ருண, ரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பது உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பென்றாலும் சூரியன் சாதகமின்றி சஞ்சரிப்பதால் உறவினர்களிடையே கருத்துவேறுபாடு உண்டாகும். வீண் அலைச்சல் களால், உடல்நிலையில் சோர்வு, எதிர்பாராத விரயங்களால் பணத் தட்டுப்பாடு உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுத்தால் வீண் சிக்கலில் சிக்குவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம்செலுத்தவும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 13-10-2015 மதியம் 03.10 மணி முதல் 16-10-2015 அதிகாலை 03.09 மணி வரை.

நவம்பர்

ஜென்ம ராசிக்கு 6-ல் குருவும், 7-ல் ராகுவும், 8-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள், உற்றார்- உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். தேவையற்ற மனசஞ்சலங்கள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையும். தொழில், வியாபாரத்திலும் நெருக்கடிகள் உண்டாவதால் லாபங்கள் குறையும். உத்தியோகஸ்தர்களும் வீண்பழிச் சொற்களை சுமக்க வேண்டிவரும். உடன் பணிபுரிபவர்களிடம் கவனம் தேவை. சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 09-11-2015 இரவு 09.37 மணி முதல் 12-11-2015 காலை 09.11 மணி வரை.

டிசம்பர்

ராசிக்கு 6-ல் குருவும் 7-ல் செவ்வாய், ராகுவும் சஞ்சாரம் செய்வதால் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்து நடப்பது, பேசும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இழுபறி நிலை நீடிக்கும். கொடுக்கல்- வாங்கலில் வீண் விரயங்கள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு உடனிருப்பவர்களே துரோகம் செய்வார்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிவரும். சிவனை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 07-12-2015 அதிகாலை 05.00 மணி முதல் 09-12-2015 மாலை 04.28 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 1, 2, 3, 9; கிழமை – வியாழன், ஞாயிறு; திசை – வடகிழக்கு; நிறம் – மஞ்சள், சிவப்பு; கல் – புஷ்பராகம்; தெய்வம் – தட்சிணாமூர்த்தி.

பரிகாரம்

மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சர்ப கிரகங்களான ராகு- கேது சாதகமின்றி சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது, ராகு காலங்களில் துர்க்கை வழிபாடு, சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது. வரும் 05-07-2015 முதல் குரு 6-ல் சஞ்சரிக்கவிருப்பதால் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. ஏழை அந்தணர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது உத்தமம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 17, 2014 12:53 pm

நண்பர்களே, மேலே உள்ளதை படித்து குழம்பாதிங்கோ......நல்லா இருந்தால் நமக்கு என்று எடுத்துக்கொள்ளுங்கள்.......இல்லாவிட்டால் பாவம் யாருக்கோ என்று நினைத்து விட்டு விடுங்கள்.அது தான் நம் உடல்   மற்றும் மனதுக்கு நல்லது ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Dec 17, 2014 4:39 pm

நல்லதே நடக்கும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 17, 2014 5:29 pm

mbalasaravanan wrote:நல்லதே நடக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1110060

உங்களுக்கு திருமணம் கைகூடும் , mbalasaravanan
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 17, 2014 7:54 pm

T.N.Balasubramanian wrote:
mbalasaravanan wrote:நல்லதே நடக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1110060

உங்களுக்கு திருமணம் கைகூடும் , mbalasaravanan
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1110071

படிச்சாச்சா ஐயா, உங்களுக்கு எந்த ராசி ஐயா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Dec 17, 2014 8:59 pm

நன்றி ஜக்க(கிருஷ்ண)ம்மா அய்யோ, நான் இல்லை



2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 A2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 A2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 T2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 H2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 I2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 R2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 A2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 4 Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 17, 2014 9:02 pm

Aathira wrote:நன்றி ஜக்க(கிருஷ்ண)ம்மா அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1110130

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 17, 2014 9:09 pm

ஜக்கம்மாவில் தெரியுதம்மா பானு(வின்)மதியின் மதியம்மா




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 17, 2014 9:46 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
mbalasaravanan wrote:நல்லதே நடக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1110060

உங்களுக்கு திருமணம் கைகூடும் , mbalasaravanan
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1110071

படிச்சாச்சா ஐயா, உங்களுக்கு எந்த ராசி ஐயா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1110112

படித்தாகி விட்டது . நன்றி , கிருஷ்ணம்மா !
தனுர் ராசி , எனக்கு .
( பாலசரவணனுக்கு ஆண்டு பலன் பார்க்காமலேயே சொன்னது )
ரமணியன்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக