புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Ratha Vetrivel | ||||
manikavi | ||||
Barushree | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Kavithas | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி
Page 6 of 19 •
Page 6 of 19 • 1 ... 5, 6, 7 ... 12 ... 19
First topic message reminder :
சிட்னி - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31,2012 நிலவரப்படி ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் அணிகளின் இடத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
பிரிவு பி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து, யு.ஏ.இ.
லீக் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மார்ச் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி மற்றொரு அணியை ஒரு முறை எதிர்த்து விளையாடும்.
வெற்றிக்கு 2 புள்ளிகள். டை அல்லது முடிவு ஏற்படாத போட்டிகளில் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி. குரூப் ஆட்டங்கள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் அணிகள் சமநிலை வகித்தால், 1. அதிக வெற்றிகள் பெற்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும், அல்லது, 2. நிகர ரன் விகிதம். இதுவும் சமமாக இருந்தால் 3. இருஅணிகளுக்கும் இடையிலான போட்டியில் வென்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இரு பிரிவுகளிலிருந்தும் 4 முதன்மை அணிகள் வீதம் 8 அணிகள் காலிறுதியில் மோதும். இதில்:
ஏ-பிரிவில் முதலிடம் பெற்ற அணி பி-பிரிவில் 4ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 4-ஆம் இடத்தில் உள்ள அணி பி-பிரிவில் 1-ஆம் இடத்தில் உள்ள அணியுடனும் காலிறுதிப் போட்டிகளில் விளையாடும்.
முதல் காலிறுதி மற்றும் 3-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் ஒரு அரையிறுதியிலும் 2-ஆம் காலிறுதி மற்றும் 4-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் மற்றொரு அரையிறுதியிலும் (மார்ச் 24 மற்றும் 26) விளையாடும்.
காலிறுதியிலோ அரையிறுதியிலோ ஆட்டம் ‘டை’ ஆனால், குரூப் பிரிவு ஆட்டத்தில் முன்னணியில் இருக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இறுதிப் போட்டி மார்ச் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி ரன்கள் அடிப்படையில் ‘டை’ ஆனால், இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும்.
சிட்னி - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31,2012 நிலவரப்படி ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் அணிகளின் இடத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
பிரிவு ஏ: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து.
பிரிவு பி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து, யு.ஏ.இ.
லீக் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மார்ச் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி மற்றொரு அணியை ஒரு முறை எதிர்த்து விளையாடும்.
வெற்றிக்கு 2 புள்ளிகள். டை அல்லது முடிவு ஏற்படாத போட்டிகளில் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி. குரூப் ஆட்டங்கள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் அணிகள் சமநிலை வகித்தால், 1. அதிக வெற்றிகள் பெற்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும், அல்லது, 2. நிகர ரன் விகிதம். இதுவும் சமமாக இருந்தால் 3. இருஅணிகளுக்கும் இடையிலான போட்டியில் வென்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இரு பிரிவுகளிலிருந்தும் 4 முதன்மை அணிகள் வீதம் 8 அணிகள் காலிறுதியில் மோதும். இதில்:
ஏ-பிரிவில் முதலிடம் பெற்ற அணி பி-பிரிவில் 4ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 4-ஆம் இடத்தில் உள்ள அணி பி-பிரிவில் 1-ஆம் இடத்தில் உள்ள அணியுடனும் காலிறுதிப் போட்டிகளில் விளையாடும்.
முதல் காலிறுதி மற்றும் 3-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் ஒரு அரையிறுதியிலும் 2-ஆம் காலிறுதி மற்றும் 4-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் மற்றொரு அரையிறுதியிலும் (மார்ச் 24 மற்றும் 26) விளையாடும்.
காலிறுதியிலோ அரையிறுதியிலோ ஆட்டம் ‘டை’ ஆனால், குரூப் பிரிவு ஆட்டத்தில் முன்னணியில் இருக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இறுதிப் போட்டி மார்ச் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி ரன்கள் அடிப்படையில் ‘டை’ ஆனால், இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
காலிறுதி வாய்ப்பை தக்கவைக்குமா பாக்?
ஆக்லாந்து: உலக கோப்பை தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில், பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில் பாகிஸ்தான் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, காலிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில், 11வது ஐ.சி.சி., உலக கோப்பை தொடர் நடக்கிறது. நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் இன்று நடக்கும் 'பி' பிரிவு லீக் போட்டியில், தென் ஆப்ரிக்க அணி, பாகிஸ்தானை சந்திக்கிறது. உலக கோப்பை வரலாற்றில், இவ்விரு அணிகள் மோதிய மூன்று போட்டியிலும், தென் ஆப்ரிக்கா வென்றது.
காலிறுதி வாய்ப்பு:
ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் துவக்கிய தென் ஆப்ரிக்கா, இந்தியாவிடம் தோல்வி அடைந்தது. பின், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து அணிகளை வீழ்த்தி எழுச்சி கண்டது. இன்றைய போட்டியில் மீண்டும் அசத்தும் பட்சத்தில், 'ஹாட்ரிக்' வெற்றியுடன் காலிறுதிக்கான இடத்தை உறுதி செய்யும்.
இதுவரை சோபிக்காத துவக்க வீரர் குயின்டன் டி காக் (7, 7, 12, 1) எழுச்சி கண்டால் நல்லது. அயர்லாந்துக்கு எதிராக சதமடித்த ஹசிம் ஆம்லா, டுபிளசி மீண்டும் சாதிக்கலாம். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய கேப்டன் டிவிலியர்ஸ், இன்றும் ரன் மழை பொழியலாம். காயத்தில் இருந்து டுமினி மீண்டது பலம். இவர், 'மிடில்-ஆர்டரில்' டேவிட் மில்லருடன் இணைந்து அதிரடி காட்டும் பட்சத்தில், சுலபமாக 400 ரன்கள் எடுக்கலாம்.
வேகப்பந்துவீச்சில் ஸ்டைன் (5 விக்.,), மார்னே மார்கல் (9 விக்.,) கூட்டணி அசத்துகிறது. கைல் அபாட் (6 விக்.,) நல்ல 'பார்மில்' இருப்பதால், பிலாண்டருக்கு இடம் கிடைப்பது சந்தேகம். 'சுழலில்' இம்ராத் தாகிர் (9 விக்.,) அசத்துகிறார்.
கட்டாய வெற்றி:
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடம் வீழ்ந்த பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) அணிகளை வீழ்த்தி எழுச்சி கண்டது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே காலிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது.
பேட்டிங்கில் கேப்டன் மிஸ்பா (221 ரன்) மட்டும் ஆறுதல் தருகிறார். இதுவரை மூன்று அரைசதம் கடந்த இவர், மீண்டும் கைகொடுக்கலாம். 'பார்மின்றி' தவிக்கும் துவக்க வீரர் நசிர் ஜாம்ஷெத் நீக்கப்பட்டு சர்பிராஸ் அகமது வாய்ப்பு பெறலாம். குதிங்கால் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹாரிஸ் சோகைல் விளையாடுவது சந்தேகம். ஒருவேளை இவர் விளையாடாவிட்டால், அனுபவ வீரர் யூனிஸ் கான் வாய்ப்பு பெறலாம்.
வேகப்பந்துவீச்சில் முகமது இர்பான் (5 விக்.,), வாகாப் ரியாஸ் (8 விக்.,), சோகைல் கான் (8 விக்.,) நம்பிக்கை அளிக்கின்றனர். ரஹாத் அலி எழுச்சி காண வேண்டும். 'சுழலில்' அப்ரிதி, ஹாரிஸ் சோகைல் கைகொடுத்தால் நல்லது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உலக கோப்பை காலிறுதியில் இந்தியா: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ”பி” பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி இன்று தனது 4 வது லீக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி 8 புள்ளிகளுடன் காலிறுதிக்கு முன்னேறியது. லீக் போட்டியில் இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையிலேயே இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியா விளையாடிய 4 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, தனது டிவிட்டரில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் “வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றமைக்கு இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். எதிர்வரும் போட்டிகளிலும் சிறப்பாக விளையாட இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்,” வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றமைக்கு இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்திய அணிக்கு மிகப்பெரிய தொடராக இது உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தென் ஆப்பிரிக்காவை அசத்தலாக வீழ்த்தியது பாகிஸ்தான்
உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில், தனது அபாரப் பந்துவீச்சின் காரணமாக, தென் ஆப்பிரிக்க அணியை டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 29 ரன்களில் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.
இதன் மூலம், உலகக் கோப்பை காலிறுதிக்கான வாய்ப்பை பாகிஸ்தான் அணி தக்கவைத்தது.
இப்போட்டியில், 47 ஓவர்களில் 232 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 33.3 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்களில் சுருண்டு தோல்வியுற்றது.
அந்த அணியின் வெற்றிக்காக போராடிய டிவில்லியர்ஸ் 77 ரன்கள் சேர்த்தார். ஆம்லா 38 ரன்களையும், டூபிளெஸ்ஸி 27 ரன்களையும் சேர்த்தனர். ஏனையோர் சொற்ப ரன்களே எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் மிகச் சிறப்பாக பந்துவீசிய முகமது இர்ஃபான், ராஹத் அலி மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சோஹாலி கான் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
பாகிஸ்தான் இன்னிங்ஸ்:
இப்போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 222 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டதால், டக்வொர்த் லூயிஸ் முறையில் 47 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டது. இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்கு 47 ஓவர்களில் 232 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது.
டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்த தென் ஆப்பிரிக்க அணி ஆரம்பம் முதலே பாகிஸ்தான் அணிக்கு நெருக்குதல் தர ஆரம்பித்தது. 9-வது ஓவரில் துவக்க வீரர் ஷெசாத் ஆட்டமிழந்தார். தொடர்ந்த சர்ஃபராஸ், யூனிஸ் ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்த பாடுபட்டது.
சிறப்பாக ஆடிவந்த சர்ஃபராஸ், டுமினி வீசிய 16-வது ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அடுத்த ஓவரிலேயே 49 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். இதற்குப் பின் மீண்டும் பாகிஸ்தான் ஆட்டம் நிதானமானது. அணியின் நம்பிக்கை நட்சத்திரமான மிஸ்பா உல் ஹக் பொறுமையாக விளையாட யூனிஸ் கான் 37 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.
தொடர்ந்து ஷோயப் மக்ஸூட் 8 ரன்களுக்கும், உமர் அக்மல் 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 37-வது ஓவர் முடிவில் 175 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பாகிஸ்தான் இழந்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது.
அரை மணி நேரம் கழித்து தொடர்ந்த ஆட்டதில், அடுத்து களமிறங்கிய அஃப்ரிதி ஒரு சிக்ஸ் அடித்து தனது அதிரடியைத் துவங்க, மறுமுனையில் மிஸ்பா தனது அரை சதத்தை எட்டினார். மீண்டும் மழையால் ஆட்டம் தடைபட்டது. ஒரு மணி நேரம் வரை நீடித்த இந்த மழையால் ஆட்டம் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
மீதம் 7 ஓவர்களே இருக்க, முடிந்த வரை அதிரடியாக ரன் சேர்க்க பாக். முயன்றது. ஆனால் தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்கள் திறம்பட வீசியதால் நினைத்த வேகத்தில் ரன் சேர்க்க இயலாமல் போனது.
அஃப்ரிதி 22 ரன்களுடனும், வஹாப் ரியாஸ் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து வெளியேறினர். மிஸ்பாவும் அடுத்த ஓவரில் 56 ரன்களுக்கு விழ, தொடர்ந்து ஆட வந்த ரஹத் அலி, சோஹைல் கான் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
முடிவில் 47 ஓவர்கள் கூட முழுமையாக ஆடாத பாக். 222 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டக்வொர்த் லீவிஸ் முறையில் திருத்தியமைக்கப்பட்ட இலக்காக 232 ரன்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில், தனது அபாரப் பந்துவீச்சின் காரணமாக, தென் ஆப்பிரிக்க அணியை டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 29 ரன்களில் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.
இதன் மூலம், உலகக் கோப்பை காலிறுதிக்கான வாய்ப்பை பாகிஸ்தான் அணி தக்கவைத்தது.
இப்போட்டியில், 47 ஓவர்களில் 232 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 33.3 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்களில் சுருண்டு தோல்வியுற்றது.
அந்த அணியின் வெற்றிக்காக போராடிய டிவில்லியர்ஸ் 77 ரன்கள் சேர்த்தார். ஆம்லா 38 ரன்களையும், டூபிளெஸ்ஸி 27 ரன்களையும் சேர்த்தனர். ஏனையோர் சொற்ப ரன்களே எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் மிகச் சிறப்பாக பந்துவீசிய முகமது இர்ஃபான், ராஹத் அலி மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சோஹாலி கான் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
பாகிஸ்தான் இன்னிங்ஸ்:
இப்போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 222 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டதால், டக்வொர்த் லூயிஸ் முறையில் 47 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டது. இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்கு 47 ஓவர்களில் 232 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது.
டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்த தென் ஆப்பிரிக்க அணி ஆரம்பம் முதலே பாகிஸ்தான் அணிக்கு நெருக்குதல் தர ஆரம்பித்தது. 9-வது ஓவரில் துவக்க வீரர் ஷெசாத் ஆட்டமிழந்தார். தொடர்ந்த சர்ஃபராஸ், யூனிஸ் ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்த பாடுபட்டது.
சிறப்பாக ஆடிவந்த சர்ஃபராஸ், டுமினி வீசிய 16-வது ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அடுத்த ஓவரிலேயே 49 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். இதற்குப் பின் மீண்டும் பாகிஸ்தான் ஆட்டம் நிதானமானது. அணியின் நம்பிக்கை நட்சத்திரமான மிஸ்பா உல் ஹக் பொறுமையாக விளையாட யூனிஸ் கான் 37 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.
தொடர்ந்து ஷோயப் மக்ஸூட் 8 ரன்களுக்கும், உமர் அக்மல் 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 37-வது ஓவர் முடிவில் 175 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பாகிஸ்தான் இழந்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது.
அரை மணி நேரம் கழித்து தொடர்ந்த ஆட்டதில், அடுத்து களமிறங்கிய அஃப்ரிதி ஒரு சிக்ஸ் அடித்து தனது அதிரடியைத் துவங்க, மறுமுனையில் மிஸ்பா தனது அரை சதத்தை எட்டினார். மீண்டும் மழையால் ஆட்டம் தடைபட்டது. ஒரு மணி நேரம் வரை நீடித்த இந்த மழையால் ஆட்டம் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
மீதம் 7 ஓவர்களே இருக்க, முடிந்த வரை அதிரடியாக ரன் சேர்க்க பாக். முயன்றது. ஆனால் தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்கள் திறம்பட வீசியதால் நினைத்த வேகத்தில் ரன் சேர்க்க இயலாமல் போனது.
அஃப்ரிதி 22 ரன்களுடனும், வஹாப் ரியாஸ் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து வெளியேறினர். மிஸ்பாவும் அடுத்த ஓவரில் 56 ரன்களுக்கு விழ, தொடர்ந்து ஆட வந்த ரஹத் அலி, சோஹைல் கான் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
முடிவில் 47 ஓவர்கள் கூட முழுமையாக ஆடாத பாக். 222 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டக்வொர்த் லீவிஸ் முறையில் திருத்தியமைக்கப்பட்ட இலக்காக 232 ரன்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நல்ல பந்துவீச்சுக்கு எதிராக மீண்டும் மூச்சுத்திணறி வீழ்ந்த தென்னாப்பிரிக்கா
ஆக்லாந்தில் நடைபெற்ற மிக முக்கியமான பிரிவு-பி உலகக்கோப்பை லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா மீண்டும் ஒரு நல்ல பந்துவீச்சுக்கு எதிராக பாகிஸ்தானிடம் தோல்வி தழுவியது.
உலகக்கோப்பையை வெல்லும் அணி என்று கூறப்படும் ஒரு பலமான தென்னாப்பிரிக்க அணி, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளிடம் குறிப்பாக நல்ல பந்துவீச்சுக்கு தோல்வி தழுவியுள்ளது.
தோல்விக்குப் பிறகு டிவில்லியர்ஸ் கூறும் போது, “நாங்கள் இன்னமும் இந்தப் பிரிவில் நல்ல நிலையில்தான் இருக்கிறோம். ஆனால் எனக்கு தோற்பது பிடிக்காது. பேட்டிங்கில் நாங்கள் அதிர்ச்சிகரமாக ஆடுகிறோம் என்பதில் ஐயமில்லை. கடந்த சில ஆண்டுகளில் நெருக்கடியிலிருந்து மீண்டு மேல் நிலைக்கு வந்துள்ளோம். இன்னமும் நாங்கள் நல்ல அணிச்சேர்க்கையுடன் உலகக்கோப்பையை நிச்சயம் வெல்வோம் என்றே பலமாக நம்புகிறோம். விளக்கு வெளிச்சத்தில் பேட்டிங் எளிதானதல்ல. இலக்கைத் துரத்துவதற்கு ஏதுவான பிட்ச்தான் இது. வெற்றிபெறாததற்கு எந்த ஒரு காரணத்தையும் கூற முடியாது.” என்றார்.
கேப்டன்சியில் சொதப்பிய டிவில்லியர்ஸ்
“தோற்பது எனக்கு பிடிக்காது” இது டிவில்லியர்ஸ் கூறும் வார்த்தை. ஆனால் அவர் அணிச்சேர்க்கையில் மீண்டும் தவறு செய்தார். பந்துவீச்சு மாற்றங்களிலும் சொதப்பினார். வெர்னன் பிலாண்டரை அணியில் சேர்த்திருந்தால் நிச்சயம் பிட்சில் கொஞ்சம் ஸ்விங் இருந்ததற்கு பாக். பேட்டிங்கை இன்னமும் விரைவிலேயே வீழ்த்தியிருக்க முடியும், ஆனால் அவர் இம்ரான் தாஹிரை அதிகம் நம்பினார். பகுதி நேர பவுலர்களான டுமினியை விரைவில் கொண்டு வந்து தவறு செய்தார். மேலும் தானே பந்து வீச முடிவெடுத்து சொதப்பினார். இம்ரான் தாஹிர் சோபிக்கவில்லை.
முதல் 10 ஓவர்களில் 35 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்று பாகிஸ்தானைக் கட்டுப்படுத்தி வைத்திருந்த அவர் கேப்டன்சி முடிவுகளில் செய்த தவறினால் பாகிஸ்தான் ரன் விகிதம் சரமாரியாக அதிகரித்தது. தொடக்கதில் ஷெசாத்துக்கு டேல் ஸ்டெய்ன் பிடித்த கேட்ச் அபாரமானது. ஓடிச் சென்று வலது புறம் பறந்து தாவிப்பிடித்தார்.
யூனிஸ் கான் வேகப்பந்து வீச்சுக்கு குதித்து குதித்து ஆடுபவர். இந்தியாவுக்கு எதிராக குதித்து குதித்தேதான் அவுட் ஆனார். ஆனால் இன்று அவர் இறங்கியவுடன் ஸ்பின்னர்களை கொண்டு வந்து அவரை ரன்கள் எடுக்க அனுமதித்தார். இம்ரான் தாஹிர் வந்தவுடனேயே யூனிஸ் கான் 2 பவுண்டரிகளை விளாசினார். டிவில்லியர்ஸ் ஓவரில் 2 பவுண்டரிகள்.
சர்பராஸ் அகமட் ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிராக ஒரு அருமையான பேட்ஸ்மென், இது தெரியாமல் டுமினியை அவர் தொடர்ந்து கொடுக்க 16-வது ஓவரில் சர்பராஸ் அகமட் மேலேறி வந்து ஆன் திசையில் 2 அருமையான சிக்சர்களை விளாசினார். சரி அவ்வள்வுதான் என்று பார்த்தால் சர்பராஸ் மேலும் தைரியமாக டுமினியை இலக்காக்கி இன்னொரு சிக்சரையும் விளாசினார். 10-வது ஓவர் முடிவில் 24 பந்துகளில் 10 ரன்கள் என்று இருந்த சர்பராஸ் அகமட், டிவில்லியர்ஸின் தவறான கேப்டன்சியை நன்றாகப் பயன்படுத்தி 16-வது ஓவர் முடிவில் 46 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 48 ரன்கள் என்று விறுவிறுப்பு காட்டினார்.
10 ஓவர்களில் 35 என்று இருந்த பாகிஸ்தான் 16-வது ஓவர் முடிவில் 90/1 என்று ஆனது. இங்குதான் தென்னாப்பிரிக்கா தனக்கே சூனியம் வைத்துக் கொண்டது தொடங்கியது. சர்பராஸ் அகமட் 49 ரன்களில் ரன் அவுட் ஆனார். ஸ்கொயர் லெக் திசையில் மிக குறுகிய பவுண்டரி அங்கு அடித்துவிட்டு 2வது ரன் எடுக்க முயன்று அவர் மில்லரின் அபாரமான த்ரோவுக்கு இரையானார். இவரைத்தான் உட்கார வைத்து வேடிக்கைப் பார்த்தார் மிஸ்பா.
மீண்டும் ஸ்டெய்ன் கொண்டு வரப்பட்டார். மிஸ்பா உல் ஹக் 7-வது ரன்னை எடுக்கும் போது ஒருநாள் போட்டிகளில் 5,000 ரன்களை எடுத்தார்.
ஆனால், மீண்டும் டிவில்லியர்ஸுக்கு பந்துவீச்சு ஆசைப் பீடிக்க, வந்தார், மிஸ்பா 2 பவுண்டரிகளை விளாசினார். ஆனால், யூனிஸ் கான் 37 ரன்களில் டிவில்லியர்ஸிடம் விக்கெட்டைக் கொடுத்தது அபத்தம். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மக்சூத் 8 ரன்களில் கைல் அபாட் பந்தை நேராக பாயிண்டில் கேட்ச்கொடுத்தார். மிஸ்பா 37 ரன்களை 60 பந்துகளில் எடுக்க உமர் அக்மல் 8 ரன்களில் இருக்க பாகிஸ்தான் 35 ஓவர்களில் 167/4. அதாவது 10 ஓவர்களில் 35/1 பிறகு அடுத்த 25 ஓவர்களில் 132 ரன்கள் மேலும் 3 விக்கெட்டுகள், 10-வது ஓவரிலிருந்து 16-வது ஓவர் வரை நடத்திய சாத்துமுறையின் விளைவு அப்படியே தக்கவைக்கப்பட்டது. உமர் அக்மல் 13 ரன்களில் வெளியேறினார். அப்ரீடி 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 22 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மிஸ்பா மீண்டும் ஒரு அரைசதம் எடுத்து 56 ரன்கள் சேர்த்தார்.
மழை குறுக்கிட்டதால் ஓவர்கள் 47-ஆகக் குறைக்கப்பட விக்கெட்டுகள் விழத் தொடங்கின. பாகிஸ்தான் 167/4 என்ற நிலையிலிருந்து 222 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஸ்டெய்ன் 10 ஓவர்களில் 30 ரன்கள்தான் 3 விக்கெட்டுகள். அபாட், மொர்கெல் தலா 2 விக்கெட்டுகள். இம்ரான் தாஹிர், டிவில்லியர்ஸ், டுமினி ஆகியோர் வீசிய 18 ஓவர்களில் 115 ரன்கள். ஸ்டெய்ன், மோர்கெல், அபாட் வீசிய 28.4 ஓவர்களில் வெறும் 100 ரன்கள். இதனால்தான் பிலாண்டர் இருந்திருந்தால் பாகிஸ்தான் இன்னமும் மோசமான ரன்களையே எடுத்திருக்க வாய்ப்பிருந்தது. பாகிஸ்தான் 222 ரன்களுக்குச் சுருண்டது.
ஆக்லாந்தில் நடைபெற்ற மிக முக்கியமான பிரிவு-பி உலகக்கோப்பை லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா மீண்டும் ஒரு நல்ல பந்துவீச்சுக்கு எதிராக பாகிஸ்தானிடம் தோல்வி தழுவியது.
உலகக்கோப்பையை வெல்லும் அணி என்று கூறப்படும் ஒரு பலமான தென்னாப்பிரிக்க அணி, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளிடம் குறிப்பாக நல்ல பந்துவீச்சுக்கு தோல்வி தழுவியுள்ளது.
தோல்விக்குப் பிறகு டிவில்லியர்ஸ் கூறும் போது, “நாங்கள் இன்னமும் இந்தப் பிரிவில் நல்ல நிலையில்தான் இருக்கிறோம். ஆனால் எனக்கு தோற்பது பிடிக்காது. பேட்டிங்கில் நாங்கள் அதிர்ச்சிகரமாக ஆடுகிறோம் என்பதில் ஐயமில்லை. கடந்த சில ஆண்டுகளில் நெருக்கடியிலிருந்து மீண்டு மேல் நிலைக்கு வந்துள்ளோம். இன்னமும் நாங்கள் நல்ல அணிச்சேர்க்கையுடன் உலகக்கோப்பையை நிச்சயம் வெல்வோம் என்றே பலமாக நம்புகிறோம். விளக்கு வெளிச்சத்தில் பேட்டிங் எளிதானதல்ல. இலக்கைத் துரத்துவதற்கு ஏதுவான பிட்ச்தான் இது. வெற்றிபெறாததற்கு எந்த ஒரு காரணத்தையும் கூற முடியாது.” என்றார்.
கேப்டன்சியில் சொதப்பிய டிவில்லியர்ஸ்
“தோற்பது எனக்கு பிடிக்காது” இது டிவில்லியர்ஸ் கூறும் வார்த்தை. ஆனால் அவர் அணிச்சேர்க்கையில் மீண்டும் தவறு செய்தார். பந்துவீச்சு மாற்றங்களிலும் சொதப்பினார். வெர்னன் பிலாண்டரை அணியில் சேர்த்திருந்தால் நிச்சயம் பிட்சில் கொஞ்சம் ஸ்விங் இருந்ததற்கு பாக். பேட்டிங்கை இன்னமும் விரைவிலேயே வீழ்த்தியிருக்க முடியும், ஆனால் அவர் இம்ரான் தாஹிரை அதிகம் நம்பினார். பகுதி நேர பவுலர்களான டுமினியை விரைவில் கொண்டு வந்து தவறு செய்தார். மேலும் தானே பந்து வீச முடிவெடுத்து சொதப்பினார். இம்ரான் தாஹிர் சோபிக்கவில்லை.
முதல் 10 ஓவர்களில் 35 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்று பாகிஸ்தானைக் கட்டுப்படுத்தி வைத்திருந்த அவர் கேப்டன்சி முடிவுகளில் செய்த தவறினால் பாகிஸ்தான் ரன் விகிதம் சரமாரியாக அதிகரித்தது. தொடக்கதில் ஷெசாத்துக்கு டேல் ஸ்டெய்ன் பிடித்த கேட்ச் அபாரமானது. ஓடிச் சென்று வலது புறம் பறந்து தாவிப்பிடித்தார்.
யூனிஸ் கான் வேகப்பந்து வீச்சுக்கு குதித்து குதித்து ஆடுபவர். இந்தியாவுக்கு எதிராக குதித்து குதித்தேதான் அவுட் ஆனார். ஆனால் இன்று அவர் இறங்கியவுடன் ஸ்பின்னர்களை கொண்டு வந்து அவரை ரன்கள் எடுக்க அனுமதித்தார். இம்ரான் தாஹிர் வந்தவுடனேயே யூனிஸ் கான் 2 பவுண்டரிகளை விளாசினார். டிவில்லியர்ஸ் ஓவரில் 2 பவுண்டரிகள்.
சர்பராஸ் அகமட் ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிராக ஒரு அருமையான பேட்ஸ்மென், இது தெரியாமல் டுமினியை அவர் தொடர்ந்து கொடுக்க 16-வது ஓவரில் சர்பராஸ் அகமட் மேலேறி வந்து ஆன் திசையில் 2 அருமையான சிக்சர்களை விளாசினார். சரி அவ்வள்வுதான் என்று பார்த்தால் சர்பராஸ் மேலும் தைரியமாக டுமினியை இலக்காக்கி இன்னொரு சிக்சரையும் விளாசினார். 10-வது ஓவர் முடிவில் 24 பந்துகளில் 10 ரன்கள் என்று இருந்த சர்பராஸ் அகமட், டிவில்லியர்ஸின் தவறான கேப்டன்சியை நன்றாகப் பயன்படுத்தி 16-வது ஓவர் முடிவில் 46 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 48 ரன்கள் என்று விறுவிறுப்பு காட்டினார்.
10 ஓவர்களில் 35 என்று இருந்த பாகிஸ்தான் 16-வது ஓவர் முடிவில் 90/1 என்று ஆனது. இங்குதான் தென்னாப்பிரிக்கா தனக்கே சூனியம் வைத்துக் கொண்டது தொடங்கியது. சர்பராஸ் அகமட் 49 ரன்களில் ரன் அவுட் ஆனார். ஸ்கொயர் லெக் திசையில் மிக குறுகிய பவுண்டரி அங்கு அடித்துவிட்டு 2வது ரன் எடுக்க முயன்று அவர் மில்லரின் அபாரமான த்ரோவுக்கு இரையானார். இவரைத்தான் உட்கார வைத்து வேடிக்கைப் பார்த்தார் மிஸ்பா.
மீண்டும் ஸ்டெய்ன் கொண்டு வரப்பட்டார். மிஸ்பா உல் ஹக் 7-வது ரன்னை எடுக்கும் போது ஒருநாள் போட்டிகளில் 5,000 ரன்களை எடுத்தார்.
ஆனால், மீண்டும் டிவில்லியர்ஸுக்கு பந்துவீச்சு ஆசைப் பீடிக்க, வந்தார், மிஸ்பா 2 பவுண்டரிகளை விளாசினார். ஆனால், யூனிஸ் கான் 37 ரன்களில் டிவில்லியர்ஸிடம் விக்கெட்டைக் கொடுத்தது அபத்தம். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மக்சூத் 8 ரன்களில் கைல் அபாட் பந்தை நேராக பாயிண்டில் கேட்ச்கொடுத்தார். மிஸ்பா 37 ரன்களை 60 பந்துகளில் எடுக்க உமர் அக்மல் 8 ரன்களில் இருக்க பாகிஸ்தான் 35 ஓவர்களில் 167/4. அதாவது 10 ஓவர்களில் 35/1 பிறகு அடுத்த 25 ஓவர்களில் 132 ரன்கள் மேலும் 3 விக்கெட்டுகள், 10-வது ஓவரிலிருந்து 16-வது ஓவர் வரை நடத்திய சாத்துமுறையின் விளைவு அப்படியே தக்கவைக்கப்பட்டது. உமர் அக்மல் 13 ரன்களில் வெளியேறினார். அப்ரீடி 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 22 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மிஸ்பா மீண்டும் ஒரு அரைசதம் எடுத்து 56 ரன்கள் சேர்த்தார்.
மழை குறுக்கிட்டதால் ஓவர்கள் 47-ஆகக் குறைக்கப்பட விக்கெட்டுகள் விழத் தொடங்கின. பாகிஸ்தான் 167/4 என்ற நிலையிலிருந்து 222 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஸ்டெய்ன் 10 ஓவர்களில் 30 ரன்கள்தான் 3 விக்கெட்டுகள். அபாட், மொர்கெல் தலா 2 விக்கெட்டுகள். இம்ரான் தாஹிர், டிவில்லியர்ஸ், டுமினி ஆகியோர் வீசிய 18 ஓவர்களில் 115 ரன்கள். ஸ்டெய்ன், மோர்கெல், அபாட் வீசிய 28.4 ஓவர்களில் வெறும் 100 ரன்கள். இதனால்தான் பிலாண்டர் இருந்திருந்தால் பாகிஸ்தான் இன்னமும் மோசமான ரன்களையே எடுத்திருக்க வாய்ப்பிருந்தது. பாகிஸ்தான் 222 ரன்களுக்குச் சுருண்டது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
திருத்தப்பட்ட இலக்கும் பாகிஸ்தானின் அபார பந்துவீச்சும்:
மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டதால் தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்கு 47 ஓவர்களில் 232 ரன்கள் என்று நிர்ணயிக்கப்பட்டது.
குவிண்டன் டி காக் என்பவரின் மோசமான ஃபார்ம் தொடர்கிறது. அவர் ரன் எடுக்காமல் 7 அடி உயர மொகமது இர்பானின் அபாரமான பந்துக்கு விக்கெட் கீப்பர் சர்பாரிசிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அதன் பிறகு பாகிஸ்தான் பந்துவீச்சு கொஞ்சம் திசையை இழக்க டுபிளெஸ்ஸி மற்றும் ஆம்லா அணியை மீட்டனர். 6-வது ஓவரில் சொஹைல் கான் வீசும் போது ஆம்லா மிக அருமையாக 3 பவுண்டரிகளை அடித்தார். 7-வது ஓவரை மொகமது இர்பான் வீச லெக் திசை பந்தை டுபிளெஸ்ஸி பவுண்டரி அடித்தார். பிறகு அதே ஓவரில் ஆம்லாவுக்கு இரண்டு தவறுகளைச் இர்பான் செய்ய இரண்டும் பவுண்டரிக்குப் பறந்தது. ஒன்று லெக் திசை பந்து, மற்றொன்று ஷாட் பிட்ச்.
முதல் விக்கெட் 0-வில் விழுந்த சுவடு தெரியாமல் 7 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா 51 ரன்கள். அடுத்த ஓவரை இடது கை வேகப்பந்து வீச்சாளர் ரஹத் அலி வீச ஒரு பந்து லெக் திசையில் பவுன்சர் மிக எளிதாக புல் ஆடி சிக்சருக்கு விரட்டினார் டுபிளெஸ்ஸி, மீண்டும் ஒரு ஷாட் பிட்ச் பந்து லெக் திசையில் ஒரு பவுண்டரி. பாகிஸ்தான் பந்து வீச்சு மிகவும் கட்டுக்கோப்பை இழந்து வந்த தருணம் இது. இந்த நிலையில்தான் ரஹத் அலி, ஒரு அருமையான பந்தை வீசி டுபிளெஸ்ஸியின் எட்ஜைப் பிடித்தார். 27 ரன்களில் அவர் அவுட் ஆனது திருப்பு முனை ஏற்படுத்தியது.
11-வது ஓவரில் அருமையான இடது கை வீச்சாளர் வஹாப் ரியாஸ் அழைக்கப்பட, 27 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்து அபாரமாக ஆடி வந்த ஆம்லா. கவனம் சிதறிய ஒரு தருணத்தில் ரியாஸ் பந்தை அவர் ஆட பந்து தாழ்வாக விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது. 67/3 என்ற நிலையில் பாகிஸ்தான் பந்துவீச்சு உத்வேகம் பெற்றது.
ரைலி ரூசோவ் இறங்கி ஒரு பவுண்டரி அடித்தார். பிறகு வஹாப் ரியாஸின் அருமையான, துல்லிய ஷாட் பிட்ச் பந்தை சரியாக அடிக்காமல் நேராக டீப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ரூசோவ்.
மில்லர் களமிறங்கியவுடன் பாகிஸ்தான் பந்துவீச்சில் நெருப்புப் பொறி பறந்தது. மில்லருக்கு பந்துகளை நேராக ஆடிப் பழக்கமில்லை என்று தெரிந்தது. மட்டை எப்போதும் ஃபைன்லெக் திசையிலிருந்து இறங்கியது. இதனால் அவர் தட்டுத் தடுமாறினார். நிறைய ஷாட் பிட்ச் பந்துகளை அவருக்குப் போட்ட ரஹத் அலி திடீரென ஒரு அருமையான பாதம் பெயர்க்கும் யார்க்கரை வீச, அது பின்னங்காலைத் தாக்க எல்.பி.ஆனார். தேவையில்லாமல் ரிவியூ செய்து ஒரு ரிவியூவையும் காலி செய்தார்.
டுமினி களமிறங்கி 2 பவுண்டரிகள் அடித்து 12 ரன்களில் இருந்த போது மொகமது இர்பான் மீண்டும் பந்து வீச வர, பவுன்சர் வீசினார், ஹூக் ஷாட் ஆடினார், தேவையான உயரம் கிடைக்கவில்லை பந்து நேராக வஹாபிடம் கேட்ச் ஆனது. தெ.ஆ. 103/6. ஓவர்கள் 20 முடிந்திருந்தது.
மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டதால் தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்கு 47 ஓவர்களில் 232 ரன்கள் என்று நிர்ணயிக்கப்பட்டது.
குவிண்டன் டி காக் என்பவரின் மோசமான ஃபார்ம் தொடர்கிறது. அவர் ரன் எடுக்காமல் 7 அடி உயர மொகமது இர்பானின் அபாரமான பந்துக்கு விக்கெட் கீப்பர் சர்பாரிசிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அதன் பிறகு பாகிஸ்தான் பந்துவீச்சு கொஞ்சம் திசையை இழக்க டுபிளெஸ்ஸி மற்றும் ஆம்லா அணியை மீட்டனர். 6-வது ஓவரில் சொஹைல் கான் வீசும் போது ஆம்லா மிக அருமையாக 3 பவுண்டரிகளை அடித்தார். 7-வது ஓவரை மொகமது இர்பான் வீச லெக் திசை பந்தை டுபிளெஸ்ஸி பவுண்டரி அடித்தார். பிறகு அதே ஓவரில் ஆம்லாவுக்கு இரண்டு தவறுகளைச் இர்பான் செய்ய இரண்டும் பவுண்டரிக்குப் பறந்தது. ஒன்று லெக் திசை பந்து, மற்றொன்று ஷாட் பிட்ச்.
முதல் விக்கெட் 0-வில் விழுந்த சுவடு தெரியாமல் 7 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா 51 ரன்கள். அடுத்த ஓவரை இடது கை வேகப்பந்து வீச்சாளர் ரஹத் அலி வீச ஒரு பந்து லெக் திசையில் பவுன்சர் மிக எளிதாக புல் ஆடி சிக்சருக்கு விரட்டினார் டுபிளெஸ்ஸி, மீண்டும் ஒரு ஷாட் பிட்ச் பந்து லெக் திசையில் ஒரு பவுண்டரி. பாகிஸ்தான் பந்து வீச்சு மிகவும் கட்டுக்கோப்பை இழந்து வந்த தருணம் இது. இந்த நிலையில்தான் ரஹத் அலி, ஒரு அருமையான பந்தை வீசி டுபிளெஸ்ஸியின் எட்ஜைப் பிடித்தார். 27 ரன்களில் அவர் அவுட் ஆனது திருப்பு முனை ஏற்படுத்தியது.
11-வது ஓவரில் அருமையான இடது கை வீச்சாளர் வஹாப் ரியாஸ் அழைக்கப்பட, 27 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்து அபாரமாக ஆடி வந்த ஆம்லா. கவனம் சிதறிய ஒரு தருணத்தில் ரியாஸ் பந்தை அவர் ஆட பந்து தாழ்வாக விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது. 67/3 என்ற நிலையில் பாகிஸ்தான் பந்துவீச்சு உத்வேகம் பெற்றது.
ரைலி ரூசோவ் இறங்கி ஒரு பவுண்டரி அடித்தார். பிறகு வஹாப் ரியாஸின் அருமையான, துல்லிய ஷாட் பிட்ச் பந்தை சரியாக அடிக்காமல் நேராக டீப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ரூசோவ்.
மில்லர் களமிறங்கியவுடன் பாகிஸ்தான் பந்துவீச்சில் நெருப்புப் பொறி பறந்தது. மில்லருக்கு பந்துகளை நேராக ஆடிப் பழக்கமில்லை என்று தெரிந்தது. மட்டை எப்போதும் ஃபைன்லெக் திசையிலிருந்து இறங்கியது. இதனால் அவர் தட்டுத் தடுமாறினார். நிறைய ஷாட் பிட்ச் பந்துகளை அவருக்குப் போட்ட ரஹத் அலி திடீரென ஒரு அருமையான பாதம் பெயர்க்கும் யார்க்கரை வீச, அது பின்னங்காலைத் தாக்க எல்.பி.ஆனார். தேவையில்லாமல் ரிவியூ செய்து ஒரு ரிவியூவையும் காலி செய்தார்.
டுமினி களமிறங்கி 2 பவுண்டரிகள் அடித்து 12 ரன்களில் இருந்த போது மொகமது இர்பான் மீண்டும் பந்து வீச வர, பவுன்சர் வீசினார், ஹூக் ஷாட் ஆடினார், தேவையான உயரம் கிடைக்கவில்லை பந்து நேராக வஹாபிடம் கேட்ச் ஆனது. தெ.ஆ. 103/6. ஓவர்கள் 20 முடிந்திருந்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
டிவில்லியர்ஸ் தனிநபர் போராட்டம்: (58 பந்துகளில் 7 பவுண்டரிகள் 5 சிக்சர்களூடன் 77 ரன்கள்)
டேல் ஸ்டெய்ன் களமிறங்க டிவில்லியர்ஸ் ரிஸ்க் எடுக்க ஆரம்பித்தார். இதில் வஹா ரியாஸ் சிக்கினார். முதலில் மிட்விக்கெட்டில் ஒரு அருமையான பவுண்டரி. பிறகு அவர் பாணியில் நகர்ந்து நகர்ந்து ரியாஸின் லைன், லெந்தைக் காலி செய்து இரண்டு லெக் திசை மிகப்பெரிய சிக்சர்கள். 34-வது ரன்னை டிவில்லியர்ஸ் எடுக்கும் போது உலகக்கோப்பை போட்டிகளில் 1000 ரன்கள் இலக்கை எட்டினார்.
அதன் பிறகு டேல் ஸ்டெய்ன் புகுந்தார். மொகமது இர்பான் பந்தை 2 பவுண்டரிகள் அடித்தார். ஆனால் அதே ஓவரில் மிட்விக்கெட்டில் ஆட நினைத்து எட்ஜ் செய்ய கீப்பரிடம் கேட்ச் ஆனது.
ஷாகித் அப்ரீடியை, பிறகு டிவில்லியர்ஸ் மேலேறி வந்து இரண்டு அற்புதமான சிக்சர்களை விளாச ஒரு முனை ஆட்டமாக மாறியது. பாகிஸ்தானுக்கும் வெற்றிக்கும் இடையில் டிவில்லியர்ஸ் சுவராக நின்று கொண்டிருந்தார். 47 பந்துகளில் 56 ரன்கள்.
கைல் அபாட் 12 ரன்கள் எடுத்து ரஹத் அலியின் பந்தில் யூனிஸ் கானின் அற்புதமான கேட்சிற்கு அவுட் ஆனார். 177/8.
டிவில்லியர்ஸ் தொடர்ந்தார். வஹாப் ரியாஸ் வீசிய தாழ்ந்த புல்டாஸை சிக்சர் விளாசி பிறகு எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரி.
33-வது ஓவரில் சொஹைல் கானை மீண்டும் ஒரு பவுண்டரி. ஆனால் அதே ஓவரில் தேவையில்லாமல் மேலேறி வந்து மிட் ஆனின் மேல் தூக்கி அடிக்க நினைத்தார், பந்து ஷாட் பிட்ச், எட்ஜ் ஆனது, சர்பராசுக்கு மீண்டும் ஒரு கேட்ச். 201/9 பிறகு 202 ஆல் அவுட்.
ஆட்ட நாயகனாக சர்பராஸ் அகமட் தேர்வு செய்யப்பட்டார். 49 ரன்களுடன் 6 கேட்ச். பாக். தரப்பில், மொகமது இர்பான், வஹாப் ரியாஸ், ரஹத் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
சுருக்கமாகக் கூற வேண்டுமெனில் பிலாண்டரைத் தேர்வு செய்யாமல் இம்ரான் தாஹீரைத் தேர்வு செய்தது, 10-வது ஓவர் முடிந்த பிறகு செய்த கேப்டன்சி தவறுகள் பிறகு பேட்டிங்கில் 7 ஓவர்களில் 51/1 என்ற நிலையிலிருந்து சரிவு கண்டது. இதுதான் தென்னாப்பிரிக்கா மீண்டும் வீழ்ந்த கதை.
தென்னாப்பிரிக்கா பிரிவு -பி-யில் இன்னமும் 2வது இடத்தில் உள்ளது. பாக், தெ.ஆ இரு அணிகளும் 6 புள்ளிகள் என்றாலும் நிகர ரன் விகிதம் தென்னாப்பிரிக்காவுக்கு +ல் உள்ளது. பாக்.கிற்கு மைனஸில் உள்ளது. இந்தப் பிரிவில் 4வது அணியாக அயர்லாந்தா, மே.இ.தீவுகளா என்பதைப் பார்க்க வேண்டும், ஜிம்பாப்வேயையும் ஒதுக்கி விட முடியாது.
டேல் ஸ்டெய்ன் களமிறங்க டிவில்லியர்ஸ் ரிஸ்க் எடுக்க ஆரம்பித்தார். இதில் வஹா ரியாஸ் சிக்கினார். முதலில் மிட்விக்கெட்டில் ஒரு அருமையான பவுண்டரி. பிறகு அவர் பாணியில் நகர்ந்து நகர்ந்து ரியாஸின் லைன், லெந்தைக் காலி செய்து இரண்டு லெக் திசை மிகப்பெரிய சிக்சர்கள். 34-வது ரன்னை டிவில்லியர்ஸ் எடுக்கும் போது உலகக்கோப்பை போட்டிகளில் 1000 ரன்கள் இலக்கை எட்டினார்.
அதன் பிறகு டேல் ஸ்டெய்ன் புகுந்தார். மொகமது இர்பான் பந்தை 2 பவுண்டரிகள் அடித்தார். ஆனால் அதே ஓவரில் மிட்விக்கெட்டில் ஆட நினைத்து எட்ஜ் செய்ய கீப்பரிடம் கேட்ச் ஆனது.
ஷாகித் அப்ரீடியை, பிறகு டிவில்லியர்ஸ் மேலேறி வந்து இரண்டு அற்புதமான சிக்சர்களை விளாச ஒரு முனை ஆட்டமாக மாறியது. பாகிஸ்தானுக்கும் வெற்றிக்கும் இடையில் டிவில்லியர்ஸ் சுவராக நின்று கொண்டிருந்தார். 47 பந்துகளில் 56 ரன்கள்.
கைல் அபாட் 12 ரன்கள் எடுத்து ரஹத் அலியின் பந்தில் யூனிஸ் கானின் அற்புதமான கேட்சிற்கு அவுட் ஆனார். 177/8.
டிவில்லியர்ஸ் தொடர்ந்தார். வஹாப் ரியாஸ் வீசிய தாழ்ந்த புல்டாஸை சிக்சர் விளாசி பிறகு எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரி.
33-வது ஓவரில் சொஹைல் கானை மீண்டும் ஒரு பவுண்டரி. ஆனால் அதே ஓவரில் தேவையில்லாமல் மேலேறி வந்து மிட் ஆனின் மேல் தூக்கி அடிக்க நினைத்தார், பந்து ஷாட் பிட்ச், எட்ஜ் ஆனது, சர்பராசுக்கு மீண்டும் ஒரு கேட்ச். 201/9 பிறகு 202 ஆல் அவுட்.
ஆட்ட நாயகனாக சர்பராஸ் அகமட் தேர்வு செய்யப்பட்டார். 49 ரன்களுடன் 6 கேட்ச். பாக். தரப்பில், மொகமது இர்பான், வஹாப் ரியாஸ், ரஹத் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
சுருக்கமாகக் கூற வேண்டுமெனில் பிலாண்டரைத் தேர்வு செய்யாமல் இம்ரான் தாஹீரைத் தேர்வு செய்தது, 10-வது ஓவர் முடிந்த பிறகு செய்த கேப்டன்சி தவறுகள் பிறகு பேட்டிங்கில் 7 ஓவர்களில் 51/1 என்ற நிலையிலிருந்து சரிவு கண்டது. இதுதான் தென்னாப்பிரிக்கா மீண்டும் வீழ்ந்த கதை.
தென்னாப்பிரிக்கா பிரிவு -பி-யில் இன்னமும் 2வது இடத்தில் உள்ளது. பாக், தெ.ஆ இரு அணிகளும் 6 புள்ளிகள் என்றாலும் நிகர ரன் விகிதம் தென்னாப்பிரிக்காவுக்கு +ல் உள்ளது. பாக்.கிற்கு மைனஸில் உள்ளது. இந்தப் பிரிவில் 4வது அணியாக அயர்லாந்தா, மே.இ.தீவுகளா என்பதைப் பார்க்க வேண்டும், ஜிம்பாப்வேயையும் ஒதுக்கி விட முடியாது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜிம்பாப்வே மகா விரட்டல்: பரபரப்பான ஆட்டத்தில் அயர்லாந்து வெற்றி
ஹோபார்ட்டில் நடைபெற்ற உலகக்கோப்பை பிரிவு-பி ஆட்டத்தில் அயர்லாந்தின் 331 ரன்கள் இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே 326 ரன்கள் எடுக்க, அயர்லாந்து கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி எட் ஜாய்ஸ் (112), பால்பர்னி (97) ஆகியோரது அவசர அதிரடி ஆட்டத்தின் மூலம் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் குவிக்க தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே பிரெண்டன் டெய்லர் (121 ரன்கள், 91 பந்து, 11 பவுண்டரி 4 சிக்சர்கள்), சான் வில்லியம்ஸ் (96 ரன்கள் 83 பந்து 7 பவுண்டரி, 2 சிக்சர்) ஆகியோரது 21 ஓவர் 149 ரன்கள் அதிரடிக் கூட்டணியில் 326 ரன்கள் வரை போராடி வந்து கடைசி ஓவரில் 3 பந்துகள் மீதமுள்ள நிலையில் தோல்வி கண்டது.
அயர்லாந்து அணியில் பொதுவாகவே அபாரமாக வீசிய கியூசக் கடைசி ஓவரையும் அற்புதமாக வீச கடைசி ஓவரில் தேவைப்படும் 7 வெற்றி ரன்களை ஜிம்பாப்வே எடுக்க விடாமல் செய்து 2 விக்கெட்டுகளை கடைசி ஓவரில் கைப்பற்றி மொத்தம் 4 விக்கெட்டுகளுடன் 9.3 ஓவர்களில் 32 ரன்களையே விட்டுக் கொடுத்தார்.
கெவினோ பிரையன் 10 ஓவர்களில் 90 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இவர் வீசிய 49-வது ஓவரில்தான் ஜிம்பாப்வே வீரர் முபரிவா 2 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடித்து இலக்குக்கு அருகில் கொண்டு வந்தார். மூனி 58 ரன்களுக்கு 2 விக்கெட். டாக்ரெல், மெக்ப்ரைன் தலா 1 விக்கெட்.
ஜிம்பாப்வே தரப்பில் சதரா, ஷான் வில்லியம்ஸ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
ஆட்ட நாயகனாக சதம் எடுத்த அயரலாந்து வீரர் எட் ஜாய்ஸ் தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெறும் நிலையிலிருந்து ஜிம்பாப்வே மீண்டும் ஒரு தோல்வியைத் தழுவியுள்ளது. அந்த அணி இந்தத் தொடரில் சிறப்பாகவே விளையாடி வருகிறது, அன்று கெயில், சாமுயெல்ஸிடம் சிக்கியது. மற்றபடி பாகிஸ்தானுக்கு எதிராகக் கூட வெற்றி பெற்று விடுவோம் என்ற அச்சுறுத்தலை நிகழ்த்தியது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 270 ரன்களுக்கும் மேல் குவித்து லேசாக மிரட்டியது.
இந்த வெற்றி மூலம் அயர்லாந்து 4 போட்டிகளில் 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று 4-ஆம் இடம் பிடித்துள்ளது. தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் 5-இல் 3 வென்று 6 புள்ளிகளுடன் 2 மற்றும் 3ஆம் இடங்களில் இருக்க, அயர்லாந்து 4 போட்டிகளில் 3-ஐ வென்று தற்போது -0.820 நிகர ரன்விகிதத்துடன் 4ஆம் இடத்தில் உள்ளது.
இந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வே வென்றிருந்தால் பி-பிரிவில் நிச்சயமின்மை ஏற்பட்டிருக்கும், ஆனால் தற்போது மே.இ.தீவுகள் நல்ல ரன் விகிதத்துடன் தனது கடைசி லீக் போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் அயர்லாந்தை பேட் செய்ய அழைத்தது. ஜிம்பாப்வே அணியில் கேப்டன் சிகும்பரா காயத்தினால் பிரெண்டன் டெய்லர் கேப்டனாக செயல்பட்டார். அயர்லாந்து அணியின் எட் ஜாய்ஸ் அடித்த 112 ரன்களும், பால்பர்னி எடுத்த 97 ரன்களும் அயர்லாந்து 331 ரன்கள் குவிக்க மையமாக அமைந்தது.
ஜிம்பாப்வே பீல்டர் செய்த தவறினால், தொடக்கத்திலேயே எட் ஜாய்ஸ் பிழைத்தார். 34 ரன்கள் எடுத்திருந்த ஜாய்ஸ், ஜிம்பாப்வே பவுலர் முபரிவா பந்தை அடிக்க முயல பந்து உயரே எழும்பியது முபரிவா அந்த கேட்சைக் கோட்டை விட்டார்.
முன்னதாக பால் ஸ்ட்ர்லிங் (10), பன்யங்கரா பந்தை நேராக பாயிண்டில் வில்லியம்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 34 ரன்களில் கேட்ச் விடப்பட்ட எட் ஜாய்ஸ் அதன் பிறகு அதிரடியைத் தொடங்கி 8 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 96 பந்துகளில் சதமடித்தார். 105 ரன்களில் கிரெய்க் எர்வின் கேட்ச் விட்டார். பிறகு அவரே எளிதான கேட்ச் ஒன்றைப் பிடித்து எட் ஜாய்சை வெளியேற்றினார்.
பால்பர்னிக்கும் ஒரு கடினமான வாய்ப்பை வில்லியம்ஸ் நழுவவிட்டார். ஆனால் பால்பர்னி இம்முறை அபாரமாக ஆடினார். 79 பந்துகளில் 7 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 97 ரன்களில் கடைசி ஓவரில் ரன் அவுட் ஆனார். பால்பர்னி, எட் ஜாய்ஸ் கூட்டணி 3-வது விக்கெட்டுக்காக 138 ரன்களைச் சேர்க்க கெவின் ஓ பிரையன் 24 ரன்களையும், வி.கீ. வில்சன் 25 ரன்களையும் எடுக்க அயர்லாந்து 331 ரன்களை விளாசியது.
டெய்லர்-வில்லியம்ஸ் அசாத்திய அதிரடி:
332 ரன்கள் இலக்கை எதிர்த்துக் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் விரைவில் வீழ்ந்து விட அந்த அணி 74/4 என்று சரிவு முகம் காட்டியது.
ஆனால், அதன் பிறகுதான் அசாத்தியமான அதிரடிக் கூட்டணி அமைந்தது. 5-வது விக்கெட்டுக்காக டெய்லர், வில்லியம்ஸ் ஜோடி 149 ரன்களை சுமார் 23 ஓவர்களில் அடித்து நொறுக்கியது.
பிரெண்டன் டெய்லர் 38 பந்துகளில் அரைசதம் கண்டவர் 79 பந்துகளில் 10 பவுண்டரி 2 சிக்சர்களுடன் சதம் கண்டார். சான் வில்லியம்ஸ் 56 பந்துகளில் 50 ரன்களை எட்டினார். ஆனால் அதன் பிறகு 27 பந்துகளில் 46 ரன்களை விளாசினார்.
டெய்லர் 121 ரன்கள் எடுத்து ஸ்கோர் 223 ரன்களாக இருந்த போது கியூசக் பந்தில் அவுட் ஆனார். முக்கிய வீரர் கிரெய்க் எர்வின் 11 ரன்களில் மெக்பிரைனிடம் வீழ்ந்தார். 259/6 என்ற நிலையில் வில்லியம்ஸ், சகாப்வா சுமார் 4 ஓவர்களில் 43 ரன்களுக்கான கூட்டணி அமைத்தனர். 46.5 ஓவர்களில் 300 ரன்கள் இருந்த போதுதான் சான் வில்லியம்ஸ் 96 ரன்களில் சர்ச்சைக்குரிய கேட்சில் அவுட் ஆனார். பவுண்டரி அருகே மூனி பிடித்த கேட்ச், கேட்ச் அல்ல சிக்ஸ் போலவே தெரிந்தது. ஆனால் வில்லியம்ஸ் காத்திருக்காமல் பெவிலியன் சென்றதால் 8 ரீப்ளேக்கள் முடிவில் அவுட் என்று முடிவானது.
300/7 என்ற நிலையில் முபரிவா இறங்கி 7 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 18 ரன்கள் எடுக்க கடைசி ஓவரில் இலக்கு 7 ரன்களானது.
ஆனால் கியுசக் வீசிய கடைசி ஓவரில் முதல் பந்தில் சகப்வா 17 ரன்களில் இருந்த போது மட்டையின் உள் விளிம்பில் பட்டு ஸ்லோ பந்தில் பவுல்டு ஆனார். சதரா இறங்கி ஒரு ரன் எடுத்து முபரிவாவிடம் ஸ்ட்ரைகைக் கொடுத்தார். மீண்டும் ஒரு ஸ்லோ பந்து தூக்கி அடித்தார். லாங் ஆனில் போர்ட்டர்பீல்ட் கேட்ச் பிடித்தார். ஜிம்பாப்வே 49.3 ஓவர்களில் 326 ரன்களில் ஆட்டமிழந்தது.
ஹோபார்ட்டில் நடைபெற்ற உலகக்கோப்பை பிரிவு-பி ஆட்டத்தில் அயர்லாந்தின் 331 ரன்கள் இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே 326 ரன்கள் எடுக்க, அயர்லாந்து கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி எட் ஜாய்ஸ் (112), பால்பர்னி (97) ஆகியோரது அவசர அதிரடி ஆட்டத்தின் மூலம் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் குவிக்க தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே பிரெண்டன் டெய்லர் (121 ரன்கள், 91 பந்து, 11 பவுண்டரி 4 சிக்சர்கள்), சான் வில்லியம்ஸ் (96 ரன்கள் 83 பந்து 7 பவுண்டரி, 2 சிக்சர்) ஆகியோரது 21 ஓவர் 149 ரன்கள் அதிரடிக் கூட்டணியில் 326 ரன்கள் வரை போராடி வந்து கடைசி ஓவரில் 3 பந்துகள் மீதமுள்ள நிலையில் தோல்வி கண்டது.
அயர்லாந்து அணியில் பொதுவாகவே அபாரமாக வீசிய கியூசக் கடைசி ஓவரையும் அற்புதமாக வீச கடைசி ஓவரில் தேவைப்படும் 7 வெற்றி ரன்களை ஜிம்பாப்வே எடுக்க விடாமல் செய்து 2 விக்கெட்டுகளை கடைசி ஓவரில் கைப்பற்றி மொத்தம் 4 விக்கெட்டுகளுடன் 9.3 ஓவர்களில் 32 ரன்களையே விட்டுக் கொடுத்தார்.
கெவினோ பிரையன் 10 ஓவர்களில் 90 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இவர் வீசிய 49-வது ஓவரில்தான் ஜிம்பாப்வே வீரர் முபரிவா 2 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடித்து இலக்குக்கு அருகில் கொண்டு வந்தார். மூனி 58 ரன்களுக்கு 2 விக்கெட். டாக்ரெல், மெக்ப்ரைன் தலா 1 விக்கெட்.
ஜிம்பாப்வே தரப்பில் சதரா, ஷான் வில்லியம்ஸ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
ஆட்ட நாயகனாக சதம் எடுத்த அயரலாந்து வீரர் எட் ஜாய்ஸ் தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெறும் நிலையிலிருந்து ஜிம்பாப்வே மீண்டும் ஒரு தோல்வியைத் தழுவியுள்ளது. அந்த அணி இந்தத் தொடரில் சிறப்பாகவே விளையாடி வருகிறது, அன்று கெயில், சாமுயெல்ஸிடம் சிக்கியது. மற்றபடி பாகிஸ்தானுக்கு எதிராகக் கூட வெற்றி பெற்று விடுவோம் என்ற அச்சுறுத்தலை நிகழ்த்தியது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 270 ரன்களுக்கும் மேல் குவித்து லேசாக மிரட்டியது.
இந்த வெற்றி மூலம் அயர்லாந்து 4 போட்டிகளில் 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று 4-ஆம் இடம் பிடித்துள்ளது. தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் 5-இல் 3 வென்று 6 புள்ளிகளுடன் 2 மற்றும் 3ஆம் இடங்களில் இருக்க, அயர்லாந்து 4 போட்டிகளில் 3-ஐ வென்று தற்போது -0.820 நிகர ரன்விகிதத்துடன் 4ஆம் இடத்தில் உள்ளது.
இந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வே வென்றிருந்தால் பி-பிரிவில் நிச்சயமின்மை ஏற்பட்டிருக்கும், ஆனால் தற்போது மே.இ.தீவுகள் நல்ல ரன் விகிதத்துடன் தனது கடைசி லீக் போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் அயர்லாந்தை பேட் செய்ய அழைத்தது. ஜிம்பாப்வே அணியில் கேப்டன் சிகும்பரா காயத்தினால் பிரெண்டன் டெய்லர் கேப்டனாக செயல்பட்டார். அயர்லாந்து அணியின் எட் ஜாய்ஸ் அடித்த 112 ரன்களும், பால்பர்னி எடுத்த 97 ரன்களும் அயர்லாந்து 331 ரன்கள் குவிக்க மையமாக அமைந்தது.
ஜிம்பாப்வே பீல்டர் செய்த தவறினால், தொடக்கத்திலேயே எட் ஜாய்ஸ் பிழைத்தார். 34 ரன்கள் எடுத்திருந்த ஜாய்ஸ், ஜிம்பாப்வே பவுலர் முபரிவா பந்தை அடிக்க முயல பந்து உயரே எழும்பியது முபரிவா அந்த கேட்சைக் கோட்டை விட்டார்.
முன்னதாக பால் ஸ்ட்ர்லிங் (10), பன்யங்கரா பந்தை நேராக பாயிண்டில் வில்லியம்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 34 ரன்களில் கேட்ச் விடப்பட்ட எட் ஜாய்ஸ் அதன் பிறகு அதிரடியைத் தொடங்கி 8 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 96 பந்துகளில் சதமடித்தார். 105 ரன்களில் கிரெய்க் எர்வின் கேட்ச் விட்டார். பிறகு அவரே எளிதான கேட்ச் ஒன்றைப் பிடித்து எட் ஜாய்சை வெளியேற்றினார்.
பால்பர்னிக்கும் ஒரு கடினமான வாய்ப்பை வில்லியம்ஸ் நழுவவிட்டார். ஆனால் பால்பர்னி இம்முறை அபாரமாக ஆடினார். 79 பந்துகளில் 7 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 97 ரன்களில் கடைசி ஓவரில் ரன் அவுட் ஆனார். பால்பர்னி, எட் ஜாய்ஸ் கூட்டணி 3-வது விக்கெட்டுக்காக 138 ரன்களைச் சேர்க்க கெவின் ஓ பிரையன் 24 ரன்களையும், வி.கீ. வில்சன் 25 ரன்களையும் எடுக்க அயர்லாந்து 331 ரன்களை விளாசியது.
டெய்லர்-வில்லியம்ஸ் அசாத்திய அதிரடி:
332 ரன்கள் இலக்கை எதிர்த்துக் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் விரைவில் வீழ்ந்து விட அந்த அணி 74/4 என்று சரிவு முகம் காட்டியது.
ஆனால், அதன் பிறகுதான் அசாத்தியமான அதிரடிக் கூட்டணி அமைந்தது. 5-வது விக்கெட்டுக்காக டெய்லர், வில்லியம்ஸ் ஜோடி 149 ரன்களை சுமார் 23 ஓவர்களில் அடித்து நொறுக்கியது.
பிரெண்டன் டெய்லர் 38 பந்துகளில் அரைசதம் கண்டவர் 79 பந்துகளில் 10 பவுண்டரி 2 சிக்சர்களுடன் சதம் கண்டார். சான் வில்லியம்ஸ் 56 பந்துகளில் 50 ரன்களை எட்டினார். ஆனால் அதன் பிறகு 27 பந்துகளில் 46 ரன்களை விளாசினார்.
டெய்லர் 121 ரன்கள் எடுத்து ஸ்கோர் 223 ரன்களாக இருந்த போது கியூசக் பந்தில் அவுட் ஆனார். முக்கிய வீரர் கிரெய்க் எர்வின் 11 ரன்களில் மெக்பிரைனிடம் வீழ்ந்தார். 259/6 என்ற நிலையில் வில்லியம்ஸ், சகாப்வா சுமார் 4 ஓவர்களில் 43 ரன்களுக்கான கூட்டணி அமைத்தனர். 46.5 ஓவர்களில் 300 ரன்கள் இருந்த போதுதான் சான் வில்லியம்ஸ் 96 ரன்களில் சர்ச்சைக்குரிய கேட்சில் அவுட் ஆனார். பவுண்டரி அருகே மூனி பிடித்த கேட்ச், கேட்ச் அல்ல சிக்ஸ் போலவே தெரிந்தது. ஆனால் வில்லியம்ஸ் காத்திருக்காமல் பெவிலியன் சென்றதால் 8 ரீப்ளேக்கள் முடிவில் அவுட் என்று முடிவானது.
300/7 என்ற நிலையில் முபரிவா இறங்கி 7 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 18 ரன்கள் எடுக்க கடைசி ஓவரில் இலக்கு 7 ரன்களானது.
ஆனால் கியுசக் வீசிய கடைசி ஓவரில் முதல் பந்தில் சகப்வா 17 ரன்களில் இருந்த போது மட்டையின் உள் விளிம்பில் பட்டு ஸ்லோ பந்தில் பவுல்டு ஆனார். சதரா இறங்கி ஒரு ரன் எடுத்து முபரிவாவிடம் ஸ்ட்ரைகைக் கொடுத்தார். மீண்டும் ஒரு ஸ்லோ பந்து தூக்கி அடித்தார். லாங் ஆனில் போர்ட்டர்பீல்ட் கேட்ச் பிடித்தார். ஜிம்பாப்வே 49.3 ஓவர்களில் 326 ரன்களில் ஆட்டமிழந்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரெய்னாவின் ஷார்ட் பிட்ச் பந்து பிரச்சினையை ஊதிப்பெருக்க வேண்டாம்: தோனி
சுரேஷ் ரெய்னா ஷார்ட் பிட்ச் பந்துகளில் திணறுகிறார் என்ற விஷயம் ஊடகங்களால் ஊதிப்பெருக்கப்படுகிறது என்று கூறியுள்ளார் தோனி.
மே.இ.தீவுகளுக்கு எதிராக 22 ரன்களில் டிவைன் ஸ்மித் வீசிய சாதாரண ஷார்ட் பிட்ச் பந்தில் ரெய்னா கேட்ச் கொடுத்து வெளியேறிய விவகாரத்தை செய்தியாளர்கள் கேப்டன் தோனியிடம் எழுப்ப, அவர் கூறும்போது:
“ஊடகங்கள்தான் இதனை ஒரு பெரிய விஷயமாக ஊதிப் பெருக்குகின்றனர். மற்ற நாட்டு வீரர்கள் சிலரும் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு ஆட்டமிழக்கின்றனர். ஆனால் திரும்பத் திரும்ப இது எங்கள் தலையில் வந்து விடிகிறது- அதாவது ரெய்னாவுக்கு ஷார்ட் பிட்ச் பந்துகள் பலவீனம் அவருக்கு ஷார்ட் பிட்ச் வீசுங்கள் என்று தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. நான் நினைக்கிறேன் ரெய்னா நன்றாகவே பேட்டிங் செய்து வருகிறார் என்று...
இந்திய கிரிக்கெட் வரலாற்றை எடுத்துப் பாருங்கள் 5ஆம் நிலை வீரர்கள் எவ்வளவு பேர் சிறப்பாக ஆடியுள்ளார்கள் என்பதை சரிபாருங்கள். யுவராஜ் சிங் மட்டும்தான் சீராக நமக்கு அந்த நிலையில் ஆடிக் கொடுத்துள்ளார், பிறகு அவர் 4ஆம் நிலையில் களமிறக்கப்பட்டார். இல்லையெனில் அந்த நிலையில் மாற்றி மாற்றி வீரர்களைக் களமிறக்கிக் கொண்டிருந்தோம். அந்த நிலையில் விளையாடிய வீரர்களிடம் நீங்கள் கேட்டுப்பாருங்கள், விராட் ஆடியுள்ளார், ரோஹித் ஆடியுள்ளார், ஆனால் ஒருவரும் அந்த நிலையில் திருப்திகரமாக ஆடவில்லை.
ஆகவே, ரெய்னாதான் அந்த நிலையில் களமிறங்க சரியான தேர்வு, நாம் அவரை ஆதரிக்க வேண்டும். நாம் ரெய்னாவை ஆதரிக்கவில்லையெனில் அவருக்குப் பதிலாக புதிய வீரர் வருகிறார் என்று வைத்துக்கொள்வோம், அவர் தனக்காக ஆடத் தொடங்க முடிவெடுத்தால், வளர்த்தெடுக்க அது நல்ல பழக்கம் கிடையாது. இது நம் அணியில் நடக்கக் கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம்.
உதாரணமாக ஒருவர் 40-வது ஓவரில் பேட் செய்கிறார் என்றால், எவ்வளவு ரன்கள் அவர் எடுக்க முடியும்? 20 அல்லது 25 ரன்களில் அவுட் ஆக முடியும். உடனே 3-வது போட்டியின் முடிவில் நாம் என்ன கூறுவோம், ‘அவர் ரன்கள் எடுப்பதில்லை, அவர் ஃபார்மில் இல்லை, 20 ரன்களையே எடுக்கிறார்.’ என்று கூறுவோம்.
இங்குதான் எத்தனை பந்துகளில் ஒருவர் இந்த ரன்களை எடுக்கிறார் என்ற விஷயம் வருகிறது. நீங்கள் கூறும் விவகாரத்தை வலியுறுத்தினால், பேட்ஸ்மென் தன்னலத்துக்காக ஆடத் தொடங்குவார். நாம் எவ்வளவு ரன்கள் எடுக்க முடியுமோ அவ்வளவு ரன்களை குவிக்க வேண்டும், ஏனெனில் நவீன கிரிக்கெட் ஆட்டத்தில் எந்த ஒரு ஸ்கோரும் பாதுகாப்பான ஸ்கோர் கிடையாது.
எனவே 300 வரும் என்றால் அதை 305-ஆக உயர்த்தப் பாடுபடவேண்டும். இப்படியாக விஷயங்கள் உள்ளன...” என்றார் தோனி.
சுரேஷ் ரெய்னா ஷார்ட் பிட்ச் பந்துகளில் திணறுகிறார் என்ற விஷயம் ஊடகங்களால் ஊதிப்பெருக்கப்படுகிறது என்று கூறியுள்ளார் தோனி.
மே.இ.தீவுகளுக்கு எதிராக 22 ரன்களில் டிவைன் ஸ்மித் வீசிய சாதாரண ஷார்ட் பிட்ச் பந்தில் ரெய்னா கேட்ச் கொடுத்து வெளியேறிய விவகாரத்தை செய்தியாளர்கள் கேப்டன் தோனியிடம் எழுப்ப, அவர் கூறும்போது:
“ஊடகங்கள்தான் இதனை ஒரு பெரிய விஷயமாக ஊதிப் பெருக்குகின்றனர். மற்ற நாட்டு வீரர்கள் சிலரும் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு ஆட்டமிழக்கின்றனர். ஆனால் திரும்பத் திரும்ப இது எங்கள் தலையில் வந்து விடிகிறது- அதாவது ரெய்னாவுக்கு ஷார்ட் பிட்ச் பந்துகள் பலவீனம் அவருக்கு ஷார்ட் பிட்ச் வீசுங்கள் என்று தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. நான் நினைக்கிறேன் ரெய்னா நன்றாகவே பேட்டிங் செய்து வருகிறார் என்று...
இந்திய கிரிக்கெட் வரலாற்றை எடுத்துப் பாருங்கள் 5ஆம் நிலை வீரர்கள் எவ்வளவு பேர் சிறப்பாக ஆடியுள்ளார்கள் என்பதை சரிபாருங்கள். யுவராஜ் சிங் மட்டும்தான் சீராக நமக்கு அந்த நிலையில் ஆடிக் கொடுத்துள்ளார், பிறகு அவர் 4ஆம் நிலையில் களமிறக்கப்பட்டார். இல்லையெனில் அந்த நிலையில் மாற்றி மாற்றி வீரர்களைக் களமிறக்கிக் கொண்டிருந்தோம். அந்த நிலையில் விளையாடிய வீரர்களிடம் நீங்கள் கேட்டுப்பாருங்கள், விராட் ஆடியுள்ளார், ரோஹித் ஆடியுள்ளார், ஆனால் ஒருவரும் அந்த நிலையில் திருப்திகரமாக ஆடவில்லை.
ஆகவே, ரெய்னாதான் அந்த நிலையில் களமிறங்க சரியான தேர்வு, நாம் அவரை ஆதரிக்க வேண்டும். நாம் ரெய்னாவை ஆதரிக்கவில்லையெனில் அவருக்குப் பதிலாக புதிய வீரர் வருகிறார் என்று வைத்துக்கொள்வோம், அவர் தனக்காக ஆடத் தொடங்க முடிவெடுத்தால், வளர்த்தெடுக்க அது நல்ல பழக்கம் கிடையாது. இது நம் அணியில் நடக்கக் கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம்.
உதாரணமாக ஒருவர் 40-வது ஓவரில் பேட் செய்கிறார் என்றால், எவ்வளவு ரன்கள் அவர் எடுக்க முடியும்? 20 அல்லது 25 ரன்களில் அவுட் ஆக முடியும். உடனே 3-வது போட்டியின் முடிவில் நாம் என்ன கூறுவோம், ‘அவர் ரன்கள் எடுப்பதில்லை, அவர் ஃபார்மில் இல்லை, 20 ரன்களையே எடுக்கிறார்.’ என்று கூறுவோம்.
இங்குதான் எத்தனை பந்துகளில் ஒருவர் இந்த ரன்களை எடுக்கிறார் என்ற விஷயம் வருகிறது. நீங்கள் கூறும் விவகாரத்தை வலியுறுத்தினால், பேட்ஸ்மென் தன்னலத்துக்காக ஆடத் தொடங்குவார். நாம் எவ்வளவு ரன்கள் எடுக்க முடியுமோ அவ்வளவு ரன்களை குவிக்க வேண்டும், ஏனெனில் நவீன கிரிக்கெட் ஆட்டத்தில் எந்த ஒரு ஸ்கோரும் பாதுகாப்பான ஸ்கோர் கிடையாது.
எனவே 300 வரும் என்றால் அதை 305-ஆக உயர்த்தப் பாடுபடவேண்டும். இப்படியாக விஷயங்கள் உள்ளன...” என்றார் தோனி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
டோனி ஒரு கிரிக்கெட் டாக்டர் தான். மிகவும் ஆழ அகலமாக அலசியிருக்கிறார். அவரின் ரைனா பற்றின கணிப்பு மிகச்சரியே
”உலகக்கோப்பையை நாம் வெல்லப் போகிறோம்” அணியின் இயகுனர் ரவி சாஸ்திரி நம்பிக்கை
உலக கோப்பை போட்டியில் முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது.இது வீரர்களை உற்சாகம் அடைய வைத்து உள்ளது. அவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
தொடர்ச்சியாக 5 வெற்றிகளை நடப்பு உலகக்கோப்பையில் பெற்றுள்ள இந்திய அணி கோப்பையை வெல்லும் தருணம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
"இப்போதுள்ள இந்திய அணியின் ஆட்டத்திறன் படி நாம் நல்ல நிலையில் உள்ளோம். ஒவ்வொரு போட்டியையும் நாக்-அவுட் போட்டியாகவே அணுகினோம். வெற்றிபெறத் தொடங்கிவிட்டால், மகிழ்ச்சி வர வர களைப்பு நீங்கி விடும். தோற்கும்போது தான் ஓய்வறையில் அடைபட்டுக் கிடப்போம். இப்போதைக்கு இந்திய அணியினர் ஒரு மகிழ்ச்சிகரமான குழுவாக இருந்து வருகின்றனர். கால்பந்து விளையாடுகின்றனர், உற்சாகமாகத் இருக்கின்றனர்.
எண்ணிக்கைகளை பூர்த்தி செய்ய நாம் இங்கு வரவில்லை. எந்த ஒரு எதிரணியினருக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் அளிக்கப்போவதில்லை. உலகக்கோப்பையை வெல்லப் போகிறோம்.”
சுனில் கவாஸ்கர் கூறுகையில்
“பந்துவீச்சாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்துப் பாராட்டுகளுக்கும் அவர்கள் உரித்தானவர்களே. இது சிறந்த சாதனையாகும். நிறைய தருணங்களில் பந்து வீச்சாளர்கள் திறமை மீது பேட்ஸ்மென்களின் திறமை என்ற நிழல் படிந்து விடுகிறது. இப்போது பேட்ஸ்மென்களுக்கு புகழ் சென்றடையாது.
பந்து வீச்சாளர்களுக்கு பாராட்டு குவிந்து வருவது மகிழ்ச்சியான விஷயம்.” இவ்வாறு அவர் கூறினார்.
உலக கோப்பை போட்டியில் முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது.இது வீரர்களை உற்சாகம் அடைய வைத்து உள்ளது. அவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
தொடர்ச்சியாக 5 வெற்றிகளை நடப்பு உலகக்கோப்பையில் பெற்றுள்ள இந்திய அணி கோப்பையை வெல்லும் தருணம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
"இப்போதுள்ள இந்திய அணியின் ஆட்டத்திறன் படி நாம் நல்ல நிலையில் உள்ளோம். ஒவ்வொரு போட்டியையும் நாக்-அவுட் போட்டியாகவே அணுகினோம். வெற்றிபெறத் தொடங்கிவிட்டால், மகிழ்ச்சி வர வர களைப்பு நீங்கி விடும். தோற்கும்போது தான் ஓய்வறையில் அடைபட்டுக் கிடப்போம். இப்போதைக்கு இந்திய அணியினர் ஒரு மகிழ்ச்சிகரமான குழுவாக இருந்து வருகின்றனர். கால்பந்து விளையாடுகின்றனர், உற்சாகமாகத் இருக்கின்றனர்.
எண்ணிக்கைகளை பூர்த்தி செய்ய நாம் இங்கு வரவில்லை. எந்த ஒரு எதிரணியினருக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் அளிக்கப்போவதில்லை. உலகக்கோப்பையை வெல்லப் போகிறோம்.”
சுனில் கவாஸ்கர் கூறுகையில்
“பந்துவீச்சாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்துப் பாராட்டுகளுக்கும் அவர்கள் உரித்தானவர்களே. இது சிறந்த சாதனையாகும். நிறைய தருணங்களில் பந்து வீச்சாளர்கள் திறமை மீது பேட்ஸ்மென்களின் திறமை என்ற நிழல் படிந்து விடுகிறது. இப்போது பேட்ஸ்மென்களுக்கு புகழ் சென்றடையாது.
பந்து வீச்சாளர்களுக்கு பாராட்டு குவிந்து வருவது மகிழ்ச்சியான விஷயம்.” இவ்வாறு அவர் கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 6 of 19 • 1 ... 5, 6, 7 ... 12 ... 19
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 19
|
|