புதிய பதிவுகள்
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வேண்டாம் கௌரவக் கொலைகள் Poll_c10 வேண்டாம் கௌரவக் கொலைகள் Poll_m10 வேண்டாம் கௌரவக் கொலைகள் Poll_c10 
71 Posts - 53%
heezulia
 வேண்டாம் கௌரவக் கொலைகள் Poll_c10 வேண்டாம் கௌரவக் கொலைகள் Poll_m10 வேண்டாம் கௌரவக் கொலைகள் Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
 வேண்டாம் கௌரவக் கொலைகள் Poll_c10 வேண்டாம் கௌரவக் கொலைகள் Poll_m10 வேண்டாம் கௌரவக் கொலைகள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
 வேண்டாம் கௌரவக் கொலைகள் Poll_c10 வேண்டாம் கௌரவக் கொலைகள் Poll_m10 வேண்டாம் கௌரவக் கொலைகள் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
 வேண்டாம் கௌரவக் கொலைகள் Poll_c10 வேண்டாம் கௌரவக் கொலைகள் Poll_m10 வேண்டாம் கௌரவக் கொலைகள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 வேண்டாம் கௌரவக் கொலைகள் Poll_c10 வேண்டாம் கௌரவக் கொலைகள் Poll_m10 வேண்டாம் கௌரவக் கொலைகள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 வேண்டாம் கௌரவக் கொலைகள் Poll_c10 வேண்டாம் கௌரவக் கொலைகள் Poll_m10 வேண்டாம் கௌரவக் கொலைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வேண்டாம் கௌரவக் கொலைகள் Poll_c10 வேண்டாம் கௌரவக் கொலைகள் Poll_m10 வேண்டாம் கௌரவக் கொலைகள் Poll_c10 
10 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டாம் கௌரவக் கொலைகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 06, 2015 12:59 am


அண்மையில் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர், கெளரவக் கொலைகள் குறித்த புள்ளிவிவரங்களை சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும் ஒருவரின் திருமண சுதந்திரத்தில் மற்றவர்கள் தலையிடுவதைத் தடுக்க வகை செய்யும் மசோதாவை சட்ட அமைச்சகம் உருவாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தேசிய குற்ற ஆவண அமைப்பின் புள்ளிவிவரத்தின்படி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை, உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஏழு பேரும் பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு பேரும் ஹரியாணா, குஜராத், ஆந்திரம், மகாராஷ்டிரம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் எனவும் மொத்தம் 14 பேர், கெளரவக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இது, அந்த அமைப்புக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலான எண்ணிக்கைதான். உண்மையில், வெளிச்சத்துக்கு வராத சம்பவங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கலாம்.

இந்த கௌரவக் கொலைகளுக்குக் காரணம் காதல்தான். உண்மைக் காதல் எப்போது எப்படி ஏற்படும் என்பதைச் சொல்வதற்கில்லை.

அன்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வளரும் காதல் ஜாதி, மதம், பொருளாதார ஏற்றத்தாழ்வு எதையும் பார்ப்பதில்லை. ஆனால், அவைதான் இந்தக் கெளரவக் கொலைகளுக்கான காரணங்களாகக் கூறப்படுகின்றன.

சில இடங்களில் காதலின் பெயரால் எல்லை மீறுவது, தகாத உறவு, முறை தவறிய காதல் போன்ற ஒழுக்கக் கேடான விஷயங்களும் கௌரவக் கொலைகளுக்குக் காரணங்களாக அமைந்துவிடுகின்றன.

பிள்ளைகளைப் பெற்று, வளர்த்து, படிக்க வைத்து, பெரும் கனவுகளுடன் பெற்றோர் இருக்கும்போது, அவர்களின் மகனோ, மகளோ "காதல்' எனக்கூறி அவர்களின் கனவுகளை வேருடன் பிடுங்கி எறியும்போது, பெரும்பாலோரால் அதனைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை.

சில நேரம் பிள்ளைகளின் காதலை படிக்காதவர்கள்கூட ஏற்றுக்கொள்வார்கள்; படித்தவர்கள் ஏற்பதில்லை. வசதி படைத்தோர்கூட தங்கள் பிள்ளைகளின் காதலை ஏற்றுக்கொள்வர். ஆனால், ஏழைகள் ஏற்பதில்லை.

ஆக, கெளரவக் கொலைக்கு, பாமரர் - படித்தவர், ஏழை - பணக்காரன் என்ற எந்தப் பாகுபாடும் இல்லை.

தங்களது ஜாதிப் பெருமையும் சமூகத்தில் தங்களது நிலையும் என்னாகுமோ, உறவினர்களின் ஏளனப்பேச்சுக்கு உள்ளாகிவிடுவோமோ என்றெல்லாம் யோசிக்க யோசிக்க, கடைசியில் பிள்ளைகள் மீதான அன்பு, கொலை வெறியாக மாறிவிடுகிறது.

"உங்கள் காதலின் உண்மையையும் உறுதியையும் எங்களின் பெருந்தன்மை விஞ்சட்டும்' எனக் கூறி பெற்றோர் அவர்களை ஏற்றுக்கொண்டால் கெளரவக் கொலைகளுக்கு சமூகத்தில் இடமே இருக்காது. ஆனால், அவ்வாறு நடப்பதில்லையே.

சில பெற்றோர், தங்களது எண்ணத்துக்கேற்ப பிள்ளைகள் நடக்கவில்லை எனில் எங்கேயோ அவர்கள் மகிழ்ச்சியாக இருந்துவிட்டுப் போகட்டும் என விட்டுவிடுகின்றனர்.

திருமணம் முடிந்திருந்தாலும் பரவாயில்லை, தங்களது பிள்ளைகளின் மனதை மாற்றி தங்களுடன் அழைத்துவந்து வேறு திருமணம் செய்துவைத்து, ஜாதி - மதப் பெருமையையும், குடும்ப கெளரவத்தையும் நிலைநாட்டி விடலாம் என்பதே சில பெற்றோரின் மனக்கணக்கு.

அதுவும் கைகூட வில்லையெனில் கெளரவக் கொலை ஆயுதத்தைக் கையிலெடுக்கத் தொடங்கிவிடுகின்றனர். இதன் மூலம் இழந்த கெளரவத்தை மீட்டுவிடலாம் என்பது அவர்களது நினைப்பு.

கெளரவக் கொலை என்பது பெரும்பாலும் உணர்ச்சி வசப்பட்டு விநாடி நேரத்தில் நடப்பதில்லை. திட்டமிட்டு நிகழ்த்தப்படும் சம்பவங்களே அதிகம்.

அதிலும், கெளரவக் கொலைக்கு ஆண்களைவிட பெண்களே அதிகமாக பலியாகின்றனர் என்பது பல்வேறு சம்பவங்கள் மூலம் தெரியவரும் அவலம்.

பிள்ளைகள் காதலித்ததாலேயே தங்களது குடும்ப கெளரவம் போய்விட்டதாகக் கவலையும் ஆத்திரமும் கொள்ளும் பெற்றோர், பிள்ளைகளைக் கொல்வதால் "கொலைகாரர்கள்' என்ற தீராத பழிக்கு தாங்கள் உள்ளாகிப்போவோமே என்பதையோ, பிள்ளைகளின் காதலால் காணாமல்போகும் கெளரவம், தாங்கள் கொலைச் செயலில் ஈடுபடுவதால்தான் திரும்பிவிடாது என்பதையோ நினைத்துப் பார்ப்பதில்லை.

உண்மையில், அந்தக் குடும்பத்தின் கெளரவத்தையும், நன்மதிப்பையும் கொலை செய்பவர்கள் பெற்றோர்கள்தானே தவிர, அவர்களது பிள்ளைகள் அல்லர்.

இத்தகைய கெளரவக் கொலைகளை முற்றிலும் தடுக்க வேண்டுமானால் ஜாதி, மதம் குறித்த மக்களின் பார்வை மாற வேண்டும். இன்னமும் ஜாதி, மதச் சேற்றில் சிக்கி உழன்று கொண்டிருப்போருக்கு போதிய விழிப்புணர்வு ஊட்ட வேண்டும். அல்லது தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.

காதல் என்ற போர்வையில் அத்துமீறும் ஆண்களுக்கு தண்டனையும், பாதிக்கப்படும் பெண்களுக்கு நீதியும் உடனடியாகக் கிடைக்க வேண்டும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, காதல் திருமணம் செய்துகொண்டோரைக் காக்க தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும்!

தினமணி



 வேண்டாம் கௌரவக் கொலைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக