புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் Poll_c10கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் Poll_m10கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் Poll_c10 
11 Posts - 50%
heezulia
கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் Poll_c10கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் Poll_m10கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் Poll_c10கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் Poll_m10கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் Poll_c10 
53 Posts - 60%
heezulia
கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் Poll_c10கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் Poll_m10கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் Poll_c10கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் Poll_m10கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் Poll_c10கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் Poll_m10கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 24, 2010 2:31 pm

கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் Pollatha

சட்டத்தையும்நீதியையும் பணக்காரர்களால் சுலபமாக வளைக்க முடியும். அவர்களுக்குஅரசாங்கமும் துணை நிற்கும். அதே நேரத்தில், வலிமையானவர்களால்பாதிக்கப்படும் ஏழை எளியவர்களுக்கு யார் உதவுவது? அவர்களின் மனக்குமுறலைக் கேட்டு நியாயம் சொல்பவர் யார் என்று கேட்டால்-

""கொல்லங்குடியில்நானிருக்கிறேன். கஷ்டப்படுகிறவர்களும் நஷ்டப்பட்டவர்களும் பிணியால்வாடுபவர்களும் தூய உள்ளத்தோடு என்னை நாடிவந்து வணங்கினால் உடனடிப்பரிகாரம் கொடுப்பேன்'' என்று உலகத்துக்கே சொல்லிக் கொண்டிருக்கிறாள்வெட்டுடையாள் காளி.

தென்மாவட்ட வெள்ளந்தி மக்கள் உண்மையை உள்ளத்தில் ஏந்தி, தினம் தினம் வந்துகுவியும் ஆலயம்தான்- சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகேயுள்ளஅரியாகுறிச்சி கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் திருக்கோவிலாகும்.

கொல்லங்குடிபேருந்து நிறுத்தத்திலிருந்து தெற்கே பிரியும் கிளைச்சாலையில் இரண்டுகிலோமீட்டர் தூரம் சென்றால், தென்னந்தோப்பின் நடுவில் அமைந்துள்ளது இந்தக்காளியம்மன் கோவில்.

பலபெருமைகளைக் கொண்ட இத்திருக் கோவிலுக்குக் கூடுதல் சிறப்பாகத் தங்கத்தேர்உருவாக்கப்பட்டு, அதற் கான வெள்ளோட்ட விழா கடந்த மே மாதம் 28-ஆம் தேதிமிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இதில்,இந்து அற நிலையத் துறை அமைச்சர் பெரியகருப்பன், முன்னாள் தலைமை நீதிபதிஏ.ஆர். லட்சுமணன், முன்னாள் அமைச்சர் தென்னவன், காளையார் கோவில் சேர்மன்சத்தியநாதன், ராஜ்யசபை எம்.பி. சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி கற்பூர சுந்தரபாண்டியன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

அறநிலையத்துறையின்கீழ் செயல்படும் சிவகங்கை மாவட்டக் கோவில்களிலேயே முதன் முதலில்தங்கத்தேர் உள்ள கோவிலாக கொல்லங்குடி கோவில் இடம் பெற்றுள்ளதுதனிச்சிறப்பாகும்.

கோவில்அறங்காவலர் குழுவினரில் ஒருவரான இரா. தட்சிணா மூர்த்தி, ""பிரபலமான பெண்தெய்வ ஆலயங்கள் அமைந்த மாவட்டம் சிவகங்கை. அதிலும் விசேஷமாக கொல்லங்குடிவெட்டுடை யாள் காளியம்மன் மிகவும் பிரசித்தி பெற்றவள். நம்பிவருபவர்களுக்குக் கருணைப் புன்னகை புரிவாள்; கெடுதல் நினைப்பவர்களுக்குஉடனடி தண்டனை தருவாள். இது வரை நான்குமுறை இக் கோவிலுக்குக் குடமுழுக்குமிகச் சிறப்பாகச் செய்யப் பட்டுள்ளது. அறநிலையத் துறையுடன் இணைந்துஇக்கோவிலுக்குத் தேவையான பணிகளைச் செய்து வருகிறோம். அதில் ஒன்றாகத்தான்ஒன்றரை கோடி ரூபாய் செலவில் இன்று சிறப்பாகத் தங்கத்தேர்உருவாக்கப்பட்டுள்ளது! அதுமட்டுமல்லாமல் விரைவில் இக்கோவிலுக்குத் தங்கக்கொடிமரம், தங்கக் குதிரை வாகனம், வெள்ளி சிம்ம வாகனம் போன்றவற்றைச்செய்வதற்கும் ஏற்பாடு செய்து வருகிறோம்'' என்றார்.

அறங்காவலர்குழுத் தலைவரான கதிரேசன் செட்டியாரின் மனைவி யும் புலவருமான கமலாவதிகதிரேசன், ""நகரத்தார் மக்கள் மிகவும் அஞ்சி நடுங்கி அர்ப்பணிப்புடன் சேவைசெய்யும் திருக்கோவில்களில் இந்த கொல்லங்குடி வெட்டுடையாள் காளிகோவிலுக்கு முதலிடம் உண்டு. நம்பிக்கைத் துரோகம், பித்தலாட்டம் செய்பவர்களை காளியாத்தாள் விடமாட்டாள். நீதி மன்றத்தில் கிடைக்காத நீதியை இந்தக்காளி தருவாள். நாட்டரசன்கோட்டையை கண்ணாத் தாளும், திருவெற்றியூரைபாகம்பிரியாளும் காத்தருள்வது மாதிரி, இந்த வட்டார மக்களை வெட்டுடையாள்காளிதான் காத்து வருகிறாள்'' என்றார்.

திருக்கோவிலின்செயல் அலுவலர் சா. ஜக நாதன், ""இது மிகச் சிறந்த பிரார்த்தனைத் தலம்.மேற்கு நோக்கி அருள்புரியும் இந்தக் காளி சத்தியத்தை நிலைநாட்டுவதில்குறிப்பாக இருப்பவள். தமிழ்நாட்டிலேயே காசு வெட்டிப் போட்டு நியாயம்கேட்டுப் பெறும் ஒரே இடம் இதுதான். இவ்வாறு சிறப்புடன் வீற்றிருந்துஅருள்பாலிக்கும் காளியம் மனுக்குத் தங்கத் தேர் செய்வதற்கு இக்கோவில்அறங்காவலர் குழுவும் பொதுமக்களும் தீர்மானம் செய்து, அது தமிழக அரசுக்குஅனுப்பப்பட்டது. அதை ஆமோதித்து தமிழக அரசும் சட்டசபையில் அறி வித்தது.கடந்த 29-9-2008-ல் மாண்புமிகு அறநிலையத் துறை அமைச்சரால் இதற்கானதிருப்பணி துவங் கப்பட்டது. மிக விரைவாக இத்திருப்பணியைச் செய்துமுடித்துள்ளோம். எல்லாம் அந்தக் காளியின் அருள்தான்'' என்றார்.

இந்தக்கோவிலில் குலவாளர் என்றழைக் கப்படும் வேளார்கள்தான் பல தலைமுறைகளாகஅர்ச்சகர்களாக இருந்து வருகிறார்கள். தற்போதுள்ள அர்ச்சகர்களான மூர்த்தி,புஷ்ப ராஜ், சந்திரன், சுகுமாரன், சேகர் ஆகியோர் கோவிலின் தலவரலாற்றைக்கூறினார்கள். ""இந்தக் காளியம்மன் கோவில் சுமார் 700 வருடங்கள் பழமையானது.ஆரம்பத்துல இங்கு காளிகோவில் இல்லை. ஈச்சங்காடும் காரைச் செடிகளும்முட்புதர்களும் பரவிக் கிடந்த இந்த நிலத்தில் அய்யனார் கோவில்தான்இருந்திருக்கிறது. மக்கள் யாரும் வந்து போகாத காட்டில் வேளார் குடும்பம்ஒன்று அய்ய னாரை வணங்கி வந்திருக்கிறது. அந்தக் குடும் பத்தின் ஆண்வாரிசுகள் இருவர். மூத்தவர் காரிவேளார். இளையவர் கருப்பவேளார். இருவரும்முறை போட்டு அய்யனாருக்குப் பூஜை செய்து வந்தனர்.

ஒருசந்தர்ப்பத்தில் காரிவேளார் கேரளா சென்று பேய், பிசாசு, பில்லி, சூன்யம்ஆகிய வற்றை அகற்றுவதற்குரிய மந்திர சக்திகளையும், தேவதைகளை அடக்கக்கூடியமாந்திரீக வித்தைகளையும் தெரிந்துகொண்டு திரும்பி வந்தார்.

தான்பயின்ற வித்தைகளை நடத்திக் காண்பிக்க சிறு தேவதைகளையும் துஷ்டதேவதைகளையும் ஏவல் கொண்டிருந்தார். இவர் பூஜை செய்துவரும் காலங்களில் அய்யனார் சந்நிதிக்கு முன்பு மணல் பரப்பில் சில அட்சரங்கள் எழுதப்பட்டிருந்தன.மணலில் எழுதப்பட்ட அந்த அட்சரங்கள் அழியாமல் அப்படியே இருப்பதைக் கண்டஅவர், அந்த அட்சரங்கள் யாவும் காளிக்குரியது என்பதை அறிந்து அங்குகாளியின் திருவுருவை பிரதிஷ்டை செய்தார். அவ்வாறு கோவில் கொண்டவளேவெட்டுடையாள் காளியம்மன். "வெட்டுடைய' என்ற பெயர் ஏன் வந்தது என்றால்இங்கு ஆதியிலிருந்த அய்யனார் ஈச்சங்காட்டிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டவர்என்பதால் அவருக்கு வெட்டுடைய அய்யனார் என்றும்; அவர் கோவிலுக்கு முன்புஉருவான காளி என்பதால் வெட்டுடைய காளி என்றும் பெயர் உருவாயிற்று.

இத்திருக்கோவிலுக்குள்அம்பிகையின் நேர் எதிரே அய்யனார் கிழக்கு நோக்கியும், அம்பி கையோ மேற்குநோக்கியும் அமர்ந்திருக்கிறார் கள். அய்யனாரை வழிபட்டும், காளியைப்பிரதிஷ்டை செய்து வழிபட்டும் வந்ததால், வேளார் சமூக மக்களாகிய நாங்களேஇங்கு பரம்பரை அர்ச்சகர்களாக இருந்து வருகி றோம். அறங்காவலர் குழுவிலும்எங்களுக்கு ஒரு பிரதிநிதித்துவம் உண்டு.

இங்குகாசு வெட்டிப் போட்டு நியாயம் கேட்க வருகின்ற பக்தர்கள் இருக்கிறார்கள்.அதே நேரத்தில் தப்பானவர்கள் காசு வெட்டிப் போட்டால், அது அவர்கள்மீதேபாய்ந்துவிடும்! நியாயமான கோரிக்கை உடனே பலிக்கும்.

இங்கு தமிழ், சமஸ்கிருதம் என இரு மொழி களிலும் பூஜைகள் செய்கிறோம். ஆகமம் தெரிந்தவர்களும் எங்களிடம் இருக்கிறார்கள்'' என்றனர்.

கொல்லங்குடிகாளி கோவிலின் பரம்பரை அர்ச்சகர்கள் புராண வகையில் தலவரலாறு சொன்னாலும்,சிவகங்கை பகுதி வரலாற்று ஆய்வாளர்களும் தமிழ் ஆய்வாளர்களும் வெட்டுடையாள் காளி கோவில் பற்றி ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தைக்கூறினர். ""ஆங்கிலேய அரசாங்கத் துக்கு எதிராகக் கலகம் செய்வதற்காகப் புரட்சிப் படையை உரு வாக்கிக் கொண்டிருந்த மருது சகோதரர்கள் சிவகங்கைப்பகுதியில் தீவிரமாகச் செயல் பட்டுக் கொண்டிருந்த னர். அவர்களைக்கொல்வதற்கு அலைந்த ஆங்கிலேயப் படையினர், ஒருமுறை மருது சகோதரர்களைத் தேடிகொல்லங்குடி வந்திருக் கின்றனர். அங்கு ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்தஉடை யாள் என்ற தாழ்த்தப் பட்ட சமூகப் பெண்ணிடம் விசாரித்தனர். அவ ளுக்குமருது சகோதரர்கள் மறைந்திருக்கும் இடமும் தெரியும்; அவர்கள் நாட்டுக்காகப்பாடுபடும் கதையும் தெரியும். அதனால் வெள்ளை அதிகாரிகளிடம் அவர்கள்ஒளிந்திருந்த இடத் தைக் காட்டிக் கொடுக்கவில்லை. எவ்வளவோ ஆசை வார்த்தைகள்கூறி யும், அதட்டிக் கேட்டும் உடையாள் சொல்ல மறுத்ததால், கோபம் கொண்டஆங்கிலேயர் கள் உடையாளை இரண்டு துண்டாக வெட்டிப் போட்டனர். அந்தத்தியாகத்தைப் போற்றும் வண்ணம் சிவகங்கை வட்டார மக்கள், வெட்டுப்பட்ட உடையாளுக்குக் கோவில் எழுப்பி, அவளை கிராம காவல் தெய்வமாக வணங்கி வரஆரம்பித்தனர். தமிழர் களிடமுள்ள முன்னோர் களை வணங்கும் மரபு தான்கொல்லங்குடி வெட்டுடையாளுக்கும் தொடர்கிறது'' என்றனர்.

இந்தக்கோவில் தோன்றியதற்கான வரலாறு வெவ்வேறாக இருந்தாலும் அவை சொல்லுகின்ற நீதி ஒன்றுதான்.

அது, "தவறு செய்பவர்களுக்குத் தண்டனை நிச்சயம் உண்டு' என்பதே!



கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Jan 24, 2010 2:36 pm

"தவறு செய்பவர்களுக்குத் தண்டனை நிச்சயம் உண்டு'


வாழ்த்துக்கள் நன்றி அண்ணா.. கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் 677196 கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் 677196 கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் 677196 கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Jan 24, 2010 2:47 pm

பதிவிற்கு நன்றி சிவா!

தமிழ்நாட்டில் கோவில்களின் இருக்கும் ஒரு சில பூசாரிகள், பிச்சை வாங்கும் ஏழை மக்களை விட கேவலமாக இருக்கிறார்கள். அர்சனை என்ற பெயரில் இவர்களின் தொல்லை மிகவும் அருவருக்கத்தக்க வகையில் இருக்கிறது.



கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 24, 2010 2:49 pm

கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் T_500_661


இருப்பிடம் :
மதுரையிலிருந்து சிவகங்கை வழியாக தொண்டி செல்லும் பாதையில் சென்றால் கொல்லங்குடி. அங்கிருந்து 2 கி.மீ., தூரம் சென்றால் அரியாங்குறிச்சி வரும். அங்கு தான் வெட்டுடையார் காளியம்மன் கோயில் உள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம் :
சிவகங்கை

அருகிலுள்ள விமான நிலையம் :
மதுரை



கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Jan 24, 2010 2:54 pm

kirupairajah wrote:பதிவிற்கு நன்றி சிவா!

தமிழ்நாட்டில் கோவில்களின் இருக்கும் ஒரு சில பூசாரிகள், பிச்சை வாங்கும் ஏழை மக்களை விட கேவலமாக இருக்கிறார்கள். அர்சனை என்ற பெயரில் இவர்களின் தொல்லை மிகவும் அருவருக்கத்தக்க வகையில் இருக்கிறது.


கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் 677196 கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் 677196 கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 24, 2010 3:41 pm





கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 24, 2010 3:43 pm

கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் 677196 நல்ல கட்டுரை ,

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 07, 2015 12:25 am

kirupairajah wrote:பதிவிற்கு நன்றி சிவா!

தமிழ்நாட்டில் கோவில்களின் இருக்கும் ஒரு சில பூசாரிகள், பிச்சை வாங்கும் ஏழை மக்களை விட கேவலமாக இருக்கிறார்கள். அர்சனை என்ற பெயரில் இவர்களின் தொல்லை மிகவும் அருவருக்கத்தக்க வகையில் இருக்கிறது.


எனக்குத் தெரிந்தவரை பிள்ளையார்பட்டி கோவிலில் மட்டுமே எதற்கும் பணம் வாங்குவதில்லை, காலணிகளை பாதுகாக்கும் இடத்திலும் பணம் கேட்கமாட்டார்கள்! மற்ற அனைத்துக் கோவில் நிர்வாகமும் பணம் பறிக்கும் கொள்ளையர்களைப் போலத்தான் செயல்படுகின்றன.



கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Feb 07, 2015 1:18 pm

நல்ல பதிவு ! தொடர்க நண்பரே!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக