புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
3 Posts - 3%
prajai
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
3 Posts - 3%
manikavi
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
2 Posts - 2%
Rutu
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
214 Posts - 42%
heezulia
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
18 Posts - 4%
sugumaran
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
6 Posts - 1%
manikavi
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
4 Posts - 1%
prajai
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 21, 2015 11:25 pm

அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் FB1D9372-602D-453C-9E39-A89B3987E6FD_L_styvpfஒரு யோகியால் இயற்கையின் பல விதிகளைத் தன்வசப்படுத்தி ஜெயிக்க முடியும். அதற்கான எத்தனையோ உதாரணங்களை இது வரை பார்த்து விட்டோம். இனி புவி ஈர்ப்பு விசையை வென்று, அந்தரத்தில் மிதக்க முடிந்த யோக சக்தியைப் பார்ப்போம்.

அந்தரத்தில் மிதப்பது இந்திய யோகிகளுக்கு மட்டும் முடிந்த சக்தி அல்ல. அந்த சக்தி கொண்டவர்களைப் பற்றிய உதாரணங்களை ஐரோப்பா, ஆசியா கண்ட நாடுகளின் வரலாற்றுப் பக்கங்களில் நம்மால் பார்க்க முடியும்.

பதினாறாம் நூற்றாண்டில் ஸ்பெயினின் அவிலாவைச் சேர்ந்த புனித தெரசா, ஆழ்ந்த இறை நிலை அனுபவங்களின் போது தரையில் இருந்து சுமார் ஒன்றரை அடி மேலே அந்தரத்தில் மிதப்பார் என்றும், அப்படியே சுமார் அரை மணி நேரம் அந்தரத்தில் இருப்பார் என்றும் கண்டவர்கள் கூறியிருக்கிறார்கள். அதே போல பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த திபெத்திய குரு மிலாரெப்பாவும், அந்தரத்தில் மிதக்கவும் நடக்கவும் முடிந்தவர் என்று சொல்கிறார்கள். சீன ஷாவொலின் பிக்குகளில் சிலரும் குறுகிய காலத்திற்கு புவி ஈர்ப்பு சக்தியை வெல்ல வல்லவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் இந்த குறிப்பிட்ட சக்தி பரவலாக உலகின் பல பகுதிகளில் குறிப்பிட்ட சிலரிடம் இருந்திருக்கிறது என்றே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நம் நாட்டின் ஒரு யோகி, அதுவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு யோகி இந்த மகாசக்தியைப் பெற்றிருந்தார். அவர் பலர் முன்னிலையில் அந்தரத்தில் படுத்த காட்சியை ஒரு ஆங்கிலேயர் புகைப்படம் எடுத்து, அந்தப் புகைப்படத்துடன் கூடிய செய்தி ஒரு பிரபல இங்கிலாந்துப் பத்திரிகையில் வெளியாகி இருக்கிறது. அந்த சுவாரசியமான நிகழ்ச்சியை இனி பார்ப்போம்.

அந்த யோகியின் பெயர் சுப்பையா புலவர். (அவரைப் புகைப்படம் எடுத்த ஆங்கிலேயர் அவரை சுப்பையா புல்லவர் (Subbayah Pullavar) என்று குறிப்பிட்டதால், அந்தப் பெயரையே ஆங்கிலப் பத்திரிகையும் பயன்படுத்தி இருக்கிறது. தமிழ் யோகி என்பதால் சுப்பையா புலவர் என்பதே அவரது சரியான பெயராக இருக்கலாம் என்று நமக்குத் தோன்றுகிறது).

யோகி சுப்பையா புலவர் அந்தரத்தில் சிறிது நேரம் இருக்க முடிந்தவர். அவர் அப்படி 1936–ம் ஆண்டு ஜூன் மாதம் ஆறாம் தேதி ஒரு பொது இடத்தில் இருந்து காட்டுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதைக் கேள்விப்பட்ட பி.டி.ப்ளங்கெட்(P.T. Plunkett) என்ற பிரிட்டிஷ் தேயிலைத் தோட்டக்காரருக்கு ஆச்சரியமும் சந்தேகமும் ஒருசேர ஏற்பட்டன. மிகுந்த ஆர்வத்துடன் கேமரா சகிதம் குறிப்பிட்ட நாளில், அந்த இடத்தை அடைந்தார்.

அந்த இடத்தில் சுமார் 150 பேர் நிகழ்ச்சியைக் காண நண்பகல் வேளையில் குழுமி இருந்தனர். மேகங்கள் இல்லாமல் ஆகாயம் தெளிவாக இருந்தது. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில், ஏமாற்றுவேலை நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதை பி.டி.ப்ளங்கெட் கண்டார். சுப்பையா புலவரின் சீடர்கள் முதலில் அந்த இடத்தில் ஒரு கூடாரம் எழுப்பினார்கள். பின் கூடாரத்தைச் சுற்றிலும் தண்ணீர் தெளித்தார்கள். தண்ணீர் தெளித்த இடத்தைத் தாண்டி செருப்புக் காலோடு உள்ளே செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என்பதைத் தெரிவித்தார்கள்.

சற்று நேரத்தில் சுப்பையா புலவர் வந்தார். அவர் கருத்த நிறத்தோடு உயரமாகவும், மெலிந்த உடல்வாகோடும் இருந்தார். எல்லோரும் பரபரப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கையில், சுப்பையா புலவர் கூடாரத்திற்குள் நுழைந்து சில நிமிடங்கள் மறைவாக இருந்தார். அதன் பிறகு அவரது சீடர்கள் கூடாரத்தை அவிழ்த்து விட்டார்கள். சுப்பையா புலவர் பூமியிலிருந்து சில அடிகள் உயரத்தில் அந்தரத்தில் படுத்துக் கொண்டிருந்தார். ஒரு கையில் தலையை வைத்துப் படுத்துக் கொண்டிருந்த அவர், மறு கையை ஒரு கம்பின் நுனியில் வெறுமனே வைத்துக் கொண்டிருந்தார். அந்தக் கம்பில் அவர் எந்த பலமும் பிரயோகிக்காமல் இருந்தது மிகவும் தெளிவாகத் தெரிந்தது. அந்தக் கம்பை துணி சுற்றி மூடி இருந்தார்கள்.

பி.டி.ப்ளங்கெட்டும் மற்ற பார்வையாளர்களும் பிரமித்துப் போனார்கள். பி.டி.ப்ளங்கெட் உட்பட அனைவரும் சுப்பையா புலவர் அந்தரத்தில் படுத்துக் கொண்டிருந்த காட்சியைக் கூர்ந்து கவனித்தார்கள். அனைவரும் படுத்துக் கொண்டும், உட்கார்ந்து கொண்டும் பல கோணங்களில் பார்த்தார்கள். எந்த தில்லுமுல்லும் அவர்களுக்குப் புலப்படவில்லை. சுப்பையா புலவரைத் தாங்கிப் பிடிக்க கண்ணுக்குத் தெரியாத மறை பொருட்கள் எதுவும் கூட இல்லை. அப்படி ஏதாவது இருக்கிறதா? என்பதை ஆராய அங்கிருந்தவர்களுக்கு அனுமதி தரப்பட்டது. பரபரப்புடன் பி.டி.ப்ளங்கெட்டும் மற்றவர்களும் அருகில் சென்று மேலேயும் கீழேயும் கூர்ந்து பார்த்தார்கள். கம்பின் மீது அவர் வைத்திருந்த கையையும் ஆராய்ந்தார்கள். அந்தக் கம்பில் சுப்பையா புலவர் சிறிதாவது பலத்தைப் பிரயோகித்திருந்தால் அருகிலிருந்து பார்க்கும் அவர்களுக்குத் தெரியாமல் போக வாய்ப்பே இல்லை. அப்படி பலம் பிரயோகித்து பிடித்துக் கொண்டிருந்தாலும் அந்தப் பலத்தில் குறுக்கே நீண்ட நேரம் படுப்பதும் சாத்தியமில்லை. பி.டி.ப்ளங்கெட் அவரைப் பல கோணங்களில் புகைப்படம் எடுத்தார்.

நான்கு நிமிடங்கள் அப்படியே இருந்து அனைவரையும் சுப்பையா புலவர் ஆச்சரியத்தில் மூழ்க வைத்தார். பின்னர் அனைவரையும் அந்த வட்டத்திற்கு வெளியே போகச் சொன்னார்கள். அனைவரும் தங்கள் பழைய இடங்களுக்குச் சென்று அமர்ந்து கொள்ள, சுப்பையா புலவரின் சீடர்கள் பழையபடி சுப்பையா புலவரைச் சுற்றி கூடாரத்தை எழுப்பினார்கள். கூடாரத்தின் உள்ளே சுப்பையா புலவர் அந்தரத்திலேயே ஊசலாட ஆரம்பித்தது, சூரிய வெளிச்சத்தின் உதவியால் கூடாரத்துணி வழியாக பி.டி.ப்ளங்கெட்டுக்கு மங்கலாகத் தெரிந்தது. கடைசியில் அப்படியே சுப்பையா புலவர் தரையில் சரிந்தார். பழையபடி கூடாரம் கலைக்கப்பட்டது. சுப்பையா புலவர் கட்டையைப் போல ஒருவித ஆழ்தியான நிலையில் படுத்திருந்தார்.

அவரது கை, கால்களை மடக்க முயன்ற சீடர்களுக்கு அது எளிதில் முடியாமல் போக, அவர்கள் பார்வையாளர்களை உதவிக்கு அழைத்தார்கள். பார்வையாளர்கள் முயன்றும் கட்டை போல் விறைத்திருந்த அவரது கை, கால்களை மடக்க முடியவில்லை. கடைசியில் சுப்பையா புலவரின் முகத்தில் சீடர்கள் நீரைத் தெளித்தார்கள். பின் அவர் கை கால்களைத் தேய்த்து சூடாக்கிய பின், பழைய நிலைக்குத் திரும்பினார்.

இந்த நிகழ்ச்சியை The Illustrated London News என்ற இங்கிலாந்துப் பத்திரிகை பி.டி.ப்ளங்கெட்டின் புகைப்படங்களுடன் பிரசுரித்தது. அமானுஷ்ய நிகழ்வுகளில் ஆர்வம் உள்ள பலரையும் அந்தச் செய்தி ஈர்த்தது. அந்தத் தெளிவான புகைப்படங்கள் அந்த நிகழ்ச்சியில் தில்லு முல்லு எதுவும் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தியது. காரணம் 1936–ம் ஆண்டு காலத்தில் எல்லாம் புகைப்படம் எடுப்பதே அரிதானதாக இருந்ததால் புகைப்படங்களில் போலியான மாற்றங்கள் செய்யும் நவீன நுட்ப வித்தைகள் ஆரம்பித்திருக்கவில்லை.

சொல்லப்போனால் புகைப்படங்கள் மூலமாகத் தான் சில போலி தந்திரங்களை அடையாளம் கண்டார்கள். உதாரணத்திற்கு கயிறு வித்தை (Rope Trick ) என்று அக்காலத்தில் பிரபலமான வித்தையைச் சொல்லலாம்.

இந்த வித்தையில் கயிறு ஒன்றை வித்தை காட்டுபவர் எல்லோரிடமும் காட்டி, அது கயிறுதான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளச் சொல்வார். பிறகு கயிறை உதறி கம்பு போல் நிற்க வைத்து வித்தை காட்டுபவர் கம்பில் மேலேறி நுனிக்குச் செல்வார்.

இது பார்ப்பவர்களை நம்ப வைக்கும் ஒரு வகை ஹிப்னாடிச வித்தை. இந்தக் காட்சியைப் படமெடுத்துப் பார்த்தால் கயிறு தரையிலேயே விழுந்து கிடக்கும். வித்தை காட்டுபவர் ஒரு இடத்தில் பதுங்கி இருப்பார். இதைப் பலர் படமெடுத்து வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதனால் புகைப்படங்கள் எடுத்த பின்னும் காட்சிகள் பார்த்தபடியே பதிவாகி இருந்தது அனைவரையும் நம்ப வைத்தது. துரதிர்ஷ்டவசமாக பி.டி.ப்ளங்கெட் மூலம் அந்தப் பத்திரிகையில் வந்த செய்தி தவிர, சுப்பையா புலவர் பற்றிய வேறு எந்தத் தகவல்களும் நமக்கு கிடைக்கவில்லை.

என்.கணேசன் @ தினத்தந்தி



அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Feb 22, 2015 11:13 am

ஆச்சரியமாக உள்ளது

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Feb 22, 2015 3:42 pm

பாவம் சாமியாரு, யாராச்சம் நல்ல மெத்தை வாங்க தாருங்களேன், நிம்மதியா படுத்து தூங்கட்டும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக