புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_m10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10 
306 Posts - 42%
heezulia
தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_m10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_m10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_m10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10 
27 Posts - 4%
sugumaran
தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_m10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_m10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_m10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10 
6 Posts - 1%
prajai
தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_m10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_m10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
manikavi
தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_m10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்வை சந்திப்பது எப்படி?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Mar 02, 2015 2:52 pm

இன்னும் ஒரு சில நாட்களில் பொதுத் தேர்வு துவங்க இருக்கிறது. எவ்வளவு தான் சிறப்பாக படித்திருந்தாலும், தேர்வு நாள் நெருங்க நெருங்க பெரும்பாலான மாணவ – மாணவியருக்கு பயம், பதற்றம் மற்றும் டென்ஷன் ஏற்பட்டு, படித்ததெல்லாம் மறந்து விடும் நிலைமைக்கு ஆளாகின்றனர். இது, முழுக்க முழுக்க தவிர்க்கப்பட வேண்டியது. தன்னம்பிக்கையை வளர்த்து, வெற்றி பெற, கீழே உள்ள, ‘டிப்ஸ்’கள் உங்களுக்கு பயன்படும். படித்து பயன் பெறுங்களேன்.
தேர்வை சந்திப்பது எப்படி? OB07ma4qQj6TNCoZk0X1+plus-2-exam
தேர்வை சந்திப்பது எப்படி?
* திட்டமிடாமல் கடைசி நேரத்தில் படிப்பது மற்றும் அவசரப்படுவது, டென்ஷனைத் தான் உருவாக்கும்.

* உங்கள் லட்சியங்களையும், ஒளிமயமான எதிர்காலத்தையும் எண்ணிப் பார்த்து, அதிக மதிப்பெண்கள் பெற உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். மதிப்பெண் பட்டியல் என்பது, உங்கள் எதிர்காலத்தின் பாஸ்போர்ட் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டால், படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுவிடும்.

* ஒருநாள் முழுவதும் செய்ய வேண்டிய, படிக்க வேண்டிய வேலையை பட்டியலிட்டு, உடனே படிக்க வேண்டியதை அவசரம் என்றும், உடனே படிக்க வேண்டாததை, முக்கியம் என்றும் குறியுங்கள். அவசரம் என்று இருப்பதை அதிகாலையிலும், முக்கியமானதை மாலையிலும் படிக்கலாம். எழுத்து வேலைகளை நிதானமாக செய்யலாம்.

* பயம் உங்கள் உடல் மற்றும் மனதை செயல் இழக்கச் செய்வதுடன், தூக்கமின்மை, தாழ்வு மனப்பான்மை, அவநம்பிக்கை மற்றும் எதிர்மறை எண்ணங்களை உருவாக்கி, உங்களை அழித்து விடும். அதனால், பயத்தை விட்டொழியுங்கள்!

* எவ்வளவு புத்திசாலித்தனமாக திட்டமிட்டாலும், நேரம் வீணாவது என்னவோ நடந்து கொண்டு தான் இருக்கும். அதனால், பாடங்களை பகிர்ந்தளித்து நேரத்தை மிச்சப்படுத்துங்கள். படிப்பதை ஒத்தி போடாமல், எதைப்படித்தாலும் விரைவாகவும், சுறுசுறுப்பாகவும் படியுங்கள்.

* படிப்பதற்கு அதிகாலை நேரமே ஏற்றது. அதிகாலைப் பொழுதில் மனமும், உடலும் மிகவும் ஒன்றிணைந்து இருக்கும்.

* பொதுவாக, இரவில் அதிகபட்சம், 11:00 மணி வரை படிக்கலாம்; பின், ஐந்து மணி நேரம் நிம்மதியான தூக்கம். அதன்பின், அதிகாலை 4:00 மணிக்கு எழுந்து படிக்கும் போது, மனதில் பாடங்கள் பசுமரத்தாணி போல பதியும்.

* நாள் முழுவதும் படித்தாலும், முக்கியமற்ற பாடங்களுக்காக நேரத்தை செலவிட்டால், அதில் எவ்வித பயனும் ஏற்படாது. எனவே, எந்தப் பாடங்கள் முக்கியம், எந்தப்பாடங்கள் உங்களுக்கு எளிமை, எந்தப்பாடங்களை படிக்க விரும்புகிறீர்கள், கடினமான மற்றும் புரியாத பாடங்கள் எவை என்று கண்டறிந்து, திட்டமிட்டு நேரத்தை செலவிடுங்கள்.

* ஒரு பாடத்தை படிக்கும் போது, மொத்தமாக படிக்காமல், அதை பல பிரிவுகளாக பிரித்து, சிறு சிறு தலைப்புகளைச் சூட்டி, அதை குறிப்புகளாக தயாரித்து படிக்கலாம். அக்குறிப்புகள் அப்பாடத்தின் கருத்தை எளிதில் ஞாபகத்திற்கு கொண்டு வருவதுடன், தேர்வு நேரத்தில் எளிதில் ஞாபகத்திற்கு வரும்.

* கண்டிப்பாக எந்த ஒரு செயலையும் தொடர்ந்து செய்யக் கூடாது. படிக்கும் போது ஒவ்வொரு மணி நேரத்துக்கும், ஐந்து நிமிடம் இடைவெளி கொடுக்கலாம். தொடர்ந்து படிப்பதால், மூளை எளிதில் சோர்வடைந்து விடும். திறந்த வெளி அல்லது ஜன்னலின் ஓரம் நின்று, நன்றாக மூச்சை இழுத்து, மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். காலாற நடந்த பின்போ, உங்களுக்கு பிடித்தமான இசையை கேட்ட பின்போ படிக்கலாம். ஆனால், மறுபடியும் படிப்பதை மறக்காமல் தொடர வேண்டும்.

* நீண்ட நேரம் தூங்காமல், தொடர்ந்து படிக்கும் போது, கண்கள் சோர்ந்து, களைத்து விடும். அதனால், தூங்க தயாராகும் போது, வெள்ளரித்துண்டை மூடிய இமையின் மேல் சிறிது நேரம் வைத்து படுத்தால், கண்கள் பிரகாசத்துடன், ‘பளிச்’சென்று இருக்கும்.

* கீரைகள், பழங்கள், காய்கறிகள், கொண்டைக்கடலை, பேரீட்சை, பாதாம் பருப்பு, பசும் பால் மற்றும் தயிர் ஆகியவற்றை தேர்வு நேரத்தின் போது, கட்டாயம் உண்ண வேண்டும்.

* மாணவர்கள் படிக்கும் போது அமைதியான, நிசப்தமான சூழ்நிலை தேவை. அதனால், பொற்றோர், மாணவர்களின் கவனத்தை களையும் வகையிலான, தேவையற்ற சத்தத்தை வீட்டில் குறையுங்கள்.

* தேர்வு நாளில் எளிய உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சிகள் மற்றும் யோகா பயிற்சிகளை, 10 நிமிடங்கள் செய்யுங்கள். பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் மாதவிலக்கு வயிற்று வலியும், அதிக ரத்தப் போக்கும் தேர்வு பயத்தில் அதிகமாகலாம். இது, உடல் மற்றும் மனநிலையை பாதிக்கும் என்பதால், முதலிலேயே மருத்துவரை சந்தித்து, ஆலோசனை பெறுவது அவசியம்.

தேர்வு நாளை சந்திப்பது எப்படி என்று பார்ப்போம்…
தேர்வுக்கு தேவையான உபகரணங்களான பேனா 2 (மை நிரப்பி), பென்சில், ரப்பர், ஸ்கேல் மற்றும் ஷார்ப்னர் போன்றவற்றை முதல் நாளே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஹால் டிக்கெட், அடையாள அட்டை மற்றும் பஸ் பாஸ் இவை உங்கள் பையிலேயே இருக்கட்டும். குளுக்கோஸ் கலந்த நீர் கொண்டு செல்லவும். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். சரியான நேரத்தை காட்டும் கடிகாரத்தை கட்டிச் செல்லவும். தேர்வுக்கு வெற்றி மனோபாவத்துடனும், தன்னம்பிக்கையுடனும் செல்லுங்கள்.

* தேர்வு அறையில் உண்டாகும் மன பதற்றம், கை, கால் வியர்வை, நடுக்கம், பய உணர்வு போன்றவைகளை தவிர்க்க வேண்டும். ஒரு சில நிமிடங்கள் கண்களை மூடி, ‘நான் அமைதியாக பயமில்லாமல், உற்சாகமாக இருக்கிறேன்; இத்தேர்வில் வெற்றி பெறுவேன்…’ என்று நிதானமாக மனதிற்குள் கூறினால், படபடப்பு குறையும். கைகளை ஐந்து முறை இறுக்கமாக மூடி திறங்கள்; கழுத்து, தோள்பட்டையை தளர்த்துங்கள்; இப்போது, உங்களுக்குள் ஒரு உற்சாகம் பிறக்கும்.

* கேள்வித்தாளை பதற்றமில்லாமல், அமைதியாக வாசியுங்கள். சுருக்கமான பதில்களுக்கு நீண்ட பதில்களும், நீண்ட பதில்களுக்கு சுருக்கமான பதில்கள் எழுதுவதை தவிருங்கள். நன்றாக தெரிந்த பதில்களை முதலில் எழுதுங்கள். ஒவ்வொரு கேள்விப் பகுதிக்கும் எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்று திட்டமிடுங்கள். எக்கேள்வியையும் விட வேண்டாம். மதிப்பெண்களுக்கு தகுந்த மாதிரி நேரத்தை ஒதுக்குங்கள். எதிர்பாராத பகுதியிலிருந்தோ, படிக்காத பகுதியிலிருந்தோ கேள்விகள் வந்திருந்தால், மனம் பதற வேண்டாம்.

* விடைகள் எழுதும் போது பதற்றமில்லாமல், தகுந்த தலைப்புகளை பயன்படுத்தி, தெளிவான முறையில் எழுதுங்கள். கேள்விக்கு தகுந்த பதிலை சுற்றி வளைக்காமல் எழுதுங்கள். படித்ததையெல்லாம் எழுதிவிட வேண்டும் என்று எழுதாதீர்கள். இறுதியில் எழுதியவற்றை சரி பார்க்க, முதலிலேயே நேரம் ஒதுக்குங்கள். எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள், அடித்தல் இல்லாமல் எழுதுங்கள். மறக்காமல் பதிவு எண், பக்கம் எண், கேள்வி எண் எழுதுங்கள். இறுதியில், விடைத்தாள்களை சரிபார்த்து இறுக்கமாக கட்டுங்கள்.

* கையெழுத்து அழகாக இல்லாவிட்டாலும், தெளிவாக, புரியும்படி, வாசிக்கும்படி இருக்க வேண்டும். தேவையான இடங்களில், உதாரணங்களை மறக்காமல் எழுதுங்கள்.
நீங்கள் வெற்றி பெற திட்டமிட்டதற்கு பின், வேண்டாத சிந்தனைகளை தூக்கி எறியுங்கள். தோல்வி கண்டவர்களை பார்க்காதீர்கள்; வெற்றியாளராக மாறுங்கள். வாழ்த்துகள்.



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Mar 02, 2015 4:16 pm

மாணவர்களுக்கு நல்ல பயனுள்ள தகவல். நன்றி பவுன்ராஜ் யா.


கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Tue Mar 03, 2015 1:00 pm

தேர்வை சந்திப்பது எப்படி? 3838410834 தேர்வை சந்திப்பது எப்படி? 3838410834 தேர்வை சந்திப்பது எப்படி? 3838410834

தேர்வை சந்திப்பது எப்படி? 103459460

தேர்வை சந்திப்பது எப்படி? 1571444738



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 03, 2015 4:08 pm

தேர்வை சந்திப்பது எப்படி? 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக