புதிய பதிவுகள்
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm
» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm
by ayyasamy ram Today at 3:34 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm
» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏமன் உள்நாட்டுப் போர்
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால் ஏமன் அரசை காப்பாற்ற சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியது அரபு நாடுகளும் படையை அனுப்பி ஆதரவு
ஏமனில் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், அதிபர் அபேத்ரப்போ மன்சூர் காதியின் வேண்டுகோளின் பேரில் சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியுள்ளது.
சனாவை கைப்பற்றினர்
அரேபிய தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள ஏமன் நாட்டின் அதிபராக, அபேத்ரப்போ மன்சூர் காதி செயல்பட்டு வருகிறார். மன்சூர் அரசுக்கு எதிராக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் போராட்டத்தை தொடங்கினர்.
முன்னாள் அதிபர் அலி அப்துல்லாவின் ஆதரவாளர்களும், ஷியா பிரிவை சேர்ந்தவர்களுமான இந்த ஹவுத்தி படையினருக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. இதனால் ஏமனின் பல்வேறு பகுதிகளில் தாக்குதலை தொடங்கிய இவர்கள், கடந்த மாதம் தலைநகர் சனாவை கைப்பற்றியதுடன், சன்னி பிரிவினரின் பகுதிகளை நோக்கி முன்னேற தொடங்கினர்.
அதிபர் வேண்டுகோள்
இதன் காரணமாக அதிபர் மன்சூர் காதி சனாவை விட்டு வெளியேறி ஏடன் நகரில் தஞ்சம் புகுந்தார். தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து அங்கே முகாமிட்டுள்ள அவர், தனது அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி படையினரை முறியடிக்க உதவுமாறு சவுதி அரேபியாவுக்கு நேரடி வேண்டுகோள் விடுத்தார்.
இதைத்தொடர்ந்து ஹவுத்தி படையினருக்கு எதிராக சவுதி அரேபியா நேற்று களத்தில் இறங்கியது. ஏமன் தலைநகர் சனா மற்றும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் வசமிருக்கும் பகுதிகளில் 100–க்கும் மேற்பட்ட சவுதி அரேபிய போர் விமானங்கள் அதிரடியாக குண்டு மழை பொழிந்தன.
10 நாடுகள்
இதில் கிளர்ச்சியாளர்களின் ஏராளமான போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. எனினும் இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து உடனடியான தகவல் எதுவும் இல்லை. மேலும் சவுதி அரேபியாவை சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரம் படை வீரர்களும் ஏமனில் குவிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
சவுதி அரேபிய படைகளுடன், கத்தார், ஜோர்டான், குவைத், பஹ்ரைன், எகிப்து, மொராக்கோ மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 10 நாடுகளின் படைகளும் இந்த தாக்குதலில் ஈடுபட்டு உள்ளன. மேலும் பாகிஸ்தான் மற்றும் சூடான் போன்ற நாடுகளும் இந்த தாக்குதலில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து உள்ளன.
அமெரிக்கா ஆதரவு – சீனா கவலை
ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ள அரபு நாட்டு படைகளுக்கு ஆயுத வினியோகம் மற்றும் உளவுத்துறை உதவிகளை செய்ய அமெரிக்காவும் முன் வந்துள்ளது. இதனால் ஏமனில் மிகப்பெரும் தாக்குதல் நடைபெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
எனினும் ஏமனில் நிலவி வரும் உள்நோட்டுப்போர் கவலையளிப்பதாக சீனா கூறியுள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் குவா சுனியிங் கூறும்போது, ‘ஏமன் விவகாரத்தில் ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தின்படி அனைத்து நாடுகளும் செயலாற்ற வேண்டும். அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்’ என்றார்.
மிகப்பெரிய போர் அபாயம்
இந்த தாக்குதல் குறித்து ஹவுத்தி இயக்கத்தை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘ஏமனில் சவுதி அரேபிய படைகள் தொடங்கியுள்ள இந்த தாக்குதல், அந்த பிராந்தியத்தில் மிகப்பெரிய போருக்கு வழிவகுக்கும்’ என தெரிவித்தார். மேலும் சவுதி அரேபிய படைகள் சனா அருகே நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாக ஹவுத்தி ஆதரவு தொலைக்காட்சி ஒன்றும் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் ஹவுத்தி படையினரின் வசமிருந்த ஏடன் விமான நிலையத்தை மீட்க, அதிபர் மன்சூர் காதியின் ஆதரவு படையினர் கடும் தாக்குதல் நடத்தினர். நீண்ட நேரம் நடந்த இந்த தாக்குதலின் இறுதியில், ஏடன் விமான நிலையம் மீட்கப்பட்டது.
எண்ணெய் விலை உயர்வு
இதற்கிடையே ஏமனில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப்போர் தீவிரமடைந்தால் உலகம் முழுவதும் எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டு, கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. நேற்று தாக்குதல் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கச்சா எண்ணெய் விலை சுமார் 6 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது.
எண்ணெய் வளம் மிகுந்த சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் இருந்து வரும் எண்ணெய் லாரிகள், ஏடன் வளைகுடா வழியாகவே ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால் ஏமன் அரசை காப்பாற்ற சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியது அரபு நாடுகளும் படையை அனுப்பி ஆதரவு
ஏமனில் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், அதிபர் அபேத்ரப்போ மன்சூர் காதியின் வேண்டுகோளின் பேரில் சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியுள்ளது.
சனாவை கைப்பற்றினர்
அரேபிய தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள ஏமன் நாட்டின் அதிபராக, அபேத்ரப்போ மன்சூர் காதி செயல்பட்டு வருகிறார். மன்சூர் அரசுக்கு எதிராக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் போராட்டத்தை தொடங்கினர்.
முன்னாள் அதிபர் அலி அப்துல்லாவின் ஆதரவாளர்களும், ஷியா பிரிவை சேர்ந்தவர்களுமான இந்த ஹவுத்தி படையினருக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. இதனால் ஏமனின் பல்வேறு பகுதிகளில் தாக்குதலை தொடங்கிய இவர்கள், கடந்த மாதம் தலைநகர் சனாவை கைப்பற்றியதுடன், சன்னி பிரிவினரின் பகுதிகளை நோக்கி முன்னேற தொடங்கினர்.
அதிபர் வேண்டுகோள்
இதன் காரணமாக அதிபர் மன்சூர் காதி சனாவை விட்டு வெளியேறி ஏடன் நகரில் தஞ்சம் புகுந்தார். தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து அங்கே முகாமிட்டுள்ள அவர், தனது அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி படையினரை முறியடிக்க உதவுமாறு சவுதி அரேபியாவுக்கு நேரடி வேண்டுகோள் விடுத்தார்.
இதைத்தொடர்ந்து ஹவுத்தி படையினருக்கு எதிராக சவுதி அரேபியா நேற்று களத்தில் இறங்கியது. ஏமன் தலைநகர் சனா மற்றும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் வசமிருக்கும் பகுதிகளில் 100–க்கும் மேற்பட்ட சவுதி அரேபிய போர் விமானங்கள் அதிரடியாக குண்டு மழை பொழிந்தன.
10 நாடுகள்
இதில் கிளர்ச்சியாளர்களின் ஏராளமான போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. எனினும் இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து உடனடியான தகவல் எதுவும் இல்லை. மேலும் சவுதி அரேபியாவை சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரம் படை வீரர்களும் ஏமனில் குவிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
சவுதி அரேபிய படைகளுடன், கத்தார், ஜோர்டான், குவைத், பஹ்ரைன், எகிப்து, மொராக்கோ மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 10 நாடுகளின் படைகளும் இந்த தாக்குதலில் ஈடுபட்டு உள்ளன. மேலும் பாகிஸ்தான் மற்றும் சூடான் போன்ற நாடுகளும் இந்த தாக்குதலில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து உள்ளன.
அமெரிக்கா ஆதரவு – சீனா கவலை
ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ள அரபு நாட்டு படைகளுக்கு ஆயுத வினியோகம் மற்றும் உளவுத்துறை உதவிகளை செய்ய அமெரிக்காவும் முன் வந்துள்ளது. இதனால் ஏமனில் மிகப்பெரும் தாக்குதல் நடைபெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
எனினும் ஏமனில் நிலவி வரும் உள்நோட்டுப்போர் கவலையளிப்பதாக சீனா கூறியுள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் குவா சுனியிங் கூறும்போது, ‘ஏமன் விவகாரத்தில் ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தின்படி அனைத்து நாடுகளும் செயலாற்ற வேண்டும். அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்’ என்றார்.
மிகப்பெரிய போர் அபாயம்
இந்த தாக்குதல் குறித்து ஹவுத்தி இயக்கத்தை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘ஏமனில் சவுதி அரேபிய படைகள் தொடங்கியுள்ள இந்த தாக்குதல், அந்த பிராந்தியத்தில் மிகப்பெரிய போருக்கு வழிவகுக்கும்’ என தெரிவித்தார். மேலும் சவுதி அரேபிய படைகள் சனா அருகே நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாக ஹவுத்தி ஆதரவு தொலைக்காட்சி ஒன்றும் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் ஹவுத்தி படையினரின் வசமிருந்த ஏடன் விமான நிலையத்தை மீட்க, அதிபர் மன்சூர் காதியின் ஆதரவு படையினர் கடும் தாக்குதல் நடத்தினர். நீண்ட நேரம் நடந்த இந்த தாக்குதலின் இறுதியில், ஏடன் விமான நிலையம் மீட்கப்பட்டது.
எண்ணெய் விலை உயர்வு
இதற்கிடையே ஏமனில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப்போர் தீவிரமடைந்தால் உலகம் முழுவதும் எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டு, கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. நேற்று தாக்குதல் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கச்சா எண்ணெய் விலை சுமார் 6 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது.
எண்ணெய் வளம் மிகுந்த சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் இருந்து வரும் எண்ணெய் லாரிகள், ஏடன் வளைகுடா வழியாகவே ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
தகவலுக்கு நன்றி..............
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- monikaa sriபண்பாளர்
- பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015
பதிவுக்கு நன்றி!
ஏமனில் சவுதிஅரேபியா வான்வழி தாக்குதலில் 28 பேர் உயிரிழப்பு, அமெரிக்காவின் விமானம் தாங்கிய கப்பல் சென்றது
ஏமன் தலைநகர் சனாவில் சவுதிஅரேபியா தலைமையிலான அரபுபடைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர்.
அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் அதிபர் ஆதரவு படையை எதிர்த்து ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடுமையாக சண்டையிட்டு வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே படையினரும் களமிறங்கி உள்ளனர்.
இவர்களை எதிர்த்து, சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபியா தலைமையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய 9 நாடுகளின் கூட்டுப்படைகள் கடந்த மாதம் 26–ந் தேதி முதல் வான்தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த உள்நாட்டு போரால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. சவுதி கூட்டுப்படைகளின் வலிமையான தாக்குதல்களுக்கு மத்தியிலும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஷாப்வா மாகாணத்தின் தலைநகரான அட்டாக் நகருக்குள் நுழைந்தனர். இரு தரப்புக்கும் இடையே சண்டை வலுத்து வருவதால் இதுவரை சுமார் 650 க்கும் மேற்பட்டோர் பேர் பலியாகி உள்ளனர். 2,200 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஏறத்தாழ ஒரு லட்சம் குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன.
ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் வான் தாக்குதல் நடத்துவதை நிறுத்திக்கொண்டு, அரசியல் தீர்வுகாண முயற்சிக்க வேண்டும் என ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி வலியுறுத்தினார். இந்த நிலையில், தலைநகர் சனாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி அரேபிய கூட்டுப்படைகள் குண்டு மழை பொழிந்தன. இந்த வான்தாக்குதல்களில் 28 பேர் பலியாகினர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 300 பேர் காயம் அடைந்து உள்ளனர். இச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. போர் தொடங்கியதில் இருந்து சவுதி அரேபியா 2,000 முறை தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
ஏமனில் அரசுக்கு எதிரான ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் பெரிதும் உதவிசெய்து வருகிறது என்பதே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் குற்றச்சாட்டாக உள்ளது. ஈரான் கடல்வழியாக கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம், மருத்துவம் மற்றும் பிறஉதவி பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானின் உதவி கிடைப்பதை தடுக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து உள்ளது. அமெரிக்கா ஏமன் கடற்பகுதிக்கு விமானம் தாங்கிய போர்கப்பலை அனுப்பி உள்ளது. ஈரானின் கப்பல்களை இடைமறிக்க அமெரிக்கா போர் கப்பல்களை அனுப்பிஉள்ளது என்று பெண்டகன் செய்தி வெளியிட்டு உள்ளது. இது கிளர்ச்சியாளார்களுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது
ஏமன் தலைநகர் சனாவில் சவுதிஅரேபியா தலைமையிலான அரபுபடைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர்.
அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் அதிபர் ஆதரவு படையை எதிர்த்து ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடுமையாக சண்டையிட்டு வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே படையினரும் களமிறங்கி உள்ளனர்.
இவர்களை எதிர்த்து, சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபியா தலைமையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய 9 நாடுகளின் கூட்டுப்படைகள் கடந்த மாதம் 26–ந் தேதி முதல் வான்தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த உள்நாட்டு போரால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. சவுதி கூட்டுப்படைகளின் வலிமையான தாக்குதல்களுக்கு மத்தியிலும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஷாப்வா மாகாணத்தின் தலைநகரான அட்டாக் நகருக்குள் நுழைந்தனர். இரு தரப்புக்கும் இடையே சண்டை வலுத்து வருவதால் இதுவரை சுமார் 650 க்கும் மேற்பட்டோர் பேர் பலியாகி உள்ளனர். 2,200 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஏறத்தாழ ஒரு லட்சம் குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன.
ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் வான் தாக்குதல் நடத்துவதை நிறுத்திக்கொண்டு, அரசியல் தீர்வுகாண முயற்சிக்க வேண்டும் என ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி வலியுறுத்தினார். இந்த நிலையில், தலைநகர் சனாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி அரேபிய கூட்டுப்படைகள் குண்டு மழை பொழிந்தன. இந்த வான்தாக்குதல்களில் 28 பேர் பலியாகினர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 300 பேர் காயம் அடைந்து உள்ளனர். இச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. போர் தொடங்கியதில் இருந்து சவுதி அரேபியா 2,000 முறை தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
ஏமனில் அரசுக்கு எதிரான ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் பெரிதும் உதவிசெய்து வருகிறது என்பதே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் குற்றச்சாட்டாக உள்ளது. ஈரான் கடல்வழியாக கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம், மருத்துவம் மற்றும் பிறஉதவி பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானின் உதவி கிடைப்பதை தடுக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து உள்ளது. அமெரிக்கா ஏமன் கடற்பகுதிக்கு விமானம் தாங்கிய போர்கப்பலை அனுப்பி உள்ளது. ஈரானின் கப்பல்களை இடைமறிக்க அமெரிக்கா போர் கப்பல்களை அனுப்பிஉள்ளது என்று பெண்டகன் செய்தி வெளியிட்டு உள்ளது. இது கிளர்ச்சியாளார்களுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஏமனில் இராணுவ நடவடிக்கையை நிறுத்திக் கொள்வதாக சவுதி அரேபிய அரசு அறிவிப்பு!
ஏமனில் கடந்த 3 வாரங்களாக தாக்குதல் நடத்தி வந்த சவுதி அரேபிய அரசு தனது இராணுவ நடவடிக்கையை நிறுத்திக் கொள்வதாக தொலைக்காட்சியில் அறிவித்தது.
உள்நாட்டு போர் காரணமாக, கடந்த மார்ச் 19-முதல் அரசுக்கு எதிராக போரிடும் ஹவுத்தி கிளர்ச்சி படையை ஒடுக்க சவுதி அரேபியா ரணுவம் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தி வந்தது.
இதுவரை நடைபெற்று வந்த ‘தீர்வுக்கான புயல்’ என்ற தாக்குதல் நடவடிக்கைகள் முடிவு பெறுவதாகவும், தற்போது ‘நம்பிக்கையை மீட்டெடுப்பது’ என்ற புதிய நடவடிக்கை தொடங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏமன் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
ஏமனில் கடந்த 3 வாரங்களாக தாக்குதல் நடத்தி வந்த சவுதி அரேபிய அரசு தனது இராணுவ நடவடிக்கையை நிறுத்திக் கொள்வதாக தொலைக்காட்சியில் அறிவித்தது.
உள்நாட்டு போர் காரணமாக, கடந்த மார்ச் 19-முதல் அரசுக்கு எதிராக போரிடும் ஹவுத்தி கிளர்ச்சி படையை ஒடுக்க சவுதி அரேபியா ரணுவம் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தி வந்தது.
இதுவரை நடைபெற்று வந்த ‘தீர்வுக்கான புயல்’ என்ற தாக்குதல் நடவடிக்கைகள் முடிவு பெறுவதாகவும், தற்போது ‘நம்பிக்கையை மீட்டெடுப்பது’ என்ற புதிய நடவடிக்கை தொடங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏமன் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாக்குதல் முடிந்தது என அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஏமனில் சவுதி அரேபியா ஏவுகணைகள் வீச்சு
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து, நடத்தப்பட்ட வான்தாக்குதல்கள் முடிவுக்கு வந்தது என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சவுதி அரேபியா மீண்டும் ஏவுகணைகளை வீசிஉள்ளது.
அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி ஆதரவு படையை எதிர்த்து ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடுமையாக சண்டையிட்டு வந்தனர். கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே படையினரும் கரம் கோர்த்தனர். இந்த படைகளை எதிர்த்து சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபியா தலைமையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய 9 நாடுகளின் கூட்டுப்படைகள் கடந்த மாதம் 26–ந் தேதி முதல் வான்தாக்குதல்களை நடத்தி வந்தன. இந்த தாக்குதல்களில் இதுவரை 944 பேர் கொல்லப்பட்டனர். 3,487 பேர் படுகாயம் அடைந்தனர். 1½ லட்சம் பேர் இடம் பெயர்ந்தனர்.
இந்த தாக்குதல்களினால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வந்தது. இந்த நிலையில் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று சவுதி அரேபியாவிடம் அதிபர் மன்சூர் ஹாதி கேட்டுக்கொண்டார். அதன்பேரில் 4 வாரங்களாக நடைபெற்று வந்த தாக்குதல்கள் முடிவுக்கு வந்தது. இதுதொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இருப்பினும் ஏமன் மீதான தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வந்தாலும் கூட, கடற்படையின் முற்றுகை தொடரும். ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடமாட்டம் இருந்தால் தாக்குதல் தொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஏமனில் சவுதி அரேபியா மீண்டும் ஏவுகணைகளை வீசிஉள்ளது. தெற்கு ஏமனில் சவுதி அரேபியா படை ஏவுகணைகளை வீசிஉள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே கிளர்ச்சிப்படை அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து உள்ளது. ஐ.நா. இருதரப்பும் சண்டையை நிறுத்தினால் மட்டுமே பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என்று அறிவித்து உள்ளது. கடந்த ஜனவரி மாதம் கிளர்ச்சிப்படை மற்றும் அரசு தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையானது கிளர்ச்சியாளர்கள் அதிபர் மாளிகையில் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து தோல்வியில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து, நடத்தப்பட்ட வான்தாக்குதல்கள் முடிவுக்கு வந்தது என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சவுதி அரேபியா மீண்டும் ஏவுகணைகளை வீசிஉள்ளது.
அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி ஆதரவு படையை எதிர்த்து ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடுமையாக சண்டையிட்டு வந்தனர். கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே படையினரும் கரம் கோர்த்தனர். இந்த படைகளை எதிர்த்து சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபியா தலைமையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய 9 நாடுகளின் கூட்டுப்படைகள் கடந்த மாதம் 26–ந் தேதி முதல் வான்தாக்குதல்களை நடத்தி வந்தன. இந்த தாக்குதல்களில் இதுவரை 944 பேர் கொல்லப்பட்டனர். 3,487 பேர் படுகாயம் அடைந்தனர். 1½ லட்சம் பேர் இடம் பெயர்ந்தனர்.
இந்த தாக்குதல்களினால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வந்தது. இந்த நிலையில் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று சவுதி அரேபியாவிடம் அதிபர் மன்சூர் ஹாதி கேட்டுக்கொண்டார். அதன்பேரில் 4 வாரங்களாக நடைபெற்று வந்த தாக்குதல்கள் முடிவுக்கு வந்தது. இதுதொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இருப்பினும் ஏமன் மீதான தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வந்தாலும் கூட, கடற்படையின் முற்றுகை தொடரும். ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடமாட்டம் இருந்தால் தாக்குதல் தொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஏமனில் சவுதி அரேபியா மீண்டும் ஏவுகணைகளை வீசிஉள்ளது. தெற்கு ஏமனில் சவுதி அரேபியா படை ஏவுகணைகளை வீசிஉள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே கிளர்ச்சிப்படை அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து உள்ளது. ஐ.நா. இருதரப்பும் சண்டையை நிறுத்தினால் மட்டுமே பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என்று அறிவித்து உள்ளது. கடந்த ஜனவரி மாதம் கிளர்ச்சிப்படை மற்றும் அரசு தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையானது கிளர்ச்சியாளர்கள் அதிபர் மாளிகையில் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து தோல்வியில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- rksivamபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014
அதெல்லாம் சரி, சண்டை ஆரம்பித்தவுடன் அங்கே சிக்கிக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான இந்தியர்களை அவசரம் அவசரமாக பத்திரமாக இந்தியா கொண்டு வந்து சேர்த்த சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் மோடி அரசை பற்றியும் யாராவது புகழ்ந்தார்களா. தற்கொலை செய்துகொண்ட கஜேந்திரனை பற்றி வாய் கிழிய பேசும் ஆங்கீல செய்தி தொலை காட்சிகள் வசதியாக மறந்ததேன். ஆரணப் கோஸ்வாமி காது கேட்க்கிறதா. எதிர் கட்சிகள் எதிரி கட்சிகளே.
சிவம்
சிவம்
ஏமன் சண்டையில் 1,080 பேர் உயிரிழப்பு 4,352 படுகாயம் - உலக சுகாதார அமைப்பு
ஏமன் சண்டையில் 1,080 பேர் உயிரிழந்தனர், 4,352 படுகாயம் அடைந்தனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
ஏமன் நாட்டில், அதிபரை ஓட வைத்து, முக்கிய நகரங்களை தங்கள் வசப்படுத்திய, ஷியா பிரிவை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்கு, சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபியா தலைமையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய நாடுகள் கரம் கோர்த்தன. இந்த நாடுகளின் கூட்டுப்படைகள் ஏமனில் கடந்த மாதம் 26–ந் தேதி தொடங்கி வான்தாக்குதல்களை நடத்தி வந்தன. இந்த தாக்குதல்களில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்தனர்.
ஏறத்தாழ ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த இந்த தாக்குதல்களை, ஏமன் அதிபர் கேட்டுக்கொண்டதின்பேரில், நிறுத்திக்கொள்வதாக சவூதி கூட்டுப்படைகள் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டது. சவுதி அரேபியா மற்றும் அதன் அண்டை நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாகவும், அந்த அச்சுறுத்தலை அகற்றுவதற்காகத்தான் தாக்குதல்கள் தொடுத்ததாகவும், தங்கள் நோக்கம் நிறைவேறி விட்டதாகவும் சவுதி கூட்டுப்படைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஏமன் மீதான தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வந்தாலும் கூட, கடற்படையின் முற்றுகை தொடரும். ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடமாட்டம் இருந்தால் தாக்குதல் தொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் சண்டை நிறுத்த அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்திற்குள், டாய்ஸ் நகரில் ஏமன் ராணுவத்தின் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் தொடுத்தனர். அதைத் தொடர்ந்து, அங்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் மீண்டும் வான் தாக்குதல்கள் நடத்தியது. ஏமனில் தாக்குதல்களை மீண்டும் சவுதி கூட்டுப்படைகள் தொடங்கி விட்டனவா அல்லது இது ஒரு குறுகிய கால நடவடிக்கையா என தெரியத நிலையே நிலவியது. இந்நிலையில் ஏமன் விவகாரத்தில் ஐ.நா. ஆதரவுடன் கூடிய அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும். ஆனால் தாக்குதல்கள் முழுமையாக நிறுத்தப்பட்டபின்னர்தான் பேச்சு வார்த்தை என்று கிளர்ச்சியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ஏமன் சண்டையில் 1,080 பேர் உயிரிழந்தனர், 4,352 படுகாயம் அடைந்தனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. இதில் 48 சிறுவர்கள், 28 பெண்களும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. காயம் அடைந்தவர்கள் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்படாத நிலையில் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே உதவி பணிகளுக்கான நடவடிக்கையும் தொடங்கப்பட்டு உள்ளது.
ஏமன் சண்டையில் 1,080 பேர் உயிரிழந்தனர், 4,352 படுகாயம் அடைந்தனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
ஏமன் நாட்டில், அதிபரை ஓட வைத்து, முக்கிய நகரங்களை தங்கள் வசப்படுத்திய, ஷியா பிரிவை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்கு, சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபியா தலைமையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய நாடுகள் கரம் கோர்த்தன. இந்த நாடுகளின் கூட்டுப்படைகள் ஏமனில் கடந்த மாதம் 26–ந் தேதி தொடங்கி வான்தாக்குதல்களை நடத்தி வந்தன. இந்த தாக்குதல்களில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்தனர்.
ஏறத்தாழ ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த இந்த தாக்குதல்களை, ஏமன் அதிபர் கேட்டுக்கொண்டதின்பேரில், நிறுத்திக்கொள்வதாக சவூதி கூட்டுப்படைகள் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டது. சவுதி அரேபியா மற்றும் அதன் அண்டை நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாகவும், அந்த அச்சுறுத்தலை அகற்றுவதற்காகத்தான் தாக்குதல்கள் தொடுத்ததாகவும், தங்கள் நோக்கம் நிறைவேறி விட்டதாகவும் சவுதி கூட்டுப்படைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஏமன் மீதான தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வந்தாலும் கூட, கடற்படையின் முற்றுகை தொடரும். ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடமாட்டம் இருந்தால் தாக்குதல் தொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் சண்டை நிறுத்த அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்திற்குள், டாய்ஸ் நகரில் ஏமன் ராணுவத்தின் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் தொடுத்தனர். அதைத் தொடர்ந்து, அங்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் மீண்டும் வான் தாக்குதல்கள் நடத்தியது. ஏமனில் தாக்குதல்களை மீண்டும் சவுதி கூட்டுப்படைகள் தொடங்கி விட்டனவா அல்லது இது ஒரு குறுகிய கால நடவடிக்கையா என தெரியத நிலையே நிலவியது. இந்நிலையில் ஏமன் விவகாரத்தில் ஐ.நா. ஆதரவுடன் கூடிய அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும். ஆனால் தாக்குதல்கள் முழுமையாக நிறுத்தப்பட்டபின்னர்தான் பேச்சு வார்த்தை என்று கிளர்ச்சியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ஏமன் சண்டையில் 1,080 பேர் உயிரிழந்தனர், 4,352 படுகாயம் அடைந்தனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. இதில் 48 சிறுவர்கள், 28 பெண்களும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. காயம் அடைந்தவர்கள் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்படாத நிலையில் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே உதவி பணிகளுக்கான நடவடிக்கையும் தொடங்கப்பட்டு உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஏமன் நாட்டில் அமைதிப்பேச்சுக்கு கிளர்ச்சியாளர்கள் நிபந்தனை ‘அனைத்து வகையிலான தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும்’
ஏமன் நாட்டில் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு, அனைத்து வகையிலான தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.
சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல்
ஏமன் நாட்டில், அதிபரை ஓட வைத்து, முக்கிய நகரங்களை தங்கள் வசப்படுத்திய, ஷியா பிரிவை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்கு, சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபியா தலைமையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய நாடுகள் கரம் கோர்த்தன.
இந்த நாடுகளின் கூட்டுப்படைகள் ஏமனில் கடந்த மாதம் 26–ந் தேதி தொடங்கி வான்தாக்குதல்களை நடத்தி வந்தன. இந்த தாக்குதல்களில் 900–க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்தனர்.
தாக்குதல்கள் நிறுத்தம்
ஏறத்தாழ ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த இந்த தாக்குதல்களை, ஏமன் அதிபர் கேட்டுக்கொண்டதின்பேரில், நிறுத்திக்கொள்வதாக சவூதி கூட்டுப்படைகள் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டன. சவுதி அரேபியா மற்றும் அதன் அண்டை நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாகவும், அந்த அச்சுறுத்தலை அகற்றுவதற்காகத்தான் தாக்குதல்கள் தொடுத்ததாகவும், தங்கள் நோக்கம் நிறைவேறி விட்டதாகவும் சவுதி கூட்டுப்படைகள் கூறின.
ஏமன் மீதான தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வந்தாலும் கூட, கடற்படையின் முற்றுகை தொடரும். ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடமாட்டம் இருந்தால் தாக்குதல் தொடுக்கப்படும் என்றும் அவை தெரிவித்தன.
மீண்டும் தாக்குதல்
ஆனால் சண்டை நிறுத்த அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்திற்குள், டாய்ஸ் நகரில் ஏமன் ராணுவத்தின் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் தொடுத்தனர். அதைத் தொடர்ந்து, அங்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் மீண்டும் வான் தாக்குதல்கள் நடத்தின.
ஏமனில் தாக்குதல்களை மீண்டும் சவுதி கூட்டுப்படைகள் தொடங்கி விட்டனவா அல்லது இது ஒரு குறுகிய கால நடவடிக்கையா என தெரிய வில்லை.
ராணுவ மந்திரி விடுவிப்பு
இதற்கிடையே கடந்த மாதம் 26–ந் தேதி ஏடன் நகருக்கு அருகே ஒரு விமான தளத்தில் வைத்து பிடித்து தங்கள் வசம் வைத்திருந்த ஏமன் ராணுவ மந்திரி மகமது அல் சுபாய்ஹியை கிளர்ச்சியாளர்கள் சனாவில் விடுதலை செய்தனர்.
அவரை கிளர்ச்சியாளர்கள் விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா. கோரிக்கை விடுத்தது நினைவுகூரத்தகுந்தது.
பேச்சு வார்த்தைக்கு நிபந்தனை
இந்த நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் செய்தி தொடர்பாளர் முகமது அப்துல் சலாம், ‘‘ஏமன் விவகாரத்தில் ஐ.நா. ஆதரவுடன் கூடிய அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும். ஆனால் தாக்குதல்கள் முழுமையாக நிறுத்தப்பட்டபின்னர்தான் பேச்சு வார்த்தை’’ என கூறி உள்ளார்.
இதற்கு முன்பு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், அதிபர் அப்து ரபு மன்சூர் ஹாதி அரசுக்கும் இடையே கடந்த ஜனவரியில் நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
ஏமன் நாட்டில் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு, அனைத்து வகையிலான தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.
சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல்
ஏமன் நாட்டில், அதிபரை ஓட வைத்து, முக்கிய நகரங்களை தங்கள் வசப்படுத்திய, ஷியா பிரிவை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்கு, சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபியா தலைமையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய நாடுகள் கரம் கோர்த்தன.
இந்த நாடுகளின் கூட்டுப்படைகள் ஏமனில் கடந்த மாதம் 26–ந் தேதி தொடங்கி வான்தாக்குதல்களை நடத்தி வந்தன. இந்த தாக்குதல்களில் 900–க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்தனர்.
தாக்குதல்கள் நிறுத்தம்
ஏறத்தாழ ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த இந்த தாக்குதல்களை, ஏமன் அதிபர் கேட்டுக்கொண்டதின்பேரில், நிறுத்திக்கொள்வதாக சவூதி கூட்டுப்படைகள் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டன. சவுதி அரேபியா மற்றும் அதன் அண்டை நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாகவும், அந்த அச்சுறுத்தலை அகற்றுவதற்காகத்தான் தாக்குதல்கள் தொடுத்ததாகவும், தங்கள் நோக்கம் நிறைவேறி விட்டதாகவும் சவுதி கூட்டுப்படைகள் கூறின.
ஏமன் மீதான தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வந்தாலும் கூட, கடற்படையின் முற்றுகை தொடரும். ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடமாட்டம் இருந்தால் தாக்குதல் தொடுக்கப்படும் என்றும் அவை தெரிவித்தன.
மீண்டும் தாக்குதல்
ஆனால் சண்டை நிறுத்த அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்திற்குள், டாய்ஸ் நகரில் ஏமன் ராணுவத்தின் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் தொடுத்தனர். அதைத் தொடர்ந்து, அங்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் மீண்டும் வான் தாக்குதல்கள் நடத்தின.
ஏமனில் தாக்குதல்களை மீண்டும் சவுதி கூட்டுப்படைகள் தொடங்கி விட்டனவா அல்லது இது ஒரு குறுகிய கால நடவடிக்கையா என தெரிய வில்லை.
ராணுவ மந்திரி விடுவிப்பு
இதற்கிடையே கடந்த மாதம் 26–ந் தேதி ஏடன் நகருக்கு அருகே ஒரு விமான தளத்தில் வைத்து பிடித்து தங்கள் வசம் வைத்திருந்த ஏமன் ராணுவ மந்திரி மகமது அல் சுபாய்ஹியை கிளர்ச்சியாளர்கள் சனாவில் விடுதலை செய்தனர்.
அவரை கிளர்ச்சியாளர்கள் விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா. கோரிக்கை விடுத்தது நினைவுகூரத்தகுந்தது.
பேச்சு வார்த்தைக்கு நிபந்தனை
இந்த நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் செய்தி தொடர்பாளர் முகமது அப்துல் சலாம், ‘‘ஏமன் விவகாரத்தில் ஐ.நா. ஆதரவுடன் கூடிய அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும். ஆனால் தாக்குதல்கள் முழுமையாக நிறுத்தப்பட்டபின்னர்தான் பேச்சு வார்த்தை’’ என கூறி உள்ளார்.
இதற்கு முன்பு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், அதிபர் அப்து ரபு மன்சூர் ஹாதி அரசுக்கும் இடையே கடந்த ஜனவரியில் நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஏமன் நாட்டில் மீண்டும் சண்டை வலுக்கிறது சவுதி கூட்டுப்படைகள் குண்டு மழை
ஏமன் நாட்டில் மீண்டும் சண்டை வலுக்கிறது. கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் நேற்று குண்டு மழை பொழிந்தன.
ஏமனில் சண்டை
ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி ஆதரவு படையை எதிர்த்து ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்களும், முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே படையினரும் தீவிரமாக சண்டையிட்டு வந்தனர்.
முக்கிய நகரங்களைப் பிடித்து கிளர்ச்சியாளர்கள் கைகள் ஓங்கிய நிலையில், சவுதி அரேபியா தலைமையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய நாடுகளின் கூட்டுப்படைகள் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி களத்தில் குதித்தன.
சண்டை நிறுத்தம்
கடுமையான வான்தாக்குதல்களை தொடுத்தன. சுமார் 1 மாதம் நடந்த இந்த தாக்குதல்களில் சுமார் 950 பேர் கொல்லப்பட்டு, 3 ஆயிரத்து 500 பேர் காயம் அடைந்து, 1½ லட்சம் பேர் இடம் பெயர்ந்த நிலையில், சவுதி கூட்டுப்படைகள் கடந்த மாதம் 21-ந் தேதி தாக்குதல்களை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தன.
ஆனாலும் ஏமன் முழுவதும் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் ஆங்காங்கே நடந்து வருகிறது.
ஏடனில் சண்டை
இந்த நிலையில், அங்கு நேற்று முன்தினம் ஏடன் நகரில் அதிபர் ஆதரவு படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.
இந்த சண்டையில் 8 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 5 பேர் அதிபர் ஆதரவு படையினர், 3 பேர் பொதுமக்கள். இந்த தகவலை ஏடன் சுகாதாரத்துறை தலைவர் உறுதி செய்தார்.
2 மாகாணங்களில் தாக்குதல்
இது தொடர்பாக அவர் கூறும்போது, மேலும் 44 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். அதே நேரத்தில் கிளர்ச்சியாளர்கள் தரப்பு சேதம் குறித்து எந்தவொரு தகவலையும் அவர் வெளியிடவில்லை.
நேற்று முன்தினம் இரவில் லாஜ், அப்யான் மாகாணங்களில் கிளர்ச்சியாளர்களை குறி வைத்து சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல்கள் நடத்தின.
2 மாவட்டங்களில் குண்டுமழை
மேலும், தெற்கு ஏடனில் கோர் மஸ்கார், தார் சாத் மாவட்டங்களில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்து இழந்த நிலைகளை மீட்கும் வகையில், சவுதி கூட்டுப்படைகள் நேற்று கிளர்ச்சியாளர்களை குறி வைத்து போர் விமானங்களில் பறந்து குண்டு மழை பொழிந்தன.
இந்த தாக்குதல்களின் சேத விவரம் உடனடியாக தெரிய வரவில்லை. ஏமனில் மீண்டும் சண்டை வலுத்து வருவது அந்தப் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏமன் நாட்டில் மீண்டும் சண்டை வலுக்கிறது. கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் நேற்று குண்டு மழை பொழிந்தன.
ஏமனில் சண்டை
ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி ஆதரவு படையை எதிர்த்து ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்களும், முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே படையினரும் தீவிரமாக சண்டையிட்டு வந்தனர்.
முக்கிய நகரங்களைப் பிடித்து கிளர்ச்சியாளர்கள் கைகள் ஓங்கிய நிலையில், சவுதி அரேபியா தலைமையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய நாடுகளின் கூட்டுப்படைகள் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி களத்தில் குதித்தன.
சண்டை நிறுத்தம்
கடுமையான வான்தாக்குதல்களை தொடுத்தன. சுமார் 1 மாதம் நடந்த இந்த தாக்குதல்களில் சுமார் 950 பேர் கொல்லப்பட்டு, 3 ஆயிரத்து 500 பேர் காயம் அடைந்து, 1½ லட்சம் பேர் இடம் பெயர்ந்த நிலையில், சவுதி கூட்டுப்படைகள் கடந்த மாதம் 21-ந் தேதி தாக்குதல்களை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தன.
ஆனாலும் ஏமன் முழுவதும் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் ஆங்காங்கே நடந்து வருகிறது.
ஏடனில் சண்டை
இந்த நிலையில், அங்கு நேற்று முன்தினம் ஏடன் நகரில் அதிபர் ஆதரவு படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.
இந்த சண்டையில் 8 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 5 பேர் அதிபர் ஆதரவு படையினர், 3 பேர் பொதுமக்கள். இந்த தகவலை ஏடன் சுகாதாரத்துறை தலைவர் உறுதி செய்தார்.
2 மாகாணங்களில் தாக்குதல்
இது தொடர்பாக அவர் கூறும்போது, மேலும் 44 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். அதே நேரத்தில் கிளர்ச்சியாளர்கள் தரப்பு சேதம் குறித்து எந்தவொரு தகவலையும் அவர் வெளியிடவில்லை.
நேற்று முன்தினம் இரவில் லாஜ், அப்யான் மாகாணங்களில் கிளர்ச்சியாளர்களை குறி வைத்து சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல்கள் நடத்தின.
2 மாவட்டங்களில் குண்டுமழை
மேலும், தெற்கு ஏடனில் கோர் மஸ்கார், தார் சாத் மாவட்டங்களில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்து இழந்த நிலைகளை மீட்கும் வகையில், சவுதி கூட்டுப்படைகள் நேற்று கிளர்ச்சியாளர்களை குறி வைத்து போர் விமானங்களில் பறந்து குண்டு மழை பொழிந்தன.
இந்த தாக்குதல்களின் சேத விவரம் உடனடியாக தெரிய வரவில்லை. ஏமனில் மீண்டும் சண்டை வலுத்து வருவது அந்தப் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஏமனில் போர் விமான தாக்குதல்: குண்டு வீச்சில் பொதுமக்கள் 69 பேர் பலி
ஏமன் நாட்டில் அரசு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அண்மைக் காலமாக சண்டை தீவிரமடைந்து உள்ளது. கிளர்ச்சியாளர்கள் பல முக்கிய நகரங்களை கைப்பற்றி உள்ளதால் அரசு படையினருக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் போர் விமானங்கள் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.
நேற்று தலைநகர் சனாவின் புறநகர் பகுதியான மவுண்ட் நோபும் என்ற இடத்தில் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியிருந்த ராணுவ முகாமை குறி வைத்து சவுதி அரேபியா போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. 2-வது நாளாக இன்றும் இந்த தாக்குதல் நீடித்தது. அப்போது குண்டுகள் ராணுவ முகாம் மீதும் அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகள் மீதும் விழுந்து வெடித்து சிதறின. இதில் சிக்கி 69 பேர் பலியானார்கள். 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பலியான மற்றும் காயம் அடைந்த அனைவரும் பொதுமக்கள் என்று மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏமன் நாட்டில் அரசு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அண்மைக் காலமாக சண்டை தீவிரமடைந்து உள்ளது. கிளர்ச்சியாளர்கள் பல முக்கிய நகரங்களை கைப்பற்றி உள்ளதால் அரசு படையினருக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் போர் விமானங்கள் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.
நேற்று தலைநகர் சனாவின் புறநகர் பகுதியான மவுண்ட் நோபும் என்ற இடத்தில் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியிருந்த ராணுவ முகாமை குறி வைத்து சவுதி அரேபியா போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. 2-வது நாளாக இன்றும் இந்த தாக்குதல் நீடித்தது. அப்போது குண்டுகள் ராணுவ முகாம் மீதும் அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகள் மீதும் விழுந்து வெடித்து சிதறின. இதில் சிக்கி 69 பேர் பலியானார்கள். 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பலியான மற்றும் காயம் அடைந்த அனைவரும் பொதுமக்கள் என்று மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)
» "போர்..போர்..போர்': கருணாநிதி பிறந்த நாள் செய்தி
» மகாபாரதத்தில் குருச்சேத்திர போர் நடக்கும் முன்னர் பீஷ்மர் வகுத்த போர் விதிமுறைகள்
» அமெரிக்காவை நோக்கி நகரும் ஈரான் போர் கப்பல்கள்... அமெரிக்கா - ஈரான் இடையே அறிவிக்கப்படாத போர் பதற்றம்
» எல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகை : ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களுடன் வீரர்கள் பயிற்சி!!
» "போர்..போர்..போர்': கருணாநிதி பிறந்த நாள் செய்தி
» மகாபாரதத்தில் குருச்சேத்திர போர் நடக்கும் முன்னர் பீஷ்மர் வகுத்த போர் விதிமுறைகள்
» அமெரிக்காவை நோக்கி நகரும் ஈரான் போர் கப்பல்கள்... அமெரிக்கா - ஈரான் இடையே அறிவிக்கப்படாத போர் பதற்றம்
» எல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகை : ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களுடன் வீரர்கள் பயிற்சி!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6
|
|