புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by ayyasamy ram Today at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
திருப்பதி: திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டச் சென்ற தமிழக தொழிலாளர்கள் மீது ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
திருப்பதி சேஷாசல வனப்பகுதி ஈசகுண்டாவில் சிலர் செம்மரங்களை வெட்டி கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த ஆந்திர போலீசார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 20 பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இதில், 12 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து செம்மரக்கட்டை கடத்தல் கும்பல் தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி. கங்காராவ் கூறும்போது, ''திருப்பதி சேஷாசல வனப்பகுதி ஈசகுண்டாவில் ஸ்ரீவாரிமெட்டு என்ற இடத்தில் தமிழகத்தை சேர்ந்த 200 தொழிலாளர்கள் செம்மரம் வெட்டுவதாக ஆந்திர போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.
இந்த தகவலை அடுத்து அந்த வனப்பகுதியில் ஆந்திர போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்துள்ளனர். தேடுதல் வேட்டையின்போது, போலீசார் மீது மரம் வெட்டும் தொழிலாளர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த கல்வீச்சுத் தாக்குதலில் 2 ஆந்திர போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதை தொடர்ந்து தொழிலாளர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதில் சிலர் பலியாகி உள்ளனர். அதில், 9 தொழிலாளர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தையும், 3 பேர் வேலூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர் என தெரிய வந்திருக்கிறது.
மேலும், இந்த துப்பாக்கி சூட்டில் சர்வதேச செம்மரக் கடத்தல் கும்பலை சேர்ந்த நபரும் உயிரிழந்து உள்ளார். மீதமுள்ள 7 பேரை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது" என்று கூறி உள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக்கொலை: கருணாநிதி வருத்தம்
சென்னை: ஆந்திரப் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் உட்பட இருபது பேர் பலியாகியுள்ளதாக வந்துள்ள செய்திகள் பெரிதும் வருத்தத்திற்குரியது திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ஆந்திர மாநிலம், திருப்பதி வனப் பகுதியிலே, செம்மரம் வெட்டிய தொழிலாளர்கள் மீது ஆந்திரப் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் உட்பட இருபது பேர் பலியாகியுள்ளதாக வந்துள்ள செய்திகள் பெரிதும் வருத்தத்திற்குரியது.
கடந்த பல மாதங்களாக இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ற போதிலும் அது பற்றி இரண்டு மாநில அரசுகளும் கலந்து பேசி அதற்கோர் முடிவு காணாத காரணத்தால் இன்றைக்கு இருபது பேர் பலியான சம்பவம் நடைபெற்றுள்ளது.
இனியாவது இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க இரண்டு மாநில அரசுகளும் முயற்சி எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். மறைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு என் ஆறுதலைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் குடும்பங்களுக்கு இரண்டு மாநில அரசுகளின் சார்பில் உடனடியாக உதவித் தொகை வழங்கிடவும் ஆவன செய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.
சென்னை: ஆந்திரப் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் உட்பட இருபது பேர் பலியாகியுள்ளதாக வந்துள்ள செய்திகள் பெரிதும் வருத்தத்திற்குரியது திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ஆந்திர மாநிலம், திருப்பதி வனப் பகுதியிலே, செம்மரம் வெட்டிய தொழிலாளர்கள் மீது ஆந்திரப் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் உட்பட இருபது பேர் பலியாகியுள்ளதாக வந்துள்ள செய்திகள் பெரிதும் வருத்தத்திற்குரியது.
கடந்த பல மாதங்களாக இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ற போதிலும் அது பற்றி இரண்டு மாநில அரசுகளும் கலந்து பேசி அதற்கோர் முடிவு காணாத காரணத்தால் இன்றைக்கு இருபது பேர் பலியான சம்பவம் நடைபெற்றுள்ளது.
இனியாவது இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க இரண்டு மாநில அரசுகளும் முயற்சி எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். மறைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு என் ஆறுதலைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் குடும்பங்களுக்கு இரண்டு மாநில அரசுகளின் சார்பில் உடனடியாக உதவித் தொகை வழங்கிடவும் ஆவன செய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வைகோ அதிர்ச்சி
சென்னை: ஆந்திர காவல்துறையினரால் 12 தமிழர்கள் உட்பட 20 தொழிலாளர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது என்று வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
ஸ்ரீவாரு மெட்டு சேசாலம் வனப்பகுதியில் ஆந்திர காவல்துறையினரால் 12 தமிழர்கள் உட்பட 20 தொழிலாளர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.
மரங்களை வெட்டிக் கடத்துகின்ற பெரும் திமிங்கலங்களும், பண முதலைகளும் எதிலும் சிக்காமல் தப்பித்துக் கொள்கின்றனர், அன்றாடம் உழைக்கின்ற அப்பாவி கூலித் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சட்ட விரோதமான செயலில் ஈடுபட்டிருந்தால், அவர்களை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுதான் முறையாகும்.
காடுகளில் உலவும் விலங்குகள், பறவைகளைக்கூட சுட்டுப் பொசுக்கக் கூடாது என்று சட்டம் இருக்கிறது. ஆனால், 12 தமிழர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் ஆந்திர காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இப்படுகொலையில் ஈடுபட்ட காவல்துறையினருக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, இதற்குக் காரணமான காவல்துறையினர் மீது கொலை வழக்கு தொடரப்பட்டு பணி நீக்கம் செய்வதுடன், கைது செய்யப்பட வேண்டும். பணியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
துப்பாக்கிச் சூட்டில் பலியான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தக்க நிவாரணத்தை ஆந்திர மாநில அரசு வழங்க வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
சென்னை: ஆந்திர காவல்துறையினரால் 12 தமிழர்கள் உட்பட 20 தொழிலாளர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது என்று வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
ஸ்ரீவாரு மெட்டு சேசாலம் வனப்பகுதியில் ஆந்திர காவல்துறையினரால் 12 தமிழர்கள் உட்பட 20 தொழிலாளர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.
மரங்களை வெட்டிக் கடத்துகின்ற பெரும் திமிங்கலங்களும், பண முதலைகளும் எதிலும் சிக்காமல் தப்பித்துக் கொள்கின்றனர், அன்றாடம் உழைக்கின்ற அப்பாவி கூலித் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சட்ட விரோதமான செயலில் ஈடுபட்டிருந்தால், அவர்களை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுதான் முறையாகும்.
காடுகளில் உலவும் விலங்குகள், பறவைகளைக்கூட சுட்டுப் பொசுக்கக் கூடாது என்று சட்டம் இருக்கிறது. ஆனால், 12 தமிழர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் ஆந்திர காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இப்படுகொலையில் ஈடுபட்ட காவல்துறையினருக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, இதற்குக் காரணமான காவல்துறையினர் மீது கொலை வழக்கு தொடரப்பட்டு பணி நீக்கம் செய்வதுடன், கைது செய்யப்பட வேண்டும். பணியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
துப்பாக்கிச் சூட்டில் பலியான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தக்க நிவாரணத்தை ஆந்திர மாநில அரசு வழங்க வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:
செம்மரக் கடத்தல் விவகாரத்தில் முதலாளிகளாக இருக்கும் ஆந்திர முதலைகளை விட்டுவிட்டு மரம் வெட்டும் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்படும் தமிழர்கள் மீது அடுத்தடுத்து வழக்குகளைப் பாய்ச்சியும் தாக்குதல் நடத்தியும் வெறியாட்டம் போடும் ஆந்திர அதிகாரிகள், உச்சபட்ச கொடூரமாக 12 தமிழர்களைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். ஆந்திர அதிகாரிகளின் இந்த மனசாட்சியற்ற கொடூரத்தை நாம் தமிழர் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது.
திருப்பதி சேசாத்திரி மலையில் ஸ்ரீவாரிமெட்டு ஈசகுண்டா பகுதியில் மரம் வெட்டும் கும்பல் செம்மரங்களை வெட்டி கடத்தியதாகவும் அப்போது ஆந்திர வனதுறையினருக்கும் அவர்களுக்கும் மோதல் நடந்ததாகவும் இதில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் திரைக்கதைகளையே மிஞ்சக்கூடிய அளவுக்கு கற்பனைக் கதையை சித்தரித்து 20 பேரைக் கொன்று வெறியாட்டம் போட்டிருக்கிறது ஆந்திர அதிகாரத் தரப்பு. முதலில் வனத்துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்றதாகக் கசிந்த தகவல் அடுத்த சில மணி நேரங்களிலேயே ஆந்திர மாநில சிறப்பு பிரிவு காவல் துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூடாக மாற்றப்பட்டிருக்கிறது.
கொல்லப்பட்ட 20 பேர்களில் 12 பேர் தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவி தொழிலாளர்கள் என்பது நெஞ்சை நொறுக்கக்கூடிய துயரமாக ஒவ்வொரு தமிழர்களையும் கொதிக்க வைத்திருக்கிறது. மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்ட அப்பாவி தமிழர்களைச் சிட்டுக் குருவிகளைப் போல் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். மரம் வெட்டுவது தவறு என்பது மறுக்க முடியாது. அதற்காக மனிதர்களை வெட்டுவது நியாயமாகிவிடுமா? வெட்டப்பட்ட மரத்தை நாளைக்கு ஒரு கன்று வைத்து நாம் உருவாக்கிவிடலாம். ஆனால், சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவி உயிர்களை ஆந்திர அதிகாரிகளால் மீட்டுத்தந்துவிட முடியுமா? ஒரு மரக்கட்டைக்குக் கொடுக்கிற மரியாதை மனித உயிருக்குக் கிடையாதா?
அப்பாவித் தொழிலாளர்கள் மீது கொலைத்தாக்குதல் நடத்திய ஆந்திர அதிகாரிகள் செம்மரக் கடத்தலின் முதலாளிகள் மீது என்றைக்காவது நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா? ஒவ்வொரு முறையும் மரம் வெட்டியதாகச் சொல்லி தொழிலாளர்களைக் கைது செய்யும் ஆந்திர அரசு, அந்தத் தொழிலாளர்கள் யாருக்காக மரம் வெட்டினார்கள், அவர்களை மரம் வெட்டப் பணித்தது யார் என்பதை எல்லாம் என்றைக்காவது விசாரித்து அந்த முக்கியப் புள்ளிகளை என்றைக்காவது கைது செய்திருக்கிறார்களா?
தமிழனுக்குச் செல்லும் இடமெல்லாம் அடி என்கிற நாதியற்ற நிலைமை நாளுக்கு நாள் தொடருவதை இனியும் சகித்துக் கொண்டிருக்க முடியாது. மேக்கேதாட்டூ அணை கட்டக்கூடாது என்பதற்காக கர்நாடகா செல்லும் தமிழன் அடி வாங்குகிறான். முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமக்கான உரிமையைக் கேட்ட பாவத்துக்காக கேரளா செல்லும் தமிழன் அடி வாங்குகிறான். சிங்கள இனவெறிக்கு ஆளாகி அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தில் தமிழன் அடிவாங்கி வருகிறான். இந்நிலையில் செம்மரக் கடத்தல் எனக் கூறி அப்பாவிக் கூலித் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது நாற்புறமும் தமிழனுக்கான பாதுகாப்பற்ற சூழலும் கேட்கத் துப்பற்ற நிராதரவையுமே காட்டுகிறது.
12 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரத்தை வெறும் மரக்கடத்தல் பிரச்னையாக மட்டும் பார்க்க முடியாது. இந்திய இறையாண்மையை கூறுபோடத்தக்க கொடூரத்தை சர்வசாதாரணமாக நிகழ்த்தி இருக்கிறார்கள் ஆந்திர அதிகாரிகள். அப்பாவித் தொழிலாளர்களைக் காட்டுமிராண்டிகளாகச் சுட்டுக் கொன்ற ஆந்திர மாநில அதிகாரிகள் அத்தனை பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் என்ன நடந்தது என்பதை நியாயமான மனித உரிமைக் குழுக்களை வைத்து விசாரிக்க வேண்டும். நியாயமான விசாரணைக்கு தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவித் தொழிலாளர்களின் குடும்பங்களைக் காப்பாற்ற உடனடியாக உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். தமிழர்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் இனியும் தொடர்ந்தால் நாம் தமிழர் கட்சி மிகக் கடுமையான போராட்டங்களைக் கையிலெடுக்கும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செம்மரக் கடத்தல் விவகாரத்தில் முதலாளிகளாக இருக்கும் ஆந்திர முதலைகளை விட்டுவிட்டு மரம் வெட்டும் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்படும் தமிழர்கள் மீது அடுத்தடுத்து வழக்குகளைப் பாய்ச்சியும் தாக்குதல் நடத்தியும் வெறியாட்டம் போடும் ஆந்திர அதிகாரிகள், உச்சபட்ச கொடூரமாக 12 தமிழர்களைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். ஆந்திர அதிகாரிகளின் இந்த மனசாட்சியற்ற கொடூரத்தை நாம் தமிழர் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது.
திருப்பதி சேசாத்திரி மலையில் ஸ்ரீவாரிமெட்டு ஈசகுண்டா பகுதியில் மரம் வெட்டும் கும்பல் செம்மரங்களை வெட்டி கடத்தியதாகவும் அப்போது ஆந்திர வனதுறையினருக்கும் அவர்களுக்கும் மோதல் நடந்ததாகவும் இதில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் திரைக்கதைகளையே மிஞ்சக்கூடிய அளவுக்கு கற்பனைக் கதையை சித்தரித்து 20 பேரைக் கொன்று வெறியாட்டம் போட்டிருக்கிறது ஆந்திர அதிகாரத் தரப்பு. முதலில் வனத்துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்றதாகக் கசிந்த தகவல் அடுத்த சில மணி நேரங்களிலேயே ஆந்திர மாநில சிறப்பு பிரிவு காவல் துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூடாக மாற்றப்பட்டிருக்கிறது.
கொல்லப்பட்ட 20 பேர்களில் 12 பேர் தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவி தொழிலாளர்கள் என்பது நெஞ்சை நொறுக்கக்கூடிய துயரமாக ஒவ்வொரு தமிழர்களையும் கொதிக்க வைத்திருக்கிறது. மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்ட அப்பாவி தமிழர்களைச் சிட்டுக் குருவிகளைப் போல் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். மரம் வெட்டுவது தவறு என்பது மறுக்க முடியாது. அதற்காக மனிதர்களை வெட்டுவது நியாயமாகிவிடுமா? வெட்டப்பட்ட மரத்தை நாளைக்கு ஒரு கன்று வைத்து நாம் உருவாக்கிவிடலாம். ஆனால், சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவி உயிர்களை ஆந்திர அதிகாரிகளால் மீட்டுத்தந்துவிட முடியுமா? ஒரு மரக்கட்டைக்குக் கொடுக்கிற மரியாதை மனித உயிருக்குக் கிடையாதா?
அப்பாவித் தொழிலாளர்கள் மீது கொலைத்தாக்குதல் நடத்திய ஆந்திர அதிகாரிகள் செம்மரக் கடத்தலின் முதலாளிகள் மீது என்றைக்காவது நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா? ஒவ்வொரு முறையும் மரம் வெட்டியதாகச் சொல்லி தொழிலாளர்களைக் கைது செய்யும் ஆந்திர அரசு, அந்தத் தொழிலாளர்கள் யாருக்காக மரம் வெட்டினார்கள், அவர்களை மரம் வெட்டப் பணித்தது யார் என்பதை எல்லாம் என்றைக்காவது விசாரித்து அந்த முக்கியப் புள்ளிகளை என்றைக்காவது கைது செய்திருக்கிறார்களா?
தமிழனுக்குச் செல்லும் இடமெல்லாம் அடி என்கிற நாதியற்ற நிலைமை நாளுக்கு நாள் தொடருவதை இனியும் சகித்துக் கொண்டிருக்க முடியாது. மேக்கேதாட்டூ அணை கட்டக்கூடாது என்பதற்காக கர்நாடகா செல்லும் தமிழன் அடி வாங்குகிறான். முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமக்கான உரிமையைக் கேட்ட பாவத்துக்காக கேரளா செல்லும் தமிழன் அடி வாங்குகிறான். சிங்கள இனவெறிக்கு ஆளாகி அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தில் தமிழன் அடிவாங்கி வருகிறான். இந்நிலையில் செம்மரக் கடத்தல் எனக் கூறி அப்பாவிக் கூலித் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது நாற்புறமும் தமிழனுக்கான பாதுகாப்பற்ற சூழலும் கேட்கத் துப்பற்ற நிராதரவையுமே காட்டுகிறது.
12 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரத்தை வெறும் மரக்கடத்தல் பிரச்னையாக மட்டும் பார்க்க முடியாது. இந்திய இறையாண்மையை கூறுபோடத்தக்க கொடூரத்தை சர்வசாதாரணமாக நிகழ்த்தி இருக்கிறார்கள் ஆந்திர அதிகாரிகள். அப்பாவித் தொழிலாளர்களைக் காட்டுமிராண்டிகளாகச் சுட்டுக் கொன்ற ஆந்திர மாநில அதிகாரிகள் அத்தனை பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் என்ன நடந்தது என்பதை நியாயமான மனித உரிமைக் குழுக்களை வைத்து விசாரிக்க வேண்டும். நியாயமான விசாரணைக்கு தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவித் தொழிலாளர்களின் குடும்பங்களைக் காப்பாற்ற உடனடியாக உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். தமிழர்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் இனியும் தொடர்ந்தால் நாம் தமிழர் கட்சி மிகக் கடுமையான போராட்டங்களைக் கையிலெடுக்கும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கை:
இன்று (07-04-2015)அதிகாலை ஆந்திர மாநிலம் ஸ்ரீவாரு மெட்டு சேசாலம் வனப்பகுதியில் 12 தமிழர்கள் உட்பட 20 தொழிலாளர்களை ஆந்திர போலீசார் சுட்டு படுகொலை செய்தனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
வனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் அதற்காக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. அதே நேரம் செம்மரக்கட்டை கடத்தலில் பெரும் புள்ளிகளும் அரசியல்வாதிகளும் பின்னணியில் உள்ளனர். அவர்களை கண்டறிந்து கைது செய்வதை விடுத்து சாதாரண கூலித்தொழிலாளர்களை காக்கை குருவிகளை சுட்டுக் கொள்வதை போன்று சுடுவது ஏற்றுக்கொள்ள முடியாது. நிராயுதபாணிகளை கண் மூடித்தனமாக சுட்டு கொள்வது அநியாயமானது. காட்டுமிராண்டித்தனமானது. மனித உரிமைகளுக்கு எதிரானது.
இதற்கு காரணமான காவல்துறையினர் மீது கொலைவழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். செம்மரக்கட்டை கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் கண்டறிந்து கைது செய்ய வேண்டும். படுகொலை செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய நிவாரண உதவி வழங்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
இன்று (07-04-2015)அதிகாலை ஆந்திர மாநிலம் ஸ்ரீவாரு மெட்டு சேசாலம் வனப்பகுதியில் 12 தமிழர்கள் உட்பட 20 தொழிலாளர்களை ஆந்திர போலீசார் சுட்டு படுகொலை செய்தனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
வனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் அதற்காக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. அதே நேரம் செம்மரக்கட்டை கடத்தலில் பெரும் புள்ளிகளும் அரசியல்வாதிகளும் பின்னணியில் உள்ளனர். அவர்களை கண்டறிந்து கைது செய்வதை விடுத்து சாதாரண கூலித்தொழிலாளர்களை காக்கை குருவிகளை சுட்டுக் கொள்வதை போன்று சுடுவது ஏற்றுக்கொள்ள முடியாது. நிராயுதபாணிகளை கண் மூடித்தனமாக சுட்டு கொள்வது அநியாயமானது. காட்டுமிராண்டித்தனமானது. மனித உரிமைகளுக்கு எதிரானது.
இதற்கு காரணமான காவல்துறையினர் மீது கொலைவழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். செம்மரக்கட்டை கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் கண்டறிந்து கைது செய்ய வேண்டும். படுகொலை செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய நிவாரண உதவி வழங்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழர்களை சுட்டு கொன்ற ஆந்திர போலீஸ் மீது நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்!
சென்னை: 12 தமிழர்கள் உட்பட 20 பேரை சுட்டுக் கொன்ற ஆந்திர காவல்துறையின் துணைத் தலைவர் காந்தா ராவ் உள்ளிட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்த சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டியதாக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த 12 தொழிலாளர்கள் உட்பட மொத்தம் 20 பேரை, ஆந்திர மாநிலக் காவல்துறையின் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் சுட்டுக் கொன்றுள்ளனர். மனித நேயமின்றி, கொலைவெறியுடன் ஆந்திரக் காவல்துறை நடத்திய இந்தத் தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இக் கொடியத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆந்திர மாநில வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் நீண்டநாட்களாக நடப்பதாக கூறப்படுகிறது. இதற்குக் காரணமானோர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. செம்மரங்களை வெட்டிக் கடத்துபவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி சட்டத்தின்படி தண்டனை பெற்றுத் தருவதுதான் காவல்துறையின் பணி ஆகும். அதை விடுத்து, அப்பாவி தொழிலாளர்களை காக்கை குருவிகளைப் போல சுட்டுக் கொல்வது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத கொலைக் குற்றமாகும். சுட்டுக் கொல்லப்பட்ட 12 தமிழர்களும் ஆந்திராவில் கல் உடைக்கும் பணி மற்றும் மரம் வெட்டும் பணிக்காக ஆள் தேவை என்று கூறி அழைத்துச் செல்லப்பட்டவர்கள் ஆவர்.
தினமும் ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை ஊதியம் கிடைக்கும் என்று ஆசை காட்டி அழைத்துச் செல்லப்பட்ட அப்பாவிகளை விசாரணை கூட நடத்தாமல் காவல்துறை சுட்டுக் கொன்றிருப்பதும், தற்காப்புக்காகத் தான் அவர்களைச் சுட்டுக்கொன்றதாக பொய்க் காரணம் கூறுவதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. செம்மரக் கடத்தலைக் காரணம் காட்டி தமிழகத்தைச் சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்றும் மரம் கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் தமிழகத்தின் செயல்படாத அரசு, ஆந்திர அரசைக் கண்டிக்காததுதான் தமிழர்களை சுட்டுக்கொல்லும் அளவுக்கு துணிச்சலைக் கொடுத்திருக்கிறது.
அந்த வகையில் இக்கொலைகளுக்கு தமிழக அரசும் பொறுப்பேற்க வேண்டும். 12 தமிழர்கள் உட்பட 20 பேரை சுட்டுக் கொன்ற ஆந்திர காவல்துறையின் துணைத் தலைவர் காந்தா ராவ் உள்ளிட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இத்தாக்குதல் குறித்து பணியிலுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்துவதுடன், கொல்லப்பட்ட 20 தொழிலாளர்கள் குடும்பத்திற்கும் ஆந்திர அரசு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: 12 தமிழர்கள் உட்பட 20 பேரை சுட்டுக் கொன்ற ஆந்திர காவல்துறையின் துணைத் தலைவர் காந்தா ராவ் உள்ளிட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்த சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டியதாக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த 12 தொழிலாளர்கள் உட்பட மொத்தம் 20 பேரை, ஆந்திர மாநிலக் காவல்துறையின் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் சுட்டுக் கொன்றுள்ளனர். மனித நேயமின்றி, கொலைவெறியுடன் ஆந்திரக் காவல்துறை நடத்திய இந்தத் தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இக் கொடியத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆந்திர மாநில வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் நீண்டநாட்களாக நடப்பதாக கூறப்படுகிறது. இதற்குக் காரணமானோர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. செம்மரங்களை வெட்டிக் கடத்துபவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி சட்டத்தின்படி தண்டனை பெற்றுத் தருவதுதான் காவல்துறையின் பணி ஆகும். அதை விடுத்து, அப்பாவி தொழிலாளர்களை காக்கை குருவிகளைப் போல சுட்டுக் கொல்வது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத கொலைக் குற்றமாகும். சுட்டுக் கொல்லப்பட்ட 12 தமிழர்களும் ஆந்திராவில் கல் உடைக்கும் பணி மற்றும் மரம் வெட்டும் பணிக்காக ஆள் தேவை என்று கூறி அழைத்துச் செல்லப்பட்டவர்கள் ஆவர்.
தினமும் ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை ஊதியம் கிடைக்கும் என்று ஆசை காட்டி அழைத்துச் செல்லப்பட்ட அப்பாவிகளை விசாரணை கூட நடத்தாமல் காவல்துறை சுட்டுக் கொன்றிருப்பதும், தற்காப்புக்காகத் தான் அவர்களைச் சுட்டுக்கொன்றதாக பொய்க் காரணம் கூறுவதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. செம்மரக் கடத்தலைக் காரணம் காட்டி தமிழகத்தைச் சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்றும் மரம் கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் தமிழகத்தின் செயல்படாத அரசு, ஆந்திர அரசைக் கண்டிக்காததுதான் தமிழர்களை சுட்டுக்கொல்லும் அளவுக்கு துணிச்சலைக் கொடுத்திருக்கிறது.
அந்த வகையில் இக்கொலைகளுக்கு தமிழக அரசும் பொறுப்பேற்க வேண்டும். 12 தமிழர்கள் உட்பட 20 பேரை சுட்டுக் கொன்ற ஆந்திர காவல்துறையின் துணைத் தலைவர் காந்தா ராவ் உள்ளிட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இத்தாக்குதல் குறித்து பணியிலுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்துவதுடன், கொல்லப்பட்ட 20 தொழிலாளர்கள் குடும்பத்திற்கும் ஆந்திர அரசு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
3 ஆந்திர பஸ்கள் சிறைபிடிப்பு
வேலூர்: திருப்பதி வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து வேலூரில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. அப்போது, வேலூர் பஸ்ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று ஆந்திர பேருந்துகளை ஆர்பாட்டக்காரர்கள் சிறைபிடித்தனர். பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
வேலூர்: திருப்பதி வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து வேலூரில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. அப்போது, வேலூர் பஸ்ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று ஆந்திர பேருந்துகளை ஆர்பாட்டக்காரர்கள் சிறைபிடித்தனர். பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சென்னையில் ஆந்திரா கிளப் முற்றுகை- சந்திரபாபு கொடும்பாவி எரிப்பு- 100 பேர் கைது!!
12 அப்பாவித் தமிழர்களை சுட்டுப் படுகொலை செய்த ஆந்திராவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சென்னையில் உள்ள ஆந்திரா கிளப்பை முற்றுகையிட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
ஆந்திராவின் திருப்பதி அருகே வனப்பகுதியில் செம்மரங்களை வெடியதாகக் கூறி 12 அப்பாவி தமிழர்கள் உட்பட 20 பேரை அம்மாநில போலீசார் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். இந்த படுகொலை சம்பவம் தமிழகத்தை கொந்தளிக்க வைத்துள்ளது.
இப்படுகொலைக்கு தமிழகத்தின் அரசியல்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஆந்திரா கிளப்பை தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. இதில் தந்தை பெரியார் தி.க மற்றும் மே 17 இயக்கத்தினரும் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழர் படுகொலை: சென்னையில் ஆந்திரா கிளப் முற்றுகை- சந்திரபாபு கொடும்பாவி எரிப்பு- 100 பேர் கைது!! இதேபோல் கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பல இடங்களில் சந்திரபாபு நாயுடுவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
12 அப்பாவித் தமிழர்களை சுட்டுப் படுகொலை செய்த ஆந்திராவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சென்னையில் உள்ள ஆந்திரா கிளப்பை முற்றுகையிட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
ஆந்திராவின் திருப்பதி அருகே வனப்பகுதியில் செம்மரங்களை வெடியதாகக் கூறி 12 அப்பாவி தமிழர்கள் உட்பட 20 பேரை அம்மாநில போலீசார் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். இந்த படுகொலை சம்பவம் தமிழகத்தை கொந்தளிக்க வைத்துள்ளது.
இப்படுகொலைக்கு தமிழகத்தின் அரசியல்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஆந்திரா கிளப்பை தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. இதில் தந்தை பெரியார் தி.க மற்றும் மே 17 இயக்கத்தினரும் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழர் படுகொலை: சென்னையில் ஆந்திரா கிளப் முற்றுகை- சந்திரபாபு கொடும்பாவி எரிப்பு- 100 பேர் கைது!! இதேபோல் கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பல இடங்களில் சந்திரபாபு நாயுடுவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
20 தொழிலாளர்கள் சுட்டுப் படுகொலை - மனித உரிமை மீறலே இல்லை - ஆந்திரா அரசு!!
ஹைதராபாத்: செம்மரம் கடத்தியதாக 12 தமிழர் உட்பட 20 தொழிலாளர்களை சுட்டுப் படுகொலை செய்துவிட்டு இதில் மனித உரிமை மீறல் எதுவுமே இல்லை என்று சாதிக்கிறது ஆந்திரா அரசு.
ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டியதாக கூறி இன்று அதிகாலை அம்மாநில போலீசார் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். இத்தேடுதல் நடவடிக்கையின் போது 20 தொழிலாளர்களை அம்மாநில காவல்துறை சுட்டுக் கொன்றது. இதில் 12 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஆந்திரா உள்துறை அமைச்சர் சின்ன ராஜகப்பாவிடம் செம்மரக் கடத்தல் தடுப்புப் படையினர் விளக்கம் அளிக்கையில், செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாலேயே சுட்டுப் படுகொலை செய்தோம் என்று கூறியுள்ளனர். இதனிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஆந்திரா அரசு உத்தரவிட்டுள்ளது.
எப்படி இந்த சம்பவம் நடந்தது என்பது குறித்து விசாரிக்கப்பட இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்த ஆந்திரா அமைச்சர் சின்ன ராஜப்பா, இச்சம்பவத்தில் எந்த ஒரு மனித உரிமை மீறலுமே இல்லை. செம்மரக் கடத்தல்காரர்களும் தொழிலாளர்களும் மரங்களை வெட்டி கடத்த முயன்றனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார்.
ஹைதராபாத்: செம்மரம் கடத்தியதாக 12 தமிழர் உட்பட 20 தொழிலாளர்களை சுட்டுப் படுகொலை செய்துவிட்டு இதில் மனித உரிமை மீறல் எதுவுமே இல்லை என்று சாதிக்கிறது ஆந்திரா அரசு.
ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டியதாக கூறி இன்று அதிகாலை அம்மாநில போலீசார் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். இத்தேடுதல் நடவடிக்கையின் போது 20 தொழிலாளர்களை அம்மாநில காவல்துறை சுட்டுக் கொன்றது. இதில் 12 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஆந்திரா உள்துறை அமைச்சர் சின்ன ராஜகப்பாவிடம் செம்மரக் கடத்தல் தடுப்புப் படையினர் விளக்கம் அளிக்கையில், செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாலேயே சுட்டுப் படுகொலை செய்தோம் என்று கூறியுள்ளனர். இதனிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஆந்திரா அரசு உத்தரவிட்டுள்ளது.
எப்படி இந்த சம்பவம் நடந்தது என்பது குறித்து விசாரிக்கப்பட இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்த ஆந்திரா அமைச்சர் சின்ன ராஜப்பா, இச்சம்பவத்தில் எந்த ஒரு மனித உரிமை மீறலுமே இல்லை. செம்மரக் கடத்தல்காரர்களும் தொழிலாளர்களும் மரங்களை வெட்டி கடத்த முயன்றனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
12 தமிழர்கள் பலிக்கு பதில் சொல்லுமா ஆந்திரா அரசு…: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
ஆந்திர வனப்பகுதியில் 12 தமிழர்கள் உட்பட 20 தொழிலாளர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கமிட்டித்தலைவர் இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆந்திர மாநிலம், திருப்பதி சேஷாத்திரி மலையில் ஸ்ரீவாரிமெட்டு ஈசகுண்டா பகுதியில் செம்மரம் வெட்டும் கும்பலை பிடிக்க அந்த மாநில வனத்துறையினர் முயற்சித்த போது 20 பேர் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாக்கப்பட்டுள்ளனர். இதில் 12 தமிழர்கள் பலியாக்கப்பட்டதாக நம்பகத்தகுந்த தகவல்கள் உறுதி செய்கின்றன. மரம் வெட்டும் கும்பலை துப்பாக்கியால் சுடுவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. வனத்துறையினரின் இத்தகைய தாக்குதல் பல்வேறு சந்தேகங்களுக்கு வித்திடுகின்றன.
இதுகுறித்து தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு ஆந்திர மாநில அரசுக்கு இருக்கிறது. சமீபகாலமாக செம்மர கடத்தலில் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்வதிலும் நடவடிக்கை எடுப்பதிலும் சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன. இவை குறித்து இரு மாநில சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கொண்ட குழுவின் மூலமாக பாரபட்சமற்ற விசாரணைக்கு ஆந்திர மாநில அரசு உத்தரவிட வேண்டும் என்றும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திர வனப்பகுதியில் 12 தமிழர்கள் உட்பட 20 தொழிலாளர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கமிட்டித்தலைவர் இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆந்திர மாநிலம், திருப்பதி சேஷாத்திரி மலையில் ஸ்ரீவாரிமெட்டு ஈசகுண்டா பகுதியில் செம்மரம் வெட்டும் கும்பலை பிடிக்க அந்த மாநில வனத்துறையினர் முயற்சித்த போது 20 பேர் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாக்கப்பட்டுள்ளனர். இதில் 12 தமிழர்கள் பலியாக்கப்பட்டதாக நம்பகத்தகுந்த தகவல்கள் உறுதி செய்கின்றன. மரம் வெட்டும் கும்பலை துப்பாக்கியால் சுடுவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. வனத்துறையினரின் இத்தகைய தாக்குதல் பல்வேறு சந்தேகங்களுக்கு வித்திடுகின்றன.
இதுகுறித்து தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு ஆந்திர மாநில அரசுக்கு இருக்கிறது. சமீபகாலமாக செம்மர கடத்தலில் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்வதிலும் நடவடிக்கை எடுப்பதிலும் சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன. இவை குறித்து இரு மாநில சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கொண்ட குழுவின் மூலமாக பாரபட்சமற்ற விசாரணைக்கு ஆந்திர மாநில அரசு உத்தரவிட வேண்டும் என்றும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 ராணுவ வீரர்கள் பலி
» காஷ்மீர்: போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சாவு
» கென்யாவில் மீண்டும் கலவரம்: சர்ச் எரிப்பு - துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி
» பாகிஸ்தானில் யு டியூப் தடை அமெரிக்காவை கண்டித்து வன்முறை துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி
» குவைத் இளவரசர் உறவினரால் சுட்டுக் கொலை!
» காஷ்மீர்: போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சாவு
» கென்யாவில் மீண்டும் கலவரம்: சர்ச் எரிப்பு - துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி
» பாகிஸ்தானில் யு டியூப் தடை அமெரிக்காவை கண்டித்து வன்முறை துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி
» குவைத் இளவரசர் உறவினரால் சுட்டுக் கொலை!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|