புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_m10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10 
50 Posts - 49%
ayyasamy ram
ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_m10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10 
34 Posts - 33%
mohamed nizamudeen
ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_m10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_m10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_m10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10 
3 Posts - 3%
prajai
ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_m10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_m10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10 
2 Posts - 2%
manikavi
ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_m10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10 
2 Posts - 2%
M. Priya
ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_m10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10 
1 Post - 1%
சிவா
ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_m10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_m10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10 
216 Posts - 42%
heezulia
ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_m10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10 
191 Posts - 37%
Dr.S.Soundarapandian
ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_m10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_m10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10 
18 Posts - 4%
sugumaran
ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_m10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_m10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10 
6 Posts - 1%
manikavi
ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_m10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10 
4 Posts - 1%
prajai
ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_m10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10 
4 Posts - 1%
Kavithas
ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_m10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_m10ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்


   
   
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 15, 2015 9:33 pm

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள் – பார்வைகள் பலவிதம்.

ஒரு சமயம் துறவி ஒருவர் சாலை ஓரம் மரத்தடியில் சமாதி நிலையில் படித்திருந்தார். அந்த வழியாக வந்த திருடன் ஒருவன் அவரை பார்த்து இவனும் நம்மை போல் ஒரு திருடன் போலிருக்கிறது, இரவு திருடிய களைப்பில் இப்படி தூங்கிக்கொண்டிருக்கிறான் போல. காவல்கள் கையில் அகப்பட்டால் மாட்டிக்கொள்வான் பாவம் என்று எண்ணியபடியே அங்கிருந்து புறப்பட்டான்.

அதே வழியாக குடிகாரன் ஒருவன் வந்தான், அவனும் அந்த துறவியை பார்த்தான். அவன் இங்கு கிடப்பது என்னை போல ஒரு குடிகாரன் போலிருக்கிறது. போதை தலைக்கு ஏறி நிதானம் இல்லாமல் விழுந்து கிடக்கிறான். நானும் தான் குடித்திருக்கிறேன்  இப்படியா விழுந்து கிடக்கிறேன் என்று கூறியபடியே அவனும் சென்றான்.

அடுத்து சன்யாசி ஒருவர் அந்த வழியாக வந்தார். அவரும் அந்த துறவியை பார்த்தார். யாரோ ஒரு மகான் மிகுந்த களைப்பால் படுத்திருக்கிறார் என்று எண்ணியவன். அவர் திருவடிகளை வணக்கி சென்றான்.

இப்படி யார் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறோம் என்பது அவரவரின் மனநிலையை பொறுத்து மாறுபடும். அதனால் உண்மை யாருக்கும் சரியாக புலப்படுவதில்லை. இதைப்போலத்தான் உண்மையான பக்தியும் தூய்மையும் நமக்கு தெரியவிடாமல் தடுத்துவிடுவது உலக ஆசைதான்!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 15, 2015 9:34 pm

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள் – அன்பின் தன்மை!



மூன்று நண்பர்கள் காட்டுப் பாதையில் சென்று கொண்டிருந்தனர். திடீரென  மூன்று புலிகள் அவர்களின் எதிரே வந்துகொண்டிருந்தத.

மூவரில் ஒருவன் சொன்னான். அவ்வளவுதான், நம் கதை இன்றோடு முடியப்போகிறது என்று.

இரண்டாமவன் சொன்னான் நாம் இறைவனிடம் பிரார்த்திப்போம் அவர் நம்மை காப்பாற்றுவார் என்று.

மூன்றாமவன் சொன்னான். நாம் ஏன் இந்த சிறிய விடயத்துக்கு இறைவனை தொந்தரவு செய்ய வேண்டும். இந்த மரத்தின் மேல் ஏறிக்கொள்வோம் என்று. இவன் இறைவனை மிகவும் நேசிப்பவன், அன்புள்ளம் கொண்டவன். தன்னால் நேசிக்கப்படுபவனுக்கு இறைவன் ஒருபோதும் சிரமத்தை கொடுப்பதில்லை. அன்பின் தன்மை அத்தகயது.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 15, 2015 9:36 pm

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள் – சந்தேகம் சங்கடமே!


ஒருவன் பெரிய ஆற்றை கடக்க வேண்டியிருந்தது. வெள்ளம் அதிகமாக இருந்ததால் எப்படி கடந்து செல்வது என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தான். விபீடணன் ஒரு இலையை அவனது துணியில் முடிந்து வைத்தார். பிறகு அந்த மனிதனிடம், நீ சிறிதளவும் அஞ்சாமல் தண்ணீரில் நடந்து செல்லலாம். ஆனால் நம்பிக்கை இழந்த கணத்தில் நீரி மூழ்கிவிடுவாய் என்று எச்சரித்தார்.

அந்த மனிதன் நம்பிக்கையோடு ஆற்றில் நடக்க ஆரம்பித்தான். அவனால் தண்ணீரில் நடக்க முடிந்தது அது அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் திடீரென அவனுக்கு ஒரு சபலம் ஏற்ப்பட்டது. விபீடணன் தனது துணியில் முடிந்தது என்ன என்று அறிந்துகொள்ள அவன் மனம் துடித்தது. ஆவல் அதிகமாகவே அந்த முடிச்சை அவிழ்த்தான். அந்த இலையில் ராம நாமம் எழுதப்பட்டிருந்தது.

சாதாரண ராம நாமம் எப்படி நம்மை தண்ணீரில் நடக்க வைக்கும் என்று நினைத்தான். அக்கணமே அவன் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தான்.

நம்பிக்கை நமக்குள் அசாத்திய வலிமையைத் தோற்றுவிக்கிறது. அது குறைந்தால் வலிமையையும் குறையும். நம்பிக்கை இழந்தால் வலிமை அடியோடு போய்விடுகிறது.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 15, 2015 9:39 pm

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள் - சமயோசிதம்!

ஒரு ஊரில் செல்வந்தன் இருந்தான். அவனுக்கு ஒரு தோட்டம் இருந்தது. அந்த தோட்டத்தில் ஒரு குளம் வெட்டி மீன்களை வளர்த்தான். ஒரு நாள் இரவு திருடன் ஒருவன் யாருக்கும் தெரியாமல் அந்த தோட்டத்தில் நுழைந்து மீன்களை பிடித்துக்கொண்டிருந்தான். இது செல்வந்தனுக்கு தெரியவர திருடனை பிடிப்பதற்கு ஆட்களை அனுப்பினான்.

காவலர்கள் வருவதை கண்ட திருடன், எந்த வகையிலும் தோட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது, மாட்டிக்கொள்வது உறுதி என்று உணர்ந்தான். இனி தப்பிக்க வழி என்ன என்று யோசித்தான்! உடனே அருகில் கிடந்த சாம்பலை எடுத்து தன் உடல் முழுதும் பூசிக்கொண்டு ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து கொண்டான்.காவலாளிகள் தோட்டம் முழுதும் தேடியும் அவர்களால் திருடனை பிடிக்க முடியவில்லை. ஆனால் ஒரு மரத்தடியில் உடல் முழுதும் சாம்பல் பூசியிருந்த சாதுவைத்தான் அவர்கள் கண்டனர் .  

மறுநாள் காலையில் செல்வந்தனின் தோட்டத்தில் ஒரு ஞானி எழுந்தருளியிருக்கிறார் என்ற செய்தி காட்டுத்தீ போல் பரவியது. மக்கள் கூட்டம் கூட்டமாக மலர்கள், காணிக்கை, பட்சணங்களுடன் அந்த தோட்டத்துக்கு சென்று வந்தனர். இதை கண்ட சாது வேடத்தில் இருந்த திருடன் மெய்சிலிர்த்துப் போனான்.

நானோ உண்மையில் ஒரு சாது அல்ல, சாதுவை போல் வேடம் தரித்த திருடன். அப்படி இருந்தும் மக்கள் என்னை உண்மையான சாது என்று நம்பி காணிக்கை வழங்குகின்றனர். என் மீது மதிப்பும் மரியாதையும் காட்டுகின்றனர். நான் உண்மையில் ஒரு சாதுவாக இருந்தால் இதைவிட மேலான சிறப்புகள் கிடைப்பதுடன் எனக்கு நிச்சயம் ஆண்டவனின் தரிசனமும், அருளும் கிட்டும் என்று தனக்குத் தானே பேசிக்கொண்டான்.

இப்படி அந்த திருடன் மேற்கொண்ட வெறும் வேடமே அவனது உள்ளத்தில் ஆன்மீக விழிப்பு உணர்வை உண்டாக்கியது. அன்று முதல் மனமாற்றம் பெற்று மேன்மை அடைந்தான்.

ஆசைகள் ஒருவன் மனதை விட்டு விலகும் போது ஆத்மாவிடம் தங்கியிருப்பது பிரம்மானந்தமே!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 15, 2015 9:42 pm

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள் - மாய மயக்கம்!

ஒரு குருவும் சீடனும் உரையாடிக் கொண்டிருந்தனர்.

சீடன்: குருவே என் மீது என் மனைவி மிகுந்த பாசம் வைத்துள்ளார், ஆகவே என்னால் துறவியாக முடியவில்லை என்றான்.

சீடனின் வார்த்தையில் மெய்பொருள் இல்லை என்பதை அறிந்த குருநாதர், சீடன் நினைப்பதைப்போல உலக மாந்தர் இல்லை என்பதை அவனாகவே உணர்ந்துகொள்ள ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடிவு செய்தார். அதன்படி குருநாதர் தம் சீடனுக்கு ஒரு யோக முறையை ரகசியமாகக் கற்பித்தார். குருநாதர் கற்பித்த யோக முறையைச் சீடன் செயல்படுத்த தொடங்கினான்.

ஒருநாள் சீடனின் வீட்டில் அழுகுரல் கேட்டது. அது கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். சீடன் தான் கற்ற யோக மார்க்கத்தால் மூச்சடக்கி உயிரற்ற பிணம் போல் கிடந்தான். அவன் ஒரு ஹட யோகியானதால் அவனது உடல் அவயங்கள் இயல்புக்கு மாறாக கோணி, குறுகி காணப்பட்டது.

அந்த தோற்றத்தை கண்ட அவன் மனைவி மற்றும் உறவினர்கள் அவன் இறந்துவிட்டதாக முடிவுக்கு வந்துவிட்டனர். அவனுடைய மனைவி ஐயோ இது என்ன சோதனை என் இனிய பிராண நாதா என்னை விட்டு போய்விட்டீரே என்று கதறினால். இதனிடையே உறவினர்கள் சீடனை தகனம் செய்ய ஏற்பாடு செய்தனர்.  சீடனின் உடல் கோணல் மாணலாக இருந்ததால் நிலையை தாண்டி அவனை கொண்டுவரவது சிரமமாக இருந்தது.

அந்நேரத்தில் ஒருவன் கோடரியை எடுத்து வந்து நிலையை வெட்டி அப்புறப்படுத்த தொடங்கினான். பிணத்தின் அருகே அழுதுகொண்டிருந்த அவன் மனைவி எழுந்து ஓடிவந்து நிலை படியை ஏன் இடிக்கிறீர்கள் என்றாள்.  அம்மா பதற்றம் வேண்டாம், பிணம் நேராக இல்லாததால் பிணத்தை வாசல் வழியே கொண்டு செல்வது கடினம், அதனால் தான் இடிக்கிறோம் என்றான்.

அதைகேட்ட சீடனின் மனைவி, நிறுத்துங்கள் நிலைபடியை இடிக்க வேண்டாம்.  விதி வசத்தால் என் கணவன் இறந்துவிட்டார் , இனி என் குடும்பத்தை காப்பாற்றுவார் யாரும் இல்லை, தந்தையை இழந்து தவிக்கும்   குழந்தைகளையும் இனி நான் தான் காப்பாற்ற வேண்டும். இந்த நிலைமையில் வாசலை இடித்துவிட்டால் மீண்டும் அதை புதுப்பிக்க என்னால் முடியாது. என் கணவருக்கு நேர வேண்டியது நேர்ந்துவிட்டது, இனி என்ன செய்ய, வேண்டுமானால் கைகால்களை வெட்டி வெளியில் கொண்டு செல்லலாம் என்றாள்.

இந்த வார்த்தைகளை கேட்ட அந்த சீடன் எழுந்து நின்றான். அப்போது ஹடயோகியான சீடனுக்கு குருநாதர் கற்பித்த யோக முறையின் வேகம் தணிந்திருந்தது. மனைவியை நோக்கி அவன், அடி  பாதகி ! உன்னை என் மனைவி என்று சொல்ல என் மனம் கூசுகிறது.இவ்வளவு காலமும் என்னிடம் பாசம் கொண்டதுபோல் நடித்து என்னை ஏமாற்றிவிட்டாய்.  என் கை கால்களை வெட்ட சொல்கிறாய். உன் உண்மையான சுய ரூபத்தை தெரிந்துகொண்டேன்  என்று கூறியவாறு வீடு, மனைவி, அனைத்தையும் துறந்து தன் குரு நாதர் நோக்கி விரைந்தான்.

உலக ஆசைகளைப் பூர்த்தி செய்வதில் ஈடுபட்டு, அவற்றில் மூழ்கி அந்த காரணத்தினால் துன்புற்றாலும் நாம் யார்? இவற்றை அனுபவிப்பது யார் என்ற கேள்வி எப்போதாவது நம் உள்ளத்தில் எழும். அந்த காலம் தான் ரகசியப் பொருளை விளக்கும் புனித காலம்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 15, 2015 9:43 pm

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள் - மோக மயக்கம்!

ஒரு ஊரில் ஏழை வேதியன் ஒருவன் வாழ்ந்து வந்தான். எந்த வித வேலையும் கிடைக்காமல் குடும்பம் நடத்த முடியாமல் தவித்து வந்தான். வறுமை அவனை வாட்டியது. இந்த நிலையில் அந்த வேதியன் ஒரு தொழிலதிபரை அணுகி தனக்கு ஏதாவது வேலை போட்டு தருமாறு அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தான். அவன் வேலை கேட்டு வந்த போதெல்லாம் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி அவனை பிறகு வருமாறு கூறினார் அந்த தொழிலதிபர்.

இவ்வாறு நாட்கள் கடந்து கொண்டிருந்தது. வேதியனுக்கு வேலை கிடைத்த பாடில்லை. மிகவும் கவலை அடைந்தான். ஒருநாள் அவன் தன் நண்பனிடம் தன்னுடைய துன்பமான நிலையை கூறினான்.  அவனுடைய நண்பன் கூறினான், ஏன் கால் தேய நடந்து தொழிலதிபரை சந்திக்க செல்கிறாய். நான் சொல்வது போல் நடந்துகொள், உடனே வேலை கிடைக்கும். இப்போதே ரோஜாமணியிடம் சென்று முறையிடு, அவள் உன்மீது இறக்கம் கொண்டு உதவி செய்வாள், அவள் மனம் வைத்தல் வேலை உன்னை தேடிவரும் என்றான்.

அதைக் கேட்ட வேதியன் மிகுந்த ஆச்சர்யம் அடைந்தான். அப்படியா எனக்கு உடனே வேலை கிடைக்குமா? நான் இப்போதே ரோஜாமணியை சந்திக்க செல்கிறேன் என்றான். வேதியன் ரோஜா மணியை சந்தித்து, அம்மா நான் ஒரு ஏழை வேதியன் வேலை ஏதும் கிடைக்காமல் சிரமப்படுகிறேன், தாங்கள் என் நிலைமையை நினைத்து எனக்கு உதவுங்கள் என்றான். அந்த வேதியனின் நிலையை கேட்டு ரோஜாமணியின் மனம் இலகியது, உனக்கு யாரிடம் வேலை வேண்டும் என்று கேட்டாள்.  அந்த தொழிலதிபரிடம் சொன்னால் போதும் என்றான்.

ரோஜாமணியும் அவனுக்கு உதவுவதாக உறுதி அளித்தாள். வேதியன் நிம்மதி பெருமூச்சுடன் வீடு திரும்பினான். மறுநாள் காலை தொழிலதிபரின் சேவகன் வேதியனின் வீட்டுக்கு வந்து வேதியனை அழைத்து சென்றான். தொழிலதிபர் அவனை வேலைக்கு சேர்த்து கொண்டார்.

உலகம் முழுதும் பெண் ஆசையில் தான் மயங்கி கிடக்கிறது. ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் காமமே உலகை ஆட்டிப்படைக்கவல்ல மாயை.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக