புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிக தகவல்கள் » இஸ்லாம் Poll_c10ஆன்மிக தகவல்கள் » இஸ்லாம் Poll_m10ஆன்மிக தகவல்கள் » இஸ்லாம் Poll_c10 
64 Posts - 50%
heezulia
ஆன்மிக தகவல்கள் » இஸ்லாம் Poll_c10ஆன்மிக தகவல்கள் » இஸ்லாம் Poll_m10ஆன்மிக தகவல்கள் » இஸ்லாம் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
ஆன்மிக தகவல்கள் » இஸ்லாம் Poll_c10ஆன்மிக தகவல்கள் » இஸ்லாம் Poll_m10ஆன்மிக தகவல்கள் » இஸ்லாம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆன்மிக தகவல்கள் » இஸ்லாம் Poll_c10ஆன்மிக தகவல்கள் » இஸ்லாம் Poll_m10ஆன்மிக தகவல்கள் » இஸ்லாம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஆன்மிக தகவல்கள் » இஸ்லாம் Poll_c10ஆன்மிக தகவல்கள் » இஸ்லாம் Poll_m10ஆன்மிக தகவல்கள் » இஸ்லாம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆன்மிக தகவல்கள் » இஸ்லாம் Poll_c10ஆன்மிக தகவல்கள் » இஸ்லாம் Poll_m10ஆன்மிக தகவல்கள் » இஸ்லாம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆன்மிக தகவல்கள் » இஸ்லாம் Poll_c10ஆன்மிக தகவல்கள் » இஸ்லாம் Poll_m10ஆன்மிக தகவல்கள் » இஸ்லாம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிக தகவல்கள் » இஸ்லாம் Poll_c10ஆன்மிக தகவல்கள் » இஸ்லாம் Poll_m10ஆன்மிக தகவல்கள் » இஸ்லாம் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக தகவல்கள் » இஸ்லாம்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 6:44 am

1, அழகிற்காக திருமணம் செய்யாதீர்





""நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகின்றாள். அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச்சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப் பற்றுக்காக! நீர் மார்க்கப்பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும்; உமக்கு நலம் உண்டாகட்டும்,'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதன்படி, ஒரு பெண்ணிடம் நான்கு குணங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. சிலர் அவள் செல்வம் உடையவளா என்று கவனிக்கிறார்கள். ஒரு சிலர் அவள் நல்ல குடும்பத்தில் பிறந்தவளா எனக்கவனிக்கிறார்கள். ஒரு சிலர் அழகிற்காகவே

திருமணம் செய்கிறார்கள். இன்னும் சிலர்தான் மார்க்கப்பற்றைப் பார்க்கிறார்கள்.




""ஒரு பெண்ணிடம் பார்க்க வேண்டிய உண்மையான தகுதி, அவளுடைய மார்க்கப் பற்றும், இறையச்சமுமே ஆகும். இதனுடன் மற்ற சிறப்புகளும், தகுதிகளும் ஒன்று சேர்ந்துவிட்டால் அதுவும் நன்றே! எனினும், மார்க்கப்பற்றை பார்க்காமல் புறக்கணித்துவிடுவதும், செல்வத்தையும், அழகையும் மட்டும் பார்த்து மணமுடிப்பதும் ஒரு முஸ்லிமின் செயலன்று,'' என்றும் நாயகம் அவர்கள் சொல்கிறார்கள்.




இதுபற்றி அவர்கள் மேலும் கூறும்போது, ""பெண்களை அவர்களின் அழகுக்காக திருமணம் முடிக்காதீர்கள். அவர்களுடைய அழகு, அவர்களை அழித்துவிடக் கூடும். பெண்களை செல்வந்தர்கள் என்பதற்காக மணமுடிக்காதீர்கள்; அவர்களுடைய செல்வம் வரம்பு மீறுவதிலும், அடங்காப்பிடாரித்தனத்திலும் அவர்களை ஆழ்த்திவிடக் கூடும். மாறாக, மார்க்கப்பற்றின் அடிப்படையில் அவர்களை மணமுடித்துக் கொள்ளுங்கள். மார்க்கப்பற்று கொண்ட கறுப்பு நிற அடிமை பெண், அல்லாஹ்வின் பார்வையில் வெண்ணிறமுடையவள்.



மார்க்கப்பற்றில்லாத குடும்பப் பெண்ணைவிட சிறந்தவள் ஆவாள்,'' என்றும் சொல்கிறார்கள்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 12, 2009 6:48 am

அருமையான விளக்க கட்டுரை..தாமு..நிறைய விஷயங்கள் சொல்லப் பட்டு இருக்கின்றது..நன்றிகள் தாமு



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 6:59 am

திருமணத்துக்கு அழகு மட்டும் போதாது!

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி)

""இளைஞர்களே! உங்களில் திருமணத்தின் பொறுப்பைச் சுமக்கும் சக்தி படைத்தவர் மணம் புரிந்து கொள்ளட்டும்.

ஏனெனில், திருமணம் பார்வையைத் தாழ்த்துகின்றது.

வெட்கத்தலத்தைப் பாதுகாக் கின்றது. (பார்வை இங்கும் அங்கும் அலைபாய்வதை விட்டும் காம இச்சையினால் சுதந்திரமாகத் திரிவதை விட்டும் பாதுகாக்கிறது) திருமணத்தின் பொறுப்பை சுமக்கச் சக்தியற்றவர் இச்சையின் வேகத்தைத் தணித்திட அவ்வப்போது நோன்பு வைத்துக் கொள்ளட்டும்,''(புகாரி முஸ்லிம்)
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ""பெண் மணமுடிக்கப்படுகிறாள்; அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச்சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப் பற்றுக்காக! நீர்மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும்; உமக்கு நலம் உண்டாகட்டும்!'' (புகாரி முஸ்லிம்)

இந்த நபிமொழியின் கருத்தாவது: பெண்ணிடம் நான்கு விஷயங்கள் பார்க்கப்படுகின்றன. சிலர் செல்வத்தைப் பார்க்கின்றார்கள். சிலர் குலச் சிறப்பைக் கவனிக்கிறார்கள். வேறு சிலர் பெண்ணின் அழகிற்காக மணம் முடிக்கின்றார்கள்.

இன்னும் சிலரோ மார்க்கப்பற்றைப் பார்க்கின்றார்கள். ஆனால், அண்ணல் நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு வழங்கியிருக்கும் அறிவுரை ""ஒரு பெண்ணிடம் பார்க்க வேண்டிய உண்மையான தகுதி அவளுடைய மார்க்கப்பற்றும், இறையச்சமுமே ஆகும். இதனுடன் மற்ற சிறப்புகளும் தகுதிகளும் ஒன்று சேர்ந்து விட்டால் அதுவும் நன்றே! எனினும் மார்க்கப்பற்றைப் பார்க்காமல் புறக்கணித்து விடுவதும், செல்வத்தையும் அழகையும் மட்டும் பார்த்து மணமுடிப்பதும் ஒரு முஸ்லிமின் செயலன்று.''

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றார்கள்.

""பெண்களை அவர்களின் அழகுக்காக திருமணம் முடிக்காதீர்கள்; அவர்களுடைய அழகு அவர்களை அழித்துவிடக் கூடும். பெண்களைச் செல்வந்தர்கள் என்பதற்காக மணம் முடிக்காதீர்கள். அவர்களுடைய செல்வம் வரம்பு மீறுவதிலும் அடங்காப் பிடாரித் தனத்திலும் அவர்களை ஆழ்த்திவிடக்கூடும்.

மாறாக மார்க்கப்பற்றின் அடிப்படையில் அவர்களை மணமுடித்துக் கொள்ளுங்கள். மார்க்கப்பற்று கொண்ட கறுப்புநிற அடிமைப்பெண், அல்லாஹ்வின் பார்வையில் வெண்ணிறமுடைய மார்க்கப் பற்றில்லாக் குடும்பப் பெண்ணைவிடச் சிறந்தவள் ஆவாள்.'' (அல்முன்தகா)
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மொழிந்தார்கள்.

""எவருடைய மார்க்கப் பக்தியையும் நற்குணத்தையும் நீங்கள் விரும்புகின்றீர்களோ அத்தகைய மனிதர் உங்களிடம் திருமணம் கேட்டு வந்தால் அவருக்கு மணமுடித்துக் கொடுத்து விடுங்கள்.

நீங்கள் இப்படிச் செய்யாவிட்டால் பூமியில் குழப்பமும், தீமையும் விளைந்து விடும்.'' (திர்மிதி) நபி(ஸல்) அவர்களுடைய கருத்து இதுதான்: மண விவகாரத்தில் பார்க்க வேண்டிய தகுதி மார்க்கப் பற்றும் நல்லொழுக்கமே ஆகும்.

இவற்றைப் பார்த்திடாமல் சொத்து சுகங்களையும் குலச் சிறப்பையும் மட்டுமே பார்த்தால் முஸ்லிம் சமூக அமைப்பில் அதனால் பெரும் தீமை விளையும். எவருடைய பார்வையில் மார்க்கம் இவ்வளவு தாழ்ந்து போய் சொத்து சுகம் மட்டுமே கவனிக்கத் தகுந்ததாகவும், மதிப்புக்குரியதாகவும் விளங்கு கிறதோ அத்தகைய உலகாயதவாதிகளிடம் மார்க்கம் எனும் தோட்டத்தை- தியாக நீரைப் பாய்ச்சி செழிக்கச் செய்திட வேண்டும் என்ற உணர்வு எங்கே பிறக்கப் போகிறது? இத்தகைய நிலையைத் தான் நாயகம்(ஸல்) அவர்கள் சோதனை (குழப்பம்) என்றும் தீமை என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

(அண்ணல் நபிகளார் வாழ்வினிலே.... நூலில் இருந்து)

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 7:03 am

தேவைக்கு அதிகமானதை செலவழியுங்கள்

அறிவிப்பாளர்: அபூஉமாமா(ரலி)
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

""ஆதத்தின் மகனே! நீ தேவைக்கு அதிகமான உனது செல்வத்தை ஏழ்மையில் வாடும் இறையடியார்களுக்காகவும், மார்க்கப் பணிகளுக் காகவும் செலவிடு; அதுவே உனக்கு நன்மை தரும். தேவைக்கு அதிகமான செல்வத்தை தேவையுடையவர்களுக்காக நீ செலவிடாவிட்டால் இறுதியில் அது உனக்கு தீங்கு பயக்கும். உன்னிடம் தேவைக்கு அதிகமாகச் செல்வம் இல்லை; உன் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் அளவுக்கு மட்டுமே செல்வம் இருக்கின்றது என்றால், அதிலிருந்து நீ செலவிடாவிட்டால் அதற்காக அல்லாஹ் உன்னைக் கண்டிக்க மாட்டான். நீ எவருக்குப் பொறுப்பாளியாய் இருக்கின்றாயோ அவர்களிலிருந்து தர்மம் செய்யத் தொடங்கு!'' (திர்மிதி)

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ""வல்ல அல்லாஹ் கூறுகின் றான்: நீ தேவையுள்ள என்னுடைய அடியார்களுக்காகவும் மார்க்கப் பணியை வளர்ச்சி பெறச் செய்வதற்காகவும் செலவிட்டால் நான் உனக்காகச் செலவு செய்வேன்.''(புகாரி, முஸ்லிம்)

விளக்கம்: உனக்காகச் செலவு செய்வேன் என்பதன் கருத்து:

""மனிதன் தன் சம்பாத்தியத்திலிருந்து பிற மக்களின் தேவைகளுக்காகவும், மார்க்கப் பணிகளுக்காகவும் செலவிடுகின்ற செல்வம் எதுவாயினும் அது வீணாகி விடுவது இல்லை. மாறாக, அவன் அதற்கான கூலியை மறுஉலகத்திலும் பெற்றுக் கொள்வான். இவ்வுலகிலும் பெற்றுக் கொள்வான்.

உலகில் அவனது செல்வத்தில் செழிப்பும், வளமும் உண்டாகும். மறுமையில் அவன் கூலியாகப் பெறுவது எதுவாயினும் அதன் அளவை இங்கே மதிப்பிட்டு விட முடியாது.

அறிவிப்பாளர்: அபூதர் (ரலி)

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றேன்.

அண்ணலாரின் பார்வை என்மீது பட்டபோது, ""அவர்கள் அழிந்து போய் விட்டார்கள்!'' என்று கூறினார்கள். நான் கூறினேன்: ""என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! யார் அழிந்து போய் விட்டார்கள்?'' அண்ணலார் பதிலளித்தார்கள்.

""செல்வந்தர்களாய் இருந்தும் செலவழிக்காமல் இருப்பவர்கள் அழிந்துபோய் விட்டார்கள். முன்னால் இருப்பவர்களுக்கும், பின்னால் இருப்பவர்களுக்கும், வலதுபக்கம் இருப்பவர்களுக்கும், அனைவருக்கும் செல்வத்தை அள்ளித் தருபவர்கள் வெற்றியடைந்தவர்கள் ஆவர். ஆனால், இப்படிச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர்.''(புகாரி, முஸ்லிம்)

இறை தியானமும் இறைஞ்சுதலும்

அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி)

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அல்லாஹ் கூறுகின்றான்:

""என்னை ஏன் அடியான் நினைவு கூரும்போதும் , என் நினைவில் அவனது உதடுகள் இரண்டும் அசையும் போதும் நான் அவனுடன் இருக்கின்றேன். (புகாரி)
விளக்கம்: ""அவனுடன் இருக்கின்றேன்'' என்பதன் கருத்து, அல்லாஹ் அந்த அடியானைத் தன் பாதுகாப்பில், கண்காணிப்பில் வைத்துக் கொள்கிறான். தீமையையும் மாறு செய்வதையும் விட்டு அவனைக் காப்பாற்றுகின்றான் என்பதாகும். மேலும், இந்த நபிமொழி அல்லாஹ்வை உள்ளத்தின் ஈடுபாட்டுடன் நாவினால் நினைவு கூர வேண்டும் என்று உணர்த்துகின்றது.

அறிவிப்பாளர்: அபூமூஸா(ரலி)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

""தன் இறைவனை நினைவு வைக்கும் மனிதன் உயிருள்ள ஒரு மனிதனுக்கு ஒப்பாவான். அல்லாஹ்வை நினைவு வைக்காத மனிதன், உயிரற்ற பிணத்திற்கு ஒப்பாவான்.''(புகாரி முஸ்லிம்)

விளக்கம்: அல்லாஹ்வின் நினைவு உள்ளத்திற்கு உயிரூட்டுகின்றது. அதனைக் குறித்து அலட்சியமாய் இருப்பது மனிதனின் உள்ளத்தை மரணிக்கச் செய்து விடுகின்றது. இந்த மனித வடிவத்தின் (உடலின்) வாழ்க்கை உணவைக் கொண்டே அமைந்துள்ளது. உணவு கிடைக்காவிட்டால் இந்த உடல் இறந்து விடுகின்றது. இந்த உடலுக்குள் இருக்கும் ஆன்மாவுக்குரிய உணவான இறை தியானம் கிடைக்காமல் போய்விட்டால் அதற்கும் மரணமேற்பட்டு விடுகின்றது.

(அண்ணல் நபிகளார் வாழ்வினிலே.... நூலில் இருந்து)

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 7:14 am

இறை உதவிக்கு இப்படியும் நன்றி செலுத்தலாம்


ஆன்மிக தகவல்கள் » இஸ்லாம் Tblanmegamnews252191424

இறைவன் கூறுகின்றான்: "அவனுக்கு நாம் இரு கண்களையும் ஒரு நாவையும் இரு உதடுகளையும் அளிக்கவில்லையா? மேலும் (நன்மை தீமையின்) தெளிவான இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டி விட்டோம்.

(இல்லையா?) ஆயினும், அவன் கடினமான மலைப்பாதையைக் கடந்து செல்லத் துணியவில்லை.கடினமான அந்த மலைப்பாதை எதுவென்று உமக்குத் தெரியுமா, என்ன? (அதுதான்) ஒருவனை அடிமைத் தளையிலிருந்து விடுவிப்பது ஆகும். அல்லது பட்டினிநாளில் உறவினரான அநாதைக்கோ அல்லது வறுமையில் வாடும் ஏழைக்கோ உணவளிப்பதும் ஆகும்! பின்னர் (அத்துடன்) எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு பொறுமையை மேற்கொள்ளவும் (மக்கள் மீது) இரக்கம் காட்டவும் ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுகின்றார்களோ, அவர்களில் ஒருவனாக அவன் இருக்கவேண்டும். இத்தகையோர் தான் வலப்பக்கத்தார். மேலும், எவர்கள் நம்முடைய வசனங்களை ஏற்க மறுத்தார்களோ அவர்கள் இடப்பக்கத்தார்''.

(திருக்குர்ஆன் 90: 8-19)

(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 7:27 am

நாவை அடக்குங்கள்



* ஒரு மனிதன் தன்னுடைய நாவைக் காத்துக்கொண்டால் அல்லாஹ் அவனுடைய மானத்தைக் காத்துக்கொடுப்பான். இறைவணக்கம் செய்வதற்கு சிரமப்படவேண்டும். ஆனால், சிரமமில்லாத ஒரு வணக்கம் உண்டு என்றால் அது மவுனம் ஆகும்.

* பேசுவது வெள்ளி என்றால், பேசாமல் மவுனமாக இருப்பது தங்கமாகும்.




* தேவைக்குப் போக மீதிப்பணம் வைத்திருப்பவர் தர்மம் செய்ய தயங்குகிறார். சேர்த்து வைக்கிறார். ஆனால், தேவையில்லாத பேச்சுகளுக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கிறார்.




* நாவை அடக்கி ஆளுங்கள். அதற்கு அதிகாரம் கொடுக்காதீர்கள். உங்கள் அதிகாரத்திற்கு கீழ்படிந்து அது இயங்கட்டும். இதில் தான் உங்கள் வெற்றி இருக்கிறது.




* எனக்குப் பிறகு நான் பயப்படுவதெல்லாம் திறமை மிக்க நாவு படைத்த நயவஞ்சகரைப் பற்றியதே.




* கெட்ட வார்த்தைகளை பேசுபவன் மீது அல்லாஹ் கோபம் அடைகின்றான். அதிகமான பாவங்கள் நாவினால் தான் உண்டாகின்றன.




* உன் நாவைப் பேணிக்கொள். நீ செய்த பாவங்களை எண்ணி எண்ணி கண்ணீர் சிந்து. போர்க்களத்தில் அல்லாஹ்வுக்காக உயிர் தியாகம் சிந்தும் செந்நீரை விட அல்லாஹ்வின் பயத்தினால் அழுபவரின் கண்ணீர் பெருமைக்குரியதாகும்.




* எவர் அதிகமாக வீண் பேச்சு பேசுகிறாரோ அவர் ஏழ்மை நிலையை அடைவார்.
- நபிகள் நாயகம்


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 7:27 am

நன்றி மீனு ஆன்மிக தகவல்கள் » இஸ்லாம் 678642

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 7:28 am

நன்றி தினமலர். ஆன்மிக தகவல்கள் » இஸ்லாம் 678642

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat May 29, 2010 5:59 pm

அழகானதொரு தொகுப்பு நன்றி தாமு ஆன்மிக தகவல்கள் » இஸ்லாம் 677196 ஆன்மிக தகவல்கள் » இஸ்லாம் 677196 ஆன்மிக தகவல்கள் » இஸ்லாம் 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 29, 2010 6:06 pm

நன்றி நண்பா அருமையான பதிவு



நேசமுடன் ஹாசிம்
ஆன்மிக தகவல்கள் » இஸ்லாம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக