புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10 
3 Posts - 3%
prajai
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10 
3 Posts - 3%
manikavi
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Rutu
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Kavithas
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10 
216 Posts - 42%
heezulia
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10 
18 Posts - 3%
sugumaran
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10 
6 Posts - 1%
manikavi
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
prajai
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 12:48 am

First topic message reminder :

மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Tasmac%20protest%201
கடந்த ஒருவாரமாக தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் மதுவிலக்கு கோரி பொதுமக்கள் நடத்தும் போராட்டங்கள் ஆளும் அரசுக்கு நெருக்கடியை உண்டாக்கியிருக்கிறது.அதனால்தான் தலைமைச் செயலகம் வந்த முதல்வர் காவல்துறை அதிகாரிகளோடு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து அவசர அவசரமாகக் கேட்டு அறிந்து இருக்கிறார்.

கோட்டையில் அவசர ஆலோசனை நடந்து கொண்டிருக்கும்போதே சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அந்தக் கல்லூரி அமைந்துள்ள பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைமுன்பு திரண்டனர்.புத்தகத்தைப் படிக்கவா சாராயத்தைக் குடிக்கவா என்று முழக்கங்கள் எழுப்பியவாறு டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி போராட்டம் நடத்தினர்.காவல்துறை அனுமதி மறுத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்த மாணவர்களும் விடாமல் போராடினர்.ஒரு கட்டத்தில் டாஸ்மாக் கடைமீது கல்லெறிந்து அடித்து நொறுக்கினர்.அப்போது நிகழ்ந்த தள்ளுமுள்ளுவில் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்ட மாணவர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது.

விருத்தாசலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு முன்பாகத் திரண்ட இளைஞர்கள் நெடுநாட்களாக பல்வேறு பிரச்சனைகள் எழ காரணமாக இருந்த,தமிழக அரசு நடத்திவரும் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கியுள்ளனர்.இன்னும் பல இடங்களில் பொதுமக்கள்,வயது வித்தியாசம் இன்றி தாமாகவே முன்வந்து டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு மூடவலியுறுத்தி `மதுவிலக்கு` என்ற சமுதாய ஆரோக்கிய தீபத்தை ஏற்ற கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டுவர வலியுறுத்தி போராட்டங்கள் நடப்பது ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்டது.மதுவிலக்கை வலியுறுத்தி பெரியார் தனது தோட்டத்தில் இருந்த நூற்றுக் கணக்கான தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். அவர் காலம் தொடங்கி காங்கிரஸ்,திமுக,அதிமுக என்று கட்சிகள் மாறிமாறி தமிழகத்தில் ஆட்சி செலுத்திய போதும் மதுவிலக்குக் கொள்கை மட்டும் ஆளும் ஆண்ட கட்சிகளுக்கு வேப்பங்காயாக கசக்கவே செய்தது;கசந்தும் வருகிறது. இதில் ஆட்சி அதிகாரம் வகிப்போரே மதுபானம் தயாரிக்கும் ஆலைகளை நடத்தி வருவதும் மதுபான விடுதிகள் பார்கள் நடத்திவருவதும் யதார்த்தம்.

கடந்த 31ஆம் தேதி மதுவிலக்கு கொண்டுவர வலியுறுத்தி மார்த்தாண்டத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் பரிதாபமாக இறந்தார். 5 மணி நேரத்திற்கும் மேலாக பல நூறு அடிக்கும் அதிகமான உயரம் கொண்ட செல்போன் டவரில் நின்றபடி போராடிய அவர்,போலீசாரின் தவறான அணுகுமுறையால்,அரசின் மெத்தனத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ரத்த வாந்தி எடுத்த நிலையில் பிணமானார். ஒட்டுமொத்த தமிழகமும் காட்டுத் தீயென பரவிய காந்தியவாதி சசிபெருமாள் மரணச் செய்தி அரசியல் இயக்கங்களை ஒன்று படுத்தி,கடந்த 4 நாட்களாக போராட்டங்களைத் தீவிரப்படுத்தி இருக்கிறது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவரின் தாயாரோடும் மதுவிலக்கு போராட்டத்தை சொந்த ஊரான கலிங்கப்பட்டியிலிருந்து முன்னெடுத்து இருக்கிறார்.நேற்று(ஞாயிறு)அங்கு நடந்த போரட்டத்தில் போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரர்களைக் கலைத்துள்ளனர்.இது மேலும் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல மாறி இருப்பதை இன்று(திங்கள்) நடந்து வரும் போராட்ட சம்பவங்கள் காட்டுகின்றன.

காந்தியவாதி சசிபெருமாளின் சொந்த ஊரில் அவரின் வாரிசுகளும்,அரசியல் இயக்கங்களும் அவர் வலியுறுத்திய மதுவிலக்கு போராட்ட தீபத்தை கையிலெடுத்துள்ளனர்.போலீசாரின் மிரட்டல்களுக்கும் கைது கொடுமைகளுக்கும் அஞ்சாமல் தியாகி சசிபெருமாளின் மகள் கவியரசி பள்ளிச் செல்லும் சிறுமியும் சிறைக்குள் தள்ளப்பட்டு இருக்கிறார். வேலூர்,சேலம்,காஞ்சிபுரம் என்று பல்வேறு பகுதிகளில் இருக்கும் செல்போன் கோபுரங்களில் ஏறி இளைஞர்கள் போராடி வருகிறார்கள்.அவர்களிடம் மிரட்டல் விடுக்கும் காவல்துறை சமாதானம் பேசுவது போல பேசி கீழிறங்க வைத்து கைது செய்து வருகிறார்கள் தமிழகம் முழுவதும் உள்ள பல ஆயிரம் செல்போன் டவர்கள் தற்போது போலீசாரின் காவலில் இருக்கின்றன.

தற்போது மதுவிலக்கு போராட்டம் கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் பரவியுள்ளது.சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அதனைத் தொடங்கி வைத்துள்ளனர்.மதுரையில் மதிமுக பொதுச் செயலாளர் தமிழக கல்லூரி மாணவர்கள் கையில்தான் மதுவிலக்கு உள்ளது.அதனால் 1965 ஆம் ஆண்டு மொழிப் போராட்டங்களில் மாணவர்கள் பங்காற்றியது போல இப்போது மதுவிலக்கிலும் பங்கெடுக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். நாளை(செவ்வாய்) தமிழகம் முழுவதும் மதிமுக,கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக,தேமுதிக, காங்கிரஸ், வணிகர் சங்கங்கள் மற்றும் பால் நுகர்வோர் சங்கம் ஆகியவை இணைந்து மதுவிலக்கு கோரும் பந்த் நடத்த உள்ளனர். இதற்கு,பாஜகவும் திமுகவும் ஆதரவை வழங்கியுள்ளன.

35 ஆண்டுகளாக மது ஒழிப்புக்காகப் போராடி வரும் டாக்டர் ராமதாஸ்,பாமக இதில் பங்கேற்காது என்று கூறிவிட்டார். தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியும் இதில் பங்கேற்காது என்றும் ஆனால் மதுவிலக்குக் கொள்கையை மதிக்கிறோம் என்றும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். பந்த் மூலம் பெருமளவில் மதுவிலக்கு ஆதரவை திரட்ட இந்தக் கட்சிகள் முடிவு செய்து பெருமளவில் திட்டமிட்டுள்ளன.

வரும் 6 ஆம் தேதி தேமுதிக சார்பில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது.அடுத்து வரும் 10 ஆம் தேதி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த கோரி திமுக சார்பில் அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.தமிழகம் முழுக்க மதுவிலக்கு கோரிக்கை வலிமையடைந்துள்ளது.ஆனால் ஆளும் அரசுத் தரப்பில் கோரிக்கை நிறைவேற்றப்படுவது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் போராட்டத்தை எப்படி நீர்த்துப் போகச் செய்யலாம் என்ற கோணத்தில் ஆலோசிக்கப்படுவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 04, 2015 1:22 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 1:24 am

மதுவிலக்கு அமலுக்கு வந்தால் மது ஆலைகளும் மூடப்படும்: கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின் பதில்

தமிழகத்தில் மதுவிலக்கு அமலுக்கு வந்தால், திமுகவினர் நடத்துவதாக கூறப்படும் மது ஆலைகளும் மூடப்படும் என்பதை அரசியல் கட்சித் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறுகையில், ''காந்தியவாதி சசிபெருமாள் மரணத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூடக்கோரி போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.

ஆனால், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால்தான் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி மாவட்டத் தலைநகரங்களில் ஆகஸ்ட் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

திமுகவை சேர்ந்தவர்கள் மதுபான ஆலைகளை நடத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோர் கூறுகின்றனர். மதுவிலக்கு வந்துவிட்டால் மது உற்பத்தி ஆலைகளும் மூடப்படும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

திராவிடக் கட்சிகளுடன் சத்தியமாக கூட்டணி இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். கூட்டணிக்கு வாருங்கள் என அவரை எந்த கட்சியும் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லை'' என்று ஸ்டாலின் கூறினார்.



மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 04, 2015 1:27 am

//தமிழகத்தில் மதுவிலக்கு அமலுக்கு வந்தால், திமுகவினர் நடத்துவதாக கூறப்படும் மது ஆலைகளும் மூடப்படும் என்பதை அரசியல் கட்சித் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.//

ஆஹா..என்ன வொரு தாராளம் ? சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 1:29 am

வைகோ உள்ளிட்ட 152 பேர் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம், கலிங்கப்பட்டியில் மதுக் கடையை முற்றுகையிட்டபோது ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக, மதிமுக பொதுச்செயலர் வைகோ உள்ளிட்ட 152 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையை அகற்றக் கோரி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வைகோ தலைமையில் பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அப்போது சிலர் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து அக்கடையை சூறையாடினர்.

இந்த சம்பவத்தையடுத்து, போலீஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். அப்போது கல்வீச்சு சம்பவங்களும் நிகழ்ந்தன. இதில், 15 பேர் காயமடைந்தனர்.

12 பிரிவுகளில் வழக்கு: இந்த சம்பவம் தொடர்பாக, வைகோ மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்பட 152 பேர் மீது கலவரத்தை ஏற்படுத்துதல், ஆயுதங்களால் தாக்குதல், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் என 12 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 1:47 am

ஆக.10-இல் திமுக ஆர்ப்பாட்டம், ஆக.6-இல் தேமுதிக மனித சங்கிலி

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

திமுக சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி ஆர்ப்பாட்டமும், தேமுதிக சார்பில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தேன். எனினும், தமிழகமெங்கும் மதுவிலக்கை உடனே அமல்படுத்த வேண்டும் என்று அதிமுக அரசை வலியுறுத்தும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் மதுவினால் ஏற்பட்டுள்ள சீரழிவைத் தடுத்து நிறுத்திட, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி ஆகஸ்ட் 6-ஆம் தேதி மாலை 4 மணி முதல் 5 மணி வரை கோயம்பேடு முதல் கோட்டை வரை விஜயகாந்த் தலைமையில் மனித சங்கிலிப் போராட்டம் அகிம்சை வழியில் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.




மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81884
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 04, 2015 2:54 am

அந்த நாளில்....
-
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 UpwUeJsGT0aWO8CpAiWq+tblcatroon_2288454772

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 11:16 pm


தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கைச் செயல்படுத்தக் கோரி நடந்த முழு அடைப்பு போராட்டம் வெற்றி- வைகோ அறிக்கை

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கைச் செயல்படுத்தக் கோரி ஆகஸ்டு 4 முழு அடைப்புப் போராட்டத்துக்கு மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி விடுத்த வேண்டுகோளை ஏற்று, காங்கிரஸ் கட்சி, தேசிய முற் போக்கு திராவிடர் கழகம், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை, புதிய தமிழகம், சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆப் இந்தியா, தவ்ஹித் ஜமாத், தமிழ் தேசியப் பேரியக்கம் (மணியரசன்), பால் முகவர்கள் சங்கம், தமிழ்ப்புலிகள் கட்சி, தற்சார்பு விவசாய சங்கம், அணுஉலைக்கான எதிர்ப்பு இயக்கம் ஆகிய பல்வேறு அமைப்புகள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததின் பேரில், தமிழகத்தில் வணிகப் பெருமக்கள் வருமான நட்டத்தைப் பற்றிக் கவலைப் படாமல், தாங்களாகவே கடைகளை மூடி, முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்து விட் டனர்.

இது மக்கள் போராட்டத்தின் வெற்றி, பொதுநலன் கருதும் வணிகப் பெருமக்களின் வெற்றி இந்தப் போராட்டத்துக்கு தி.மு.க., பா.ம.க., விக்கிரம ராஜாவின் வியாபாரிகள் சங்கம் ஆதரவு தெரிவிக்க வில்லை.

ஆளும் கட்சி காவல் துறையை ஏவிவிட்டு, நேற்று இரவில் அனைத்து மாவட் டங்களிலும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த கட்சி களின் நிர்வாகிகளைக் கைது செய்தனர். இன்று தமிழ்நாட்டின் பல இடங்களில் காவல்துறையினர் ம.தி.மு.க. நிர்வாகிகளையும், போராட் டத்தில் ஈடுபட்டவர்களையும் தாக்கியதோடு கைது செய் தனர்.

தமிழகம் முழுவதிலும் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சிகளைச் சேர்ந் தவர்களை காவல்துறையினர் அடித்தும், உதைத்தும் காவல் துறை வாகனங்களில் ஏற்றி கைது செய்துள்ளனர்.

அரசின் அடக்குமுறையை மீறி முழு அடைப்பு வெற்றி பெற்றது என்றால், முழு மதுவிலக்கு ஒன்றுதான் தமிழ்நாட்டை காக்கும் என்பதற்கான மக்களின் பிர கடனம்தான் போராட்டத்தின் வெற்றி.

டாஸ்மாக் மதுக்கடைகள், ஒயின்ஷாப்புகளின் மது நச்சு வெள்ளமாகப் பாய்ந்து தமிழ்நாட்டை நாசம் செய் கிறது.முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக்கோரி தமிழகமே கொந்தளிக்கிறது. கோடானுகோடித் தாய் மார்கள் மதுக்கடைகளை ஒழிக்க வீறுகொண்டு எழும் நிலை ஏற்பட்டு விட்டது.தமிழ்நாட்டுக்கு ஏற்பட இருக்கும் அழிவைத் தடுக்கவே வீரத் தியாகி சசிபெருமாள் உயிர்ப்பலியானார். அவரைச் சாகடித்தது மட்டும் அல்லாமல், கடுகு அளவும் ஈவு இரக்கம் இல்லாமல் சசிபெருமாளின் மகனையும், மகளையும் கைது செய்தது ஜெயலலிதா அரசு.

நேற்று (3-தேதி), சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவ, மாணவிகள் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற முயன்றபோது, காவல்துறையினர் காட்டு மிராண்டித்தனமாகத் தாக்கினர்.முதலமைச்சர் ஜெயலலிதா, வழிபாட்டுத் தலங்கள் பள்ளிக் கூடங்களுக்கு அருகில் உள்ள மதுக்கடைகள், மது பார்களை மூடப்போவதாகவும், மது விற்பனை நேரத்தை குறைக்கப் போவதாகவும் தமிழக மக்களை குறிப் பாக தாய்மார்களை ஏமாற்று வதற்காக ஒரு திட்டத்தைத் தயாரித்துள் ளார். அதனை அறிவிக்க உள்ளார்.
மதுக்கடைகளின் விற் பனை நேரத்தைக் குறைப்பது என்பது பொதுமக்களை ஏமாற்றவும், மது பாட்டில் களை மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டு, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நேரங் களில் அவற்றைக் குடிகாரர்களிடம் அதிக விலைக்கு விற்பதற்கும் இந்த எற்பாடு.

எனவே, முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிக்கப் போகும் நடவடிக்கைகளை நம்பி மக்கள் ஏமாந்துவிடக்கூடாது. அனைத்து மதுக்கடைகளும் நிரந்தரமாக மூடப்பட வேண் டும்.

தாய்மார்களே, டாஸ்மாக் கடைகளை அகற்ற வீறுகொண்டு போராடுங்கள்! எனது அன்பு மாணவக் கண்மணிகளே உங்கள் வாழ்வையும், தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் நாசமாக் கும் டாஸ்மாக் கடைகளை, ஒயின்ஷாப்களை அடியோடு அகற்ற போர்க்கோலம் பூணுங்கள்!

முழு அடைப்புப் போராட் டத்துக்கு ஆதரவு தந்த அரசியல் கட்சிகளுக்கும், விவசாய சங்கங்களுக்கும், தமிழ் அமைப்புகளுக்கும், மனித உரிமைகள் அமைப்பு களுக்கும், கடைகளை மூடிய வணிகப் பெருமக்களுக்கும் ஆதரவு தந்த மாணவச் செல்வங்களுக்கும், பொது மக்களுக்கும், போராட்ட அழைப்பு விடுத்த அரசியல் இயக்கங்களின் சார்பில் உளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள் ளார்.



மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 11:17 pm

பூரண மது விலக்கு கோரி இன்று முழு அடைப்பு போராட்டம் ஆயிரகணக்கான பேர் கைது

தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை அமல்படுத்த கோரி ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகியவை இணைந்து முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.தே.மு.தி.க., காங்கிரஸ், பாரதீய ஜனதா, ஆம் ஆத்மி, கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளும் ,வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையனும் ஆதரவு தெரிவித்து இருந்தனர். இதையொட்டி பஸ் நிலையங்கள், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். ரோந்து பணியிலும் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்

இன்று பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டது. ஆட் டோக்களும் ஓடின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்க வில்லை. ரெயில் களில் இன்று கூட்டம் அதிகம் இருந்தது.தமிழ்நாடு முழுவதும் இன்று கடை அடைப்பு போராட்டம் நடந்தது.பெரும்பாலான நகரங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அதே நேரத்தில் பல ஊர்களில் வழக்கம் போல் கடைகள் திறந்தும் இருந்தன.

மதுராந்தகம் அருகே உள்ள முதுகரை, சூனாம்பேடு சாலையில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று இரவு விற்பனை முடிந்து கடையை ஊழியர்கள் பூட்டிச் சென்றனர்.

நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் மதுக்கடை ஷட்டரை கடப்பாரையால் உடைத்தனர். பின்னர் உடைந்த ஷட்டரின் வழியாக வெடிகுண்டை வீசி தப்பிச் சென்று விட்டனர்.

தமிழகம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட ஆயிரகணக்கான பேர் கைது செய்யபட்டு உள்ளனர். பல்வேறு இடங்களில் அரசு பஸ் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.



மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 11:22 pm

தமிழக போலீஸ்: ஸ்காட்லாண்ட் யார்டா...டாஸ்மாக் ஸ்குவாடா?

சென்னை: ஒரு காலத்தில் தமிழகக் காவல்துறையை லண்டனின் 'ஸ்காட்லாண்ட் யார்டு' போலீசுக்கு இணையாக மதித்த காலமெல்லாம் மலையேறி, இன்று 'டாஸ்மாக் ஸ்குவார்ட்' என்று அழைக்கும் நிலைக்கு தமிழக காவல்துறை தள்ளப்பட்டு விட்டதே என வேதனைக் குரல்கள் எழுந்துள்ளன.

மதுவிலக்கு கேட்டு மாநிலம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.கடந்த மாதங்களில் பாமக சார்பில் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் எதிர்ப்பு மற்றும் மதுவிலக்கு போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில் கடந்த மாதம் 31 ஆம் தேதி, காந்தியவாதி சசிபெருமாள் மார்த்தாண்டத்தில் செல்போன் டவர் மீது ஏறி நின்று பலமணி நேரம் மதுவிலக்குப் போராட்டம் நடத்தி இறுதியில் ரத்த வாந்தியெடுத்து மரணமடைந்தார். அந்த மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, மதுவிலக்குக்கு ஆதரவான போராட்டங்களை தீவிரப்படுத்தி உள்ளது.

அதன் ஒருபகுதியாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலிங்கப்பட்டியில் நடத்திய மதுவிலக்குப் போராட்டம், கலவரத்தில் முடிந்தது. அந்தப் போராட்டம் தொடர்பாக போலீசார் வைகோ உள்ளிட்டோர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிகழ்வுகள், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தமிழக அரசு நடத்தி வரும் 6000 த்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடச் சொல்லி, பொதுமக்கள் தாமாகவே முன்வந்து போராட வைத்துள்ளன.

ஆனால் தமிழக அரசு சார்பில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் விடுத்துள்ள அறிக்கையில், சசிபெருமாள் மரணத்தை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன என்றும்,இது அருவருக்கத்தக்கது என்றும், கல்விக் கூடங்கள்,கோவில்கள் அருகில் டாஸ்மாக் கடைகள் இருப்பதாகக் கூறுவது தவறு என்றும் தெரிவித்துள்ளார்.

மதிமுக,கம்யூனிஸ்ட் கட்சிகள்,விசிக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் இன்று(செவ்வாய்) மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி கடை அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இந்த பந்த் வெற்றிகரமாக நடந்துவிடக் கூடாது என்றும், டாஸ்மாக் கடைகள் முன்பு அரசியல் கட்சியினர் மற்றும் பொது மக்கள் திரண்டு விடக்கூடாது என்பதற்காகவும் தமிழக காவல்துறை நேற்று(திங்கள்) இரவிலிருந்தே பாதுகாப்பிற்காக டாஸ்மாக் கடைகள் முன்பு போலீசாரை நிறுத்தி இருக்கிறது. மதுவை ஒழிப்பதற்கு பதிலாக, அதை விற்பதற்கும் தாராளமாகக் குடிப்பதற்கும் பாதுகாப்பு வழங்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் மத்தியிலிருந்து பெரும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.

இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாக அறிவுக் கூர்மையும்,பலமும் கொண்ட காவல்துறையாக விளங்கிய தமிழக காவல்துறை, இன்று சாராயம் குடிக்கவும் டாஸ்மாக் கடையில் சாராயம் விற்கவும் பாதுகாப்பு வழங்கிடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறதே என்று பொதுமக்கள் வேதனையுடன் பேசும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

அத்துடன் தமிழக காவல்துறையை இந்த அவல நிலைக்கு தள்ளியதற்கு தமிழக அரசு மீதும் மக்களிடையே கடுமையான அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில், மக்களின் அதிருப்தியை போக்குவதற்கான ஒரே நடவடிக்கை என்ன என்பது முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அதனை செயல்படுத்துவாரா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி!



மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 11:29 pm

அடிதடி இல்லாமல் அமைதியாக நடந்த முழு அடைப்பு போராட்டம்!

அரியலூர்: அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் எந்தவித அடிதடியும் இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது முழு அடைப்பு போராட்டம்.

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி 4ஆம் தேதி (இன்று) முழு அடைப்புப் போராட்டத்துக்கு ம.தி.மு.க, மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.மற்றும் தமிழ் அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.

இதன்படி, இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அப்போது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி, டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு, பல்வேறு இயக்கங்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அடித்து, உதைத்து கைது செய்தனர். இதனால் பல்வேறு பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டது.

இந்நிலையில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் முழு அடைப்பு போராட்டம் நடந்திருக்கிறது. அரியலூர், செந்துறை, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் பகுதிகளில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இதேபோல், பெரம்பலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே சில போரட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் பெயரளவுக்கு நடைபெற்றது. இருப்பினும், இதனால், எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலான கடைகள் மூடியிருந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக பாதிக்கப்பட்டது. அதேசமயம், போக்குவரத்து எந்த ஒரு தடையும் இல்லாமல் அனைத்து வாகனங்களும் இயங்கியதால் பயணிகள் பாதிக்கப்படவில்லை.

இந்த மாவட்டங்களில் காலையில் பயத்தின் காரணமாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அந்த கடைகள் திறக்கப்பட்டன. அங்கும் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை.

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு, அமைதியான முறையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றிருப்பது, முழு அடைப்பு போராட்டம் இங்கு வெற்றி பெற்றிருப்பதாகவே இருக்கிறது.

இதன் மூலம் இந்த பகுதி மக்கள் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதும் தெரிகிறது.



மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக