புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_m10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_m10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_m10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_m10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10 
4 Posts - 4%
prajai
'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_m10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_m10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10 
2 Posts - 2%
Pradepa
'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_m10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_m10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_m10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_m10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_m10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_m10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_m10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_m10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10 
28 Posts - 3%
sugumaran
'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_m10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_m10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_m10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10 
18 Posts - 2%
prajai
'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_m10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_m10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10 
5 Posts - 0%
Rutu
'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_m10'துர்முகி' ஆண்டு பலன்கள் :)  Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'துர்முகி' ஆண்டு பலன்கள் :)


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 31, 2016 11:24 am

மேஷம்

பொதுவுடைமை சிந்தனையுடைய நீங்கள், அநியாயத்தை தட்டிக் கேட்பதில் வல்லவர்கள்.உதவும் குணம் கொண்ட நீங்கள்,பலரின் நம்பகத்தன்மையைப் பெற்றிறுருப்பீர்கள். இந்த துர்முகி ஆண்டுபிறக்கும் நேரத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய்8-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால்பெரிய திட்டங்களெல்லாம் நிறைவேறும்.

பூர்வ புண்யாதிபதி சூரியன் உங்கள் ராசியிலேயே உச்சமடைந்திருப்பதுடன், புதனும் உங்கள் ராசியில்அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் தடைப்பட்டு வந்த அரசாங்க விஷயங்கள்நல்ல விதத்தில் முடியும். புது வாய்ப்புகள் தேடிவரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்தில் சிலமாற்றங்கள் செய்வீர்கள்.

அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.நட்பு வட்டம் விரிவடையும். உங்களுடையராசிக்கு 3ம் வீட்டில் சந்திரன்அமர்ந்திருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் புதிய முயற்சிகள் வெற்றியடையும்.

மாதக் கணக்கில், வாரக் கணக்கில் தள்ளிப்போன காரியங்களெல்லாம் விரைந்து முடியும். மனோ பலம் அதிகரிக்கும்.வருடப் பிறப்பு முதல்ஆவணி மாதம் பிற்பகுதி வரை ராசிநாதன் செவ்வாய் சனியுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் சிறுசிறு விபத்துகள், ரத்த சோகை, முன்கோபம்,வீண் பகை, சகோதர வகையில்செலவுகள் வந்துச் செல்லும்.

வீடு,மனை வாங்குவது, விற்பதில் அலட்சியம் வேண்டாம். வருடப்பிறப்பு முதல் 1.8.2016 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு பூர்வபுண்ய ஸ்தானமான 5ம் வீட்டில் நிற்பதால் மனதிலே இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். 2.8.2016முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல்13.4.2017 வரை குரு உங்கள் ராசிக்கு6ல் மறைவதால் மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும்.

சில நேரங்களில் வாழ்க்கை மீது ஒருவித வெறுப்புணர்வு ஏற்படக்கூடும். உங்கள் மீது சிலர்வீண் பழி சுமத்த முயற்சி செய்வார்கள். அவ்வப்போது தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும்.

இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள்வந்து போகும். எவ்வளவு பணம்வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். திடீர் பயணங்கள் அதிகமாகும்.பெரிய நோய் இருப்பதைப் போன்ற அச்சம் வரக்கூடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். தங்க ஆபரணங்களை யாருக்கும்இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம்.

வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும்.உங்களை விட தகுதியில் குறைந்தவர்கள், வயதில் சிறியவர்கள் அல்லது ஒரு காலத்தில்உங்கள் உதவியால் முன்னேறியவர்களில் சிலர் உங்களை மதிக்காமல்போவார்கள். ஆனால் 17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும்,வக்ரகதியிலும் ராசிக்கு 7ல் அமர்ந்து உங்களது ராசியைப் பார்க்க இருப்பதால் மறைந்துக்கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல்,குழப்பங்கள் விலகும்.

இந்தாண்டு முழுக்க சனி உங்கள் ராசிக்கு 8ல் அமர்ந்து அஷ்டமத்துச்சனியாக தொடர்வதால் சில நேரங்களில் எங்கே நிம்மதி என்று தேட வேண்டிவரும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களைமாற்றிக் கொள்ளப்பாருங்கள். ஆழ்ந்த உறக்கமில்லாமல் தவிப்பீர்கள். மற்றவர்கள் ஏதேனும் ஆலோசனைக் கூறினாலோஅல்லது உங்களது தவறுகளை சுட்டிக்காட்டினாலோ அதை பொறுமையாக ஏற்றுக்கொள்வது நல்லது.

இரவு நேரப்பயணங்களை தவிர்க்கப்பாருங்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையொப்பமிடவேண்டாம். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னையை சுமூகமாக தீர்க்கப்பாருங்கள். வழக்கு வியாஜ்யம் என்றெல்லாம் வீண் செலவுகள் செய்து நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்காதீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்பி ஏமாறாதீர்கள்.

பணம், திருமண விஷயத்தில் குறுக்கே நிற்க வேண்டாம். அரசுக்குசெலுத்த வேண்டிய வரிகளில் தாமதம்வேண்டாம். 26.8.2016 முதல் 18.9.2016 வரை உங்களின் தன-சப்தமாதிபதியான சுக்ரன் 6ல் சென்று மறைவதால்வாகன விபத்து, வழக்கால் நெருக்கடிகள், மனைவிக்கு கர்ப்பப்பை வலி வந்து நீங்கும்.

இந்தாண்டு முழுக்க ராகு ராசிக்கு5ம் வீட்டிலேயே அமர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்கமுடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போவதுநல்லது. சில சமயங்களில் உங்களை எதிர்த்து வாதாடுவார்கள். கோபப்படாதீர்கள். அவர்களின் திருமணம், உயர்கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்தை சரியாக பராமரிக்க முடியாமல் போகும்.

கூடாப்பழக்கமுள்ளவர்களுடன் எந்த நட்பும்வேண்டாம். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் இடைவெளி விட்டுப் பழகுவதுநல்லது. ஆனால், கேது இந்தாண்டு முழுக்க லாப ஸ்தானத்திலேயே நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.கோவயில் திருவிழாக்கள், கும்பாபிஷேகத்தையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள்.

புதுப் பதவிக்கு உங்களதுபெயர் பரிந்துரை செய்யப்படும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வேற்றுமாநிலத்தவர்கள், மாற்று மதத்தவர்களால் திடீர்திருப்பம் உண்டாகும். சிலர் சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும்பணியை தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.

வியாபாரத்தில் கடினமாக உழைத்து ஒரளவுலாபம் பெறுவீர்கள். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள்.வெளிமாநிலத்தை சார்ந்தவர்களை வேலைக்கு வைக்கும் போது கவனமாக இருங்கள்.பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. இருப்பதை வைத்து சம்பாதிக்கப் பாருங்கள். யாருக்கும் கடன் தர வேண்டாம்.

பங்குதாரர்கள் உங்களது கருத்துக்களை முதலில்மறுத்தாலும் பிறகு ஏற்றுக் கொள்வார்கள்.கமிஷன், கட்டிட உதிரி பாகங்கள்,கடல் வாழ் உயிரினம், பெட்ரோகெமிக்கல் வகைகளால் ஆதாயமடைவீர்கள். ஆனி, புரட்டாசி, தை,மாசி மாதங்களில் பிரபலங்கள், நண்பர்களின் உதவியால் வியாபாரத்தை விரிவுப்படுத்துவது, அழகுப்படுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.மூத்த அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொள்வார்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சலுகைகள், உரிமைகளைக் கூட போராடி பெறவேண்டி வரும். சக ஊழியர்கள்கூட சில நேரங்களில் சாதகமாகவும்,பல நேரங்களில் மரியாதைக் குறைவாகவும் நடந்து கொள்வார்கள். புரட்டாசி, தை, பங்குனி மாதங்களில் சம்பள உயர்வு உண்டு. அதிகசம்பளத்துடன் புது வாய்ப்புகளும் தேடிவரும். சிலர் உத்யோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள்.

கன்னிப் பெண்களே! காதல்கசந்து இனிக்கும். போலியாக பழகியவர்களிடமிருந்து ஒதுங்குவீர்கள். புதிதாக அறிமுகமாகுபவர்களை நம்ப வேண்டாம். இரவில்அதிக நேரம் கண் விழித்திருக்கவேண்டாம். கண்ணிற்கு கீழ் கருவளையம்,மாதவிடாய்க் கோளாறு, அடி வயிற்றில்வலி வந்து போகும். திருமணம் நிச்சயமாகும்.

மாணவ-மாணவிகளே! மொழித் திறனை வளர்த்துக்கொள்வீர்கள். வகுப்பறையில் வீண் அரட்டையடிக்காமல் பாடத்தில்கவனம் செலுத்துங்கள். பழைய நண்பர்களால் முன்னேற்றம்உண்டாகும். கலை, கட்டுரைப் போட்டிகளில் வெற்றிப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளே! தொகுதி மக்களை மறக்காதீர்கள்.உங்களுடன் இருந்து கொண்டே உங்களுக்கு எதிராகசெயல்படுபவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.

கலைத்துறையினரே! போட்டிகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சம்பளவிஷயத்தில் கறாராக இருங்கள். திரையிடப்படாமல்முடங்கிக் கிடந்த உங்களுடைய படைப்புகள்வெளியாகும்.

விவசாயிகளே! விளைச்சலைப் பெருக்க வேண்டுமே என்றுகவலைப்படுவீர்கள். பக்கத்து நிலக்காரருடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். எண்ணெய் வித்துக்களால் ஆதாயமடைவீர்கள். இந்த துர்முகி வருடம்வளைந்து கொடுத்துப் போவதன் மூலமாகவும், சகிப்புத்தன்மையாலும் உங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றுவதாக அமையும்.

பரிகாரம்: திருவண்ணாமலை அருணாசலேஸ் வரரை தரிசித்து வாருங்கள். அன்னதானம் செய்யுங்கள்.

'துர்முகி' வருட பொதுப்பலன்கள்கணித்தவர்: ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 31, 2016 11:26 am

ரிஷபம்

எடுத்த முடிவில் பின்வாங்காத நேர்மையாளர்களான நீங்கள், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சமாளிப்பவர்கள். மற்றவர்களின் ரகசியங்களை கட்டிக்காப்பவர்கள். உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் இந்த துர்முகி ஆண்டு பிறப்பதால் சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும். சோர்ந்து முடங்கி போயிருந்த உங்கள் உள்மனதில் தன்னம்பிக்கை பிறக்கும்.

வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். ஆடி, ஆவணி மாதத்தில் இழுபறியாக இருந்த அரசு காரியம் முடியும். வெளிநாடு, வெளி மாநிலங்கள் சென்று வருவீர்கள். 9.9.2016 முதல் 25.10.2016 வரை உங்களின் விரைய&சப்தமாதிபதியான செவ்வாய் 8ல் மறைவதாலும், 19.9.2016 முதல் 13.10.2016 வரை உங்களின் ராசிநாதனான சுக்கிரன் 6ல் மறைவதாலும் முன்கோபம், வீண் அலைச்சல், தொண்டை வலி, சிறுசிறு நெருப்புக் காயங்கள், சகோதர வகையில் சச்சரவுகள், வழக்கால் நிம்மதியின்மை, கணவன்-மனைவிக்குள் விவாதங்கள், மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, அடி வயிற்றில் வலி வந்து போகும்.

இந்தாண்டு முழுக்க ராகு 4ம் இடத்திலும், கேது 10லும் தொடர்வதால் சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ அப்ரூவல் இல்லாமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். வருமான வரி, விற்பனை வரிகளையெல்லாம் அரசாங்கத்திற்கு கால தாமதமின்றி செலுத்தப் பாருங்கள். சொத்துக்குரிய ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சொத்தை விற்பதாக இருந்தால் ஒரே தவணையில் பணம் வாங்கிக் கொண்டு உரிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்வது நல்லது. தாயாருக்கு அடி வயிற்றில் வலி, முதுகுத் தண்டில் வலி, கழுத்து எலும்புத் தேய்மானம் வந்துச் செல்லும். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வரக்கூடும். அவர் உங்களை கோபத்தில் ஏதேனும் பேசினால் அதைப் பெரிதுப்படுத்திக் கொண்டிருக்க வேண்டாம். நேரம் தவறி சாப்பிட வேண்டியிருக்கும். அலைச்சலும் இருக்கும். அசிடிட்டி தொந்தரவு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். உணவில் பழங்கள், காய்களை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஐம்பது ரூபாயில் முடியக் கூடிய விஷயங்களைக் கூட ஐநூறு ரூபாய் செலவு செய்து முடிக்க வேண்டி வரும். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது நினைத்தாலும் முடியாமல் போகும். இடப்பெயர்ச்சி உண்டு. வாடகை வீட்டிலிருப்பவர்களுக்கு வீட்டின் உரிமையாளர்களால் தொந்தரவுகள் ஏற்படும். சாலை விதிகளை மீறி வாகனத்தை இயக்க வேண்டாம். சிறுசிறு அபராதத் தொகை கட்ட வேண்டி வரும்.

1.8.2016 வரை உங்கள் அஷ்டம-லாபாதிபதியான குருபகவான் 4ல் அமர்வதால் உங்களின் அடிப்படை நற்குணங்களும், நடத்தை கோலங்களும் மாறாமல் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள். ஓய்வெடுக்க முடியாதபடி அடுத்தடுத்த வேலைச்சுமையும் இருந்து கொண்டேயிருக்கும். இலவசமாக சில கூடாப்பழக்க வழக்கங்கள் உங்களைத் தொற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் உதவி சற்று தாமதமாக கிடைக்கும். எந்த ஒரு விஷயத்தையும் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப் பூர்வமாக அனுகுவது நல்லது.

தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வாகன விபத்துகள் வந்து நீங்கும். சிலர் சொந்த ஊரிலிருந்து வேறு ஊருக்கு மாற வேண்டியது வரும். 2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 5ல் நுழைவதால் ஓரளவு வசதி, வாய்ப்புகள் பெருகும். வருமானத்தை உயர்த்த அதிரடியாக சில திட்டங்கள் தீட்டுவீர்கள். உங்கள் மகளுக்கு வரன் தேடி அலைந்து அலுத்துப் போனீர்களே!

நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். திருமணத்தை சீரும், சிறப்புமாக நடத்துவீர்கள். மகனின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகளும் சாதகமாக முடிவடையும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். ஆனால், 17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 6ல் சென்று மறைவதால் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும். வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். எங்கேயோ காட்ட வேண்டிய கோபத்தை அடக்கி வைத்திருந்ததை குடும்பத்தில் உள்ளவர்கள் மீது வீசி வாங்கிக் கட்டிக் கொள்வீர்கள்.

இந்த வருடம் முழுக்க சனி உங்கள் ராசிக்கு 7ல் அமர்ந்து கண்டகச் சனியாக தொடர்வதால் முன்கோபம் அதிகமாகும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவுகள் வரும். பிரிவு ஏற்படக்கூடும். முடிந்தவரை சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்து கொண்டால் நல்லது. மனைவி ஏதேனும் குறைக் கூறினாலும் அதை அப்படியே மறந்து விடுவது நல்லது.

நீ இப்படி பேசுவதற்கு பின்னால் யார் இருக்கிறார் என்று தெரியவில்லையே. உன்னை யாரோ தூண்டி விடுகிறார்கள் என்றெல்லாம் மனைவியுடன் எதிர்வாதம் செய்து கொண்டிருக்க வேண்டாம். அநாவசியமாக யாரையும் வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். வங்கிக் காசோலைகளில் முன்னரே கையெழுத்திட்டு வைக்க வேண்டாம். சட்டத்திற்கு புறம்பான வகையில் செல்ல வேண்டாம். முக்கிய காரியங்களை மற்றவர்களை நம்பி விடாமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. உத்யோகம், வியாபாரத்தின் பொருட்டு குடும்பத்தை பிரிய வேண்டி வரும்.

வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலைவிட வேண்டாம். லாபம் மந்தமாக இருக்கும். மாறி வரும் சந்தை நிலவரத்தை அவ்வப்போது உன்னிப்பாக கவனித்து செயல்படப்பாருங்கள். விளம்பர யுக்திகளாலும், தள்ளுபடி அறிவிப்பாலும் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். மற்றவர்களை நம்பி அனுபமில்லாத தொழிலில் இறங்க வேண்டாம். வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள்.

புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வதற்கு முன்பாக மற்றும் கூட்டுத் தொழில் தொடங்குவதற்கு முன்பாக வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. இந்தாண்டு முழுக்க கேது 10ல் தொடர்வதால் உத்யோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டி வரும். அதிகாரி உங்களைப் புரிந்து கொள்ள மாட்டார். உங்கள் உழைப்பிற்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். ஆடி, மாசி மற்றும் பங்குனி மாதங்களில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும்.  

கன்னிப் பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். காதல் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருங்கள். வருடத்தின் இறுதியில் கல்யாணம் முடியும். ஃபேஸ் புக், டிவிட்டரை எல்லாம் கவனமாக பயன்படுத்துங்கள். சிலர் உங்கள் பெயருக்கு கலங்கம் விளைவிக்க முயற்சி செய்வார்கள். தாயாரை தவறாக புரிந்துக் கொள்ள வேண்டாம். அல்சர், யூரினரி இன்ஃபெக்ஷன், முகப்பரு வந்துச் செல்லும்.

மாணவ-மாணவியர்களே! விளையாட்டைக் குறையுங்கள். தொடக்கத்திலிருந்தே படிப்பில் தீவிரம் காட்டுங்கள். நீங்கள் விரும்பிய பாடப்பிரிவில் சிலரின் சிபாரிசு அல்லது அதிக பணம் கொடுத்து சேர வேண்டிய சூழ்நிலை உருவாகும். பேருந்துகளில் படிக்கட்டுகளில் நின்று பயணிக்க வேண்டாம்.

அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலில் இறங்காதீர்கள். எதிர்க்கட்சிக்காரர்களிடம் உங்கள் கட்சி விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். தலைமையின் கோபம் குறையும்.

கலைத்துறையினரே! வீண் வதந்திகளும், கிசுகிசுக்களும் இருக்கத்தான் செய்யும். மனந்தளராமல் இருங்கள். உங்களை விட வயதில் குறைந்த கலைஞர்களால் நல்லது நடக்கும்.

விவசாயிகளே! வற்றிய கிணறு சுரக்கும். புதிய சாகுபடி திட்டத்தில் சேர்ந்து மாற்று பயிர்களால் ஆதாயமடைவீர்கள். அவ்வப்போது பூச்சித் தொல்லை, எலித் தொல்லை அதிகரிக்கும். இந்த தமிழ் புத்தாண்டு கூடுதல் உழைப்பு, குறைந்த வருமானம் என ஒரு பக்கம் அலைக்கழித்தாலும் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதிய பாதையில் சென்று முன்னேற வைக்கும்.

பரிகாரம்: வேலூருக்கு அருகேயுள்ள சேண்பாக்கம் விநாயகரை தரிசித்து வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 31, 2016 11:26 am

மிதுனம்

நிறை குறைகளை அலசி ஆராய்ந்து யாரையும் துல்லியமாக கணிக்கும் நீங்கள் மற்றவர்களின் உணர்வுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள். சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் உங்களுக்கு சாதகமாக இருக்கும் நேரத்தில் இந்த துர்முகி வருடம் பிறப்பதால் உங்களுடைய ஆளுமைத் திறன், நிர்வாகத் திறமை அதிகரிக்கும். அரசியல்வாதிகள், அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். கடினமான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். பணப்புழக்கம் அதிகமாகும்.

சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல குடும்பத்திலிருந்து வரன் அமையும். மகனுக்கு அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். விலைவாசி ஏறிக்கிட்டே போகுது; வாடகையும் தாறுமாறா கூடிக்கிட்டே போகுது. புறநகர் பகுதியிலாவது அரை கிரவுண்ட், ஒரு கிரவுண்ட் வாங்கினா பத்து வருஷம் கழித்து வீடு கட்டிக்கிட்டு செட்டிலாகி விடலாம் என்று யோசிப்பீர்கள். கௌரவப் பதவி, புது பொறுப்புகள் தேடி வரும்.

பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். உங்கள் ராசியிலேயே இந்த துர்முகி வருடம் பிறப்பதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அவ்வப்போது வீண் டென்ஷன், தலைச்சுற்றல், மன அமைதியின்மை, முன்கோபம் வந்து நீங்கும். சர்க்கரை, கொழுப்பு அளவை பரிசோதித்துக் கொள்வது நல்லது. தோலில் நமைச்சல், தேமல், நரம்புச் சுளுக்கு, சிறுநீர் பாதையில் அழற்சி வரக்கூடும்.

இந்தாண்டு முழுக்க சனிபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். செவ்வாய் 6ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கும் போது இந்தாண்டு பிறப்பதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் உண்டாகும். வீடு, மனை வாங்குவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள்.

ராகு 3ம் வீட்டிலேயே இந்த வருடம் முழுக்க முகாமிட்டிருப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நீங்கள் உழைத்த உழைப்பு, சிந்திய வியர்வைக்கெல்லாம் நல்ல பலன் கிடைக்கும். பழைய பிரச்னைகளை புதிய கோணத்தில் அணுகி வெற்றி காண்பீர்கள். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். தடைப்பட்ட காரியங்களையெல்லாம் நல்ல விதத்தில் முடிவடையும். மாற்று மதம், மொழி, மாநிலத்தவர்களால் உதவிகள் உண்டு. இளைய சகோதர வகையில் ஆதரவு பெருகும்.

மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய இனிய அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் உற்சாகமடைவீர்கள். ஆனால், கேது 9ம் இடத்திலேயே நீடிக்கயிருப்பதால் தந்தையாருக்கு சின்ன சின்ன அறுவை சிகிச்சை, மூச்சுத் திணறல், வாயுக் கோளாறால் நெஞ்சு வலி வந்து போகும். அவருடன் மனவருத்தங்களும் வரக்கூடும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை இருந்து கொண்டேயிருக்கும். திடீரென்று அறிமுகமாகுபவரை நம்பி வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம்.

சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்து கொள்வீர்கள். 26.10.2016 முதல் 2.12.2016 வரை செவ்வாய் உங்கள் ராசிக்கு 8ல் அமர்வதால் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகள், சகோதர வகையில் மனத்தாங்கல், சின்ன சின்ன ஏமாற்றங்கள், பழைய கடனை நினைத்த கவலைகளெல்லாம் வந்துச் செல்லும். மின்சாரத்தை கவனமாக கையாளுங்கள். 14.10.2016 முதல் 7.11.2016 வரை சுக்கிரன் 6ல் மறைவதால் குடி நீர் குழாய், கழிவு நீர் குழாய் பழுது, சளித் தொந்தரவு, லேசான தலை வலி, கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபங்கள், பிள்ளைகளால் செலவுகளெல்லாம் வந்து போகும்.

1.8.2016 வரை குருபகவான் உங்களுடைய ராசிக்கு 3ம் வீட்டில் நிற்பதால் எந்த ஒரு வேலைகளையும் முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இளைய சகோதர வகையில் பிணக்குகள் வரும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம்.

வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என சரி பார்த்துவிட்டு காசோலை தருவது நல்லது. மற்றவர்களை நம்பி குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். அக்கம் பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள். 2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குரு ராசிக்கு 4ல் நுழைவதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும். தோல்வி மனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். தாயாருக்கு படபடப்பு, ரத்த அழுத்தம், பித்தப் பையில் கல், காலில் அடிபடுதல் வந்து போகும். அவருடன் விவாதங்களும் வரக்கூடும். சிலர் உங்களை நேரில் பார்க்கும் போது நல்லவர்களாகவும், பார்க்காத போது உங்களைப் பற்றி தவறாகவும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். உறவினர், நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.

சொத்து வாங்கும் போது தாய்பத்திரத்தை சரி பார்த்து வாங்குவது நல்லது. வீடு கட்டுவது, வாங்குவது போன்ற முயற்சிகள் தாமதமாகி முடியும். வீட்டில் களவுப் போக வாய்ப்பிருக்கிறது. எனவே குடும்பத்தினருடன் வெளியூர் செல்லும் போது நகை, பத்திரங்களையெல்லாம் வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைத்துவிட்டு செல்வது நல்லது. சின்னச் சின்ன விபத்துகள் ஏற்படக்கூடும்.

அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். ஆனால் 17.1.2017 முதல் 09.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 5ல் அமர்வதால் குழம்பிக் கொண்டிருந்த நீங்கள் இனி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். இயக்கம், சங்கம் நடத்தும் விழாக்கள், போராட்டங்களுக்கு முன்னிலை வகிப்பீர்கள். கட்டுமானப் பொருட்கள், பெட்ரோ-கெமிக்கல், போர்டிங், லாட்ஜிங் வகைகளால் லாபம் அதிகரிக்கும்.

சித்திரை, ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். சிலர் புதிய கிளைகள் தொடங்குவார்கள். இந்தாண்டு முழுக்க குரு சாதகமாக இல்லாததால் உத்யோகத்தில் மேலதிகாரிகளால் ஒதுக்கப்படுகிறோமோ என்ற ஒரு சந்தேகம் உள்ளுக்குள் இருந்து கொண்டேயிருக்கும். சக ஊழியர்களில் ஒருசிலர் இரட்டை வேடம் போடுவதையும் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். மூத்த அதிகாரிகளைப் பற்றிய ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

கன்னிப் பெண்களே! காதல் வேறு, நட்பு வேறு என்பதை உணருவீர்கள். உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

மாணவ-மாணவிகளே! நினைவாற்றல் அதிகரிக்கும். கடினமாக உழைத்து உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பெற்றோரின் ஒத்துழைப்புடன் விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள்.

அரசியல்வாதிகளே! தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். ராஜதந்திரத்தால் முன்னேறுவீர்கள். எதிர்க்கட்சிக்காரர்களின் ஆதரவால் சில முக்கிய வேலைகளை முடிப்பீர்கள்.

கலைத்துறையினரே! முடங்கிக் கிடந்த நீங்கள் முன்னேறுவீர்கள். உங்களின் கற்பனை விரியும். புகழ் பெற்ற நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரும்.

விவசாயிகளே! விளைச்சல் ரெட்டிப்பாகும். புது இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள். நெல், மஞ்சள், கிழங்கு வகைகளால் லாபமடைவீர்கள். இந்த தமிழ்ப் புத்தாண்டு எதிர்நீச்சல் போட வைத்தாலும், சமூகத்தில் உங்களுக்கென்று ஒரு அந்தஸ்தையும், பணம், பதவியையும் தரும்.

பரிகாரம்: சென்னை - திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள ராகவேந்திரர் ஆலயத்தை தரிசித்து வாருங்கள். ஏழைகளின் கல்விச் செலவுக்கு உதவுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 31, 2016 11:27 am

கடகம்

அனைத்துத் துறைகளிலும் வல்லர்களான நீங்கள், ஆணித்தரமாக வாதாடுபவர்கள். அதிபுத்திசாலித்தனமாக கேள்விக் கணைகள் தொடுத்து மற்றவர்களை விழிப்பிதுங்க வைப்பீர்கள். இந்தாண்டு பிறக்கும் நேரத்தில் உங்களின் யோகாதிபதியான செவ்வாய் பகவான் பூர்வ புண்யஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் மாறுபட்ட யோசனைகள் மனதிலே உதயமாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மழலை பாக்யம் கிடைக்கும்.

பிள்ளைகளின் திறமைகளை இனங்கண்டறிந்து வளர்ப்பீர்கள். பூர்வீக சொத்து பங்கை கேட்டு வாங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12ம் வீட்டில் பிறப்பதால் அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். வெளியூர் பயணங்கள் உண்டு. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சில நாட்களில் தூக்கம் குறையும். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்பி சொந்த விஷயங்களையெல்லாம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

இந்தாண்டு முழுக்க 5ம் இடத்திலேயே சனி அமர்ந்திருப்பதால் முடிவுகள் எடுப்பதில் ஒருவித குழப்பமும், தடுமாற்றமும் இருந்து கொண்டேயிருக்கும். பிள்ளைகளிடம் கண்டிப்புக் காட்டாமல் தோழமையாக பழகுங்கள். அவர்களின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் மதிப்புக் கொடுங்கள். அவர்கள் யாருடன் பழகுகிறார்கள் அவர்களின் நண்பர்கள் யார் என்பதை அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் விரும்பும் பாடத்தில் உயர்கல்விப் பெற அனுமதியுங்கள்.

துர்முகி வருடம் பிறக்கும் போது சூரியனும், புதனும் வலுவாக இருப்பதால் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று அபாயிமென்ட் ஆடர்க்காக காத்திருந்தவர்களுக்கு அழைப்பு வரும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். 3.12.2016 முதல் 15.1.2017 வரை செவ்வாய் ராசிக்கு 8ல் மறைவதால் வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகமாகும். மனைவிக்கு கர்ப்பச் சிதைவு ஏற்படக்கூடும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். உடன்பிறந்தவர்களுடன் மனவருத்தம் வந்து போகும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாகும்.

8.11.2016 முதல் 3.12.2016 சுக்ரன் 6ல் மறைவதால் வாகனப் பழுது, சிறுசிறு விபத்துகள், கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், தாயாருக்கு மருத்துவச் செலவுகள், கழுத்து வலி, தோலில் நமைச்சல், யூரினரி இன்ஃபெக்ஷன் வந்துச் செல்லும். 1.08.2016 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

பணவரவு உண்டு. கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். உடல் நலம் சீராகும். சோர்ந்திருந்த நீங்கள் இனி உற்சாகமடைவீர்கள். அழகு, இளமைக் கூடும். கல்வியாளர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். விலை உயர்ந்த தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

பழுதாகிக் கிடந்த வாகனம், மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். ஆழ்ந்த உறக்கம் வரும். 2.08.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குரு ராசிக்கு 3ல் அமர்வதால் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப்பாருங்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்றெல்லாம் பேச வேண்டாம்.

புதிய முயற்சிகள் தாமதமாகி முடிவடையும். எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். இளைய சகோதரருடன் உரசல் போக்கு வந்து நீங்கும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். சொத்து வாங்கும் போது பட்டா, வில்லங்க சான்றிதழ், தாய் பத்திரத்தையெல்லாம் சரி பார்த்து வாங்குவது நல்லது. வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம்.

வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். ஊர் பொதுக்காரியங்களில் அத்துமீறி மூக்கை நுழைக்க வேண்டாம். ஆனால் 17.1.2017 முதல் 9.3.2017 வரை குரு அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 4ல் அமர்வதால் தாயாரை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். அவருடன் மோதல்கள் வரக்கூடும். இந்தாண்டு முழுக்க நிழல் கிரகங்களான ராகு 2ம் வீட்டிலும் கேது 8லும் நீடிப்பதால் குடும்பத்தில் சலசலப்புகள் வரும். பார்வைக் கோளாறு வரக்கூடும்.

சிலர் மூக்குக் கண்ணாடி அணிய வாய்ப்பிருக்கிறது. வெளிப்படையாகப் பேசி பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் நல்லதே சொன்னாலும் பொல்லாப்பாக போய் முடிய வாய்ப்பிருக்கிறது. காலில் அடிப்படக்கூடும். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். பலவீனம் இல்லாத மனிதர்களே இல்லை என்பதைப் புரிந்து கொண்டு நண்பர்கள், உறவினர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். அரசு காரியங்கள் தள்ளிப் போய் முடியும். வழக்கால் நெருக்கடி வந்து நீங்கும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். தனி நபர் விமர்சனங்களை தவிர்க்கப்பாருங்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட மரியாதைக் குறைவான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது நிம்மதியிழப்பீர்கள். அவ்வப்போது தூக்கம் குறையும்.

வியாபாரத்தில் சின்னச் சின்ன நஷ்டங்கள் வந்து போகும். எதிர்பார்த்த ஆடர் தாமதமாக வரும். வேலையாட்களிடம் தொழில் சம்பந்தமான ரகசியங்களை சொல்ல வேண்டாம். பழைய பாக்கிகளை போராடித் தான் வசூலிக்க வேண்டி வரும்.

வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். ஏற்றுமதி-இறக்குமதி, லாட்ஜிங், வாகன உதிரி பாகங்கள், ஸ்டேஷ்னரி, கமிஷன் வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் விட்டுக் கொடுத்து போங்கள். சித்திரை, வைகாசி, புரட்டாசி மாதங்களில் லாபம் வரும். கடையை விரிவுபடுத்தி, அழகுப்படுத்துவீர்கள்.

உத்யோகத்தில் உங்களுக்கு நெருக்கமாக இருந்த அதிகாரி வேறுயிடத்திற்கு மாற்றப்படுவார். புது அதிகாரிகள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் ஒருதலைப்பட்சமாக செயல்பட வாய்ப்பிருக்கிறது. சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். விடுப்பு எடுக்க முடியாதபடி வேலைச்சுமையும் அதிகரிக்கும். எதிர்பாராத இடமாற்றம் உண்டு.

சிலர் தங்களை அறிவாளியாக காட்டிக் கொள்ள உங்களை மட்டம் தட்டி மேலிடத்தில் சொல்லி வைப்பார்கள். புதிய வாய்ப்புகள் வந்தால் தீரயோசித்து முடிவெடுங்கள். வைகாசி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த சலுகைகளும், விரும்பிய இடத்திற்கே வேலை மாற்றமும் உண்டாகும்.

கன்னிப் பெண்களே! மனசை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள். திடீரென்று அறிமுகமாகும் நண்பர்களை நம்பி பழைய நண்பர்களை விட்டுவிடாதீர்கள். பெற்றோர் உங்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு பாசமழைப் பொழிவார்கள். கல்யாண முயற்சிகள் சற்று தாமதமாகி முடியும்.

மாணவ-மாணவிகளே! படிப்பு மட்டுமல்லாமல் ஸ்போக்கன் இங்கிலீஷ் போன்ற மொழியறிவுத் திறனையும் நீங்கள் அதிகப்படுத்திக் கொள்வது நல்லது. அறிவியல் சம்பந்தமான இடங்களுக்குச் சென்று வருவது நல்லது.

அரசியல்வாதிகளே! உட்கட்சி பூசல் வெடிக்கும். மேலிடத்தை அனுசரித்துப் போங்கள். சகாக்கள் மத்தியில் சின்ன சின்னச் சலசலப்புகள் இருக்கத்தான் செய்யும்.

கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள். உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும்.

விவசாயிகளே! வாய்க்கால், வரப்புச் சண்டைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வங்கி கடன் கிடைத்து அடகு வைத்திருந்த பத்திரத்தை மீட்பீர்கள். டிராக்டர், களப்பையெல்லாம் புதிதாக வாங்குவீர்கள். இந்தப் புத்தாண்டு ஏமாற்றங்களையும், எதிலும் தாமதத்தையும் ஏற்படுத்தினாலும் விட்டுக் கொடுத்துப் போகும் குணத்தால் மகிழ்ச்சியை தரும்.

பரிகாரம்: மாங்காடு காமாட்சியை தரிசித்து விட்டு வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 31, 2016 11:29 am

சிம்மம்

பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது அந்த காலம், பொங்கி எழுந்தால் தான் இருப்பதையாவது காப்பாற்றிக் கொள்ள முடியுமென்பதை அறிந்த நீங்கள், தொடங்கிய வேலையை முடிக்கும் வரை அதே சிந்தனையுடன் இருப்பவர்கள். இந்தப் புத்தாண்டு பிறக்கும் போது உங்களின் யோகாதிபதி செவ்வாய் பகவான் கேந்திர பலம் பெற்று அமர்ந்திருப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும்.

அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சிறுக சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது ஒரு கால் கிரவுண்டு வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள். பெற்றோரின் உடல் நிலை சீராகும். அவர்களுடனான கசப்புணர்வுகள் நீங்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும்.

வழக்கில் தீர்ப்பு சாதகமாகும். துர்முகி வருடம் பிறக்கும் போது உங்கள் ராசிநாதன் சூரியனும், ஜீவனாதிபதி சுக்ரனும் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் அரசால் அனுகூலம் உண்டு. விலை உயர்ந்த எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள்.

1.8.2016 வரை ராசியிலேயே குரு அமர்ந்து ஜென்ம குருவாக தொடர்வதால் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும். யூரினரி இன்ஃபெக்ஷன் வந்துச் செல்லும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பயம் அவ்வப்போது அடிமனதில் வரும்.

2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குரு 2ம் வீட்டில் அமர்வதால் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையும் திருப்பித் தருவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். நோய் குணமாகும். உடல் நலம் சீராகும். மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவீர்கள்.

பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். வழக்கால் இருந்த நெருக்கடிகள் வந்து நீங்கும். மழலை பாக்யம் கிடைக்கும். வீண் பழியிலிருந்து விடுபடுவீர்கள். சொத்து சேர்க்கை உண்டு. நீங்கள் சொல்லாததையும், சொன்னதாக நினைத்துக் கொண்டு விலகியிருந்த சொந்த-பந்தங்களெல்லாம் வலிய வந்துப் பேசுவார்கள்.

பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். சொந்த ஊர் பொதுக் காரியங்களையெல்லாம் முன்னின்று நடத்தி வைப்பீர்கள். அடகிலிருந்த வீட்டு பத்திரம், நகைகளையெல்லாம் மீட்க வழி வகைப் பிறக்கும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. ஆனால் 17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 3ல் அமர்வதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளையும் பார்க்க வேண்டி வரும்.

இதை முதலில் முடிப்பதா, அதை முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருந்து கொண்டேயிருக்கும். புதிய முயற்சிகள் தாமதமாகி முடியும். பிள்ளைகளின் பொறுப்பற்றப் போக்கை நினைத்து வருந்துவீர்கள். 4.12.2016 முதல் 29.12.2016 வரை சுக்ரன் 6ல் மறைவதால் நரம்புச் சுளுக்கு, சோர்வு, களைப்பு, வீண் செலவு, வாகன விபத்து, கணவன்-மனைவிக்குள் கசப்புணர்வுகள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் சாதனப் பழுதுகளெல்லாம் வந்து நீங்கும்.

இந்தாண்டு முழுக்க அர்த்தாஷ்டமச் சனியாக அமர்வதால் சின்ன சின்ன வேலைகளைக் கூட அலைந்து முடிக்க வேண்டி வரும். தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். தாயாப் பிள்ளையாக இருந்தாலும் வாயும், வயிறும் வேறு என்பதைப் போல எந்த விஷயமாக இருந்தாலும் நீங்களே நேரடியாக தலையிட்டு முடிப்பது நல்லது.

சொத்து வாங்கும் போது முறையான பட்டா, வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் வழக்கறிஞரை வைத்து சரி பார்த்து வாங்குவது நல்லது. சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. தாயாருக்கு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். அரசின் அனுமதிப் பெறாமல் கூடுதல் தளங்கள் அமைத்து வீடு கட்ட வேண்டாம்.

இந்த துர்முகி வருடம் முழுவதும் உங்கள் ஜென்ம ராசியிலேயே ராகுவும், 7ல் கேதுவும் தொடர்வதால் எளிதில் செரிமானமாகும் உணவுகளை உட்கொள்ளுங்கள். உடம்பில் இரும்பு, சுண்ணாம்புச் சத்து குறையும். பச்சை கீரை, காய், கனிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது முன்கோபப்படுவீர்கள்.

சர்க்கரையின் அளவையும் சரி பார்த்துக் கொள்ளுங்கள். சாப்பாட்டில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். தினசரி நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. குடும்பத்தில் குழப்பம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மனைவி உங்களுடைய குறைகளை சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். அவருக்கு சின்னச் சின்ன அறுவை சிகிச்சை, மாதவிடாய்க் கோளாறு, முதுகுத் தண்டில் வலி வந்துச் செல்லும். அதிக உரிமை எடுத்துக் கொண்டு யாரிடமும் பேசவோ, பழகவோ வேண்டாம். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் சட்டப்படி ஆவணங்களையெல்லாம் தயாரித்து வழக்கறிஞர் மூலமாக இறங்குவது நல்லது.

வெற்றுத் தாளில் கையொப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். உங்களின் யோகாதிபதியான செவ்வாய் 16.1.2017 முதல் 26.2.2017 வரை 8ல் மறைவதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள், சகோதர வகையில் சங்கடங்கள், எதிலும் நம்பிக்கையின்மை, வீடு, மனை வாங்குவது, விற்பதில் சின்னச் சின்ன நட்டங்கள், மறைமுக எதிர்ப்புகள் வந்துச் செல்லும்.

வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டேயிருக்கும். அதிக வேலையிருக்கும் நாட்களில் பணியாட்கள் விடுப்பில் செல்வார்கள். பல நேரங்களில் நீங்களே முதலாளி, நீங்களே தொழிலாளி என்ற வகையில் வேலை பார்க்க வேண்டி வரும். வருடத்தின் மத்தியப் பகுதியிலிருந்து ஓரளவு லாபம் வரும். விளம்பர யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள்.

புது சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பீர்கள். என்றாலும் 4ம் வீட்டில் சனி நிற்பதால் இரண்டு நாட்கள் வியாபாரம் நன்றாக இருந்தால் மூன்றாவது நாள் கொஞ்சம் மந்தமாக இருக்கும். பிறகு சூடுபிடிக்கும். சினிமா, பதிப்புத்துறை, ஹோட்டல், கிரானைட், டைல்ஸ், மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். வைகாசி, ஆவணி, தை மாதங்களில் பாக்கிகள் வசூலாகும்.

உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். சிலர் கட்டாய விடுப்பில் செல்ல வேண்டியிருக்கும். என்றாலும் ஆனி, ஐப்பசி, தை மாதங்களில் அலுவலகத்தில் அமைதி உண்டாகும். உங்கள் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கிலிருந்து விடுபடுவீர்கள்.

கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு எதிராக எதுவும் செய்து கொண்டிருக்க வேண்டாம். எந்த விஷயமாக இருந்தாலும் பெற்றோருடன் இல்லையென்றாலும் சகோதரர்களுடன் பகிர்ந்துக் கொள்வது நல்லது. சிலர் உங்களை நம்ப வைத்து மோசம் செய்வார்கள்.

மாணவ-மாணவிகளே! கடைசி நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். அன்றைய பாடங்களை அன்றே படித்துவிடுவது நல்லது.

அரசியல்வாதிகளே! வழக்கால் அலைக்கழிக்கப் படுவீர்கள். தலைமைக்கு எதிராக பேசுபவர்களிடம் நட்பு வைத்துக் கொள்ளாதீர்கள். உட்கட்சிப் பூசல் வெடிக்கும்.

கலைத்துறையினரே! வதந்திகள் ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு புறம் உங்களின் விடாமுயற்சியால் சாதித்துக் காட்டுவீர்கள். உங்க ளுடைய படைப்புத் திறன் வளரும்.

விவசாயிகளே! உங்களின் கடின உழைப்பிற்கேற்ற நல்ல பலன் கிடைக்கும். நிலத்தின் தன்மையறிந்து பயிரிடுங்கள். பயிர் வகைகள், சவுக்கு, தென்னை வகைகளால் லாபம் உண்டு. இந்த தமிழ் புத்தாண்டின் முற்பகுதியில் சின்ன சின்ன சிரமங்களையும், ஆரோக்ய குறைவையும் தந்தாலும், மையப்பகுதியிலிருந்து மாறுபட்ட அணுகுமுறையால் சாதித்துக் காட்டுவதாக அமையும்.

பரிகாரம்: தில்லை காளியை வணங்கி தரிசித்துவிட்டு வாருங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியருக்கு உதவுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 31, 2016 11:34 am

கன்னி

கடமை உணர்வு கொண்ட நீங்கள் காதல் வசப்படுபவர்கள். பிறர் தன்னை குற்றம் குறை கூறிக் குதர்க்கமாகப் பேசினாலும் மனம் தளரமாட்டீர்கள். ஒற்றுமை உணர்வு அதிகமுள்ள நீங்கள், மற்றவர்களின் சொத்துக்கு ஆசைப்பட மாட்டீர்கள். இந்த தமிழ் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் தனாதிபதி சுக்கிரன் 7ல் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதுடன் உங்களது ராசியையும் பார்த்துக் கொண்டிருப்பதால் உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அழகு, இளமைக் கூடும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தாம்பத்யம் இனிக்கும். மனைவி நீண்ட நாளாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். இருசக்கர வாகனத்தை விற்று சிலர் நான்கு சக்கர வாகனம் வாங்குவீர்கள். சந்திரன் 10வது ராசியில் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் உங்கள் சாதனை தொடரும். நிர்வாகத்திறன் அதிகரிக்கும்.

திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். வருங்காலத்திற்காக சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். பதவிகள் தேடி வரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. போட்டி, தேர்வுகளில் வெற்றி உண்டு. கோபம் குறையும். துர்முகி வருடம் தொடக்கத்தின் போது செவ்வாய் 3ம் இடத்தில் வலுவாக நிற்பதால் தைரியம் பிறக்கும்.

தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். சின்ன இடத்தை விற்று பெரிய சொத்து வாங்குவீர்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். ராசிநாதன் புதன் வருடப் பிறப்பின் போது 8ல் மறைந்திருப்பதால் உறவினர், நண்பர்களின் அன்புத்தொல்லைகள் வந்து போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.

இந்தாண்டு முழுக்க ராகுபகவான் ராசிக்கு பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் மாதக் கணக்கில் தள்ளிப் போய் கொண்டிருந்த வேலைகளெல்லாம் முடிவடையும். பணப்பற்றாக்குறையால் பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள். ஆனால், கேது 6ம் வீட்டில் நீடிப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஷேர் மூலமாக பணம் வரும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். வாழ்க்கையின் சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். வழக்கு சாதகமாகும். உங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியவர்களெல்லாம் பணத்தை வட்டியுடன் திருப்பித் தருவார்கள்.

நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீடு வாங்கும் யோகம் உண்டாகும். 1.8.2016 வரை குரு ராசிக்கு 12ல் நிற்பதால் எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகமாகும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி அடுத்தடுத்து செலவினங்கள் இருந்து கொண்டேயிருக்கும். 2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குரு உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக வருவதால் உடல் நலம் பாதிக்கும்.

இன்ஃபெக்சன், அலர்ஜி, வயிற்று உப்புசம், வாய்ப்புண், ஹார்மோன் பிரச்னைகள் வந்து நீங்கும். சாதாரணமாக நெஞ்சு வலிக்கும். ஹார்ட் அட்டாக் வந்துவிடுமோ என்றெல்லாம் யோசிப்பீர்கள். மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். சரியான மருத்துவரை அணுகி உரிய மாத்திரையை உட்கொள்வது நல்லது. அடிக்கடி மருத்துவரை மாற்றிக் கொண்டிருக்க வேண்டாம்.

திடீரென்று அறிமுகமாகி உங்களை அதிகம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் புது நண்பர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். கணவன்-மனைவிக்குள் பனிப்போர் அதிகரிக்கும். ஒரே வீட்டில் இருந்து கொண்டே ஒருவருக்கொருவர் சில நாட்களில், சில நேரங்களில் மௌனமாக இருக்க வேண்டி வரும். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும்.

வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என பார்த்து காசோலை தருவது நல்லது. முக்கிய பத்திரங்களில் கையெழுத்திடும்போது சட்ட ஆலோசகரை கலந்து பேசுவது நல்லது. 17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 2ல் அமர்வதால் அதுமுதல் அமைதி உண்டாகும். குடும்பத்தில், கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும்.

27.2.2017 முதல் 11.4.2017 வரை செவ்வாய் உங்களுடைய ராசிக்கு 8ல் மறைவதால் சின்ன சின்ன ஏமாற்றங்கள், சனிபகவான் உங்கள் ராசிக்கு 3ம் வீட்டிலேயே இந்தாண்டு முழுக்க முகாமிட்டிருப்பதால் சவாலில் வெற்றி பெறுவீர்கள். தொலைநோக்குச் சிந்தனை அதிகமாகும். உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள்.

குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு வரன் தேடி அலுத்துப் போனீர்களே! இனி நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் வந்தமையும். பூர்வீக சொத்தில் உங்கள் ரசனைக் கேற்ப சில மாற்றங்கள் செய்வீர்கள். கல்வித் தகுதிக்கேற்ப நல்ல உத்யோகம் இல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். உங்களை எதிர்த்தவர்களெல்லாம் நட்பு பாராட்டுவார்கள்.

வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். கல்வித் தகுதியில் சிறந்த அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். ஆனி, ஆடி, மாசி மாதங்களில் வியாபாரம் செழிக்கும். பெரிய  நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். சிலர் செய்துக் கொண்டிருக்கும் தொழிலை விட்டு விட்டு வேற்று தொழிலில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது.

உத்யோகத்தில் போராட்டங்கள் அதிகரிக்கும். வேலையில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற ஒரு அச்ச உணர்வு தினந்தோறும் வந்து போகும். உயரதிகாரிகளால் அலைக்கப்படுவீர்கள் என்றாலும் சக ஊழியர்களால் உதவிகள் உண்டு. சிலர் உங்கள் மீது வழக்குத் தொடுக்க வாய்ப்பிருக்கிறது. ஆனி, ஆடி, கார்த்திகை மாதங்களில் வேலையில் ஆர்வம் உண்டாகும். சிலர் புது பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும்.

கன்னிப் பெண்களே! உங்களின் கனவுகள் நனவாகும். எதிர்பார்த்தபடி நல்ல இடத்தில் வரன் அமையும். என்றாலும் நெருங்கிப் பழகிய நண்பர்கள் சிலர் உங்களுக்கு துரோகம் செய்ய வாய்ப்பிருக்கிறது. கவனம் தேவை. அல்சர், வாய்ப்புண், தேமல் வரக்கூடும். பெற்றோருக்கு முக்கியத்துவமளியுங்கள்.

மாணவ-மாணவிகளே! எண்ணங்கள் பூர்த்தியாகும். விளையாட்டுத்தனத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வகுப்பறையில் அமைதி காப்பதுடன், படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். நினைவாற்றல் கூடும். வகுப்பறையில் சக மாணவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளே! புள்ளி விவரங்களுடன் எதிர்க்கட்சியினரை தாக்கிப் பேசி கட்சி சகாக்களின் பாராட்டைப் பெறுவீர்கள். தொகுதி மக்களுக்காக கூடுதல் நேரம் ஒதுக்கி உழைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

கலைத்துறையினரே! கலைநயமிகுந்த உங்களின் படைப்புகள் பட்டித்தொட்டியெங்கும் பேசப்படும். மூத்த கலைஞர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புது வாய்ப்புகளும் வரும்.

விவசாயிகளே! விளைச்சல் இரட்டிப்பாகும். எலிகளை அழிக்கும் பாம்புகளை அடிக்க வேண்டாம். ஊரில் மதிப்பு, மரியாதைக் கிடைக்கும். புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பீர்கள். ஆகமொத்தம் இந்த துர்முகி ஆண்டு சற்றே சுகவீனங்களைத் தந்தாலும் உங்களின் நீண்ட கால கனவுகளைளெல்லாம் நிறைவேற்றுவதாக அமையும்.

பரிகாரம்: சமயபுரம் மாரியம்மனை தரிசித்து வாருங்கள். முதியோர் இல்லங்களுக்குச் சென்று உதவுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 31, 2016 11:35 am

துலாம்

உழைப்பே ஓய்வுக்குத் திறவு கோல், சுறுசுறுப்பே செல்வத்துக்கு திறவு கோல் என்பதை அறிந்த நீங்கள், எப்போதும் பரபரப்பாக இருந்து சாதிப்பீர்கள். ஆயிரம் புத்திமதிகளை விட ஓர் அனுபவம் தக்க பாடம் கற்பிக்கும் என்பதற்கேற்ப அனுபவ அறிவு அதிகமுள்ளவர்களாக இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் சந்திரன் நிற்கும் நேரத்தில் இந்த துர்முகி வருடம் பிறப்பதால் மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேறுவீர்கள்.

வருடப் பிறப்பின் போது புதன் 7ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் மனைவிக்கு வேலைக் கிடைக்கும். இந்தப் புத்தாண்டின் தொடக்கத்தில் உங்களுடைய ராசிநாதன் சுக்கிரன் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள் என்றாலும் 6ல் வீட்டில் மறைந்திருப்பதால் சளித் தொந்தரவு, தொண்டைப் புகைச்சல், வாகனப் பழுது, சிறுசிறு விபத்துகள் வந்துச் செல்லும்.

இந்தாண்டு முழுக்க சனிபகவான் 2ல் அமர்ந்து பாதச்சனியாக தொடர்வதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாற வேண்டாம். வெளிப்படையாக யாரையும் விமர்சிக்காதீர்கள். குடும்பத்திலும் அவ்வப்போது சச்சரவுகள் வரும். சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். உடனே உணர்ச்சிவசப்பட்டு கத்தாதீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். குருபகவான் 1.8.2016 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.

கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். பழைய நகையை மாற்றி புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல் நல்ல குடும்பத்திலிருந்து மணமகன் வந்தமைவார். மழலை பாக்யம் கிட்டும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டு.

அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வீட்டில் கூடுதலாக ஒரு அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சி வலிதமாகும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். 2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 12ல் மறைவதால் வீண் விரயம், ஏமாற்றம், தூக்கமின்மை, செலவுகள் வந்துச் செல்லும்.

ஓய்வெடுக்கமுடியாதபடி வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். அலைப்பேசியில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்க வேண்டாம். அவ்வப்போது கனவுத் தொல்லை அதிகமாகும்.

உறவினர், நண்பர்கள் வீட்டு திருமணம், கிரகப் பிரவேசம், காது குத்து போன்ற சுப நிகழ்ச்சிகளையெல்லாம் நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். ஆனால் 17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் உங்களுடைய ராசிக்குள் அமர்ந்து ஜென்ம குருவாக வருவதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற அச்சம் வரும்.

சாதாரணமாக நெஞ்சு வலிக்கும் ஹார்ட் அட்டாக்காக இருக்குமோ என்றெல்லாம் பயந்துவிடாதீர்கள். மெடிக்ளைம் எடுத்துக் கொள்வது நல்லது. குடிநீரை காய்ச்சி அருந்துங்கள். நேரம் தவறி சாப்பிட வேண்டாம். மஞ்சள் காமாலை, அல்சர்க்கான அறிகுறிகள் தெரியக் கூடும். லாகிரி வஸ்துக்கள், அசைவம் மற்றும் கார உணவுகளை தவிர்க்கப்பாருங்கள். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவுகள் வரும். பிரிவு ஏற்படக்கூடும்.

முடிந்த வரை சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்துக் கொண்டால் நல்லது. சில நேரங்களில் எதையோ இழந்ததைப் போல மனவாட்டத்துடன் காணப்படுவீர்கள். யாரேனும் உங்களைப் பற்றி விமர்சித்தால் அதைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். இந்த துர்முகி ஆண்டு முழுக்கவே ராகுபகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டிலேயே தொடர்வதால் உங்களின் செல்வம், செல்வாக்குக் கூடும்.

உங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியவர்களெல்லாம் திருப்பித் தருவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். அனுபவப் பூர்வமாகவும், அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வருவீர்கள். மூத்த சகோதர வகையில் மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை பலப்படும்.

குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கேது இந்தாண்டு முழுக்க 5ம் இடத்திலேயே நீடிக்கயிருப்பதால் அடிமனதில் வீண் குழப்பங்கள் எழும். புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் தடை, தாமதங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துப் பிரச்னை விஸ்வரூபமெடுக்கும். பிள்ளைகளை ஆரம்பத்திலிருந்தே இன்னும் கொஞ்சம் கண்டித்து வளர்த்திருக்கலாமென இப்போது நினைப்பீர்கள்.

அவர்களின் முரட்டுத் தனத்தை அன்பால் மாற்றுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்த பொருட்களை சுமக்க வேண்டாம். மனைவிக்கு கர்ப்பச் சிதைவு ஏற்படக்கூடும். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். கடன் பிரச்னையால் இதுநாள் வரை கட்டிக் காப்பாற்றிய கௌரவம், நல்ல பெயரை எல்லாம் இழந்துவிடுவோமோ என்ற ஒரு பயமும் இருக்கும்.

27.1.2017 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிநாதனான சுக்ரன் ராசிக்கு 6ல் மறைந்திருப்பதால் சளித் தொந்தரவு, சையனஸ் இருப்பதைப் போல் தலை வலி, மூச்சுப் பிடிப்பு வந்துச் செல்லும். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற மின்சார சாதனங்கள் பழுதாகும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள்.

புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். புரோக்கரேஜ், ஸ்பெக்குலேஷன், அழகு சாதனப் பொருட்கள், கம்யூட்டர் உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். மூத்த வியாபாரிகளின் ஆதரவால் புதிய பதவியில் அமர்வீர்கள். ஆடி, ஆவணி, மார்கழி, பங்குனி மாதங்களில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும்.

உத்யோகத்தில் உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத்தெறிவீர்கள். என்றாலும் காலம் நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். சக ஊழியர்கள் உங்களுக்கு முன்னுரிமைத் தருவார்கள். ஆடி, ஆவணி, மார்கழி மாதங்களில் அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் சிலருக்கு வேலை அமையும்.

கன்னிப் பெண்களே! காதலும் இனிக்கும், கல்வியும் இனிக்கும். உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.

மாணவ-மாணவிகளே! விரும்பிய கல்விப் பிரிவில், எதிர்பார்த்த நிறுவனத்தில் இடம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளே! தொகுதி மக்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். தலைமையிடம் செல்வாக்குக் கூடும். போராட்டங்களுக்கு தலைமை தாங்குவீர்கள். சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும்.

கலைத்துறையினரே! பிரபலமாவீர்கள். பெரிய நிறுவனங்களின் வாய்ப்புகள் வரும். வருமானம் உயரும். அரசாங்கத்தால் கௌரவிக்கப்படுவீர்கள்.

விவசாயிகளே! தண்ணீர் வரத்து அதிகரிக்கும். தரிசு நிலங்களையும் இயற்கை உரத்தால் பக்குவப்படுத்தி விளையச் செய்வீர்கள். பூச்சித் தொல்லை, வண்டுக்கடியிலிருந்து பயிரை காப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். எதிர்பார்த்த பட்டா வந்து சேரும். இந்த துர்முகி வருடம் எதிர்பாராத பயணங்களையும், செலவுகளையும் தந்தாலும் செல்வம், செல்வாக்கையும் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்: சங்கரன்கோவில் சங்கரநாராயணரை தரிசித்துவிட்டு வரச் சொல்லுங்கள். சொந்த ஊர் கோயில் திருப்பணியைச் செய்யுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 31, 2016 11:37 am

விருச்சிகம்

வெளிப்படையாக மற்றவர்களை சில நேரங்களில் விமர்சிக்கும் நீங்கள், மனிதநேயம் மாறாதவர்கள். பதவி, பணத்திற்கு வளைந்துக் கொடுக்காத நீங்கள், பாசம், பந்தத்திற்கு அடிமையாவீர்கள். சூரியனும், சுக்கிரனும் சாதகமாக இருக்கும் போது இந்த துர்முகி வருடம் பிறப்பதால் எதிர்ப்புகள் அடங்கும். வீரியத்தை விட காரியம் தான் முக்கியம் என்பதை உணருவீர்கள். உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் பகவான் ஆட்சிப் பெற்று உங்கள் ராசியிலேயே அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த துர்முகி வருடம் பிறப்பதால் இடையூறுகளைக் கடந்து சாதிக்கும் வல்லமை உண்டாகும்.

சனியுடன் சேர்ந்து நிற்பதால் அலர்ஜி, ரத்த சோகை, முன்கோபம், ரத்த அழுத்தம் வந்துச் செல்லும். உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். இந்தாண்டு முழுக்க ராசிக்குள் சனி அமர்ந்து ஜென்மச் சனியாக தொடர்வதால் ஆரோக்யத்தில் அதிக அக்கறை காட்டுங்கள். நெஞ்சு எரிச்சல், செரிமானக் கோளாறு, விஷப் பூச்சிக் கடி வந்துப் போகும்.

சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வரக்கூடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். துரித உணவுகள், கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுகள் வேண்டாமே. சர்க்கரை நோய் எட்டிப் பார்க்கும். உடல் பருமனாவதை தவிர்க்க தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. நேரம் தவறி சாப்பிடுவதால் அல்சர் வரக்கூடும். விளம்பரங்களை பார்த்து ஏமாந்து சோப்பு, ஷாம்புவையெல்லாம் மாற்றிக் கொண்டிருக்காதீர்கள். தோலில் தடிப்பு, அலர்ஜி வரக்கூடும்.

சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. கோர்டு, கேஸ் என்றெல்லாம் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காதீர்கள். 1.8.2016 வரை குரு 10ல் தொடர்வதால் வேலைச்சுமையால் அசதி, சோர்வு வந்து நீங்கும். பல வேலைகளையும் நீங்களே இழத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். விலை உயர்ந்த நகை, பணத்தை இழக்க நேரிடும். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம்.

உங்களிடம் திறமை குறைந்து விட்டதாக நினைத்துக் கொள்வீர்கள். மறைமுக அவமானங்கள் வந்து நீங்கும். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் வரும். 2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குருபகவான் லாப வீட்டில் அமர்வதால் போராட்டங்கள் குறையும். தடைகளெல்லாம் நீங்கும். வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள்.

பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய பிரச்னைகளை தீர்க்க வழி, வகைப் பிறக்கும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். குழந்தை பாக்யம் கிடைக்கும். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். மகளின் திருமணத்தை சீரும், சிறப்புமாக நடத்துவீர்கள். மகனின் அலட்சியப் போக்கு மாறும். ஷேர் மூலம் பணம் வரும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள்.

பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மூத்த சகோதர வகையில் ஆதரவுப் பெருகும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். புது வீடு கட்டிக் குடிப்புகுவீர்கள். கண்டும், காணாமல் சென்றுக் கொண்டிருந்தவர்கள் உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். வெளிவட்டாரத்தில் உங்களை நம்பி பெரிய பதவிகள், பொறுப்புகள் தருவார்கள். வேலை கிடைக்கும்.

பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ஆனால், 17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் உங்களுடைய ராசிக்கு 12ல் மறைவதால் திட்டமிடாத பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.

கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகளும் அதிகமாகும். யோகா, தியானத்தில் ஈடுபடுத்திக் கொள்வது நல்லது. உங்களை யாரும் மதிக்கவில்லை, யாருமே புரிந்து கொள்ளவில்லையென்றெல்லாம் அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள்.

இந்தாண்டு முழுக்க ராகுபகவான் உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் அமர்ந்திருப்பதால் கடினமான காரியங்களையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உங்களுடைய நிர்வாகத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சச்சரவுகள் நீங்கி அமைதி உண்டாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணரும் சூட்சும புத்தி உண்டாகும்.

தொழிலதிபர்கள், ஆன்மிகப் பெரியோர்களின் அறிமுகம் கிடைக்கும். சிலர் சொந்தமாக தொழில் செய்யத் தொடங்குவீர்கள். சிலர் செய்து கொண்டிருக்கும் தொழிலுடன் வேறு சில வியாபாரமும் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். என்றாலும் உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். வீடு கட்டுவதற்கு அரசாங்க அனுமதி தாமதமாகும். புது வண்டியாக இருந்தாலும் கூட அடிக்கடி பழுதாகும்.

வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொண்டு லாபத்தை இரட்டிப்பாக்குவீர்கள். என்றாலும் பெரியளவில் முதலீடுகள் வேண்டாம். கடன் வாங்கி கடையை விரிவுப்படுத்தி, நவீனமாக்குவீர்கள். உணவு, இரும்பு, கன்சல்டன்சி, ரியல் எஸ்டேட், மர வகைகளால் ஆதாயம் உண்டு. தொழில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வேலையாட்கள், பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள்.

பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். சித்திரை, ஆவணி, புரட்டாசி மாதங்களில் திடீர் லாபம் உண்டு. புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். 2.8.2016 முதல் உத்யோகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். வேலைச்சுமை குறையும். சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். என்றாலும் ராகு 10ல் நிற்பதால் மூத்த அதிகாரிகளை திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும்.

சிலர் தங்களை அறிவாளியாக காட்டிக் கொள்ள உங்களை மட்டம் தட்டி மேலிடத்தில் சொல்லி வைப்பார்கள். வேலையை விட்டுவிடலாமா என்ற எண்ணங்கள் வரக்கூடும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். சித்திரை, ஆவணி, புரட்டாசி, தை மாதங்களில் தள்ளிப் போன பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.

கன்னிப்பெண்களே! உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய நண்பர்களால் உங்கள் பிரச்னைகள் பாதியாகக் குறையும். தைரியம் கூடும். அண்டைமாநிலம், அயல்நாட்டில் வேலை கிடைக்கும். கல்யாணம் கூடி வரும். என்றாலும் தோலில் தடிப்பு, தேமல், தூக்கமின்மை வந்துச் செல்லும். பெற்றோரின் ஆலோசனைகள் இப்போது கசப்பாக இருந்தாலும் பின்னர் அது சரியானது தான் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

மாணவ-மாணவிகளே! சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது அதற்கான உழைப்பு வேண்டும். சந்தேகங்களை தயங்காமல் கேளுங்கள். ஒருமுறை படித்தால் மட்டும் போதாது அறிவியல், கணித சூத்திரங்களையெல்லாம் எழுதிப் பார்த்து நினைவில் நிறுத்துவது நல்லது. விளையாட்டுப் போட்டிகள், பொது அறிவு போட்டிகளில் பரிசு, பாராட்டுக் கிடைக்கும்.

அரசியல்வாதிகளே! கட்சியில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். வழக்குகளை சந்திக்க நேரிடும். சாதாரண மக்களின் நாடித் துடிப்பை கண்டறிந்து அதற்கேற்ப உங்களுடைய செயல் திட்டத்தை நீங்கள் அமைத்துக் கொள்ளுங்கள்.

கலைத்துறையினரே! திரையிடாமல் தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்பு இப்போது வெளி வரும். கிசுகிசுத் தொந்தரவுகளும்,
விமர்சனங்களும் அதிகமாகும்.

விவசாயிகளே! வற்றிய கிணற்றில் நீர் ஊற அதிகம் செலவு செய்து தூர் வார்வீர்கள். ஒரே விதமான பயிர்களை சாகுபடி செய்யாமல் மாற்றுப் பயிரிட முயற்சி செய்யுங்கள். சிலர் புதிதாக நிலம் கிரயம் செய்வீர்கள். கனி, மஞ்சள் மற்றும் கிழங்கு வகைகளால் லாபமடைவீர்கள். இந்தப் புத்தாண்டு அடுத்தடுத்த வேலைச்சுமையைத் தந்தாலும் தன்னம்பிக்கையாலும், துணிச்சலான முடிவுகளாலும் வெற்றி பெற வைக்கும்.

பரிகாரம்: திருநெல்வேலி நெல்லையப்பரை தரிசித்து வாருங்கள். கோயில் உழவாரப்பணியில் கலந்து கொள்ளுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 31, 2016 11:38 am

தனுசு

அளவுக்கு அதிகமாக செல்வம் சேர்க்க விரும்பாத நீங்கள், எதற்காகவும் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். குழந்தைகளை கண்டால் குதுகளிக்கும் உங்கள் மனசின் ஓரத்தில் விளையாட்டுத்தனமும் விளைந்திருக்கும். உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் இந்த துர்முகி வருடம் பிறப்பதால் உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும்.

அழகு, ஆரோக்யம் கூடும். இந்தாண்டு பிறக்கும் நேரத்தில் சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் வீராவேசமாக பேசி விமர்சனங்களுக்குள்ளாவதை விட கனிவாகப் பேசி எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பது தான் நல்லது என்ற முடிவுக்கு வருவீர்கள். பணப்பற்றாக்குறையை போக்க கூடுதலாக உழைப்பீர்கள். 1.8.2016 வரை உங்கள் ராசிநாதன் குருபகவான் 9ல் நிற்பதால் பிரச்சனைகளை தொலைநோக்குப் பார்வையுடன் தீர்க்கும் சூட்சுமத்தை உணர்வீர்கள்.

எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை விரைந்து முடிப்பீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்தைப் போல் நல்ல குடும்பத்திலிருந்து மணமகள் அமைவார். தாயாருக்கு இருந்த நோய் வெகுவாக குறையும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள்.

ஆனால், 2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குரு 10ம் வீட்டில் நுழைவதால் சில நேரங்களில் ஏமாற்றங்களை உணர்வீர்கள். எல்லோரும் பார பட்சமாக உங்களிடம் நடந்து கொள்வதாக குறை கூறுவீர்கள். 17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 11ல் அமர்வதால் அடிப்படை வசதி, வாய்ப்புகள் பெருகும். குடும்பத்தில் நல்லது நடக்கும். தாயாரின் ஆதரவு பெருகும். சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. மூத்த சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இந்த துர்முகி வருடம் முழுவதும் ராகுபகவான் 9ம் வீட்டிலேயே தொடர்வதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை மனதில் பிறக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும்.

வீடு கட்ட, வாங்க, தொழில் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். என்றாலும் தந்தையாருக்கு ரத்த அழுத்தம், செரிமானக் கோளாறு, கை, கால் வலி வந்து போகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை தலைதூக்கும். தந்தையாருடன் மனத்தாங்கல் வரும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி அடுத்தடுத்து செலவுகளும் இருந்து கொண்டேயிருக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். தந்தைவழி உறவினர்களால் அலைச்சல், செலவுகள் அதிகமாகும்.

பாகப்பிரிவினை பிரச்னையில் இப்போது தலையிட வேண்டாம். கோர்ட், கேஸ் என்று போக வேண்டாம். பழைய பிரச்னைகள் மீண்டும் வந்துவிடுமோ என்ற அச்சம் வரும். நேர்மறை எண்ணங்களை உள்வளர்த்துக் கொள்ளுங்கள். ஆனால், கேது 3ம் வீட்டிலேயே நீடிப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனோபலம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு.

ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். இளைய சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் வரும். விலை உயர்ந்த தங்க ஆபரணம், ரத்தினங்கள் வாங்குவீர்கள். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள்.

இந்த வருடம் முழுவதுமாக சனி 12ல் மறைந்து ஏழரைச் சனியின் தொடக்கமான, விரையச் சனியாக தொடர்வதால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமோ, முடியாதோ என்றெல்லாம் சில நேரங்களில் சங்கடப்படுவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களில், உள்விவகாரங்களில் மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். உங்களிடம் இருக்கும் தவறான பழக்கங்களை மனைவி சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ளப்பாருங்கள்.

எளிதாக முடித்து விடலாம் என நினைத்த காரியங்களைக் கூட போராடி தான் முடிக்க வேண்டி வரும். வீண் அலைக்கழிப்புகள் அதிகமாகும். எதிர்காலம் பற்றிய பயம் வந்து போகும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். பழைய கடனை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். மாதம் தவறாமல் அசலை செலுத்தினாலும் வட்டி கூடிக் கொண்டேப் போகிறதே என்று அச்சப்படுவீர்கள். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். உறவினர், நண்பர்கள் வீட்டு திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசத்தை நீங்களே செலவு செய்து முன்னின்று முடிப்பீர்கள். யாருக்கும் ஜாமீன், கேரன்டர் கையெழுத்திட வேண்டாம்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப முதலீடு செய்வது நல்லது. ஏழரைச் சனி நடைபெறுவதால் வேலையாட்களிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம். இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாறாதீர்கள். அரசு சம்பந்தப்பட்ட டென்டர்கள், கான்ட்ராக்ட் விஷயத்தில் கவனமாக செயல்படுங்கள். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். வைகாசி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் லாபம் அதிகரிக்கும்.

புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். 2.8.2016 முதல் குரு உங்கள் ராசிக்கு 10ல் அமர்வதால் உத்யோகத்தில் பொறுப்பு அதிகமாகும். சக ஊழியர்களில் ஒருசிலர் அவர்களின் வீழ்ச்சிக்கு நீங்கள் காரணம் என்று தவறாகப் புரிந்து கொள்வார்கள். உங்களுக்கு இருக்கும் மூத்த அதிகாரிகளின் நெருக்கம் சிலரின் கண்ணை உருத்தும். மறைமுக எதிர்ப்புகளும் இருக்கும். சிலர் பணியிலிருந்து கட்டாய ஓய்வு பெறக் கூடிய சூழ்நிலை உருவாகும்.

உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். வைகாசி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.

கன்னிப் பெண்களே! போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றிப் பெறுவீர்கள். காதல் கசந்து இனிக்கும். சிலர் உயர்கல்விக்காக அயல்நாடு செல்வீர்கள். வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும். உங்கள் ரசனைக் கேற்ற வாழ்க்கைத் துணை அமையும். பெற்றோரின் நீண்ட நாள் கனவுகளை நனவாக்குவீர்கள். கூடா நண்பர்களை தவிர்த்து நல்ல நட்புச் சூழலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

மாணவ-மாணவிகளே! சமயோஜித புத்தியை பயன்படுத்துங்கள். ஒருமுறை படித்துவிட்டால் எல்லாம் மனசில் தங்கிவிடும் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். எல்லாம் நன்றாக புரிவது போல இருக்கும். ஆனால், தேர்வறையில் விடையை நினைவுக்கூறும் போது திணறுவீர்கள்.

அரசியல்வாதிகளே! எதிர்ப்புகள் ஆங்காங்கே இருக்கும். தொகுதி மக்களிடையே சலசலப்புகளும் வரும். கோபப்படாமல் அமைதியாக மக்களை எதிர்கொள்வது நல்லது. தலைமைக்கு கட்டுப்படுங்கள். சூழ்ச்சிகளில் சிக்கிக்கொள்ளாதீர்கள்.

கலைத்துறையினரே! படைப்புகளை வெளியிடுவதில் தன்மானத்தை யோசித்துக் கொண்டிருக்க வேண்டாம். கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போய் சில வாய்ப்புகளைப் பெற்று படைப்புகளை வெளியிட்டு வெற்றி பெறப்பாருங்கள். வேற்றுமொழி வாய்ப்புகளும் வரும்.

விவசாயிகளே! தோட்டப் பயிர்களால் லாபமடைவீர்கள். பக்கத்து நிலத்துக்காரரை அனுசரித்துப் போவது நல்லது. விலை குறைவாக இருக்கிறது என்று நினைத்து தரமற்ற விதைகளை வாங்கி விதைக்க வேண்டாம். இந்தப் புத்தாண்டு உங்களைக் கொஞ்சம் செம்மைப்படுத்துவதற்கு உதவுவதுடன், போராட்டங்களை கடக்கும் மன உறுதியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: சுசீந்திரம் தாணுமாலய சுவாமியையும், ஆஞ்சநேயரையும் தரிசித்து வாருங்கள். சாலையோரம் வாழும் சிறார்களுக்கு உதவுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 31, 2016 11:39 am

மகரம்

ஏர்முனையாக இருந்தாலும், போர் முனையாக இருந்தாலும் எதிலும் முதலில் நிற்கும் நீங்கள், எண்ணுவதை எழுத்தாக்கும் படைப்பாற்றல் மிக்கவர்கள். அதிர்ஷ்டத்தை நம்பி காலத்தை கழிக்காமல் உழைப்பால் உயர்பவர்கள். செவ்வாய் உங்கள் ராசிக்கு லாப வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த துர்முகி வருடம் பிறப்பதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். எதிர்பாராத பணவரவு உண்டு. பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

பேச்சில் கம்பீரம் பிறக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடிவடையும். சுறுசுறுப்பாக பல வேலைகள் செய்து முடிப்பீர்கள். இந்த துர்முகி வருடம் உங்களுக்கு 6வது ராசியில் பிறப்பதால் சவால்களை சந்திக்க வேண்டி வரும். மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். பயணங்களும், செலவுகளும் உங்களை துரத்தும். சிலருக்கு வேற்றுமாநிலம் அல்லது வெளிநாட்டில் வேலை கிடைக்கும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.

பழைய வாகனம் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அப்படி வாங்குவதாக இருந்தால் ஆவணத்தை சரி பார்த்து வாங்குங்கள். இந்தாண்டு முழுக்க ராகு 8லும், கேது 2ம் இடத்திலும் நீடிப்பதால் இடம், பொருள், ஏவலறிந்து செயல்படப்பாருங்கள். நீங்கள் சாதாரணமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்து கொள்வார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காவிட்டாலும் திடீர் உதவிகள் புது வகையில் வந்து சேரும்.

இடமாற்றமும் இருக்கும். அயல்நாடு சென்று வருவீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி அடுத்தடுத்த செலவுகளால் திணறுவீர்கள். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். சிலர் மூக்கு கண்ணாடி அணிய வேண்டி வரும். காலில் அடிபட வாய்ப்பிருக்கிறது. வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள். வழக்குகளில் அலட்சியப் போக்கு வேண்டாம். தேவைப்பட்டால் வழக்கறிஞரை மாற்றுங்கள்.

வறட்டு கவுரவத்திற்கும், போலி புகழ்ச்சிக்கும் மயங்காதீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு உள்விவகாரங்களில் அதிகம் மூக்கை நுழைக்க வேண்டாம். சித்தர் பீடங்கள், புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். இந்த துர்முகி வருடம் முழுவதுமாக உங்கள் ராசிநாதன் சனிபகவான் லாப வீட்டிலேயே தொடர்வதால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும்.

எதிலும் ஆர்வம் பிறக்கும். வருமானம் உயரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணமும் வரும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சோர்ந்திருந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாவீர்கள். வீட்டில் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். கணவன்-மனைவி இருவரும் கலந்துப் பேசி குடும்பச் செலவுகளை குறைக்க முடிவுகளெடுப்பீர்கள். குழந்தை இல்லாமல் கோயில், குளமென்றும் சுற்றிக் கொண்டிருந்த தம்பதியர்களுக்கு குழந்தை பாக்யம் உண்டாகும்.

பூர்வீக சொத்தை மாற்றி உங்கள் ரசனைக் கேற்ப புது வீடு வாங்குவீர்கள். மகளுக்கு ஊரே மெச்சும்படி திருமணம் முடிப்பீர்கள். மகனுக்கு அயல்நாட்டில் உயர்கல்வி அமையும்.

கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். மனைவிவழியில் மதிப்பு, மரியாதை கூடும். 1.8.2016 வரை குருபகவான் 8ல் மறைந்திருப்பதால் மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுடைய தனித்தன்மையைப் பின்பற்றுவது நல்லது. மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும்.

எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். பல வருடங்கள் நெருக்கமாக பழகியவர்கள் கூட உங்களை குறை கூறுவார்கள். ஆனால், 2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் நுழைவதால் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள்.

வீண் குழப்பங்கள், தடுமாற்றங்கள் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். திடீர் பணவரவு, யோகம் எல்லாம் உண்டாகும். உங்களைப் பற்றிய இமேஜ் ஒருபடி உயரும். வளைந்துக் கொடுத்தால் வானம் போல் உயரலாம் என்பதை உணருவீர்கள். வங்கியிலிருந்த நகை, பத்திரத்தை மீட்பீர்கள். விலகிச் சென்றவர்கள் வலிய வந்துப் பேசத் தொடங்குவார்கள். அடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள்.

ஆனால் 17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 10ம் வீட்டில் அமர்வதால் வளைந்து கொடுத்துப் போக கற்றுக் கொள்ளுங்கள். அடுக்கடுக்கான வேலைகளால் அவதிப்படுவீர்கள். முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது.

வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். சந்தை நிலவரத்தை அவ்வப்போது உன்னிப்பாக கவனித்து அதற்கேற்ப செயல்படப்பாருங்கள். வேலையாட்களின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டி அன்பாக திருத்துங்கள்.தொலைக்காட்சிவானொலி விளம்பரங்களின் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். தரமான பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள்.

கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாவீர்கள். தெரியாத தொழிலிலும் இறங்க வேண்டாம். மூலிகை, கட்டிட உதிரி பாகங்கள், துணி, புரோக்கரேஜ் வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்களுடன் வளைந்துப் போங்கள். ஆனி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும்.

உத்யோகத்தில் உண்மையாக இருப்பது மட்டும் போதாது உயரதிகாரிகளுக்கு தகுந்தாற்போலும் பேசும் வித்தையையும் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற முடிவிற்கு வருவீர்கள். உங்களின் கடின உழைப்பை மூத்த அதிகாரிகள் புரிந்து கொள்வார்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். ஆனி, ஐப்பசி, கார்த்திகை, பங்குனி மாதங்களில் இழந்த சலுகைகளையும், மதிப்பு, மரியாதையையும் மீண்டும் பெறுவீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி வேறுயிடத்திற்கு மாற்றப்படுவார்.

கன்னிப் பெண்களே! காதல் தோல்வியில் கலங்கி நின்றீர்களே! அதிலிருந்து மீள்வீர்கள். உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். தொலைநோக்குச் சிந்தனையால் சாதிப்பீர்கள். பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வேற்று மொழிக்காரர்கள் தோழிகளாக அறிமுகமாவார்கள்.

மாணவ-மாணவிகளே! போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. வகுப்பறையில் கடைசி வரிசையில் உட்கார வேண்டாம். சக மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பீர்கள். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் போராடி சேர வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

அரசியல்வாதிகளே! பொதுக் கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பீர்கள். தலைமை உங்களை முழுமையாக ஆதரிக்கும். தொகுதி மக்களை பணிவாக அணுகுங்கள். உங்களின் நெருங்கிய சகாக்களை புதியவர்களிடம் அறிமுகப்படுத்தாதீர்கள்.

கலைத்துறையினரே! சுய விளம்பரத்தை விட்டு விட்டு யதார்த்தமான படைப்புகளை தரப்பாருங்கள். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மூத்தகலைஞர்களால் உதவிகள் உண்டு.

விவசாயிகளே! பக்கத்து நிலத்துக்காரருடன் பாந்தமாக பழகுங்கள். வரப்புச் சண்டைகள் வேண்டாம். அதிக வட்டிக்கு புதிதாக கடன் வாங்கி பழைய கடனை பைசல் செய்ய முயற்சி செய்வீர்கள். பழுதான பம்பு செட்டை மாற்றிவிட்டு புதுசு வாங்குவீர்கள். இந்த துர்முகி வருடம் சின்னச் சின்ன ஏற்றத் தாழ்வுகளை தந்தாலும் உங்களின் வளர்ச்சிப் பணிகள் தொய்வில்லாமல் தொடர்வதாக அமையும்.

பரிகாரம்: கும்பகோணத்திற்கு அருகேயுள்ள சுவாமிமலை முருகனை தரிசியுங்கள். வயதானவர்களுக்கு செருப்பும் குடையும் வாங்கிக் கொடுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக