புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  Poll_c10மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  Poll_m10மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  Poll_c10மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  Poll_m10மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  Poll_c10மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  Poll_m10மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  Poll_c10 
3 Posts - 6%
prajai
மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  Poll_c10மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  Poll_m10மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  Poll_c10 
2 Posts - 4%
Baarushree
மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  Poll_c10மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  Poll_m10மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  Poll_c10 
2 Posts - 4%
Rutu
மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  Poll_c10மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  Poll_m10மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  Poll_c10 
1 Post - 2%
சிவா
மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  Poll_c10மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  Poll_m10மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  Poll_c10 
1 Post - 2%
viyasan
மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  Poll_c10மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  Poll_m10மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  Poll_c10மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  Poll_m10மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  Poll_c10மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  Poll_m10மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  Poll_c10 
2 Posts - 15%
Rutu
மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  Poll_c10மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  Poll_m10மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 22, 2016 12:08 pm

காசிக்கு சமமான ஆறு தலங்களுள் ஒன்று, என்ற சிறப்பினைப் பெற்றதாக திருவிடைமருதூர் ஆலயம் விளங்குகிறது. இந்தத் திருக்கோவில் திருவாவடுதுறை ஆதீனத்தின் கீழ் இயங்குகிறது.

மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்
மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  201606210834239163_thiruvidaimarudur-mahalingaswamy-temple_SECVPF

சோழநாட்டையே ஒரு சிவாலயமாகக் கருதினால் அதில் மூலவர் சிவபெருமான் வீற்றிருக்கும் ஊர் திருவிடைமருதூர். திருவலஞ்சுழி – விநாயகர் சுவாமிமலை – முருகன், பட்டீசுரம் – துர்க்கை, ஆலங்குடி – தட்சிணாமூர்த்தி போன்றவை பரிவார தெய்வங்களின் கோவில்களாகும். திரு விடைமருதூரில் இருக்கும் சுவாமிதான் பெரியவர். அதனால் மகாலிங்கம் என்று பெருமைப் படுத்தப்படு கிறார்.

மருதவனம் :

காவிரியின் தென்கரையில் மருத மரங்கள் நிறைந்த வனத்தில் இந்தத் திருக்கோவில் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. ஏழு கோபுரங்களையும்,ஏழு பிரகாரங்களையும் கொண்டு ஓங்கி உயர்ந்தும், பரந்து விரிந்தும் காணப்படுகிறது. இத்தலத்தில் உள்ள இறைவன் மகாலிங்க சுவாமி, தல விருட்சமான மருத மரத்தின் பெயராலேயே மருதவாணர் என்றும், மருதீசர் என்றும் போற்றப்படுகிறார்.

காசிக்கு சமமான ஆறு தலங்களுள் ஒன்று, என்ற சிறப்பினைப் பெற்றதாக திருவிடைமருதூர் ஆலயம் விளங்குகிறது. இந்தத் திருக்கோவில் திருவாவடுதுறை ஆதீனத்தின் கீழ் இயங்குகிறது.

சைவ சமயக் குரவர்களான திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரின் தேவாரப் பாடல்கள் தாலாட்டும் தலம் இதுவாகும்.

பிரம்மஹத்தி தோஷம் :

வரகுண பாண்டியன் என்ற மன்னன் காட்டில் வேட்டையாட சென்று திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது அவன் வந்த குதிரை, வழியில் ஓர் அந்தணனை மிதித்துக் கொன்று விட்டது. அதனால் பாண்டிய மன்னனுக்கு பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதன் காரணமாக அவன் அநேக நேரங்களில் மனநிலை மாறி, தன் நிலை இழந்து திரிந்தான். இதை யடுத்து அந்த மன்னன் தனது குல தெய்வமான மதுரை சோமசுந்தரப் பெருமானை வணங்கி முறையிட்டான். அப்போது ஒலித்த அசரீரி, திருவிடைமருதூர் சென்று அங்குள்ள ஈசனை வழிபட்டால் நல்லது நடக்கும் என்று கூறியது.

இதையடுத்து வரகுண பாண்டிய மன்னன் திரு விடைமருதூர் திருத்தலம் வந்தான். மகாலிங்க சுவாமியை வணங்குவதற்காக பாண்டியன் ஆலயத்துக்குள் பிரவேசித்தபோது, அவனைப் பற்றிக்கொண்டிருந்த பிரம்மஹத்தி, சக்தி மிக்க ஈசனின் முன் செல்ல அஞ்சிக் கொண்டு மன்னனை விட்டு வெளி வாசலிலேயே ஒதுங்கி நின்றது. வழிபாடு முடித்து மன்னன் திரும்பி வரும்போது, மீண்டும் அவனைப் பிடித்துக் கொள்ள எண்ணிய பிரம்மஹத்தி அங்கேயே காத்திருந்தது.

கோவில் ஆலயத்தின் வாசலில், தலையை சாய்த்தபடி குத்துக்காலிட்டு உட்கார்ந்த நிலையில் இருக்கும் கற்சிலை ஒன்று காணப்படுகிறது. அதைத்தான் பிரம்மஹத்தி என வர்ணிக்கிறார்கள்.

வரகுண பாண்டியன் மகாலிங்கத்தின் முன் நின்று மனம் உருகி வழிபட்டபோது, பஞ்சபூதங்களின் வடிவான பரமேஸ்வரனின் பேரருளால் பூரண குணமடைந்து தெளிவு பெற்றான். பிறகு இறைவனின் உத்தரவுப்படி, வந்தவழியே மீளாமல் வேறு வழியே வெளியே சென்று விட்டான்.

மனநோய்க்கு மருந்து :

இன்றும் மனநிலை சரியில்லாதவர்களை அழைத்து வந்து மகாலிங்கத்தின் முன் நிறுத்தி நம்பிக்கையுடன் தரிசனம் செய்பவர்கள் ஏராளம். முன்பெல்லாம் சித்தப் பிரமை பிடித்தவர்களை இவ்வூரில் ஒரு மண்டலம், அல்லது அரை மண்டலம் தங்க வைத்து கிழக்கே உள்ள காருண்யாமிர்த தீர்த்தக் குளத்தில் நீராடச் செய்து, சுவாமி முன் நிறுத்தி காலை, மாலை இருவேளையும் வழிபடச் செய்வார்கள்.

தற்போது இந்த ஆலயத்தில் தோஷ பரிகாரம் செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்டவர்களை கோவிலுக்கு அழைத்து வந்து தீர்த்தமாட வைத்து, சுவாமி சன்னிதியில் தெற்கு உட் பிரகாரத்தில் இருக்கும் ஆண்ட விநாயகரை மும்முறை சுற்றிவந்து அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு மூலவர் மகாலிங்கப் பெருமான் முன் நின்று இறைவனின் அருட்பார்வை கிடைக்குமாறு அர்ச்சித்து, பிரகாரம் வலம் வந்து வழிபட வேண்டும். தொடர்ந்து பெருநலமுலையம்மை சன்னிதி வந்து பிரார்த்தித்து விட்டு, அடுத்ததாக மூகாம்பிகை சன்னிதி வந்து, மூகாசுரனை அழித்து சர்வ சக்தி வடிவாக வீற்றிருக்கும் அம்பிகையின் அனுக்கிரகத்தைப் பெற வேண்டும். பின்னர் பிரகாரத்தில் உள்ள மகாமேருவை தரிசித்து, அசுவமேதயாகப் பிரகாரம் என்னும் வெளி சுற்றில் சிவமந்திரத்தை உச்சரித்தவாறு வலம் வர வேண்டும். தொடர்ந்து ஆடவல்லான் மண்டபத்தில் 27 லிங்கங்களில், அவரவர்க்குரிய நட்சத்திர லிங்கத்துக்கு அர்ச்சனை செய் கிறார்கள்.

எப்படி இருப்பினும் மகாலிங்கப் பெருமானின் திருமுன் நின்றாலே, அவரே மருத்துவராகி மனநிலையைச் சீராக்கி விடுவார் என்பது பக்தர் களின் அசைக்க முடியாத நம்பிக்கைஆகும்.

பழிபாவம் நீக்கும் பரமன் :

திருமணத் தடை உள்ளவர்கள், இறந்த முன்னோர்களை மறந்து பிதுர் தோஷம் உள்ளவர்கள், புத்திரப் பேறு இல்லாதவர்கள் இத்தலம் வந்து பரிகாரம் செய்தாலே பாவங்கள் விலகிவிடும் என்று வரலாற்றுக் கதைகள் சொல்கின்றன. மோட்ச தீபம் ஏற்றி வைத்து, முக்கண்ணனின் பேரருளைப் பெறுவோரும் உண்டு.

“பழிபாவங்கள் நீங்க மருதீசர் பெயரைச் சொல்ல வேண்டும் என்ற பட்டினத்தாரின் பாட்டு இதோ.

வழிபிழைத்து நாமெல்லாம் வந்தவா செய்து

பழிபிழைத்த பாவங்கள் எல்லாம் – பொழில்சூழ்

மருதிடத்தான் என்றுஒருகால் வாயாரச் சொன்னால்

கருதிடத்தான் நில்லா கரந்து”.

இந்த ஆலயத்தில் தான் மன்னனாக இருந்து துறவியான பத்திரகிரியார், சிவ ஜோதியில் கலந்தார் என்று தல புராணம் எடுத்துரைக்கிறது. பட்டினத்து அடிகள் பேய்க் கரும்பினைப் பெற்ற தலம் இது. மார்க்கண்டேயர், அர்த்த நாரீசுவராக சிவனின் அருட்காட்சி கண்ட தலமும் இதுவே.

ஆலய அமைப்பு :

கிழக்கு கோபுரத்திலிருந்து உள் நுழையும் போது படித்துறை விநாயகர், காவிரியை நினைவு கூறுகிறார். அதை அடுத்து சுதையால் ஆன மிகப் பெரிய வெள்ளை நிற தேவேந்திர நந்தி அமர்ந்த நிலையில் இருக்கிறது. வலது புறமுள்ள ஆடவல்லான் மண்டபத்தில் இருபத்தேழு நட்சத்திரங்களுக்கும் உரிய சிவலிங்கங்கள் இருக்கின்றன. இங்கு நட்சத்திர தோஷம் உள்ளவர்கள், தங்கள் நட்சத்திரங்களுக்குரிய பரிகாரம் செய்கிறார்கள்.

தெற்கில் உள்ள சித்திரப் பிரகாரம் என்பது சுதைச் சிற்பங்களாலும், ஓவிய வடிவங்களாலும் நிறைந்து நம் கண்கள் மகிழ கலைக் கூடமாகக் காட்சி தருகிறது.

வடக்கில் உள்ள பிரணவப் பரிகாரத்தில் நாயக்கர் கால கட்டிடக்கலையின் படி தேர் வடிவில் சன்னிதி அமைக்கப்பட்டு அதில் வேம்படி முருகன் ஆட்சி செய்கிறார். எதிரே வேல் மண்டபமும், பிறகு காசிபரும், அவர் விரும்பியபடி கண்ணனாகக் காட்சி தரும் சிவனும் தலவிருட்சமான மருத மர நிழலில் இளைப்பாறுகிறார்கள். அங்கே சிங்கமுகத் தீர்த்தக் கிணறு ஒன்றும் இருக்கிறது.

மூகாம்பிகை :

சுவாமிக்கு வலதுபுறம் தல நாயகியாக தனிச் சன்னிதியில் கிழக்கு நோக்கி நின்றருளும் ‘பெருநலமுலை அம்மை’ காட்சி தருகிறார். அவருக்கு பின்னே பிரகாரத்தில் இருக்கும் அன்பிற் பிரியாள் அம்மையும், அம்பாள் சன்னிதிக்கு அருகே மூகாம்பிகை அம்மன் வடதிசை நோக்கி அமர்ந்த கோலத்தில் இருப்பது பெரும் சிறப்பு. கர்நாடகாவில் உள்ள கொல்லூருக்கு அடுத்தபடியாக மூகாம்பிகை இத்தலத்தில் பூஜிக்கப்படுகிறார். பக்கத்தில் மகாசக்கரமேரு உள்ளது.

அமைவிடம் :

கும்பகோணம் நகரில் இருந்து 10 கிலோமீட்டர் கிழக்கில், மயிலாடுதுறை மார்க்கத்தில் இருக்கிறது மத்தியார்ஜீனம் (அர்ஜீனம் – மருதமரம்) எனப்படும் திருவிடைமருதூர். ஆந்திர ஸ்ரீசைலம் – தலைமருது, நெல்லை திருப்புடை மருதூர் – கடைமருது. இவை இரண்டுக்கும் இடையே உள்ளதால் இந்தத்தலம் திருஇடைமருதூர் என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் திருவிடைமருதூர் என்றானதாக கூறுகிறார்கள்.
-maalaimalar

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 22, 2016 1:44 pm

சோழர் காலத்தில் தான் எத்தனை எத்தனை கோவில்கள்.. இன்று பல கோவில்கள் சேதமடைந்து விட்டது மிகுந்த வருத்தம் அளிக்கிறது!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 22, 2016 2:16 pm

சரவணன் wrote:சோழர் காலத்தில் தான் எத்தனை எத்தனை கோவில்கள்.. இன்று பல கோவில்கள் சேதமடைந்து விட்டது மிகுந்த வருத்தம் அளிக்கிறது!


நம் (பழைய ஒருங்கிணைந்த தஞ்சை) மாவட்டமே ஒரு பெரிய சிவன் கோவில் என்று சொல்லுவார்கள் , அதில் மூலவர் தான் மஹாலிங்கம். அற்புதமான கோவில் இது.

காருண்யாமிர்த தீர்த்தக் குளத்தில் நீராடி மனமுருகி மகாலிங்கத்தை வேண்டினால் மறுபிறவி எடுக்காமலேயே நம் பாவங்கள் அகலும் இது என் வரைக்கும் நான் கண்ட உண்மை.






சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 22, 2016 3:36 pm

இங்கேயும் ஒரு எட்டு போயிட்டு வரணும் .......... அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 22, 2016 3:45 pm

சரவணன் wrote:இங்கேயும் ஒரு எட்டு போயிட்டு வரணும் .......... அய்யோ, நான் இல்லை
அவசியம் போயிட்டு வா சரவணா , இங்கு மூகாம்பிகை அம்மனுக்கும் தனி சன்னதி உண்டு

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jun 22, 2016 4:26 pm

காசிக்கு சமமான ஆறு தலங்களுள் ஒன்று, என்ற சிறப்பினைப் பெற்றதாக திருவிடைமருதூர் ஆலயம் விளங்குகிறது. இந்தத் திருக்கோவில் திருவாவடுதுறை ஆதீனத்தின் கீழ் இயங்குகிறது.

மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்
ராஜா wrote:காசிக்கு சமமான ஆறு தலங்களுள் ஒன்று, என்ற சிறப்பினைப் பெற்றதாக திருவிடைமருதூர் ஆலயம் விளங்குகிறது. இந்தத் திருக்கோவில் திருவாவடுதுறை ஆதீனத்தின் கீழ் இயங்குகிறது.

மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்
மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  201606210834239163_thiruvidaimarudur-mahalingaswamy-temple_SECVPF

சோழநாட்டையே ஒரு சிவாலயமாகக் கருதினால் அதில் மூலவர் சிவபெருமான் வீற்றிருக்கும் ஊர் திருவிடைமருதூர். திருவலஞ்சுழி – விநாயகர் சுவாமிமலை – முருகன், பட்டீசுரம் – துர்க்கை, ஆலங்குடி – தட்சிணாமூர்த்தி போன்றவை பரிவார தெய்வங்களின் கோவில்களாகும். திரு விடைமருதூரில் இருக்கும் சுவாமிதான் பெரியவர். அதனால் மகாலிங்கம் என்று பெருமைப் படுத்தப்படு கிறார்.

மருதவனம் :

காவிரியின் தென்கரையில் மருத மரங்கள் நிறைந்த வனத்தில் இந்தத் திருக்கோவில் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. ஏழு கோபுரங்களையும்,ஏழு பிரகாரங்களையும் கொண்டு ஓங்கி உயர்ந்தும், பரந்து விரிந்தும் காணப்படுகிறது. இத்தலத்தில் உள்ள இறைவன் மகாலிங்க சுவாமி, தல விருட்சமான மருத மரத்தின் பெயராலேயே மருதவாணர் என்றும், மருதீசர் என்றும் போற்றப்படுகிறார்.

காசிக்கு சமமான ஆறு தலங்களுள் ஒன்று, என்ற சிறப்பினைப் பெற்றதாக திருவிடைமருதூர் ஆலயம் விளங்குகிறது. இந்தத் திருக்கோவில் திருவாவடுதுறை ஆதீனத்தின் கீழ் இயங்குகிறது.

சைவ சமயக் குரவர்களான திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரின் தேவாரப் பாடல்கள் தாலாட்டும் தலம் இதுவாகும்.

பிரம்மஹத்தி தோஷம் :

வரகுண பாண்டியன் என்ற மன்னன் காட்டில் வேட்டையாட சென்று திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது அவன் வந்த குதிரை, வழியில் ஓர் அந்தணனை மிதித்துக் கொன்று விட்டது. அதனால் பாண்டிய மன்னனுக்கு பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதன் காரணமாக அவன் அநேக நேரங்களில் மனநிலை மாறி, தன் நிலை இழந்து திரிந்தான். இதை யடுத்து அந்த மன்னன் தனது குல தெய்வமான மதுரை சோமசுந்தரப் பெருமானை வணங்கி முறையிட்டான். அப்போது ஒலித்த அசரீரி, திருவிடைமருதூர் சென்று அங்குள்ள ஈசனை வழிபட்டால் நல்லது நடக்கும் என்று கூறியது.

இதையடுத்து வரகுண பாண்டிய மன்னன் திரு விடைமருதூர் திருத்தலம் வந்தான். மகாலிங்க சுவாமியை வணங்குவதற்காக பாண்டியன் ஆலயத்துக்குள் பிரவேசித்தபோது, அவனைப் பற்றிக்கொண்டிருந்த பிரம்மஹத்தி, சக்தி மிக்க ஈசனின் முன் செல்ல அஞ்சிக் கொண்டு மன்னனை விட்டு வெளி வாசலிலேயே ஒதுங்கி நின்றது. வழிபாடு முடித்து மன்னன் திரும்பி வரும்போது, மீண்டும் அவனைப் பிடித்துக் கொள்ள எண்ணிய பிரம்மஹத்தி அங்கேயே காத்திருந்தது.

கோவில் ஆலயத்தின் வாசலில், தலையை சாய்த்தபடி குத்துக்காலிட்டு உட்கார்ந்த நிலையில் இருக்கும் கற்சிலை ஒன்று காணப்படுகிறது. அதைத்தான் பிரம்மஹத்தி என வர்ணிக்கிறார்கள்.

வரகுண பாண்டியன் மகாலிங்கத்தின் முன் நின்று மனம் உருகி வழிபட்டபோது, பஞ்சபூதங்களின் வடிவான பரமேஸ்வரனின் பேரருளால் பூரண குணமடைந்து தெளிவு பெற்றான். பிறகு இறைவனின் உத்தரவுப்படி, வந்தவழியே மீளாமல் வேறு வழியே வெளியே சென்று விட்டான்.

மனநோய்க்கு மருந்து :

இன்றும் மனநிலை சரியில்லாதவர்களை அழைத்து வந்து மகாலிங்கத்தின் முன் நிறுத்தி நம்பிக்கையுடன் தரிசனம் செய்பவர்கள் ஏராளம். முன்பெல்லாம் சித்தப் பிரமை பிடித்தவர்களை இவ்வூரில் ஒரு மண்டலம், அல்லது அரை மண்டலம் தங்க வைத்து கிழக்கே உள்ள காருண்யாமிர்த தீர்த்தக் குளத்தில் நீராடச் செய்து, சுவாமி முன் நிறுத்தி காலை, மாலை இருவேளையும் வழிபடச் செய்வார்கள்.

தற்போது இந்த ஆலயத்தில் தோஷ பரிகாரம் செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்டவர்களை கோவிலுக்கு அழைத்து வந்து தீர்த்தமாட வைத்து, சுவாமி சன்னிதியில் தெற்கு உட் பிரகாரத்தில் இருக்கும் ஆண்ட விநாயகரை மும்முறை சுற்றிவந்து அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு மூலவர் மகாலிங்கப் பெருமான் முன் நின்று இறைவனின் அருட்பார்வை கிடைக்குமாறு அர்ச்சித்து, பிரகாரம் வலம் வந்து வழிபட வேண்டும். தொடர்ந்து பெருநலமுலையம்மை சன்னிதி வந்து பிரார்த்தித்து விட்டு, அடுத்ததாக மூகாம்பிகை சன்னிதி வந்து, மூகாசுரனை அழித்து சர்வ சக்தி வடிவாக வீற்றிருக்கும் அம்பிகையின் அனுக்கிரகத்தைப் பெற வேண்டும். பின்னர் பிரகாரத்தில் உள்ள மகாமேருவை தரிசித்து, அசுவமேதயாகப் பிரகாரம் என்னும் வெளி சுற்றில் சிவமந்திரத்தை உச்சரித்தவாறு வலம் வர வேண்டும். தொடர்ந்து ஆடவல்லான் மண்டபத்தில் 27 லிங்கங்களில், அவரவர்க்குரிய நட்சத்திர லிங்கத்துக்கு அர்ச்சனை செய் கிறார்கள்.

எப்படி இருப்பினும் மகாலிங்கப் பெருமானின் திருமுன் நின்றாலே, அவரே மருத்துவராகி மனநிலையைச் சீராக்கி விடுவார் என்பது பக்தர் களின் அசைக்க முடியாத நம்பிக்கைஆகும்.

பழிபாவம் நீக்கும் பரமன் :

திருமணத் தடை உள்ளவர்கள், இறந்த முன்னோர்களை மறந்து பிதுர் தோஷம் உள்ளவர்கள், புத்திரப் பேறு இல்லாதவர்கள் இத்தலம் வந்து பரிகாரம் செய்தாலே பாவங்கள் விலகிவிடும் என்று வரலாற்றுக் கதைகள் சொல்கின்றன. மோட்ச தீபம் ஏற்றி வைத்து, முக்கண்ணனின் பேரருளைப் பெறுவோரும் உண்டு.

“பழிபாவங்கள் நீங்க மருதீசர் பெயரைச் சொல்ல வேண்டும் என்ற பட்டினத்தாரின் பாட்டு இதோ.

வழிபிழைத்து நாமெல்லாம் வந்தவா செய்து

பழிபிழைத்த பாவங்கள் எல்லாம் – பொழில்சூழ்

மருதிடத்தான் என்றுஒருகால் வாயாரச் சொன்னால்

கருதிடத்தான் நில்லா கரந்து”.

இந்த ஆலயத்தில் தான் மன்னனாக இருந்து துறவியான பத்திரகிரியார், சிவ ஜோதியில் கலந்தார் என்று தல புராணம் எடுத்துரைக்கிறது. பட்டினத்து அடிகள் பேய்க் கரும்பினைப் பெற்ற தலம் இது. மார்க்கண்டேயர், அர்த்த நாரீசுவராக சிவனின் அருட்காட்சி கண்ட தலமும் இதுவே.

ஆலய அமைப்பு :

கிழக்கு கோபுரத்திலிருந்து உள் நுழையும் போது படித்துறை விநாயகர், காவிரியை நினைவு கூறுகிறார். அதை அடுத்து சுதையால் ஆன மிகப் பெரிய வெள்ளை நிற தேவேந்திர நந்தி அமர்ந்த நிலையில் இருக்கிறது. வலது புறமுள்ள ஆடவல்லான் மண்டபத்தில் இருபத்தேழு நட்சத்திரங்களுக்கும் உரிய சிவலிங்கங்கள் இருக்கின்றன. இங்கு நட்சத்திர தோஷம் உள்ளவர்கள், தங்கள் நட்சத்திரங்களுக்குரிய பரிகாரம் செய்கிறார்கள்.

தெற்கில் உள்ள சித்திரப் பிரகாரம் என்பது சுதைச் சிற்பங்களாலும், ஓவிய வடிவங்களாலும் நிறைந்து நம் கண்கள் மகிழ கலைக் கூடமாகக் காட்சி தருகிறது.

வடக்கில் உள்ள பிரணவப் பரிகாரத்தில் நாயக்கர் கால கட்டிடக்கலையின் படி தேர் வடிவில் சன்னிதி அமைக்கப்பட்டு அதில் வேம்படி முருகன் ஆட்சி செய்கிறார். எதிரே வேல் மண்டபமும், பிறகு காசிபரும், அவர் விரும்பியபடி கண்ணனாகக் காட்சி தரும் சிவனும் தலவிருட்சமான மருத மர நிழலில் இளைப்பாறுகிறார்கள். அங்கே சிங்கமுகத் தீர்த்தக் கிணறு ஒன்றும் இருக்கிறது.

மூகாம்பிகை :

சுவாமிக்கு வலதுபுறம் தல நாயகியாக தனிச் சன்னிதியில் கிழக்கு நோக்கி நின்றருளும் ‘பெருநலமுலை அம்மை’ காட்சி தருகிறார். அவருக்கு பின்னே பிரகாரத்தில் இருக்கும் அன்பிற் பிரியாள் அம்மையும், அம்பாள் சன்னிதிக்கு அருகே மூகாம்பிகை அம்மன் வடதிசை நோக்கி அமர்ந்த கோலத்தில் இருப்பது பெரும் சிறப்பு. கர்நாடகாவில் உள்ள கொல்லூருக்கு அடுத்தபடியாக மூகாம்பிகை இத்தலத்தில் பூஜிக்கப்படுகிறார். பக்கத்தில் மகாசக்கரமேரு உள்ளது.

அமைவிடம் :

கும்பகோணம் நகரில் இருந்து 10 கிலோமீட்டர் கிழக்கில், மயிலாடுதுறை மார்க்கத்தில் இருக்கிறது மத்தியார்ஜீனம் (அர்ஜீனம் – மருதமரம்) எனப்படும் திருவிடைமருதூர். ஆந்திர ஸ்ரீசைலம் – தலைமருது, நெல்லை திருப்புடை மருதூர் – கடைமருது. இவை இரண்டுக்கும் இடையே உள்ளதால் இந்தத்தலம் திருஇடைமருதூர் என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் திருவிடைமருதூர் என்றானதாக கூறுகிறார்கள்.
-maalaimalar
மேற்கோள் செய்த பதிவு: 1212146

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 23, 2016 12:29 am

நல்ல பகிர்வு ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக