புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_c10கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_m10கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_c10கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_m10கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_c10கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_m10கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_c10கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_m10கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_c10கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_m10கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_c10 
1 Post - 1%
Kavithas
கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_c10கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_m10கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_c10 
1 Post - 1%
bala_t
கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_c10கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_m10கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_c10 
1 Post - 1%
prajai
கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_c10கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_m10கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_c10கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_m10கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_c10 
284 Posts - 42%
heezulia
கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_c10கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_m10கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_c10கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_m10கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_c10கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_m10கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_c10கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_m10கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_c10கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_m10கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_c10 
6 Posts - 1%
prajai
கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_c10கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_m10கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_c10கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_m10கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_c10கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_m10கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_c10 
4 Posts - 1%
manikavi
கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_c10கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_m10கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Nov 22, 2015 8:57 pm

நாகைப்பட்டினத்தில் காத்தான்வருணகுலாதித்தன் என்பவர் தர்ம சிந்தையோடு அன்னசத்திரம் ஒன்றை நடத்தி வந்தார். அந்த வழியாய் வந்த காளமேகம் பசி தீர்க்க, மாலை இருட்டும் நேரத்துக்கு அதனுள் ஆர்வத்தோடு நுழைந்தான். சத்திரத்து நிர்வாகி அவனை வரவேற்று உட்கார வைத்தார். "கொஞ்சம் பொறுங்கள், சாப்பாடு தயாரானதும் அழைக்கிறேன்" என்று வாசல் திண்ணையில் அமர வைத்தார். காளமேகமும் தன்னைப் போல் சாப்பாட்டுக்கு வந்திருந்தோருடன் அமர்ந்தான்.

ஆனால் வெகு நேரம் காத்திருந்தும் கூப்பிடுவதாய் இல்லை. காளமேகத்துக்கோ அகோரப்பசி. பொறுமை இழந்து சத்தம் போட்டவனை நிர்வாகி "இதோ ஆயிற்று; கொஞ்சம் பொறுங்கள்" என்று அமைதிப் படுத்தினார். அவருக்கு வந்திருப்பவன் காளமேகம் என்று தெரியாது. நடுநிசியும் ஆயிற்று. சாப்பாடு தாயாராகவில்லை. நாழியாகஆகப் பசி அதிகமாகி கவிஞனுக்குக் கோபம் சீறிக் கொண்டு வந்தது. நிர்வாகியைக் கூப்பிட்டான். அதற்குள் அவரே அவனைச் சாப்பிட அழைத்தார். காளமேகம் "என்னய்யா சத்திரம் நடத்துகிறீர்கள்? சாப்பிட வந்தவன் என்றால் அவ்வளவு இளக்காரமா?" என்று கத்தினான். நிர்வாகி "கொஞ்சம் தாமதம் தான் ஆகிவிட்டது. மன்னிக்கவேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். "கொஞ்சமா? பொழுது விடிந்து விடும் போல இருக்கிறதே!" என்று கோபப் பட்டு ஒரு பாடல் பாடினான்.

கத்துக்கடல் நாகைக்

.....காத்தான் தன் சத்திரத்தில்

அத்தமிக்கும்போதில்

.....அரிசி வரும் - குத்தி

உலையில் இட ஊர் அடங்கும்;

.....ஓரகப்பை அன்னம்

இலையில் இட வெள்ளி எழும்.

ஒலிக்கும் கடல்சூழ்ந்த நாகைப் பட்டினத்துக் 'காத்தான்' என்பவனது சத்திரத்தில் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில்தான் சமைப்பதற்கு அரிசி வந்திறங்கும்; அரிசியைக் களைந்து உலையிலே இடும்போதோ ஊர் அரவம் அடங்கி நள்ளிரவு ஆகிவிடும். சோறு தயாராகி, வந்தவர்க்கு ஒரு அகப்பைச் சோற்றை இலையில் இடும்போது வெள்ளி நட்சத்திரம் தோன்றுகிற விடியற்காலம் தோன்றிவிடும்.

இந்தப் பாடலலைக் கேட்ட நிர்வாகி பயந்துபோய் சத்திரத்து முதலாளி காத்தானிடம் ஓடி அழைத்து வந்தார். காத்தானுக்கு வந்திருப்பது கவி காளமேகம் என்று தெரிந்து விட்டது. காளமேகத்திம் தன்னைப் பொறுத்தருளுமாறு வேண்டினார். "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும்; தயவுசெய்து மாற்றிப் பாட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். அதற்குள் சாப்பிட்டுப் பசி தணிந்த நிலையில் காளமேகம் காத்தானின் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்தான். "மாற்றிப் பாட வேண்டியதில்லை; இதையே பாராட்டாகக் கொள்ளலாம்" என்று சொல்லி அவனே அந்தப் பாடலை மறுபடியும் பாடி வேறு பொருள் சொன்னான்.

'காத்தானது சத்திரத்தில் அத்தமிக்கும் போதில் - அதாவது பஞ்ச காலத்தில் அரிசி மூட்டை மூட்டையாய் வந்திறங்கும். ஊரே அங்கு இடும் உணவை உண்டு பசி அடங்கும். இலையில் விழும் ஒரு அகப்பை அன்னம் வெள்ளி நட்சத்திரம் போலப் பளீரென்று வெண்மையாக இருக்கும்'.

காத்தான் போன்ற சாதாரண மனிதரிடம் என்று இல்லை - கடவுளிடமே இந்தக் கவிதை விளையாட்டை நிகழ்த்தியவன் அவன். ஒருமுறை அவன் திருக்கண்ணபுரம் வழியே போய்க் கொண்டிருந்தான். திடீரென்று கனமழை பிடித்துக் கொண்டது. ஒதுங்க இடம் பார்த்தான். அருகில் பெருமாள் கோயில் தென்பட்டது. மழைக்கு ஒதுங்க அங்கே ஓடியபோது அங்கிருந்த வைணவர்கள் உள்ளே வரக் கூடாது என்று தடுத்தனர். ஏனென்றால் அவன் தீவிர சிவபக்தன். அதோடு வைணவர்களின் எதிரியும் கூட. சிவனைப் பற்றி ஏராளமாகப் பாடி உள்ளானே தவிர பெருமாளைப் பற்றிப் பாட மறுப்பவன். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு வைணவர்கள், "எங்கள் பெருமாளை உன் சிவனை விட உயர்த்திப் பாடினால் உள்ளே விடுவோம்" என்றனர்.

காளமேகம் பார்த்தான். "சரி, உங்கள் பெருமாளைத்தானே உயர்த்திப் பாட வேண்டும்? இதோ..." என்று சொல்லி "கன்னபுர மாலே கடவுளிலும் நீ அதிகம்" என்று முதலடியைப் பாடினான். தடுத்த வைணவர்கள் வெற்றிப் பூரிப்புடன் அவனை உள்ளே விட்டார்கள். மண்டபத்துக்குள் நுழைந்து துணியைப் பிழிந்து துடைத்துக் கொண்டு, "என்ன சொன்னேன்.? என் கடவு¨ளை விட உங்கள் கடவுள் அதிகம் என்றா சொன்னேன்? அடுத்துக் கேளுங்கள்: "கன்னபுர மாலே கடவுளிலும் நீ அதிகம்; உன்னை விட நான் அதிகம்" என்று சொல்லி நிறுத்தினான். வைணவர்கள் திகைத்து "அதெப்படி?" என்றார்கள். "ஓன்று கேள்- உன் பிறப்போ பத்தாம், உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை, என் பிறப்போ எண்ணத் தொளலையாதே" என்று புதிரை விடுவித்தான்.

'சிவன் தன் பக்தர்களை ரட்சிக்க பிறவி ஏதும் எடுத்ததில்லை. ஆனல் பெருமாளோ பத்து அவதாரம் எடுத்தார். அந்த வகையில் சிவனை விடப் பெருமாள் அதிகம். ஆனால் மானிடனான எனக்கு எண்ண முடியாத பிறவிகள். இதில் நான் பெருமாளை விட அதிகம். இல்லையா?' என்று விளக்கம் சொன்னான்.

கன்னபுர மாலே

.....கடவுளிலும் நீ அதிகம்

உன்னை விட நான்

.....அதிகம்- ஒன்று கேள்

உன் பிறப்போ பத்தாம்

.....உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை

என் பிறப்போ

.....எண்ணத் தொலயாதே.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Nov 23, 2015 7:03 am

நன்று



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Fri Aug 19, 2016 11:34 pm

அருமை நல்ல பதிவு .

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 20, 2016 8:13 pm

கவி காளமேகம் பாடிய பாடல்கள் அனைத்தும் வெண்பாவிலேயே அதுவும் நேரிசை வெண்பாவிலேயே உள்ளன. வேறு பாக்களில் உள்ளனவா என்ற விவரம் தெரியவில்லை.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
GunasekarenS
GunasekarenS
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

PostGunasekarenS Sat Aug 20, 2016 8:28 pm

கார்த்திக் செயராம் அவர்களுக்கு மிகுந்த நன்றி.
கவி காளமேகம் போன்ற புலவர்கள் வாழ்ந்த நாடு, நம் நாடு.
செய்யுள் படித்து பொருள் கொள்வது எப்படி என்று விளக்கவும்.
சித்தர்கள் பாடல்கள் பல உண்மை பொருள் தெரியாமல் உள்ளது.
உதவ வேண்டுகிறேன்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 20, 2016 8:58 pm

கவி காளமேகம் பாடல்கள் தோலை உரித்து வாழைப்பழம் உண்பதுபோல , யாருடைய உதவியுமின்றி நாமே எளிதில் புரிந்து கொள்ளலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Aug 21, 2016 7:14 am

தமிழின் "க' என்ற எழுத்து மட்டுமே கொண்ட பாடலை காளமேகத்தைப் பாடச்சொல்ல, காளமேகம் காண்பவர் ஆச்சர்யப்பட, பாடலை அருவியெனக் கொட்டுகிறார்.

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை

கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்

காக்கைக்குக் கைக்கைக்கா கா.

(கூகை - ஆந்தை. காக்கையானது பகலில் கூகையை (ஆந்தையை) வெல்ல முடியும். கூகையானது இரவில் காக்கையை வெல்லமுடியும். கோ எனும் அரசன் பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்கவேண்டும். எதிரியின் பலவீனமறிந்து, கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும் காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசனுக்குக் கூட (கைக்கு ஐக்கு ஆகா) கையாலாகிவிடக்கூடும்).

அதே போல 'த' எனும் எழுத்து மட்டும் கொண்ட பாடலை ஒருவர் பாடச் சொல்கிறார். கார்மேகமானது கொட்டும் மழையைப் போல பாடலைக் கொட்டுகின்றார் காளமேகம்.

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி

துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி

தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த

தெத்தாதோ தித்தித்த தாது?

தத்தி தாவி பூவிலிருக்கும் தாதுவாகிய மகரந்தத் தூளை திண்ணும் வண்டே, ஒரு பூவினுள் உள்ள தாதுவை உண்ட பின் மீண்டும் ஒரு பூவினுக்குள் சென்று தாதெடுத்து உண்ணுகிறாய், உனக்கு (எத்தாது) எந்தப் பூவிலுள்ள தேன் (இனித்தது) தித்தித்தது?) என்னே அழகிய விதத்தில் பாடியுள்ளார்?!


நன்றி நடராஜன் வலை பூ



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக