புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
3 Posts - 3%
prajai
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
2 Posts - 2%
manikavi
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Pampu
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
214 Posts - 42%
heezulia
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
18 Posts - 4%
sugumaran
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
6 Posts - 1%
manikavi
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
4 Posts - 1%
prajai
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோதிடம் என்பது அறிவியலா?-


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 30, 2016 6:21 pm

First topic message reminder :

ஜோதிடம் என்பது அறிவியலா?

ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Hts8kHLQTaw3pQZ5ul3O+thumbnail_shutters_3096189f

ஜோதிடம் என்பதை எந்த அளவிற்கு நம்பலாம்? அதன்படி எல்லாம் சரியாக நடக்கிறதா? இது அறிவியல் பூர்வமானதா என்பது குறித்து பலர் பலவிதமாக சொல்லி வருகிறார்கள். முதலில் ஜோதிடம் என்றால் என்ன என்பது பற்றி கொஞ்சம் தெளிந்து கொள்வோம்.

பண்டைய காலத்தில் மக்கள் இயற்கையைக் கடவுளாக வணங்கி வந்தனர். அதில் மிக முக்கியமாக வானில் வலம் வரும் சூரியன் மற்றும் சந்திரனை கடவுளாக கொண்டு வழிபாடு செய்துவந்தனர். தாம் வழிபடும் சூரியன் மற்றும் சந்திரன் இருவரின் ஒளியை திடீரென்று மங்க செய்யும் சூரிய மற்றும் சந்திர கிரகணங்களை கண்ட முன்னோர்கள். இவ்வாறு நிகழ என்ன காரணம் என ஆராய ஆரம்பித்தனர். இதுவே வானிவியல் ஆராய்ச்சிக்கு வித்திட்டது.

வானவியலே கிரகங்களின் பருமன் முதற்கொண்டு இயக்கத்தையும், பால்வெளியில் இருக்கும் நட்சத்திர கூட்டத்தையும் மற்றும் கிரகங்களின் கட்டமைப்பையும், நிறத்தையும் மேலும் பல முக்கிய பண்புகளை மிக துல்லியமாக அளவிட உதவியது. இப்படியாக வானவியலில் இருந்து அறியப்பட்ட கிரக இயக்கங்கள் பூமியில் இருக்கும் உயிரினங்களை எவ்வாறு பாதிக்கும் என்ற ஆராய்ச்சி தொடங்கப்பட்டது அதன் பெயரே ஜோதிஷம் எனும் ஜோதிடம்.

ஜோதிஷம் என்னும் சமஸ்கிருத வார்த்தையின் பொருள் கிரகங்கள் பிரதிபலிக்கும் ஒளி மூலம் மனித வாழ்வியலை ஆராய்ந்து அறிவது என்பதாகும். மனித வாழ்வியலின் வழிகாட்டி என்பதாலேயே ஜோதிடம் 'வேதத்தின் கண்' என்று அழைக்கப்படுகிறது.

சூரியன் மற்றும் சந்திரன் நகர்வுகளை கண்ணால் கண்டு ஆராய்ச்சி செய்து, கிரகங்களின் இயக்கம் நட்சத்திரங்கள் கொண்டு அளவிடப்பட்டு பஞ்சாங்கம் உருவாக்கப்பட்டது. பஞ்சாங்கம் என்பது வாரம், திதி, கரணம், நட்சத்திரம் மற்றும் யோகம் என்ற ஐந்து காரணிகள் ஆகும்.

புவி மைய கொள்கையை (Geo-Centric) அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது ஜோதிடக் கலையாகும். அதாவது பூமியை மையமாக வைத்து அதனைச் சுற்றி இருக்கும் கிரகங்களின் இயக்கம் எவ்வாறு உயிரினங்களின் இயக்கத்தையும் வாழ்வியலையும் பாதிக்கிறது என்பதை கூறுவதே இக்கலையின் நோக்கமாகும்.

கிரகமும் ராசியும்

கிரகம் என்ற சமஸ்கிருத வார்த்தையின் பொருள் பற்றுதல் அல்லது பற்றி இழுத்தல் என்பதாகும். பிரபஞ்சத்தில் பல நட்சத்திர கூட்டங்கள் இருந்தாலும், சூரியன் எனும் நட்சத்திரம் மட்டுமே நமது பூமியின் இயக்கத்தையும் மற்றம் ஒன்பது கிரகங்களையும் பெருமளவில் பாதிக்கிறது. அது போலவே நமது பூமியின் துணைக் கோளான சந்திரனின் இயக்கம் பூமியை மிக அதிக அளவில் பாதிப்பதால்தான் பூமியை சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவரும் சந்திரன் முக்கிய கிரகமாக எடுத்து கொள்ளப்பட்டு இருக்கிறது.

நமது பூமி 23°1/2 பாகை சாய்ந்து, தன்னை தானே சுற்றி கொண்டு சூரியனை சுற்றி கொண்டு இருக்கிறது என்பதை வானியல் கணிதம் மூலம் உணர்ந்தனர். இந்த பூமியின் சுழற்சி மூலம் தட்பவெப்பநிலை மாற்றங்கள் உண்டாவதையும் உணர்ந்தனர். இத்தகைய புவியின் இயக்கம் சூரியனின் ஈர்ப்பு விசையாலும் மேலும் அதை சுற்றி இருக்கும் கோள்களின் பாதிப்பாலும் ஏற்படுகிறது.

தட்ப வெப்ப நிலை மாற்றங்கள் என்பவை நீர் நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களில் மூலமே பூமியில் நிகழ்கிறது. இந்த பஞ்சபூதங்கள் மூலமே கிரகங்கள் மனிதர்களை இயங்குகின்றன. இரவு பகலாக கண்விழித்து பூமி சுற்றி வரும் பாதையில் இருக்கும் நட்சத்திர கூட்டங்களைக் கூறுகளாக்கி ராசி என்று பெயர் வைத்தனர்.மேலும் ராசிகளின் வடிவமைப்பைக் கொண்டு அதற்கு தகுந்த பெயரிட்டனர்.

ஜோதிடம் ஒரு அறிவியலா?

இவ்வாறாக வானவியலில் இருந்து ஜோதிடம் தோன்றியது. கிரக இயக்கங்களைப் பஞ்சாங்கம் கொண்டு கணித்து, மேலும் பல கணித சூத்திரங்கள் கொண்டு மனித வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளை சொல்வதால் ஜோதிடம் ஒரு அறிவியலே என்று கூறுகிறார்கள்.

இது எந்த அளவுக்கு உண்மை? மேலும் ஆராய்வோம்.

நன்றி மணிகண்டன் பாரதிதாசன் தமிழ் ஹிந்து    

தொடரும்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 22, 2017 4:03 am

ஜோதிடம் என்பது அறிவியலா?- 12: இயற்பியலில் ஜோதிடம்

பூமி சூரியனை சுற்றி வரும் வட்டப்பாதையும், நிலவு பூமியை சூற்றி வரும் வட்டப்பாதையும் ஒன்றை ஒன்று இரு இடங்களில் வெட்டி கொள்ளும், அதில் உள் வெட்டு பகுதி 'ராகு' எனவும். வெளி வெட்டு பகுதி 'கேது' எனவும் அறியப்படுகிறது. ஜோதிடத்தில் ராகு என்பது பாம்பின் தலையாகவும், கேது என்பது பாம்பின் வாலாகவும் உருவாக படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் ராகு மற்றும் கேது என்பவை முறையே வடதுருவம், தென் துருவம் எனவும் கூறப்படுகிறது. எனவே இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரெதிர் பண்புகள் கொண்டவை என்பது புலனாகிறது.
ஜோதிடத்தில் கேதுவின் காரகத்துவம் சுருக்குபவர், கடை தருபவர் எனவும், ராகுவின் காரகத்துவம் பெருக்குபவர் அல்லது விரிவு படுத்துபவர் எனவும் கூறப்பட்டு இருக்கிறது. இதுவே இயற்பியலில் லென்ஸ் எனும் அடிகளின் மூலம் கொண்டு விளக்கலாம்
குவி ஆடி (கேது) - CONVEX LENS
ஒளியை ஓரிடத்தில் குவித்து நமது கவனத்திற்கு வழிவகை செய்யும் ஒரு சாதனம் குவி ஆடி எனும் குவி லென்ஸ். இதுவும் ஒரு கேதுவின் காரகத்துவமே ஆகும். சந்திரன் எனும் மனதினை ஓரிடத்தில் குவித்து தியானம் செய்ய உதவி செய்வது, ஆன்மீக சாதனைகளை செய்ய உதவுவது சந்திரன் + கேது.
குழி ஆடி (ராகு) - CONCAVE LENS
ஒளியை ஓரிடத்தில் குவிக்காது அதனை பெருக்கி பெரிதாக காட்டும் குழி ஆடி அல்லது குழி லென்ஸ் ஒரு ராகுவின் காரகத்துவமே ஆகும். இது உருப்பெருக்கியாகவும் உபயோகப்படுகிறது. சந்திரன் எனும் மனதினை ஓரிடத்தில் குவிக்காது, எதையும் பெரிதுபடுத்தி மனதை அலைபாயவைத்து மோகம், துரோகம், வஞ்சம், ஏமாற்றுதல் என்று பல தீய செயல்களில் மனிதனை புகுத்துவது சந்திரன் + ராகு.
கேது ஒளி குவிப்பு திறன் தந்தாலும் அது ஒரு அசுப கிரகம் என்பதால், கிட்ட பார்வை தன்மையை தந்துவிடுகிறது.
அது போல ராகு தூர பார்வை தன்மையை தந்துவிடுகிறது.
சந்திரன் அல்லது சூரியனுடன் ராகு சேர்ந்தால் தூர பார்வை நோயும் கேது சேர்ந்தால் கிட்ட பார்வை நோயும் ஏற்படுகிறது.

நன்றி தி ஹிந்து

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 07, 2017 9:55 pm

தமிழர் கண்ட வான அறிவியலை ப் பலன் சொல்லிச் சொல்லியே நம் சோதிடர்கள் கெடுத்தார்கள் என்று நான் எனது பல நூற்களில் எழுதியுள்ளேன் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 08, 2017 6:22 pm

Dr.S.Soundarapandian wrote:தமிழர் கண்ட வான அறிவியலை ப் பலன் சொல்லிச் சொல்லியே நம் சோதிடர்கள் கெடுத்தார்கள் என்று நான் எனது பல நூற்களில் எழுதியுள்ளேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1241431

ஜோதிடமும் வானியலும் ஒன்றுக்கொன்று இணைந்ததுதானே அய்யா.
ஜாதகம் கணிப்பதே ,பிறந்த நேரத்தின் கிரக அமைப்புகளைதானே காட்டுகிறது.
அந்த அமைப்புகளை மூலமாக வைத்துக்கொண்டு,தர்போதைய கிரக அமர்வுகளை
ஆராய்ந்துதானே பலன்கள் கூறப்படுகிறது.
ஏமாற்றும் சில புல்லுருவிகள் ஜோதிடத்தை வியாபாரமாக்கி.சந்தைப்
பொருளாக்கிவிட்டனர் என்பதே எந்தன் தாழ்ந்த அபிப்ராயம்.

ரமணியன் புன்னகை புன்னகை



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 04, 2017 9:55 pm

ஜோதிடம் என்பது அறிவியலா?- 13: எட்டு போடும் சூரியன்
 சூரியனின் ஒளி பூமியை அடைய கிட்டத்தட்ட 7 நிமிடங்கள் ஆகிறது. இயற்கையில் சூரியன் ஒரு நட்சத்திரமாக இருந்தாலும் ஜோதிடத்தில் சூரியன் கிரகமாவே பார்க்கப்படுகிறார். பூமியில் இருந்து பார்க்கும் போது சூரியன் நகர்வது போல் தெரிந்தாலும் மேலும் அதன் ஈர்ப்பு விசை தாக்கம் பூமியில் இருப்பதாலும், சூரியன் கிரகமாகவே பார்க்கப்படுகிறது.
சூரியனின் ஒளிபடும் இடங்களை வைத்து, பூமியை மூன்று மாய ரேகைகள் கொண்டு பிரிக்கப்பட்டதாக நாம் அறிவோம். அதற்கு அடிப்படையாக இருந்ததே நமது ஜோதிடம் தான் என்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
எட்டு போடும் சூரியன்
வானத்தில் சூரிய ஒளியானது எந்த பாதையில் பயணம் செய்கிறது என்ற ஆய்வை மேற்கண்ட போது, சூரியன் எட்டு (8) என்ற எண் வடிவிலான பயணத்தை மேற்கொள்கிறது என்ற உண்மை புரிந்தது. படத்தில் இருக்கும் மகரத்தில் இருந்து கடகம் வரை செல்லும் சூரியன், தனது அதிக வெப்பத்தை வெளிபடுத்த தொடங்கும் தருணமே உத்திராயணம் என்று அறியலாம். கடகத்தில் இருந்து மகரம் செல்லும் வரை செல்லும் சூரியன், தனது வெப்பத்தை குறைவாக பூமியின் மீது செலுத்தும் தருணமே தட்சிணாயணம் ஆகும்.
இதில் கடகத்தில் இருந்து மகரம் வரை செல்லும் சூரிய ஒளி பாதை மற்றும் மகரத்தில் இருந்து கடகம் வரை இருக்கும் சூரிய ஒளி பாதை சந்திக்கும் இடமே 'பூமத்திய ரேகை' என்று அழைக்கபடுகிறது. பூமத்திய ரேகை இடத்தில் சூரியன் உச்சமும் மற்றும் நீச்சமும் பெறுவதால், பூமத்திய ரேகை செல்லும் இடங்களில் அளவுக்கு அதிக வெப்பமும், அளவுக்கு அதிக குளிரும் நிலவுகிறது.

ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 CKgnfTSTYjsOu2nyqpVw+df376712-b4d6-45c2_3167378a

நன்கு கவனித்து கொண்டு வந்தால் சூரிய பாதையானது 8 என்ற எண் வடிவில் அமைவதை அறியலாம்.
இந்த சூரிய ஒளி பாதை பயணம் என்பது உலகில் நடக்கும் இயற்கை சீற்றங்களை மற்றும் பருவ மழை பற்றி அறிய உதவும் ஒரு காரணி ஆகும்.
இந்த பயணப் பாதை காண்பதற்கு சிவபெருமான் நெற்றிகண் போன்ற தோற்றம் தரும்.

நன்றி தமிழ் ஹிந்து

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 25, 2017 9:07 pm

ஜோதிடம் என்பது அறிவியலா?- 14: கடக, மகர மற்றும் பூமத்திய ரேகை மூலம் உலக நாடுகளின் ராசிகளை கண்டறிதல்

ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 LbxjzzBhTyuIpwWMNJ7u+1_3175730f



நாம் வாழும் பூமி சூரியனின் ஈர்ப்புவிசையால், நீள் வட்ட பாதையில் சூரியனை சுற்றி வருகிறது. இந்த நிகழ்வு இரவு பகல் மற்றும் பூமியின் தட்பவெப்ப நிலைகளுக்கு காரணமாகிறது.
பூமி சூரியனை மேற்கில் இருந்து கிழக்காக சுற்றி வருகிறது. இதனால் சூரியன் கிழக்கில் இருந்து மேற்காக நகருவது போன்றதோற்றம் உண்டானது.
நம் முன்னோர்கள் சூரியனின் ஒளிபடும் மாதங்களை குறிக்க, சூரியனின் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி நகரும் தன்மைகளை கணித்து சூரியனின் பயணத்தை, 'தட்சினாயணம்' மற்றும் 'உத்திராயணம்' எனப் பிரித்தனர். சூரியன் உச்சம் பெற்று இருக்கும் சித்திரை மாதத்தில் இருந்து கணக்கிட்டனர்.
தட்சினாயணம் (தட்சிணம் + அயணம்) = தட்சிணம் - தெற்கு, அயணம் - பயணம். சூரியன் தெற்கு திசையை தேர்ந்தெடுத்து, கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி செல்லும் பயணம். உத்திராயணம் (உத்திரம் + அயணம்) = உத்திரம் - அடுத்த, அயணம் - பயணம், ஆதாவது தட்சினாயணம் முடிந்து, சூரியன் மேற்கொள்ளும் அடுத்த பயணம் என்பதே இதன் பொருள். உத்திராயணம் என்பது சூரியன் வடக்கு திசையை தேர்ந்தெடுத்து, கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி செல்லும் பயணம். ஜோதிடத்தில் சூரியன் உச்சம் பெற்ற மேஷத்தில் இருந்து, ஒவ்வொரு ராசியாக நகர, அதன் உச்ச பலம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, மிதுனத்தை அடைந்தவுடன், உச்ச பலம் தீர்ந்து ஆட்சி பலம் பெறுகிறார்.
இதில் உச்சம் பெற்ற நிலையை ஆரோகணம் என்றும், அதன் உச்சபலம் குறைந்து வரும் நிலையை அவரோகணம் என்றும் உரைக்கின்றன்ர். இந்த வார்த்தைகள் சங்கீத ஸ்வரங்களிலும் உபயோகப்படுத்தப்படுகிறது என்பது உப சங்கதி.
அதாவது, சித்திரையில் (மேஷம்) இருந்து ஆனி மாதம் (கடகம்) வரை இந்த நிலை கோடைகாலம் ஆகும். இதில் மேஷத்தில் ஆரோகணம், மிதுனத்தில் அவரோகணம். ஆடியில் (கடகம்) இருந்து புரட்டாசி மாதம் (கன்னி) வரை சூரியன் இருக்கும் நிலை இலையுதிர் காலம் ஆகும். இதில் மிதுனத்தில் சூரியன் அவரோகணத்தில் இருந்து மீண்டும் கன்னியில் ஆரோகணம். ஐப்பசி (துலாம்) மாதம் இருந்து மார்கழி தனுசு) வரை சூரியன் இருக்கும் நிலை குளிர்காலம் காலம் ஆகும். இதில் ஐப்பசியில் சூரியன் ஆரோகணத்தில் இருந்து மீண்டும் தனுசில் அவரோகணம் அடைகிறார்.இதுவரை, சூரியன் பயணம் செய்தது தட்சிணாயணம் ஆகும்.
பிறகு, சூரியன் மகரத்தில் இருக்கும் காலம், பொங்கல் என்றும் மகர சங்கராந்தி கொண்டாடப்படும், இளவேனில் காலம் தொடங்குகிறது. சூரியன் தை மாசத்தில் இருந்து (மகரத்தில்) மீனம் செல்லும் வரை இருக்கும் நிலை "இளவேனில்". இள - இதமான வேனில் - தென்றல் தரும் காலம். இங்கே சூரியன் மகரத்தில் அவரோகணம் மீனத்தில் ஆரோகணம். இது போல மகரத்தில் இருந்து மிதுனம் வரை சூரியன் செல்லும் காலம், உத்திராயணம் ஆகும். இங்கே உற்று கவனித்தால், கடகத்தில் தட்சிணாயனம் தொடங்கி, மகரத்தில் உத்திராயணம் ஏற்படுகிறது. அதாவது கடகத்தில் சூரியன் இருக்கும் காலம், பூமி மகரத்திலும், மகரத்தில் சூரியன் இருக்கும் காலம் பூமி கடக ராசியிலும் இருப்பதாக கொள்ளலாம். இங்கே தட்சிணாயனம் இரண்டு பருவ காலங்களையும் (இலையுதிர் காலம், குளிர்காலம்) மற்றும் உத்திராயணம் (இளவேனிற்காலம், கோடைகாலம்).
இவ்வாறு சூரியன் பயணிக்கும் பாதையை வைத்து, சூரிய ஒளி பூமியில் படும் நிலையை கணித்து, கோடைகாலம், இலையுதிர் காலம், குளிர்காலம், இளவேனில் காலம் என முன்னோர்கள் வகுத்தனர்.
பூமி மூன்று மாய கோடுகளால் பிரிக்கப்பட்டுள்ளது. அவை 1. கடக ரேகை 2. பூமத்திய ரேகை 3. மகர ரேகை கடக ரேகை.
கடக ரேகை
பூமியின் தட்சிணாயன பயணம் கொண்டு சூரிய ஒளிபடும் இடங்களில், இலையுர்திர் காலம் மற்றும் குளிர் காலம் சம அளவிலும் கோடைகாலம் மற்றும் இளவேனிற்காலம் குறைவாகவும் இருப்பதை காணலாம்.
மகர ரேகை
மகர ரேகை என்பது பூமியின் உத்திராயண பயணம் கொண்டு சூரிய ஒளிபடும் இடங்களில், இளவேனிற் காலம் மற்றும் கோடை காலம் காலம் சம அளவிலும், இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலம் குறைவாகவும் இருப்பதை காணலாம்.
பூமத்திய ரேகை
மகரம் மற்றும் கடகத்தில் இடைப்பட்ட ராசியான மேஷத்தை அடிப்படையாக எடுத்து, அங்கே சூரியன் உச்சம் பெறுவதை கொண்டு, பூமத்திய ரேகை பகுதியில், சூரியனின் அதீத வெப்பம் படர்வதை காண முடிகிறது. இது கோடை காலம் மற்றும் இளவேனிர்காலத்தின் இடைப்பட்ட பகுதியாக கொண்டு அதிக பாலைவனங்கள் இருப்பதை பார்க்கமுடிகிறது.
இதில் இருந்து பூமியில் வரையப்பட கடக, மகர மற்றும் பூமத்திய ரேகைகள் ஜோதிடத்தை மையமாக கொண்டே வரையப்பட்டன. இந்த ஆய்வை அடிப்படையாக கொண்டு, ஜோதிட காலசக்கரத்தில் நாடுகளை குறிக்கும் ராசிகளை கண்டறியலாம். அதாவது பூமத்திய ரேகை படரும் நாடுகள், மேஷத்தை மையமாகவைத்து, அதன் திரிகோணத்தில் மேஷம், சிம்மம் மற்றும் தனுசு வருபவை நெருப்பு ராசிகள், பூமத்திய ரேகை பகுதி அதிக வெப்பம் கொண்டதால் அவற்றை நெருப்பு ராசி என்பதே சான்று.
அது போல, மகர ரேகை படரும் நாடுகளை, மிதமான வெப்பம் பரவும் ரிஷபம், கன்னி மற்றும் மகரம் கொண்டு வகுக்கலாம்.


ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 EKBTJtnjQ9eWnJ00U5ZD+3_3175728a

அது போல, கடக ரேகை படரும் நாடுகளை, சம அளவு வெப்பம் பரவும் கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் என கொண்டு வகுக்கலாம்.

ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 MDqvzKEETt2WC3SoylTI+2_3175729a

நெருப்பு ராசிகள் - பூமத்திய ரேகை படரும் பாலைவனம், அதிக வெப்பம் தகிக்கும் நாடுகள். பீடபூமிகள்.
நில ராசிகள் - விவசாயம் தழைக்கும் நாடுகள், சதுப்பு நில நாடுகள், அடர்ந்த காடுகளை கொண்ட நாடுகள்.
காற்று ராசி - பனி படர்ந்த சூரிய ஒளி மிகவும் குறைவாக படும் நாடுகள்.
நீர் ராசிகள் - தீவுகள், தீபகற்பம், நீரால் சூழப்பட்ட நாடுகள் என பிரிக்கலாம்.

நன்றி தமிழ் ஹிந்து

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 07, 2017 4:21 am

ஜோதிடம் என்பது அறிவியலா?- 15: கால சர்ப்ப தோஷம்

தோஷம் என்றால் சமஸ்கிருத மொழியில் குறைபாடு அல்லது இழப்பு என்று பெயர். ஆதாவது ஜெனன கால
சக்கரத்தில் அனைத்து கிரகங்களும், ராகு மற்றும் கேது என்ற இரண்டு சர்பங்களின் பிடியில் மாட்டி கொள்வது
கால சர்ப்ப தோஷம் என்று ஜோதிடம் கூறுகிறது. இதன் சூட்சுமம் என்னவென்றால், ராகு மற்றும் கேது என்பது
நம் முன்னோர்கள் வழிவழியாய் தொடர்ந்து செய்து வரும் பாவங்களை குறிக்கும் ஒரு குறியீடு என்பதே.
ராகு என்பது அதிவேகமாக பரவி செல்வது அல்லது கட்டுபாடில்லா வேகம் என்றே சமஸ்கிருதத்தில் பொருள்.
அடக்கமுடியாத போகத்தின் உருவாக வரும் ராகு நம் முன்னோர்களின் ஆதாவது தந்தை வழி தந்தை செய்த
இயற்கைக்கு புறம்பான பாவங்களையும், கேது தாய் வழி முன்னோர்கள் செய்த இயற்கைக்கு புறம்பான
பாவங்களையும் காட்டுகிறது. இதில் இன்னொரு சூட்சுமம், கேது சந்திரனின் பிம்பம் என்பதால், தாய் வழி
பாவத்தை குறிக்கிறார். ராகு சூரியனை பாதிப்பதால், தந்தை வழி முன்னோர்களின் பாவங்கள் என்பதை
அறியலாம்.

தற்கால அறிவியல் படி கூறவேண்டுமென்றால், மனித ஜீனில் அடிப்படைகளாக இருக்கும் 46 குரோமோசோம்கள்
ராகு கேது கலவைகள் ஆகும். குரோமோசோம்கள் என்பவை ஒருவரின் உயரம், தோல், முடி, கண்விழி
ஆகியவற்றின் நிறம், அறிவுத்திறன், பேசும் விதம், முகத்தோற்றம், உடல்பருமன், பரம்பரைவியாதி இது
போன்ற அனைத்து குணங்களும் பதிவாகி உள்ளது.
அதாவது 23 குரோமோசோம்கள் தந்தை வழி குறிப்பவை (ராகு) மற்றும் 23 குரோமோசோம்கள் தாய் வழி குறிப்பவை (கேது). இதில் இருந்து நம் ஜோதிட ரிஷிகள் எந்த அளவு அறிவியல் திறன் பெற்றவர்கள் என அறியலாம். ராகுவும் கேதுவும்
வட மற்றும் தென் துருவங்கள் என்று ஜோதிடம் கூறுகிறது. இரண்டும் ஒன்றுகொன்று எதிரெதிர் குணங்களை
கொண்டவைகள்.
அவ்வாறு இரண்டு வெவ்வேறு குணாதிசயம் பெற்ற இரு உருவமற்ற சாயா கிரகங்களிடையே மாட்டும் மற்ற
கிரகங்களின் நிலைமை நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ராகு கருநாக பாம்பாகவும், கேது
செம்பாம்பாகவும் ஜோதிடம் கூறுகிறது. சுருங்க கூறினால் மனதின் (சந்திரன்) ஆசைகளை களையும் நிழல் கேது.

பரமாத்மாவை (சூரியனை) கெடுக்கும் நிழல் ராகு. இவ்வாறு, மனித உடலில் இருக்கும் ஜீன்களின் நம் பரம்பரை
தன்மை குறிப்பவை ராகு மற்றும் கேது ஆகும். பாவங்களை சுமக்கும் ராகு கேது என்னும் இரு சர்பங்கள் மத்தியில்
மாட்டும் அனைத்து கிரகங்களும் பலம் இழக்கிறது. அதனால், இவ்வளவு பெரிய யோகங்கள் ஜாதகத்தில் இருந்தாலும்
அந்த யோகம் தரும் கிரகங்களின் திசை புத்திகள் ஜாதகரின் வாழ்வில் பெரிய மாற்றத்தை கொடுப்பதில்லை.
தோஷ கால அளவு
=================
ஒரு ராசியில் 1.5 ஆண்டுகள் இருந்து, 12 ராசிகளை கடக்க (12 X 1.5 = 18) அவை 18 ஆண்டுகள். அவ்வாறு ராகு 18
ஆண்டுகள் மற்றும் கேது 18 ஆண்டுகள். ஜாதக கால சக்கரத்தை கடக்க 36 ஆண்டுகள் எடுத்து கொண்டு முழுமையாக
தன் சுற்றை முடித்து தோஷ நிவர்த்தி தருகிறது. 36 ஆண்டுகள் கழித்து, ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை தருகிறது. திருமண தடை, வேலையின்மை, நோய் எதிப்பு சக்தி குறைதல், அதிஷ்டம் இன்மை, குடும்பத்தில் குழப்பம்,
உறவினர்களுடன் ஒற்றுமை இன்மை என பல மன நிமைதியை இழக்கும் நிகழ்வுகளை தருகிறது.
எனவே ஜாதக பலன்களை தகுந்த நேரத்தில் தாராமல், சர்ப்பம் என்னும் ராகு கேதுக்களால் காலம் தாழ்த்தி தரபடுவதால்,
இது கால சர்ப்ப தோஷம் என்று பெயர் பெற்றது. ஆதாவது முன்னோர்கள் செய்த பாவங்களை ராகு என்னும் பாம்பின்
வாயின் பிடியில் சிக்கி வேதனை பட்டு 36 ஆண்டுகள் கழித்து, கேது என்னும் பாம்பின் பல அனுபவங்கள் பெற்று வால்
பகுதியில் தோஷ நிவர்த்தி கிடைக்கிறது.

நன்றி தி ஹிந்து

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 07, 2017 10:05 pm

ஈகரையில் இது சம்பந்த பழைய 2010 /2011 வருடத்திய பதிவுகள் பார்க்கமுடிந்தது.
அவைகளில் 30 /32 ஆண்டுகளுக்கு பிறகு
கால சர்ப்ப தோஷ நிவர்த்தி என பதிய கண்டுள்ளேன்.
36 ஆண்டுகள்தான் துல்லியமாக இருக்கும் என எண்ணுகிறேன்.நம்புகிறேன்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 02, 2017 8:08 am

ஜோதிடம் என்பது அறிவியலா?- 16: ராகுவின் அதிபதி - ஓர் ஆய்வு

இந்து மத புராணங்கள் முழுவதும் சில குறீயீடுகளை கொண்டே உருவாக்கப்பட்டு உள்ளது. ஆதாவது, முனிவர்களும் சித்தர்களும் சில விசயங்களை வெளிப்படையாக சொல்லாமல், சில குறியீடுகள் மூலமே குறிப்பிட்டுள்ளனர்.
மனிதன் புற உலகில் எதையெல்லாம் பார்த்து பயந்தானோ, அவற்றையே முனிவர்கள் மனிதனின் அக வாழ்வின் கொடிய விஷயங்களோடு தொடர்புபடுத்துகின்றனர். இதில் சாமுண்டி கீழ் இருக்கும் புலி, பரமசிவன் உடலில் உள்ள பாம்பு, மஹா விஷ்ணுவின் ஆதிசேச படுக்கை இவை சில உதாரணங்கள்.

தொடர்புடையவை
இதில் புலி மற்றும் புலித் தோல் - கட்டுக்கடங்கா காமத்தையும், ஒரு தலை நாகம் - விஷத்தையும். ஐந்து தலை நாகம் - குண்டலினி மூலம் பெற்ற ஞானத்தையும் குறிக்கும்.
புலித்தோல் மீது அமர்வது, காமத்தை அடக்கி, தன்னுள் உறையும் கடவுளை காணும் தத்துவம் அடங்கியுள்ளது. சாமுண்டி கீழ் இருக்கும் புலி, மனிதனின் காமத்தை அழித்து நன்மை செய்பவள் என்று பொருள் கொள்ளலாம். மஹாவிஷ்ணுவின் ஆதிசேச நாகம், யோக நிஷ்டை மூலம் ஒருவர் குண்டலினி சக்தியை பெற்று ஞானம் பெறலாம் என்ற கருத்தை கூறுகிறது. இதுவே பரமசிவன் என்று வரும் போது. அவர் உடலில் பல இடங்களில் பாம்பு இருக்கும், ஆனால் அவை கட்டப்பட்டிருக்கும். இதன் பொருள், தலையில் உள்ள நாகம் அகங்காரம் என்னும் மனிதனின் நஞ்சையும், இடுப்பில் இருக்கும் நாகம் காமவெறி என்னும் நஞ்சையும், கழுத்தில் இருக்கும் நாகம் தவறான சொற்கள் என்னும் நஞ்சையும் கட்டி, நாம் யோகம் (கர்ம யோகம், பக்தி யோகம், ராஜயோகம் (குண்டலினி எழுப்புதல்), ஞான யோகம்) செய்தால், மனிதன் சித்தநிலை அடையலாம் என்ற சிவதத்துவம் அடங்கியுள்ளது.
சூரியன் மற்றும் சந்திரன் பாதைகளின் புறவெட்டு 'ராகு'. எனவே, இவரின் காரகத்துவங்கள் மனிதனின் புற ஒழுக்கங்களை அதாவது வெளியில் தெரியக்கூடிய ஒழுக்கங்களை பாதிக்கின்றன. இதையே, ராகு என்பது காமத்தின் (நஞ்சு) குறீயீடு. அதாவது பற்றுதல், பிடித்தல், விழுங்குதல் மற்றும் பின்தொடர்தல் (புலனாய்வு, சோம்பல், அலட்சியம், வஞ்சகம், சூது, பொய், பெரும் திருட்டு, ஏமாற்றுதல், நடிப்பு, ஆடம்பரம், போதை) என்னும் குணம் கொண்டது. அதனால் தான் இவரை கட்டுப்படுத்தும் அதிபதியாய் தேவி சாமுண்டி (அ) துர்கா (துர் = கெட்ட சக்தியிடம் + கா = காத்தல்) துஷ்ட சக்திகளிடம் இருந்து காப்பாற்றுபவள் என்று பொருள்

நன்றி தி ஹிந்து

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 16, 2017 1:29 am

ஜோதிடம் என்பது அறிவியலா?-சூரியன் மற்றும் சந்திரன் பாதைகளின் அக வெட்டு 'கேது'. --ஒரு ஆய்வு - 17

சூரியன் மற்றும் சந்திரன் பாதைகளின் அக வெட்டு 'கேது'. எனவே, இவரின் காரகத்துவங்கள் மனிதனின் அக ஒழுக்கங்களான - அதாவது மனம் சார்ந்த ஒழுக்கங்களான (ஞானம், தியானம், தவம், மௌனம், வைராக்கியம், நிதானம், மனவெறுப்பு, விரக்தி, சந்நியாசம், ஆன்மீக உணர்வு, பிடிப்பு இல்லாமை, வேதாந்தம்) இவற்றின் குறீயீடாக கேது உள்ளது.
கேது என்பது மூலாதார அடித்தளத்தில் சுருண்டு கிடக்கும். இதுவே ஞானத்தின் ஆரம்பப் புள்ளி. அதனால் தான் இவரின் அதிபதி முழு முதற்கடவுள் 'விநாயகர்'. விநாயகர் ஞானத்தின் மூலப்பொருள் என்று இந்து மதம் விளக்குகிறது. இவரின் வாகனம் சிறிய எலி. அதாவது எலி என்பது நம் கட்டுக்குள் அகப்படாமல், ஓடியும் ஒளிந்தும் செல்லும் மனதின் குறீயீடு ஆகும். அதன் மீது அமர்ந்து, அதனை தான் வசம் வைத்து அடக்கி, ஞானத்தை கொடுப்பவர் 'ஸ்ரீ விநாயகர்'. இதனை அறிந்த நம் சித்த பெருமக்கள், கேதுவின் அதிபதியாக விநாயகரை வைத்துள்ளனர்.


மேலும், கேதுவின் இன்னொரு அதிபதி 'சித்திரகுப்தன்'. இவர் நம் பாவ புண்ணிய கணக்குகளை பதிவு செய்பவர். இதை, நம் உடல் செல்லின் மூலக்கூறு (DNA) என்று பொருள் கொள்ளலாம். அவ்வாறு நம் மூதாதையர் செய்த பதிவு பாவ புண்ணியங்கள் DNA வில் பதிவு செய்யப்பட்டு, நாம் வருங்கால சந்ததியினரை பாதிக்கும். எனவே தான், ராகு - தந்தை வழி பாட்டன், கேது - தாய் வழி பாட்டன் குறிக்கிறது.
மனதின் இருளை குறிக்கும் கேது, சந்திரனை பிரிக்கும் செந்நாகம் என்று அழைக்கப்படுகிறது. ஆதாவது மனதில் பல குழப்பங்களை உருவாக்கி பின் தெளிய வைப்பது கேதுவின் வேலை. எனவே கேது விரக்தி உருவாக்கும் கிரகம் என்று அழைக்கப்படுகிறது.
மனவிரக்தி அடைந்த மனிதன் முதலில் தான் ஏன் பிறந்திருக்கிறோம் என்றும் தனது பிறப்பின் நோக்கம் என்ன என்றுமே சிந்திக்க முயல்வார். மேலும் ஆன்மீக பற்றும் ஏற்படும். எனவே, கேது ஞானம் தரும் ஞானகாரகன் ஆவார்.
சனி கர்மகாரகன் என்பது நமக்குத் தெரியும். சனி யாரிடம் எல்லாம் சேருகிறாரோ, அவர் மூலம் நாம் முற்பிறவியில் பாதிக்கப்பட்டு இருப்போம். உதாரணமாக, சனி ராகுவுடன் பகை ராசியில் இருந்தால், தந்தை வழி பாட்டன் மூலம் ஏற்பட்ட பாவங்கள் நம்மை பாதிக்கும்.
சனி கேதுவுடன் இருந்தால், தாய் வழி பாட்டன் மூலம் ஏற்பட்ட பாவங்கள் நம்மை பாதிக்கும். சனி சூரியனுடன் இருந்தால், பித்ருக்கள் சாந்தி செய்யாத செய்த பாவத்தை குறிக்கும்.

நன்றி மணிகண்டன் தமிழ் ஹிந்து

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக