புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்னமா ! Poll_c10சின்னமா ! Poll_m10சின்னமா ! Poll_c10 
78 Posts - 50%
heezulia
சின்னமா ! Poll_c10சின்னமா ! Poll_m10சின்னமா ! Poll_c10 
62 Posts - 40%
T.N.Balasubramanian
சின்னமா ! Poll_c10சின்னமா ! Poll_m10சின்னமா ! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சின்னமா ! Poll_c10சின்னமா ! Poll_m10சின்னமா ! Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
சின்னமா ! Poll_c10சின்னமா ! Poll_m10சின்னமா ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சின்னமா ! Poll_c10சின்னமா ! Poll_m10சின்னமா ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்னமா ! Poll_c10சின்னமா ! Poll_m10சின்னமா ! Poll_c10 
120 Posts - 54%
heezulia
சின்னமா ! Poll_c10சின்னமா ! Poll_m10சின்னமா ! Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
சின்னமா ! Poll_c10சின்னமா ! Poll_m10சின்னமா ! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
சின்னமா ! Poll_c10சின்னமா ! Poll_m10சின்னமா ! Poll_c10 
7 Posts - 3%
Srinivasan23
சின்னமா ! Poll_c10சின்னமா ! Poll_m10சின்னமா ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சின்னமா ! Poll_c10சின்னமா ! Poll_m10சின்னமா ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்னமா !


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jan 08, 2017 3:00 pm

அது ஓர் அடர்ந்த காடு .  அந்தக் காட்டின் நடுவே ஒரு குடிசை . அந்தக் குடிசையில் வேடன் ஒருவன் , தன் மனைவியுடனும் ,இரண்டு மகன்களுடனும் வாழ்ந்துவந்தான் . தினமும் அவன் வேட்டைக்குச் செல்வான் .பறவைகள் , மிருகங்கள் ஆகியவற்றை வேட்டையாடிக் கொண்டுவருவான் . தன் குடும்பத் தேவைக்குப் போக மீதியுள்ள பறவைகளையும் , மிருகங்களையும் விற்றுவிடுவான் . அதில் கிடைத்த பணத்தைக்கொண்டு ஜீவனம் செய்து வந்தான் .

வேட்டைக்குச் செல்லும்போது தன் இரண்டு மகன்களையும் அழைத்துச் செல்வான் . வேட்டையின் நுணுக்கங்களை அவர்களுக்குக் கற்றுத் தருவான் . எந்த மிருகத்தை எப்படி வேட்டையாட வேண்டும் என்று சொல்லித் தருவான் .எதிரே புலியே வந்தாலும் , அஞ்சி ஓடாமல் துணிவுடன் எதிர்கொள்ளவேண்டும் என்று கூறுவான் .

ஒருநாள் வேடனுக்கு கடுமையான ஜுரம் வந்துவிட்டது .அவனால் வேட்டைக்குச் செல்லமுடியாது என்று நினைத்தான் . தன் இரண்டு மகன்களையும் அழைத்து , " செல்வங்களே ! இன்று என்னால் வேட்டைக்குச் செல்ல முடியாது ; உடல்நலம் சரியில்லை ; ஆகவே நீங்கள்தான் வேட்டைக்குச் செல்லவேண்டும் " என்று பணித்தான் .

மகன்கள் இருவரும் ," அப்படியே ஆகட்டும் அப்பா ! நாங்கள் வேட்டைக்குச் சென்று வருகிறோம் ; நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் !" என்று கூறிவிட்டு இருவரும் வேட்டைக்குப் புறப்பட்டனர் .

சகோதரர்கள் இருவரும் காட்டில் வெகுதூரம் அலைந்து திரிந்தார்கள் . ஒரு மிருகமும் கண்ணுக்குப் படவில்லை . நடந்து நடந்து இருவரும் சோர்ந்து போய்விட்டனர் . அங்கிருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணி , அந்த மரத்தை நோக்கி நடந்தனர் .

அப்போது திடீரென்று  , ஒரு மதம் பிடித்த யானை ஒன்று , பயங்கரமாகப் பிளிறிக்கொண்டே அவர்களை நோக்கி வந்தது . அந்த யானையைக் கண்ட இளையவன் பயந்துபோய் ஓட்டம் பிடித்தான் ; ஆனால் மூத்தவன் அவ்வாறு ஓடவில்லை . தந்தை சொன்ன அறிவுரைகளை எண்ணிப் பார்த்தான் . புலியே வந்தாலும் துணிந்து எதிர்க்கவேண்டும் என்று தந்தை சொன்ன அறிவுரை அவன் நினைவுக்கு வந்தது .

சட்டென்று தன் கையிலிருந்த வேலை லாவகமாக ஓங்கி யானைமீது எறிந்தான் .அந்த வேல் யானையின் மத்தகத்தின் மீது பாய்ந்து குத்திட்டு நின்றது . வலி தாங்கமுடியாத யானை பின்வாங்கியது .தன் குன்றொத்த உடலைத் திருப்பி , வந்தவழியே ஓடத்தொடங்கியது . அப்போது அந்த வேல் தரையில் விழுந்தது . இரத்தம் தோய்ந்த அந்த வேலை எடுத்துக்கொண்டு பெரியவன் தம்பியைத் தேடினான் . ஆனால் அவன் அங்கில்லை .

ஒரு வழியாகத் தம்பியைத்தேடிக் கண்டுபிடித்தான் . அப்போது அவன் கையில் இறந்துபோன முயல் ஒன்று இருந்தது .மற்றோரு கையில் இரத்தம் தோய்ந்த அம்பு இருந்தது .

அண்ணனைக் கண்ட தம்பி ஏளனமாக , " என்ன அண்ணா ! வெறுங்கையோடு வந்திருக்கிறாய் : எந்த விலங்கும் உனக்குக் கிடைக்கவில்லையா ? என்னைப் பார்  ! முயலை வேட்டையாடிக்  கொண்டு வந்திருக்கிறேன் !" என்று சொன்னான் .

தம்பியும் அண்ணனும் வீட்டுக்குள் நுழைந்தனர் .

மகன்கள் இருவரையும் கண்ட தந்தை சந்தோஷ மிகுதியால் எழுந்து உட்கார்ந்தார் . வேட்டை எளிதாக இருந்ததா? என்னென்ன மிருகங்களை வேட்டையாடினீர்கள் ? என்று கேட்டார் .

சிறியவன் தான் முயல் வேட்டையாடிய பிரதாபங்களை எடுத்துச் சொன்னான் .தான் அம்பெய்து கொன்ற முயலையும் தந்தையிடம் காட்டினான் .

ஆனால் தந்தையின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை .

" பெரியவனே ! நீ ஏன் வெறுங்கையோடு வந்திருக்கிறாய்? உன் கையிலிருக்கும் வேல் இரத்தம் தோய்ந்து காணப்படுகிறது . காட்டிலே என்ன நடந்தது? "

பெரியவன் யானையுடன் போரிட்ட சம்பவத்தை எடுத்துச் சொன்னான் . அது தப்பி ஓடிய விவரத்தையும் எடுத்துச் சொன்னான் .

அதைக்கேட்ட தந்தை ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார் . கட்டிலைவிட்டு மெதுவாக எழுந்துவந்து தன் மகனைக் கட்டித் தழுவிக்கொண்டார் .

இந்தக் காட்சியைக்கண்ட  தம்பி , " என்னப்பா ! வெறுங்கையோடு வந்த அண்ணனைக் கட்டித்தழுவி ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறீர்கள் ; ஆனால் முயல் வேட்டையாடிவிட்டு வந்த என்னைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்கள் ! ஏனப்பா இந்த ஓரவஞ்சனை ?

சின்னவனே ! கோபம் வேண்டாம்; நான் சொல்வதைப் பொறுமையாகக் கேள் ! மான் , முயல் போன்ற விலங்குகள் எல்லாம் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவை . அவற்றை வேட்டையாடுவதுவும் மிகவும் எளிது . அவைபோன்ற சின்ன மாக்களை அதாவது சிறிய விலங்குகளை சின்னஞ்சிறு சிறுவர்கள்கூட எளிதில் அம்புஎய்தி கொன்றுவிடுவார்கள் . ஆனால் பெரிய மாக்களை அதாவது சிங்கம் , புலி , யானை போன்ற பெரிய விலங்குகளை வேட்டையாடுவதற்கு கையில் ஆயுதம் மட்டும் இருந்தால் போதாது ; வீரமும்  நெஞ்சில் துணிவும் இருக்கவேண்டும் .அந்த வீரமும் , துணிவும் உன் அண்ணனிடம் உள்ளது . அவன் யானையைக் கொல்லவில்லை என்றாலும்  அந்தத் துணிவும் , வீரமும்  எல்லோருக்கும் வருமா ? நீ யானையைக் கண்டவுட,ன் ஓடத்தானே செய்தாய் !  

உன் அண்ணன் அடைந்தது தோல்வி அல்ல ; நீ பெற்ற வெற்றியைவிட அவன் அடைந்த தோல்விக்கு  மதிப்பு அதிகம் . வார்டு மெம்பர் தேர்தலில் பெறுகின்ற வெற்றியைவிட MP தேர்தலில் சில நூறு ஓட்டுகள் வித்தியாசத்தில் ஒருவன் அடைகின்ற தோல்விக்கு மதிப்பு அதிகம் .எனவே இனிமேல் நீயும்  சின்ன மாக்களை  வேட்டையாடுவதை விட்டுவிட்டு பெரிய மாக்களை வேட்டையாட கற்றுக்கொள் ! " என்றார்.

" சரிப்பா ! என்று சொல்லி தம்பி தலை குனிந்தான் .

கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல்  ஏந்தல் இனிது .

என்பது ஐயனின் வாக்கு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34994
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 08, 2017 6:29 pm

சின்னமாக்களை வேட்டையாட வேண்டாம் என்கிறீர் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 08, 2017 7:11 pm

நல்ல கதை ஐயா !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82429
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 13, 2017 6:10 pm

சின்னமா ! 103459460 சின்னமா ! 3838410834

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jan 14, 2017 6:07 pm

பிடித்து வைத்தால்தான் பிள்ளையாரு. வீசி எரிந்தால் சாணிங்க>>>>>>>>>>>>

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக