புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைணவ இலக்கியங்களில் வல்லுநர்  பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்!  Poll_c10வைணவ இலக்கியங்களில் வல்லுநர்  பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்!  Poll_m10வைணவ இலக்கியங்களில் வல்லுநர்  பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்!  Poll_c10 
21 Posts - 66%
heezulia
வைணவ இலக்கியங்களில் வல்லுநர்  பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்!  Poll_c10வைணவ இலக்கியங்களில் வல்லுநர்  பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்!  Poll_m10வைணவ இலக்கியங்களில் வல்லுநர்  பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்!  Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைணவ இலக்கியங்களில் வல்லுநர்  பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்!  Poll_c10வைணவ இலக்கியங்களில் வல்லுநர்  பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்!  Poll_m10வைணவ இலக்கியங்களில் வல்லுநர்  பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்!  Poll_c10 
63 Posts - 64%
heezulia
வைணவ இலக்கியங்களில் வல்லுநர்  பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்!  Poll_c10வைணவ இலக்கியங்களில் வல்லுநர்  பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்!  Poll_m10வைணவ இலக்கியங்களில் வல்லுநர்  பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்!  Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
வைணவ இலக்கியங்களில் வல்லுநர்  பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்!  Poll_c10வைணவ இலக்கியங்களில் வல்லுநர்  பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்!  Poll_m10வைணவ இலக்கியங்களில் வல்லுநர்  பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்!  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வைணவ இலக்கியங்களில் வல்லுநர்  பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்!  Poll_c10வைணவ இலக்கியங்களில் வல்லுநர்  பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்!  Poll_m10வைணவ இலக்கியங்களில் வல்லுநர்  பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்!  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைணவ இலக்கியங்களில் வல்லுநர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 27, 2017 9:32 pm

வைணவ இலக்கியங்களில் வல்லுநர்  பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்!  WpbEUgeeRLa57bxglGKH+E_1336389525
--

வைணவ இலக்கியங்களில் வல்லுநர்
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்!

அஷ்ட பிரபந்தங்களான திருவரங்கத்தந்தாதி,
திருவரங்கத்துமாலை, திவரங்கக்கலம்பகம்,
திருவரங்கநாதர் ஊசல் திருவேங்கடமாலை,
திருவேங்கடத்தந்தாதி, அழகர் அந்தாதி நூற்றியெட்டுத்
திருப்பதி அந்தாதி எனும் பாசுரங்களைத் தமிழுக்கு
அளித்தவர்.

திருவரங்கநாதன் மேல் தீராத காதல் கொண்டு திருப்பாவை
அருளிச் செய்த திருவல்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார்
போலவே, இவரும் பக்தி கொண்டவர். பாடியே திட்டினாலும்
தித்திக்கும் செந்தமிழ்ப்பாடல்கள் இவை:

திரு அரங்கநாதரின் ஆசியால் அவதரித்த மறவர் குலத்தில்
பெண் கேட்டு ஓர் அரசன் “திருமுகம்’ (தூதுஓலை)
அனுப்புகிறான். வந்த தூதுவனிடம் “என்ன துணிச்சல்
இருந்தால், எம் குல மங்கையைப் பெண் கேட்டுத் திருமுகம்
(ஓலை) அனுப்புவான்?’ என வெகுண்டு.

கொற்றவன் தன் திருமுகத்தைக் கொணர்ந்த தூதா!
குறை உடலுக்கோ மறவர் கொம்பைக் கேட்டாய்!
அற்றவர்சேர் திருஅரங்கப் பெருமாள் தோழன்
அவதரித்த திருக்குலம் என்றறியாய் போலும்!
மற்றதுதான் திருமுகமே ஆனால் அந்த
வாய், செவி, கண், மூக்கு எங்கே? மன்னர்மன்னன்
பெற்ற இளவரசு ஆனால் ஆவின் கொம்பைப்
பிறந்த குலத்தினுக்கு ஏற்பப் பேசுவாயே!
-

-------------------------
-
தூதுவனே! கொள்ளவனின் “திருமுகம்’ இங்கே கொண்டு
வந்துவிட்டாயே! மீதியுள்ள குறையுடல்தானே தலையில்லாத
முண்டம்தானே அங்கே இருக்கும்?

அதற்கா மறக்குலக் கொம்பைப் பெண் கேட்டு வந்துள்ளாய்?
குலக்கொழுந்து இளம்தளிர் (வேப்பங்கொழுந்து) என
வேப்பமரத் துளிர்களைக் குறிப்பது போல்தான், குலம்
தழைக்கத் தோன்றிய மணப்பெண்!

ஆசையற்றவர் சென்று சேரும் திருவரங்கப் பெருமாளின்
தோழன் அவதரித்த குலம் இது.
சைவத்திலும் சுந்தரர் இறைவனைத் தோழனாகத்
தூதனுப்பியதுண்டு! ஆழ்ந்த பக்தி அனுபவம் அது!
இதை நீ அறியவில்லை போலும்.

சரி! சரி வந்துட்டே! இது இளவரசன் திருமுகம் என்றால்
முகத்திலிருக்க வேண்டிய உறுப்புகளான வாயைச்
செவிகளைக் கண்களை, மூக்கு எதையும் காணோமே!

ஆனாலும் மன்னாதி மன்னன் பெற்ற இளவரசுதான்!
ஆனால் அரசுக்கேற்றபடி ஆலமரத்தின் கொம்பைத் குலக்
கொழுந்தைப் பெண் கேட்கப்போ!

என அலட்சியமாகப் பதில் கூறுவதாகப் பாடல்!
அரசும் ஆலும் கோவில்களில் இருக்குமல்லவா?
அது போல என்றார்.

அரங்கபக்தனுக்கு அரசன் தூசி போன்றவன்.

விட்டாரா தூதர்?
துறவிக்கு வேந்தன் துரும்பு! என்பது பழமொழியன்றோ?
திருமணத் தூதராக வருவோர் சாமர்த்தியசாலிகளாகவே
இருப்பதுண்டு. காரியம் ஆகணுமே! அப்படியே நின்றார்!

வந்த வேளை சரியில்லையோ? நொந்த நெஞ்சோடு திரும்பலாமோ?
கெஞ்சுவதுபோலத் தன் பார்வையைச் செலுத்தினார்.

“என்ன நிற்கிறாய்! வா! வா! வந்து பார்த்துச் செல்!
பார்த்ததை உங்கள் அரசனிடம் சேர்த்துச் சொல்!
எங்கள் குலக்கொழுந்தைப் பெண் கேட்டு வந்தவங்க
நிலைமையினை மாளிகை முழுவதிலும் வந்து பார்த்துச் செல்!’
என அழைத்துக் கூறி காட்சி:

பேசவந்த தூத! செல்லரித்த ஓலை செல்லுமோ?
பெருவரங்கள் அருள்அரங்கர் பிள்ளைகேள்வர் தாளியே
பாசம் வைத்த மறவர் பெண்ணை நேசம்வைத்து முன்னமே
பட்டமன்னர் பட்டதெங்கள் பதிபுகுந்து பாரடா!
வாசலுக்கு இடும்படல் கவித்து வந்த கவிகையே!
மகுடகோடி தினை அளக்க வைத்த காலும்நாழியும்
வீசுசாமரம் குடில் தொடுத்த கற்றை சுற்றிலும்
வேலிஇட்டது அவர்கள்இட்ட வில்லும் வாளும் வேலுமே!


பொருள்:

திருமணம் பேச வந்துள்ள தூதுவனே! ஓலைச் சுவடியில் எழுத்தாணி
கொண்டு எழுதுவது அஞ்சல்! அது செல்லரித்து போல் புள்ளிப்
புள்ளியாகத் தோன்றும்!

கேலி பேசுவது போல இந்த செல்லரித்த ஓலையைக் கொண்டு
வந்திருக்கிறாயே? இது செல்லுமோ? செல்லாத ஓலையாச்சுதேயடா?
பெரிய பெரிய வரங்களை எல்லாம் வழங்கி அருள் தரும்
திரு அரங்கநாதர் மேல் பக்தி மிகுந்த பாசம் கொண்ட குலப்
பெண்ணை விரும்பி முன்பு வந்து பெண்கேட்ட பட்டத்து இளவரசர்கள்,
பட்டபாட்டை எங்கள் மாளிகையில் புகுந்து வந்த பாரடா! அங்கே
நுழைவாசலுக்குப் படல்வேலியாக இட்டிருப்பது வந்தவர்களின்
மகுடங்களே!

நாட்டுப்புறங்களில் வேலிகளில் பானைகளைக் கவிழ்த்து
வைப்பதுண்டு! அது போலவே நாங்கள் மகுடங்களைக் கவிழ்த்து
வைத்துள்ளோம் அவர்கள் சூடியிருந்த கிரீடங்களை, விளைந்து
வந்துள்ள தினைகளை அளக்க உதவும் மரக்கால்களாகவும்,
நாழியாகவும் பயன்படுத்துகிறோம்.

அவர்களின் கிரீடங்களில் சூடி இருந்த கற்றை முடிகளைக் கைப்பற்றி
எங்களின் சாமரமாக்கியுள்ளோம், விசிறிபோல் வீசுவதற்கு!
மாளிகையைச் சுற்றிலும் வேலிபோல ஊன்றி வைத்திருப்பது அவர்கள்
கொண்டு வந்து வில்லும், வாளும் வேலும்தான்! ஆழ்ந்த பக்தியால்
அடைந்த வீரம் இது!

திட்டினாலும் தித்திக்கின்றதல்லவா? அதுதான் இலக்கியங்களின்
பெருமை
-
-----------------------------------------------
-
நெல்லை ஆ. கணபதி
கலைமகள்
நன்றி- தினமலர்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 28, 2017 11:56 pm

மிக அருமையான பகிர்வு ராம் அண்ணா புன்னகை...................ரங்க ரங்கா!! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக