புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 1:57 pm

» காதல் வரளர்த்தேன்....
by ayyasamy ram Today at 1:30 pm

» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 1:11 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:04 pm

» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm

» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm

» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm

» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
38 Posts - 58%
heezulia
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
16 Posts - 24%
Dr.S.Soundarapandian
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
8 Posts - 12%
Abiraj_26
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
2 Posts - 3%
SINDHUJA Theeran
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
287 Posts - 36%
ayyasamy ram
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
264 Posts - 33%
Dr.S.Soundarapandian
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
153 Posts - 19%
krishnaamma
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
24 Posts - 3%
sugumaran
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
13 Posts - 2%
D. sivatharan
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
3 Posts - 0%
prajai
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
3 Posts - 0%
M. Priya
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதாசிவம் சுவாமிகளின் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81601
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 27, 2017 4:44 pm

சதாசிவம் சுவாமிகளின் கதை KOdu93jNTWK5B1qTCX5o+amman-arul
-

ஒரு பெரிய ஞானி இருந்தார். அவர் பெயர் சதாசிவம். முன்பெல்லாம் பால்ய வயதிலேயே விவாகம் நடந்துவிடும். பெண்ணுக்கு ஏழெட்டு வயதிலும் பையனுக்கு பத்துப் பதினொரு வயதிலும் திருமணம் நடப்பது அன்று இயல்பான விஷயம்.

திருமணம் முடிந்ததும் பெண்ணை தாய்வீட்டுக்கே அழைத்துச் சென்றுவிடுவார்கள். அவள் பெரியவளானதும் அழைத்துவந்து கணவன் வீட்டில் விட்டுச்செல்வார்கள். அவ்வகையில் சதாசிவத்துக்கும் இளமையில் திருமணம் முடிந்திருந்தது. அவர் பாடசாலையில் பயின்றுகொண்டிருந்தார்.

இப்படியே சில வருடங்கள் போனது. ஒருநாள் அவர் வழக்கம்போல் மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்தார். வீட்டு வாசலில் நிறைய பேர் இருந்தார்கள். அனைவரும் அவரை நலம் விசாரித்தார்கள். அவர் கூச்சத்துடன் தலையாட்டியபடியே வீட்டுக்குள் நுழைந்தார்.

வடை சுட்டுக்கொண்டிருந்த அவரது தாயார், ""எல்லாரையும் வாங்கனு சொன்னியா?'' என விசாரித்தார். அவரோ, ""சாப்பாடு கொடும்மா, பாடசாலைக்குப் போறேன்'' என்றார். அம்மாவும் விடாமல், ""ஏண்டா, இவ்வளவுபேர் வந்திருக்காங்க. ஏன்னு கேட்டியா'' என்றாள். அவர் ""ஏன்?'' என்றார்.

""உன் மனைவி பெரிய மனுஷி ஆயிட்டாளாம். இங்க எப்ப கொண்டுவந்து விடறதுனு நாள், நட்சத்திரம் பார்க்க வந்திருக்காங்க.''

""சரி, சாப்பாடு போடு. நான் பாட சாலைக்குப் போகணும்.''

மகன் இப்படிச் சொன்னதைக்கேட்டு தாய்க்கு கோபம் வந்துவிட்டது. "மனைவி பெரிய மனுஷியாகிவிட்டாள் என்று சொல்கிறேன். இதைக்கேட்டு சந்தோஷப்பட வேண்டாமா இவன்? அதை விட்டுவிட்டு சோறு சோறு என்கிறானே' என்ற கோபத்தில், ""அப்படிப் போய் உட்காரு, கூப்பிடுறேன்'' என்றாள்.

அவரும் ஒரு ஓரமாகப் போய் அமர்ந்து யோசித்தார். "வழக்கமா எனக்கு சரியா பன்னிரண்டு மணிக்கு சாப்பாடு கிடைக்கும். மழைபெய்யுதோ வெயிலடிக்குதோ,

அம்மாவுக்கு உடம்பு நல்லாயிருக்கோ இல்லையோ- எப்படியிருந்தாலும் சோறு கிடைச்சுடும். ஆனால் மனைவி வரப்போறாங்கிற தகவல் வந்ததுக்கே, கிடைக்கவேண்டிய நேரத்துக்கு சாப்பாடு கிடைக்கவில்லை. மனைவி வந்துவிட்டால் நிலைமை என்னாகும்?'

இந்த எண்ணம் வந்ததும் யாரிடமும் சொல்லாமல் வீட்டின் பின்பக்கமாக நழுவியவர் சந்நியாசியாகப் போய்விட்டார். ஞானம் அவருக்கு ஒரு கணத்தில் வந்தது. பின்னாளில் ஒரு ஆசிரமத்தில் சேர்ந்த அவர் எப்போதும் படித்துக்கொண்டே இருப்பார். தன்னுடைய சந்தேகங்களையெல்லாம் தெளிவுபடுத்திக்கொள்வார். நம்மைப் போலதானே எல்லாருக்கும் சந்தேகமிருக்கும் என்றெண்ணிய அவர், எல்லாரையும் கூப்பிட்டுக் கூப்பிட்டு சொல்லித் தருவார்.

அவரது அக்கறையைப் புரிந்துகொள்ளாத சீடர்கள் அனைவரும் குருநாதரிடம் போய், ""குருநாதா, இந்த சதாசிவம் எந்நேரமும் பேசிக்கொண்டேயிருக்கிறார். சற்றுநேரமும் வாய் ஓய்வதில்லை. அவரை நீங்கள்தான் கொஞ்சம் கண்டிக்கவேண்டும்'' என்றார்கள்.

குருநாதருக்கு வருத்தம். ரொம்பவும் நல்ல பையன் சதாசிவம். அவனைப் பற்றி குறைகூறுகிறார்களே என்று சற்று கோபமும் வந்தது. சதாசிவத்தைக் கூப்பிட்டார். ""ஏண்டா சதாசிவம்... தொணதொணன்னு பேசிக்கிட்டிருக்கியாமே, உன் வாய் மூடாதா?'' என்றார்.

அன்றைக்கு வாயை மூடியவர்தான்; இறுதிவரை அவர் வாயே திறக்கவில்லை. மௌனியாகிவிட்டார்.

அன்ன ஆகாரம் தவிர்க்கும் விரதத்தைவிட சிரமமான விரதம் மௌன விரதம். ஒருநாள் மௌன விரதமிருந்து பாருங்கள். அன்று மனது மிகவும் அமைதியாக இருக்கும்.

விரதத்தின் மேன்மையைப் பற்றிக் கூறுகையில் வாரியார் சுவாமிகள், ""நாம எந்த விரதம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், திருக்கார்த்திகை தீபத்திருநாளன்று மௌன விரதமிருந்தால் ஆண்டுமுழுவதும் விரதமிருந்த பலன் கிடைக்கும்'' என்கிறார்.

சரி, சதாசிவம் சுவாமிகளின் கதைக்கு வருவோம்.

குருநாதரின் உத்தரவையேற்று சதாசிவம் வாழ்நாள் முடியும்வரை பேசவேயில்லை. குருநாதரே அவரிடம், ""உன் பெருமை தெரியாமல் பேசிவிட்டேன். வாய் திறந்து பேசு'' எனக் கூறினார். ஆனால் அவர் தன் முடிவிலிருந்து மாறவேயில்லை.

சதாசிவம் சுவாமிகள் நாளாக ஆக ஒவ்வொன்றாகத் துறந்துவந்தார். பேச்சைத் துறந்தார். பின் ஒருநாள் உடையைத் துறந்து திகம்பரராகிவிட்டார். கடைசியில் உணவையும் துறந்தார். நாளைக்கு ஒருவேளைதான் உணவு. யார் வீட்டு வாசலிலாவது போய்நிற்பார். அவர் நிற்பதைப் பார்த்து யாராவது உணவிட்டால் மட்டும் சாப்பிடுவார்.

அதுவும் மூன்று கவளம் உணவு மட்டுமே.

அத்தகைய சதாசிவம் சுவாமிகளுக்கு ஒரு சந்தேகம். நமக்கு அடுத்த பிறவி உண்டா, இல்லையா- இதுதான் அவரது சந்தேகம். யாரிடமும் கேட்கவும் முடியாது. அவரைவிட பெரிய ஞானிகளும் அங்கில்லை. தன் கேள்விக்கு விடைதெரியாமல் கடவுளிடம் முறையிட்டார்.

ஒருநாள் அவர் ஒரு வீதிவழியாக வந்தார். அந்த வீதியில் அவர் பெயருள்ள குடும்பஸ்தர்- அதாவது சதாசிவம் என்பவர் இருந்தார். அவர் திண்ணையில் அமர்ந்திருந்தார். சதாசிவத்தை தூரத்திலேயே பார்த்த அவர் தன் மனைவிக்கு குரல் கொடுத்தார் ""அம்மா, சதாசிவம் தெருமுனை திரும்பிட்டது. ஆகாரம் கொண்டா''.

அவரது மனைவியும் வெள்ளிக் கும்பாவில் பச்சரிசி சோறிட்டு, பருப்பு ஊற்றி, நெய்யிட்டுப் பிசைந்து உருட்டிக்கொண்டு வாசல் வந்தாள். அன்றைக்கு சதாசிவம் அவள் வீட்டு வாசலிலேயே வந்துநின்றார். அவள் அவரை வணங்கி, உணவுருண்டையை அவர் கையில் எடுத்துவைத்தாள். ஒன்று, இரண்டு, மூன்று....

வழக்கம்போல மூன்றாவது கவளத்துடன் கையைத் துடைக்கப்போனார். சாப்பிட்டபின் கையை அவர் தன்மேலேயே துடைத்துக்கொள்வதுதான் வழக்கம். அந்தப் பெண்மணி, ""நாளைக்கு ஒருவேளைதான் சாப்பிடுறீங்க. அதுவும் என்னைக்கு, எங்க சாப்பிடுறீங்களோ தெரியாது. இன்னைக்கு எனக்காக இன்னுமொரு உருண்டை சாப்பிடுங்க'' என்றபடி இன்னொரு கவளம் சோற்றை வைத்தாள். அவரும் அதை வாங்கி சாப்பிட்டார்.

அப்போது திண்ணையில் அமர்ந்திருந்த அந்தப் பெண்மணியின் கணவன், ""டேய் சதாசிவம், உனக்கு அடுத்த ஜென்மம் இருக்கு, போடா'' என்று சொன்னார்.

சந்நியாசி சதாசிவம் அவரைப் பார்த்தார். ""என்னடா பார்க்கிற? ஏன் இன்னொரு ஜென்மானுதானே? உன் கணக்கு மூணுதானே. முடிஞ்சதும் கிளம்பிப் போகவேண்டியதுதானே. அவளுக்காக ஒரு உருண்டைச் சோறு ஏன் வாங்கிச் சாப்பிட்ட? இந்த ஒரு உருண்டைக்கு அவளுக்கு நீ கணக்கு சொல்லணும். அதனால உனக்கு இன்னொரு ஜென்மா இருக்குடா'' என்றார்.

ஒரு உருண்டைச் சோற்றுக்கே ஒரு ஜென்மம் என்றால் நமக்கெல்லாம் எத்தனை ஜென்மம்?

ஞானமென்பது ஒரு மனிதனுக்கு எப்படி, எந்த நிமிடத்தில் வருமென்று தெரியாது.

-

நன்றி-நக்கீரன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 27, 2017 4:55 pm

ஒரு உருண்டைச் சோற்றுக்கே ஒரு ஜென்மம் என்றால் நமக்கெல்லாம் எத்தனை ஜென்மம்?

பயம் பயம் பயம் .
.
.
.
.
நல்ல பகிர்வு அண்ணா ! புன்னகை............ :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34954
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 27, 2017 7:01 pm

அறியாத தகவல்.
மிக்க நன்றி.
ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81601
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 27, 2017 7:26 pm


தேச.மங்கையர்க்கரசி
-
பிறப்பு -19 மே 1984
-
இவர் பெற்ற விருதுகள்
-
தமிழ் நாட்டின் மிக உயரிய விருதான “கலைமாமணி” விருதை
தமிழ் நாடு அரசு இவருக்கு அளித்து சிறப்பித்துள்ளது.

சமய சொற்பொழிவாளர் வரிசையில் மிகவும் குறைந்த
வயதில் இந்த விருதினை பெற்றவர் என்ற பெருமை
தேச மங்கையர்க்கரசி அவர்களையே சாரும்.


ராஜீவ் காந்தி-மூப்பனார் நினைவு விருதினை 2011 ஆம் ஆண்டு
பெற்றார்.

செந்தமிழ் நாவுக்கரசி என்கிற பட்டத்தினை திருவாவடுதுறை
ஆதீனம் 2017 ஆம் ஆண்டு அளித்து சிறப்பித்தது .
--

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக