புதிய இடுகைகள்
வணக்கம் நண்பர்களேஅம்புலிமாமா
‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
M.Jagadeesan
அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
ayyasamy ram
சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
ayyasamy ram
38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
ayyasamy ram
என்ன படம், யார் யார் நடிச்சது
heezulia
சிந்திக்க சில நொடிகள்
ayyasamy ram
என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
ayyasamy ram
கீரையின் பயன்கள்
danadjeane
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
பழ.முத்துராமலிங்கம்
மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
பழ.முத்துராமலிங்கம்
கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
T.N.Balasubramanian
ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
SK
வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
SK
நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
ஜாஹீதாபானு
அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
SK
தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
SK
மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
SK
உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
SK
அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
SK
முகநூல் நகைச்சுவை படங்கள்
T.N.Balasubramanian
நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
SK
திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
SK
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
SK
பயனுள்ள மருத்துவ நூல்கள்
மாணிக்கம் நடேசன்
அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
krishnaamma
முருங்கைக்கீரை கூட்டு
krishnaamma
பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
krishnaamma
இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
பழ.முத்துராமலிங்கம்
துளிப்பாக்கள் - தொடர் பதிவு
ayyasamy ram
காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
ayyasamy ram
ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
ayyasamy ram
சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
ayyasamy ram
ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
ayyasamy ram
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
heezulia
வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
சிவனாசான்
அழியாத பாட்டு
ayyasamy ram
கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
ayyasamy ram
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
krishnaamma
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
krishnaamma
சாப்பாட்டுப் புராணம் சமஸ்
ajaydreams
மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
ayyasamy ram
பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
SK
சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
Meeran
சிரிப்பின் பயன்கள்
ஜாஹீதாபானு
முடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்
SK
தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
SK
இன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்
SK
மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி
SK

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
Meeran |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
மூர்த்தி |
| |||
heezulia |
|
Admins Online
ஒரு கார்… ஒரு பேய்… ஒரு நயன்தாரா!
ஒரு கார்… ஒரு பேய்… ஒரு நயன்தாரா!

-
-நா.கதிர்வேலன்
‘‘லை ஃப் லைன் ரொம்ப சிறுசுங்க… சிம்பிள்! ‘கடவுளை நம்பு. ஆனா உன் காரையும் பூட்டு’னு ெசால்வாங்க. அதுமாதிரி என்னதான் நம்ம திறமையில் நம்பிக்கை வைச்சாலும், திரைக்கதையில் அவ்வளவு கவனம் ைவக்கணும். ‘டோரா’னு தலைப்பு எனக்கு கிடைச்சதே ரொம்பவும் ஆச்சர்யம். இத்தனை நாள் விட்டு வைச்சிருக்காங்களேனு மனசு குதூகலமாகிவிட்டது.
அதுவும் நயன்தாரா படத்திற்கு கிடைச்சதும் இன்னும் ‘டோரா’வின் இடம் பெரும் அளவுக்கு போயிடுச்சு. த்ரில்லர் படமான இதுக்கு ‘டோரா’னு பெயர் வைச்சதுக்கான காரணத்தைக் கேட்டால், கதையோட சின்ன முடிச்சு அவிழ்ந்துடும்.
அதனால் ஸாரி! தியேட்டருக்கு வந்தா, இந்தப் பெயர் வைச்சதுக்கான நியாயங்கள் நிச்சயமா புரியும்…’’ அருமையாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் தாஸ் ராமசாமி. டைரக்டர் சற்குணத்தின் முதல்நிலை சீடர்.
பயப்பட வைக்கிறது சாதாரண வேலையில்லையே..?
-
இதில் அவசியம் எதிர்பார்க்கிற பயங்கர காட்சிகள் எதுவும் இருக்காது. இப்ப பேய் வரப்போகுதுன்னு நினைக்கிறபோது பேய் வராது. எப்பவும் இதுமாதிரி படங்களில் தவிர்க்க முடியாமல், சில காட்சிகள் வரும்.
திடீர்னு புறாக்கள் றெக்கைகளை அடிச்சிப் பறக்கும். திடீர்னு ஒரு பெண் எழுந்து வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்பார். கழுத்தில் ஒரு கை விழும். பதறியடித்து வியர்த்துப் போய் நாம் பார்த்தால் அவள் கணவர் ‘ஏன் தூக்கம் வரலையா?’ எனக் கேட்டுட்டு அரவணைப்பார்.
ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 35942
மதிப்பீடுகள் : 11332
Re: ஒரு கார்… ஒரு பேய்… ஒரு நயன்தாரா!

-
அப்படியெல்லாம் உங்களை பயமுறுத்தமாட்டோம். ஒரு கதைக்காக சில ஆரம்பப் புள்ளிகள் கிடைக்கும். அது சினிமாவாக மாறுவதற்கு அதற்கான பின்னல்கள் சரிவர அமைய வேண்டும். வெறும் த்ரில்லர் படமாக இல்லாமல் இதில் பலதரப்பட்ட உணர்வுகளையும் கொண்டு வந்து காட்ட முடிந்தது. கஷ்டப்படுகிற கேரக்டரின் எமோஷனும் இந்தக் கதையின் முக்கிய அம்சம்.
இதில் நயன்தாரா வந்தது எப்படி?
இதில் ஹீரோவையும், காரையும் சேர்த்து அதில் த்ரில் ஏத்தி கதை ரெடி பண்ணியிருந்தேன். என் குரு சற்குணம் சார்கிட்டே சொன்னதும் ரொம்ப சநதோஷப்பட்டு, ‘நாமளே பண்ணுவோம் ராமசாமி’னு சொல்லிட்டார். இரண்டு நாள் போயிருக்கும். நயன்தாரா மேடத்திற்கு அந்தக் கதையை சரி பண்ணிட முடியுமானு கேட்டார். எழுதிப் பார்த்தால் அம்சமா வந்தது. நயன்தாராவுக்கு சொன்னதும் ‘நிச்சயம் பண்ணலாம் தாஸ்’னு பச்சைக்கொடி காட்டினாங்க.
அதற்குப் பிறகு வேகம் பிடிச்சது பாருங்க, அதுதான் ரொம்ப அழகு. அவரது புகழை மட்டுமே பயன்படுத்தக் கூடாதுனு நினைச்சேன். நம்ம சைடுல உழைப்பு அபரிமிதமாக இருக்கணும்னு தீர்மானித்து உழைச்சேன். அதற்கு மேடத்திலிருந்து எங்க புரடியூசர் வரைக்கும் ஒத்துழைப்பு தந்ததுதான் எனக்கான பெரு மகிழ்ச்சி. நிஜத்தைவிட புனைவு கவனமாகச் செய்யப்பட வேண்டும். பார்வையாளர்களோடு இந்தப் படம் நெருங்கிவிடும் என்று நம்புகிறேன். கதையோடு வாழ்க்கையையும், நிகழ்ச்சிகளையும் சரியானபடி சேர்த்தால் அங்கே நம்மை எப்படிப் பிடிக்காமல் போகும்! கதைதான் உயிரோட்டம். நம்பகத்தன்மைதான் அதில் முக்கியம்.
நயன்தாரா வந்தபிறகு இந்தப் படத்தைப் பற்றிப் பலரும் பேசுகிறார்கள்…
உண்மைதான். படத்தின் பட்ஜெட் சிறியதாகத்தான் அமைந்திருந்தது. கதையும், நயன்தாராவும் தந்த துணிவு தயாரிப்பாளர்களை சந்தோஷமடைய வைத்துவிட்டது. இதில் அவர் நடிப்பதால் இந்தப் படம் பெரிய அளவிற்கு போகிறது. அவரின் ஈடுபாடு சொல்லி மாளாது. கேரவனுக்குக்கூட போகமாட்டார். இன்னிக்கு அவர் லேடி சூப்பர்ஸ்டார். அதை அவர் உணரவேயில்லை. மாலை 5 மணியிலிருந்து விடியற்காலை 5 மணிவரை கூட ஷூட்டிங் நீண்டிருக்கிறது.
நாம முழிச்சிருக்கலாம். கண்ணுக்குக் கீழே கருவளையம் வந்தால்கூட ஒரு கவலையும் இல்லை. ஆனால் அவங்க அப்படியா? ஆனாலும் கவலையேபடாமல் கேரவனுக்குத் திரும்பி ஓய்வு எடுக்காமல், செட்டில மத்தவங்க நடிக்கிறதை பார்த்துக்கிட்டு இருப்பாங்க. இரண்டாவது டேக் எடுக்கிறதுக்குக்கூட சான்ஸ் வைக்க மாட்டாங்க. ரோட்டில படுத்து உருள்கிற மாதிரி ஒரு காட்சி… சொன்னதும் உடனே ரெடியாகிட்டாங்க.
ஆயிரம் பேர் நடந்த இடம். எப்படியிருக்கும்! அதை சரிபண்ணுங்கனு ஒரு வார்த்தை சொல்ல மாட்டாங்க. இந்த எட்டு வருஷத்துல நான் வேற மாதிரிதான் பார்த்திருக்கேன். இவ்வளவு உயரத்திற்கு நயன்தாரா போனதுக்கு இப்பத்தான் காரணம் தெரியுது. நாம் அசராமல் படத்திற்கு உழைக்கும்போது அவங்களோட உழைப்பும் உத்வேகமும் பெரிய டானிக். ஒரு நொடியில் 24 பொய்களைச் சொல்ற சினிமாவில் யதார்த்தத்தைக் காண்பிக்கிறபோது அது உண்மையாகிறது. இந்தக் கதைக்குள் நீங்கள் வந்தால், இதுவரை இல்லாத புது உணர்வை
பெறலாம்.
ஹீரோ…
என்னுடைய கதையில் கார்தான் ஹீரோ. நிறைய சம்பவங்களின் பின்னணியில் ஆரம்ப முடிச்சு நயன்தாராவிடமிருந்து ஆரம்பிக்கிறது. நயன்தாரா ட்ரைலரில் வேக வேகமாக நடந்து வருகிற துரித நடை ட்ரெண்டிங்கில் பின்னுது. காருக்கும் அவங்களுக்கும் சில விஷயங்கள் இருக்கு. தம்பி ராமையாதான் நயனின் அப்பா. இன்னிக்கு ஸ்பெஷலும் அவர்தானே. பின்னியிருக்கார். ஹரிஷ் உத்தமனுக்கும் நல்ல ரோல்.
படத்திற்கு கேமராமேன், தினேஷ் கிருஷ்ணன். மியூசிக், விவேக் மெர்வின். இரண்டு பேரையும் எனக்கு சிபாரிசு செய்தது நயன்தாராதான். ‘நல்லாயிருக்கும், உங்களை மீறமாட்டாங்க’னு சொன்னார். படப்பிடிப்புக்கு வரும்போது இந்தக் காட்சி இவ்விதம்தான் படமாகும்னு என் மனசுல கணக்குப் போட்டிருப்பேன். அதற்கு தினேஷ் கூடுதல் சுவாரஸ்யம், அழகு, முக்கியத்துவம் வரும்படி ஏதோ ஒரு மேஜிக் செய்திருப்பார். திகில் படத்திற்கு பின்னணி அமைப்பது கடினமான பணி. விவேக் மெர்வின் இதில் பிரமாதப்படுத்தியிருக்கார். ஒரு அமானுஷ்யப் படத்திற்கு தேவையான அத்தனை விஷயங்களும் உங்களுக்கு ‘டோரா’ தரும்!
–
நன்றி- குங்குமம்
ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 35942
மதிப்பீடுகள் : 11332
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum