புதிய இடுகைகள்
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018Meeran
அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
Vaali Mohan Das
உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
ராஜா
சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
ராஜா
நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
ராஜா
மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
ராஜா
குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
ராஜா
உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
ayyasamy ram
திட்டி வாசல்
ayyasamy ram
ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
ayyasamy ram
நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
prevel
தினை மாவு பூரி!
ayyasamy ram
இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
ayyasamy ram
எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
ayyasamy ram
ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
ayyasamy ram
அம்புலிமாமா புத்தகங்கள்
prevel
எனக்குள் ஒரு கவிஞன் SK
SK
இந்திரா அமிர்தம்---அறிமுகம்
ரா.ரமேஷ்குமார்
கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
SK
குல தெய்வம்
SK
கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
T.N.Balasubramanian
காத்திருக்கிறேன் SK
T.N.Balasubramanian
நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
SK
கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
T.N.Balasubramanian
சில்லுகள்...
T.N.Balasubramanian
தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
T.N.Balasubramanian
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
SK
பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
SK
மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
ஜாஹீதாபானு
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
SK
மழைத்துளி
SK
பழைய தமிழ் திரைப்படங்கள்
SK
கேரளா சாகித்ய அகாடமி
SK
2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
SK
ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
SK
கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
SK
டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
SK
வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
SK
கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
SK
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
ரா.ரமேஷ்குமார்
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
SK
கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
SK
வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
SK
கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
SK
படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
T.N.Balasubramanian
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
SK
நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...!
T.N.Balasubramanian
அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
பழ.முத்துராமலிங்கம்
1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
பழ.முத்துராமலிங்கம்
தெரிஞ்சதும் தெரியாததும்
SK
திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
SK
சினி துளிகள்!
SK
தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
SK
ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
SK
தலைவர் தத்துவமா பேசறார்....!!
ஜாஹீதாபானு
நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
SK
பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
SK
நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
SK
கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
SK

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
ராஜா |
| |||
heezulia |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
ஜாஹீதாபானு |
| |||
indira amirthan |
| |||
prevel |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
heezulia |
| |||
மூர்த்தி |
|
Admins Online
ஏப்., 23 - உலக புத்தக தினம்!
ஏப்., 23 - உலக புத்தக தினம்!
புத்தகம் வாசிப்பே சுவாசமாகட்டும்!

காகிதம், இரண்டு இடங்களில் புகழடைகிறது; ஒன்று, பணமாகும் போது, மற்றொன்று புத்தகமாகும் போது என்பர். கையில் பிரம்பின்றி, கற்றுக் கொடுக்கும் ஒரே ஆசிரியர், புத்தகம் மட்டுமே!
உலக புகழ்பெற்ற நாடக ஆசிரியர், ஷேக்ஸ்பியர் பிறந்ததும், இறந்ததும், ஏப்., 23ம் தேதி. மேலும், ஸ்பெயின் நாட்டு இலக்கியவாதியான, செர்வான்டிஸ் இறந்ததும், இந்நாளில் தான்!
யுனெஸ்கோவின், 28வது மாநாடு, 1995-ல் பாரிசில் நடைபெற்ற போது, அறிவை விரிவு செய்யும் விதமாகவும், பல்வேறு நாட்டின் கலாசாரத்தை அறிய உதவும் கருவியாகவும் புத்தகம் இருப்பதால், அதை கொண்டாடும் பொருட்டு, பிரபல எழுத்தாளர்களின் நினைவாக, ஏப்., 23ஐ தேர்வு செய்து, உலக புத்தக தினமாக அறிவித்தது. இதை, பல நாடுகள் ஏற்று, கொண்டாடி வருகின்றன.
முதல் உலக புத்தக தினத்தன்று, லண்டனில், பள்ளிக்குழந்தைகளுக்கு ஒரு பவுண்ட் மதிப்புள்ள அடையாள வில்லை வழங்கப்பட்டு, அவர்கள், எங்கு வேண்டுமானாலும் அவர்களுக்கு பிடித்த புத்தகத்தை வாங்கலாம் என்று ஏற்பாடு செய்தனர். இது, மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
'சிறையில், வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம்; புத்தக வாசிப்பை மட்டும் அனுமதியுங்கள்...' என்றார் நெல்சன் மண்டேலா. 'அறிவை விரிவு செய்; அகண்டமாக்கு...' என்றார் பாரதிதாசன். நைனிடால் சிறையில் அடைபட்டிருந்த காலத்தில், தன், 13வயது மகள் இந்திராவுக்கு, நேரு எழுதிய கடிதங்கள் உலகப்புகழ் பெற்றவை.
ஒரு சமுதாயத்தின், ஒட்டு மொத்த வாழ்க்கையை உயர்த்தும் நெம்புகோல்கள், புத்தகங்கள் தான்! 'புத்தகம் திருடுவது வெண்ணெய் திருடுவது போல இனிப்பானது...' என்றார், வலம்புரிஜான்.
'கல்வி அனைவருக்குமானது; புத்தகம் பொதுவானது...' என, துண்டு பிரசுரம் கொடுத்ததற்காக, கைது செய்து, சிறையிலடைக்கப்பட்டார், பிரபல ஆங்கில கவிஞர் ஜான் மில்டன்.
கண் பார்வையற்றவரான மில்டன், 'இழந்த சொர்க்கம் மற்றும் மீண்ட சொர்க்கம்' என்ற, இரு காவியங்களை படைத்தார்.
'ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் என்ன செய்வீர்கள்...' என்றதற்கு, 'நான் நூலகம் கட்டுவேன்...' என்றார் காந்திஜி. மேலும், 'பெண்கள் முன்னேற்றமடைய வேண்டுமெனில், அவர்கள் கைகளில் உள்ள கரண்டியை பிடுங்கி விட்டு, புத்தகத்தை கொடுங்கள்...' என்றார் ஈ.வெ.ரா.,
தமிழகத்தில் உ.வே.சா., மேற்கொண்ட புத்தக தேடல் தான், தமிழர்களின் கலாசாரத்தின் தொன்மையை உலகிற்கு பறைசாட்டியது. புத்தகம் தான் சமூக மாற்றத்திற்கான திறவுகோல். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், எளிமையாய் எழுதிய திருக்குறள், இன்றைய மனிதர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாய் இருக்கிறது.
மூட நம்பிக்கையை எதிர்த்தும், முற்போக்கை முன்னிறுத்தியும் எழுதப் பட்ட புத்தகங்கள், சமூக மறு மலர்ச்சிக்கு வித்தட்டன. இதற்கு சான்று,
அ. மாதவய்யாவின் புத்தகம்!
புத்தகம் என்பது சிந்தனையின் வெளிப்பாடு. அது, படிப்பவரை மேலும் சிந்திக்க தூண்டி, அறியாமையை விலக்குகிறது. இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. சமூக கொடுமைகள் மற்றும் அநியாத்திற்கு எதிராக கோபம் கொள்ளச் செய்கிறது.
இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில், புத்தகம் படிப்பதென்பது குறைந்து வருகிறது. படிக்காமல் வைத்திருக்கும் புத்தகங்கள், ஒவ்வொரு வீட்டிலும் அதிகம். படிக்காத அப்புத்தகத்தில் தான், நம் அறிவின் ஆன்மா ஒளிந்து கொண்டிருக்கிறது.
நல்ல புத்தகங்களுக்கு சிறகுகள் உண்டு; நாமும் அதனுாடே பறப்போம்!
ப. மணிகண்டபிரபு

காகிதம், இரண்டு இடங்களில் புகழடைகிறது; ஒன்று, பணமாகும் போது, மற்றொன்று புத்தகமாகும் போது என்பர். கையில் பிரம்பின்றி, கற்றுக் கொடுக்கும் ஒரே ஆசிரியர், புத்தகம் மட்டுமே!
உலக புகழ்பெற்ற நாடக ஆசிரியர், ஷேக்ஸ்பியர் பிறந்ததும், இறந்ததும், ஏப்., 23ம் தேதி. மேலும், ஸ்பெயின் நாட்டு இலக்கியவாதியான, செர்வான்டிஸ் இறந்ததும், இந்நாளில் தான்!
யுனெஸ்கோவின், 28வது மாநாடு, 1995-ல் பாரிசில் நடைபெற்ற போது, அறிவை விரிவு செய்யும் விதமாகவும், பல்வேறு நாட்டின் கலாசாரத்தை அறிய உதவும் கருவியாகவும் புத்தகம் இருப்பதால், அதை கொண்டாடும் பொருட்டு, பிரபல எழுத்தாளர்களின் நினைவாக, ஏப்., 23ஐ தேர்வு செய்து, உலக புத்தக தினமாக அறிவித்தது. இதை, பல நாடுகள் ஏற்று, கொண்டாடி வருகின்றன.
முதல் உலக புத்தக தினத்தன்று, லண்டனில், பள்ளிக்குழந்தைகளுக்கு ஒரு பவுண்ட் மதிப்புள்ள அடையாள வில்லை வழங்கப்பட்டு, அவர்கள், எங்கு வேண்டுமானாலும் அவர்களுக்கு பிடித்த புத்தகத்தை வாங்கலாம் என்று ஏற்பாடு செய்தனர். இது, மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
'சிறையில், வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம்; புத்தக வாசிப்பை மட்டும் அனுமதியுங்கள்...' என்றார் நெல்சன் மண்டேலா. 'அறிவை விரிவு செய்; அகண்டமாக்கு...' என்றார் பாரதிதாசன். நைனிடால் சிறையில் அடைபட்டிருந்த காலத்தில், தன், 13வயது மகள் இந்திராவுக்கு, நேரு எழுதிய கடிதங்கள் உலகப்புகழ் பெற்றவை.
ஒரு சமுதாயத்தின், ஒட்டு மொத்த வாழ்க்கையை உயர்த்தும் நெம்புகோல்கள், புத்தகங்கள் தான்! 'புத்தகம் திருடுவது வெண்ணெய் திருடுவது போல இனிப்பானது...' என்றார், வலம்புரிஜான்.
'கல்வி அனைவருக்குமானது; புத்தகம் பொதுவானது...' என, துண்டு பிரசுரம் கொடுத்ததற்காக, கைது செய்து, சிறையிலடைக்கப்பட்டார், பிரபல ஆங்கில கவிஞர் ஜான் மில்டன்.
கண் பார்வையற்றவரான மில்டன், 'இழந்த சொர்க்கம் மற்றும் மீண்ட சொர்க்கம்' என்ற, இரு காவியங்களை படைத்தார்.
'ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் என்ன செய்வீர்கள்...' என்றதற்கு, 'நான் நூலகம் கட்டுவேன்...' என்றார் காந்திஜி. மேலும், 'பெண்கள் முன்னேற்றமடைய வேண்டுமெனில், அவர்கள் கைகளில் உள்ள கரண்டியை பிடுங்கி விட்டு, புத்தகத்தை கொடுங்கள்...' என்றார் ஈ.வெ.ரா.,
தமிழகத்தில் உ.வே.சா., மேற்கொண்ட புத்தக தேடல் தான், தமிழர்களின் கலாசாரத்தின் தொன்மையை உலகிற்கு பறைசாட்டியது. புத்தகம் தான் சமூக மாற்றத்திற்கான திறவுகோல். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், எளிமையாய் எழுதிய திருக்குறள், இன்றைய மனிதர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாய் இருக்கிறது.
மூட நம்பிக்கையை எதிர்த்தும், முற்போக்கை முன்னிறுத்தியும் எழுதப் பட்ட புத்தகங்கள், சமூக மறு மலர்ச்சிக்கு வித்தட்டன. இதற்கு சான்று,
அ. மாதவய்யாவின் புத்தகம்!
புத்தகம் என்பது சிந்தனையின் வெளிப்பாடு. அது, படிப்பவரை மேலும் சிந்திக்க தூண்டி, அறியாமையை விலக்குகிறது. இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. சமூக கொடுமைகள் மற்றும் அநியாத்திற்கு எதிராக கோபம் கொள்ளச் செய்கிறது.
இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில், புத்தகம் படிப்பதென்பது குறைந்து வருகிறது. படிக்காமல் வைத்திருக்கும் புத்தகங்கள், ஒவ்வொரு வீட்டிலும் அதிகம். படிக்காத அப்புத்தகத்தில் தான், நம் அறிவின் ஆன்மா ஒளிந்து கொண்டிருக்கிறது.
நல்ல புத்தகங்களுக்கு சிறகுகள் உண்டு; நாமும் அதனுாடே பறப்போம்!
ப. மணிகண்டபிரபு

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11600
Re: ஏப்., 23 - உலக புத்தக தினம்!
என்னைக் கைவிடாத நண்பர்கள் புத்தகங்கள்தான் என்கிறார் ROBERT SOUTHEY என்ற ஆங்கிலக் கவிஞர் .
My never failing friends are they
with whom I converse day by day .
என்பது அவருடைய வாக்கு .
My never failing friends are they
with whom I converse day by day .
என்பது அவருடைய வாக்கு .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5091
மதிப்பீடுகள் : 2406
Re: ஏப்., 23 - உலக புத்தக தினம்!


-
சட்டமேதை அம்பேத்கர் ஒருமுறை வெளிநாடு சென்றிருந்த
போது, ‘‘எங்கு தங்க விரும்புகிறீர்கள்?’’ என்று கேட்டதற்கு,
‘‘எந்த இடம் நூலகத்திற்கு அருகில் இருக்கிறது?’’ என கேட்டு
இருக்கிறார்.
நவ இந்தியாவின் சிற்பி ஜவகர்லால் நேருவிடம்,
‘‘உங்களை ஒரு தனி தீவுக்கு நாடு கடத்தினால் என்ன
செய்வீர்கள்?’’ என்று கேட்டதற்கு
‘‘புத்தகங்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பேன்’’
என்று பதில் அளித்தார்.
குழந்தைகளுக்கு பிறந்தநாளின் போதும், விழாக்களின் போதும்
எண்ணற்ற பரிசுகளை வாங்கி தருகிறோம்.
‘‘குழந்தைகளுக்கு நீங்கள் வாங்கி தர வேண்டிய மிகச்சிறந்த
பரிசு புத்தகங்களே’’ என்கிறார் வின்ஸ்டன் சர்ச்சில்.
-
ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410
Re: ஏப்., 23 - உலக புத்தக தினம்!
நன்றி ஐயா , நன்றி ராம் அண்ணா


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11600
Re: ஏப்., 23 - உலக புத்தக தினம்!
இன்டர்நெட் மற்றும் சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு , புத்தகங்கள் படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது . புறாக்கூண்டு வீடுகளில் வசிக்கும் இந்தக் காலத்தில் , புத்தகங்கள் வைப்பதற்கு இடமில்லை ; அவற்றைப் பராமரிப்பதும் கடினமான வேலை .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5091
மதிப்பீடுகள் : 2406
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum