புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10வரலாற்றுத் துணுக்குகள் Poll_m10வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10வரலாற்றுத் துணுக்குகள் Poll_m10வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10வரலாற்றுத் துணுக்குகள் Poll_m10வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10வரலாற்றுத் துணுக்குகள் Poll_m10வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10வரலாற்றுத் துணுக்குகள் Poll_m10வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10 
2 Posts - 2%
prajai
வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10வரலாற்றுத் துணுக்குகள் Poll_m10வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10வரலாற்றுத் துணுக்குகள் Poll_m10வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10 
1 Post - 1%
Rutu
வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10வரலாற்றுத் துணுக்குகள் Poll_m10வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10 
1 Post - 1%
bala_t
வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10வரலாற்றுத் துணுக்குகள் Poll_m10வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10 
1 Post - 1%
Pradepa
வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10வரலாற்றுத் துணுக்குகள் Poll_m10வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10வரலாற்றுத் துணுக்குகள் Poll_m10வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10வரலாற்றுத் துணுக்குகள் Poll_m10வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10வரலாற்றுத் துணுக்குகள் Poll_m10வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10வரலாற்றுத் துணுக்குகள் Poll_m10வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10 
28 Posts - 3%
sugumaran
வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10வரலாற்றுத் துணுக்குகள் Poll_m10வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10வரலாற்றுத் துணுக்குகள் Poll_m10வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10வரலாற்றுத் துணுக்குகள் Poll_m10வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10 
18 Posts - 2%
prajai
வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10வரலாற்றுத் துணுக்குகள் Poll_m10வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10 
8 Posts - 1%
Rutu
வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10வரலாற்றுத் துணுக்குகள் Poll_m10வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10வரலாற்றுத் துணுக்குகள் Poll_m10வரலாற்றுத் துணுக்குகள் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றுத் துணுக்குகள்


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 357
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue Apr 18, 2017 1:24 pm


வரலாற்றுத் துணுக்குகள் -1

சீர்காழியில் கிடைத்த கல்வெட்டு ஒன்று

"ஆளுடைய பிள்ளையார் கோயிலில்
ஆளுடைய பிள்ளையார் வடிவத்தை எழுப்பியவர்
மூன்றாம் குலோத்துங்கனுடைய அடுக்களைப பெண்டுகளில்
மூத்தவளான இராஜவிச்சாதிரி என்பவளாவாள் "
என்று குறிப்பிடுகிறது ,
இதில் இருந்து அறியப்படும் செய்திகள்
1) மன்னரின் சமையலறைப் பெண்களுக்கு கூட பட்டப்பெயர்
இராஜவிச்சாதிரி என்று இருந்திருக்கிறது .

2) அவர்கள் ஆளுடைய பிள்ளையார் வடிவத்தை அமைக்கும் அளவிற்கு வசதியாக வாழ்ந்திருக்கிறார்கள் .
3) அவர்களின் கொடையை ஏற்றுக்கொண்டு ,கல்வெட்டு அமைக்கும் அளவிற்கு அப்போதைய மன்னர்கள் பண்புடன் இருந்திருக்கின்றனர்
மன்னன் அனுமதி இல்லாமல் யாரும் அப்போதெல்லாம் கல்வெட்டு அமைக்க இயலாது
4) ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் அத்துணை உரிமையுடன்
வாழ்ந்திருக்கிறார்கள் .
இன்னமும் வரலாற்றுத் துணுக்குகள்தினம் ஒன்று தொடரும்
அண்ணாமலை சுகுமாரன்
18/4/17

-- குறிப்பு ஆளுடைய பிள்ளையார் என்பது திருஞான சம்பந்தர் .
அவர் பிறந்த ,ஞானப்பால் உண்ட இடம் சீர்காழி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Apr 18, 2017 1:36 pm

நன்றி நன்றி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 18, 2017 2:38 pm

சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 20, 2017 12:42 am

வரலாற்றுத் துணுக்குகள் 3838410834 வரலாற்றுத் துணுக்குகள் 3838410834 வரலாற்றுத் துணுக்குகள் 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 357
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue Apr 25, 2017 11:56 am

வரலாற்றுத் துணுக்குகள் LgXkZKaOSsSYUZ0ZEtLp+bahor

வரலாற்றுத் துணுக்குகள் -2

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ,புதுவைக்கு அடுத்த
பாகூர் எனப்படும்  வாகூரில் இருக்கும் திருமூலநாதர்
கோவிலின் கருவறையில்  தெற்கு சுவரில் இடம்பெற்றிருக்கும்
ஒரு நீண்ட கல்வெட்டின் முக்கிய பகுதிகள் இங்கு தரப்பட்டுள்ளது .
கீழே இருக்கும் படம் கல்வெட்டின் இறுதிப்பகுதி ,அதுவே மிக முக்கிய பகுதி .ஆகும்

ஜெயங் கொண்ட சோழ மண்டலத்து ,பவித்திர மாணிக்கவளநாட்டு  
வாகூரான அழகிய சோழச்  சதுர்வேதி மங்கலத்துத்
திருமூலஸ்தானமுடைய  தேவர்க்குத் திருப்பதியம் பாடும் நால்வருக்கும் திருப்பரிசட்டங்களுக்கும் மகா சபையினர் வைத்த
நில நிவந்தங்களைப்பற்றிக்கூறுகிறது .


மேலும் அரசனது மனைவி அரிந்தவன் மகா தேவியரின் பணிப்பெண்
பூவன் அழகு என்பாள் நந்தா விக்கொன்று வைக்க 90 ஆடுகள் கொடுத்தமைப்பற்றியும் ,  மேலும் சில கொடைகளை பற்றிக் கூறுகிறது .

இதில் நாம் சிறப்பாக நோக்கத்தக்கவை சில

1) பாகூரின் முந்தியப்பெயர் வாகூர்
2)  வாகூரில் கோவில் இருக்கும் பகுதியின் முந்தைய பெயர்
  அழகிய சோழச்  சதுர்வேதி மங்கலம்
இன்னமும் கோவில் சிறப்புடன் இருக்கிறது .
3) தற்போது நாம் தேவாரம் என அழைக்கும் திருமுறைகள்
 அப்போது கி பி 1029 இல் திருப்பதியம் என்று அழைக்கப்பட்டுள்ளது .
4)அரசனது மனைவி அரிந்தவன் மகா தேவியரின் பணிப்பெண்
பூவன் அழகு அளித்த கொடைப்பற்றி கூட  கல்வெட்டுல்  இடம் அளிக்கும்
மன்னர்களின் பண்பு
5 ) பணிப்பெண் பூவன் அழகு கூட கொடைத் தரும் நிலையில் இருந்த
செல்வ செழிப்பு மற்றும் பெண்களின் சமுதாய நிலை உயர்வு .(கி பி 1029)

உலகின் பிற பகுதிகளில்   அந்தக்கலக்கட்டத்தில் பெண்களின் சமுதாய நிலை மிக மோசம் .ஆனால் நம்மிது வீண் பழி சும்த்தப்படுகிறது

6) இதுவே மிக முக்கியமானது , நான் எழுத இந்தக்கல்வெட்டை தேர்ந்தெடுக்க இதுவே  காரணம்
கீழே உள்ள கல்வெட்டுப்படத்தைப் பாருங்கள் ,

அரிந்தவன் மகா தேவியரின் பணிப்பெண் என வரும் வரிகளில்
பெண்டாட்டி என்று கல்வெட்டில் உள்ளது .
அதாவது பெண் பணியாளரை பெண்டாட்டி என்று அழைக்கும் வழக்கம்
ஆயிரம் வருடங்களுக்கு முன் இருந்துள்ளது .
எப்படியோ அந்த பெண்டாட்டி எனும் சொல் தற்போது மனைவியைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது
இனி நாம் மாறவேண்டும் ,அந்த சொல்லைத் தவிர்க்கவேண்டும்
அண்ணாமலை சுகுமாரன்
25/4/17
கீழே உள்ள  கல்வெட்டு படியெடுத்த படத்தைப்பாருங்கள்

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 357
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Fri Apr 28, 2017 10:38 am

வரலாற்றுத் துணுக்குகள் -3

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ,புதுவைக்கு அடுத்த திருவண்டார்
கோயில் என்னும் ஊரில்  உள்ள பஞ்சநதீஸ்வரர் கோயில் பகுதியில் உள்ள
ஒரு துண்டப்பட்ட கல்வெட்டில் அமைந்த்ஜிருக்கும் செய்தி இது .
கல்வெட்டின் படியெடுத்தப்படம்  கீழே உள்ளது .

இது புதுச்சேரி மாநில கல்வெட்டுகள் எனும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது .
தொகுத்தவர்கள் புதுவை பிரெஞ்சு இந்திய நிறுவனம்
மிக அரிய  பணியை செய்திருக்கிறார்கள்
அவர்களுக்கு எனது நன்றி

இந்தக்கல்வெட்டு கோயிலில் விளக்கெரிக்க 90 ஆடுகள் வழங்கியதுப்
பற்றி கூறுகிறது .

இந்த கைவிட்டு மூலம் அறியும் செய்திகள்
11) இந்த ஊர் கி பி 947 இல் திருபுவன மாதேவிச் சதுர்வேதி மங்கலம்
     என்று அழைக்கப்பட்டிருந்தது

2)திருபுவன மாதேவிமுதலாம் பராந்தகனின் பட்டத்து அரசி

3)  அந்த அரசி உயிருடன் இருந்த போதே அவர் பெயரால் ஒரு
ஊரின் பெயர் அமைக்கப்பட்டுள்ளது
அண்ணாமலை சுகுமாரன்
28/4/17

கல்வெட்டின்  படம் இதோ படிக்க முயற்சி செய்யுங்கள் வரலாற்றுத் துணுக்குகள் Qoi83OitQ3qNj4sty2GR+KAL3

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 357
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Sep 30, 2017 7:24 pm


வரலாற்றுத் துணுக்குகள் O47xpwwkQZGyVv3LFqVd+SEM1வரலாற்றுத் துணுக்குகள் Ks5hDc1VR1iLeXndJEap+SEM2
வரலாற்று துணுக்குகள்

பொதுவாகவே வரலாறு விந்தைகள் நிறைந்தது . அதிலும் சோழர் வரலாற்றை ஆழமாக ஆராய்ந்தால் பல விந்தைகள் உண்டு .நான் முன்பு ஒருமுறை மூன்று சோழ மன்னர்களுக்கு முதல் மந்திரியாக இருந்த ஒட்டககூத்தரை
பற்றி எழுதியிருந்தேன் இவ்வாறே ஆறு சோழ மன்னர்களைக் கண்டவரும் ஒருவர் இருக்கிறார் .

அவர்தான் சோழர் குல மாணிக்கம் செம்பியன்மாதேவியார்.
இம்மாபெரும் பேரரசி ,
1. மாமன்னன் முதலாம் பராந்தக சோழன்,
2. கணவர் கண்டராதித்தன்,
3. கொழுந்தன் அரிஞ்சய சோழன்,
4. கொழுந்தனின் மகன் இரண்டாம் பராந்த சோழன் எனப்படும் சந்தரசோழன்,
5. தன் மகன் உத்தம சோழன்,
6. கொழுந்தனின் பேரன் ராசராச சோழன் காலம் வரை வாழ்ந்து சிவாலயங்களை கற்றளிகளாக்கியும், நாள் வழிபாட்டிற்கும் மாத வழிபாட்டிற்கும் நிவந்தங்கள் அளித்தும், சோழ அரசை நிலையான அரசாக்கிய குலமாணிக்கமாக திகழ்கிறார்.
இவர் பெயரால் பல நிவந்தங்கள் இடம்பெற்றிருப்பதை பார்க்கும்போது அப்போது பெண்கள் தமிழகத்தில் பெற்றிருந்த உயரிய நிலையை அறிய முடிகிறது .அதே காலக்கட்டத்தில் உலகெங்கும் பெண்களின் நிலை சொல்லும் படி இல்லை .
இவர் ஆறு பேரரசர்கள் காலத்தில் வாழ்ந்த வரலாற்றை சோழர் சரித்திர நூல்கள் குறிப்பிடுகின்றன. இந்த சோழப் பேரரசி தன் மாமனார், தன் கணவன், தன் கணவனின் தம்பி அரிஞ்சய சோழன் சுந்தரசோழன், மகன் உத்தமசோழன், பேரன் ராசராசன் காலத்தில் வாழ்ந்தவர்.
கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறாமல் சிறுவனாக இருந்த மகன் உத்தம சோழனை வளர்த்தெடுத்தத் தாயாக விளங்கினார். இரண்டாம் பராந்தக சோழன் காலத்தில் அவருக்கு பிறந்த ஆதித்த கரிகாலன், குந்தவை, அருள்மொழி, தேவனையும் பாட்டியாக இருந்து வளர்த்தார்.

சுந்தரசோழன் இறந்த பிறகு அருண்மொழி தேவனை பெற்றெடுத்த வானவன் மாதேவியார் உடன்கட்டை ஏறி உயிர் துறந்தார்
சுந்தரசோழனின் மூன்று பிள்ளைகளையும் வளர்க்கும் பாட்டியாக அவர் விளங்கினார். அப்போது அருண்மொழி தேவனுக்கு வயது 5தான் பிற்காலத்தில் மாபெரும் பேரரசனாக ராஜராஜன் விளங்கியமைக்கு செம்பியன் மாதேவியின் வளர்ப்பு நிலை முக்கிய பங்காற்றியது.
மாமன்னர் ராசராசன் தனக்கு பிறந்த 3 பிள்ளைகளுக்கு தமக்கு உறுதுணையாக நின்ற மூவரின் பெயரை சூட்டினானர் . முதலாவதாக தனக்கு பிறந்த மூத்த மகளுக்கு தன் பாட்டியின் சிறப்பு பெயரான மாதேவிஅடிகள் என்று பெயரிட்டானர் . 2–வது மகளுக்கு தமக்கை குந்தவையின் பெயரை வைத்தானர் . தனது மகனுக்கு செம்பியன் மாதேவியாரின் மகன் மதுராந்தகன் பெயரை வைத்தானர் . இம்மதுராந்தகனே பிற்காலத்தில் முதலாம் ராஜேந்திர சோழன் என்று அழைக்கப்பெற்றார் .
இவ்வம்மையார் பெயரில் நாகப்பட்டினத்தின் அருகில் செம்பியன்மாதேவி என்கிற ஊர் உள்ளது. இவ்வூரில் கயிலாயநாதர் கோவில் உள்ளது. இறைவன் பெயர் கயிலாயமுடைய மாதேவர். இறைவி பெயர் பெரிய நாயகி. மூன்று நிலை ராசகோபுரம் உள்ளது. கயிலாய நாதர் கோவில் செம்பியன் மாதேவியரால் கட்டப்பட்டதாகும். ராஜேந்திரன் என்னும் கங்கை கொண்ட சோழன் செம்பியன் மாதேவியின் படிமத்தை இக்கோவிலில் கி.பி.1019–ல் நிறுவினானர் இதனை கல்வெட்டுக்குறிப்பு (481–1925) குறிப்பிடுகின்றது செம்பியன் மாதேவியின் மகன் உத்தம சோழனுக்கு மனைவியர் பலர் இருந்தனர் என்று செம்பியன் மாதேவி ஊரின் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. பட்டன தானதுங்கி, மழபாடித்தென்னவன் மாதேவி, இருங்கோளர்மகள், வானவன்மாதேவி, விழுப்பரையர் மகள் கிழானடிகள், பழவேட்டையர் மகள், பட்டத்தரசி திரிபுவன மாதேவி அன்றியும் பஞ்சவன் மாதேவி, சொர்ணமாதேவி, ஆரூரன் அம்பலத்தடிகள் எனப் பலர் இருந்தனர். இவர்கள் அனைவரும் தம் மாமியார் செம்பியன்மாதேவி பெயரால் அமைத்த திருக்கயிலாய முடையார் ஆலயத்திற்கு நாள் வழிபாட்டிற்கும், திங்கள் வழிபாட்டிற்கும் நிவந்தங்கள் பல அளித்தமையை அங்குள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
பாருங்கள் !பெயர்உத்தமசோழர்ஆனால் எத்தனை மனைவிகள் !

திருமுறை தலங்களுள் திருநல்லமும் ஒன்றாகும். சோழநாட்டு தென்கரை தலங்களுக்குள் ஒன்று இன்று இத்தலத்தை கோனரிராஜபுரம் என்று அழைக்கின்றனர். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலமாகும். இக்கோவிலை கற்றளியாக்கி தன் கணவன் பெயரால் கண்டராதித்தம் என அழைத்திட செம்பியன் மாதேவியார் ஏற்பாடு செய்தார். அங்குதான் புகழ்பெற்ற மிகப் பெரிய நடராசர் சிலையும் உள்ளது .
இவ்வம்மையார் கற்றளியாக்கிய கோவில்களுக்குள் விருத்தாசலம் பழமலைநாதர் கோவிலும் ஒன்றாகும். இறைவன் பெயர் பழமலைநாதர். இறைவி பெயர் பெரியநாயகி. இக்கோவிலின் இப்பொழுதுள்ள சுற்றளி செம்பியன் மாதேவியால் கட்ட பெற்றதாகும். இக்கோவில் உத்தமசோழனின் பன்னிரண்டாம்ஆட்சியாண்டில்
கி.பி.982–ல் கற்றளியாக்கப்பட்டுள்ளது
மேலும் திருத்துருத்தி என்று அழைக்கப்பெற்ற குத்தாலம் சொன்னவாறு அறிவார் கோவிலையும் கற்றளியாக அமைத்து தந்துள்ளார். திருமணஞ்சேரி கோவிலையும் கற்றளியாக்கி உள்ளார். ஆநாங்கூர் கோவிலையும் கற்றளியாக அமைத்துள்ளார். திருக்கோடிக்கா கோவிலையும் கற்றளியாக்கி உள்ளார். தென்குரங்காடு துறை ஆபத் சகாயேஸ்வரர், பவளகட கொடியம்மை கோவிலை கற்றளியாக்கி உள்ளார். கல்வெட்டில் . செம்பியன்மா தேவியாரை குறிப்பிடும் பொழுது உத்தமதேவரை திருவயிறு வாய்த்த உடையபிராட்டியார் மாதேவடிகளாரான செம்பியன் மாதேவியார் என்று குறிப்பிடப்படுகிறார்.
இவ்வம்மையாரின் இறுதி திருப்பணி பெற்ற கோவில் புதுவைக்கு அருகில் உள்ள திருவக்கரை கோவிலாகும். இக்கோவில் ராஜராஜ சோழன் ஆட்சியின் 16–ம் ஆண்டாகிய கி.பி.1001–ல் கற்றளியாக்க பெற்றுள்ளது மற்றும் இக்கோவிலுக்கு இவ்வம்மையார் செய்த தொண்டுகளும் குறிப்பிட பெற்றுள்ளன. இதன் பிறகு இவ்வம்மையார் பற்றிய குறிப்புகள் காணப் பெறவில்லை. எனவே
கி.பி.1001–ல் இவர் சிவனடியை அடைந்திருக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு ஆறு மன்னர்களின் காலத்தில் வாழ்ந்து பல கோயில்களிலும் திருப்பணி செய்து வரலாற்று நினைவுகளை இன்னமும் வாழச் செய்த செம்பியன்மாதேவியார்என்றும் நினைவில் வாழ்த்தக்கவர் .
அண்ணாமலை சுகுமாரன்
30/9/17
முனைவர் சண்முக. செல்வகணபதிஎழுதிய கட்டுரையில் இருந்து சில பகுதிகளை நன்றியுடன் பதிவிடுகிறேன்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Sep 30, 2017 8:03 pm

வரலாற்றுத் துணுக்குகள் 103459460 வரலாற்றுத் துணுக்குகள் 1571444738 வரலாற்றுத் துணுக்குகள் 1571444738

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக